search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Spirituality"

    • அக்னி நட்சத்திர தோஷம் ஆரம்பம்.
    • சனிபகவானுக்கு சிறப்பு அபிஷேகம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு சித்திரை-21 (சனிக்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : ஏகாதசி இரவு 6.10 மணி வரை பிறகு துவாதசி

    நட்சத்திரம் : பூரட்டாதி இரவு 7.49 மணி வரை பிறகு உத்திராட்டாதி

    யோகம் : மரண, சித்தயோகம்

    ராகுகாலம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    எமகண்டம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    சூலம் : கிழக்கு

    நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    நாளை அக்னி நட்சத்திர தோஷம் ஆரம்பம். சர்வ ஏகாதசி. குச்சனூர் ஸ்ரீ சனிபகவான் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் பவனி. ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி புறப்பாடு. வீரபாண்டி ஸ்ரீ கவுமாரியம்மன் திருவீதி உலா. திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் சிறப்பு அலங்கார திருமஞ்சன சேவை.

    இன்றைய ராசிபலன்

    மேஷம் - தாமதம்

    ரிஷபம் - உழைப்பு

    மிதுனம் - வரவு

    கடகம் - அனுகூலம்

    சிம்மம் - விவேகம்

    கன்னி - புகழ்

    துலாம் - இன்பம்

    விருச்சிகம் - சாந்தம்

    தனுசு - உயர்வு

    மகரம் - நன்மை

    கும்பம் - மேன்மை

    மீனம் - ஆதரவு

    • பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் காலை 9 மணிக்கு மேல் 9.45 மணிக்குள் மிதுன லக்னத்தில் கொடியேற்றம் நடைபெறுகிறது.
    • விழாவுக்கான ஏற்பாடுகளை பழனி கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, துணை ஆணையர் வெங்கடேஷ் தலைமையிலான அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

    பழனி:

    அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் நடைபெறும் முக்கியத் திருவிழாக்களில் வைகாசி விசாகமும் ஒன்றாகும். 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழா இந்த ஆண்டு வருகிற 16-ந் தேதி தொடங்குகிறது. அன்றைய தினம் பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் காலை 9 மணிக்கு மேல் 9.45 மணிக்குள் மிதுன லக்னத்தில் கொடியேற்றம் நடைபெறுகிறது.

    திருவிழா நடைபெறும் 10 நாட்களும் வள்ளி தெய்வானை சமேதரராக முத்துக்குமார சுவாமி சப்பரம், தந்தப்பல்லக்கு, தோளுக்கினியாள், தங்க குதிரை, வெள்ளி யானை, காமதேனு, ஆட்டுக்கிடா, வெள்ளி மயில், தங்கமயில் உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக திருக்கல்யாணம் மே 21-ந் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் மாலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் விருச்சிக லக்கனத்தில் வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெறும். மறு நாள் 22-ந் தேதி வைகாசி விசாக தேரோட்டம் மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது.

    திருவிழா நடைபெறும் 10 நாட்களும் பெரியநாயகி அம்மன் கோவிலில் பக்தி சொற்பொழிவு, பரதநாட்டியம், பக்தி இன்னிசை, வீனை இன்னிசை, நாட்டுப்புற பாடல் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும். விழாவுக்கான ஏற்பாடுகளை பழனி கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, துணை ஆணையர் வெங்கடேஷ் தலைமையிலான அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

    இதனிடையே பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் அக்னி நட்சத்திரக்கழு சித்திரை மாதத்தின் கடைசி 7 நாட்களும், வைகாசி மாதத்தின் முதல் 7 நாட்களுமு கடைபிடிக்கப்படும். இந்த நாட்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் பக்தர்கள் பழனி மலையை சுற்றியுள்ள வீதிகளில் கிரிவலம் வருவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான அக்னி நட்சத்திர கழு வருகிற 7-ந் தேதி தொடங்கி 20-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    கிரிவலம் வரும் இந்நாட்களில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகம் செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • 108 திவ்ய தேசங்களில் இது 81 வது திவ்ய தேசம்.
    • ஸ்ரீ கள்ளபிரான் சுவாமி சந்திர விமானத்தின் கீழ் காட்சி தருகிறார்.

    பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 81 வது திவ்ய தேசம். நவதிருப்பதிகளில் முதலாவதாகவும், நவகிரக ஸ்தலங்களில் சூரிய ஸ்தலமாகவும் இந்த ஸ்ரீ கள்ளபிரான் திருக்கோயில் அமைந்துள்ளது. ஸ்ரீ கள்ளபிரான் சுவாமி சந்திர விமானத்தின் கீழ் காட்சி தருகிறார். நான்கு புஜங்களுடன், கையில் தண்டத்துடன், ஆதி சேஷனைக் குடையாகக் மார்பில் மஹா லக்ஷ்மியுடன் நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறார்.

    பிரகாரத்தில் வைகுந்தவல்லித் தாயார் சன்னதி உள்ளது. மேலும் நரசிம்மர் சன்னிதி, கோதண்ட ராமர் சன்னிதியும் உள்ளன. சித்திரை மற்றும் ஐப்பசி மாதங்களில், பௌர்ணமி நாளன்று, சூரியனின் கதிர்கள் பெருமாளின் பாதத்தில் படும்படி, இதற்கு ஏற்றாற் போல் சுவாமி சன்னதி எதிரிலுள்ள கொடி மரம், மேரு வடிவ பலிபீடம் தென்புறம் விலகியிருக்கிறது. இத்தலம் சூரிய தோஷ பரிகார ஸ்தலம் ஆகும். ஆதித்ய ஹ்ருதயம் சேவிக்க அருமையான பலன் உண்டு.

