என் மலர்

    நீங்கள் தேடியது "ரியல்மி வாட்ச் 2"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ராமநாதபுரத்தில் பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டது.
    • பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம்.

    ராமநாதபுரம்

    ஏர்வாடி சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத் திற்கு கடந்த 13-ந்தேதி உள்ளூர் விடுமுறை விடப் பட்டிருந்தது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் இன்று (24-ந்தேதி) வேலை நாள் என கலெக்டர் விஷ்ணு சந்திரன் அறிவித்தி ருந்தார். அதன்படி இன்று பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு வேலை நாளாகும்.

    இந்தநிலையில் மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர்களுக்கு மண்டபம், திருப்புல்லாணி, ராமநாதபுரம், ஆர்.எஸ்.மங்கலம், திருவாடனை, நயினார்கோயில், போகலூர், பரமக்குடி, கமுதி, முதுகுளத்தூர் மற்றும் கடலாடி ஆகிய11 ஒன்றியங்களில் சி.ஆர்.சி பயிற்சி வகுப்புகள் இன்று நடைபெறுகிறது.

    இதனால் பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் என அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் வாயிலாக தெரிவிக்கப் படுகிறது. மேலும் ஒன்று முதல் 10-ம் வகுப்பு வரை வழக்கம் போல் வகுப்புகள் நடக்கும் என தெரிவிக்கப் பட்டது. அதன்படி பள்ளிகள் இன்று செயல்பட்டன. 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 19-ந் தேதி முதல் 26ந் தேதி வரை துணைத்தேர்வு நடக்குமென அறிவிக்கப்பட்டது
    • தேர்வெழுத மொத்தம் 380 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

    திருப்பூர் :

    பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கும், பொதுத்தேர்வை எதிர்கொள்ளாதவர்களுக்கும் வருகிற 19-ந்தேதி முதல் 26ந்தேதி வரை துணைத்தேர்வு நடக்குமென அறிவிக்கப்பட்டது.

    மே 10ந்தேதி முதல் இதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. திருப்பூர் கிட்ஸ் கிளப் மெட்ரிக் பள்ளி, பிஷப் உபகாரசாமி பள்ளி, தாராபுரம் விவேகம் மெட்ரிக் பள்ளி ஆகிய 3 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வெழுத மொத்தம் 380 பேர் விண்ணப்பித்துள்ளனர் என மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஜூன் 19ந் தேதி துணைத்தேர்வு நடக்குமென கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
    • தேர்வுக்கு வருகை புரியாத மாணவ, மாணவிகளை முதலில் கண்டறிய வேண்டும்.

    திருப்பூர் :

    கடந்த 8ந்தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் தேர்ச்சி பெறாத, தேர்வில் பங்கேற்காத மாணவர் துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க, அழைப்பு விடுக்கப்பட்டது. இந்நிலையில் ஜூன் 19ந் தேதி துணைத்தேர்வு நடக்குமென கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

    தேர்வுக்கு ஒரு மாதம் இருப்பதால் துணைத்தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்த தேர்வுத்துறை அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குனரகம் வாயிலாக, வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது.

    அதன்படி தேர்வுக்கு வருகை புரியாத மாணவ, மாணவிகளை முதலில் கண்டறிய வேண்டும். தேர்வெழுதி தேர்ச்சி பெறாதவர் விபரத்தை வகுப்பாசிரியர் மூலம் சேகரித்து அவர்களை துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்க, ஊக்கப்படுத்த வேண்டும். வட்டார வள மைய ஆசிரிய பயிற்றுநர், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர் உதவியோடு ஆலோசனைகளை வழங்கி துணைத்தேர்வெழுத ஊக்கப்படுத்த வேண்டும். ஒவ்வொரு தேர்வு மையத்திலும் ஆசிரியர் பணியிடம் சூழலுக்கு தக்கவாறு சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்த தேவையான உரிய கால அட்டவணையை தயாரிக்க வேண்டும். பயிற்சி மாணவர்களை பங்கேற்க செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனையடுத்து அடுத்த வாரம் அல்லது மே இறுதியில் துணைத்தேர்வு எழுத உள்ள மாணவருக்கு சிறப்பு பயிற்சி வகுப்பு தொடங்குவதற்கான ஏற்பாடுகளை மாவட்ட கல்வித்துறை செய்து வருகிறது. பிளஸ் -2 தேர்வு முடிவு 8-ந் தேதி வெளியாகிய நிலையில் தேர்ச்சி பெறாத தேர்வுக்கு வராத மாணவர்கள் துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டது. கடந்த 17ந்தேதியுடன் கால அவகாசம் நிறைவடைந்த நிலையில் நாளை 23-ந் தேதி வரை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தந்தை ஹக்கீம் கோழிக்கடை நடத்தி வருகிறார்.
    • வெள்ளி பேனா வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.

