என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Gautam Gambhir"
- நேற்று நடைபெற்ற கொல்கத்தா- ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில் சுனில் நரைன் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்
- இதன் மூலம் 16 வருடங்கள் கழித்து கொல்கத்தா அணிக்காக சதமடித்த வெளிநாட்டு வீரர் என்ற சாதனை அவர் படைத்தார்
ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் கொல்கத்தா- ராஜஸ்தான் அணிகள் மோதின. அதில், கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 223 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சுனில் நரைன் 109 ரன்கள் குவித்தார். ராஜஸ்தான் அணி தரப்பில் ஆவேஷ் கான், குல்தீப் சென் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை விழ்த்தினர்.
இதனை தொடர்ந்து விளையாடிய ராஜஸ்தன் அணி கடைசி பந்தில் வெற்றியை ருசித்தது. ராஜஸ்தான் அணியில் அதிகபட்சமாக 107 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்த போட்டியில் சதம் அடித்த சுனில் நரைன் பல சாதனைகளை படைத்துள்ளார். 16 வருடங்கள் கழித்து கொல்கத்தா அணிக்காக சதமடித்த வெளிநாட்டு வீரர் என்ற சாதனை அவர் படைத்தார். மொத்தமாக கொல்கத்தா அணிக்காக சதம் அடித்தவர்களில் மெக்கல்லம் (2008-ம் ஆண்டு) முதல் இடத்திலும் வெங்கடேஷ் ஐயர் (2023-ம் ஆண்டு) 2-வது இடத்திலும் உள்ளார். அவர்களுக்கு அடுத்தப்படியாக சுனில் நரைன் உள்ளார். மேலும் சதம் மற்றும் விக்கெட் எடுத்த ஐபிஎல் வீரர்கள் பட்டியலில் சுனில் நரைன் இடம் பிடித்துள்ளார்.
இதன் மூலம் பகுதி நேர பேட்ஸ்மேனான சுனில் நரேன் இந்த சீசனில் விராட் கோலி (361), ரியன் பாராக (284) ஆகியோருக்குப் பின் அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் 3வது இடம் பிடித்து ஆரஞ்சு தொப்பியை நெருங்கி வருகிறார்.
இந்நிலையில் தம்முடைய முதல் சதத்திற்கும் ஓப்பனிங்கில் சிறப்பாக விளையாடுவது குறித்தும் சுனில் நரேன் மனம் திறந்து பேசியுள்ளார். அதில், "ஐபிஎல் துவங்குவதற்கு முன்பாக நீங்கள் ஆரஞ்சு தொப்பியை வெல்வதற்கு போட்டியிடுவீர்கள் என்று யாராவது என்னிடம் கூறியிருந்தால் அதை நான் நகைச்சுவையாக எடுத்துக் கொண்டிருப்பேன். ஏனெனில் நான் நீண்ட காலமாக ஓப்பனிங்கில் விளையாடவில்லை. இருப்பினும் அணிக்கு மீண்டும் வந்துள்ள கௌதம் கம்பீர் எனக்கு தன்னம்பிக்கையை கொடுத்தார்.
இந்த தொடரில் துவக்க வீரராக விளையாடும் வாய்ப்பை கொடுப்பதற்கான உறுதியையும் கம்பீர் எனக்கு கொடுத்தார். எனவே 14 போட்டிகளிலும் என்னுடைய அணிக்காக முடிந்தளவுக்கு சிறந்த துவக்கத்தை நான் கொடுக்க விரும்புகிறேன். அணிக்கு நல்ல துவக்கத்தை கொடுப்பதே என்னுடைய வேலையாகும்" என்று கூறினார்.
- கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் லக்னோ வீரர் நவீன் உல் ஹக் மற்றும் பெங்களூரு வீரர் கோலி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது
- கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் ஆலோசகர் கவுதம் கம்பீர் மற்றும் கோலி இடையில் மோதல் வெடித்தது
கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மோதிய ஆட்டத்தில் லக்னோ வீரர் நவீன் உல்-ஹக் மற்றும் பெங்களூரு வீரர் கோலி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போட்டியில் பெங்களூரு வெற்றிபெற்ற பின் இரு அணி வீரர்களும் சந்தித்தபோது லக்னோ அணியின் ஆலோசகர் கவுதம் கம்பீர் மற்றும் கோலி இடையில் மோதல் வெடித்தது.
