search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "PAKvAFG"

    • டாஸ் வென்று முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் 300 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய பாகிஸ்தான் கடைசி ஓவரில் 302 ரன்களை எடுத்து திரில் வெற்றி பெற்றது.

    அம்பாந்தோட்டை:

    பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகள் இலங்கையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றன. முதல் போட்டியில் பாகிஸ்தான் 142 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 300 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் குர்பாஸ் பொறுப்புடன் ஆடி சதமடித்தார். அவர் 151 ரன்கள் குவித்தார். இப்ராகிம் சட்ரன் 80 ரன்கள் எடுத்தார். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 227 ரன்கள் குவித்தது.

    இதையடுத்து, 301 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் இமாம் உல் ஹக் சிறப்பாக ஆடி அரை சதமடித்தார். அவர் 91 ரன்னில் அவுட்டானார். கேப்டன் பாபர் அசாம் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய ஷதாப் கான் 35 பந்தில் 48 ரன்கள் சேர்த்து வெளியேறினார்.

    இறுதியில், பாகிஸ்தான் 49.5 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 302 ரன்கள் எடுத்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. அத்துடன் ஒருநாள் தொடரை 2-0 என கைப்பற்றியது.

    கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய ஷதாப் கானுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

    • ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் இடையே முதலாவது ஒருநாள் போட்டி நேற்று நடந்தது.
    • டாஸ் வென்று முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 201 ரன்கள் எடுத்துள்ளது.

    அம்பந்தோட்டை :

    ஆசிய கோப்பை தொடருக்கு முன்பாக பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறுகிறது. இந்த தொடர் இரண்டு அணிகளுக்கும் பொதுவான ஆடுகளமாக இலங்கையில் வைத்து நடைபெறுகிறது.

    இவ்விரு அணிகளுக்கு இடையேயான இந்த ஒருநாள் தொடர் நேற்று தொடங்கி, 26-ம் தேதி முடிவடைகிறது.

    இந்நிலையில், நேற்று முதல் ஒருநாள் போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் பேட்டிங் தேர்வு செய்தார்.

    அதன்படிமுதலில் ஆடிய பாகிஸ்தான் 201 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இமாம் ஹல் ஹக் 61 ரன்கள் எடுத்தார். ஷதாப் கான் 39 ரன்னும் எடுத்தார்.

    இதையடுத்து, 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் களமிறங்கியது. தொடக்கம் முதல் பாகிஸ்தான் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. இதனால் விக்கெட்டுகள் விரைவில் வீழ்ந்தன.

    இறுதியில், ஆப்கானிஸ்தான் 59 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    பாகிஸ்தான் சார்பில் ஹரிஸ் ராப் 5 விக்கெட் வீழ்த்தி ஆட்ட நாயகன் விருது வென்றார். இதன்மூலம் ஒருநாள் தொடரில் பாகிஸ்தான் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

    • அரையிறுதி ஆட்டங்கள் மும்பை மற்றும் கொல்கத்தாவில் நடைபெற இருக்கிறது
    • இறுதிப்போட்டி அகமதாபாத்தில் நடைபெறும்

    இந்தியாவில் அக்டோபர் 5-ந்தேதி முதல் நவம்பர் 19-ந்தேதி வரை 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா நடைபெற இருக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ போட்டி அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது.

    சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐந்து போட்டிகள் நடைபெற இருக்கின்றன. ஆனால் இந்தியா ஒரேயொரு போட்டியில் மட்டுமே விளையாடுகிறது.

    அக்டோபர் 8-ந்தேதி (ஞாயிறு): இந்தியா- ஆஸ்திரேலியா

    அக்டோபர் 14-ந்தேதி (சனி): நியூசிலாந்து- வங்காளதேசம்

    அக்டோபர் 18-ந்தேதி (புதன்): நியூசிலாந்து- ஆப்கானிஸ்தான்

    அக்டோபர் 23-ந்தேதி (திங்கள்): பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான்

    அக்டோபர் 27-ந்தேதி (வெள்ளி) பாகிஸ்தான்- தென்ஆப்பிரிக்கா

    • டி20 தொடரில் ஆப்கானிஸ்தான் அணி 2-1 என்ற கணக்கில் பாகிஸ்தானை வென்று தொடரை கைப்பற்றியது.
    • இரு அணிகளும் இரு தரப்பு தொடரில் விளையாடியது இதுவே முதல் முறையாகும்.

    பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் நடந்த முடிந்த நிலையில் அந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு கேப்டனாக செயல்பட்ட ரஷித்கான் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

    இவ்விரு அணிகள் மோதிய டி20 தொடரில் ஆப்கானிஸ்தான் அணி 2-1 என்ற கணக்கில் பாகிஸ்தானை வென்று தொடரை கைப்பற்றியது. இரு அணிகளும் இரு தரப்பு தொடரில் விளையாடியது இதுவே முதல் முறையாகும். முதல் தொடரையே கைப்பற்றி ஆப்கானிஸ்தான் ஏற்கனவே புதிய வரலாற்று சாதனை படைத்தது.

    இந்நிலையில் டி20 கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 100 பந்துகளில் ஒரு பவுண்டரி, சிக்சர் கூட விட்டு கொடுக்காமல் ரஷித்கான் புதிய சாதனையை நிகழ்த்தி உள்ளார். 3-வது மற்றும் கடைசி டி20 போட்டியில் ரஷித் 31 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தினார். இந்த போட்டியில் அவர் இரண்டு சிக்சர்களை விட்டுக்கொடுத்தார்.

    இதனால் தொடர்ச்சியாக 106 பந்துகளில் பவுண்டரிகள் விட்டுக்கொடுக்காமல் பந்து வீசியுள்ளார். 2 சிக்சர்கள் விட்டுக்கொடுத்ததன் மூலம் தொடர்ச்சியாக பவுண்டரிகள் விட்டுக்கொடுக்காமல் பந்து வீசியது முடிவுக்கு வந்துள்ளது.

    • கடைசி போட்டியில் பாகிஸ்தான் அணி ஆறுதல் வெற்றி பெற்றது.
    • இந்த போட்டியில் ஷதாப் கான் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.

    பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் நடைபெற்றது. இதில் ஆப்கானிஸ்தான் அணி முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.

    இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான கடைசி டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது. ஆப்கானிஸ்தான் தரப்பில் முஜீப் உர் ரஹ்மான் 2 விக்கெட்டுகளும், பாரூக்கி, நபி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதனையடுத்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 116 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. பாகிஸ்தான் தரப்பில் ஷதாப் கான் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஆட்டநாயகனாக ஷதாப் கான் தேர்வு செய்யப்பட்டார்.

    இந்த போட்டியில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பாகிஸ்தான் வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.

    • முதலில் ஆடிய பாகிஸ்தான் 182 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய ஆப்கானிஸ்தான் 116 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது.

    ஷார்ஜா:

    பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஷார்ஜாவில் நடைபெற்றது. இதில் முதல் இரு போட்டிகளில் ஆப்கானிஸ்தான் வென்று அசத்தியுள்ளது.

    இதையடுத்து, இரு அணிகள் இடையிலான 3-வது போட்டி ஷார்ஜாவில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 182 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் சமீம் அயூப் 49 ரன்கள் எடுத்தார்.

    இதையடுத்து, 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஆப்கானிஸ்தான் களமிறங்கியது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தன.

    இறுதியில், ஆப்கானிஸ்தான் அணி 18.4 ஓவர்களில் 116 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் பாகிஸ்தான் 66 ரன்கள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது.

    3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என ஆப்கானிஸ்தான் அணி வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • முதல் முறையாக இப்போது தான் இவ்விரு அணிகளும் இருதரப்பு தொடரில் மோதின.
    • 3 போட்டிகள் கொண்ட தொடரை ஆப்கானிஸ்தான் அணி 2- 0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

    Afghanistan made a historic record in the first series against Pakistanபாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஐக்கிய அரபில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பாபர் அசாம், முகமது ரிஸ்மான் உள்ளிட்ட சீனியர் வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டு சமீபத்திய பிஎஸ்எல் தொடரில் அசத்திய இளம் வீரர்களுடன் சடாப் கான் தலைமையில் பாகிஸ்தான் அணி களமிறங்கியது.

