என் மலர்
நீங்கள் தேடியது "உடல்நலம்"
- கல்லீரல் பாதிப்பினால் மஞ்சள் காமாலை-தோல், நகம், கண்கள் மஞ்சளாக இருக்கும்.
- மது அருந்துவதை தவிர்ப்பது சிரோசிஸ் பாதிப்பினை வெகுவாய் குறைக்கும்.
இன்று கல்லீரலுக்கென்றே சிறப்பு சிகிச்சை பிரிவுகள் நிறைய ஏற்படுத்தப்பட்டுள்ளன. காரணம் அந்த அளவிற்கு கல்லீரல் பாதிப்பு பரவலாகக் காணப்படுகின்றது.
கல்லீரல் மனித உடலின் சக்தி மையம் என்று குறிப்பிட்டால் அது மிகையாகாது. உணவை செரிக்கும் முக்கியமான உறுப்புகளில் கல்லீரலும் ஒன்று. நச்சுகளை வெளியேற்றுகின்றது. ஹார்மோன்களை சமநிலைப்படுத்துகின்றது என 500-க்கும் மேற்பட்ட கல்லீரல் பணியினைச் சொல்லலாம்.
கல்லீரல் சத்தமில்லாது உடல் பணியினைச் செய்கிறது.
கல்லீரல் வயிற்றின் வலது பக்கத்தில் விலா எலும்புக்களுக்கு அடியில் அமைந்துள்ளது பெரிய உறுப்பு. இதனை பெரிய தொழிற்சாலை என்றே சொல்லலாம்.
* பித்த நீரினை உற்பத்தி செய்கின்றது. ரத்தத்தில் நச்சுகளை நீக்குகின்றது. ரத்தம் உறைவதற்கான புரதங்களை உருவாக்குகின்றது. ஹார்மோன் அளவினை சீர்படுத்துகின்றது. ஊட்டசத்துகள், வைட்டமின்கள், தாதுக்கள், குளுகோசினை சேமிக்கின்றது.

கமலி ஸ்ரீபால்
இத்தகு கல்லீரல் பாதிக்கப்பட்டால் உடல் என்னாவது? பொதுவில் மது, வைரஸ் தொற்று ஏ. பி. சி, கொழுப்பு கல்லீரல் நோய், மருந்துகளின் பக்க விளைவுகள், மரபணு கோளாறுகள், தவறான உணவு பழக்கங்கள் இவை பாதிப்பிற்கு முக்கிய காரணம் ஆகின்றன.
கல்லீரல் பாதிப்பினால் மஞ்சள் காமாலை-தோல், நகம், கண்கள் மஞ்சளாக இருக்கும். பிலிரூபின் ரத்தத்தில் அதிகமாக இருக்கும்.
* வயிறு வலி, வீக்கம், வலது பக்க மேல் வயிற்றில் வலி, வீக்கம், கல்லீரல் வீக்கம் அல்லது திரவம் சேருவதால் ஏற்படும் பாதிப்பு.
* அதிக சோர்வு, எப்போதும் பலவீனமாய் உணர்வது. எப்போதும் பலவீனமாக இருத்தல், கல்லீரல் ஆற்றல் உற்பத்தியை பாதிக்கின்றது.
* அரிப்பு- விடாமல் உடலில் அரிப்பு, பித்த அமிலம் தோலில் சேருவதால் அரிப்பு ஏற்படுகின்றது.
* அயர்ந்த சிறுநீர்- சிறுநீர் பழுப்பு நிறமாக இருக்கும். பிரிரூபின் சிறுநீரில் கலக்கின்ற காரணத்தினால் ஏற்படுகின்றது.
* மன குழப்பம்- கவனக்குறைவு, மறதி இருக்கும், நச்சுகளின் பாதிப்பால் ஏற்படுகிறது.
* பசியின்மை, எடை குறைதல்- ஊட்டச்சத்தினை உறிஞ்சுவதில் குறைபாடு.
* எளிதில் சிராய்ப்பு ஏற்படும். ரத்தக்கசிவு, ரத்த போக்கு ஏற்படலாம், ரத்த உறைதல் குறைபாட்டால் ஏற்படுகின்றது.
கல்லீரல் பிரச்சினை பிரிவுகள்
* வைரஸ் தொற்றில் ஏ, பி, சி பிரிவுகள் உள்ளன. ஏ பிரிவு அசுத்தமான உணவு. நீரால் பரவுகின்றது. மஞ்சள் காமாலை, வயிற்றுப் பிரட்டல் ஆகியவை இருக்கும்.
* வைரஸ் பி, சி பிரிவு ரத்தம், உடல் திரவங்கள் மூலம் பரவலாம். முதலில் அறிகுறிகள் கூட காட்டாமல் இருக்கலாம். ஆனால் இவை கல்லீரல் புற்றுநோய் பாதிப்பு வரைக் கூட ஏற்படுத்தலாம்.
* கொழுப்பு கல்லீரல்- இது இரு பிரிவு படும். ஆல்கஹால் சார்ந்தது. அடுத்தது ஆல்கஹால் பழக்கம் இல்லாதவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு. இதற்கு நீரிழிவு நோய், உடல் பருமன், கொழுப்பு உணவு ஆகியவை காரணம் ஆகின்றன. வயிற்று வலி, சோர்வு ஆகிய வெளிப்பாடுகள் இருக்கும்.
* சிரோசிஸ்- இது கல்லீரலில் வடுக்களை ஏற்படுத்துவது ஆகும். மது, வைரஸ், பிற நோய்கள் இதற்கு காரணமாக இருக்கலாம். வயிறு வீக்கம், கால் வீக்கம், குழம்பிய மனம் போன்றவை காணப்படும்.
* கல்லீரல் புற்றுநோய்- இது கடுமையான ஆபத்தான நிலை. வைரஸ் பி, சி, சிரோசிஸ் இவை காரணமாக அமையலாம். எடை குறைந்து மெலிந்து இருப்பர், மஞ்சள் காமாலை, வயிற்று வலி பாதிப்பு இருக்கும்.