அதன் பிறகு விராட் கோலி ஆட்டத்தில் தடுமாறும் போதும், பெங்களூரு அணி தோல்வியை தழுவும் போதும் மாம்பழங்களை சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து 'இன்பமாய் இருக்குதய்யா' என சொல்வது போல பதிவிட்டு வந்தார் நவீன் உல்-ஹக். அதே நேரத்தில் அந்த சீசன் முழுவதும் அவர் களத்தில் ஃபீல்ட் செய்யும் போது 'கோலி.. கோலி..' என ரசிகர்கள் முழக்கமிட்டு வந்தனர்.
இதனையடுத்து கடந்தாண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியா இடையிலான போட்டியில் நவீன் உல் ஹக் பேட் செய்ய வந்த போது 'கோலி.. கோலி..' என ரசிகர்கள் முழக்கமிட்டனர். பின்னர் கோலி பேட் செய்தபோது அவருக்கு நவீன் உல் ஹக் பந்து வீசி இருந்தார். அப்போது இருவரும் ஒருவருக்கு ஒருவர் கை கொடுத்துக் கொண்டனர். அதோடு இருவரும் அணைத்துக்கொண்டனர்.
ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இடையிலான போட்டியின் போது விராட் கோலி மற்றும் கவுதம் கம்பீர் கட்டியணைத்து கொண்ட சம்பவம் இணையத்தில் பேசுபொருளாக மாறியது.
இந்த சம்பவங்கள் குறித்து பேசிய விராட் கோலி, "கம்பீர் பாய் மற்றும் நவீன் உல்ஹக் உடன் நான் சமரசத்தில் ஈடுபட்டது பலருக்கும் ஏமாற்றத்தை அளித்துவிட்டது. அவர்களுக்கு மசாலா தீர்ந்துவிட்டது என நினைக்கிறேன்" என்று கிண்டலாக தெரிவித்தார்.
- இன்று சென்னையில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது
- சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை இதுவரை விளையாடிய 2 போட்டிகளிலும் வெற்றி கண்டுள்ளது
ஐபிஎல் 2024 தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு சென்னையில் உள்ள சேப்பாக்கத்தில் 22வது லீக் போட்டி நடைபெற உள்ளது. அதில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை இதுவரை விளையாடிய 2 போட்டிகளிலும் வெற்றி கண்டுள்ளது. ஆனால் சேப்பாக்கத்துக்கு வெளியே விளையாடிய 2 போட்டிகளில் சென்னை தோல்வியை தழுவியுள்ளது.
அதே சமயம் கொல்கத்தா இதுவரை விளையாடிய 4 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. ஆகவே இன்றைக்கு சென்னை அணிக்கு கொல்கத்தா கடும் நெருக்கடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இப்போட்டி தொடர்பாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தனது சமூக வலைத்தளங்களில் கம்பீர் பேசிய வீடியோவை பகிர்ந்துள்ளது. அந்த வீடியோவில் சென்னை அணியின் முன்னாள் கேப்டன் டோனியை கம்பிர் புகழ்ந்துள்ளார்.
அந்த வீடியோவில், "போட்டியில் வெற்றிப் பெற வேண்டும் என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன். அதே சமயம் நண்பர்கள் மத்தியில் பரஸ்பர மரியாதை எல்லாம் இருக்கும். ஆனால் நான் கொல்கத்தா அணியின் கேப்டனாக இருந்தேன். தோனி சிஎஸ்கே அணியின் கேப்டனாக இருந்தார். எனவே அவரிடம் நீங்கள் கேட்டாலும் வெற்றி பெற விரும்புகிறேன் என்பதையே சொல்வார்.
எம்.எஸ். டோனி இந்தியாவுக்கு கிடைத்த மிகவும் வெற்றிகரமான கேப்டன். குறிப்பாக 3 ஐசிசி கோப்பைகளை வென்று அவர் தொட்டுள்ள உயரத்தை யாராலும் தொட முடியும் என்று நான் கருதவில்லை. எனவே ஐபிஎல் தொடரில் டோனிக்கு எதிராக விளையாடுவதில் மகிழ்ச்சியடைகிறேன்.
ஏனென்றால் டோனி நுணுக்கமான மைண்ட் செட்டை கொண்டவர் என்பது எனக்குத் தெரியும். ஸ்பின்னர்களை எப்படி கட்டுப்படுத்துவது? ஃபீல்டை எப்படி செட்டிங் செய்வது போன்றவற்றை நன்றாக தெரிந்த அவர் எப்போதும் வெற்றியை விட்டுக் கொடுக்க மாட்டார். 6, 7 ஆகிய இடங்களில் பேட்டிங் செய்யும் அவர் களத்தில் இருக்கும் வரை போட்டியை ஃபினிஷிங் செய்வார் என்பதை நாங்கள் அறிவோம். ஒருவேளை கடைசி ஓவரில் 20 ரன்கள் தேவைப்பட்டாலும் களத்தில் இருந்தால் வெற்றியை பெற்றுக் கொடுப்பார்.
