search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nakshatra"

    • தாமிரபரணி நதியில் நீராடி பித்ரு தர்ப்பணம் செய்ய வேண்டும்.
    • கர்மவினைகள் நீங்கி நல்வாழ்வு பெற பெருமாள் அருள்புரிவார்.

    வியதீபாதம் யோகத்தில் ஒருவன் பிறந்தால், அவன் குடும்பத்தில் மோட்சம் அடையாத ஆன்மாக்களின் சாபம் ஏற்படும். அப்படி இந்த யோகத்தில் பிறந்தவரோ அல்லது அவரது தந்தையோ, ஒவ்வொரு மாதத்தில் வருகின்ற வியதீபாதம் யோக நாளில் (ஜோதிடர் மூலம் இந்த நாளை அறிந்து கொள்வதே சரியானது)

    அதிகாலை நேரத்தில் இந்தத் திருத்தலத்தில் உள்ள தாமிரபரணி நதியில் நீராடி பித்ரு தர்ப்பணம் செய்ய வேண்டும். பின்னர் நதிக்கரையில் உள்ள கோவிலில் எழுந்தருளியுள்ள பக்தவத்சலப் பெருமாளை வணங்கி, அர்ச்சனை மற்றும் ஆராதனைகளைச் செய்ய வேண்டும். பின்னர் தங்களால் முடிந்த அளவு (குறைந்தது 10 பேருக்கு) அன்னதானம் செய்தால், பித்ரு தோஷம் மற்றும் கர்மவினைகள் நீங்கி நல்வாழ்வு பெற பெருமாள் அருள்புரிவார்.

     பரிகாரம் செய்வது எப்படி?

    அசுப யோகங்களின் தோஷம் உள்ளவர்கள், முதலில் இந்தத் திருத்தலத்தின் புனித நீரான தாமிரபரணி நதியில் நீராட வேண்டும். நீராடும்போது உடுத்தி இருந்த ஆடையை அங்கேயே களைந்து, அதற்கென வைக்கப்பட்டிருக்கும் தொட்டியில் போட்டுவிட்டு, புதிய ஆடையை அணிந்துகொள்ள வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும், பழைய ஆடைகளை ஆற்றில் விட்டு, அதனை மாசுபடுத்தக்கூடாது.

    பின்னர் ஆலயத்திற்குள் சென்று பக்தவத்சலப் பெருமாள் முன்பாக நின்று, அவரை வழிபட வேண்டும். பெருமாளுக்கு உகந்த துளசி மாலையை வாங்கிச் சென்று, பூஜை செய்யும் பட்டாச்சாரியாரிடம் கொடுத்து சுவாமிக்கு அணிவிக்கச் செய்ய வேண்டும். அதோடு சுத்தமான நெய் வாங்கிச் சென்று, சுவாமியின் முன்பாக இருக்கும் விளக்கில் சேர்க்கச் சொல்ல வேண்டும். பின்னர் உங்களது குறைகள் தீர இறைவனை வழிபட வேண்டும்.

    இறுதியாக நாம் செய்ய வேண்டிய ஒன்று உள்ளது. அது என்னவென்றால், கோவிலில் இருந்து வீட்டிற்கு வரும் முன்பாக, கோவிலிலோ, அல்லது வரும் வழியிலோ குறைந்தது 10 பேருக்கு கட்டாயமாக அன்னதானம் செய்ய வேண்டும். இதற்கான பணத்தை பிறரிடம் கொடுத்து அன்னதானம் செய்யச் சொல்வதில் எந்த பலனும் இல்லை. நீங்களே நேரடியாக உங்கள் கைகளால் இந்த அன்னதானத்தை வழங்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

    • `பஞ்சாங்கம்’ என்பது மிகவும் உயிரோட்டமான சொல்.
    • பக்தர்களால் அதிகம் அறியப்படாத பழமையான ஆலயம்.

    ஜோதிடத்தில் `பஞ்சாங்கம்' என்பது மிகவும் உயிரோட்டமான சொல். நாள் அல்லது தினம், திதி, நட்சத்திரம், யோகம், கரணம் ஆகிய ஐந்து அங்கங்களில், யோகம் என்பது முக்கியமானது. நட்சத்திரமும், கிழமையும் இணைவதும் யோகம் தான். தவிர ஜோதிடத்தில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட யோகங்கள் இருப்பதாகவும், அவற்றில் பல, தனிநபர் ஜாதகங்களில் இருப்பதாகவும் ஜோதிடர்கள் சொல்வதுண்டு.

    இந்த யோகங்களைத் தவிர இன்னும் சில யோகமும் உண்டு. 27 நட்சத்திரங்களை போல, 27 யோகங்களும் உள்ளன. அவற்றில் பிரீதி, ஆயுஸ்மன், சவுபாக்கியம், சோபனம், சுகர்மம், விருத்தி, ஹர்ஷணம், வஜ்ரம், சித்தி, வரியான், சிவன், சித்தம், சாத்தியம், சுபம், சுப்பிரம், பிராம்யம், ஐந்திரம் ஆகிய 17-ம் சுப யோகங்கள் ஆகும். மீதமுள்ள விஷ் கம்பம், அதிகண்டம், திருதி, சூலம், கண்டம், விகாதம், துருவம், வியதீபாதம், பரிகம், வைதிருதி ஆகிய 10-ம் அசுப யோகங்கள் ஆகும்.

    சுப யோகங்களில் பிறந்தவர்களுக்கு எந்த சிக்கலும் இல்லை. ஆனால் அசுப யோகங்களில் பிறந்தவர்கள், தங்களின் வாழ்க்கையில் பல துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருப்பார்கள். ஒரு சில குடும்பங்களில் நிறைய பேருக்கு திருமணமே கைகூடி வராத நிலையை நாம் பார்த்திருப்போம்.

    அண்ணன், தங்கை, அக்கா, அத்தை என ஒரு கூட்டமே திருமணமாகாமல், சரியான தொழில், உத்தியோகம் இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கும். ஒரு சிலர் குழந்தை இல்லாமல் இருப்பார்கள். சில குடும்பங்களில் தொடர் மரணங்கள், அகால மரணங்கள் போன்ற துன்பங்கள் நிகழலாம். இவற்றிற்கெல்லாம் இந்த அசுப யோகங்கள் காரணமாக அமையலாம்.

    அதேபோல் சில குடும்பங்களில் இறந்தவர்களின் ஆன்மாக்கள் சொர்க்கமா?, நரகமா?, மறுபிறவியா?, தண்டனையா? என்று, எதுவுமே இல்லாமல் ஒரு உறுதியற்ற தன்மையில் அல்லாடிக் கொண்டிருக்கும். அதற்கும் அசுப யோகத்துடன் அவரின் குடும்பத்தில் பிறந்தவர்களின் ஜாதகமே காரணம்.

    இவற்றிற்கெல்லாம் வழிபாட்டுத் தலமாக அமைந்ததுதான், திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அருகே அமைந்துள்ள பக்தவத்சலப் பெருமாள் கோவில். பக்தர்களால் அதிகம் அறியப்படாத பழமையான ஆலயங்கள் பலவற்றில் இதுவும் ஒன்று.

    திருநெல்வேலியில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது, சேரன்மகாதேவி. இங்கிருந்து வடக்கே சுமார் 3 கிலோமீட்டர் தூரத்தில் தாமிரபரணி ஆற்றின் கரையில் இருக்கிறது, பக்தவத்சலப் பெருமாள் ஆலயம்.

    வியாச முனிவரால் பெருமைப்படுத்தப்பட்ட 12 ஆலயங்களில் இதுவும் ஒன்று. இந்த ஆலயத்தின் அடிப்பகுதியில் நரசிம்மப் பெருமாள் யோக நிலையில் கோவில் கொண்டிருப்பதாக ஐதீகம். பல நூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான இந்த ஆலயம், 1921-ம் ஆண்டு முதல் தொல்லியல் துறை காட்டுப்பாட்டில் இருக்கிறது.

    அசுப யோகங்களில் பிறந்தவர்களின் முன்னோர்களுடைய ஆன்மா சாந்தி பெற, சேரன்மகாதேவியில் உள்ள பக்தவத்சலப் பெருமாள் கோவிலில் செய்யும் வழிபாட்டு முறைதான் சிறப்பானது என்பது ஆன்மிகவாதிகளின் கருத்தாகும். தாமிரபரணியை ஒட்டினாற்போல் அமைந்துள்ள இந்த ஆலயத்தின் பிரமாண்டம் நம்மை வியக்க வைக்கிறது.