* ஆட்டோ இம்யூன் கல்லீரல் நோய்கள்- உட லின் நோய் எதிர்ப்பு அமைப்பு கல்லீரலைத் தாக்குவதால் ஏற்படும் பாதிப்பாகும். எதனையும் ஆரம்ப காலத்தில் கண்ட றிந்து சிகிச்சை அளிப்பது நல்லது.
* ரத்தப் பரிசோதனை, கல்லீரல் செயல்பாடு சோதனை, வைரஸ் சோதனை, பிலிரூபின் சோதனை ஆகியவை அவசியம்.
* இமேஜிங்ஸ்கேன், அல்ட்ராசவுண்ட் பரிசோதனைகள் கல்லீரல் அளவு, வீக்கம், பாதிப்பு இவற்றினை அறிய உதவும்.
* பயாபசி-புற்றுநோய் பாதிப்பினை உறுதி செய்யும் பரிசோதனை முறையாகும்.
வரும்முன் தடுப்போம் மூலமாக கல்லீரலை எப்படி பாதுகாக்கலாம்?
* மது அருந்துவதை தவிர்ப்பது சிரோசிஸ் பாதிப்பினை வெகுவாய் குறைக்கும்.
* சத்தான உணவு- காய்கறிகள், பழங்கள், முழுதானியங்கள் போன்ற கொழுப்பு சத்து குறைந்த உணவுகள் ஆகியவைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இது கல்லீரல் கொழுப்பு நோய் பாதிப்பினைத் தவிர்க்கும்.
* சுத்தத்தினை கடை பிடித்தல். ரத்த பரிமாற்றம், தரமான ஊசிகள் போன்றவை அவசியம்.
* உடற்பயிற்சி அவசியம். உடல் பருமன், சர்க்கரை கட்டுப்பாடு, இவற்றுக்கு உறுதுணையாய் இருக்கும்.
* முறையான மருத்துவ பரிசோதனைகள் செய்து கொள்ள வேண்டும்.
* வைரஸ் தடுப்பூசிகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பச்சை காய்கறிகள், கீரை வகைகள், புரோகலி, காலி பிளவர் மற்றும் மீன், பருப்பு வகைகள், முட்டை வெள்ளைக்கரு மற்றும் 2 முதல் 3 லிட்டர் நீர் அன்றாடம் குடித்தல் மற்றும் அதிக சர்க்கரை, துரித உணவு, பதப்படுத்தப்பட்ட உணவு ஆகியவற்றினை தவிர்த்தல் போன்றவை கல்லீரலை பாதுகாக்க உதவும்.
(செரிமானத்தில் கல்லீரல் பங்கு என்பது மிக முக்கியமானது. பித்த நீரை உருவாக்குகின்றது. கொழுப்பு செரிமானத்திற்கு இது முக்கியமானது.
* ரத்தத்தில் நச்சுத் தன்மையினை நீக்குகின்றது.
* வளர்சிதை மாற்றங்களுக்குப் பொறுப்பானது.
* நஞ்சு, மருந்து, சுற்றுப்புற சூழலால் உடலில் சென்று தீங்கு விளைவிக்கும் பொருட்கள். இவைகளை ரத்தத்தில் இருந்து நீக்குகின்றது.
* கல்லீரல் செல்கள் உடலுக்கு தேவையான பல புரதங்களை உற்பத்தி செய்கின்றன.
* ரத்த அழுத்தத்தினை கட்டுப்படுத்த உதவும். ஆஞ்சியோ டென்சினோஜன் என்ற ஹார்மோனை வெளியிடுகின்றது. மேலும் பல செயல்கள் பற்றி முன்பே அறிந்தோம்.
கல்லீரல் ஆரோக்கியம் வாழ்வின் ஆரோக்கியத்திற்கு அடிப்படை தேவை ஆகும்.
ஆரோக்கியமான கல்லீரல் உடலை காக்கும் அமைதியான தேவதை.
- உப்பு குறைபாடு செல்களை குறிப்பாக மூளை செல்களை பாதிப்படைய செய்யும்.
- அதிக உப்பு உயர் ரத்த அழுத்தத்தினை ஏற்படுத்தும்.
உப்பு - இது தாது உப்புகளில் ஒன்று. உப்பு சத்து உடலில் குறையும்போது தலைவலி, வயிற்று பிரட்டல், சோர்வு, தசை பிடிப்பு, குழப்பம், வலிப்பு, கோமா நிலை போன்றவை ஏற்படலாம்.
உப்பு குறைபாடு செல்களை குறிப்பாக மூளை செல்களை பாதிப்படைய செய்யும்.
பண்டை காலம் முதல் இன்றுவரை அநேகரும் நம்நாட்டில் உப்பளங்களில் இருந்து தயாரிக்கப்படும் கல் உப்பு, கடல் உப்பினை சமையலுக்கு பயன்படுத்துகின்றனர்.
கடல் உப்பில் சோடியம் குளோரைடு உள்ளது. இது உடலில் நீர் சத்து, ரத்த அழுத்தம் இவற்றினை சீர்செய்ய உதவுகிறது. மேலும் இது அதிக சுத்தகரிப்பு முறை, பதப்படுத்துதல் இவை இல்லாததால் பொட்டாசியம், இரும்பு, கால்சியம் போன்ற தாதுக்களும் உடையது. இந்த காரணங்களினால் இதை உயர்ந்ததாக குறிப்பிடுபவரும் உண்டு. ஆனால் இந்த மற்ற தாதுக்களின் பலனை பெற நாம் அதிகளவில் உப்பினை எடுத்துக் கொள்ள முடியாது. ஆனால் இந்த தாதுக்களை மற்ற உணவு பொருட்களில் இருந்தும் பெற முடியும். சோடியம் உடலின் நீர் சத்து சம நிலைக்கு முக்கியமானது. இது குறையும் போது உடலில் நீர்சத்து குறைதல், ரத்த அழுத்தம் மாறுபடுதல் ஆகியவை ஏற்படலாம். உப்பு அதிகம் உட்கொள்வதும், குறைந்து உட்கொள்வதும் ரத்த அழுத்த பாதிப்பினை ஏற்படுத்தும்.
