search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "PT Usha"

    • பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
    • தெருக்களில் போராட்டம் நடத்துவது ஒழுக்கமின்மைக்கு சமம் என பி.டி.உஷா முன்பு கூறியிருந்தார்.

    புதுடெல்லி:

    இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பிரபல மல்யுத்த வீராங்கனைகளான வினேஷ் போகத், சாக்சி மாலிக் உள்ளிட்டோர் பாலியல் குற்றச்சாட்டை சுமத்தி கடந்த ஜனவரி மாதம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் அமைத்தது. இந்தக் குழு விசாரணை நடத்தி தனது அறிக்கையை வழங்கிவிட்டது. எனினும் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இதனால் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் போராட்டம் 11வது நாளாக இன்றும் நீடிக்கிறது.

    இந்நிலையில், இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பி.டி.உஷா, இன்று டெல்லி ஜந்தர் மந்தர் சென்று போராடும் மல்யுத்த வீரர், வீராங்கனைகளை சந்தித்து பேசினார்.

    முன்னதாக அவர்களின் போராட்டம் குறித்து பி.டி.உஷா கூறிய கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. "மல்யுத்த வீரர்,வீராங்கனைகள் தெருக்களில் போராட்டம் நடத்துவது ஒழுக்கமின்மைக்கு சமம். இது இந்தியாவின் நற்பெயரைக் கெடுக்கும்" என பி.டி.உஷா கூறியிருந்தார். இந்தக் கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். மல்யுத்த வீரர், வீராங்கனைகளும் எதிர்ப்பை பதிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பதவிக்கு பி.டி.உஷா தவிர வேறு யாரும் விண்ணப்பிக்கவில்லை.
    • இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முதல் பெண் தலைவர் என்ற பெருமையை பி.டி. உஷா பெற்றார்.

    புதுடெல்லி:

    இந்திய ஒலிம்பிக் சங்க நிர்வாகிகள் தேர்தல் டெல்லியில் இன்று நடைபெற்றது. இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பதவிக்கு ஆசிய போட்டிகளில் பல பதக்கங்களை வென்றவரும், 1984-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் 400 மீட்டர் தடை ஓட்டத்தில் 4-வது இடம் பிடித்தவருமான கேரளாவை சேர்ந்த 58 வயது முன்னாள் தடகள வீராங்கனை பி.டி.உஷா போட்டியிட்டார்.

    சக வீரர்கள் மற்றும் தேசிய விளையாட்டு சம்மேளனங்களின் ஆதரவை ஏற்று இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளேன் என தெரிவித்திருந்தார். இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பதவிக்கு பி.டி.உஷா தவிர வேறு யாரும் விண்ணப்பிக்கவில்லை.

    இந்நிலையில், இந்திய ஒலிம்பிக் சங்க தலைவராக பி.டி.உஷா போட்டியின்றி இன்று தேர்வானார். இதன்மூலம் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முதல் பெண் தலைவர் என்ற பெருமையை பி.டி. உஷா பெற்றுள்ளார்.

    • பிரதமர் மோடிக்கு நியமன எம்.பி., பி.டி.உஷா நன்றி தெரிவித்தார்.
    • ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த மக்கள் மீது பிரதமர் அக்கறை காட்டுவதாக பேச்சு.

    பாராளுமன்ற மாநிலங்களையில் பேசிய மத்திய மந்திரி பியூஸ் கோயல் கூறியுள்ளதாவது: நாட்டில் தற்போது ஒ புதிய பாரம்பரியம் நிறுவப்படுகிறது, சாதாரண பின்னணியில் பிறந்து, சாதாரண வாழ்க்கை நடத்துவோர் இப்போது உயர் பதவிகளில் உள்ளனர். குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒரு ஆசிரியர், ஒடிசாவின் பழங்குடியினர் பகுதியில் ஒரு சிறிய பள்ளியில் பணியாற்றிய அவர் இப்போது குடியரசுத் தலைவர்.

    மாநிலங்களவைத் தலைவர் ஒரு விவசாயியின் மகன், தற்போது எங்களது குடியரசு துணைத் தலைவர். நமது பிரதமர் டீ விற்பவர் வீட்டில் பிறந்தவர், சிறுவயதில் ரயில் நிலையத்தில் டீ விற்றார், அதைச் செய்து கொண்டே படித்தார். அவர் தனது வாழ்நாளின் 5 தசாப்தங்களுக்கும் மேலாக சமூகம் மற்றும் இந்த தேசத்தின் சேவைக்காக பாடுபட்டுள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார். 