    முத்துப்பேட்டை:

    முத்துப்பேட்டை கோவிலூர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 பொதுத்தேர்வில் மாணவி ரிப்பா முதலிடம் பெற்றார். இவரது தந்தை ஹக்கீம் கோழிக்கடை நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் வர்த்தகக் கழக தலைவர் கண்ணன் தலைமையில் முன்னாள் தலைவர் மெட்ரோ மாலிக், துணைத்தலைவர் சங்கீதா பிரசாத், நிர்வாகிகள் கிஷோர், அம்பேலா சாகுல் மற்றும் வியாபாரிகள் நேரில் சென்று மாணவி ரிப்பாவுக்கு வெள்ளி பேனா வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பை படிக்க வேண்டும் என இவரது பெற்றோர்களிடம் கூறியதாக தெரிய வருகிறது.
    • மின்விசிறியில் சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் அருகே உள்ள கே.வி. பழனிசாமி நகர் பகுதியை சேர்ந்த வாசுதேவன் என்பவர் வெள்ளகோவிலில் உள்ள தனியார் நூல் மில்லில் சூப்பர்வைசராக வேலை செய்து வருகின்றார். இவரது மகன் சிவின்(வயது 17). 12ம் வகுப்பு படித்து முடித்துள்ளார், தற்போது ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பை படிக்க வேண்டும் என இவரது பெற்றோர்களிடம் கூறியதாக தெரிய வருகிறது. அதற்கு இவர்களது பெற்றோர் இந்த படிப்பு படிப்பதற்கு ரூ.72 ஆயிரம் செலவாகும்.அதுமட்டுமின்றி எதிர்காலத்தில் இந்த படிப்பிற்கு எந்த அளவுக்கு வேலை வாய்ப்பு இருக்கும் என்பது தெரியவில்லை என கூறியதாக தெரிகிறது. இதனால் தான் படிக்க விரும்பிய பாடத்தில் சேர முடியாது என நினைத்து மனவிரக்தியில் சிவின் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்தநிலையில் நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாத போது மாணவன் வீட்டில் மின்விசிறியில் சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.இச்சம்பவம் குறித்து வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி, சப் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வருகிற 13-ந் தேதி வரை விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.
    • விடைத்தாளின் நகல் பெற ஒவ்வொரு பாடத்துக்கும் ரூ.275 கட்டணத்தை அந்தந்த பள்ளிகளில் செலுத்தலாம்.

     திருப்பூர் :

    பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியாகி மாணவ-மாணவிகள் உயர் படிப்புக்கு தயாராகி வருகிறார்கள். விடைத்தாள் நகல், மறுகூட்டல் கோரி விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் வழியாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையங்கள் மூலமாகவும் வருகிற 13-ந் தேதி வரை விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. விடைத்தாளின் நகல் பெற ஒவ்வொரு பாடத்துக்கும் ரூ.275-ம், மறுகூட்டல் செய்ய உயிரியல் பாடத்துக்கு மட்டும் ரூ.305, மற்ற பாடங்கள் ஒவ்வொன்றுக்கும் ரூ.205 கட்டணத்தை அந்தந்த பள்ளிகளில் செலுத்தலாம்.

    பிளஸ்-2 தேர்வு முடித்த மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மைய தலைமை ஆசிரியர்கள் மூலமாகவும் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் மதிப்பெண் பட்டியலை பெற்றுக்கொள்ளலாம்.