    தல வரலாறு:

    முன்பு ஒரு சமயம் சத்யலோகத்தில் பிரளயம் ஏற்பட்டது. அப்போது அயன் ஆழ்ந்த நித்திரையில் இருந்தார். அதையறிந்த கோமுகசுரன், அவரிடமிருந்து வேதங்களை அபகரித்து சென்றான். துயில் நீங்கி எழுந்த பிரம்மன் அதற்காக வருந்தி, அதனை அவனிடமிருந்து மீட்கும் பொருட்டு மகாவிஷ்ணுவைக் குறித்து தவம் செய்ய எண்ணி, தன் கையில் இருந்த தண்டத்தை ஒரு பிரம்மாச்சாரியாக மாற்றி "பூவுலகில் தாமிரபரணி நதிக்கரையில் தவம் புரிய ஒரு இடத்தை பார்த்து வா" என்று அனுப்பினார்.

    அவனும் நதியின் இரு கரையிலும் பார்த்து விட்டு இறுதியாக திருக்கோளுருக்கு அருகில் உள்ள ஜயந்திபுரிக்கு வந்தான். அங்கு ஒரு மோகினியைக் கண்டு மோகித்து அவளுடன் காலம் கழித்து நான்முகன் கட்டளையை மறந்தான்.

    இதையறிந்த சதுர்முகன் தன் கையிலிருந்த கெண்டியை ஓர் பெண்ணாக்கி " பெண்ணே! தவம் இயற்ற தாமிரபரணி நதிக்கரையில் ஒரு நல்ல இடம் பார்த்து வா" என்று அனுப்பினார். அவளும் வெகு நாள் பூவுலகில் சுற்றி சோலைகள் நிறைந்த இந்த பரமபாவனமான இடமே தவத்திற்குரியது என்று பிரம்மனிடம் தெரிவித்தாள்.

    பிரம்மனும் இங்குவந்து கடும் தவம் செய்ய, திருமால் அதற்கு இரங்கி சதுர்முகனுக்கு நேரில் காட்சி கொடுத்து, கோமுகாசுரனை முடித்து அவனிடமிருந்த வேதங்களை மீட்டு பிரம்மனிடம் அளித்தார்.

    பிரம்மனும் "அகல் விசும்பும் நிலனும் இருளார் வினைகெட செங்கோல் நடாத்துவீர்" எப்படி வைகுந்தத்திலிருந்து இங்கு எழுந்தருளி சேவை சாதித்தீரோ அவ்வண்ணமே இங்கு எப்பொழுதும் சேவை சாதித்து அடியார்களின் "செடியாய வல்வினைகளை தீர்த்து அருள் புரிய வேண்டும்" இத்திருப்பதியும் ஸ்ரீ வைகுண்டம் என்ற திருநாமத்துடன் விளங்க வேண்டும் என்று விண்ணப்பம் செய்ய, பெருமாளும் அவ்வாறே இங்கு கோயில் கொண்டார்.

    பிரம்மனும் தனது கெண்டியால் தாமிரபரணி தீர்த்தத்தை எடுத்து பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்ததாலும், நதிக்கரையில் கலசத்தை ஸ்தாபித்ததாலும், இத்தீர்த்தம் " கலச தீர்த்தம்" என்று வழங்கப்படுகின்றது. பிரம்மன் வைகுண்ட நாதருக்கு சைத்ர உற்சவம் நடத்தி பின் சத்திய லோகம் சென்றார்.

    இத்தலத்தில் காலதூஷகன் என்ற கள்வன் ஒருவன் இருந்தான். அவன் திருடச்செல்லும் போது வைகுந்த நாதரிடம், தேவா! நான் எவ்விடத்தில் திருடச்சென்றாலும் ஒருவரும் அறியாவண்ணம் திருடிவர வேண்டும்.

    அவ்வாறு திருடிய பணத்தில் பாதியை உமக்கு காணிக்கையாகத் தருவேன் என்று வணங்கிச் செல்வான். குறுகிய காலத்தில் ஏராளமான செல்வத்தை கொள்ளை அடித்தான், தான் கூறியது போலவே அதில் பாதியை பெருமாளுக்கு காணிக்கையாக்கி வந்தான்.

    ஒரு நாள் அரசன் அரண்மனையில் திருடும் போது அவனது சில சகாக்கள் அரச சேவகர்களிடம் மாட்டிக்கொண்டனர். அவர்கள் அரச தண்டனைக்கு பயந்து காலதூஷகனை காட்டிக்கொடுத்து விடுவதாக கூற அவனும் பகவானை சரணடைந்து துதி செய்ய, கருணைக் கடலான கார்முகில் வண்ணரும் வயது முதிர்ந்த வேடத்தில் வந்து அப்பா நீ அஞ்ச வேண்டாம் தஞ்சமென்றவரை ஆதரிப்பது என் கடமை என்றார்.

    பிறகு பகவான் கால்தூஷகனாக வடிவெடுத்து அரண்மனைக்கு செல்ல வழியில் திருடர்கள் இவரை நோக்கி இவனே எங்கள் தலைவன் என்று கூற சேவகர்கள் அவரை அரண்மனைக்கு அழைத்து சென்று அரசன் முன்னர் நிறுத்தினர்.

