search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "500 புதிய பஸ்கள்"

    ஓட்டை உடைசலான பேருந்துகளுக்கு பதிலாக சென்னையில் 500 புதிய பஸ்கள் விரைவில் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். #TNBus #MRVijayabaskar
    சென்னை:

    சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் 500-க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் 3200 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தினமும் சுமார் 40 லட்சம் பேர் பயணம் செய்கிறார்கள். பஸ் கட்டண உயர்வுக்கு பிறகு மாநகர பஸ்களில் கூட்டம் குறைந்தது.

    ஓட்டை உடைசலான மிகவும் மோசமான நிலையில் பேருந்துகள் இயக்கப்படுவதால் மக்கள் ஏற தயங்குகிறார்கள். பெரும்பாலான பஸ்களில் படிக்கட்டு கதவுகள் இல்லாமலும், இருக்கைகள் உடைந்தும் காணப்படுகின்றன.

    ஒரு பஸ்சின் ஆயுட்காலம் 5 வருடங்கள் மட்டும்தான். ஆனால் பயன்படுத்த தகுதியற்ற பஸ்கள் இயக்கப்படுவதால் அடிக்கடி “பிரேக் டவுன்” ஆகி ஆங்காங்கே வழியில் நின்று விடுகின்றன. பஸ்களில் கூட்டம் குறைந்து வருவதால் புதிய பஸ்கள் விட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அடுத்த வாரத்திற்குள் புதிய பஸ்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.

    இந்த நிலையில் விபத்து ஏற்படாமல் வாகனம் ஓட்டிய டிரைவர் மற்றும் கண்டக்டர்களுக்கு முதன்முதலாக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பரிசளித்து ஊக்கப்படுத்தினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சென்னையில் விரைவில் மின்சார பஸ்கள் இயக்கப்பட உள்ளது. முற்றிலும் மாசு ஏற்படாத சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் இந்த பஸ் இயக்கப்படுகிறது.


    போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகள் கண்டறியப்பட்டு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 80 மின்சார பஸ்கள் இயக்கப்படும்.

    அரசு போக்குவரத்து கழகத்திற்கு இன்னும் ஒரு வாரத்தில் புதிதாக 500 பஸ்கள் வர இருக்கின்றன. சென்னை மாநகரத்திற்கும் புதிய பஸ்கள் விடப்பட உள்ளது.

    8 வருடங்களுக்கு மேலாக ஓடும் பழைய பஸ்கள் அடையாளம் காணப்பட்டு அவற்றிற்கு பதிலாக புதிய பஸ்கள் விடப்படும்.

    செங்கல்பட்டு-திருச்சி நெடுஞ்சாலையில் ரூ.25 கோடியில் கண்காணிப்பு கேமிராக்கள் நிறுவப்படுகின்றன. அதிவேகமாக பயணம், சாலை விதிமுறைகளை மீறும் வாகனங்கள் என கண்டறியப்பட்டு அபராதம் விதிக்கும் முறை வெளிநாடுகளில் உள்ளது போல செயல்படுத்தப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.  #TNBus #MRVijayabaskar
    பெருங்களத்தூரில் 500 ரூபாய் கள்ள நோட்டுகளை மாற்ற முயன்றவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ஸ்கேன் எந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது.
    தாம்பரம்:

    கோவை பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 28). தாம்பரத்தை அடுத்த முடிச்சூர் வரதராஜபுரம் பகுதியில் 3 மாதங்களாக தங்கி பைனான்ஸ் தொழில் செய்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பழைய பெருங்களத்தூர் பகுதியில் உள்ள ஒரு கடையில் பொருட்களை வாங்கினார். பின்னர் ரூ.5 ஆயிரத்துக்கு 500 ரூபாய் நோட்டுகளை கொடுத்தார்.

    அப்போது அதில் சில நோட்டுகள் வித்தியாசமாக இருந்ததால் சந்தேகமடைந்த கடை ஊழியர்கள் இதுகுறித்து பீர்க்கன்காரணை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் அங்கு விரைந்து சென்று பிரகாஷை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.

    விசாரணையில் பிரகாஷ் வீட்டில், 500 ரூபாய் நோட்டை ஸ்கேன் செய்து கலர் ஜெராக்ஸ் எடுத்து கடைகளில் மாற்றியும், பைனான்சுக்கு பணம் கேட்பவர்களுக்கு அந்த கள்ள நோட்டுகளை கொடுத்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர் தங்கியிருந்த வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர்.