குளோரைட் வயிற்றில் தேவையான அளவு ஆசிட் சுரக்க அவசியம் ஆகின்றது. சோடியம் குளோரைடில் உள்ள குளோரைட் சிறிது சத்துக்களை உறிஞ்சி உடலுக்கு அனுப்ப உதவுகின்றது. ஆக அளவான உப்பு செரிமானத்திற்கு உதவும். உப்பு கலந்த நீரில் குளிப்பது சரும வறட்சி, வீக்கத்தினை நீக்கும். கடல் உப்பில் மக்னீசியம் சத்து அதிகம் இருப்பதால் சரும பாதிப்புகளுக்கு நல்லது.
அதிக உப்பு உயர் ரத்த அழுத்தத்தினை ஏற்படுத்தும். இதன் காரணமாகவே சிப்ஸ், ஊறுகாய், பதப்படுத்தப்பட்ட உணவுகள், நொறுக்கு தீனி போன்றவற்றினை தவிர்க்க அறிவுறுத்தப்படுகின்றது.
* பொதுவில் உயர் ரத்த அழுத்தம், இருதய பாதிப்பு, சிறுநீரக நோய் உள்ளவர்களை அவருக்கேற்ற அன்றாட உப்பின் அளவினை டாக்டர் பரிந்துரைப்பார்.
'அதிக உப்பு அமைதியாய் கொல்லும்' என்பர்.
அயோடின் சேர்க்கப்பட்ட உப்பு இன்று பரவலாக பழக்கத்தில் உள்ளது.
* தைராய்டு ஹார்மோன் நோய் இயங்க உதவும்.
* அயோடின் குறைபாட்டினைத் தவிர்க்க உதவும்.
* எலும்பு, மூளை வளர்ச்சிக்கு உதவும்.
* குறைந்த அயோடின் உணவு அறிவுறுத்தப்படுபவர்கள் அயோடின் கலந்த உப்பினை தவிர்ப்பது அவசியம்.
வளர்ந்தவர்கள் 2,300 மி.கி.க்கு குறைந்த அளவு சோடியம் உணவில் சேர்க்கலாம். 1500 மி.கி. என்பது மிகச் சிறந்தது. இது ஒரு டீஸ்பூன் (5 கி) உப்பு அளவு எனலாம். ஆனால் நாம் உண்ணும் உணவில் மிக அதிக அளவு உப்பு உள்ளது.
ரெடிமேட் உணவுகள், பாக்கெட் உணவுகளில் அதிக அளவு உப்பு இருக்க வாய்ப்புகள் அதிகம். எனவே வீட்டில் சமைத்து அளவான உப்பு சேர்த்து உண்ண பழக வேண்டும்.
- தயிர்-கால்சியம், புரதம், பி12, பாஸ்பரஸ், பொட்டாசியம் சத்து நிறைந்தது.
- வயிற்றுப்போக்கு உள்ளவர்களுக்கு தயிர் நல்லது.
தயிர் குளிர் காலத்தில் எடுத்துக் கொள்ளலாம். சில்லென்று இல்லாமல் எப்போதும் சாதாரண இயற்கை நிலையில் எடுத்துக் கொள்வது நல்லது. தயிர் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:
* தயிர்-கால்சியம், புரதம், பி12, பாஸ்பரஸ், பொட்டாசியம் சத்து நிறைந்தது.
* தயிர் கால்சியம் பாஸ்பரஸ் எலும்பு ஆரோக்கியத்திற்கு அவசியமானது.
* தயிரில் ஆரோக்கியமான புரோபயாடிக் (நல்ல குடல் பாக்டீரியாக்கள்) ஏராளமாக உள்ளன. வைட்டமின் பி சத்து கொண்டது.
* தயிர் கொலஸ்ட்ராலை குறைக்கும். உயர்ரத்த அழுத்தத்தினை கட்டுப்படுத்தும்.
* இருதய ஆரோக்கியதற்கு நல்லது.
* வயிற்றுப்போக்கு உள்ளவர்களுக்கு தயிர் நல்லது.
* உடல் பருமன் குறையும்.
* குடல் புற்றுநோய் அபாயம் குறையும்.
* அதிகம் அடர்ந்த தயிராக இல்லாமல் கொழுப்பு சத்து குறைவான பாலில் தயாரிக்கும் தயிர் நல்லது.
- நார்ச்சத்தை சர்க்கரை மூலக்கூறுகளாக உடைக்க முடியாது.
- செரிமான அமைப்பின் செயல்பாடுகளை ஊக்குவிக்கவும், மலச்சிக்கலை தடுக்கவும் துணை புரியும்.
மனித உடலால், நார்ச்சத்தை ஜீரணிக்க முடியாது. ஏனெனில் உணவு நார்ச்சத்து என்பது தாவர அடிப்படையிலான உணவுகளில் காணப்படும் சிக்கலான கார்போஹைட்ரேட் வகையை சேர்ந்ததாகும். பெரும்பாலான கார்போஹைட்ரேட்டுகள் சர்க்கரை மூலக்கூறுகளாக உடைக்கப்பட்டு விடும். ஆனால் நார்ச்சத்தை சர்க்கரை மூலக்கூறுகளாக உடைக்க முடியாது. அதேவேளையில் குடலில் வாழும் நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள் நார்ச்சத்தை நொதித்து தங்களுக்கான உணவாக மாற்றிக்கொள்ளும். அப்படி நார்ச்சத்து நொதிக்கப்படும்போது செரிமானத்துக்கும் உதவி செய்யும். ரத்த சர்க்கரையை ஒழுங்குபடுத்தும்.