அதே சமயம் சென்னை அணியில் இருக்கும் ஒவ்வொரு வீரரையும் அட்டாக் செய்வதற்கான பவுலிங் திட்டம் என்னிடம் இருப்பதை நான் அறிவேன். களத்தில் ஆக்ரோஷமாக இல்லாவிட்டாலும் சாமர்த்தியமாக செயல்படக்கூடிய டோனியை விட நீங்கள் சிறந்தவராக இருக்க முயற்சி செய்ய வேண்டும். அவர் எப்போதும் விட்டுக் கொடுக்க மாட்டார். கடைசி பந்தை வீசி முடிக்கும் வரை சென்னையை நீங்கள் வெல்ல முடியாது என்று உங்களுக்கு தெரியும்" என்று கம்பீர் தெரிவித்துள்ளார்.
- கம்பீர் தலைமையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2012 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் 2 முறை கோப்பை வென்றுள்ளது
- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முன்னாள் கேப்டனாக இருந்த கம்பீர் இந்த சீசனில் அந்த அணியின் ஆலோசகராக உள்ளார்
ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முன்னாள் கேப்டனாக இருந்த கம்பீர் இந்த சீசனில் அந்த அணியின் ஆலோசகராக உள்ளார்.
கம்பீர் தலைமையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2012 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் 2 முறை கோப்பை வென்றுள்ளது.
கடந்த 2 ஐ.பி.எல். சீசன்களில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் ஆலோசகராக இருந்து கம்பீர் இந்த சீசனில் கொல்கத்தா அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், ரசிகர் ஒருவருடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை கம்பீர் சமூக எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்த பதிவில், "எங்கள் ரசிகர்களின் அன்பினால்தான் நாங்கள் இங்கே இருக்கிறோம்!" என்று பதிவிட்டுள்ளார்
கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றதும் பாரதிய ஜனதாவில் கம்பீர் இணைந்தார். பாஜகவும் உடனடியாக அவருக்கு 2019 மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்தது. எம்.பி ஆக இருந்த கம்பீர் இந்தாண்டு ஐ.பி.எல்-லில் கொல்கத்தா அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் கிரிக்கெட்டில் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக அண்மையில் அரசியலில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்த சம்பவம் இணையத்தில் பேசுபொருளாக மாறி இருக்கிறது.
- சுனில் கவாஸ்கர் டைமிங்கில் கொடுத்த ரியாக்ஷன் வைரல்.
ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இடையிலான போட்டியின் போது விராட் கோலி மற்றும் கவுதம் கம்பீர் கட்டியணைத்து கொண்ட சம்பவம் மைதானத்தில் மயான அமைதியை ஏற்படுத்தியது. மேலும் இந்த சம்பவம் இணையத்தில் பேசுபொருளாக மாறி இருக்கிறது.
போட்டியின் போது களத்திற்கு வந்த கம்பீர் கோலியை கட்டியணைத்தார். இது தொடர்பான வீடியோவை தனியார் நிறுவனம் மீண்டும் ஒளிபரப்பியது. அப்போது வீடியோவை பார்த்த சுனில் கவாஸ்கர் டைமிங்கில் கொடுத்த ரியாக்ஷன் வைரலாகி வருகிறது.
Things we love to see ?
— IndianPremierLeague (@IPL) March 29, 2024
VK ? GG
Follow the Match ▶️https://t.co/CJLmcs7aNa#TATAIPL | #RCBvKKR pic.twitter.com/jAOCLDslsZ
இந்த வீடியோவை பார்த்த ரவி சாஸ்திரி, "கோலி, கம்பீர் கட்டியணைத்துக் கொண்டது கே.கே.ஆர். அணிக்கு ஃபேர்பிளே (Fairplay) விருது கிடைக்க உதவியாக இருக்கும்," என்று தெரிவித்தார். இதை கேட்ட சுனில் கவாஸ்கர், "ஃபேர்பிளே மட்டுமல்ல ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்," என்று தெரிவித்தார்.
விராட் கோலி மற்றும் கவுதம் கம்பீர் கட்டியணைத்துக் கொண்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
- இரு அணிகளும் பலமுறை களம் கண்டுள்ளன.