    கிழக்கு நோக்கி அபயக்கரம் நீட்டி அருளும் பக்தவத்சலப் பெருமாள், `நான் இருக்கிறேன்.. இனி உன் துன்பம் நீங்கி விடும்" என்பதுபோல் முத்திரைக் காட்டி கருவறையில் நின்ற திருக்கோலத்தில் காட்சியளிக்கிறார். கருவறைக்கு வெளியே வலதுபுறத்தில் லட்சுமிதேவியுடன் நரசிம்மர் அருள்பாலிக்கிறார்.

    அசுப யோகங்களில் ஏதாவது ஒன்றில் பிறந்திருந்தாலும் கூட, அவர்கள் தன் துயரங்கள் நீங்க நேராக இந்தத் திருத்தலம் வந்து, கோவிலைத் தொட்டுச் செல்லும் தாமிரபரணி ஆற்றில் நீராடி வழிபட வேண்டும். இதுபற்றியும், இந்த நதி பற்றியும் வியாசரால் எழுதப்பட்டுள்ளது. அது தாமிரபரணி மகாத்மீயத்தில் காணப்படுகிறது.

    10 வகையான அசுப யோகத்தில் பிறந்தவர்கள், குடும்பத்தில் உள்ளவர்களின் ஆத்மா நற்கதி அடையாத தோஷம் உள்ளவர்கள், இங்கு வந்து நதியில் நின்று, தன் குடும்பத்தில் இறந்த ஆன்மாக்களை நினைத்து நீராடினால், அவர்களின் ஆன்மா நற்கதி அடையும் என்று, தாமிரபரணி மகாத்மீயம் கூறுகிறது.

    மேலும் மேற்கண்ட தோஷம் உள்ளவர்கள், இந்த நதியில் நீராடி, வியாசர், மார்க்கண்டேயர், அகத்தியர், சப்த நதிகள், பக்தவத்சலப் பெருமாள் ஆகியோரை தரிசித்து, அன்னதானம் செய்தால் `நவகிரிச்சினி பலன்' (ஒரு லட்சம் காயத்ரி உச்சரித்த பலன்) கிடைப்பதுடன், தோஷங்களும் நீங்கி சிறப்பான பலன் கிடைக்கும் என்கிறார்கள்.

    சில ஆலயங்களுக்கு நாம் என்னதான் முயற்சித்தாலும், அந்த இறைவனின் கருணைப் பார்வை நம்மீது படவில்லை என்றால், அங்கு செல்ல முடியாத நிலையே ஏற்படும். இருப்பினும் அந்த இறைவனை நினைத்து மனமுருக வேண்டிக்கொண்டால், அவரை வழிபடுவதற்கான வாய்ப்பை அவரே ஏற்படுத்தித் தருவார். இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் 11.45 மணி வரை திறந்திருக்கும்.

    • உங்கள் பாவத்தை தல மரம் உள்வாங்கி கிரகித்துக் கொள்ளும்.
    • மரக்கன்று பூத்து, காய்க்கும் போது, உரியவரின் வாழ்க்கையும் செழிப்பாக துவங்கும்.

    உங்கள் நட்சத்திரத்துக்குரிய மரத்தை, நீங்களே உங்கள் கையால் நட்டு, நீரூற்றி வளர்த்தால் அந்த மரம் வளர, வளர உங்கள் வாழ்வில் ஆச்சரியப்படத்தக்க மாற்றங்கள் உண்டாகும்.

    உங்கள் பாவத்தை அந்த தல மரம் உள்வாங்கி கிரகித்துக்கொள்ளும். அது மட்டுமல்ல உங்களுக்கு அற்புதமான ஒரு ஆன்ம தொடர்பை இந்த மரங்கள் செய்யும்.

    சில மரங்களை வீட்டில் வளர்க்க முடியாது. உங்கள் தோட்டத்திலோ, சாலை ஓரங்களிலோ அல்லது ஆன்மீக தலங்களில் உள்ள வனப்பகுதியில் (சதுரகிரி, திருவண்ணாமலை, பழனி, திருப்பரங்குன்றம், பாபநாசம், குருவாயூர், திருப்பதி, திருத்தணி, சுவாமிமலை) தென்மேற்குப் பகுதியில் சூரிய கதிர்கள் படும் இடத்தில் நட வேண்டும். அந்த மரக்கன்றை அவரர் தங்களது பிறந்த நட்சத்திரம் உதயமாகும் நாளில் நடுவது மிக நல்லது.

    பிறகு நவதானியங்களை ஊற வைத்த தண்ணீரை அச்செடிக்கு விட்டு விட வேண்டும். நன்றாக ஊறிய நவதானியங்களை அந்த மரக்கன்றுக்கு உரமாகப் போட வேண்டும்.

    அந்த மரம் வளர, வளர அதை நட்டவரின் வாழ்க்கை மலரும். அதுமட்டுமின்றி அனைத்து தோஷங்களையும் அந்த மரக்கன்று ஈர்த்து விடும்.

    அம்மரக்கன்று பூத்து, காய்க்கும் போது, உரியவரின் வாழ்க்கையும் செழிப்பாகத் துவங்கும். அதாவது அவரது கர்ம வினைகள் நீங்கி இருக்கும். கர்ம வினைகளை விரட்ட விருட்ச சாஸ்திரத்தில் இப்படி ஒரு சிறப்பான வழிபாடு உள்ளது.

    வாய்ப்பு கிடைக்கும் போது இந்த பரிகாரத்தை செய்தால் தல விருட்சத்துக்குரிய ஒரு மரத்தை வளர்த்த புண்ணியம் கிடைக்கும். அதோட நம் வினைகளும் விலகி ஓடி விடும்.

    இந்த வழிபாட்டை செய்ய நீங்கள் ஒவ்வொருவரும் உங்களது பிறந்த நட்சத்திரத்துக்குரிய விருட்சம் எது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். அந்த விருட்சங்கள் வருமாறு:-

    அஸ்வினி - விருட்சம், பரணி - நெல்லி, கார்த்திகை - அத்தி, ரோகிணி - நாவல், மிருகசீரிஷம் - கருங்காலி, திருவாதிரை- செங்கருங்காலி, புனர்பூசம்-மூங்கில், பூசம் - அரசு, ஆயில்யம்- புன்னை மரம், மகம்- ஆலமரம், பூரம்- பலாசு, உத்திரம்-அலரி, அஸ்தம்-அத்தி, சித்திரை- வில்வம், சுவாதி- மருதை மரம், விசாகம்- விளாமரம், அனுஷம்- மகிழ மரம், கேட்டை- பராய்முருட்டு, மூலம்- மாமரம், பூராடம்- வஞ்சிமரம், உத்திராடம்- பலாமரம், திருவோணம்- எருக்கு, அவிட்டம்- வன்னி, சதயம்- கடம்புமரம், பூரட்டாதி- தேமா, உத்திரட்டாதி- வேம்பு, ரேவதி- இலுப்பை.

    • ஜோதிடத்தின் வழிகாட்டியாக திதி சூன்யம் உள்ளது.
    • அமாவாசை- பவுர்ணமி நாட்களில் பிறந்தவர்களுக்கு எவ்வித திதி சூன்ய தோஷமும் இல்லை.

    பஞ்சாங்க அங்கத்தில் திதி-வாரம்- நட்சத்திரம்-யோகம்-கரணம் முக்கியமாகும். இதில் திதி என்பது ஆகாயத்தில் ஒரு குறித்த இடத்தில் இருந்து சூரியனுக்கும்- சந்திரனுக்கும் உள்ள தூரமாகும்.

    15 திதிகளில் அமாவாசை- பவுர்ணமி நாட்களில் பிறந்தவர்களுக்கு எவ்வித திதி சூன்ய தோஷமும் இல்லை. மற்ற 14 திதிகளில் பிறந்த வர்களுக்கும் திதி சூன்ய தோஷம் உள்ளது.

    இவைகளை கவனிக்காமல் பலன் சொல்லும் போது சொல்லிய பலன்கள் நடப்பதில்லை ஜோதிடத்தின் வழிகாட்டியாக திதி சூன்யம் உள்ளது.

    இந்த திதிகளில் சதுர்த்தசியில் ஒருவர் பிறந்து இருந்து புதனும் - குருவும் ஜாதகத் தில் உச்ச நிலையில் இருந்தாலும் பலன்கள் அளிப்பதில்லை. சூன்யம் பெற்ற கிரகமும், சூன்ய ராசியில் உள்ள கிரகமும் பலத்தை இழப்பதோடு தமது காரக ஆதிபத்திய பலன்களை யும் செய்வதில்லை. ஜாதகருக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது.

    திதி சூன்யம் பெற்ற மேற்படி கிரகங்கள் ஆட்சி- உச்சம் பெற்றாலும் கேந்திர- திரிகோணமாக அமைந்தாலும் நல்ல பலனை அளிப்பதற்கு மாறாக தீய பலனை அல்லது பலனே இல்லாமல் செய்கிறது.