இந்த நார்ச்சத்திலும் இரண்டு வகை உண்டு. ஒன்று கரையக்கூடிய நார்ச்சத்து. மற்றொன்று கரையாத நார்ச்சத்து. இதில் கரையக்கூடிய நார்ச்சத்து தண்ணீரில் கரைந்து ஜெல் போன்ற பொருளை உருவாக்கும். அந்த ஜெல் உடலில் கொழுப்பு மற்றும் குளுக்கோஸ் அளவை குறைக்க உதவும். கரையாத நார்ச்சத்தானது தண்ணீரில் கரையாது. இருப்பினும் செரிமான அமைப்பின் செயல்பாடுகளை ஊக்குவிக்கவும், மலச்சிக்கலை தடுக்கவும் துணை புரியும்.
நார்ச்சத்தை உடலால் ஜீரணிக்க முடியாது என்பதற்காக அதனை குறைவாக உட்கொள்வது நல்லதல்ல. உடலில் நார்ச்சத்து அளவு குறையும்போது குடலில் வாழும் நன்மை செய்யும் பாக்டீரியாக்களின் செயல்பாடுகள் பாதிப்புக்குள்ளாகும். அதனால் குடல் ஆரோக்கியம் கெடும்.
- புகைப்பழக்கத்தை தவிர்ப்பது வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும். ஆயுளையும் அதிகரிக்க செய்யும்.
- உறவுகளுக்குள் பிரச்சனைகள் ஏற்படுவது இயல்பானது. அவற்றை எவ்வாறு கையாளுகிறோம் என்பதே முக்கியமானது.
மகிழ்ச்சியான, ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதே அனைவரின் ஆசை. ஆனால் அதனை சாத்தியமாக்குவது பலருக்கும் கடினமாக இருக்கிறது. இந்நிலையில் அமெரிக்காவில் இருக்கும் ஹார்வர்டு பல்கலைக்கழகம் 85 ஆண்டுகளுக்கும் மேலாக மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் மகிழ்ச்சியாகவும், நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாகவும் வாழ்வதற்கு வித்திடும் தினசரி பழக்கவழக்கங்களை பட்டியலிட்டுள்ளது.
1939-ம் ஆண்டு முதல் 1944-ம் ஆண்டு வரை ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படித்த 268 மாணவர்களின் 80 ஆண்டுகளுக்கு மேலான வாழ்வியல் முறையை ஆய்வு செய்து இந்த பழக்கவழக்கங்களை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவை குறித்து பார்ப்போம்.
1. புகைப்பழக்கத்தை தவிர்த்தல்
புகைப்பிடிக்கும் பழக்கத்தை பின்தொடர்வது புற்றுநோய், இதயநோய், பக்கவாதம், நீரிழிவு உள்பட உயிருக்கு அச்சுறுத்தும் ஆபத்தான நோய்களுக்கு வழிவகுக்கும். எனவே புகைப்பழக்கத்தை தவிர்ப்பது வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும். ஆயுளையும் அதிகரிக்க செய்யும்.
2. மதுப்பழக்கத்தை அறவே தவிர்த்தல்
மதுப்பழக்கத்தை கட்டுப்படுத்துதல் அல்லது அறவே தவிர்த்தல் உடல் நலத்தையும், மன ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும். நல்ல தூக்கத்திற்கு வித்திடும். உடலுக்கு அதிக ஆற்றலையும், வலுவான நோய் எதிர்ப்பு சக்தியையும் அளிக்கும். மன அழுத்தத்தை குறைக்கும். சிக்கலான பிரச்சனையாக இருந்தாலும் தீர்க்கமாக, தெளிவாக முடிவெடுக்கும் திறனை மேம்படுத்தும்.
3. உடல் எடையை பராமரித்தல்
சத்தான உணவுகளை உண்பது, முறையான உடற்பயிற்சி மூலம் உடல் எடையை பராமரிப்பது நோய்களை தடுக்க உதவிடும். வாழ்க்கை தரத்தை மேம்படுத்தி மகிழ்ச்சியை அதிகரிக்க செய்யும்.
4. தினசரி உடற்பயிற்சி செய்தல்
தினமும் குறைந்தது 30 நிமிடம் வேகமான நடைப்பயிற்சி போன்ற எளிய உடற்பயிற்சி மேற்கொள்வது மனநிலையை மேம்படுத்தி மகிழ்ச்சியை அதிகரிக்கும். ஏனெனில் உடற்பயிற்சி மூலம் `என்டார்பின்கள்' எனப்படும் மகிழ்ச்சி ஹார்மோன்கள் சுரக்கின்றன.
5. சிக்கல்களை சமாளித்தல்
உறவுகளுக்குள் பிரச்சனைகள் ஏற்படுவது இயல்பானது. அவற்றை எவ்வாறு கையாளுகிறோம் என்பதே முக்கியமானது. அமைதியாகவும், புத்திசாலித்தனமாகவும் சமாளிக்கும் திறனை கொண்டிருப்பது உறவுகளை வலுப்படுத்தும். மன அமைதியையும் உண்டாக்கும்.
6. கற்றுக்கொள்ளுதல்
தன்னை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற எண்ணமும், தொடர்ந்து கற்றுக்கொள்ளும் பழக்கமும் வாழ்க்கையில் முன்னேற்றத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தும்.
7. அன்பை வெளிக்காட்டுதல்
நீண்டகால நட்பு, குடும்ப உறவுகள் மற்றும் வாழ்க்கை துணை வெளிக்காட்டும் அன்பு உள்ளிட்டவை மனிதர்களின் ஆரோக்கியத்துக்கும், மகிழ்ச்சிக்கும் மிக முக்கியமானவை என ஹார்வர்டு பல்கலைக்கழக ஆய்வு தெரிவிக்கிறது.
- குடிநீரை கொதிக்க வைப்பதால் ரசாயன மாசுபடுத்திகளோ, பூச்சிக்கொல்லிகளோ நீக்கப்படாது.
- குடிநீரை வடிகட்டி பயன்படுத்துவதும் பாதுகாப்பானது.
