search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TET"

    • ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி பெறாதவர்கள் ஆசிரியர் பணியில் நீடிக்க தகுதியில்லை என நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
    • நேரடியாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு மட்டும் தகுதித்தேர்வு கட்டாயம் என்ற அரசின் விதியை ரத்து செய்தனர்.

    சென்னை:

    2011-ம் ஆண்டுக்கு முன் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி பெறவில்லை எனக் கூறி, அவர்களின் வருடாந்திர ஊதிய உயர்வை நிறுத்தி வைத்து தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது.

    இதை எதிர்த்து ஆசிரியர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை விசாரித்த தனி நீதிபதி, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என அறிவித்து 12 ஆண்டுகள் கடந்தும் தகுதி பெறாத ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு பெற உரிமையில்லை எனக் கூறி, வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

    மேலும், ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி பெறாதவர்கள் ஆசிரியர் பணியில் நீடிக்க தகுதியில்லை எனவும் நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

    இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் அமர்வு, கடந்த 2011ம் ஆண்டுக்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்காவிட்டாலும் பணியில் நீடிக்கலாம்.

    ஊதிய உயர்வு பெற ஆசிரியர் தகுதித் தேர்வு அவசியமில்லை. ஆனால், பதவி உயர்வு பெற ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயம் என்று உத்தரவிட்டனர்.

    மேலும், நேரடியாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு மட்டும் தகுதித்தேர்வு கட்டாயம் என்ற அரசின் விதியை ரத்து செய்தனர்.

    • ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான தாள்-1 செப்டம்பர் 10-ல் தொடங்கவிருந்தது.
    • நிர்வாக காரணங்களால் ஆசிரியர் தகுதித் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் அனைத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வின் அடிப்படையில் நிரப்பப்படுகின்றன.

    டெட் எனப்படும் ஆசிரியர் தகுதி தேர்வின் முதல் தாள் செப்டம்பர் 10-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை கம்ப்யூட்டர் மூலம் நடத்த தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டு இருந்தது. இந்த தேர்வு எழுதுவதற்காக 2 லட்சத்து 30 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்தது.

    இந்நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான தாள்-1 தேர்வு நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

    • தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றாலே, நேரடியாக பணி நியமனம் செய்யக்கோரி ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர்
    • மொத்தம் 5861 ஆசிரியர் பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு நடைபெற உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் கூறியிருக்கிறது.

    சென்னை:

    தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களும், பட்டதாரி ஆசிரியர்களும் கண்டிப்பாக ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. தமிழகத்தில் ஆரம்பத்தில் இந்த தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அரசுப் பள்ளிகளில் பணி நியமனம் செய்யப்பட்டனர். ஆனால், முந்தைய அதிமுக ஆட்சிக்காலத்தில் தகுதித் தேர்வு முதல்கட்ட தேர்வுதான் என்றும் இரண்டாவதாக அரசுப் பணிக்கு மற்றொரு போட்டித்தேர்வை எதிர்கொள்ள வேண்டும் என அரசாணை 149 வெளியிடப்பட்டது. 2018ம் ஆண்டு ஜூலை 20ம் தேதி இந்த அரசாணை வெளியானது.

    இந்த அரசாணை காரணமாக யாரும் எளிதில் வேலைக்கு செல்ல முடியாது என்றும், எனவே இந்த அரசாணையை ரத்து செய்துவிட்டு, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றாலே, நேரடியாக பணி நியமனம் செய்யக்கோரியும், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் போராட்டங்கள் நடத்தி வந்தனர்.

    இதற்கிடையே கடந்த சட்டமன்ற தேர்தலின்போது திமுக தனது தேர்தல் அறிக்கையில், இந்த அரசாணை 149 ரத்து செய்யப்படும் என கூறியிருந்தது. அதன்படி அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் வலியுறுத்தி வரும்நிலையில், அரசாணை ரத்து இல்லை என்பது தற்போது தெளிவாகி உள்ளது.

