search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னையில் 500 புதிய பஸ்கள் விரைவில் இயக்க முடிவு- அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் தகவல்
    X

    சென்னையில் 500 புதிய பஸ்கள் விரைவில் இயக்க முடிவு- அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் தகவல்

    ஓட்டை உடைசலான பேருந்துகளுக்கு பதிலாக சென்னையில் 500 புதிய பஸ்கள் விரைவில் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். #TNBus #MRVijayabaskar
    சென்னை:

    சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் 500-க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் 3200 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தினமும் சுமார் 40 லட்சம் பேர் பயணம் செய்கிறார்கள். பஸ் கட்டண உயர்வுக்கு பிறகு மாநகர பஸ்களில் கூட்டம் குறைந்தது.

    ஓட்டை உடைசலான மிகவும் மோசமான நிலையில் பேருந்துகள் இயக்கப்படுவதால் மக்கள் ஏற தயங்குகிறார்கள். பெரும்பாலான பஸ்களில் படிக்கட்டு கதவுகள் இல்லாமலும், இருக்கைகள் உடைந்தும் காணப்படுகின்றன.

    ஒரு பஸ்சின் ஆயுட்காலம் 5 வருடங்கள் மட்டும்தான். ஆனால் பயன்படுத்த தகுதியற்ற பஸ்கள் இயக்கப்படுவதால் அடிக்கடி “பிரேக் டவுன்” ஆகி ஆங்காங்கே வழியில் நின்று விடுகின்றன. பஸ்களில் கூட்டம் குறைந்து வருவதால் புதிய பஸ்கள் விட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அடுத்த வாரத்திற்குள் புதிய பஸ்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.

    இந்த நிலையில் விபத்து ஏற்படாமல் வாகனம் ஓட்டிய டிரைவர் மற்றும் கண்டக்டர்களுக்கு முதன்முதலாக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பரிசளித்து ஊக்கப்படுத்தினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சென்னையில் விரைவில் மின்சார பஸ்கள் இயக்கப்பட உள்ளது. முற்றிலும் மாசு ஏற்படாத சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் இந்த பஸ் இயக்கப்படுகிறது.


    போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகள் கண்டறியப்பட்டு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 80 மின்சார பஸ்கள் இயக்கப்படும்.

    அரசு போக்குவரத்து கழகத்திற்கு இன்னும் ஒரு வாரத்தில் புதிதாக 500 பஸ்கள் வர இருக்கின்றன. சென்னை மாநகரத்திற்கும் புதிய பஸ்கள் விடப்பட உள்ளது.

    8 வருடங்களுக்கு மேலாக ஓடும் பழைய பஸ்கள் அடையாளம் காணப்பட்டு அவற்றிற்கு பதிலாக புதிய பஸ்கள் விடப்படும்.

    செங்கல்பட்டு-திருச்சி நெடுஞ்சாலையில் ரூ.25 கோடியில் கண்காணிப்பு கேமிராக்கள் நிறுவப்படுகின்றன. அதிவேகமாக பயணம், சாலை விதிமுறைகளை மீறும் வாகனங்கள் என கண்டறியப்பட்டு அபராதம் விதிக்கும் முறை வெளிநாடுகளில் உள்ளது போல செயல்படுத்தப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.  #TNBus #MRVijayabaskar
    Next Story
    ×