    அங்கு கள்ள நோட்டுகளை தயாரிக்க பயன்படுத்திய கம்ப்யூட்டர், ஸ்கேன் எந்திரம், பிரிண்டர் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதையடுத்து பிரகாசை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 500 ரூபாய் கள்ள நோட்டுகள் 16-ஐ பறிமுதல் செய்தனர். 
    தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்களில் பூஜை, அன்னதானம் உள்ளிட்டவைகளுக்கு ஆன்லைன் மூலம் முன்பதிவுசெய்வதில் ரூ.500 கோடி முறைகேடு நடந்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில் முக்கியமான கோவில்கள் பட்டியலில் சுமார் 4 ஆயிரம் கோவில்கள் இடம்பெற்றுள்ளன. இந்த கோவில்களை இந்து சமய அறநிலையத்துறை நிர்வகித்து வருகிறது. கடந்த தி.மு.க. ஆட்சியில், ஒவ்வொரு கோவிலுக்கும் தனித்தனியாக ஆன்லைன் மூலம் பூஜை, அன்னதானம் உள்ளிட்டவைகளுக்கு பணம் கட்டி முன்பதிவு செய்யும் முறை அறிமுகப்படுத்தப் பட்டது.

    அதாவது, இ-பூஜா, இ-அன்னதானம், இ-ரூம் என்று பல்வேறு வசதிகள் கொண்டுவரப்பட்டது. இந்த பணிகள் அனைத்தும் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது. சுமார் 10 நிறுவனங்கள் இந்த பணிகளை ஒப்பந்தம் மூலம் எடுத்து நடத்தின. ஆன்லைன் மூலம் வசூலாகும் பணத்தையும் குறிப்பிட்ட காலத்திற்குள் இந்து சமய அறநிலையத்துறைக்கு செலுத்தி வந்தன.

    இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த நிறுவனங்களின் செயல்பாடுகள் குறைந்ததாக தெரிகிறது. அதாவது, வசூலாகும் பணத்தை அரசுக்கு முறையாக செலுத்தவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது. கடந்த நான்கைந்து மாதங்களாக முறையாக கணக்குகளையும் தாக்கல் செய்யவில்லை என்று கூறப்படுகிறது.

    இதுகுறித்து, இந்து சமய அறநிலையத் துறை கமிஷனர் ஜெயா விசாரணை மேற்கொண்டார். இதற்கிடையே, தனியார் நிறுவனங்களின் ஒப்பந்தமும் கடந்த ஜூன் மாதம் முடிவடைந்தது. இதனால், விசாரணையும் துரிதப்படுத்தப்பட்டது. இந்த விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.



    அதாவது, பழனி கோவிலில் ஆன்லைன் மூலம் பணம் வசூல் செய்யும் ‘ஸ்கை’ என்ற தனியார் நிறுவனம் ரூ.25 கோடி வரை அறநிலையத் துறைக்கு பணம் செலுத்தவில்லை என்பது தெரியவந்தது. இதேபோல், திருத்தணி உள்ளிட்ட பல்வேறு முக்கிய கோவில்களில் இருந்தும் கடந்த 4 ஆண்டுகளாக கோடிக்கணக்கான பணம் அரசுக்கு வழங்கப்படாமல் இருப்பது தெரியவந்தது.

    இந்த முறைகேடுகளில் அறநிலையத்துறை ஊழியர்களும் ஈடுபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது, தனியார் நிறுவன அதிகாரிகளிடமும், அறநிலையத் துறை ஊழியர்களிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. சுமார் ரூ.500 கோடி வரை முறைகேடு நடந்திருப்பது வெளிச்சத்துக்கு வரும் என்று தெரிகிறது.

    இதனால், அறநிலையத்துறை அதிகாரிகள் பலர் அச்சத்தில் உள்ளனர். #tamilnews
    சர்க்கரை ஆலைகளுக்கு புத்துயிரூட்ட ரூ. 8,500 கோடியிலான திட்டத்துக்கும், கிராமப்புற அஞ்சல் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கவும் மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.
    புதுடெல்லி:

    சர்க்கரை ஆலைகளுக்கு புத்துயிரூட்ட ரூ. 8,500 கோடியிலான திட்டத்துக்கும், கிராமப்புற அஞ்சல் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கவும் மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.

    நாடு முழுவதும் சர்க்கரை ஆலைகள் நெருக்கடியில் உள்ளன. சர்க்கரைக்கான தேவையை விட உற்பத்தி அளவு அதிகரித்து உள்ளதால், சர்க்கரை ஆலைகள் கிலோவுக்கு ரூ.8 முதல் ரூ.9 வரை இழப்பை சந்திக்கின்றன.

    சர்க்கரை விலையில் ஏற்பட்டு உள்ள சரிவு காரணமாக கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் ரூ.20 ஆயிரம் கோடிக்கு அதிகமாக பாக்கி வைத்து உள்ளன.

    இந்த பிரச்சினைகளில் இருந்து சர்க்கரை ஆலைகள் மீண்டு வருகிற வகையில் சர்க்கரை இறக்குமதி மீதான வரியை 100 சதவீத அளவுக்கு மத்திய அரசு உயர்த்தி உள்ளது. ஏற்றுமதி வரியை ரத்து செய்தது. சர்க்கரை ஆலைகள் 20 லட்சம் டன் சர்க்கரையை ஏற்றுமதி செய்யுமாறு மத்திய அரசு கூறி உள்ளது.

    இந்தநிலையில், சர்க்கரை ஆலைகளுக்கு புத்துயிரூட்டி, மறுவாழ்வு வழங்குகிற வகையில் ரூ.8 ஆயிரத்து 500 கோடி மதிப்பிலான திட்டத்தை மத்திய அரசு தீட்டி உள்ளது.

    இதற்கான ஒப்புதலை பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நேற்று கூடிய மத்திய மந்திரிசபை வழங்கியது. இந்த திட்டத்தின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

    * சர்க்கரை ஆலைகளில் எத்தனால் உற்பத்தி வசதி கட்டமைப்புகளை உருவாக்குவதற்கு குறைந்த வட்டியில் கடன் வழங்க ரூ.4 ஆயிரத்து 500 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

    * சர்க்கரை ஆலைகளில் புதிதாக எத்தனால் உற்பத்தி வசதியை ஏற்படுத்தவும், இருக்கிற வசதியை விரிவுபடுத்தவும் வழங்குகிற கடனுக்கு வட்டி தள்ளுபடி செய்யும் வகைக்கு ரூ.1,300 கோடி ஒதுக்கப்படுகிறது.

    * கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் வழங்க வேண்டிய பாக்கி தொகையை செலுத்த உதவும் வகையில் ஒரு நடவடிக்கையை மேற்கொள்ளவும் மத்திய மந்திரிசபை தீர்மானித்தது. இதன்படி சர்க்கரை உற்பத்தி அடிப்படையில் விவசாயிகளுக்கு நேரடியாக வழங்குவதற்கு ரூ.1,540 கோடி ஒதுக்கப்படும்.

    * சர்க்கரை கையிருப்பை அதிகளவில் வைத்திருப்பதற்காக ரூ.1,200 கோடி வழங்கப்படும்.

    சர்க்கரையில் இருந்து எடுக்கப்படுகிற எத்தனாலை பெட்ரோலுடன் கலந்து வாகனங்களை இயக்க முடியும். எத்தனால் கலந்தால் பெட்ரோல் விலை குறைய வாய்ப்பு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

    அஞ்சல் துறையில் பணியாற்றி வருகிற ஜி.டி.எஸ். என்று அழைக்கப்படுகிற கிராமப்புற தபால் அலுவலக ஊழியர்களின் சம்பளம், அலவன்சுகள் உயர்த்தப்படுகின்றன. கிராமப்புற தபால் அலுவலக ஊழியர்கள் கிளை அஞ்சல் அதிகாரி, உதவி கிளை அஞ்சல் அதிகாரி என்று இரு பிரிவின்கீழ் கொண்டு வரப்படுவார்கள்.

    இவர்களது சம்பளம், அலவன்ஸ் உயர்த்துவதால் மத்திய அரசுக்கு நடப்பு நிதி ஆண்டில் ரூ.1,257 கோடியே 75 லட்சம் செலவு பிடிக்கும். இதன்மூலம் 3 லட்சத்து 7 ஆயிரம் பேர் பலன் அடைவர்.

    நலிவு அடைந்த, நஷ்டத்தில் இயங்குகிற அரசு நிறுவனங்களை குறித்த காலத்தில் மூடுவதற்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.

    விண்வெளித்துறையில் பி.எஸ்.எல்.வி. ராக்கெட் திட்டங்களை தொடர்வதற்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் வழங்கியது. இதற்கு ரூ.6 ஆயிரத்து 131 கோடி நிதி ஒதுக்கீடு தேவைப்படும்.