    இரு அணிகளுக்கும் இடையேயான முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் 2-வது போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

    அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 130 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனையடுத்து ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 19.5 ஓவரில் 133 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

    வெற்றி பெற்றதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை ஆப்கானிஸ்தான் அணி 2- 0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

    சர்வதேச கிரிக்கெட்டில் முதல் முறையாக பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு தொடரை வென்று சாதனை படைத்துள்ளது.

    இதற்கு முன் உலகக் கோப்பை மற்றும் ஆசிய கோப்பைகளில் மட்டுமே மோதிய போது பாகிஸ்தானிடம் ஒரு சில போட்டிகளில் ஆப்கானிஸ்தான் போராடி தோற்றது. அந்த நிலையில் முதல் முறையாக இப்போது தான் இவ்விரு அணிகளும் இருதரப்பு தொடரில் மோதின.

    இத்தொடரில் அபாரமாக செயல்பட்ட ஆப்கானிஸ்தான் தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது அந்நாட்டு ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.

    குறிப்பாக கடந்த ஆசிய கோப்பையில் இதே சார்ஜா மைதானத்தில் 1 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த பாகிஸ்தானை இம்முறை அதே மைதானத்தில் 2 போட்டிகளில் தோற்கடித்து ஆப்கானிஸ்தான் பழி தீர்த்துள்ளது.

    உலகக்கோப்பைக்கான பயிற்சி ஆட்டத்தில் பாகிஸ்தானை 3 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றது.
    உலகக்கோப்பைக்கான பயிற்சி ஆட்டங்கள் இன்று தொடங்கியது. ஒரு ஆட்டத்தில் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதி வருகின்றன. பிரிஸ்டோலில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.

     அதன்படி இமாம்-உல்-ஹக், பகர் ஜமான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இமாம்-உல்-ஹக் 32 ரன்னும், பகர் ஜமான் 19 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர். அடுத்து களம் இறங்கிய பாபர் ஆசம் 108 பந்தில் 112 ரன்கள் குவித்தார். அனுபவ வீரர் சோயிப் மாலிக் 59 பந்தில் 44 ரன்கள் சேர்த்தார்.

     மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க பாகிஸ்தான் 47.5 ஓவரில் 262 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது. ஆப்கானிஸ்தான் அணி சார்பில் முகமது நபி மூன்று விக்கெட்டும், ரஷித் கான், தவ்லாத் ஜத்ரான் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களும் வீழ்த்தினர்.

    263 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி களமிறங்கியது.  தொடக்க ஆட்டக்காரர் ஷாசத் 23 ரன்கள் இருந்த போது காயம் காரணமாக வெளியேறினார்.



    மற்ற வீரர்கள் பொறுப்புடன் ஆடினர். ஷாசய் 49, ரக்மட் ஷா 32, சகிடி  74, சமுல்லா 22, ஆப்கான் 7, நபி  34, சாட்ரன் 1, ரன்கள் அடித்திருந்தனர். நைப் 2 மற்றும் ரஷித் கான் 5 கடைசி வரை அவுட் ஆகாமல் களத்தில் இருந்தனர். இதனால் ஆப்கானிஸ்தான் அணி 49.4 ஓவரில் 3 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.

    பாகிஸ்தான் தரப்பில் ரியாஷ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். வாசிம் 2 விக்கெட்டும் சடப் கான், முகமது ஹஸ்னைன் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
    ஆசிய கோப்பை தொடரில் வங்காளதேச அணியின் தொடக்க ஆட்டக்காரர் லிட்டன் தாஸ்க்கு தவறான முறையில் அவுட் வழங்கியதாக கூறி விராட் கோலியின் இணையதள பக்கத்தை வங்காளதேச ஹேக்கர்கள் முடக்கியுள்ளனர். #ViratKohli #AsiaCup2018 #LitonDas
    புதுடெல்லி :

    சமீபத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணி வங்காளதேச அணியை வீழ்த்தி 7-வது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. பரபரப்பாக நடைபெற்ற அந்த போட்டியின் கடைசி பந்தில் இந்தியா த்ரில் வெற்றி பெற்றது.  