    மேற்படி திதி சூன்யம் பெற்ற கிரகங்கள் வக்ர கதியில் இருக்கும் போதும், சிம்மம்- விருச்சிகம்- கும்ப-மேஷ ராசியில் இருக்கும் போதும் சூன்ய தோஷ நிவர்த்தி பெறுகிறது. 1, 5, 9 ஆகிய கிரகங்களின் சாரம் பெறும் போதும், திருவாதிரை- சுவாதி- சதயம் என்னும் ராகுவின் நட்சத்திரக் காலில் இருக்கும்போதும் சூன்யதோஷ நிவர்த்தியைப் பெறுகிறது.

    இப்படிப்பட்ட நிலையில் சூன்ய தோஷத்தை மட்டும் பார்க்காமல் தோஷ நிவர்த்தியையும் ஆராய்ந்து பார்த்து பலன் சொன்னால்,

    "போற்றுகின்ற ஜோதிட நூல்

    பொய்யாது ஒருநாளும்''

    என்கிற ஜோதிட பாடலின்படி ரண பலமும், நலமும் பெற முடியும் என்பதே ஆய்வு.

    சூன்ய திதி, சூன்ய ராசி, சூன்ய கிரகம்

    1. பிரதமை திதி துலாம்-மகரம் சுக்கிரன்-சனி

    2. துதியை திதி தனுசு-மீனம் குரு

    3. திருதியை திதி மகரம்-சிம்மம் சனி-சூரியன்

    4. சதுர்த்தி திதி கும்பம்-ரிஷபம் சனி-சுக்கிரன்

    5. பஞ்சமி திதி மிதுனம்-கன்னி புதன்

    6. சஷ்டி திதி மேஷம்-சிம்மம் செவ்-சூரியன்

    7. சப்தமி திதி தனுசு-கடகம் குரு-சந்திரன்

    8. அஷ்டமி திதி மிதுனம்-கன்னி புதன்

    9. நவமி திதி சிம்மம்-விருச்சிகம் சூரியன்-செவ்வாய்

    10. தசமி திதி சிம்மம்-விருச்சிகம் சூரியன்-செவ்வாய்

    11. ஏகாதசி திதி தனுசு-மீனம் குரு

    12. துவாதசி திதி துலாம்-மகரம் சுக்கிரன்-சனி

    13. திரயோதசி திதி ரிஷபம்-சிம்மம் சுக்கிரன்-சூரியன்

    14. சதுர்த்தசி திதி மிதுனம்-கன்னி புதன்-குரு தனுசு-மீனம்

    • மிகக்குறுகிய காலத்திலேயே நல்ல மாற்றத்தை நிச்சயமாக நீங்கள் உணருவீர்கள்!
    • 27 நட்சத்திரங்களையும் அவர்களுக்கு உகந்த கோவில்களையும் பார்க்கலாம்.

    இங்கே குறிப்பிடப்பட்டிருக்கும் ஆலயங்களுக்கு வருடத்திற்கு ஒருமுறையாவது நீங்கள் சென்று தரிசித்து வருவது மிக மிக முக்கியம். மிக மிக நல்லது. நற்பலன்களை அள்ளித் தரும்.

    அஸ்வினி - கலைவாணி ஸ்ரீசரஸ்வதி ஆலயம், கூத்தனூர். மற்றும் பிறவி மருந்தீஸ்வரர் கோயில், திருத்துறைப்பூண்டி.

    பரணி நட்சத்திரம் - ஸ்ரீ அக்னீஸ்வரர் ஆலயம், திருப்புகலூர்,

    கார்த்திகை நட்சத்திரம் - ஸ்ரீ காத்ர சுந்தரேஸ்வரர், மயிலாடுதுறை.

    ரோகிணி நட்சத்திரம் - ஸ்ரீ பாண்டவ தூத பெருமாள் ஆலயம், காஞ்சிபுரம். மற்றும் ஸ்ரீபக்தவத்சல ஆலயம், திருக்கண்ணமங்கை, குடவாசல்.

    மிருகசீரிடம் - ஸ்ரீ முருகன் ஆலயம் - எண்கண், திருவாரூர். மற்றும் ஸ்ரீஆதிநாராயண பெருமாள் கோயில்,முகூந்தனூர். திருவாரூரில் இருந்து 13 கி.மீ. தொலைவு.

    திருவாதிரை - ஸ்ரீஅபய வரதீஸ்வரர் ஆலயம், அதிராம்பட்டினம். மற்றும் ஸ்ரீசோழீஸ்வரர் சேங்காலிபுரம் திருவாரூர்.

    புனர்பூசம் - ஸ்ரீஅதிதீஸ்வரர் ஆலயம், வாணியம்பாடி, ஸ்ரீ சட்டைநாதசுவாமி ஆலயம், சீர்காழி.

    பூசம் - ஸ்ரீ அட்சய புரீஸ்வரர் ஆலயம், பட்டுக்கோட்டை அருகில் விளங்குளம். மற்றும் சாரபரமேஸ்வரர் திருக்கோயில், திருச்சேறை. மேலும் கும்பேஸ்வரர் ஆலயம் கும்பகோணம்.

    ஆயில்யம் - ஸ்ரீ கற்கடேஸ்வரர் ஆலயம், திருத்தேவன்குடி, கும்பகோணம் அருகில். ஸ்ரீசாட்சி நாதேஸ்வரர் திருப்புறம்பியம் கும்பகோணம்.

    மகம் -ஸ்ரீ மகாலிங்கேஸ்வரர் கோயில் விராலிப்பட்டி விலக்கு, திண்டுக்கல். மற்றும் ஸ்ரீஸ்வேதாரண்யேஸ்வரர் ஆலயம், திருவெண்காடு, சீர்காழி.

    பூரம் - ஸ்ரீஹரி தீர்த்தேஸ்வரர் ஆலயம், திருவரங்குளம், புதுக்கோட்டை. மற்றும் ஸ்ரீ தக்ஷின புரீஸ்வரர் கோவில், தலச்சங்காடு, நாகப்பட்டினம்.

    உத்திரம் - ஸ்ரீ மாங்கல்யேஸ்வரர், லால்குடி, திருச்சி. மற்றும் ஸ்ரீகரரவீரநாதர் கோயில், திருவாரூர். திருவாரூரில் இருந்து 10 கி.மீ. தொலைவு.

    அஸ்தம் - ஸ்ரீ கிருபாகூபாரேஸ்வரர் ஆலயம், கோமல், குத்தாலம், மயிலாடுதுறை.

    சித்திரை - ஸ்ரீ சித்திரரத வல்லப பெருமாள் ஆலயம், குருவித்துறை, மதுரை. மற்றும் ஸ்ரீ ஐயாறப்பர் திருக்கோயில், திருவையாறு.

    சுவாதி - ஸ்ரீ தாத்திரீஸ்வரர் ஆலயம், தண்டுரை, பூந்தமல்லி. ஸ்ரீமகாலிங்க சுவாமி ஆலயம், திருவிடைமருதூர்.

    விசாகம் - ஸ்ரீ முத்துக்குமார சுவாமி கோவில், திருமலை, செங்கோட்டை, மற்றும் ஸ்ரீ கஜேந்திர வரதப் பெருமாள் ஆலயம், கபிஸ்தலம்.

    அனுஷம் - ஸ்ரீமகாலட்சுமி புரீஸ்வரர் ஆலயம், திருநின்றியூர், மயிலாடுதுறை. மற்றும் திருநரையூர் நம்பி கோயில், (நாச்சியார்கோவில்) கும்பகோணம்.

    கேட்டை - ஸ்ரீ வரதராஜ பெருமாள் ஆலயம், தஞ்சாவூர். மற்றும் ஸ்ரீவீரட்டானேஸ்வரர் ஆலயம், வழுவூர், நாகப்பட்டினம்.

    மூலம் - ஸ்ரீ சிங்கீஸ்வரர் கோயில் மப்பேடு, பூந்தமல்லி, மற்றும் ஸ்ரீமயூரநாதர் மயிலாடுதுறை.

    பூராடம் - ஸ்ரீ ஆகாசபுரீஸ்வரர் கோயில், திருவையாறு. திருவையாறில் இருந்து 4 கி.மீ. தொலைவு.

    மற்றும் ஸ்ரீ பரமநாத சுவாமி கோவில், கடுவெளி, திருவாரூர். (கடுவெளி சித்தர் ஜீவ சமாதி ஆலயம்)

    உத்திராடம் - ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் கோயில், ஒக்கூர். சிவகங்கை. மற்றும் எழுத்தறி நாதேஸ்வரர் திருஇன்னம்பூர், கும்பகோணம்.