    பள்ளி தலைமை ஆசிரியர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில், தங்கள் பள்ளிக்கென்று வழங்கப்பட்ட யூசர் ஐ.டி., பாஸ்வேர்டை பயன்படுத்தி பள்ளி மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மதிப்பெண் விவரங்களை சரிபார்த்து பள்ளி முத்திரையிட்டு வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • விடை த்தாள்கள் திருத்தும் பணி நடந்து வருகிறது.
    • ஈரோடு மாவட்டத்தில் 1,800 ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஈரோடு:

    தமிழ்நாட்டில் பிளஸ்-2 மற்றும் பிளஸ்-1 பொது த்தேர்வு நிறைவடை ந்துள்ளது. தற்போது எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது.

    விடைத்தாள்கள் ஈரோடு மாவட்டத்தில் மாமரத்து பாளையம் இந்து கல்வி நிலையம், கொங்கம்பா ளையம் எஸ்.வி.என். பள்ளி, கோபிசெட்டிபாளையம் பாரதி வித்யாலயா பள்ளி யில் சேகரித்து வைக்கப்ப ட்டுள்ளது.

    குலுக்கல் முறை யில் விடைத்தாள்கள் வெவ்வேறு மாவட்டத்திற்கு ஏற்கனவே அனுப்பி வைக்க ப்பட்டு ள்ளது. அதேபோல் பிற மாவட்ட விடைத்தா ள்கள் ஈரோடு மாவட்டத்தி ற்கு வந்துள்ளது.

    இந்து கல்வி நிலையம், எஸ்.வி.என் பள்ளி, பாரதி வித்யாலயா பள்ளி மைய ங்களில் பிளஸ்-2, பிளஸ்-1 விடைத்தாள்கள் திருத்தும் பணி தொடங்கியது.

    இது குறித்து பள்ளி கல்வித்துறை யினர் கூறியதாவது:

    பிளஸ்-2, அதைத்தொ டர்ந்து பிளஸ்-1 விடை த்தாள்கள் திருத்தும் பணி நடந்து வருகிறது. 12 நாட்க ளில் ஈரோடு மாவட்டத்தில் விடைத்தாள்கள் திருத்தும் பணி முழுமையாக நிறைவு பெறும். இந்த பணியில் ஈரோடு மாவட்டத்தில் 1,800 ஆசிரிய, ஆசிரியைகள் ஈடுபட்டு வருகின்றனர்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 2022-2023-ம் கல்வியாண்டு பிளஸ்-2 பொதுத் தேர்வுகள் கடந்த 13-ந் தேதி தொடங்கியது. இத்தேர்வுகள் சேலம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 155 தேர்வு மையங்களில் நடைபெறுகிறது.
    • இதையடுத்து 21-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) இயற்பியல், பொருளாதாரம், கணினி தொழில்நுட்பம் ஆகிய 3 பாடங்களுக்கும் தேர்வு நடைபெறுகிறது.

    சேலம்:

    2022-2023-ம் கல்வியாண்டு பிளஸ்-2 பொதுத் தேர்வுகள் கடந்த 13-ந் தேதி தொடங்கியது. இத்தேர்வுகள் சேலம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 155 தேர்வு மையங்களில் நடைபெறுகிறது. இதில் 149 தேர்வு மையங்கள் பள்ளி மாணவர்களுக்காகவும், 6 தேர்வு மையங்கள் தனித் தேர்வர்களுக்காகவும் அமைக்கப்பட்டுள்ளது.

    இத்தேர்வு மையங்களில் 18,830 மாணவர்கள், 20,443 மாணவிகள் என மொத்தம் 39,273 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

    இன்று (வெள்ளிக்கிழமை) கம்யூனிகேட்டிவ் ஆங்கிலம், நெறிமுறைகள் மற்றும் இந்திய கலாச்சாரம், கணினி அறிவியல், கணினி பயன்பாடுகள், உயிர் வேதியியல், மேம்பட்ட மொழி (தமிழ்), வீட்டு அறிவியல், அரசியல் அறிவியல், புள்ளிவிவரங்கள், நர்சிங் தொழிற்கல்வி, அடிப்படை எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் உள்ளிட்ட பாடங்களுக்கு தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வுகளை மாணவ- மாணவிகள் உற்சாகத்துடன் எழுதினர்.