    அந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய வங்காளதேச தொடக்க ஆட்டக்காரர் லிட்டன் தாஸ், 117 பந்துகளில் 121 ரன்கள் எடுத்தார். இவரது சதத்தின் உதவியுடன் வங்கதேச அணி 222 ரன்கள் எடுத்தது. லிட்டன் தாஸ் குல்தீப் யாதவ் பந்துவீச்சில் தோனியால் ஸ்டெம்பிங் முறையில் அவுட் செய்யப்பட்டார். முதலில் களத்தில் இருக்கும் நடுவருக்குக் குழப்பம் வரவே, முடிவு மூன்றாவது நடுவருக்கு மாற்றப்பட்டது. நீண்ட நேர ஆய்வுக்குப் பின்னர் நடுவர் அவுட் என்று அறிவித்தார்.  

    இருப்பினும் வங்காளதேச ரசிகர்கள் நடுவர் தவறாக அவுட் கொடுத்து விட்டார், இதுவே தங்கள் அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்து விட்டது என புலம்பி வந்தனர்.


    இந்நிலையில், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் இணையதள பக்கத்தை வங்காளதேசத்தை சேர்ந்த ஹேக்கர்கள் முடக்கியுள்ளனர். அதில், ’டியர் ஐசிசி, கிரிக்கெட் ஜெண்டில்மேன்கள் விளையாடும் விளையாட்டு இல்லையா ?. இது எப்படி அவுட் என்று கூறுங்கள். தவறாக அவுட் வழங்கிய நடுவர் மீது நடவடிக்கை எடுத்து இந்த உலகத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

    அவ்வாறு மன்னிப்பு கேட்கவில்லையென்றால் இணையதள பக்கங்கள் மீண்டும் மீண்டும் முடக்கப்படும். இந்திய சகோதர சகோதரிகளே, உங்களை அவமானப்படுத்தும் நோக்கில் நாங்கள் இதை நாங்கள் செய்யவில்லை. உங்கள் அணிக்கு இப்படி ஒரு அநீதி நடந்தால் உங்களது உணர்வுகள் எப்படி இருக்கும் என நீங்களும் சிந்தித்துப் பாருங்கள்.

    கிரிக்கெட் விளையாட்டில் அனைத்து அணிகளும் சமமாக நடத்தப்பட வேண்டும். இதற்காக இறுதி வரை நாங்கள் போராடுவோம்’ என முடக்கப்பட்ட இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    கோலியின் இணையதள பக்கத்தை வங்காளதேசத்தை சேர்ந்த சி.எஸ்.ஐ சைபர் போர்ஸ் எனும் ஹேக்கர்கள் முடக்கியுள்ளனர். இத்தனைக்கும், ஆசிய கோப்பை தொடரில் விராட் கோலி ஓய்வில் இருந்தார் ரோகித் சர்மா தான் கேப்டனாக அணியை வழிநடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. #ViratKohli #AsiaCup2018 #LitonDas
    துபாயில் நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் வங்காள தேசத்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை பெற்றது, உழைப்புக்கு கிடைத்த பரிசு என்று ரோகித்சர்மா கூறியுள்ளார்.#AsiaCup2018 #INDvBAN

    துபாய்

    துபாயில் நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தி இந்திய அணி ஆசிய கோப்பையை கைப்பற்றியது.

    ஆசிய கோப்பையை கைப்பற்றியது குறித்து இந்திய அணியின் பொறுப்பு கேப்டன் ரோகித்சர்மா கூறியதாவது:-

    ஆசிய கோப்பை போட்டித் தொடர் முழுவதும் நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினோம். கடின உழைப்புக்கு கிடைத்த பரிசாக இருந்தது. இந்தப் போட்டித் தொடரில் ஆதிக்கம் செலுத்தியதற்கு நல்ல வெகுமதி கிடைத்தது. வீரர்களின் கூட்டு முயற்சியில் வெற்றி பெற்றோம். அனைத்து வீரர்களின் பங்களிப்பு இல்லாமல் கோப்பையை வென்று இருக்க முடியாது. எல்லா பெருமையும் அவர்களை சேரும்.


    மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் கள் (நடுவரிசை வீரர்) நெருக்கடியான சூழ்நிலையில் சிறப்பாக விளையாடியது முக்கியமானது. அவர்கள் ஆட்டத்தை முடித்த விதம் அருமையானது.