குடிநீர் பருகுவது உடலுக்கு எந்த அளவுக்கு ஆரோக்கியமானதோ, அது எந்த அளவுக்கு சுத்தமான நீராக இருப்பதை கருத்தில் கொள்வதும் முக்கியமானது. காய்ச்சிய குடிநீர், வடிகட்டிய குடிநீர், பாட்டில் நீர் உள்ளிட்டவை பரவலாக பயன்பாட்டில் இருக்கும் நிலையில் எந்த தண்ணீரை பருகுவது ஆரோக்கியமானது என்ற குழப்பம் பலருக்கும் ஏற்படுவதுண்டு. எது சிறந்தது என்று பார்ப்போம்.
காய்ச்சிய நீர்:
குடிநீர் நன்கு தெளிந்த நிலையில், அசுத்தமின்றி சுத்தமாக இருப்பது போல் தோற்றம் கொண்டிருந்தாலும் வைரஸ், பாக்டீரியா மற்றும் நுண்ணுயிர் கிருமிகள் பற்றிய கவலை எழுந்தால் கொதிக்க வைத்து பருகுவதே சரியானது. சுமார் ஒரு நிமிடமாவது நன்கு தண்ணீரை கொதிக்கவைத்து அதனை வடிகட்டி பருகலாம். அப்படி காய்ச்சிய நீர் குடிப்பதற்கு பாதுகாப்பானதாகிவிடும்.
கவனிக்க வேண்டியவை:
குடிநீரை கொதிக்க வைப்பதால் ரசாயன மாசுபடுத்திகளோ, பூச்சிக்கொல்லிகளோ நீக்கப்படாது. நீரின் சுவையும் மாறக்கூடும். பெரிய அளவில் பயன்படுத்துவதற்கு இது நடைமுறைக்கு உகந்தது அல்ல.
பாட்டில் நீர்:
பாட்டிலில் அடைக்கப்பட்ட நீர், யூ.வி., ஆர்.ஓ. போன்ற பல்வேறு சுத்திகரிப்பு செயல்முறைகளுக்கு உட்பட்டிருக்கும். குறிப்பாக கிருமிகள் நீக்கப்பட்டிருக்கும். குடிப்பதற்கு சுவையாகவும் இருக்கும்.
குறைபாடுகள்:
எல்லா பாட்டில் நீரும் ஒரே தரத்தில் இருப்பதில்லை. தரம் மாறுபடலாம். அத்துடன் பாட்டில் நீரை அதிக நாட்கள் சேமித்து வைத்து பயன்படுத்தும்போது அதிலிருக்கும் மைக்ரோபிளாஸ்டிக் நீரில் கலக்க வாய்ப்பிருக்கிறது.
எதை தேர்வு செய்ய வேண்டும்?
குடிப்பதற்கு மட்டுமின்றி சமைப்பது உள்ளிட்ட அன்றாட உபயோகத்துக்கு வடிகட்டிய நீரை பயன்படுத்துவது நல்லது. அதற்கு தரமான சுத்திகரிப்பு சாதனத்தை வீட்டில் நிறுவலாம். ஆர்.ஓ. பயன்படுத்துவதாக இருந்தால் நீரில் இருக்கும் தாதுக்களை அறவே நீக்காமல் பாதுகாக்கும்படியான வடிகட்டிகளை இடம் பெறச் செய்ய வேண்டும்.
வெளியிடங்களுக்கு பயணம் செய்யும்போது நம்பகமான தயாரிப்பு நிறுவனங்களின் குடிநீர் பாட்டில்களை வாங்கி உபயோகிக்கலாம்.
அல்லது வீட்டில் இருந்தே பாட்டில்களில் வடிகட்டிய, காய்ச்சிய நீரை கொண்டு செல்லலாம். எந்த வகை குடிநீராக இருந்தாலும் அதன் பருகும் முன்பு தூய்மையை உறுதி செய்து செய்து கொள்ள வேண்டும். பாட்டில்களில் உபயோகிப்பதாக இருந்தால் பாட்டில்களை நன்றாக சுத்தம் செய்து பராமரிக்க வேண்டும்.
வடிகட்டிய நீர்:
குடிநீரை வடிகட்டி பயன்படுத்துவதும் பாதுகாப்பானது. குறிப்பாக கார்பன் வடிகட்டிகள் நீரில் கலந்திருக்கும் குளோரினின் வீரியத்தை குறைத்து நீரின் சுவையை மேம்படுத்தும். மேலும் நீரில் படிந்திருக்கும் தேவையற்ற மாசுக்கள், அசுத்தங்களை போக்கும். தினசரி பருகுவதற்கு ஏற்றதாகவும் அமையும்.
கவனிக்க வேண்டியவை:
எல்லா வடிகட்டிகளும் ஒரே மாதிரியான செயல்திறன் கொண்டவை அல்ல. சில வடிகட்டிகள் அனைத்து அசுத்தங்களையும் வடிகட்டுவதில்லை. அவை திறம்பட செயல்பட, தவறாமல் சுத்தம் செய்வதும், சரியான நேரத்தில் மாற்றுவதும் முக்கியமானது. தரமான வடிகட்டிகளை வாங்கி உபயோகிப்பது அதை விட முக்கியமானது.
- நடைப்பயிற்சி மட்டுமின்றி ஓட்டம், நீச்சல், யோகா, பளு தூக்குதல் உள்ளிட்ட பயிற்சிகளில் ஈடுபடலாம்.
- இதய ஆரோக்கியம் காக்கப்படும்.
உடல் நலனை பேண பின்பற்றக்கூடிய நன்மை பயக்கும் பழக்கங்களில் உடற்பயிற்சியும் ஒன்றாகும். நடைப்பயிற்சி மட்டுமின்றி ஓட்டம், நீச்சல், யோகா, பளு தூக்குதல் உள்ளிட்ட பயிற்சிகளில் ஈடுபடலாம்.
அதன் சில நன்மைகள்:
* சிறந்த தூக்கத்திற்கு வித்திடும்.
* உடல் எடை மேலாண்மையை நிர்வகிக்கும்.
* உடலின் ஆற்றலை அதிகரிக்க செய்யும்.
* மன அழுத்தத்தை குறைக்கும்.
* இதய ஆரோக்கியம் காக்கப்படும்.
* மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
- கிரீமி தன்மை கொண்ட முந்திரியில் தாமிரம், துத்தநாகம் மற்றும் மெக்னீசியம் போன்றவை அதிகம் உள்ளன.
- உலர்ந்த அத்திப்பழங்களை ஊறவைக்கும்போது நார்ச்சத்தை மீண்டும் நீரேற்றம் செய்து குடல் எளிதாக ஜீரணிக்க வழிவகை ஏற்படும்.
உலர்பழங்கள், நட்ஸ் வகைகளை பலரும் விரும்பி சுவைக்கிறார்கள். அவற்றை சரியான முறையில் உட்கொள்கிறார்களா? என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. சில உலர் பழங்கள் மற்றும் நட்ஸ்களை ஊற வைத்து உட்கொள்வதே சரியானது. அவை பற்றியும், ஏன் ஊறவைத்து உட்கொள்ள வேண்டும் என்பது குறித்தும் பார்ப்போம்.
வால்நட்
வால்நட்டில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் பாலி பீனால்கள் அதிகம் காணப்படும். அடர்த்தியான கொழுப்பையும், சற்று கசப்புத்தன்மையையும் கொண்டிருக்கும். அதனை அப்படியே சாப்பிட்டால் செரிமானமாவதற்கும் கடினமாக இருக்கும்.
தண்ணீரில் 6 முதல் 8 மணி நேரம் ஊறவைப்பது கசப்புத்தன்மையை குறைப்பதோடு மென்மையாக மாற்றும். அதிலிருக்கும் கொழுப்பை உடல் எளிதில் பயன்படுத்துவதற்கு ஏதுவாக மாற்றி செரிமான மண்டலத்திற்கு குறைந்த அழுத்தத்தையே கொடுக்கும்.
2 அல்லது 4 வால்நட்டுகளை 12 மணி முதல் 24 மணி நேரம் வரை ஊற வைத்து உட்கொள்வது, எந்த உணவுப்பொருளுடனும் சேர்க்காமல் தனியாக உட்கொள்வது அதிகபட்ச நன்மையை அளிக்கும்.
முந்திரி
கிரீமி தன்மை கொண்ட முந்திரியில் தாமிரம், துத்தநாகம் மற்றும் மெக்னீசியம் போன்றவை அதிகம் உள்ளன. அதனை அப்படியே சாப்பிடுவது சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். ஊறவைக்கும்போது முந்திரியில் உள்ள நொதிகள் நடுநிலையாக்கப்படுகின்றன. ஊட்டச்சத்து எதிர்ப்பு தன்மையும் குறையும்.
ஆரோக்கியமான கொழுப்புகளின் தன்மையும் மேம்படுத்தப்படும். 4-5 முந்திரிகளை 2 அல்லது 4 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து, அவற்றை ஸ்மூத்தி அல்லது சிற்றுண்டிகளில் பயன்படுத்தலாம்.
ஊற வைப்பதால் கிடைக்கும் நன்மைகள்
பெரும்பாலான உலர் பழங்கள், நட்ஸ் வகைகளில் பைடிக் அமிலம் உள்ளது. இது இரும்பு, துத்தநாகம் மற்றும் கால்சியம் போன்ற தாதுக்களுடன் வினைபுரிந்து அவை உடலுக்குள் உறிஞ்சப்படுவதை தடுக்கிறது.
ஊறவைப்பதன் மூலம் இந்த அமிலத்தின் வீரியத்தை சிதைக்க முடியும். அதன் காரணமாக செரிமானம் எளிதாகும். வயிற்று உப்புசத்தை கட்டுப்படுத்தலாம். வளர்சிதை மாற்றத்துக்கும் உதவிடலாம்.
உலர் அத்திப்பழம்
உலர்ந்த அத்திப்பழங்களில் நார்ச்சத்து, கால்சியம் மற்றும் ஆன்டிஆக்சிடென்டுகள் அதிகமாக உள்ளன. அவற்றில் அதிக நார்ச்சத்து அடர்த்தியும் இருப்பதால், அவற்றை ஜீரணிப்பதற்கு செரிமான மண்டலம் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். அதுவே உலர்ந்த அத்திப்பழங்களை ஊறவைக்கும்போது நார்ச்சத்தை மீண்டும் நீரேற்றம் செய்து குடல் எளிதாக ஜீரணிக்க வழிவகை ஏற்படும்.
மேலும் கால்சியம், இரும்பை உடல் சிறப்பாக உறிஞ்சுவதற்கும் அனுமதிக்கும். மலச்சிக்கலை குறைப்பதற்கும், எலும்பு ஆரோக்கியத்தை பராமரிப்பதற்கும் பயனுள்ளதாக இருக்கும். 10 முதல் 12 உலர் அத்திப்பழங்களை வெதுவெதுப்பான நீரில் இரவு முழுவதும் ஊறவைத்து காலையில் உட்கொள்வது செரிமானத்தை இலகுவாக்கும். ஹார்மோன்களையும் சமநிலைப்படுத்தும்.
- முக்கியமான வைட்டமின்களான ஏ, டி, இ, கே மற்றும் கொழுப்புகள் இருப்பதில்லை.
- முட்டையின் மஞ்சள் கரு ஒட்டுமொத்த ஊட்டச்சத்து தேவைகளை நிவர்த்தி செய்துவிடும்.
முட்டையின் வெள்ளைக்கருவில் சுமார் 90 சதவீதம் நீரும், 10 சதவீதம் புரதமும் கலந்திருக்கும். ஆனால் முக்கியமான வைட்டமின்களான ஏ, டி, இ, கே மற்றும் கொழுப்புகள் இருப்பதில்லை. சோடியம் அதிகமாக இருக்கும். கலோரிகளோ குறைவாகவே (17 கலோரிகள்) இருக்கும். ஆனால் முட்டையின் மஞ்சள் கரு ஊட்டச்சத்து மிக்கது. அதில் சுமார் 17 சதவீதம் புரதம், ஏ, டி, இ, கே, பி12 போன்ற வைட்டமின்கள், இரும்பு, துத்தநாகம் போன்ற தாதுக்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் காணப்படும். சுமார் 50 கலோரிகளையும் கொண்டிருக்கும்.
