search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jofra Archer"

    • சசெக்ஸ் கவுன்ட்டி அணிக்காக ஜாஃப்ரா ஆர்ச்சர் விளையாடி வருகிறார்.
    • சசெக்ஸ் அணி கர்நாடகா அணிக்கு எதிரான இரண்டு நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடியது.

    இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜாஃப்ரா ஆர்ச்சர். இவர் கவுன்ட்டி கிரிக்கெட்டில் சசெக்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். சசெக்ஸ் அணி தற்போது கர்நாடகா மாநிலம் பெங்களூரு அருகே உள்ள ஆளுரில் 10 நாட்கள் பயிற்சிக்காக வந்துள்ளது.

    கர்நாடகா அணிக்கு எதிராக இரண்டு நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் சசெக்ஸ் விளையாடியது. கர்நாடகா அணியில் இளம் வீரர்கள் முதல் சீனியர் வீரர்கள் வரை இடம் பிடித்திருந்தனர்.

    சசெக்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அப்போது ஜாஃப்ரா ஆர்ச்சர் பந்து வீசவில்லை. 2-வது நாள் ஆட்டத்தின்போது கர்நாடகா அணியில் மாற்று (substitute) வீரராக களம் இறங்கினார். அவர் பந்து வீச அனுமதிக்கப்பட்டார்.

    பந்து வீசிய ஆர்ச்சர் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். எல்.பி.டபிள்யூ. மூலம் முதல் விக்கெட்டை வீழ்த்தினார். 2-வது விக்கெட்டாக சக அணி வீரரை க்ளீன் போல்டாக்கினார்.

    காயம் காரணமாக ஜாஃப்ரா ஆர்ச்சர் கடந்த 12 மாதங்களாக போட்டி கிரிக்கெட்டில் விளையாடாமல் உள்ளார். ஐபிஎல் கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ் அணி இவரை ஏலத்தில் எடுத்தது. ஆனால் காயம் காரணமாக கடந்த சீசனில் மிகப்பெரிய அளவில் அவரால் சாதிக்க முடியவில்லை. இதனால் இந்த சீசனில் அவரை மும்பை அணி ரிலீஸ் செய்துள்ளது.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடருக்கான இங்கிலாந்து அணியிலும் அவர் இடம் பெறமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. முழங்கை காயத்தால் ஜாஃப்ரா ஆர்ச்சர் பாதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஆர்ச்சருக்கு பதிலாக இங்கிலாந்தை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
    • புள்ளி பட்டியலில் மும்பை அணி தலா 10 புள்ளிகளுடன் 8-ம் இடத்தில் உள்ளது.

    மும்பை:

    ஐபிஎல் தொடர் கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை எட்டி விட்டது. இன்னும் 17 லீக் ஆட்டங்களே மீதம் உள்ளன. இதுவரை எந்த அணியும் பிளே ஆப் சுற்றை உறுதி செய்யவில்லை. புள்ளி பட்டியலில் குஜராத் (16 புள்ளி) முதல் இடத்திலும், சென்னை (13 புள்ளி) 2-ம் இடத்திலும், லக்னோ (11 புள்ளி) 3-ம் இடத்திலும் உள்ளன.

    4 முதல் 8 இடங்களில் முறையே ராஜஸ்தான், கொல்கத்தா, பெங்களூரு, பஞ்சாப், மும்பை ஆகிய அணிகள் தலா 10 புள்ளிகளுடன் உள்ளன. புள்ளி பட்டியலில் 8-ம் இடத்தில் உள்ள 5 முறை சாம்பியனான மும்பை அணி இந்த சீசனில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் உள்ளது.

    இந்நிலையில், சில ஆட்டங்களில் ஆடிய ஆர்ச்சர் காயம் காரணமாக எஞ்சிய ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும், ஆர்ச்சருக்கு பதிலாக இங்கிலாந்தை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் ஜோர்டானை மும்பை அணி நிர்வாகம் அணியில் சேர்த்துள்ளது.