    நாடு முழுவதும் சூரிய ஒளி மின்சாரத்தில் இயங்குகிற 3 லட்சம் தெரு விளக்குகளை அமைக்க பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய மந்திரிகள் குழு ஒப்புதல் அளித்தது. 
    கேரள மாநிலம் கொல்லம் அருகே காற்றில் பறந்த வந்த 500 ரூபாய் நோட்டுகளை போட்டி போட்டு பொதுமக்கள் எடுத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    திருவனந்தபுரம், ஜூன். 6-

    கேரள மாநிலம் கொல்லம் அருகே சாத்தனூர் பாரிப் பள்ளி என்ற இடம் உள்ளது. சம்பவத்தன்று மாலை இந்த வழியாக ஏராளமான பொது மக்கள் இருசக்கர வாகனங் கள் மற்றும் பஸ்கள் மூலம் பயணம் செய்து கொண்டிருந் தனர்.

    அப்போது திடீரென்று அந்த பகுதியில் காற்றில் பேப்பர் துண்டுகள் பறந்து வந்தன. இவை சாலைகளில் விழுந்தன. அந்த வழியாக நடந்து சென்ற சிலர் அதை எடுத்து பார்த்தபோது, அவர் களுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.

    அந்த பேப்பர் துண்டுகள் அனைத்தும் 500 ரூபாய் நோட்டுகளாகும். அதுவும் தற்போது புழக்கத்தில் உள்ள புதிய 500 ரூபாய் நோட்டுக்கள் என்பது தெரிய வந்தது.

    இதைப்பார்த்ததும் பொது மக்கள் அங்கு திரண்டனர். அவர்கள் போட்டி போட்டுக் கொண்டு சாலையில் பறந்த ரூபாய் நோட்டுக்களை எடுக்கத் தொடங்கினார்கள். இருசக்கர வாகனங்களில் சென்றவர்களும் வாகனங் களை ஆங்காங்கே நடுவழி யில் நிறுத்தி விட்டு ரூபாய் நோட்டுக்களை சேகரித்தனர்.

    இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டது. காற்றில் ரூபாய் நோட்டுக்கள் பறந்து வந்தது பற்றிய தகவல் கிடைத்ததும், போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் பொது மக்களை கட்டுப்படுத்தி போக்குவரத்தை ஒழுங்குப் படுத்தும் முயற்சியில் ஈடுபட் டனர்.

    மேலும் ரூபாய் நோட்டுக் களை சேகரித்தவர்களிடம் இருந்து அவற்றை வாங்கி போலீசார் அவை கள்ள நோட்டுக்களாக இருக்குமா? என்று சோதனை செய்து பார்த்தனர். அப்போது அவை நல்ல நோட்டுக்கள் என்பது தெரிய வந்தது. போலீசாரை பார்த்ததும் ரூபாய் நோட்டுக்களை எடுத் தவர்கள் அங்கிருந்து நைசாக நழுவிச்சென்று விட்டனர்.

    வாகனத்தில் யாராவது ரூபாய் நோட்டுக்களை எடுத்துச் சென்றபோது கவனக்குறைவு காரணமாக அவை காற்றில் பறந்திருக்க லாம் என்று கருதப்படுகிறது. சாலையில் ரூபாய் நோட் டுக்கள் பறந்தது எப்படி? யார் ரூபாய் நோட்டுக்களை பறக்க விட்டது என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுவை பெரிய மார்க்கெட் குடோன்களில் கார்ப்பைட் கல் மூலம் பழுக்க வைத்த 500 கிலோ பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    புதுச்சேரி:

    புதுவை அரசின் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் இன்று காலை பெரிய மார்க்கெட்டில் உள்ள பழக்கடைகளில் திடீர் ஆய்வு செய்தனர்.

    உணவு பாதுகாப்பு துறை அதிகாரி தன்ராஜ் தலைமையில் பழக்கடைகளுக்கு சொந்தமான குடோன்களில் வேதி பொருட்கள் (கார்ப்பைட் கல்) மூலம் பழங்கள் பழுக்க வைக்கப்பட்டுள்ளதா என ஆய்வு மேற்கொண்டனர்.