- கவுதம் கம்பீரின் வீடியோவை பகிர்ந்து இருக்கிறது.
ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. ஐ.பி.எல். தொடரில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்த இரு அணிகளும் மோதின. அதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்றது. இதன் பிறகு, இரு அணிகளும் பலமுறை களம் கண்டுள்ளன.
அந்த வகையில், இன்று நடைபெறும் போட்டிக்கு முன்பு ஐ.பி.எல். போட்டிகளை தொலைகாட்சியில் ஒளிபரப்பும் தனியார் சேனல் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் அக்கவுண்டில் கவுதம் கம்பீரின் வீடியோ ஒன்றை பகிர்ந்து இருக்கிறது. அந்த வீடியோவில் ஆர்.சி.பி. குறித்து கவுதம் கம்பீர் தெரிவித்த கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன.
"ஒவ்வொரு முறையும் நான் வீழ்த்த விரும்பும் ஒரே அணி, கனவிலும் நான் கட்டாயம் ஜெயிக்க விரும்பும் அணி என்றால் அது ஆர்.சி.பி. தான். அதிகளவு முக்கிய வீரர்கள் அடங்கிய இரண்டாவது அணி, அதிக பகட்டு கொண்ட அணி- க்ரிஸ் கெயில், விராட் கோலி, ஏ.பி. டி வில்லியர்ஸ் போன்ற வீரர்களை கொண்ட அணி."
"உண்மையில் எதையும் வென்றிடாத அணி, எனினும் எல்லாவற்றிலும் வெற்றி பெற்றதாக நினைக்கும் அணி. அத்தகைய மனநிலை. அதை மட்டும்தான் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. கொல்கத்தா அணி இதுவரை பெற்ற மூன்று தரமான வெற்றிகள் அனைத்தும் ஆர்.சி.பி. அணிக்கு எதிராகவே அமைந்துள்ளது. எனது கிரிக்கெட் வாழ்க்கையில் நான் செய்ய விரும்பும் ஒரே விஷயம் களத்திற்கு சென்று ஆர்.சி.பி.யை வீழ்த்த வேண்டும் என்பது மட்டும் தான்," என கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
.@GautamGambhir thinks @RCBTweets have massively underachieved in the past despite having @imVkohli, @henrygayle and @ABdeVilliers17 ?Gambhir dreams of getting back on the field and beat Kohli & team yet again! ?Don't miss Gambhir's Kolkata take on Virat's Bangalore! ?… pic.twitter.com/Vvx6YNmqNS
— Star Sports (@StarSportsIndia) March 29, 2024
- கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதும் பாஜகவில் இணைந்தார் கவுதம் கம்பீர்
- கவுதம் கம்பீரை தொடர்ந்து மேலும் ஒரு பாஜக எம்.பி. அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
அரசியலில் இருந்து விலகுவதாக டெல்லி கிழக்கு தொகுதி பாஜக எம்.பி. கவுதம் கம்பீர் தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், "வரவிருக்கும் கிரிக்கெட் பொறுப்புகளில் கவனம் செலுத்துவதற்காக, எனது அரசியல் கடமைகளில் இருந்து என்னை விடுவிக்குமாறு பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டாவிடம் கோரிக்கை விடுத்துள்ளேன். மக்களுக்கு சேவை செய்ய எனக்கு வாய்ப்பளித்த பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்" என அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ஐ.பி.எல்-லில் கொல்கத்தா அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த பணிகளில் கவனம் செலுத்துவதற்காக இம்முடிவை எடுத்துள்ளார் என கூறப்படுகிறது.
கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதும் பாஜகவில் இணைந்தார் கவுதம் கம்பீர். பாஜகவும் உடனடியாக அவருக்கு 2019 மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பாஜக எம்.பி கவுதம் கம்பீரை தொடர்ந்து மேலும் ஒரு பாஜக எம்.பி. அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஜார்க்கண்ட் மாநில பாஜக எம்.பி. ஜெயந்த் சின்ஹா தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், "பருவ நிலை மாற்றம் தொடர்பாக பணியாற்றவுள்ளதால், எனது அரசியல் கடமைகளில் இருந்து என்னை விடுவிக்குமாறு பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டாவிடம் கோரிக்கை விடுத்துள்ளேன். ஆனால் நிச்சயமாக, பொருளாதாரம் மற்றும் ஆட்சி விவகாரங்களில் கட்சியுடன் தொடர்ந்து பணியாற்றுவேன்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
I have requested Hon'ble Party President Shri @JPNadda ji to relieve me of my direct electoral duties so that I can focus my efforts on combating global climate change in Bharat and around the world. Of course, I will continue to work with the party on economic and governance…
— Jayant Sinha (@jayantsinha) March 2, 2024
- கொல்கத்தா அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றதும் பாரதிய ஜனதாவில் இணைந்தார்.