    நடப்பு ஆண்டில் பல்வேறு பணிகளுக்கான போட்டித்தேர்வுகள், காலி பணியிங்களின் எண்ணிக்கை குறித்த விவரங்களை கடந்த 5ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டிருந்தது. தற்போது தகுதித் தேர்வு குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது. ஆசிரியர் தகுதி தேர்வு முடித்தவர்களுக்கு போட்டித்தேர்வு நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

    ஆசிரியர் தகுதித் தேர்வு முடித்தவர்களுக்கு போட்டித் தேர்வு கட்டாயம் என்று 2018ம் ஆண்டு அரசாணை வெளியிட்டாலும்கூட அந்த தேர்வு இதுவரை நடைபெறவில்லை. முதல் முறையாக வரும் டிசம்பர் மாதம் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 1874 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், 3987 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் என மொத்தம் 5861 பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு நடைபெற உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் கூறியிருக்கிறது.

    அரசாணை 149 ரத்து தொடர்பாக அரசுத் தரப்பில் இருந்து எந்தவிதமான தகவலும் தங்களுக்கு வரவிலை என்பதால் ஏற்கனவே அறவித்தபடி போட்டித்தேர்வை நடத்துவதற்கு ஏற்பாடு செய்திருப்பதாக, ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் கூறி உள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அரசுத் தரப்பில் ஆசிரியர்கள் தற்காலிகமாகவே நியமிக்கப்பட உள்ளனர் என தெரிவிக்கப்பட்டது.
    • அதற்கு நீதிபதி, நிரந்தரமாக ஆசிரியர்களை நியமிப்பதில் அரசுக்கு என்ன பிரச்சனை? அரசின் இந்த பதில் திருப்திகரமாக இல்லை என்றார்.

    மதுரை:

    ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சங்கத்தின் தலைவர் ஷீலா உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில் கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஏராளமானோர் அப்போதிருந்த வெயிட்டேஜ் முறையால் பணிக்கு தேர்வாகவில்லை. ஆனால் அவர்கள் ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்கள்.

    இந்நிலையில் தமிழக அரசின் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை தற்காலிக ஆசிரியர்களைக் கொண்டு நிரப்ப திட்டமிட்டு அரசு கடந்த 23-ம் தேதி ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    தற்காலிக ஆசிரியர்கள் தேர்வு தொடர்பாக முறைப்படுத்தப்பட்ட வழிமுறைகள் எதுவும் இல்லை. அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்கள் அவர்களுக்கு தேவையான நபர்களை பணியில் நியமித்து கொள்ள வாய்ப்பு உள்ளது. இதனால் தகுதியற்றவர்கள் தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

    ஆகவே இவற்றை கருத்தில் கொண்டு, தமிழக அரசின் பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை தற்காலிக ஆசிரியர்கள் மூலம் நிரப்புவது தொடர்பான அறிவிப்பை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், அரசுத் தரப்பில் ஆசிரியர்கள் தற்காலிகமாகவே நியமிக்கப்பட உள்ளனர் என தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதி, நிரந்தரமாக ஆசிரியர்களை நியமிப்பதில் அரசுக்கு என்ன பிரச்சனை? அரசின் இந்த பதில் திருப்திகரமாக இல்லை என்றார்.

    எனவே தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பது தொடர்பான அறிவிப்புக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது என நீதிபதி உத்தரவிட்டு வழக்கை வருகிற 8-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.

    • ஆசிரியர் பணி நியமனம் செய்வதில் பழையபடி வயது வரம்பை தளர்த்தி பணி நியமனம் செய்யவும் கோரிக்கை வைத்தனர்.
    • போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் இன்று மொட்டையடித்து நூதன முறையில் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

    சென்னை:

    'டெட்' எனப்படும் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார்கள். இன்று 3-வது நாளாக அவர்களின் போராட்டம் நீடித்தது.

    தற்காலிக ஆசிரியர் நியமனத்தை நிறுத்தி அந்த பணியிடங்களில் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை உடனடியாக நியமனம் செய்யக்கோரி இந்த போராட்டம் நடந்தது.

    ஆசிரியர் பணி நியமனம் செய்வதில் பழையபடி வயது வரம்பை தளர்த்தி பணி நியமனம் செய்யவும் கோரிக்கை வைத்தனர்.

    போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் இன்று மொட்டையடித்து நூதன முறையில் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

    மேலும் தங்களை பணியில் அமர்த்த கோரி பிச்சை எடுத்தும் எதிர்ப்பை தெரிவித்தனர். மேலும் 'பாடை' போல் படுத்த படியும் ஆசிரியர்கள் இன்று போராட்டம் நடத்தினார்கள்.

    ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நல கூட்டமைப்பு சார்பில் இந்த போராட்டம் நடைபெற்றது.

    ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
    சென்னை:

    தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான முதல் தாள் ஜூன் 8-ம் தேதியும், இரண்டாம் தாள் 9-ம் தேதியும் நடைபெற உள்ளது. இதற்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர்.

    இந்நிலையில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பரமானந்தம் மற்றும் சக்திவேல் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.

    இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆசிரியர் தகுதித் தேர்வில், பிரதான பாடத்திற்கு குறைந்தபட்சம் மற்றும் அதிகபட்ச மதிப்பெண் நிர்ணயிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

    அரசுத் தரப்பு வழக்கறிஞர் வாதாடும்போது, ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதுவதற்காக லட்சக்கணக்கானோர் காத்திருப்பதால் தேர்வுக்கு தடை விதிக்கக் கூடாது என்று தெரிவித்தார். கேள்வித்தாள் எப்படி அமைய வேண்டும் என்பதை விண்ணப்பதாரர்கள் தீர்மானிக்க முடியாது என்றும் கூறினார். அரசுத் தரப்பு விளக்கத்தை ஏற்ற உயர்நீதிமன்றம், தகுதித் தேர்வுக்கு தடை கோரி பரமானந்தம் மற்றும் சக்திவேல் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
    தகுதித் தேர்வை முடிக்காத ஆசிரியர்கள் மீதான நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஐகோர்ட்டில் ஆசிரியர்கள் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு வருகிறது. #Highcourt
    சென்னை:

    திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த இந்திராகாந்தி உள்பட 4 ஆசிரியைகள், ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தனர். அதில், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சிப் பெறாத தங்களை பணி நீக்கம் செய்யக்கூடாது என்று தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறி இருந்தனர்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம், ‘தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்று ஆசிரியர் பணிக்காக சுமார் 60 ஆயிரம் பேர் ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஆனால், மனுதாரர்கள் வாய்ப்புகள் பல கொடுத்தும், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சிப் பெறாமல் உள்ளனர்.

    எனவே, மனுதாரர்கள் மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெறாமல், ஆசிரியராக பணியாற்றி வருபவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுத்து, அவர்களிடம் விளக்கம் பெற்று, சட்டப்படி தகுந்த உத்தரவை தமிழக அரசு பிறப்பிக்கவேண்டும்’ என்று உத்தரவிட்டார்.

    இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், ஆசிரியர்கள் பலர் மேல்முறையீடு செய்துள்ளனர். அவர்கள் தங்கள் மனுவில், ‘தகுதித் தேர்வு அறிமுகப்படுத்தி 9 ஆண்டுகளில் ஆண்டுக்கு இரண்டு முறை என 18 தேர்வுகள் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் தமிழகத்தில் மூன்று முறைதான் இதுவரை தகுதி தேர்வு நடத்தப்பட்டுள்ளது.

    மற்ற மாநிலங்களில் ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பாக தெளிவான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அது போன்ற அரசாணை தமிழகத்தில் மட்டும் பிறப்பிக்கப்படவில்லை’ என்று கூறியிருந்தனர்.

    மேலும், ‘மத்திய அரசு சார்பில் தேசிய அளவில் ஆண்டுக்கு இரு முறை தகுதித் தேர்வு நடத்தப்பட்டுள்ளது என்று தனி நீதிபதி தவறான கருத்தை கூறியுள்ளார். அது தேசிய தகுதித் தேர்வு ஆகும். தமிழக ஆசிரியர்கள் தேசிய தகுதித் தேர்வை எழுத முடியாது.

    தற்போதுகூட தேர்வு அறிவிப்புதான் வெளியாகி உள்ளதே தவிர, எப்போது தேர்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்படவில்லை. எனவே தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், சுப்பிரமணியபிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்பதாகவும், வழக்கு மீதான விசாரணை அடுத்த வாரம் நடைபெறும் என்றும் கூறினர்.
    ×