    இதில் பழங்கள் கார்ப்பைட் கல் மூலம் பழுக்க வைக்கப்பட்டிருந்தை கண்டு பிடித்தனர். இதையடுத்து 500 கிலோ பழங்களை பறிமுதல் செய்தனர். முன்னதாக நேற்று புகையிலை தடுப்பு தினத்தை முன்னிட்டு ரங்கப்பிள்ளை வீதி உணவு கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.

    இந்த சோதனையின் போது கடைகளில் குட்கா, பான்பராக் ஆகியவை பதுக்கி வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    வங்கி ஏடிஎம்-ல் அரைகுறையாக அச்சிடப்பட்ட 500 ரூபாய் நோட்டு வந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Newrupees

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகில் உள்ள பாலப்பட்டியில் இந்தியன் வங்கி ஏ.டி.எம்.-ல் அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் இன்று காலையில் தனது ஏ.டி.எம். கார்டு மூலம் ரூ.5 ஆயிரம் பணம் எடுத்தார்.

    அப்போது 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் 2 மற்றும் 500 ரூபாய் நோட்டு 1 மற்றும் 100 ரூபாய் நோட்டுகள் 5 என மொத்தம் ரூ.5 ஆயிரம் ஏ.டி.எம்.-ல் இருந்து வந்தது. இதில் 500 ரூபாய் நோட்டு மட்டும் ஒரு பக்கத்தில் ஓரமாக அச்சடிக்கப்படாமல் இருந்தது. இதைக்கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.

    சரியாக அச்சிடப்படாமல் இருந்ததால் அவர் கள்ள நோட்டாக இருக்குமோ? என சந்தேகம் அடைந்தார். இந்த பணத்தை அங்கிருந்த பொது மக்களிடம் காண்பித்து சம்பந்தப்பட்ட வங்கி நிர்வாகம் பணத்தை மாற்றி தருமா? என கேட்டார். அதற்கு அவர்கள், பணத்தை நேராக வங்கிக்கு கொண்டு சென்று காண்பியுங்கள். அவர்கள் பணத்தை மாற்றி தருவார்கள் என ஆலோசனை கூறினார்கள்.

    இதையடுத்து அவர், 500 ரூபாய் நோட்டை எடுத்துக்கொண்டு நேராக சம்பந்தப்பட்ட வங்கிக்கு சென்றார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    வாடிக்கையாளருக்கு சிரமத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த சம்பவம் அமைந்து உள்ளதால் சரியாக அச்சடிக்கப்படாத 500 ரூபாய் நோட்டை கவனிக்காமல் வங்கி ஏ.டி.எம். எந்திரத்தில் வைத்தவர் யார்? என்பதை கண்டுபிடித்து விசாரித்து அவர் மீது தக்க நடவடிக்கை வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். #Newrupees 

    திருவாரூர் வங்கியில் இருந்து ரிசர்வ் வங்கிக்கு 500 ரூபாய் கள்ள நோட்டுகள் அனுப்பப்பட்டுள்ளன. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவாரூர்:

    சென்னையில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கியின் பொது மேலாளர் செல்வராஜ், திருவாரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் மனு ஒன்று அளித்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

    திருவாரூரில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட ஒரு வங்கி கிளையில் இருந்து கடந்த 15-ந் தேதிக்கு முன்பாக சென்னை இந்திய ரிசர்வ் வங்கிக்கு அனுப்பி வைக்கப்பட்ட பணத்தில், 500 ரூபாய் கள்ள நோட்டுகள் 10 எண்ணிக்கையில் இருந்தது கண்டறியப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த கள்ள நோட்டுக்கள் அனுப்பி வைக்கப்பட்டு இருப்பது குறித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    இந்த புகாரின் பேரில் திருவாரூர் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், திருவாரூரில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட ஒரு வங்கி கிளையில் இருந்து சென்னைக்கு அனுப்பப்பட்ட பணத்தில், கள்ள நோட்டுகள் சென்று இருப்பது உண்மை என்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து நாகப்பட்டினம் குற்ற வழக்கு தொடர்புதுறை உதவி இயக்குனரிடம் இருந்து கள்ள நோட்டு சம்பந்தமாக வழக்கு பதிவு செய்யலாம் என கருத்துரு பெறப்பட்டது. இதனை தொடர்ந்து திருவாரூர் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராசு, கள்ள நோட்டு சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்தார். கள்ள நோட்டுகள் அந்த வங்கிக்கு எவ்வாறு வந்தது? யாருடைய கணக்கில் இருந்து செலுத்தப்பட்டது? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் திருவாரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  
    ×