புதுடெல்லி:
டெல்லி கிழக்கு மாநில பா.ஜ.க. எம்.பி. கவுதம் கம்பீர் இன்று தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
"வரவிருக்கும் கிரிக்கெட் பொறுப்புகளில் கவனம் செலுத்துவதற்காக, எனது அரசியல் கடமைகளில் இருந்து என்னை விடுவிக்குமாறு பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டாவிடம் கோரிக்கை விடுத்துள்ளேன்.
மேலும், மக்களுக்கு சேவை செய்ய எனக்கு வாய்ப்பளித்த பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்" என கூறியுள்ளார்.
முன்னதாக, ஐ.பி.எல்-லில் கொல்கத்தா அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த பணிகளில் கவனம் செலுத்துவதற்காக இம்முடிவை எடுத்துள்ளார் என கூறப்படுகிறது.
கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றதும் பாரதிய ஜனதாவில் இணைந்தார். பாஜகவும் உடனடியாக அவருக்கு 2019 மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.
BJP leader Gautam Gambhir tweets, "I have requested BJP national president JP Nadda to relieve me of my political duties so that I can focus on my upcoming cricket commitments. I sincerely thank PM Modi and Union Home Minister Amit Shah for giving me the opportunity to serve the… pic.twitter.com/vUeF6idlRQ
— ANI (@ANI) March 2, 2024
- தென் ஆப்பிரிக்கா - இந்தியா அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் வரும் 26-ம் தேதி தொடங்க உள்ளது.
- ரவீந்திர ஜடேஜா அல்லது அஷ்வின் ஆகிய இருவரில் ஒருவர் விளையாட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மும்பை:
தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. இதில் டி20 தொடர் 1-1 என சமனில் முடிந்தது. ஒருநாள் தொடரை 2-1 என இந்திய அணி கைப்பற்றியது.
இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் 26-ம் தேதி தொடங்க உள்ளது. இந்நிலையில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனை இந்திய முன்னாள் வீரரான கவுதம் கம்பீர் வெளியிட்டுள்ளார்.
இதில் அவர் தொடக்க வீரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரோகித் சர்மாவை தேர்வு செய்துள்ளார். அதற்கு அடுத்ததாக 3 முதல் 6 வரை சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், கே.எல்.ராகுல் ஆகியோரை தேர்வு செய்துள்ளார்.
இதையடுத்து ரவீந்திர ஜடேஜா அல்லது அஷ்வின் ஆகிய இருவரில் ஒருவர் விளையாட வேண்டும் என தெரிவித்துள்ளார். இதையடுத்து ஷர்துல் தாக்கூர், பிரசித் கிருஷ்ணா, ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோரை கம்பீர் தேர்வு செய்துள்ளார்.
கவுதம் கம்பீர் தேர்வு செய்துள்ள இந்தியாவின் பிளேயிங் லெவன்:-
ரோகித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா / ரவிச்சந்திரன் அஷ்வின், ஷர்துல் தாக்கூர், ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா.
- கடினமாக உழைத்து வந்த நீங்கள் உங்களுடைய ஒவ்வொரு இன்னிங்சையும் முதல் இன்னிங்ஸ் போல் விளையாடுவீர்கள்.
- அவர் எந்த வெற்றியைப் பெற்றாலும் அதற்கு அவர் தகுதியானவர் என்று நான் கருதுகிறேன்.
புதுடெல்லி:
இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.
அதன்பின் இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டியில் டிஎல்எஸ் முறையில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் இளம் வீரர் ரிங்கு சிங் அதிரடியாக விளையாடி 68 ரன்கள் அடித்து இந்தியா 180 ரன்கள் குவிக்க உதவினார்.
இந்நிலையில் ரிங்கு சிங் சிறப்பாக செயல்படும்போது ஒட்டுமொத்த இந்திய தேசமும் மகிழ்ச்சியடைகிறது என்று கவுதம் கம்பீர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
ரிங்கு சிங் சிறப்பாக செயல்படும்போது ஒட்டுமொத்த இந்திய தேசமும் மகிழ்ச்சியடைகிறது. நீங்கள் முதல் தர கிரிக்கெட்டில் ஒவ்வொரு வாய்ப்பிலும் சிறப்பாக விளையாடி கடினமாக உழைத்து இந்தியாவுக்காக விளையாட வரும்போது உங்களின் ஒவ்வொரு இன்னிங்சுக்கும் தனி மதிப்பு இருக்கும்.