எது சிறந்தது?
சமச்சீரான ஊட்டச்சத்தை நாடுபவர்களுக்கு வெள்ளை கரு, மஞ்சள் கரு இரண்டும் கலந்த முழு முட்டையே சிறந்தது. முட்டையின் மஞ்சள் கரு ஒட்டுமொத்த ஊட்டச்சத்து தேவைகளை நிவர்த்தி செய்துவிடும்.
அதே நேரத்தில் கலோரிகள், கொழுப்பு அளவை கட்டுக்குள் வைத்துக்கொள்ள முயற்சிப்பவர்களுக்கு முட்டையின் வெள்ளைக்கரு சிறந்தது. மூளை ஆரோக்கியம், கண் ஆரோக்கியம், தசை வளர்ச்சிக்கு முட்டையின் மஞ்சள் கரு சிறந்த தேர்வாக அமையும்.
- பொதுவாகவே குளிர் காலத்தில் வானிலை குளிர்ச்சியாக இருக்கும்.
- தயிரே குளிர்ச்சியானது. அதனை குளிர்சாதன பெட்டியில் இருந்து நேரடியாக எடுத்து சாப்பிடுவது ஏற்புடையதல்ல.
தயிர் ஆரோக்கியத்திற்கு நன்மை சேர்க்கக்கூடியது. அதில் உள்ள ஊட்டச்சத்துகள் ஏராளமான நன்மைகளை அளிக்க வல்லது. ஆனாலும் குளிர் காலத்தில் தயிர் சாப்பிடுவது நல்லதல்ல என்று பலர் நினைக்கிறார்கள். சளியை உண்டாக்கிவிடும் என்ற எண்ணமே அதற்கு காரணம். சளி, இருமல் ஏற்படாத வண்ணம் தயிரை எப்படி சாப்பிடுவது என்று கேட்கிறீர்களா?
பொதுவாகவே குளிர் காலத்தில் வானிலை குளிர்ச்சியாக இருக்கும். தயிரும் குளிர்ச்சி தன்மை கொண்டது. அப்படியிருக்கையில் குளிர்ந்த அல்லது குளிர்சாதன பெட்டியில் வைத்த தயிரை சாப்பிட்டால் உடல் வெப்பநிலை குறைந்து குளிர்ச்சி அடையக்கூடும். தொண்டை வலி அல்லது சளிக்கு வழி வகுக்கும். அதனால் அந்த தவறை செய்யாதீர்கள்.
எப்படி சாப்பிடலாம்?
தயிரே குளிர்ச்சியானது. அதனை குளிர்சாதன பெட்டியில் இருந்து நேரடியாக எடுத்து சாப்பிடுவது ஏற்புடையதல்ல. அறை வெப்பநிலையில் தயிரை சாப்பிடுவதுதான் சரியானது. குளிர் சாதனப்பெட்டியில் இருந்து எடுத்தால் அரை மணி நேரம் கழித்து உட்கொள்வது நல்லது.
இரவில் தயிர் சாப்பிடுவதும் கூடாது. அதன் குளிர்ச்சித்தன்மை உடல் வெப்பநிலையை மேலும் குறைத்து சளியை அதிகரிக்க செய்துவிடும். எனவே, காலையிலோ அல்லது மதிய உணவிலோ தயிர் கலந்து சாப்பிடுவது நல்லது.
யார் சாப்பிடக்கூடாது?
இருமல், சளி, சைனஸ் பிரச்சனை உள்ளவர்கள் குளிர் காலத்தில் தயிர் சாப்பிடுவதை குறைத்துக்கொள்வதோ அல்லது தற்காலிகமாக நிறுத்திக்கொள்வதோ நல்லது.
குளிர் காலத்திலும் தயிர் ஏன் சாப்பிட வேண்டும்?
குளிர்காலத்தில் இயல்பாகவே பசி உணர்வு அதிகரிக்கும். உடல் குளிர்ச்சி தன்மைக்கு மாறுவதை தடுத்து, உடல் சூடாக இருக்க அதிக கலோரிகள் எரிக்கப்படும். அப்படி வெப்பத்தை உருவாக்க உடல் அதிக சக்தியை பயன்படுத்துவது பசியை தூண்டி விட்டு விடும். அதனை கட்டுப்படுத்துவதற்கு வழக்கத்தை விட அதிகமாக சாப்பிட தோன்றும். அப்படி கனமான உணவுகளை சாப்பிடுவது செரிமான செயல்திறனை குறைக்கும். அந்த சமயத்தில் தயிர் சாப்பிடுவது உணவை எளிதில் ஜீரணிக்க உதவும். அஜீரணத்தையும் குறைக்கும். வயிற்று ஆரோக்கியத்தையும் காக்கும். அதனால் குளிர் காலத்தில் தயிரை தவிர்க்கக்கூடாது.
சருமத்துக்கும் நன்மை பயக்குமா?
குளிர் காலத்தில் தோல் வறண்டு போகும். தயிரில் உள்ளடங்கி இருக்கும் லாக்டிக் அமிலம் சருமத்தை மென்மையாக வைத்திருக்க உதவும். முகத்துக்கு 'பேஸ் பேக்'காகவும் தயிரை பயன்படுத்தலாம். தயிரில் இருக்கும் கால்சியம், வைட்டமின் டி போன்றவை எலும்புகள் மற்றும் பற்களை வலுப்படுத்தும்.
- ஒரு நாளில் சில நிமிடங்கள் முதல் மணித்துளி வரை நடைப்பயிற்சி செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
- 30 நிமிடங்கள் நடந்தால் உடலில் தேவை இல்லாத கொழுப்பு கரைந்து வெளியேற தொடங்குகிறது.