    முன்னதாக நியமன எம்.பி. பி.டி.உஷா மாநிலங்களவையில் பேசுகையில் கூறியுள்ளதாவது: ஒதுக்கி வைக்கப்பட்டு இருந்த மக்கள் மீதான அக்கறைக்காக பிரதமருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நமது குடியரசுத் தலைவர் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் என்பது தேசத்துக்குக் கிடைத்த பெருமை. பழங்குடியின சமூகத்தினருக்கு இது மிகப்பெரிய கவுரவம். ஒரு விவசாயியின் மகன் இப்போது துணை ஜனாதிபதி, இது ஒரு புதிய இந்தியா. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பதவிக்கு பி.டி.உஷா தவிர வேறு யாரும் விண்ணப்பிக்கவில்லை
    • பல்வேறு பதவிகளுக்கு மொத்தம் 24 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

    புதுடெல்லி:

    இந்திய ஒலிம்பிக் சங்க நிர்வாகிகள் தேர்தல் டெல்லியில் அடுத்த மாதம் (டிசம்பர்) 10-ந் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்ய நேற்று கடைசி நாளாகும்.

    இந்த நிலையில் இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக ஆசிய போட்டிகளில் பல பதக்கங்களை வென்றவரும், 1984-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் 400 மீட்டர் தடை ஓட்டத்தில் 4-வது இடம் பிடித்தவருமான கேரளாவை சேர்ந்த 58 வயது முன்னாள் தடகள வீராங்கனை பி.டி.உஷா நேற்று அறிவித்தார்.

    சக வீரர்கள் மற்றும் தேசிய விளையாட்டு சம்மேளனங்களின் ஆதரவை ஏற்று இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக அவர் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

    இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பதவிக்கு பி.டி.உஷா தவிர வேறு யாரும் விண்ணப்பிக்காததால் பி.டி.உஷா போட்டியின்றி தேர்வாகிறார். இதன் மூலம் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முதல் பெண் தலைவர் என்ற பெருமையை பி.டி. உஷா பெறுகிறார்.

    தலைவர், துணைத்தலைவர் மற்றும் பல்வேறு பதவிகளுக்கு மொத்தம் 24 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். ஒரு துணைத் தலைவர் (பெண்), இணைச் செயலாளர் (பெண்) பதவிகளுக்குப் போட்டி இருக்கும். நான்கு செயற்குழு உறுப்பினர்களுக்கான தேர்தலில் 12 பேர் போட்டியியில் உள்ளனர்.

    • விளையாட்டு துறையில் தற்சார்பு அடைய இதுவே சரியான தருணம் என்றார் பி.டி.உஷா
    • அனைத்து போட்டிகளையும் தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமையின் கீழ் கொண்டு வரவேண்டும்.

    புதுடெல்லி:

    மாநிலங்களவையின் நியமன எம்.பி.யாக நியமிக்கப்பட்ட தடகள நட்சத்திரம் பி.டி.உஷா, இன்று முதல் முறையாக மாநிலங்களவையில் உரையாற்றினார். தேசிய ஊக்க மருந்து எதிர்ப்பு மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்று அவர் பேசியதாவது:-

    விளையாட்டுத்துறையில் இந்தியா இன்று ஈடு இணையற்றதாக திகழ்கிறது. மாவட்டங்கள் தோறும் பல்வேறு விளையாட்டுகளுக்கான பயிற்சி பெறும் மையங்கள் கிடைக்கப்பெறுகின்றன. விளையாட்டு துறையில் தற்சார்பு அடைய இதுவே சரியான தருணம்.

    ஊக்க மருந்து பயன்படுத்தும் வீரர்கள் தங்களது எதிர்காலத்தை பாழாக்குவது மட்டுமின்றி இளம் தலைமுறை விளையாட்டு வீரர்களையும் பாழாக்குகின்றனர்.

    அனைத்து விளையாட்டு போட்டிகளையும் தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமையின் கீழ் கொண்டு வரவேண்டும். மேலும் காயங்களிலிருந்து வீரர்கள் மீண்டு வர விளையாட்டு மருத்துவம் மற்றும் அறிவியல் துறையில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

    ஸ்டெராய்டு சோதனையில் சிக்கிய மற்றும் ஊக்கமருந்துக்காக தண்டனை வழங்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. செயல்திறனை மேம்படுத்தும் மருந்துகளை தவறாக பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியம். சரியான நேரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஸ்டெராய்டுகள் மற்றும் செயல்திறனை மேம்படுத்தும் மருந்துப் பொருட்களை பயன்படுத்துவோருக்கு எதிராக தகுந்த தடை விதிக்கப்பட வேண்டும். அதேசமயம், தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமையின் (NADA)செயல்பாடுகளை முடுக்கி விடவேண்டும். தடையின்றி செயல்பட சுதந்திரம் அளிக்க வேண்டும். இவ்வாறு பி.டி.உஷா பேசினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விளையாட்டில் நான் சாதித்ததால் தான் இந்த இடத்திற்கு வந்துள்ளேன்.
    • எனக்கு பாரதிய ஜனதா, காங்கிரஸ், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு என அனைத்து கட்சியினரையும் பிடிக்கும்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவை சேர்ந்த ஒலிம்பிக் தடகள வீராங்கனை பி.டி.உஷா டெல்லி மேல் சபையின் நியமன எம்.பி.யாக அறிவிக்கப்பட்டு உள்ளார்.

    பாரதிய ஜனதா ஆட்சி காலத்தில் அவருக்கு நியமன எம்.பி. பதவி கிடைத்து இருப்பதால் அவர் பாரதிய ஜனதா கட்சியில் சேரப்போவதாக தகவல் பரவியது.