    அதோடு வங்காளதேச அணியையும் பாராட்டியே ஆக வேண்டும். அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆடினார்கள். முதல் 10 ஓவரில் கடுமையான நெருக்கடி கொடுத்தார்கள். பந்து பழசாகிவிட்டால் எல்லாம் மாறும் என்று தெரியும். ரசிகர்களும் திரளாக வந்து தங்களது சிறப்பான ஆதரவை அளித்தார்கள். இதற்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா வங்காளதேசம் அணிகளுக்கு இடையே நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றிபெற்று சாம்பியன் பட்டம் வென்றது.. #AsiaCup2018 #INDvBAN
    துபாய் :

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா - வங்காள தேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தார்.

    வங்காள தேச அணியின் லிட்டோன் தாஸ் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் மெஹிதி ஹசன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். மெஹிதி ஹசன் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்த லிட்டோஸ் தாஸ் அதிரடியா விளையாடி ரன் குவித்தார்.

    வங்காள தேசம் முதல் 10 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 65 ரன்கள் குவித்தது. 17.5 ஓவரில் வங்காள தேசம் 100 ரன்னைத் தொட்டது. 21-வது ஓவரை கேதர் ஜாதவ் வீசினார். இந்த ஓவரின் ஐந்தாவது பந்தில் மெஹிதி ஹசன் ஆட்டமிழந்தார். அவர் 59 பந்தில் 32 ரன்கள் சேர்த்தார். வங்காள தேசம் முதல் விக்கெட்டுக்கு 20.5 ஓவரில் 120 ரன்கள் குவித்தது.

    அதன்பின் வந்த இம்ருல் கெய்ஸ் 2 ரன்கள், முஷ்பிகுர் ரஹிம் 5 ரன்கள் எடுத்த நிலையில் அடுத்தடுத்து வெளியேறினார்கள். 4-வது விக்கெட்டாக களம் இறங்கிய முகமது மிதுரை மின்னல் வேகத்தில் ஜடேஜா ரன்அவுட் ஆக்கினார்.

    இதனால் 39 ரன்னுக்குள் வங்காள தேசம் நான்கு விக்கெட்டுக்களை இழந்தது. ஒரு பக்கம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுமுனையில் லிட்டோன் தாஸ் சதம் அடித்தார். சதம் அடித்த லிட்டோன் தாஸ், கேப்டன் மோர்தசா ஆகியோர் அசுர வேகத்தில் எம்எஸ் டோனி ஸ்டம்பிங் செய்து வேளியேற்றினார். மெஹ்முதுல்லா 4 ரன்னிலும், சதம் அடித்த லிட்டோன் தாஸ் 121 ரன்னிலும் வெளியேறினார்கள்.

    சவுமியா சர்கர் கடைசி வரை போராடி 33 ரன்கள் அடிக்க வங்காள தேசம் 48.3 ஓவரில் 223 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. இதனால் இந்தியாவின் வெற்றிக்கு 223 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்திய அணி சார்பில் குல்தீப் யாதவ் அதிகபட்சமாக மூன்று விக்கெட்டுக்களும், கேதர் ஜாதவ் 2 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.

    இதைத்தொடர்ந்து, இந்திய அணி சேசிங் செய்ய தொடங்கியது, ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினார்கள்.

    இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் 15 ரன்கள் அடித்திருந்த தவான், நஸ்முல் இஸ்லாம் பந்துவீச்சில் சவுமியா சர்காரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ராயுடு 2 ரன்களில் மோர்டாசா பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

    மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ரோகித் சர்மா ரூபல் ஹூசைன் பந்தில் நஸ்முல் இஸ்லாமிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 53 பந்துகளில் 3 சிக்சர்கள் 3 பவுண்டரிகள் உள்பட 48 ரன்கள் எடுத்தார்.