    • எனக்கு எந்த பிரச்சினையும் கிடையாது. உங்களைப் போன்ற நபர்கள் தான் எனக்கு பிரச்சனையே தருகிறீர்கள்.
    • குஜராத்துக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் ஜோப்ரா ஆர்ச்சர் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    மும்பை:

    ஐபிஎல் மெகா ஏலத்தின் போது மும்பை இந்தியன்ஸ் அணி, இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சரை 8 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது.

    ஜோப்ரா ஆச்சர் காயம் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளில் மும்பை அணிக்காக வெறும் இரண்டு போட்டிகளில் மட்டுமே விளையாடி இருக்கிறார். இருந்தாலும் அவருக்கு காயம் இன்னும் குணமடையவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த நிலையில் ஜோப்ரா ஆர்ச்சருக்கு கையில் காயம் ஏற்பட்டிருப்பதாகவும் அதற்கு சிறிய அறுவை சிகிச்சை செய்ய பெல்ஜியம் வரை செல்ல இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து ஜோப்ரா ஆர்ச்சர் விலகி மீண்டும் ஒரு வாரத்திற்குள் அணிக்கு திரும்புவார் என அறிவிக்கப்பட்டது.

    எனினும் இந்த தகவலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள ஜோப்ரா ஆர்ச்சர் இந்த செய்தியை வெளியிட்ட பத்திரிக்கையாளரை கடுமையாக சாடி உள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    உண்மை என்னவென்று தெரியாமல் என்னை பற்றியும், என் அனுமதி இல்லாமலும் செய்தி வெளியிட்டு இருக்கிறார்கள். இது சுத்த பைத்தியக்காரத்தனம். இந்த செய்தியை வெளியிட்டவர்கள் வெட்கப்பட வேண்டும்.

    ஏற்கனவே ஒரு வீரருக்கு காயம் அடைந்த தருணம் கவலையும் சிக்கல்களையும் கொடுக்கக்கூடிய நேரம் ஆகும். இந்த நேரத்தில் கூட உங்களுடைய சொந்த நலனுக்காக என்னை பயன்படுத்திக் கொள்வது கேவலமான விஷயம். எனக்கு எந்த பிரச்சினையும் கிடையாது. உங்களைப் போன்ற நபர்கள் தான் எனக்கு பிரச்சனையே தருகிறீர்கள்.

    என்று ஜோப்ரா ஆர்ச்சர் கூறியுள்ளார்.

    இதனால் ஜோப்ரா ஆர்ச்சருக்கு காயம் ஏற்பட்டது உண்மையா? இல்லையா? என்று சந்தேகம் எழுந்துள்ளது. குஜராத்துக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் ஜோப்ரா ஆர்ச்சர் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஜோப்ரா ஆர்ச்சர் அபாரமாக பந்து வீசி 68 ரன் கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தினார்.
    • 3 போட்டிக் கொண்ட ஒருநாள் தொடரை தென் ஆப்பிரிக்கா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    கிம்பர்லி:

    தென் ஆப்பிரிக்கா-இங்கிலாந்து அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கிம்பர்லியில் நேற்று பகல்-இரவாக நடந்தது.

    முதலில் ஆடிய இங்கிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 346 ரன் குவித்தது. தொடக்க வீரர் டேவிட் மலான், கேப்டன் ஜோஸ் பட்லர் சதம் அடித்தனர்.

    மலான் 114 பந்தில் 118 ரன்னும் (7 பவுண்டரி, 6 சிக்சர்), பட்லர் 127 பந்தில் 131 ரன்னும் 16 பவுண்டரி, 7 சிக்சர், மொய்ன் அலி 23 பந்தில் 41 ரன்னும் (2 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்தனர். நிகிடி 4 விக்கெட்டும், மார்கோ ஜான்சன் 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    பின்னர் விளையாடிய தென் ஆப்பிரிக்கா 43-ஓவர்களில் 287 ரன்னில் 'ஆல் அவுட்' ஆனது. இதனால் 59 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. முதல் 2 போட்டியிலும் தோற்ற இங்கிலாந்து ஏற்கனவே தொடரை இழந்து இருந்தது.

    இதனால் அந்த அணிக்கு இந்த வெற்றி ஆறுதல் அளிப்பதாக இருந்தது.