    திருவோணம் - ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் ஆலயம், திருப்பாற்கடல் வேலூர், மற்றும் ஸ்ரீமாசிலாமணீஸ்வரர் கோயில் திருமுல்லைவாயல், சென்னை.

    அவிட்டம் - ஸ்ரீ பிரம்ம ஞான புரீஸ்வரர் ஆலயம், கும்பகோணம். தாராசுரம் அருகில் கொற்கை திருத்தலம். மற்றும் ஸ்ரீ புஷ்பவனேஸ்வரர் கோயில் திருப்பூந்துருத்தி, திருவையாறு.

    சதயம் - ஸ்ரீஅக்னீபுரீஸ்வரர் ஆலயம், திருப்புகலூர், நன்னிலம் அருகில். திருவாரூர்.

    பூரட்டாதி - ஸ்ரீ திருவானேஸ்வரர் ஆலயம், திருக்காட்டுப்பள்ளி, திருவையாறு. மற்றும் ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் ஆலயம், திருக்குவளை.

    உத்திரட்டாதி - ஸ்ரீசகஸ்ரலட்சுமீஸ்வரர் ஆலயம், தீயத்தூர், ஆவுடையார் கோவில், மற்றும் ஸ்ரீமதங்கீஸ்வரர் கோயில், திருநாங்கூர், நாகப்பட்டினம்.

    ரேவதி - ஸ்ரீ கயிலாசநாதர் கோவில், காருகுடி, தாத்தையங்கார்பேட்டை, திருச்சி. மற்றும் ஸ்ரீ நீலகண்டேஸ்வரர் கோயில், இலுப்பைப்பட்டு, மயிலாடுதுறை.

    • இந்த மலர்களை ஒவ்வொரு ஆலயத்திற்குச் செல்லும் போதும் பயன்படுத்துங்கள்.
    • இறைவனுக்கு இந்த மலர்களைச் சூட்டி வணங்குங்கள்.

    இந்த மலர்களை ஒவ்வொரு ஆலயத்திற்குச் செல்லும் போதும் பயன்படுத்துங்கள். அதாவது இறைவனுக்கு இந்த மலர்களைச் சூட்டி வணங்குங்கள். உங்களுடைய பூஜையறையில் தவறாமல் பயன்படுத்துங்கள். அலுவலகத்திலும், தொழில் செய்யும் இடத்திலும் வியாபார தலங்களிலும் இந்த மலர்களை வைத்துக் கொள்வது நல்ல பலன்களைத் தரும்.

    இங்கே குறிப்பிடப்பட்டிருக்கும் நட்சத்திரத்திற்கான மலர்களை தெய்வ வழிபாட்டில் அவசியம் பயன்படுத்துங்கள். நீங்கள் எந்த ஆலயத்திற்குச் சென்றாலும் இந்த மலர்களைப் பயன்படுத்துவதும், உங்கள் வீட்டு பூஜை அறை, அலுவலகம், தொழிலகம், வியாபார ஸ்தலங்கள் முதலான இடங்களில் பயன்படுத்துவதும் நல்ல பலன்களைத் தரும்.

    மன அமைதியை உண்டாக்கும். நல்ல சிந்தனையைத் தரும். இவற்றைத் தவறாமல் பயன்படுத்துங்கள். மிகக்குறுகிய காலத்திலேயே நல்ல மாற்றத்தை நிச்சயமாக நீங்கள் உணருவீர்கள்!

    அஸ்வினி - சாமந்தி

    பரணி - முல்லை

    கார்த்திகை - செவ்வரளி

    ரோகிணி - பாரிஜாதம், பவளமல்லி,

    மிருகசீரிடம் - ஜாதி மல்லி

    திருவாதிரை - வில்வப் பூ, வில்வம்

    புனர்பூசம் - மரிக்கொழுந்து

    பூசம் - பன்னீர் மலர்

    ஆயில்யம் - செவ்வரளி

    மகம் - மல்லிகை

    பூரம் - தாமரை

    உத்திரம் - கதம்பம்

    அஸ்தம் - வெண்தாமரை

    சித்திரை - மந்தாரை

    சுவாதி - மஞ்சள் அரளி

    விசாகம் - இருவாட்சி

    அனுஷம் - செம்முல்லை (செந்நிற மலர்கள்)

    கேட்டை - பன்னீர் ரோஜா

    மூலம் - வெண்சங்கு மலர்

    பூராடம் - விருட்சி (இட்லிப்பூ)

    உத்திராடம் - சம்பங்கி

    திருவோணம் - ரோஜா

    அவிட்டம் - செண்பகம்

    சதயம் - நீலோற்பவம்

    பூரட்டாதி - வெள்ளரளி

    உத்திரட்டாதி - நந்தியாவட்டம்

    ரேவதி - செம்பருத்தி

    • அம்பிகைக்கு அபிஷேகம் செய்து தரிசித்தால் விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
    • சிவன் மற்றும் அம்மனுக்கு அபிஷேகம் செய்து வணங்கினால் வேண்டிய வரம் கிடைக்கும்.

    முற்பிறவியில் செய்த பாவத்தால் இப்பிறவியில் தீராத துன்பங்களை அனுபவித்து அவதிப்படுபவர்கள், சிவாலயங்களுக்கு சென்று முறையாக வழிபட்டால் தங்கள் முற்பிறவி பாவங்களில் இருந்து விடுபடலாம் என்பது முன்னோர் கூற்று.

    முற்பிறவி பாவங்களை போக்கும் சிவாலயங்கள் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இருந்தாலும் இதில் முக்கிய இடத்தை பிடிக்கும் சிவாலயமாக நாகை மாவட்டம் திருமருகல் அருகே உள்ள சீயாத்தமங்கை பிரம்மபுரீஸ்வரர் கோவில் உள்ளது.

    குறிப்பாக மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நல்வாழ்வை அடைந்து அனைத்து பேறுகளையும் பெற சீயாத்தமங்கை பிரம்மபுரீஸ்வரை தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது வழிபட வேண்டும்

    மேற்கு நோக்கி அமர்ந்திருக்கும் ஒரு அற்புத ஆலயம்தான், நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஒன்றியத்தில் உள்ள சீயாத்தமங்கை சிவாலயம் ஆகும். மேற்கு நோக்கி உள்ள சிவலாயத்தை வணங்கினால், 100 சிவாலயத்தை வணங்கியதற்கு சமம் என்பர்.

    சீயாத்தமங்கை பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் சிவனுக்கும், அன்னைக்கும் தனித்தனி சன்னதி உள்ளது.

    சீயாத்தமங்கை பிரம்மபுரீஸ்வரர் கோவில் இறைவனின் திருமேனியில் சிலந்தி ஊர்ந்ததும் மூல நட்சத்திர நாளில்தான். எனவே மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்கி நலம்பெற வேண்டிய திருத்தலம் இந்த கோவில் ஆகும்.

    ஆவணி மாத மூல நட்சத்திர நாளில் இங்கு நடைபெறும் திருக்கல்யாண வைபவத்தை தரிசித்து அந்த நாளில் நடைபெறும் ருத்ர வியாமளா தந்திர பூஜையில் பங்கேற்றால் திருமணத்தடை நீங்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை ஆகும்.

    குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் பவுர்ணமியில் இந்த கோவிலில் உள்ள சூரிய-சந்திர தீர்த்தத்தில் நீராடி அம்பிகைக்கு அபிஷேகம் செய்து தரிசித்தால் விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

    குழந்தை பாக்கியம், கல்வி, திருமணம் வேண்டுவோர் 5 பவுர்ணமிகளில் சிவன் மற்றும் அம்மனுக்கு அபிஷேகம் செய்து வணங்கினால் வேண்டிய வரம் கிடைக்கும்.

    சென்னையில் இருந்து இந்த கோவிலுக்கு வர விரும்பும் பக்தர்கள் பஸ் அல்லது ரெயில் மூலம் நாகப்பட்டினத்துக்கு வந்து அங்கிருந்து நாகை- கும்பகோணம் சாலையில் உள்ள திருமருகலுக்கு சென்று திருமருகலில் இருந்து 2 கி.மீட்டர் தொலைவில் உள்ள இக்கோவிலை அடையலாம்.

    தென்மாவட்டங்களில் இருந்து இந்த கோவிலுக்கு வர விரும்பும் பக்தர்களும் நாகப்பட்டினத்துக்கு வந்த மேற்கண்ட வழித்தடம் வழியாக கோவிலை அடையலாம். நாகப்பட்டினத்தில் இருந்து சுமார் 13 கி.மீட்டர் தொலைவில் இந்த கோவில் உள்ளது.