    இதனை மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் சிலர் விமர்சித்து இருந்தனர். இதற்கு பதில் அளித்து பி.டி.உஷா கூறியதாவது:-

    எனக்கு விளையாட்டு பிடிக்கும். விளையாட்டில் நான் சாதித்ததால் தான் இந்த இடத்திற்கு வந்துள்ளேன். இதற்காக நான் எந்த அரசியல் கட்சியிலும் சேரப்போவதில்லை.

    பாரதிய ஜனதா உள்பட எந்த கட்சியிலும் இணைய மாட்டேன். எனக்கு பாரதிய ஜனதா, காங்கிரஸ், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு என அனைத்து கட்சியினரையும் பிடிக்கும்.

    எம்.பி.யானால் நான் டெல்லியிலேயே இருக்க மாட்டேன். நான் நடத்தி வரும் பள்ளியை விட்டுவிட முடியாது.

    அதே நேரம் விளையாட்டிற்கும், பொது சேவையிலும் என்னால் முடிந்ததை செய்வேன். இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பி.டி.உஷா பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
    • பாராளுமன்ற விவாதங்களில் பி.டி.உஷா பங்கேற்பது நமது நாட்டின் விளையாட்டு உள்கட்டமைப்பிற்கு பெரும் ஊக்கத்தை அளிக்கும்.

    சென்னை:

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-

    மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள பி.டி.உஷாவுக்கு வாழ்த்துக்கள்.

    பாராளுமன்ற விவாதங்களில் அவர் பங்கேற்பது நமது நாட்டின் விளையாட்டு உள்கட்டமைப்பிற்கு பெரும் ஊக்கத்தை அளிக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ஒலிம்பிக் கிராமத்தில் அரிசி கஞ்சியும், ஊறுகாயும் சாப்பிட வேண்டிய நிலை ஏற்பட்டதால் பதக்கத்தை இழந்தேன் என்று பிடி உஷா தெரிவித்துள்ளார். #PTUsha
    இந்தியாவின் தடகள மங்கை என்று அழைக்கப்பட்டவர் பிடி உஷா. 1984-ம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் தொடரில் 400 மீட்டர் தடைதாண்டும் ஓட்டத்தில் நூலிழையில் வெண்கல பதக்கத்தை இழந்தார். 100-ல் ஒரு பங்கு என்ற அளவில் ருமேனியா வீராங்கனை பிடி உஷாவை முந்தினார்.

    54 வயதாகும் பிடி உஷா கேரளா மாநிலத்தில் பயிற்சி மையம் தொடங்கி நடத்தி வருகிறார். இவர் ஈகுவடார் லைன் மெகஷின் ஒன்றிற்கு பேட்டியளித்தார். அப்போது லாஞ்ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் கைநழுவி சென்றதற்கு ஒலிம்பிக் கிராமத்தில் வழங்கப்பட்ட அரிசி கஞ்சிதான் காரணம் என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

    இதுகுறித்து பிடி உஷா கூறுகையில் ‘‘லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் கிராமத்தில் எனக்கு வழங்கப்பட்ட உணவுகளை நான் இங்கு நினைவு கூர்கிறேன். அங்கு எனக்கு அரசி கஞ்சியுடன் ஊறுகாய்தான் உணவாக வழங்கப்பட்டது. அந்த ஊறுகாயை நாங்கள் கடுமாங்கா அச்சார் என்று அழைப்போம். அத்துடன் ப்ரூட் ஸ்லைஸ் வழங்கப்பட்டது. வேகவைத்த உருழைக்கிழங்கு அல்லது அரைவேக்காடு சிக்கன் அத்துடன் தரப்படும் சோயா சாஸ் மற்றும் அமெரிக்க உணவுகளை சாப்பிட்ட பழக்கம் எனக்கு கிடையாது.



    லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் கிராமத்தில் அமெரிக்கா உணவு மட்டும்தான் கிடைக்கும் என்று என்னிடம் யாரும் கூறவில்லை. நான் வேறு எந்த உணவையும் தேர்வு செய்யவில்லை. ஆனால், எந்தவித ஊட்டச்சத்து நிறைந்த சப்போர்ட் உணவு இல்லாமல் அரசி கஞ்சி மட்டுமே தரப்பட்டது. இதனால் கடைசி 35 மீட்டரில் என்னுடைய எனர்ஜி லெவலை நிலைநிறுத்த முடியாமல் போனது. என்னுடைய பெர்மான்ஸை மிகவும் பாதித்தது.

    என்னுடைய திட்டம் முதல் 45 மீட்டரை 6.2 வினாடிக்குள் கடக்க வேண்டும் என்பது, அதை நான் சரியாக செய்தேன். ரிதம் மற்றும் வேகத்தை மெய்ன்டெய்ன் செய்வது சரியாக அமைந்தது. ஆனால் கடைசி 35 மீட்டரில் எனர்ஜியை தொடர்ந்து ஒரே லெவலாக தக்கவைக்க முடியாமல் போனது’’ என்றார்.
    ×