    ஹென்ரிச் கிளாசன் 62 பந்தில் 80 ரன்னும் (7 பவுண்டரி, 2 சிக்சர்) ஹென்ட்ரிக்ஸ் 52 ரன்னும் 6 பவுண்டரி) எடுத்தனர்.

    ஜோப்ரா ஆர்ச்சர் அபாரமாக பந்து வீசி 68 ரன் கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தினார். ஆதில் ரஷூதுக்கு 3 விக்கெட் கிடைத்தது.

    3 போட்டிக் கொண்ட ஒருநாள் தொடரை தென் ஆப்பிரிக்கா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    உலகக்கோப்பைக்கான 15 பேர் கொண்ட இறுதி பட்டியலை வெளியிட்டது இங்கிலாந்து. ஜாப்ரா ஆர்சர் அணியில் இடம்பிடித்துள்ளார்.
    50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் வருகிற 30-ந்தேதி தொடங்குகிறது. ஜூலை 14-ந்தேதி வரை நடக்கும் இந்தத் தொடரில் 10 அணிகள் பங்கேற்கின்றன.

    கடந்த மாதம் 20-ந்தேதிக்குள் முதற்கட்ட அணியை அறிவிக்க வேண்டும் என்று ஐசிசி கூறியிருந்தது. ஆனால் நாளைமறுநாள் (மார்ச் 23-ந்தேதி) வரை தேவைப்பட்டால் அணியில் உள்ள வீரர்களை மாற்றிக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

    நேற்று பாகிஸ்தான் அணி மூன்று வீரர்களை மாற்றியிருந்தது. இங்கிலாந்து அணியின் முதற்கட்ட பட்டியலில் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான ஜாப்ரா ஆர்சர், லியாம் டாசன் ஆகியோருக்கு இடம் கிடைக்கவில்லை.

    பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் ஆர்சர் இடம்பிடித்திருந்தார். இந்நிலையில் இன்று இங்கிலாந்து 15 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலை அறிவித்துள்ளது. இதில் ஆர்சர், டாசன் இடம்பிடித்துள்ளனர்.



    15 பேர் கொண்ட இங்கிலாந்து அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. மோர்சன் (கேப்டன்), 2. மொயீன் அலி, 3. பேர்ஸ்டோவ், 4. ஜோஸ் பட்லர், 5. டாம் குர்ரான், 6. லியாம் டாசன், 7. லியாம் பிளங்கெட், 8. அடில் ரஷித், 9. ஜோ ரூட், 10. ஜேசன் ராய், 11. பென் ஸ்டோக்ஸ், 12. ஜேம்ஸ் வின்ஸ், 13. கிறிஸ் வோக்ஸ், 14. மார்க்வுட். 15. ஜாப்ரா ஆர்சர்.

    முதற்கட்டமாக அறிவிக்கப்பட்ட இங்கிலாந்து அணியில் இடம்பிடித்திருந்த அலேக்ஸ் ஹேல்ஸ், ஜோ டென்லி ஆகியோர் தற்போது நீக்கப்பட்டுள்ளனர்.
    வெளிநாட்டில் பிறந்தவர்கள் ஏழு ஆண்டுகள் இங்கிலாந்தில் வசித்தால்தான் தேசிய கிரிக்கெட் அணியில் இடம்பெற முடியும் என்ற விதியை இங்கிலாந்து மாற்றியுள்ளது. #ECB
    இங்கிலாந்தில் வசித்து வருபவர் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஜாப்ரா ஆர்செர். பவுலிங் மற்றும் பேட்டிங்கில் அசத்தி வரும் ஆர்செரை ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணி 8 லட்சம் பவுண்டிற்கு வாங்கியது. இங்கிலாந்து தேசிய கிரிக்கெட் அணியிலும் அவரை இடம்பெற வைக்க நிர்வாகம் விரும்பியது.

    ஆனால் 23 வயதாகும் ஆர்செர் வெஸ்ட் இண்டீஸில் உள்ள பார்படோஸில் பிறந்து வளர்ந்தவர். 19 வயதிற்கு உட்பட்டோருக்கான வெஸ்ட் இண்டீஸ் தேசிய அணிக்காக விளையாடினார்.