    • ஒருவரின் ஜாதகத்தை வைத்து பெற்றோர் நிச்சயிக்கும் திருமணமா? காதல் திருமணமா என்பதை எளிதாக கூற முடியும்.
    • நவகிரக அமைப்பை வைத்து ஜாதகருக்கு எப்படி திருமணம் நடக்கும் என்று அறிந்து கொள்ளலாம்.

    மனித வாழ்வின் மிக முக்கிய அங்கமான திருமணத்தை பெற்றோர் நிச்சயிக்கும் திருமணம், சுய விருப்ப விவாகம் என இரண்டாக வகைப்படுத்ததலாம். ஜோதிட ரீதியாக ஒருவரின் ஜாதகத்தை வைத்து பெற்றோரின் விருப்ப திருமணமா? ஜாதகரின் விருப்ப திருமணமா என்பதை எளிதாக கூற முடியும்.

    சூரியன்

    சூரியன் மனக்கோட்டை, கற்பனை, கனவுகளுக்கு காரக கிரகமாகும். ஒருவரின் ஜாதகத்தில் 5ம் பாவகத்துடன் சூரியன் சம்பந்தம் பெற்றால் காதல் பற்றிய பல விதமான கற்பனைகளும், கனவுகளும் இருக்கும். இதில் அந்தஸ்து மற்றும் கவுரவம் பற்றிய மிகைப்படுத்ததலான எதிர்ப்பார்ப்பு இருக்கும். தன் கனவிற்கும், கற்பனைக்கும் அந்தஸ்திற்கும் சமமான நபர் கிடைத்தால் மட்டுமே காதலிக்க துவங்குவார்கள்.

    சந்திரன்

    சந்திரன் உடலையும், மனதையும் குறிக்கும் கிரகம். ஒருவரின் ஜாதகத்தில் ஜந்தாம் இடத்திற்கு சந்திரன் சம்பந்தம் பெற்றால் மன உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். தங்கள் மன உணர்வுகளை புரிந்து கொள்ளக்கூடிய ஒரு நபரின் அன்பு கிடைத்தால் அவர்கள் மேல் காதல் வந்து விடும். செவ்வாய் செவ்வாய் வேகத்திற்கும், வீரத்திற்கும், தைரியத்திற்கும் காரககிரகம். ஐந்தாம் பாவகத்துடன்

    செவ்வாய்

    சம்பந்தம் இருந்தால் காதலிக்கும் தைரியம் வரும். செவ்வாய்க்கு சுப கிரக சம்பந்தம் இருந்தால் நல்ல தரமான நபருடன் காதல் ஏற்படுகிறது. அசுப கிரகம் சம்பந்தம் பெற்றால் தரமில்லாத, தகுதி குறைந்த நபருடன் காதல் உருவாகிறது.

    புதன்

    காதலுக்கான காரக கிரகம் புதன். ஒருவரின் புத்திசாலித்தனத்திற்கும், நுண்ணறிவிற்கும் காரக கிரகமான புதன் காதலிக்கும் போது மட்டும் மதியை இழந்து நிற்கும். எத்தனை வயதானாலும் புதன் தசை, புத்தி அந்தர காலங்களில் காதல் அவஸ்தையால் மன நோயாளியாகிறார்கள். குரு குரு மதிப்பிற்கும், மரியாதைக்கும் காரக கிரகம்.

    குரு

    ஐந்தாம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றவர்களுக்கு மரியாதைக்குரிய நபர்கள் மற்றும் கவுரவமான நபர்கள் மீது காதல் வரும். இவர்கள் கவுரவத்திற்கு பயந்து பெற்றோர்களுக்காகவும், உறவுகளுக்காகவும் தங்கள் காதலை வெளிப்படுத்துவதில்லை. வாழ்நாள் முழுவதும் தங்கள் காதலை ஆழ்மனதில் அசை போட்டுக் கொண்டே இருப்பார்கள். இது தான் காதலுக்கு மரியாதை.

    சுக்ரன் சுக்ரன் அழகிற்கும், ஆடம்பரத்திற்கும், காமத்திற்கும் காரக கிரகம். எந்த வயதினராக இருந்தாலும் சுக்ரன் தசை, புத்தி காலங்களில் அழகு, ஆடம்பரம்,காமம் போன்றவற்றினால் காதல் வருகிறது. சுக்ரனால் ஏற்படும் காதலில் பெரும்பாலும் ஆழமான அன்பு இருக்காது. பலர் போக்சோவில் தண்டனை அனுபவிப்பது, பல பெண்களிடம் தவறாக பழகுபவர்களுக்கு சுக்ரன், ராகு சம்பந்தம் இருக்கும். இவர்களின் காதல் திருமணத்தில் முடிவதில்லை, திருமணம் நடந்தாலும் தோல்வியைத் தழுவுகிறார்கள்.

    சனி

    சனி துன்பத்திற்கும், துயரத்திற்கும் காரக கிரகம். ஐந்தாம் பாவகத்துடன் சனி சம்பந்தம் பெற்றால் தங்கள் துன்பம், கவலைகளில் ஆர்வம் செலுத்துபவர்கள் மீது காதல் கொள்கிறார்கள். இவர்களுக்கு பெரும்பாலும் வேலை பார்க்கும் இடத்தில் காதல் வருகிறது. இளம் பருவத்தில் வயது வித்தியாசமில்லாமல் ஏற்படும் காதல் நிறைவேறாது. காதலர்கள் பலர் நம்பிக்கை துரோகத்தால் உயிரை துறக்கிறார்கள்.

    ராகு

    ராகு வேற்று மொழி பேசுதல் மற்றும் திருட்டுத்தனத்தைக் குறிக்கும் கிரகம். தவறான நபர்களிடம் காதல் கொள்ளுதல், ஏற்கனவே திருமணமானவர்களை காதலிப்பதையும் கூறும் கிரகம். ராகு. பலருக்கு திருமணத்திற்கு பிறகு ஏற்படும் மனச்சுமையை பகிர்ந்து கொள்ளும் தகாத உறவைத் தருகிறது. முகம் சுளிக்க வைக்கும் காதல் உறவை ஏற்படுத்துகிறது.

    கேது

    கேது ஞானத்திற்கும் பக்திக்கும், வேற்று மதத்திற்கும் காரக கிரகம் என்பதால் மதம் மாறிய காதலுக்கு வழி வகுக்கிறது. இவர்கள் காதலால் சட்ட நெருக்கடியை சந்திப்பவர்கள்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • ஒவ்வொருவரும் ஏதேனும் ஒரு நட்சத்திரத்தில் பிறந்திருப்பார்கள்.
    • 27 நட்சத்திரக்காரர்களின் இயல்பான குணங்களைப் பற்றி ஜோதிட சாஸ்திரம் சொல்கின்றது.

    அசுவினி முதல் ரேவதி வரை மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளன. ஒவ்வொருவரும் ஏதேனும் ஒரு நட்சத்திரத்தில் பிறந்திருப்பார்கள். அவர்கள் பிறந்த நட்சத்திரத்தை 'ஜென்ம நட்சத்திரம்' என்று கூறுவர்.

    ஒவ்வொரு நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும் ஒவ்வொரு விதமான குணமுண்டு. அந்த அடிப்படையில் இருபத்தி ஏழு நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கும் இயல்பாக அமைந்த குணங்களைப் பற்றி ஜோதிட சாஸ்திரம் சொல்கின்றது. இவை பொதுவான பலன்கள் தான்.

    அசுவதி:- இது கேதுவின் ஆதிக்கத்திற்குரிய நட்சத்திரம். இதில் பிறந்தவர்கள், செய்யும் காரியங்களைச் சிறப்பாகச் செய்து முடிப்பர். மனோதிடம் கொண்டவர்கள். உண்மைக்குப் புறம்பாக பேசமாட்டார்கள். முன்கோபத்தால் உறவினர்களைப் பகைத்துக்கொள்ளும் சூழல் ஏற்படும். லட்சியத்தை நோக்கிப் பயணிப்பவர்கள். உதவி செய்வதன் மூலம் பதவிகளைப் பெறுவர்.

    பரணி:- இது சுக்ரனின் ஆதிக்கத்திற்குரிய நட்சத்திரம். இதில் பிறந்தவர்கள், ஆரம்பித்த காரியத்தை முடிப்பதில் அசகாய சூரர்கள். குடும்பப் பாசம் உள்ளவர்கள். குடும்ப உறுப்பினர்களை அல்லது விபரம் அறிந்தவர்களைக் கலந்து ஆலோசித்தே எந்த முடிவும் எடுப்பர். பொதுநலத்தில் அக்கறை கொண்டவர்கள். கலைத்துறையில் ஈடுபாடு இருக்கும். கனிவாகப் பேசிக் காரியங்களைச் சாதிப்பர்.