    மன்னனும் நீ யார்? நீ இருப்பது எவ்விடம்? எதற்காக அரண்மனையில் புகுந்து கொள்ளையடித்தாய்? என்று வினவினான். அது கண்ட வைகுந்தநாதனாக இருந்து சோரநாதனான, காலதூஷகனான பெருமாள் அரசே! என் பெயர் கள்ளர் பிரான், ஸ்ரீவைகுண்டம் எனது இருப்பிடம், என் பிழைப்புக்காக உன் பணம் முழுவதையும் திருடினேன். உன் குற்றத்தை நீ தெரிந்து கொள்ளவில்லை பணத்திற்கு பங்காளிகள் நால்வர். அவர்கள் தர்மம், அக்னி, திருடன், ராஜா. இவற்றில் முந்தியது தருமம், தருமம் செய்யப்படாத செல்வம் கள்வனாகிய என்னால் அபகரிக்கப்பட்டது. எனவே இனி தர்மம் செய்வாய் என்றார்.

    அது கேட்ட அரசனும் சிங்காதனத்தில் இருந்து எழுந்து நமக்கு நற்புத்தி புகட்டியவர் பகவானே என்று தீர்மானித்து வைகுந்த நாதா! கள்ளர் பிரானே! இன்று முதல் தாங்கள் சோரநாதன் (கள்ளர் பிரான்) என்ற திருநாமத்துடன் எழுந்தருளியிருத்தல் வேண்டும் என்று விண்ணப்பித்தான். அது முதல் உற்சவர் கள்ளர்பிரான் என்று வழிபடப்படுகின்றார்.

    சித்திரை பெருந்திருவிழாவின் போது நம்மாழ்வார், பொலிந்து நின்ற பெருமாளுடன் ஸ்ரீவைகுண்டம் எழுந்தருளுவார். பெருமாளை மங்களாசாசனம் செய்தபின் அன்ன வாகனத்தில் எழுந்தருளும் சடகோபருக்கு கள்ளபிரான், பொலிந்து நின்ற பிரான், வரகுண மங்கை எம் இடர் கடிவான், திருப்புளிங்குடி காய்சினவேந்தன் ஆகிய நான்கு பெருமாள்களும் கருட வாகனத்தில் சேவை சாதிக்கின்றனர்.

    • ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் திருவீதி உலா.
    • ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீவைகுண்டபதி பவனி.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு, சித்திரை 20 (வெள்ளிக்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: தசமி இரவு 8.36 மணி வரை. பிறகு ஏகாதசி.

    நட்சத்திரம்: சதயம் இரவு 9.26 மணி வரை. பிறகு பூரட்டாதி.

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    சூலம்: மேற்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    நாளை சுபமுகூர்த்த தினம். ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீவைகுண்டபதி பவனி. சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் திருவீதி உலா. ராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. வீரபாண்டி ஸ்ரீசவுமாரியம்மன் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் காலை திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு. பத்ராசலம் ஸ்ரீராமபிரான் புறப்பாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-ஜெயம்

    ரிஷபம்-லாபம்

    மிதுனம்-ஆசை

    கடகம்-நன்மை

    சிம்மம்-நட்பு

    கன்னி-ஆக்கம்

    துலாம்- சுகம்

    விருச்சிகம்-அமைதி

    தனுசு- பொறுப்பு

    மகரம்-பொறுமை

    கும்பம்-இன்பம்

    மீனம்-கவனம்

    • குரு 6-ம் இடத்தில் இருந்தால் தீராத வியாதிகள் ஏற்படலாம்.
    • குரு கிரகத்தால் ஏற்படும் தோஷம் விலகும்.

    நவக்கிரகங்களுக்குள் - மந்திரங்கள் - தெய்வ வழிபாடு ஆகியவற்றிற்கு அதிபதியாகிய குரு பகவான் வாக்கியப் பஞ்சாங்கப்படி 1-5-24 (புதன்கிழமை) மாலை 5.19 மணிக்கு கிருத்திகை 1-ம் பாதம் மேஷம் ராசியில் இருந்து கிருத்திகை 2-ம் பாதம் ரிஷப ராசிக்குள் பிரவேசிக்கிறார். திருக்கணிதப்படி 1-5-24 (புதன்கிழமை) பகல் 1 மணிக்கு மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்குள் பிரவேசிக்கிறார்.

    குழந்தைகள், வம்சவிருத்தி, சுவர்ண (தங்க) லாபம், பதவி உயர்வு ஆகியவற்றைத்தர சக்தியுள்ள குருபகவான் மேஷ ராசியில் நுழைவதால் தேசத்தில் நன்மைகள் அதிகம் நடைபெறும், ஆஸ்திகம் வளர்ச்சியடையும் என்று சொல்லப்பட்டுள்ளது.

    இந்த குருப்பெயர்ச்சியால் ஒவ்வொரு ராசியில் பிறந்தவர்களுக்கும் குரு தனது ராசியில் இருந்து எத்தனையாவது இடத்தில் இருக்கிறார் என்பதற்கு ஏற்ப, தனித்தனி பலன்கள் கிட்டும் என்று ஜோதிடர்கள் சொல்கிறார்கள். அதன் விவரம் வருமாறு:-

    மேஷம் - பராகிரமம், செல்வம், குடும்பத்தினருக்கு சுகம், தன்னுடைய வாக்கு பலிதமாகுதல்.

    ரிஷபம்- தான் வசிக்கும் தேசத்தில் இருந்து வெளிச்செல்லுதல், சத்ருத்தன்மை.

    மிதுனம்- பொருள் காரணமாக அச்சம் ஏற்படலாம்.

    கடகம் - குழந்தை லாபம், பதவி, லாபம், கவுரவம்.

    சிம்மம் - பொருள், பதவி, துன்பம்.

    கன்னி- அனைத்து விதமான நன்மைகள் ஏற்படும்.

    துலாம் - தாய்க்கு (தாயால்) துன்பம், அரிஷ்டம், பொருள் நஷ்டம் போன்ற பலன்கள் ஏற்படலாம்.