    2015-ம் ஆண்டு சசக்ஸ் அணி அவரை ஒப்பந்தம் செய்தது. இதனால் ஆர்செர் இங்கிலாந்து வந்தார். தற்போது இங்கிலாந்தில் வசித்து வருகிறார். இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் விதிமுறைப்படி வெளிநாட்டில் பிறந்த ஒருவர் இங்கிலாந்து அணியில் இடம்பிடிக்க வேண்டுமென்றால் இங்கிலாந்து அல்லது வேல்ஸில் 7 வருடங்கள் வசிக்க வேண்டும்.

    தற்போது இந்த விதியில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் மாற்றம் கொண்டுவந்துள்ளது. 7 வருடத்தை நான்கு வருடமாக மாற்றியுள்ளது. இந்த விதி அடுத்த ஆண்டும் ஜனவரி மாதம் 1-ந்தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது. இதனால் ஆர்செர் இங்கிலாந்து அணியில் இடம்பிடிக்க வாய்ப்புள்ளது.



    இதுகுறித்து ஆர்செர் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘இது நடக்கலாம் அல்லது நடக்காமல் இருக்கலாம். ஆனால், எனது குடும்பத்திற்கு முன் அறிமுகமாவதை நான் கட்டமாயம் விரும்புவேன்’’ என பதிவிட்டுள்ளார். இங்கிலாந்து ஆஷஸ், உலகக்கோப்பை, வெஸ்ட் இண்டீஸ் தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடர்களில் இங்கிலாந்து அணியில் ஆர்செர் இடம்பிடிக்கலாம்.
    புகழ்மிக்க லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்திய ஜாஃப்ரா ஆர்செரின் ஜெர்சியை கேட்டுள்ளது லார்ட்ஸ் மியூசியம். #T20Blast
    இங்கிலாந்தில் டி20 பிளாஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஆட்டமொன்றில் சசக்ஸ் - மிடில்செக்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த சசக்ஸ் அணி 19.4 ஓவரில் 168 ரன்கள் சேர்த்தது. பின்னர் 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மிடில்செக்ஸ் அணி களம் இறங்கியது. மோர்கன் அதிரடியால் மிடில்செக்ஸ் அணி வெற்றியை நோக்கி சென்றது.

    மிடில்செக்ஸ் அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டது. மோர்கன் களத்தில் இருந்தார். ஜாஃப்ரா ஆர்செர் கடைசி ஓவரை வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தில் மோர்கன் ஆட்டமிழந்தார். அவர் 56 பந்தில் 90 ரன்கள் குவித்தார்.



    அடுத்த பந்தில் ஜான் சிம்ப்சனையும், அதற்கடுத்த பந்தில் ஜேம்ஸ் புல்லரையும் அடுத்தடுத்து வெளியேற்றி ஹாட்ரிக் சாதனைப் படைத்தார். இவரது பந்து வீச்சால் சசக்ஸ் 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பாரம்பரியம் மிக்க லார்ட்ஸ் மைதானத்தில் மியூசியம் ஒன்று உள்ளது. இங்கு சாதனைப் புரிந்த வீரர்களை ஞாபகப்படுத்தும் வகையில் அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் பாதுகாத்து வைக்கப்படும்.

    அந்த வகையில் ஹாட்ரிக் சாதனைப் படைத்த ஆர்செரின் ஜெர்சியை மியூசியத்தில் வைப்பதற்காக அதிகாரிகள் அவரிடம் கேட்டுள்ளனர்.

    பார்படோஸில் பிறந்த ஆர்செர் அந்நாட்டில் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான இந்திய அணியில் இடம்பிடித்திருந்தார். தற்போது இங்கிலாந்தில் வசித்து வருகிறார். ஏழு வருடங்கள் இங்கிலாந்தில் வசித்தால், இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்காக விளையாடலாம். அந்த வகையில் 2022-ல் ஆர்செர் இங்கிலாந்து அணியில் இடம்பிடிக்க வாய்ப்புள்ளது.
    ×