    பின்னர் களமிறங்கிய தோனி, 4-வது விக்கெட்டுக்கு தினேஷ் கார்த்திக் உடன் ஜோடி சேர்ந்தார். வங்காளதேச வீரர்களின் பந்துகளை பொறுப்பான முறையில் எதிர்கொண்ட இவர்கள் அணியின் எண்ணிக்கையை சீரான வேகத்தில் உயர்த்தினர். ஆனால், மகமதுல்லா வீசிய பந்தில் தினேஷ் கார்த்திக் 37 ரன்கள் அடித்திருந்த போது எல்.பி.டபல்யூ முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

    தோனி - தினேஷ் கார்த்திக் ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 54 ரன்கள் குவித்தது. கார்த்திக் ஆட்டமிழந்த சில நிமிடங்களிலேயே 36 ரன்களில் முஸ்தாபிசூர் ரஹ்மான் பந்தில் தோனி அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். அடுத்து களமிறங்கிய கேதர் ஜாதவுக்கு ஆரம்பத்திலேயே தொடைப்பகுதியில் தசைப்பிடிப்பு ஏற்பட்டதால் அவர் ரிட்டயர்ட் ஹர்ட் முறையில்  பாதி ஆட்டத்திலேயே வெளியேறிவிட்டார்.

    இதனால், 169 ரன்களுக்குள் 5 விக்கெட்டுக்களை இழந்ததால் இந்திய அணியின் ரன் ரேட் விகிதம் குறைந்து ஆட்டத்தில் வங்காளதேச அணியின் கை ஓங்கியது.

     

    இருந்தாலும் அடுத்து ஜோடி சேர்ந்த ஜடேஜா மற்றும் புவனேஷ்வர் குமார் நிதானமாக விளையாடி அணியின் எண்ணிக்கையையும் உயர்த்தினர். இதனால் வீரர்கள் மற்றும் ரசிகர்களிடம் இருந்த பதட்டம் தனிந்து வெற்றியை நோக்கி இந்தியா பயணித்தது.

    ஆனால் வெற்றிக்கு 11 ரன்களே தேவை என்ற நிலையில் 23 ரன்களில் ஜடேஜா ஆட்டமிழந்தார். அடுத்த சில பந்துகளில் 21 ரன்கள் அடித்திருந்த புவனேஷ்வர் குமாரும் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். தசைப்பிடிப்பினால் வெளியேறிய ஜாதவ் மீண்டும் களமிறங்கினார்.

    இறுதியில், 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 223 ரன்கள் குவித்து 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தி ஆசிய கோப்பை சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது. கேதர் ஜாதவ் 23 ரன்களுடனும், குல்தீப் யாதவ் 5 ரன்களுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

    இந்திய அணியில் அதிகபட்சமாக ரோகித் சர்மா 48 ரன்கள், தினேஷ் கார்த்திக் 37 ரன்கள், தோனி 36 ரன்கள் குவித்தனர். வங்காளதேச அணியில் முஸ்தாபிசூர் மற்றும் மோர்டாசா தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். #AsiaCup2018 #INDvBAN
    வீரர்களின் நன்னடத்தை விதியை மீறியதாக ஆப்கானிஸ்தான் நட்சத்திர வீரர் ரஷித் கானுக்கு ஐசிசி 15 சதவீதம் அபராதமாக விதித்துள்ளது. #AsiaCup2018 #RashidKhan
    ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று முன்தினம் நடந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் நடத்தை விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக ஆப்கானிஸ்தான் கேப்டன் அஸ்கர், சுழற்பந்து வீரர் ரஷித் கான், பாகிஸ்தான் ஆல்ரவுண்டர் ஹசன் அலி ஆகியோருக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) அபராதம் விதித்துள்ளது.


    ஹசன் அலி

    பாகிஸ்தான் வீரர் ஆசிப் அலி ஆட்டம் இழந்து செல்லும்போது ரஷித் கான் அவரை நோக்கி சர்ச்சைக்குரிய வகையில் சைகை காண்பித்தார். ஆப்கானிஸ்தான் கேப்டன் அஸ்கர் பாகிஸ்தான் வீரர் ஹசன் அலியை வேண்டும் என்றே தோளோடு தோள் உரசி சென்றார். பாகிஸ்தான் வீரர் ஹசன் அலி ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேன் ஹஸ்மத் துல்லாவை நோக்கி பந்தை எறிவது போன்று சைகை செய்தார்.


    அஸ்கர்

    இவை ஐசிசி நடத்தை விதிகளை மீறிய செயலாகும். இதைத் தொடர்ந்து அவர்களுக்கு ஆட்ட ஊதியத்தில் இருந்து 15 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டது.
    ×