    குரு 6-ம் இடத்தில் இருந்தால் தீராத வியாதிகள் ஏற்படலாம். இவைகளிலிருந்து விடுபட, தனுசு ராசிக்காரர்கள், மஞ்சள் நிறத்தாலான சுத்த பட்டுத்துணியை அல்லது புடவையை தெய்வ சன்னிதியில் வைத்து விட்டு, அதை எடுத்து வேதாத்யயனம் செய்தவருக்கோ, அல்லது மற்றவர்களுக்கோ. அவர்களின் மனைவிக்கோ, தானம் செய்யலாம். இதனால் குடும்பத்தில் அனைவருக்கும் வியாதிகள் விலகி ஆரோக்கியம் கிடைக்கும்.

    குரு 8-ம் இடத்தில் இருப்பதால் ஏற்படும் இழப்பை ஈடுசெய்ய துலாம் ராசிக்காரர்கள் கமண்டலு என்னும் (வெள்ளி) ஜாரி அல்லது வெங்கல கிண்டியை வைத்துக்கொண்டு தெய்வ சன்னிதியில் தரையில் வைத்து நமஸ்காரம் செய்து விட்டு அந்த தானப் பொருளை தகுந்த நபரிடம் பணிவுடன் கொடுக்க வேண்டும். இதனால் குரு கிரகத்தால் ஏற்படும் தோஷம் விலகும்.

    விருச்சிகம் - மங்கள நிகழ்ச்சிகளுக்கான யாத்திரை, பெண்ணால் சுகம், பிள்ளைப் பேறு.

    தனுசு - விரோதிகள் மந்தரிகள் தொல்லை, வியாதி

    மகரம் - குழந்தைச் செல்வம், குழந்தைகளால் நன்மை, நல்லோர் சேர்க்கை. அரசாங்கத்தில் அனுகூலம்.

    கும்பம் - உறவினர்களின் துன்பங்களால் ஏழ்மை, நாலுகால் பிராணிகளால் பயம், போன்ற பலன்கள் ஏற்படலாம்.

    மீனம் - இருப்பிட மாறுதல், இஷ்டத்தில் இருந்து பிரிவு, காரியத்தடை.

    குரு 10-ம் இடத்தில் இருப்பதால் ஏற்படும் இட மாறுதல் தோஷம் விலக சிம்ம ராசிக்காரர்கள் நர்மதா நதியில் எடுத்த பாண லிங்கத்தை கையில் வைத்துக்கொண்டு தெய்வ சன்னிதியில் தரையில் வைத்து நமஸ்காரம் செய்து விட்டு அதை தகுந்த நபரிடம் கொடுக்க வேண்டும்.

    பொதுவாக இந்த குருப்பெயர்ச்சி கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மேஷம் ஆகிய ராசிகளில் பிறந்தவர்களுக்கு மிகவும் மேன்மையைத் தரும். ரிஷபம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம், மீனம் ஆகிய மற்ற ராசிக்காரர்கள் குருப் பெயர்ச்சி பரிகாரம் செய்ய வேண்டும்.

    குருப் பெயர்ச்சி அன்றோ இன்று (வியாழக்கிழமை) புனர்பூசம், விசாகம், பூரட்டாதி நட்சத்திர நாள் அன்றோ காலையில் குளித்து விட்டு தானப் பொருட்களில் ஏதாவது ஒன்றை துளசி மற்றும் தட்சணையுடன் சேர்த்து கையில் வைத்துக் கொண்டு அதில் சிறிது தண்ணீர் விட்டுக் கொண்டு தெய்வ சன்னிதியில் தரையில் வைத்து நமஸ்காரம் செய்து விட்டு அந்த தானப் பொருளை தகுந்த நபரிடம் பணிவுடன் கொடுக்க வேண்டும். இதனால் குரு கிரகத்தால் ஏற்படும் தோஷம் விலகும்.

    • குருபகவான் தரும் யோகங்களில் குறிப்பிடத்தக்க யோகங்கள் ஐந்து.
    • குருவின் சந்நிதியில் நேரில் நின்று வழிபட்டால் சிறப்பும், செல்வாக்கும் வந்து சேரும்.

    குருபகவான் தரும் யோகங்களில் குறிப்பிடத்தக்க யோகங்கள் ஐந்தாகும். 1) கஜகேசரி யோகம் 2) குருச்சந்திரயோகம் 3) குருமங்களயோகம் 4) ஹம்சயோகம் 5) சகடயோகம். அவற்றை பற்றிய விளக்கம்:

    கஜகேசரி யோகம்:

    குரு, சந்திரனுக்கு கேந்திரத்தில் அதாவது 4, 7, 10 ஆகிய இடங்களில் இருந்தால் ``கஜகேசரி யோகம்'' உண்டாகிறது. இந்த யோகத்தைப் பெற்றவர்கள் செல்வம், செல்வாக்கு, வீடு, வாகனம், உயர்ந்த பதவி போன்றவற்றைப் பெற்றவராக விளங்குவர்.

    குருச்சந்திரயோகம்:

    சந்திரனுக்கு குரு 1, 5, 9 ஆகிய இடங்களில் காணப்பட்டால் `குருச்சந்திரயோகம்' உருவாகிறது. இந்த யோகத்தைப் பெற்றவர்கள் புகழ்மிக்கவராகவும், நல்ல அந்தஸ்து படைத்தவர்களாகவும் இருப்பர்.

    குரு மங்களயோகம்:

    குருவுக்கு கேந்திரத்தில் செவ்வாய் இருந்தால் `குரு மங்கள யோகம்' ஏற்படும். இந்த யோகத்தை பெற்றவர்கள் வீடு, இடம், வாகனம் போன்றவற்றை அதிகம் வாங்கி மகிழும் வாய்ப்புண்டு.