ஆதிகாலத்தில் மனிதர்கள் வயிற்று பசிக்கு உணவைத்தேடி காடுகள், மலைகளில் நடந்து வேட்டையாடி கிடைத்ததை உண்டு வாழ்ந்தார்கள். இயற்கையான வாழ்வில் உடல் உறுதியாக இருந்தது. உடலில் வலுவான நோய் எதிர்ப்பு சக்தி இருந்ததால் பெரிய அளவில் நோய்களின் தாக்கம் இல்லை.
வண்டி சக்கரம் மற்றும் வேட்டை ஆயுதங்கள் கண்டு பிடிக்கப்பட்ட பிறகு மனிதன் இலகுவாக உணவை வேட்டையாட தொழில்நுட்பங்களை கண்டுபிடித்தான். இந்த தொழில்நுட்ப வளர்ச்சி இன்றைக்கு உட்கார்ந்த இடத்தில் இருந்து பிரபஞ்சத்தில் பல லட்சம் மைல் தொலைவில் இருக்கும் கோள்களுக்கு ராக்கெட்டுகளை அனுப்பும் அளவுக்கு விரிவாகி இருக்கிறது. ஆனால், மனிதனின் வாழ்வியல் நடந்து ஓடி உணவு தேடும் தேவை குறைந்து போனதால் நோய்களின் இருப்பிடமாக மாறி வருகிறது. இதனை தவிர்க்க, ஒரு நாளில் சில நிமிடங்கள் முதல் மணித்துளி வரை நடைப்பயிற்சி செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
உலக அளவில் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட ஆய்வில் நடைப்பயிற்சி பல்வேறு பலன்களை தருவதாக கண்டறியப்பட்டுள்ளது. அதாவது 5 நிமிடங்கள் நடந்தால் மனநிலை மேம்படுகிறது. 10 நிமிடங்கள் நடந்தால் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் கார்டிசோல் ஹார்மோன் அளவு குறைந்து மனதில் அமைதி ஏற்படுகிறது. 15 நிமிடங்கள் நடந்தால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு வெகுவாக குறைகிறது. 30 நிமிடங்கள் நடந்தால் உடலில் தேவை இல்லாத கொழுப்பு கரைந்து வெளியேற தொடங்குகிறது. 45 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்தால் மனதில் இருக்கும் தேவை இல்லாத குழப்பங்கள் நீங்க, சிந்தனை குறைந்து தெளிவான மனநிலை ஏற்படுகிறது. 60 நிமிடங்கள் நடந்தால் மனதில் உற்சாகம் பிறக்கிறது என்று ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
இதையெல்லாம் விட தினமும் நடந்தால் உடலில் ரத்த சுழற்சி சீராக நடந்து உடலின் அனைத்து உறுப்புகளும் புத்துணர்வுடன் இயங்குகின்றன என்று மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன. இவ்வாறு நன்மை தரும் நடைப்பயிற்சியை நாமும் மேற்கொள்ளலாம்.
- ஆழ்நிலை தியானத்தில் பயிற்சி பெற்ற பலரை பல்வேறு நகரங்களில் குழுவாக தியானம் செய்ய வைத்தனர்.
- ஒரு மனிதரிடம் நல்ல உணர்வுகள் வெளிப்படும் போது அது சக மனிதர்களை அமைதிப்படுத்துகிறது என்பது உண்மை.
தியானம் பல நாடுகளில் பல்வேறு வடிவங்களில் பயிற்சியாக கற்று தரப்படுகிறது. இந்த தியானத்தால் ஒரு மனிதனின் உடலில் நல்ல மாற்றங்கள் ஏற்படுகின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். பல்வேறு நோய்களை போக்க தியானம் ஒரு சிறந்த வழி என்று மருத்துவர்கள் கூட பரிந்துரைக்கின்றனர்.
இது ஒரு புறம் இருக்க, ஒருவர் அல்லது ஒரு குழு செய்யும் தியானம் என்ன மாதிரியான விளைவுகளை சமூகத்தில் ஏற்படுத்துகிறது என்று ஆய்வு செய்ய அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் முடிவு செய்தனர்.
ஆழ்நிலை தியானத்தில் பயிற்சி பெற்ற பலரை பல்வேறு நகரங்களில் குழுவாக தியானம் செய்ய வைத்தனர். பின்னர் இந்த தியான நிகழ்வு நடைபெற்ற நகரங்களில் அந்த தியான நிகழ்வுக்கு முன் பின் நடைபெற்ற சம்பவங்களை ஆய்வு செய்தனர். அதில், இந்த தியான நிகழ்வுக்கு பிறகு அந்த நகரங்களில் குற்றம், வன்முறை சம்பவங்கள், விபத்துகள், நோயாளிகள் எண்ணிக்கை குறைந்து காணப்பட்டது.
இது போன்ற மாற்றங்களுக்கு காரணம் என்னவாக இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் விவாதித்தனர். அதில், தோராயமாக ஒரு நகரில் வெறும் 1 சதவீத மக்கள் தொடர்ந்து தியானம் செய்தால், அந்த இடத்தில் இருந்து பரவும் கண்ணுக்கு தெரியாத அமைதி அலைகள் அந்த நகரைச் சுற்றி சுமார் 5 மைல் தொலைவுக்கு ஒரு வித அமைதியை அந்த பகுதியில் வாழும் மனிதர்களிடத்தில் ஏற்படுத்துகிறது. இது அந்த பகுதியில் வாழும் தியானத்தில் ஈடுபடாத மக்களின் மனதில் மாற்றத்தை உருவாக்கி அமைதியை உருவாக்குவதால் அந்த மக்களின் மன அழுத்தம் குறையத் தொடங்குகிறது. பொதுவாக மனிதர்கள் ஒருவரையொருவர் ஏதோ ஒரு வகையில் பாதிக்கின்றனர். ஒரு மனிதரிடம் நல்ல உணர்வுகள் வெளிப்படும் போது அது சக மனிதர்களை அமைதிப்படுத்துகிறது என்பது உண்மை. பொதுவாக தியானம் அமைதியை தருகிறது. அது ஒரு சமூகத்தில் பரவும் போது ஒட்டுமொத்த சமூகமும் அமைதிக்கு திரும்புகிறது என்றனர்.