அப்படி கடினமாக உழைத்து வந்த நீங்கள் உங்களுடைய ஒவ்வொரு இன்னிங்சையும் முதல் இன்னிங்ஸ் போல் விளையாடுவீர்கள். அந்த வகையில் விளையாடும் ரிங்கு சிங் எந்த வெற்றியைப் பெற்றாலும் அதற்கு அவர் தகுதியானவர் என்று நான் கருதுகிறேன். ஏனெனில் அவர் எந்த வாய்ப்பையும் எளிதாக பெறவில்லை.
என்று கம்பீர் கூறினார்.
- எலிமினேட்டர் சுற்றில் இந்தியா கேப்பிட்டல்ஸ் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின.
- இதில் இந்தியா கேப்பிட்டல்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
லெஜண்ட் லீக் கிரிக்கெட் தொடர் நவம்பர் 18-ந் தேதி தொடங்கி இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா கேப்பிட்டல்ஸ், மனிபால் டைகர், குஜராத் ஜெயண்ட்ஸ், அர்பன்ரைசர்ஸ் ஹைதராபாத், சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ், பில்வார கிங்ஸ் என்ற 6 அணிகள் பங்கேற்றது. இந்த தொடர் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது.
இந்நிலையில் நேற்று எலிமினேட்டர் சுற்று நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா கேப்பிட்டல்ஸ் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் இந்தியா கேப்பிட்டல்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியின் போது கவுதம் கம்பீர் தன்னை சூதாட்டவர் என்று கூறியதாக ஸ்ரீ சாந்த் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது.
இது குறித்து ஸ்ரீசாந்த் பேசியதாவது:-
போட்டி நடந்து கொண்டிருக்கும் போது கம்பீர் என்னை கூப்பிட்டு கொண்டே இருந்தார். நான் ஒரு கெட்ட வார்த்தை கூட உபயோகிக்கவில்லை. என்ன சொல்கிறாய்? என்ன சொல்கிறாய்? என்று சொல்லிக்கொண்டே இருந்தேன். சொல்லப்போனால், அவர் என்னை சூதாட்ட வீரர் சூதாட்ட வீரர் என்று சொல்லிக்கொண்டே இருந்ததால், கிண்டலாகச் சிரித்துக்கொண்டே இருந்தேன்.
போட்டி நடந்து கொண்டிருந்த போது அவர் பயன்படுத்திய வார்த்தை இது. உண்மையில், நடுவர்கள் அவரைக் கட்டுப்படுத்த முயன்றபோது அவர் அதே வார்த்தையை பயன்படுத்தினார். உடனே நான் அந்த இடத்தை விட்டு நகர்ந்தேன். ஆனால் அவர் அதையே திரும்பத் திரும்பச் சொன்னார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கடந்த 2022-ம் ஆண்டு லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி அறிமுகமானது.
- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடிய கவுதம் கம்பீர் 2 முறை சாம்பியன் பட்டத்தை பெற்றுக் கொடுத்தார்.
கடந்த 2008-ம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. பிசிசிஐ மூலமாக நடத்தப்படும் இந்த தொடரானது ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. இதில், கடந்த 2022-ம் ஆண்டு லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி அறிமுகமானது. இந்த அணியின் கேப்டனாக கேஎல் ராகுல் செயல்பட்டு வந்தார். அணியில் ஆலோசகராக கவுதம் கம்பீர் இருந்தார்.
இந்த நிலையில், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியிலிருந்து கம்பீர் விலகினார். அவர் கேப்டனாக இருந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கே ஆலோசராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடிய கவுதம் கம்பீர் 2 முறை சாம்பியன் பட்டத்தை பெற்றுக் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
லக்னோ அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லங்கர், பந்து வீச்சு பயிற்சியாளராக மோர்னே மோர்கல், பீல்டிங் பயிற்சியாளர் ஜாண்டி ரோட்ஸ் மற்றும் ஸ்ட்ரேடெஜி ஆலோசகராக பிசிசிஐயின் முன்னாள் தலைமை தேர்வாளர் எம்.எஸ்.கே பிரசாத் நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து தான் கம்பீர் அந்த அணியில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்