    ஹம்சயோகம்:

    சந்திரனுக்கு கேந்திரத்தில் குரு உச்சம் பெற்றால் இந்த யோகம் உண்டாகிறது. நல்ல உடலமைப்பும், ஒழுக்கமான வாழ்க்கையும் உள்ளவர்களாக இந்த `ஹம்ச' யோகத்தில் பிறந்தவர்கள் திகழ்வார்கள்.

    சகடயோகம்:

    குருவுக்கு சந்திரன் 6, 8, 12 ஆகிய இடங்களில் இருந்தால், ``சகடயோகம்'' ஆகும். வண்டிச்சக்கரம் போல் இவர்களது வாழ்க்கையில் இன்பமும், துன்பமும் கலந்தேயிருக்கும். பொதுவாக, யோகம் தரும் குருவைப் போற்றிக் கொண்டாடினால், பொன்னான எதிர்காலம் அமையும். குருவை நாம் கோவிலுக்குச் சென்று வழிபடும் பொழுது, அதன் பார்வை நம்மீது பதியும் விதத்தில் நேராய் நின்று வழிபட வேண்டும்.

    சனியை சாய்வாய் நின்று கும்பிடு! குருவை நேராய் நின்று கும்பிடு என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. அந்த அடிப்படையில் குருவின் சந்நிதியில் நேரில் நின்று வழிபட்டால் சீரும், சிறப்பும், செல்வாக்கும் நமக்கு வந்து சேரும்.

    குருவின் சந்நிதியில் நாம் பாட வேண்டிய பாடல்:

    "வானவர்க் கரசே! வளம் தரும் குருவே!

    காணா இன்பம் காண வைப்பவனே!

    பொன்னிற முல்லையும் புஷ்ப ராகமும்!

    உந்தனுக்களித்தால் உள்ளம் மகிழ்வாய்!

    சுண்டல் தானியமும் சொர்ண அபிஷேகமும்!

    கொண்டுனை வழிபடக் குறைகளைத் தீர்ப்பாய்!

    தலைமைப் பதவியும் தனித்தோர் புகழும்!

    நிலையாய் தந்திட நேரினில் வருக!''

    "நாளைய பொழுதை நற்பொழுதாக்குவாய்!

    இல்லற சுகத்தினை எந்தனுக் களிப்பாய்!

    உள்ளத்தில் அமைதி உறைத்திடச் செய்வாய்!

    செல்வ செழிப்பும் சேர்ந்திட வைப்பாய்!

    வல்லவன் குருவே! வணங்கினோம் அருள்வாய்!

    என்று மனமுருகி பாடுங்கள். பண மழையில் நனையலாம். "பார் போற்ற வாழலாம்''.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 2-ல் குரு இருக்கப் பெற்றவர்கள் பேச்சுத்திறமை பெற்றிருப்பார்கள்.
    • லக்னத்தில் உள்ள வியாழன் ஜாதகருக்கு நல்ல ஒழுக்கத்தைத் தருவார்.

    வியாழன் லக்னத்தில் இருக்கப் பெற்ற ஜாதகர் சிறந்த கல்விமான் ஆவார். தோற்றப் பொலிவு பெற்றிருப்பார்.

    லக்னத்தில் வியாழன் இருக்கப் பெற்ற ஜாதகர் பயம் இல்லாதவராகவும், முன்னேறும் திறமை உள்ளவராகவும் விளங்குவார்.

    லக்னத்தில் உள்ள வியாழன் ஜாதகருக்கு நல்ல ஒழுக்கத்தைத் தருவார். செல்வத்தை வழங்குவார்.

    2-ல் குரு இருக்கப் பெற்றவர்கள் பேச்சுத்திறமை பெற்றிருப்பார்கள்.

    2-ல் குரு வாழ்க்கையில் நல்ல உணவு மற்றும் வசதிகள் எல்லாம் ஜாதகருக்கு உண்டாகச் செய்வார்.

    2-ல் உள்ள குரு சில நேரங்களில் சிலருக்காகத் தியாகம் செய்யும் மனப்பான்மையை வழங்குவார்.

    குரு தனுசிலோ மீனத்திலோ இருக்கப்பெற்று அது, 2-ஆம் இடமாக அமையுமானால், ஜாதகர் வியாபாரத்தில் விற்பன்னராவார்.

    தனுசு, மீனம் தவிர வேறு இடங்கள் 2-ஆம் இடமாகி, அங்கே குரு இருக்கப் பெற்றவர்கள், குடும்ப வாழ்வில் சில தொல்லைகளை அனுபவிக்க நேரும்.

    3-ஆம் இடத்தில் உள்ள ஜாதகருக்கு உலோப குணத்தை வழங்குவார். பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு ஏற்படும்.

    3-ஆம் இடத்தில் உள்ள வியாழன், ஜாதகரை பெண்களிடம் பிரியம் உள்ளவராக உருவாக்கி வைப்பார்.

    3-ஆம் இடத்தில் உள்ள வியாழன் ஜாதகரை ஒரு நூலாசிரியராக ஆக்கி வைப்பார்.

    3-ல் உள்ள குருவால் ஜாதகர் சகோதரரால் நலம் பெறவும் சகோதரருக்கு நலம் புரியவும் சந்தர்ப்பங்கள் உண்டாகும்.

    3-ல் உள்ள வியாழன் ஜாதகரை உயர்ந்த நிலைக்கு உரியவராகச் செய்வதற்கு இடமிராது.

    3-ல் உள்ள வியாழ னால் ஜாதகருக்கு ஜீரண சக்தி திருப்திகரமாக அமையாது.

    4-ல் உள்ள குரு சுகமான வாழ்க்கையைத் தருவார்.

    மக்கள் நலம், தாய் நலம், நண்பர்கள் நலம், பணியாட்கள் நலம், குடும்ப நலம் இவைகள் எல்லாம் ஜாதகருக்கு 4-ஆம் இடத்தில் உள்ள குருவால் உண்டாகும்.

    விவசாயத்தின் மூலம் தானியங்களைச் சேர்த்து பொருள் திரட்டக்கூடிய வாய்ப்பு 4-ஆம் இடத்து வியாழன் ஜாதகருக்கு உண்டாக்குவார்.

    4-ல் உள்ள குரு ஜாதகரை உன்னதமானவராக உருவாக்குவார். ஆனால், பகைவர்களால் தொல்லைகளை விளைவிப்பார்.

    4-ல் உள்ள குரு பலம் பெற்றிருக்கும் போது ஜாதகருக்கு மதிப்பும், செல்வமும் உயரும்.

    4-ல் உள்ள குரு புத்திர பாக்கியம் தாமதமாக உண்டாகச் செய்வார்.

    வியாழன் 5-ஆம் இடத்தில் இருந்தால் ஜாதகர் புத்திசாலியாக இருப்பார். வாழ்க்கையில் உயர்ந்த பதவி அமையும்.

    5-ஆம் இடத்தில் உள்ள குரு புத்திகாரனாக இருப்பதனால் புத்திரப் பாக்கியக் குறைவு ஏற்படும்.

    5-ல் உள்ள குரு சுபக்கிரகங்களோடு சேராமல் பாபக்கிரகங்களால் பார்க்கப்பட்டிருந்தால் புத்திர பாவத்தைப் ெபாருத்த வகையில் சங்கடம் உண்டாகும்.

    5-ல் உள்ள குரு பலமுள்ளவராகி, சுபக்கிரக சேர்க்கை பெற்றிருந்தால், மக்கள் பாக்கியம் உண்டாகும்.

    5-ல் உள்ள குரு, பொதுவாக வயிற்றுத் தொல்லையைத் தரக்கூடும்.

    6-ஆம் இடத்தில் உள்ள குரு, பகைவரை வெற்றி கொள்ளக்கூடிய பராக்கிரமத்தை உண்டு பண்ணுவார்.

    6-ஆம் இடத்தில் உள்ள குரு உடல் பலமோ, சக்தியோ ஜாதகருக்கு முழுமையாக உண்டாகாதவாறு செய்வார். அஜீரணக் கோளாறு ஏற்படவும் செய்வார்.

    6-ல் உள்ள குரு மனைவியின் மூலமாக சிறப்பு உண்டு பண்ணுவார்.

    6-ஆம் இடத்தில் உள்ள வியாழன் வக்ர கதியை அடைந்திருந்தால், ஜாதகருக்கு பகைவர்களால் தொல்லை ஏற்படலாம்.

    7-ல் உள்ள குரு ஜாதகரை, அவரது தந்தையைக் காட்டிலும் சிறப்பான நிலையில் உயர்த்தி வைப்பார்.

    7-ல் உள்ள வியாழன் காரணமாக ஜாதகருக்கு நல்ல மனைவி அமைவாள்.

    ஜாதகர் பெரிய செல்வந்தர் ஆவதற்கு 7-ஆம் வீட்டு வியாழனால் வாய்ப்பு உண்டாகும். மேலும் ஜாதகர் அவரது தந்தையைக்

    காட்டிலும் பெருந்தன்மை மிகுந்த–வராக விளங்கச் சந்தர்ப்பம் உண்டு.

    7-ல் உள்ள குரு, ஜாதகரை மதியூகம் மிக்கவராகவும், முக்கியமான பதவியை வகிக்கச் செய்கிறவராகவும் ஆக்குவார்.

    7-ஆம் இடத்து குருவின் காரண–மாக அந்த ஜாதகர் பெரிய கவிஞனாக முடியும். புகழ் பெறவும் முடியும்.

    8-ல் உள்ள குரு, ஜாதக–ருக்கு உத்தியோகம் பார்ப்பதன் மூலம் சம்பாத்தியத்தை உண்டு பண்ணுவார்.

    புனித தலங்களுக்கு சென்று இறைவனை வழிப்படக்கூடிய வாய்ப்பு உண்டு பண்ணக்கூடியவர், 8-ஆம் இடத்து வியாழனாவார். ஜோதிடம், குறி சொல்லுதல் ஆகியவற்றில் ஜாதகருக்கு நிபுணத்துவம் உண்டாகும்.

    8-ம் இடத்து வியாழன் காரணமாக ஜாதகருக்கு பொருளாதார நிலையில் முழுமையான சுபிட்சம் இராது. ஆனால், ஆயுள் தீர்க்கமாக இருக்கும்.

    8-ல் உள்ள குரு நண்பர்களால் ஜாதகருக்கு பொருள் இழப்பு உண்டு பண்ணுவார். வியாதியினால் அல்லல் படவும் நேரும்.

    9-ல் உள்ள வியாழன் ஜாதகரை புனித கருமங்கள் செய்ய வைப்பார். உயர்ந்த பதவியை உண்டாக்கித் தருவார்.

    9-ஆம் இடத்தில் உள்ள வியாழன் மிக்க பலம் பெற்றிருந்தால் அந்த ஜாதகர் மந்திரியாகவோ, கட்சித் தலைவராகவோ, பிரகாசிப்பதற்கு வாய்ப்பு ஏற்படும்.

    9-ல் உள்ள குரு ஜாதகருக்கு தெய்வ பக்தியையும், வேத விற்பன்னர்களைப் போற்றுகின்ற பண்பையும் வழங்குவார்.

    10-ல் உள்ள வியாழன் ஒருவரை குபேரனாக்குவார். அரசாங்க மதிப்பையும் வருமானத்தையும் பெற வைப்பார்.

    10-ல் உள்ள குரு, நேர்வழியில் நடக்கக்கூடிய தன்மையை ஜாதகருக்கு வழங்குவார். இந்த ஜாதகர் பெற்றோரை போற்றி நடப்பவர் ஆவார்.

    11-ம் இடத்தில் உள்ள வியாழன், ஜாதகருக்கு பல துறைகளிலும் செல்வத்தைத் திரட்டித் தருவார்.

    11-ம் இடத்தில் உள்ள வியாழன் குறைந்த அளவில் மக்கட்செல்வத்தை வழங்குவார்.

    11-ம் இடத்தில் உள்ள குரு தனித்திருந்தால் பண வருவாயை சுருக்கி விடுவார்.

    12-ல் உள்ள வியாழன் பாச பந்தங்களில் இருந்து ஜாதகரை ஒதுக்கி வைப்பார். பொதுமக்களின் விரோதம் ஜாதகருக்கு ஏற்படும்.

    12-ல் உள்ள குருவினால் ஜாதகருக்குப் பேச்சு வன்மை குறைந்து விடும். ஒழுக்கத்தில் குறைபாடு ஏற்படும். அடிமைப் பணி செய்யக்கூடிய சூழ்நிலை உருவாகும்.

    12-ம் இடத்தில் உள்ள குரு ஜாதகருக்கு அடிக்கடி பயணங்களை உண்டு பண்ணுவார்.

    12-ம் இடம் மீனமாகவோ, தனுசாகவோ ஆகுமானால் ஜாதகர் பக்திமானாகவும், தர்மவானாகவும் விளங்கவும் செல்வத்தைக் குவிக்கவும் வாய்ப்பு ஏற்படும்.

    • மாவிளக்கு ஏற்றி அக்னிச்சட்டி எடுத்து வந்து வழிபாடு செய்தனர்.
    • துடைப்பத்தால் மாமன், மைத்துனர் ஒருவரையொருவர் அடித்துக்கொண்டனர்.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள மறவபட்டி முத்தாலம்மன் கோவில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது.

    திருவிழாவின் முதல் நாளில் கன்னியப்ப பிள்ளை பட்டியில் இருந்து அம்மன் சிலையை ஊர்வலமாக எடுத்து வந்து மறவபட்டி முத்தாலம்மன் கோவிலில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்தனர்.

    2-ம் நாளில் காப்பு கட்டிய பக்தர்கள் அம்மனுக்கு பொங்கல் வைத்து மாவிளக்கு ஏற்றி அக்னிச்சட்டி எடுத்து வந்து வழிபாடு செய்தனர்.

    அதன் பின்பு கிராமத்தில் உள்ள மாமன் மைத்துனன் உறவு முறை கொண்டவர்கள் உடல் முழுவதும் சகதியை பூசிக் கொண்டும், சணல் சாக்கு கட்டிக் கொண்டும், கயிற்றால் ஒருவரையொருவர் பிணைத்துக்கொண்டும் கோவில் முன்பு தரையில் விழுந்து அம்மனை வணங்கி கோவில் வளாகத்தை சுற்றி வந்து வழிபாடு செய்தனர்.

    அதன் பின் துடைப்பத்தை எடுத்து சகதியில் நனைத்து மாமன், மைத்துனர் உணவுமுறை கொண்டவர்கள் ஒருவரையொருவர் அடித்துக்கொண்டனர். இவ்வாறு செய்வதால் அவர்களது உறவு வலுப்படும் என்று பல ஆண்டுகளாக இவ்வகை நேர்த்திக்கடனை செலுத்தி வருவதாக தெரிவித்தனர்.

    நீண்ட நாள் பிரிந்து வாழ்ந்த உறவுகள் கூட இத்திருவிழாவின் போது ஒன்று கூடி துடைப்பத்தால் அடித்து உறவை மேம்படுத்திக் கொள்வதாகவும் தெரிவித்தனர்.

    இந்த வினோத திருவிழாவை காண ஆண்டிபட்டி மட்டுமின்றி பல்வேறு ஊர்களில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் வருகை தந்து கண்டு ரசித்தனர்.

    • பட்டமங்கலத்தில் அஷ்டசித்தி தட்சிணாமூர்த்தி கோவில் உள்ளது.
    • ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    திருப்பத்தூர்:

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள பட்டமங்கலத்தில் அஷ்டசித்தி தட்சிணாமூர்த்தி கோவில் உள்ளது. வியாழக்கிழமை அன்று குருபகவானுக்கு உகந்த நாளாக இருப்பதால் இந்த கோவிலில் வாரந்தோறும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் பக்தர்கள், கொண்டைக்கடலை மாலை அணிவித்து விளக்கேற்றி வழிபடுவது வழக்கம். மேலும் இங்கு ஆண்டுதோறும் குருப்பெயர்ச்சி விழாவும் சிறப்பாக நடைபெறும்.

    இந்த ஆண்டுக்கான குருப்பெயர்ச்சி கடந்த மாதம் 27-ந் தேதி சிறப்பு ஹோமத்துடன் தொடங்கியது. குருப்பெயர்ச்சி விழாவையொட்டி குருபகவான், மேஷ ராசியில் இருந்து சுக்ரன் ராசியான ரிஷப ராசிக்கு நேற்று மாலை 5.11 மணிக்கு மாறினார்.

    முன்னதாக அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு குருபகவானுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் வெள்ளி அங்கியில் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டது. மூலவர் முன்பு உள்ள பகுதியில் உற்சவர் கார்த்திகை பெண்களுடன் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார்.

    பின்னர் நேற்று மாலை குருபகவான் ரிஷப ராசிக்கு மாறும்போது, மூலவர் மற்றும் உற்சவருக்கும் கோவில் மேல் பகுதியில் உள்ள கோபுரங்களுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இந்த விழாவில் மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • பரிகார மகா யாக பூஜை நடந்தது.
    • குருபகவானுக்கு திருமஞ்சனம், சிறப்பு அபிஷேகம் நடந்தது.

    சோழவந்தான்:

    மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே குருவித்துறை கிராமம் உள்ளது. இங்கு பிரசித்தி பெற்ற சித்திர ரத வல்லபபெருமாள் கோவில் அமைந்து உள்ளது. இந்த கோவிலில் நவகிரகங்களில் ஒருவரான குரு பகவானுக்கு தனி சன்னதி உள்ளது.

    இந்த சன்னதியில் குருபகவான் பெருமாளை நோக்கி தவக்கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அருகில் சக்கரத்தாழ்வாரும் காட்சி தருகிறார்.

    இதைத்தொடர்ந்து குருவித்துறை குருபகவான் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா கடந்த 29-ந்தேதி லட்சார்ச்சனையுடன் தொடங்கியது. நேற்று முன்தினமும், நேற்றும் லட்சார்ச்சனை நடந்தது.

    நேற்று பகல் 2 மணி அளவில் பரிகார மகா யாக பூஜை நடந்தது. 10-க்கும் மேற்பட்ட அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க யாக பூஜை நடத்தினர். பின்னர் மகா பூர்ணாகுதி நடந்து அர்ச்சகர்கள் புனித தீர்த்தக்குடங்களை எடுத்து கொண்டு கோவிலை வலம் வந்தனர்.

    அதன்பிறகு நேற்று மாலை 5.21 மணிக்கு மேஷம் ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு குருபகவான் இடப்பெயர்ச்சி ஆனதையொட்டி குருபகவானுக்கு திருமஞ்சனம், சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன.

     அப்போது அங்கு திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் குருபகவானை வழிபட்டனர். பரிகார ராசிதாரர்கள் பரிகார பூஜை செய்து வழிபட்டனர்.

    பிரளயநாதசுவாமி

    சோழவந்தானில் உள்ள பிரளயநாத சுவாமி கோவிலிலும் நேற்று மாலை பரிகார யாகம் நடந்தது. இதைத்தொடர்ந்து புனித நீர் குடங்களை எடுத்து கோவிலை வலம் வந்தனர். குருபகவானுக்கு சிறப்பு அபிஷேகம், அர்ச்சனை, பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு குரு பகவானை தரிசித்தனர்.

    • ஆண்டுதோறும் குருப்பெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெறும்.
    • மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள ஆலங்குடியில் பிரசித்தி பெற்ற ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோவில் அமைந்துள்ளது. சிறப்புமிக்க இந்த கோவிலில் ஆண்டுதோறும் குருப்பெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெறும்.

    இந்த ஆண்டுக்கான குருப்பெயர்ச்சி விழா நேற்று நடந்தது. இதையொட்டி அதிகாலை கோவிலில் சிறப்பு குருபரிகார ஹோமமும், அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேக, ஆராதனையும் நடந்தது. குருபகவானுக்கு தங்ககவசத்துடன் சர்வ அலங்காரம் செய்யப்பட்டது.

     மாலை 5.19 மணிக்கு குருபகவான் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். அப்போது, குருபகவானுக்கு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    கோவில் வளாகம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் குவிந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மிகுந்த பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர்.

    குருப்பெயர்ச்சி விழாவில் கலந்து கொள்வதற்காக காலை முதலே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணமாக இருந்தனர். அதிகாலை முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று குருபகவானை தரிசனம் செய்தனர். இதனால் கோவில் வளாகம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    குருப்பெயர்ச்சியின் போது ரிஷபம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம், மீனம் மற்றும் இதர ராசிக்காரர்களும் குருபகவானை நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். தஞ்சையை அடுத்த திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில் குருப்பெயர்ச்சி விழாவிலும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம்.
    • திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு சித்திரை-19 (வியாழக்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: நவமி இரவு 10.57 மணி வரை பிறகு தசமி

    நட்சத்திரம்: அவிட்டம் இரவு 11.03 மணி வரை பிறகு சதயம்

    யோகம்: சித்த, மரணயோகம்

    ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

    சூலம்: தெற்கு

    நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் சந்நிதியில் நான்கு கருட சேவை. திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம். ஸ்ரீ சென்ன கேசவப் பெருமாள் புஷ்பப் பல்லக்கில் திருவீதி உலா. வீரபாண்டி ஸ்ரீ கவுமாரியம்மன் பவனி. ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக் கடலைச் சாற்று வைபவம். திருவல்லிக்கேணி ஸ்ரீ ராக வேந்திர சுவாமிக்கு சிறப்பு குருவார திருமஞ்சன சேவை. தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-பொறுப்பு

    ரிஷபம்-பந்தம்

    மிதுனம்-பாசம்

    கடகம்-அனுகூலம்

    சிம்மம்-போட்டி

    கன்னி-பொறுமை

    துலாம்- ஆசை

    விருச்சிகம்-சுகம்

    தனுசு- முயற்சி

    மகரம்-வரவு

    கும்பம்-வெற்றி

    மீனம்-அமைதி

    ×