    கார்த்திகை:- இது சூரியனின் ஆதிக்கத்திற்குரிய நட்சத்திரம். பெருமைக்குரியவர்கள், பிறரால் மதிக்கப்படுபவர்கள். கம்பீரமான தோற்றத்தோடு காட்சியளிப்பர். கடமையைச் செவ்வனே செய்வார்கள். வழக்குகளில் வாதாடி வெற்றி பெறும் தன்மை உண்டு. இனிய பேச்சால் மற்றவர்களை வசமாக்கும் தன்மை கொண்டவர்கள்.

    ரோகிணி:- இது சந்திரனின் ஆதிக்கத்திற்குரிய நட்சத்திரம். இரக்க குணம் கொண்டவர்கள். ஸ்திரமான மனது இவர்களுக்கு இருப்பது அரிது. வளர்பிறையும், தேய்பிறையும் வருவது போல இன்பமும், துன்பமும் கலந்த வாழ்வைப் பெறுவர். சாஸ்திரங்களில் நம்பிக்கை கொண்டவர்கள். அடிமைத் தொழிலைக் காட்டிலும் சுய தொழிலை விரும்புவார்கள்.

    மிருகசீர்ஷம்:- இது செவ்வாயின் ஆதிக்கத்திற்குரிய நட்சத்திரம். இதில் பிறந்தவர்கள் கல்வி கேள்விகளில் சிறந்தவர்களாக விளங்குவர். இவர்கள் மனதில் உள்ளதை பிறர் அறிந்து கொள்ள இயலாது. சுய ரகசியங்களைக் காப்பாற்றுபவர்கள். பேச்சில் வல்லமை பெற்றவர்கள் என்பதால், பிறருக்கு பிடிகொடுக்க மாட்டார்கள்.

    திருவாதிரை:- இது ராகுவின் ஆதிக்கத்திற்குரிய நட்சத்திரம். இதில் பிறந்தவர்கள் சகல துறைகளையும் தெரிந்து வைத்திருப்பார்கள். சந்தர்ப்பங்களை சாதகமாக்கிக் கொள்வார்கள். பகை பாராட்டும் தன்மை இவர்களிடம் காணப்படும். மற்றவர்கள் மத்தியில் தான், யார் என்பதை நிரூபிக்கப் பாடுபடுவர். மற்றவர்களிடம் யோசனை கேட்டாலும் தான் எடுத்த முடிவையே மேற்கொள்வர்.

    புனர்பூசம்:- இது குருவின் ஆதிக்கத்திற்குரிய நட்சத்திரம். அன்பாகப் பேசிப் பழகுவார்கள். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துபவர்கள். இவர்களுக்கு அதிக நண்பர்கள் உண்டு. நட்பின் மூலம் காரியங்களைச் சாதித்துக் கொள்வதில் வல்லவர்கள். உண்மைக்கு முக்கியத்துவம் கொடுப்பர்.

    பூசம்:- இது சனியின் ஆதிக்கத்திற்குரிய நட்சத்திரம். தாய்ப்பாசம் மிக்கவர்கள். பெற்றோர்களின் ஆதரவால் பெரிய நிலையை அடைவர். செல்வந்தனாகத் திகழும் வாய்ப்பு உண்டு. மக்கள் செல்வாக்கு பெற்றவர்கள். பொதுநலத்தில் ஈடுபட்டு நியாயத்திற்காக பாடுபடும் தன்மை கொண்டவர்கள்.

    ஆயில்யம்:- இது புதனின் ஆதிக்கத்திற்குரிய நட்சத்திரம். இதில் பிறந்தவர்கள் எதிரிகளையும் தன்வசமாக்கிக் கொள்ளும் சாமர்த்தியமிக்கவர்கள். மனதில் உள்ள குறைகளை மற்றவர்களிடம் சொல்ல மாட்டார்கள். தெய்வ சிந்தனை உடையவர்கள். இவர்களைக் கூட்டாளிகளாக வைத்துக்கொள்பவர்கள் விரைவில் முன்னேற்றம் காண்பர்.

    மகம்:- இது கேதுவின் ஆதிக்கத்திற்குரிய நட்சத்திரம். மிகுந்த சாமர்த்தியசாலிகள். கோபம் வந்தால் எதிரிகளை இரண்டில் ஒன்று ஆக்கிவிடுவர். அதிக நண்பர்கள் இருந்தாலும் ஒரு சிலரிடம் மட்டுமே மனம் விட்டுப் பேசுவர். எதைச் சொன்னாலும் விவாதம் செய்த பிறகே ஏற்றுக்கொள்வர்.

    பூரம்:- இது சுக்ரனின் ஆதிக்கத்திற்குரிய நட்சத்திரம். பழகுவதில் கண்ணியமிக்கவர்கள். பலவிதமான தொழில்களைச் செய்து வெற்றி காண்பர். கலைகளில் ஆர்வம் உள்ளவர்கள். அரசியல் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் முன்னின்று காரியங்களைச் சாதிப்பதில் வல்லவர்கள்.

    உத்ரம்:- இது சூரியனின் ஆதிக்கத்திற்குரிய நட்சத்திரம். இதில் பிறந்தவர்கள் தெய்வ பக்தி மிக்கவர்கள். யதார்த்தவாதி. தேசப்பற்று மிக்கவர்களோடு பழக்கம் அதிகம் இருக்கும். கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பர். எல்லோரும் விரும்பும் விதத்தில் நடந்துகொள்வர். பணம் சம்பாதிப்பதில் வல்லவர்கள்.

    ஹஸ்தம்:- இது சந்திரனின் ஆதிக்கத்திற்குரிய நட்சத்திரம். மற்றவர்கள் போற்றும்படியான வாழ்க்கையை நடத்துபவர்கள். வீர தீரச் செயல்களில் விருப்பம் கொண்டவர்கள். சிறுவயது முதலே தொழில் செய்து சம்பாதிக்க வேண்டுமென்ற எண்ணம் கொண்டவர்கள். குருபக்தியும், விசுவாசமும் இவர்களோடு இணைந்தே இருக்கும்.

    சித்திரை:- இது செவ்வாயின் ஆதிக்கத்திற்குரிய நட்சத்திரமாகும். சரீரபலமும், திடமான பேச்சாற்றலும் கொண்டவர்கள். பிறருக்காக பரிந்து பேசி உரையாடி காரியங்களைச் சாதிப்பீர்கள். சிக்கனமாக வாழ்க்கை நடத்துவதில் வல்லவர்கள். கவுரவத்தைக் காப்பாற்றத் துடிப்பீர்கள்.

    சுவாதி:- இது ராகுவின் ஆதிக்கத்திற்குரிய நட்சத்திரம். ஜனவசியம் அதிகம் பெற்றவர்கள். எதையும் ரசித்தும் பார்ப்பார்கள், ருசித்தும் பார்ப்பார்கள். மற்றவர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக விளங்குவீர்கள். 64 கலைகளில் அதிகமான கலைகளை அறிந்து வைத்திருக்கக் கூடியவர்கள். தனது விருப்பப்படியே எதையும் செய்வர்.

    விசாகம்:- இது குருவின் ஆதிக்கத்திற்குரிய நட்சத்திரம். உறவினர்களையும், நண்பர்களையும் அதிகம் நேசிக்கக் கூடியவர்கள். வேத சாஸ்திரங்களை கற்று வைத்திருப்பர். பழைய சடங்கு சம்பிரதாயங்களில் அதிக நம்பிக்கை கொண்டவர்கள். பக்திமான், கூர்மையான புத்தியுடையவர்கள். மற்றவர்களிடம் இருந்து தன்னை வித்தியாசமாக காட்டிக் கொள்ளப் பிரியப்படுவர்.

    அனுஷம்:- இது சனியின் ஆதிக்கத்திற்குரிய நட்சத்திரம். தோஷமில்லாத நட்சத்திரம் என்று சொல்வது வழக்கம். எல்லோரிடமும் சகஜமாகப் பழகும் தன்மை கொண்டவர்கள். நல்ல குணமும், நல்ல மனமும், ஒரு காரியத்தைச் செய்து விட்டுப் பிறகு இப்படிச் செய்திருக்கலாமே என்று சிந்திப்பவர்களும் இவர்கள்தான்.

    கேட்டை:- இது புதனின் ஆதிக்கத்திற்குரிய நட்சத்திரம். கடவுள் வழிபாட்டில் ஆர்வம் காட்டுவார்கள். தன்னிச்சையாக செயல்படும்பொழுது தந்திரமான குணத்தைக் கையாள்பவர்கள். கள்ளம் கபடமில்லாத மனத்தைப் பெற்றவர்கள். யாரையும் எளிதில் நம்பமாட்டார்கள்.

    மூலம்:- இது கேதுவின் ஆதிக்கத்திற்குரிய நட்சத்திரம். உயர்ந்த சிந்தனை, கூர்மையான அறிவு படைத்தவர்கள். விருந்தினர்களை உபசரிப்பதில் வல்லவர்கள். முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு செயல்பட்டால் முன்னேற்றத்தை விரைவில் காண இயலும்.

    பூராடம் :- இது சுக்ரனின் ஆதிக்கத்திற்குரிய நட்சத்திரம். இதில் பிறந்தவர்களுக்கு பிடிவாத குணமும் உண்டு. பெருந்தன்மையான குணமும் உண்டு. தாய்ப்பாசம் மிக்கவர்கள். பொதுநலத்தில் அக்கறை காட்டி புகழ் பெறுவார்கள். தொழில் நுணுக்கங்களைக் கற்று வைத்திருப்பர். தர்ம சிந்தனை அதிகம் உள்ளவர்கள்.

    உத்ராடம்:- இது சூரியனின் ஆதிக்கத்திற்குரிய நட்சத்திரம். இனிமையாகப் பேசுபவர்கள் எல்லோரிடமும் பிரியமாக நடந்து கொள்வர். பிறர்பொருள் மேல் விருப்பம் கொள்ளமாட்டார்கள். செய்நன்றி மறக்காத குணம் இவர்களுக்கு உண்டு. மூத்த சகோதரர்களிடம் பாசம் காட்டுவார்கள்.

    திருவோணம்:- இது சந்திரனின் ஆதிக்கத்திற்குரிய நட்சத்திரம். கல்வி கேள்விகளில் தேர்ச்சி பெற்றவர்களாக இருப்பர். முன்பின் தெரியாதவர்களிடம் கூட மனம்விட்டுப் பேசுவர். தான தர்மம் செய்வதில் பிரியம் கொண்டவர்கள். முயற்சியில் சளைக்காமல், முன்னேற்றம் காண்பதிலேயே கவனமாக இருப்பர்.

    அவிட்டம்:- இது செவ்வாயின் ஆதிக்கத்திற்குரிய நட்சத்திரம். எதிரிகளைக் கண்டு அஞ்சாதவர்கள். தான் சொல்லிய கருத்தை மற்றவர்கள் ஏற்க வேண்டுமென்று விரும்புபவர்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்யவேண்டுமென்ற அற்புதக் குணம் கொண்டவர்கள். சொத்து சேர்ப்பதில் வல்லவர்களாக விளங்குவர்.

    சதயம்:- இது ராகுவின் ஆதிக்கத்திற்குரிய நட்சத்திரம். ஆன்ம பலமும், தேகபலமும் மிக்கவர்கள். பகைவர்களை வெற்றி கொள்ளும் ஆற்றல் இவர்களுக்கு உண்டு. தலைமைப் பதவிகள் இவர்களைத் தேடி தானாகவே வரும். திருப்பணிகள் செய்வதிலும் விருப்பம் கொண்டவர்கள். திக்கெட்டும் புகழ்பரப்பும் விதம் ஏதேனும் சாதனைகளைச் செய்வர்.

    பூரட்டாதி:- இது குருவின் ஆதிக்கத்திற்குரிய நட்சத்திரம். நியாயம், நேர்மையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற கொள்கை உடையவர்கள். பொருட்கள் தேடுவதில் சாதுரியமாக செயல்படுவர். நண்பர்களைப் பூரணமாக நம்பிச் செயல்படமாட்டீர்கள். உறவினர் பகை எப்போதும் இவர்களுக்கு இருக்கும். கடவுள் வழிபாட்டில் கவனம் செலுத்தி காரியங்களை தொடங்கும் குணம் உண்டு.

    உத்திரட்டாதி:- இது சனியின் ஆதிக்கத்திற்குரிய நட்சத்திரம். இதில் பிறந்தவர்கள் பிறருக்கு உதவி செய்யும் குணம் பெற்றவர்கள். பிறருக்கு கொடுத்த வாக்கைக் எப்படியும் காப்பாற்றிவிடுவீர்கள். உறவினர்களை ஆதரிக்கும் குணம் உண்டு. சந்தர்ப்பத்திற்கு தகுந்தார் போல் தன்னை மாற்றிக் கொள்வார்கள். தர்ம காரியங்களை செய்வதில் நாட்டம் கொள்வர்.

    ரேவதி:- இது புதன் ஆதிக்கத்திற்குரிய நட்சத்திரம். பிறரிடம் ஆலோசனை கேட்டு நடக்க விரும்புவர். பேச்சாற்றல் மிக்கவர்கள். பிறரை அணுகும் முறையில் திறமைசாலிகளாக விளங்குவர். உள்ளதைக் கொண்டு திருப்தி அடைய வேண்டும் என்று எடுத்துரைப்பர்.

    'ஜோதிடக்கலைமணி' சிவல்புரி சிங்காரம்

    • காயத்ரி மந்திரத்தை 48 நாட்கள் தினமும் சொல்லி வந்தால் நன்மையான பலன்கள் கிடைக்கும்.
    • இங்கே ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் உரிய காயத்ரி மந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது.

    இறைவனை துதிக்கும் மந்திரங்களிலேயே, காயத்ரி மந்திரத்திற்கு முதலிடம் உண்டு. எந்த பிரச்சினையையும் தீர்க்கும் மந்திரமாக காயத்ரி மந்திரம் போற்றப்படுகிறது. அனைத்து தெய்வங்களுக்கும், தெய்வீக சக்தி கொண்ட பொருட்களுக்கும், கிரகங்களுக்கும் என்று பலவற்றுக்கும் காயத்ரி மந்திரங்கள் ஏற்படுத்தி வைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் 27 நட்சத்திரங்களுக்கும் காயத்ரி மந்திரம் உள்ளது. ஒருவர் தன்னுடைய ஜாதகத்திற்குரிய நட்சத்திரத்தின் காயத்ரி மந்திரத்தை, 1 மண்டல (48 நாட்கள்) காலம், தினமும் அதிகாலையில் சொல்லி வந்தால், நன்மையான பலன்கள் கிடைக்கும். தினமும் ஒன்பது முறையாவது, உங்கள் நட்சத்திரத்திற்குரிய காயத்ரி மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். இதனால் வாழ்க்கையில் சிறந்த முன்னேற்றம் வந்து சேரும்.

    இங்கே ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் உரிய காயத்ரி மந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் உங்களுக்கானதை தினமும் பாராயணம் செய்து, வாழ்வில் சகலவிதமான வளங்களையும் பெறுங்கள்.

    * அஸ்வினி

    ஓம் ஸ்வேத வர்ண்யை வித்மஹே

    சுதாகராயை தீமஹி

    தன்னோ அச்வநௌ ப்ரசோதயாத்

    * பரணி

    ஓம் க்ருஷ்ணவர்னாயை வித்மஹே

    தண்டதராயை தீமஹி

    தன்னோ பரணி ப்ரசோதயாத்

    * கிருத்திகை

    ஓம் வன்னிதேஹாயை வித்மஹே

    மஹாதபாயை தீமஹி

    தன்னோ க்ருத்திகா ப்ரசோதயாத்

    * ரோஹிணி

    ஓம் ப்ராஜாவிருத்யைச வித்மஹே

    விச்வரூபாயை தீமஹி

    தன்னோ ரோஹினி ப்ரசோதயாத்

    * மிருகசீரிடம்

    ஓம் சசிசேகராய வித்மஹே

    மஹாராஜாய தீமஹி

    தன்னோ ம்ருகசீர்ஷா ப்ரசோதயாத்

    * திருவாதிரை

    ஓம் மஹா ச்ரேஷ்டாய வித்மஹே

    பசும்தநாய தீமஹி

    தன்னோ ஆர்த்ரா ப்ரசோதயாத்

    * புனர்பூசம்

    ஓம் ப்ரஜாவ்ருத்யைச வித்மஹே

    அதிதிபுத்ராய த தீமஹி

    தன்னோ புனர்வஸு ப்ரசோதயாத்

    * பூசம்

    ஓம் ப்ரம்ம்வர்ச்சஸாய வித்மஹே

    மஹா திஷ்யாய தீமஹி

    தன்னோ புஷ்ய ப்ரசோதயாத்

    * ஆயில்யம்

    ஓம் ஸர்பராஜாய வித்மஹே

    மஹா ரோசனாய தீமஹி

    தன்னோ ஆச்லேஷ ப்ரசோதயாத்

    * மகம்

    ஓம் மஹா அனகாய வித்மஹே

    பித்ரியா தேவாய தீமஹி

    தன்னோ மகஃப்ரசோதயாத்

    * பூரம்

    ஓம் அரியம்நாய வித்மஹே

    பசுதேஹாய தீமஹி

    தன்னோ பூர்வபால்குநீ ப்ரசோதயாத்

    * உத்திரம்

    ஓம் மஹாபகாயை வித்மஹே

    மஹாச்ரேஷ்டாயை தீமஹி

    தன்னோ உத்ரபால்குநீ ப்ரசோதயாத்

    * அஸ்தம்

    ஓம் ப்ரயச்சதாயை வித்மஹே

    ப்ரக்ருப்ணீதாயை தீமஹி

    தன்னோ ஹஸ்தா ப்ரசோதயாத்

    * சித்திரை

    ஓம் மஹா த்வஷ்டாயை வித்மஹே

    ப்ரஜாரூபாயை தீமஹி

    தன்னோ சைத்ரா ப்ரசோதயாத்

    * சுவாதி

    ஓம் காமசாராயை வித்மஹே

    மகாநிஷ்டாயை தீமஹி

    தன்னோ சுவாதி ப்ரசோதயாத்

    * விசாகம்

    ஓம் இந்த்ராக்நௌச வித்மஹே

    மஹாச்ரேஷ்ட்யைச தீமஹி

    தன்னோ விசாகா ப்ரசோதயாத்

    * அனுஷம்

    ஓம் மித்ரதேயாயை வித்மஹே

    மஹா மித்ராய தீமஹி

    தன்னோ அனுராதா ப்ரசோதயாத்

    * கேட்டை

    ஓம் ஜயேஷ்டாயை வித்மஹே

    மகா ஜய்ஷ்ட்யாயை தீமஹி

    தன்னோ ஜ்யேஷ்டா ப்ரசோதயாத்

    * மூலம்

    ஓம் ப்ராஜாதிபாயை வித்மஹே

    மஹப்ராஜையை தீமஹி

    தன்னோ மூலாப் ப்ரசோதயாத்

    * பூராடம்

    ஓம் சமுத்ரகாமாயை வித்மஹே

    மஹாபிஜிதாயை தீமஹி

    தன்னோ பூர்வாஷாடா ப்ரசோதயாத்

    * உத்திராடம்

    ஓம் விஸ்வேதேவாய வித்மஹே

    மஹா ஷாடாய தீமஹி

    தன்னோ உத்ராஷாடா ப்ரசோதயாத்

    * திருவோணம்

    ஓம் மஹா ச்ரோணாய வித்மஹே

    புண்யஸ்லோகாய தீமஹி

    தன்னோ ச்ரோணா ப்ரசோதயாத்

    * அவிட்டம்

    ஓம் அக்ர நாதாய வித்மஹே

    வசூபரீதாய தீமஹி

    தன்னோ சரவிஹ்டா ப்ரசோதயாத்

    * சதயம்

    ஓம் பேஷஜயா வித்மஹே

    வருண தேஹா தீமஹி

    தன்னோ சதபிஷக் ப்ரசோதயாத்

    * பூரட்டாதி

    ஓம் தேஜஸ்கராய வித்மஹே

    அஜஏகபாதாய தீமஹி

    தன்னோ பூர்வப்ரோஷ்டபத ப்ரசோதயாத்

    * உத்திரட்டாதி

    ஓம் அஹிர் புத்ந்யாய வித்மஹே

    ப்ரதிஷ்டாபநாய தீமஹி

    தன்னோ உத்ரப் ப்ரோஷ்டபத ப்ரசோதயாத்

    * ரேவதி

    ஓம் விச்வரூபாய வித்மஹே

    பூஷ்ண தேஹாய தீமஹி

    தன்னோ ரைய்வதி ப்ரசோதயாத்

    • நம்முடைய நட்சத்திரத்திற்கு உரியதாக தேர்ந்தெடுத்து வழிபடும் போது, கூடுதல் பலன்கள் கிடைக்கும்.
    • உங்கள் நட்சத்திரத்திற்குரிய மலர்களைக் கொண்டு இறைவனை வழிபட்டு பலன் பெறுங்கள்.

    ஒவ்வொருவரும் ஆலயங்களுக்குச் செல்லும் போதும், வீட்டில் பூஜை அறையில் இறைவனை வழிபடும் போதும், மலர்களை வைத்து வழிபடுவார்கள். அந்த மலர்களை நம்முடைய நட்சத்திரத்திற்கு உரியதாக தேர்ந்தெடுத்து வழிபடும் போது, கூடுதல் பலன்கள் கிடைக்கும். இங்கே 27 நட்சத்திரங்களுக்கும் உரிய மலர்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி உங்கள் நட்சத்திரத்திற்குரிய மலர்களைக் கொண்டு இறைவனை வழிபட்டு பலன் பெறுங்கள்.

    அஸ்வினி - சாமந்தி

    பரணி - முல்லை

    கார்த்திகை - செவ்வரளி

    ரோகிணி - பாரிஜாதம்

    மிருகசீரிடம் - ஜாதிமல்லி

    திருவாதிரை - வில்வப் பூ

    புனர்பூசம் - மரிக்கொழுந்து

    பூசம் - பன்னீர் மலர்

    ஆயில்யம் - செவ்வரளி

    மகம் - மல்லிகை

    பூரம் - தாமரை

    உத்திரம் - கதம்பம்

    அஸ்தம் - வெண் தாமரை

    சித்திரை - மந்தாரை

    சுவாதி - மஞ்சள் அரளி

    விசாகம் - இருவாட்சி

    அனுஷம் - செம்முல்லை

    கேட்டை - பன்னீர் ரோஜா

    மூலம் - வெண்சங்கு மலர்

    பூராடம் - விருட்சி

    உத்திராடம் - சம்பங்கி

    திருவோணம் - செந்நிற ரோஜா

    அவிட்டம் - செண்பகம்

    சதயம் - நீலோற்பலம்

    பூரட்டாதி - வெள்ளரளி

    உத்திரட்டாதி - நந்தியாவட்டம்

    ரேவதி - செம்பருத்தி

    • 27 நட்சத்திர தோஷங்கள் நீங்குவதற்கு மகாயாகம் நடத்தப்படுகிறது.
    • இந்த கோவில் திருவண்ணாமலை வந்தவாசி தாலுகா இஞ்சிமேடு கிராமத்தில் உள்ளது.

    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுகா, பெரணமல்லூர் ஒன்றியம், இஞ்சிமேடு கிராமத்தில், ஸ்ரீ பெருந்தேவிதாயார் சமேத வரதராஜபெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஸ்ரீ வரதராஜபெருமாள் தனி சன்னதி, ஸ்ரீ பெருந்தேவி தாயார் சன்னதி, கல்யாண லட்சுமி நரசிம்மர் சன்னதி, ராமர், லட்சுமணர், சீதாதேவி, ஆஞ்சநேயர், கருடாழ்வார் தனி சன்னதிகள் உள்ளன.

    பிரதி மாதம் சுவாதி நட்சத்திரம், மூல நட்சத்திரம் ஆகிய நட்சத்திர நாட்களில் 27 நட்சத்திர தோஷங்கள் நீங்குவதற்கு மகாயாகம் நடத்தப்படுகிறது. இதில் திருமணத்தடை, வேலை வாய்ப்பு, குழந்தை பாக்கியம், உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும் பல்வேறு நன்மைக்காகவும் யாகம் நடத்தப்படுகிறது.

    பிரதிமாதம் உத்திரம் நட்சத்திரத்தில் கோ சாலையில் உள்ள பசுக்களுக்கு சிறப்பு பூஜை நடைபெறுகிறது. இதில் வியாபாரம், திருமணநாள், பிறந்த நாள், குழந்தை வரம், பெயர் சூட்டுதல், நோய் நொடி இல்லாமல் வாழ்வதற்கும் முன்பதிவு செய்து கொண்டு கோ பூஜையில் கலந்து கொண்டு வழிபடலாம். இந்த கோவிலில் புத்தாண்டு திருவிழா, தைமாத திருவிழா, திருப்பாவாடை அன்னக்கூடை திருவிழா, பவுத்திர உற்சவம், திருக்கல்யாணம், ஊஞ்சல் சேவை, கருடசேவை, கிருஷ்ணஜெயந்தி ஆகியவை முக்கிய விழாக்களாக நடக்கின்றன.

    பெருந்தேவி தாயார் சிறப்பு

    பல்வேறு கோரிக்கைகளை பெருந்தேவி தாயாரிடம் வைத்து மண் அகல்விளக்கில் தீபம்ஏற்றி 48 நாள் மஞ்சள் வைத்து வணங்கி வந்தால் நன்மைகள் நடக்கும்.

    ×