    3 நாட்கள் விடுமுறை

    தொடர்ந்து நாளை (18-ந்தேதி) மற்றும் நாளை மறுநாள் (19-ந்தேதி), திங்கட்கிழமை (20-ந்தேதி) ஆகிய 3 நாட்கள் தேர்வு கிடையாது. தேர்வுக்கான பாடங்களை படிக்கும் விதமாக மாணவ- மாணவிகளுக்கு இந்த 3 நாட்களும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

    இதையடுத்து 21-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) இயற்பியல், பொருளாதாரம், கணினி தொழில்நுட்பம் ஆகிய 3 பாடங்களுக்கும் தேர்வு நடைபெறுகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 41 தோ்வு மையங்களில் பிளஸ் 2 தோ்வு நடந்தது.
    • 416 போ் தோ்வில் பங்கேற்கவில்லை

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தோ்வை அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகள், தனியாா் பள்ளிகளில் பயிலும் மொத்தம் 6,852 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா். இதில் முதல்நாள் நடைபெற்ற தமிழ் மொழிப் பாடத் தோ்வை 6436 போ் எழுதினா். 416 போ் தோ்வு எழுத வரவில்லை.

    மலையாளப் பாடத்தில் மொத்தம் 175 பேரில் 170 போ் தோ்வு எழுதினா். பிரெஞ்சு பாடத்தில் மொத்தம் 324 பேரில், 303 போ் தோ்வு எழுதினா். ஹிந்திப் பாடத்தில் மொத்தம் 89 பேரில் 89 பேரும் தோ்வு எழுதினா். தனித்தோ்வா்களில் தமிழ் தோ்வில் மொத்தம் 46 பேரில் 43 போ் தோ்வு எழுதினா். 3 போ் வருகை புரியவில்லை. ஹிந்திப் பாடத்தில் மொத்தம் ஒருவா் தோ்வு எழுதினா். மாற்றுத்திறனாளி மாணவா்கள் மொத்தம் 52 போ் அரசுத் தோ்வுத் துறையால் வழங்கப்படும் கூடுதல் ஒரு மணி நேரம், மற்றும் சொல்வதை எழுதுபவா், மொழிப்பாட விலக்கு போன்ற சலுகைகளைப் பெற்று தோ்வு எழுதினா். நீலகிரி மாவட்டத்தில் 41 தோ்வு மையங்களில் பிளஸ் 2 தோ்வு எழுதத் தகுதியுடைய தனித்தோ்வா்கள், பள்ளி மாணவா்கள் என மொத்தம் 7,440 பேரில் 6998 போ் தோ்வு எழுதினா். 442 போ் வருகை புரியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ் மொழிப் பாடத் தோ்வை அதிகமானோா் எழுதாமல் உள்ளனா் என்று கல்லித்துறை சாா்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    சேலத்தில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்து ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர்.
    சேலம்:

    தமிழகம் முழுவதும் நடைபெற்று முடிந்த மேல்நிலை வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடங்கியது. 

    பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி அதன்படி சேலம் மாவட்டத்தில் 4 மையங்களில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

    இந்த நிலையில் சேலம் ராஜாஜி சாலையில் உள்ள தனியார் பள்ளியில் விடைத்தாள் திருத்துவதற்காக சிறப்பு மையம் அமைக்கப்பட்டு ஆசிரியர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு இருந்தது. அப்போது பணிக்கு வந்த ஆசிரியர்கள் திடீரென விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து ஆசிரியர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது வழக்கமாக பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியில் ஆசிரியர்கள் விருப்பத்தின் பேரில் தன் மையங்கள் நியமனம் செய்யப்பட்டு வந்தது. 

    தற்போது வழக்கமான நடைமுறை மாற்றப்பட்டு மையங்கள் நியமிக்கப்பட்டுள்ளதால் பெரும்பாலான ஆசிரியர்கள் தொலைவிலுள்ள மையங்களுக்கு செல்ல வெகுதூரம் பயணிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அதனால் போராட்டத்தில் ஈடுபட்டோம் என்றனர்.

    தொடர்ந்து 2 மணி நேரத்திற்கு மேலாக ஆசிரியர்கள் வேலையை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பிறகு அதிகாரிகளுடன் சமரசம் பேசியதில் உடன்பாடு ஏற்பட்டு விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது.
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo