என் மலர்
நீங்கள் தேடியது "உடல்நலம்"
- உருளைக்கிழங்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டிருக்கிறது.
- உருளைக்கிழங்கு சாறு பருகுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்ப்போம்.
உருளைக்கிழங்கு அதிகம் சேர்த்துக்கொள்வது உடல் பருமன் பிரச்சினைக்கு வழிவகுக்கும் என்ற கருத்து நிலவுகிறது. அது உண்மைதான் என்றாலும் உருளைக்கிழங்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டிருக்கிறது. உருளைக்கிழங்கை சாறு எடுத்தும் பருகலாம். அது காரத்தன்மை வாய்ந்தது என்றாலும் உடலில் அமிலத்தன்மையை குறைக்க உதவும். கருவளையம், கண் வீக்கம் போன்ற பிரச்சினைகளையும் போக்கும் தன்மை கொண்டது. உருளைக்கிழங்கு சாறு பருகுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்ப்போம்.
* உருளைக்கிழங்கு சாறு வயிற்றில் அமிலத்தன்மையை சீராக்கும் திறன் கொண்டது. அசிடிட்டி பிரச்சினை ஏற்படும்போது 50 மி.லி முதல் 100 மி.லி வரை உருளைக்கிழங்கு சாறு பருகலாம்.
* அல்சர் பாதிப்புக்கு நிவாரணம் தரும் தன்மை உருளைக்கிழங்கு சாறுக்கு இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
* கருவளையத்தால் பாதிக்கப் படுபவர்கள் உருளைக்கிழங்கு சாறு பருகி வரலாம். கண்களுக்கு அடிப்பகுதியிலும் உருளைக்கிழங்கு சாறை தடவி வரலாம். அல்லது மெல்லிய உருளைக்கிழங்கு துண்டுகளை கண்களின் மேல் அரை மணி நேரம் வைத்திருக்கலாம்.
* கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களை சுத்தப்படுத்துவதற்கு உருளைக்கிழங்கு சாறு உதவும்.
* முகம் மற்றும் கண்கள் வீங்கி இருந்தால் உருளைக்கிழங்கு சாறை உபயோகிக்கலாம். அதில் இருக்கும் நீர்ச்சத்து வீக்கத்தை குறைக்கும். சருமத்திற்கு இயற்கையான பளபளப்பையும் கொடுக்கும்.
* உருளைக்கிழங்கில் வைட்டமின் பி சத்து நிறைந்துள்ளது. அது மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவி புரியும்.
* ஒரு டம்ளர் உருளைக்கிழங்கு சாறு பருகுவதன் மூலம் ஒருநாளைக்கு தேவையான வைட்டமின் சி சத்தை ஏறக்குறைய பெற்றுவிடலாம். சாப்பிடும் உணவில் வைட்டமின் சி இருப்பது உடலில் இரும்புச் சத்தை உறிஞ்சுவதை மேம்படுத்த உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.
* துத்தநாகம், கால்சியம் மற்றும் வைட்டமின் கே ஆகியவை உருளைக்கிழங்கில் உள்ள மற்ற அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள். இந்த வைட்டமின்கள் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.
* தோல் அழற்சி உள்ளவர்களுக்கு உருளைக்கிழங்கு சாறு உதவியாக இருக்கும். பொடுகு பிரச்சினை கொண்டவர்கள் உருளைக்கிழங்கு சாறை உச்சந்தலையில் தடவி வருவதன் மூலம் நிவாரணம் பெறலாம்.
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- உணவு பழக்கத்தில் செய்யும் சில தவறுகளும் நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கக்கூடும்.
- வாழ்க்கைமுறையில் சில எளிய மாற்றங்களைச் செய்வதன் மூலம் நீரிழிவு நோய் வராமல் தற்காத்துக்கொள்ளலாம்.
நீரிழிவு நோய் பாதிப்புக்குள்ளாகுபவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் உயர்ந்து கொண்டிருக்கிறது. உணவு பழக்கத்தில் செய்யும் சில தவறுகளும் நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கக்கூடும். உண்ணும் உணவை உடலானது ஆற்றலாக மாற்றுவதற்கு உள்ளுறுப்புகளின் செயல்பாடுகள் சீராக நடைபெற வேண்டும்.
குறிப்பாக கணையத்தால் இன்சுலினை உற்பத்தி செய்ய முடியாத போது அல்லது அது உற்பத்தி செய்யும் இன்சுலினை உடலால் சரியாக பயன்படுத்த முடியாத போது நீரிழிவு நோய் உண்டாகிறது. வாழ்க்கைமுறையில் சில எளிய மாற்றங்களைச் செய்வதன் மூலம் நீரிழிவு நோய் வராமல் தற்காத்துக்கொள்ளலாம்.
தினமும் தயிர் சாப்பிடுவது
தயிர் ஆரோக்கியமான புரோபயாடிக் உணவாகக் கருதப்பட்டாலும், அதை தினமும் உணவில் சேர்க்க முயற்சிப்பது தவறானது. தினமும் தயிர் சாப்பிடும்படி ஆயுர்வேதம் பரிந்துரைக்கவில்லை.
தினமும் தயிர் சாப்பிடுவது உடல் பருமனுக்கு வழிவகுக்கும். மோசமான வளர்சிதை மாற்றத்திற்கும் வித்திடும்.
தாமதமாக சாப்பிடுவது
இரவு உணவை தாமதமாக சாப்பிடும் வழக்கத்தை பலரும் பின்பற்றுகிறார்கள். அதனால் செரிமான அமைப்புக்கு போதிய நேரம் கொடுக்க முடியாத நிலை ஏற்படும். இரவு உணவை அதிகமாக சாப்பிடுவதும் செரிமானம் தாமதமாக நடைபெறுவதற்கு வழிவகுக்கும். இரவில் அதிக உணவு உட்கொள்வது கல்லீரலுக்கும் சுமையை உண்டாக்கும். வளர்சிதை மாற்றத்தை மெதுவாக்கும். இறுதியில் ஊட்டச்சத்து குறைபாடு உள்பட பல்வேறு உடல்நல பிரச்சினைகளை ஏற்படுத்திவிடும்.
அதிகமாக சாப்பிடுவது
உணவை அளவோடுதான் உட்கொள்ள வேண்டும். வயிற்றுக்கு போதுமான அளவு சாப்பிட்டதாக உணர்ந்தாலும் தட்டில் இருக்கும் உணவை வீணாக்காமல் உட்கொள்ளும் பழக்கத்தை பலரும் பின்பற்றுகிறார்கள். அது அதிகமாக உணவு உட்கொள்வதற்கு காரணமாகிவிடுகிறது. ஆரம்பத்திலேயே குறைவாக உணவை தட்டில் வைத்து சாப்பிடும் பழக்கத்தை பின்பற்ற வேண்டும்.
அதன் பிறகு தேவைக்கு ஏற்ப உணவை பரிமாறிக்கொள்ளலாம். அதனால் உணவு வீணாகாது. அளவுக்கு அதிகமாக சாப்பிட வேண்டிய நிர்பந்தமும் ஏற்படாது. பசி நீங்கிய பிறகும் அதிகமாக சாப்பிடுவது உடல் பருமன், கொலஸ்ட்ரால், செரிமான கோளாறு போன்ற பிரச்சினைகளை உண்டாக்கும்.
பசியின்றி உண்பது
உடலின் சமிக்ஞைகளை கவனிக்காமல் சாப்பிடும் பழக்கத்தை நிறைய பேர் கொண்டிருக்கிறார்கள். பசி எடுக்காவிட்டாலும் குறிப்பிட்ட நேரத்திற்குள் ஸ்நாக்ஸ், ஜூஸ், பலகாரம் சாப்பிடுவார்கள். உணவும் அப்படித்தான். ஏற்கனவே வயிறு நிரம்பி இருந்து பசி எடுக்காவிட்டாலும் சாப்பிடும் வழக்கத்தை சிலர் கொண்டிருப்பார்கள்.
இரண்டு மூன்று மணி நேரத்திற்கு இடையே பசி எடுக்காவிட்டாலும் சாப்பிட்டுக்கொண்டே இருப்பார்கள். அப்படி சாப்பிடுவது இன்சுலின் உணர்திறனை குறைத்துவிடும். ஊட்டச்சத்து உறிஞ்சுதல் செயல்பாட்டுக்கு இடையூறு ஏற்படுத்தும். குடல் வீக்கத்தை அதிகரிக்கும். இறுதியில் நீரிழிவு நோய்க்கு வழிவகுத்துவிடும்.
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- இது மரபியல் கோளாறு காரணமாக ஏற்படும் நோய்.
- இதை பரம்பரை நோய் என்கிறார்கள்.
காயம் ஏற்படும்போது ரத்தம் வழியும். சில நிமிடங்களில் ரத்தம் வெளியேறுவது தானாகவே நின்றுவிடும் அல்லவா? அப்படி ரத்தம் வெளியேறுவது நிற்காமல், தொடர்ந்து வெளியேறினால்? அதுதான் ரத்தம் உறையாமை நோய். ஒருவருக்குக் காயம் ஏற்பட்டு ரத்தம் தொடர்ந்து வெளியேறிக்கொண்டே இருந்தால் உயிரிழப்பு ஏற்பட்டுவிடும்.
இது மரபியல் கோளாறு காரணமாக ஏற்படும் நோய். உலகில் 10 ஆயிரம் பேரில் ஒருவருக்கு இந்நோய் ஏற்படுவதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. குடும்பத்தில் யாருக்காவது இந்த நோய் இருந்தால், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைக்கும் இந்த நோய் ஏற்படலாம். எனவே, இதை பரம்பரை நோய் என்கிறார்கள். ரத்த உறவில் திருமணம் செய்வதன் மூலம், இந்நோய் ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
தாயின் கருவில் உருவாகும் குழந்தையின் பாலினத்தை தீர்மானிக்கும் குரோமோசோம்களில் ஏற்படும் குறைபாடே இந்நோய் ஏற்படக் காரணம். இந்த நோய் உள்ளவர்கள் பல பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். உடலில் எங்கும் காயம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். காயம் காரணமாக ஏற்படும் ரத்தக்கசிவு சிக்கலை உண்டாக்கிவிடும். சிலருக்கு எந்தக் காரணமும் இல்லாமல்கூட ரத்தக்கசிவு ஏற்படலாம் என்கிறார்கள், நிபுணர்கள்.
இந்த நோயை எப்படி கண்டுபிடிப்பது? எனக்ேகட்டால், பிறந்த குழந்தைக்கு தொப்புள்கொடி விழுந்த பிறகு ரத்தம் நிற்காமல் வெளியேறுவது, பல் விழுந்த பிறகு அல்லது பல் எடுத்த பிறகு தொடர்ந்து ரத்தக்கசிவு ஏற்படுவது, உடலில் எங்கேயாவது காயம் ஏற்பட்டு ரத்தக்கசிவு நிற்காமல் இருப்பது, உடலில் நீல நிற தழும்புகள் தோன்றி மறைவது, கால் மூட்டுகள் மீண்டும் மீண்டும் வீங்கி வலிப்பது போன்ற அறிகுறிகள் இருந்தால் ரத்தம் உறையாமை நோய் இருக்கலாம். இந்நோயைக் குணப்படுத்துவது மிகவும் கடினம். ரத்தம், பிளாஸ்மா செலுத்துவது மற்றும் உறை நிலை மருந்துகளைச் செலுத்துவது என முறையான சிகிச்சையின் மூலம் நோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முடியும் என்பது மருத்துவர்களின் அறிவுரை.
- நீரிழிவு நோயால் ஏறக்குறைய உடம்பில் அனைத்து உறுப்புகளும் பாதிப்படைகின்றன.
- கீழ்க்கண்ட பாதிப்புகள் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.
நீரிழிவு நோயால் ஏறக்குறைய உடம்பில் அனைத்து உறுப்புகளும் பாதிப்படைகின்றன. கீழ்க்கண்ட பாதிப்புகள் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது:
இதய பாதிப்பு: நீரிழிவு நோயாளிகளுக்கு இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டம் குறைந்து மாரடைப்பு, இதய தசை நோய் (Cardiomyopathy), உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது.
மன ஆரோக்கிய பாதிப்பு: நீரிழிவு நோயாளிகளுக்கு மன அழுத்தத்தினால் கோபம், எரிச்சல், வெறுப்பு, சலிப்பு போன்றவை ஏற்படலாம்.
கண் பாதிப்பு: கண் விழித்திரை பாதிப்பு, கண் அழுத்த நோய் (Glaucoma), கண் புரை போன்ற கண் பார்வை குறைபாடு பிரச்சினைகள் வரலாம்.
சிறுநீரக பாதிப்பு: நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்த நாளங்கள் மற்றும் சிறுநீரக செல்கள் பாதிப்படைவதால் சிறுநீரகங்கள் வீக்கம் அடைகின்றன. ரத்தம் வடிகட்டும் செயல்பாடு குறைவதால் சிறுநீரக செயலிழப்பு ஏற்படுகிறது.
நரம்பு மண்டல பாதிப்பு: ரத்த சர்க்கரை அதிகமாகும்போது மூளையில் உள்ள நரம்பு செல்கள் பாதிப்படைந்து டிமென்ஷியா, பக்கவாதம் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.
சரும பிரச்சினைகள்: நீரிழிவு நோயாளிகள் சருமத்தில் கருமையாதல், சருமத்தில் தடிப்பு உருவாகுதல் (அகான்த்தோஸிஸ் நைக்ரிகன்ஸ்), தோல் தொற்று, கொப்பளங்கள், தோல் வறட்சி, அரிப்பு போன்றவை ஏற்படலாம்.
நோய் எதிர்ப்பு மண்டல பாதிப்பு: ரத்த சர்க்கரை அதிகமாகும்போது நோய் எதிர்ப்பு மண்டலம் வலுவிழந்து தொற்றுகள் ஏற்பட வழி வகுக்கிறது.
நீரிழிவு மாத்திரைகளை சரியான நேரத்திலும் அளவிலும் உட்கொண்டால் ரத்த சர்க்கரை அளவு கட்டுப்படுத்தப்பட்டு இந்த பாதிப்புகள் பெருமளவு குறையும்.
- குழந்தைகளின் உடல் நலனில் அக்கறை கொள்வது மிகவும் அவசியம்.
- குழந்தைகளுக்கு மெல்லிய பருத்தி ஆடைகளை உபயோகிப்பதே நல்லது.
நட்சத்திரம் ஆரம்பித்து விட்டதால் முன்பை விட வெயில் அதிகமாக வாட்டி வதைக்கின்றது.குழந்தைகளுக்கும் கோடை விடுமுறை என்பதால் அவர்களை வீட்டில் அதிக நேரம் பூட்டி வைக்க முடியாது.அதற்கு மேல் பூட்டி வைத்தால் அவர்களின் விளையாட்டு மொபைல் போன்களிலும்,தொலைக்காட்சிகளிலும் கழியும். ஆனால்,அது குழந்தைகளின் உடல் நலனை பாதிக்கும்.அதனால் குழந்தைகளை காலை மற்றும் மாலை நேரங்களில் வெளியில் விளையாட அனுமதிப்பதே சிறந்தது.அதே நேரம் குழந்தைகளின் உடல் நலனில் அக்கறை கொள்வது மிகவும் அவசியம்.
குழந்தைகள் பொதுவாக விளையாடும் ஆர்வத்தில் உடலுக்கு தேவையான தண்ணீர் அருந்துவதை மறக்கின்றனர்.அதே நேரம் விளையாடும் பொழுது உடலில் உள்ள தண்ணீர் வியர்வையாக அதிகம் வெளியேறுகின்றது.எனவே உடலுக்குள் செல்வதைவிட அதிக அளவு திரவம் வெளியேறும்போது உடலில் நீர் வறட்சி ஏற்படுகின்றது. அதிக தாகம் எடுத்தல்,சிறுநீர் சிறிது சிறிதாக வெளியேறுதல் மற்றும் அடர்மஞ்சள் நிறத்தில் வெளியேறுதல் ஆகியவை இதற்கான அறிகுறிகள் ஆகும்.இந்த நேரத்தில் குழந்தைகளுக்கு குடிக்க அதிக அளவில் தண்ணீர்,இளநீர் மற்றும் ஓ. ஆர் .எஸ் பவுடர் முதலியவற்றை கொடுக்கலாம். இது உடலுக்கு தேவையான மினெரல் மற்றும் உப்பு ஆகியவற்றை தக்க வைத்துக்கொள்ள உதவும்.
வெப்பத்தின் தாக்கம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அதிகமாக இருக்கும். எனவே,அந்த நேரத்தில் குழந்தைகளை வெளியில் அழைத்து செல்வதை தவிர்க்கலாம்.ஆறு மாதத்திற்கு கீழ் உள்ள குழந்தைகளை வெளியில் அழைத்து செல்லாமல் இருப்பதே சிறந்தது. ஏ.சி அறை என்றால், குளிர் 24 டிகிரி அளவில் இருப்பது போல் வைக்க வேண்டும். எப்போதும் ஏ.சி அறையிலேயே வைத்திருப்பதும் கூடாது.குழந்தைகள் வெளியில் செல்ல நேர்ந்தால் 15 நிமிடங்களுக்கு முன்பே சன் ஸ்கிரீன் பூசி விட வேண்டும்.
வெயில் காலத்தில் குழந்தைகளை அதிகமான துணிகள் கொண்டு சுற்றினால் உடலின் வெப்பநிலை அதிகரிக்ககூடும். எனவே, குழந்தைகளுக்கு மெல்லிய பருத்தி ஆடைகளை உபயோகிப்பதே நல்லது.மிக மிருதுவான ஒரு பருத்தித் துணியால் போர்த்தினால் போதும். குழந்தைகளின் உடலுக்கு எரிச்சலை ஏற்படுத்தும் கனமான கவுன் முதலியவைகளை அணிய கூடாது.இரவு நேரத்தில் இன்னும் கூடுதலாக கவனம் தேவை.
கோடை காலத்தில் குளிர்ச்சியான உணவுபொருட்களை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். ராகி, கம்பு,பார்லி போன்ற உணவு பொருட்கள் கோடை காலத்தில் உண்பதற்கு ஏற்றவை.அதே போல சீரகம், கொத்துமல்லி முதலியவற்றையும் சாப்பிடலாம்.குழந்தைகளுக்கு 6 மாதத்திற்கு பின் திட உணவு கொடுக்க ஆரம்பிக்கும் பொழுது மேற்கண்ட பொருட்களை உணவுடன் சேர்த்து பார்லி வாட்டர், ராகி கஞ்சி, கம்பு கஞ்சி போன்ற வித விதமாவிதமான ரெசிபிக்களை சமைத்து கொடுக்கலாம். அதே போல் தண்ணீர்ச்சத்து அதிகமுள்ள, பழங்களையும் சாப்பிட அடிக்கடி கொடுக்க வேண்டும்.
- உடல் வெப்பநிலை அதிகரிக்கும்போது குடலின் ஆரோக்கியம் பாதிப்புக்குள்ளாகும்.
- வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸை தாண்டும்போது வயிறு தொடர்பான பிரச்சினைகள் அதிகரிக்கும்.
கோடை காலத்தில் வயிறு தொடர்பான பிரச்சினைகள் எட்டிப்பார்க்கும். உடல் வெப்பநிலை அதிகரிக்கும்போது குடலின் ஆரோக்கியம் பாதிப்புக்குள்ளாகும். மலச்சிக்கல், நெஞ்செரிச்சல், குடல் எரிச்சல், சிரோசிஸ் போன்ற இரைப்பை குடல் நோய்களுக்கு வழிவகுக்கும். "வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸை தாண்டும்போது வயிறு தொடர்பான பிரச்சினைகளை எதிர்கொள்ளும் நோயாளிகளின் எண்ணிக்கை உயரத்தொடங்கும்.
அப்படி வெப்பநிலை உயர்வது நோய் எதிர்ப்பு அமைப்பையும் பலவீனப் படுத்திவிடும். உடலில் பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்க தொடங்கும். சமைத்த உணவு 4-5 மணி நேரத்திற்கு பிறகு கெட்டுப்போய்விடும். அதனால் உணவு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் வயிற்று பிரச்சினை தவிர்க்கமுடியாததாகிவிடும்" என்கிறார், மருத்துவ நிபுணர் ராம் ஆஷிஷ் யாதவ்.
வெப்பநிலை உயர்வு குடல் நோய்களுக்கு வழி வகுக்கும் என்பதால் இரைப்பையின் ஆரோக்கியத்தை பாதுகாக்க வேண்டியது அவசியம்.
சமைத்த உணவுகளை 4 மணி நேரத்திற்குள் உட்கொண்டுவிட வேண்டும். குறிப்பாக மதியம் சமைத்த உணவை இரவு நேரத்தில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
சமைத்த உணவு மற்றும் தண்ணீர் நிரப்பி இருக்கும் பாத்திரங்களை எப்போதும் மூடி வைக்க வேண்டும்.
நறுக்கிய காய்கறிகள், பழங்களை இரவில் குளிர்சாதன பெட்டியில் வைப்பதை தவிர்க்க வேண்டும்.
அதிக உடல் உழைப்பு கொண்ட வேலைகளில் ஈடுபட்டிருந்தாலோ அல்லது சூரிய ஒளி உடலில் படும்படியான வேலைகளை மேற்கொண்டிருந்தாலோ குறைந்தது 5 லிட்டர் தண்ணீராவது பருகவேண்டும். மற்றவர்கள் 4 லிட்டர் வரை தண்ணீர் பருகுவது அவசியமானது.
வீட்டை விட்டு வெளியே செல்லும்போது சூரிய ஒளி தலையில் விழாமல் இருப்பதற்கு குடையையோ, தொப்பியையோ பயன்படுத்துவது நல்லது.
தண்ணீரை தவிர கரும்பு சாறு, பதநீர், மோர், பழச்சாறுகள் போன்ற பானங்களை பருகுவது உடலுக்கு புத்துணர்ச்சியூட்டும். உணவில் தயிரை தவறாமல் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
மசாலா மற்றும் எண்ணெய் நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். பதப்படுத்தப்பட்ட உணவுவகைகளையும் தவிர்த்துவிடலாம்.
கோடைகாலத்தில் வயிற்றை ஆரோக்கியமாக வைத்திருக்க மற்றொரு சிறந்த வழி பருவ காலத்தில் கிடைக்கும் பழங்களை உட்கொள்வதுதான். அவற்றில் உள்ளடங்கி இருக்கும் நீர்ச்சத்து உடலுக்கு குளிர்ச்சி தரும். தர்ப்பூசணி, முலாம் பழம், ஸ்டாபெர்ரி, பிளம்ஸ், பப்பாளி, அன்னாசி, கொய்யா போன்றவற்றில் ஏதாவது ஒன்றை சாப்பிடலாம். ஜூஸாக தயாரித்தும் பருகலாம். சாலட்டுகளாகவும் சாப்பிடலாம்.
இரைப்பை குடல் நோய் தொடர்பான அறிகுறிகள் தென்பட்டால் சுய மருத்துவத்தை தவிர்க்க வேண்டும். அது நிலைமையை மோசமாக்கும். இரண்டு நாட்களுக்கு மேல் வயிறு தொடர்பான அசவுகரியங்களை எதிர்கொண்டால் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டியது அவசியம்.
கோடை காலத்தில் குழந்தைகள் உடல் நலனில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். அவர்களை அடிக்கடி வெளியே செல்ல அனுமதிக்காதீர்கள். அவர்கள் உட்கொள்ளும் உணவை கண்காணிப்பதும் அவசியம்.
- செம்பு பாத்திரத்தில் தண்ணீர் பருகும் வழக்கமும் அதிகரித்து இருக்கிறது.
- செம்பு தண்ணீரை எவ்வளவு பருக வேண்டும் என்ற விதிமுறை உள்ளது.
கொரோனா ஏற்படுத்தி சென்ற படிப்பினை காரணமாக முன்னோர்கள் பின்பற்றி வந்த வாழ்வியல் பழக்கங்களை பலரும் பின்பற்ற தொடங்கிவிட்டார்கள். பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில் ஏற்படுத்தும் கேடுகளை உணர்ந்து அலுமினியம், களிமண், மூங்கில், செம்பு போன்றவற்றில் தயாராகும் பாட்டில்களை பயன்படுத்துவதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள்.
செம்பு பாத்திரத்தில் தண்ணீர் பருகும் வழக்கமும் அதிகரித்து இருக்கிறது. வெளி இடங்களுக்கு செல்லும்போது செம்பு பாட்டிலில் தண்ணீரை நிரப்பி பருகுகிறார்கள். ஆனால் செம்பு பாத்திரத்தில் சேமித்து வைக்கப்படும் தண்ணீரை அடிக்கடி பருகுவது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
செம்பு பொருட்களை உபயோகப்படுத்துவது ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை தரும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ரத்த சிவப்பு அணுக்களை உருவாக்குவதிலும் செம்பு முக்கிய பங்கு வகிக்கிறது. நரம்பு செல்கள் மற்றும் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். கொலாஜன் உற்பத்தி, எலும்புகள் மற்றும் திசுக்களின் வளர்ச்சிக்கும் உதவும். மேலும் செம்பு சிறந்த ஆன்டி ஆக்சிடெண்டாக செயலாற்றக்கூடியது.
டி.என்.ஏ மற்றும் செல்களுக்கு தீங்கு விளைவிக்கும் பிரீ ரேடிக்கல்களின் வீரியத்தை கட்டுப்படுத்தக்கூடியது. உடல் போதுமான அளவுக்கு இரும்பு சத்தை உறிஞ்சுவதற்கும் செம்பு உதவுகிறது. இத்தகைய காரணத்திற்காக செம்பு பாட்டிலில் தண்ணீர் பருகுவது நல்லது என்று மருத்துவ நிபுணர்களும் பரிந்துரைக்கிறார்கள்.
ஆனால் செம்பு பாட்டில் தண்ணீரை அதிகம் பருகுவது ஆபத்தானது. நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஹெல்த் ஆப் டயட்டரி சப்ளிமெண்ட்ஸ் என்ற அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வு முடிவின்படி, செம்பு பாட்டில் தண்ணீரை பருகுவது உடலுக்கு சாதகமாக இருக்கும். ஆனால் எப்போதாவது பருகினால் மட்டுமே அதன் நன்மைகளை அனுபவிக்க முடியும். அடிக்கடி செம்பு பாட்டிலில் தண்ணீரை நிரப்புவது நச்சுத்தன்மையை ஏற்படுத்தக்கூடும். சரியாக பராமரிக்காவிட்டால் துருப்பிடிக்க வழிவகுக்கும். இது சிக்கலை அதிகப்படுத்திவிடும் என்று கூறப்பட்டுள்ளது.
செம்பு இயற்கையாகவே ரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை கொண்டது. தினமுமோ, அடிக்கடியோ செம்பு பாட்டில் தண்ணீரை பருகும்போது ரத்தத்தை சுத்திகரிக்கும் செயல்முறை இயல்பை விட அதிகமாக நடைபெறும். அதன் காரணமாக சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பாதிப்படையக்கூடும். செம்பு துகள்கள், படிகங்களை சுவாசிக்கும்போது தொண்டை, மூக்கு பகுதிகளில் எரிச்சல் உணர்வு ஏற்படலாம். தலைவலி, தலைச்சுற்றல் போன்ற பாதிப்புக்கு ஆளாக நேரிடலாம்.
செம்பு தண்ணீரை எவ்வளவு பருக வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. அதனை முழுமையாக பின்பற்றுவதன் மூலமே பக்கவிளைவுகள் இல்லாமல் செம்புவின் நன்மைகளை பெற முடியும். இரவில் 6 முதல் 8 மணி நேரம் தண்ணீரை செம்பு பாத்திரத்தில் சேமித்து வைத்து மறுநாள் பருகுவதுதான் சரியான வழிமுறை. இந்த தண்ணீரையும் ஒரு நாளைக்கு இரண்டு டம்ளர் மட்டுமே பருக வேண்டும். நாள் முழுவதும் பருகக்கூடாது.
காலையில் வெறும் வயிற்றில் பருகுவது சிறந்த பலனை கொடுக்கும். உலக சுகாதார நிறுவனத்தின் கருத்துபடி, ஒரு கப் தண்ணீரில் 0.47 மில்லி கிராம் மட்டுமே செம்பு கலந்திருக்க வேண்டும். அதாவது ஒரு லிட்டர் தண்ணீரில் 2 மில்லி கிராம் செம்பு மட்டுமே இருக்க வேண்டும். ஒரு நாளைக்கு 10 மில்லி கிராமுக்கு மேல் செம்பு உடலில் சேர்ந்தால் பாதிப்புகளை ஏற்படுத்திவிடும். அதனால் செம்பு பாத்திரத்தில் சேமிக்கப்படும் தண்ணீரை அளவோடு பருகுவதுதான் நல்லது.
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- உணவு சாப்பிட்டு முடித்ததும் செய்யும் குறிப்பிட்ட பழக்கங்கள் பலருக்கு இருக்கிறது.
- சாப்பிட்ட பிறகு தவிர்க்க வேண்டிய சில பழக்கவழக்கங்கள் குறித்து பார்ப்போம்.
உணவு சாப்பிட்டு முடித்ததும் குட்டித்தூக்கம் போடும் வழக்கம் பலருக்கு இருக்கிறது. அதனை தொடர்ந்து பின்பற்றுவது நெஞ்செரிச்சல், தூக்கத்தில் மூச்சுத்திணறல் ஏற்படுதல் மற்றும் குறட்டை பிரச்சினைக்கு வழிவகுக்கும். சிலர் டீ, காபி பருகுவார்கள். அப்படி பருகினால் உடல், இரும்புச்சத்தை உறிஞ்சுவது கடினமாகிவிடும். செரிமானத்திற்கும் இடையூறு ஏற்பட்டுவிடும். சாப்பிட்டு முடித்ததும் ஒரு மணி நேரத்திற்கு பிறகு டீ, காபி பருகலாம். சாப்பிட்ட பிறகு தவிர்க்க வேண்டிய மேலும் சில பழக்கவழக்கங்கள் குறித்து பார்ப்போம்.
தண்ணீர் பருகுதல்
சாப்பிடும்போதோ, சாப்பிட்டு முடித்த உடனேயோ தண்ணீர் பருகும் பழக்கம் நிறைய பேருக்கு இருக்கிறது. அப்படி தண்ணீர் பருகுவது செரிமானத்தை மெதுவாக்கும், அசிடிட்டி, வீக்கம் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்பதால் அதனை தவிர்க்க வேண்டும். உணவு உண்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு தண்ணீர் பருகலாம். அல்லது சாப்பிட்ட பிறகு ஒரு மணி நேரம் கழித்து உட்கொள்ளலாம்.
உடற்பயிற்சி செய்தல்
சாப்பிட்ட உடனேயே உடற்பயிற்சி செய்வது சரியானது அல்ல. இதுவும் செரிமான செயல்முறைக்கு இடையூறு விளைவிக்கும். செரிமானம் நடைபெறுவதற்கு உடலுக்கு போதுமான ஆற்றல் தேவைப்படும். உடற்பயிற்சி செய்யும்போது அந்த ஆற்றல் செலவிடப்படுவதால் செரிமானம் தடைபடும். வயிற்று பிடிப்பு, வாந்தி, குமட்டல் மற்றும் வயிற்று வலி போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
குளித்தல்
சாப்பிட்ட பிறகு செரிமானத்திற்கு உதவுவதற்காக ரத்தம் வயிற்றை சூழ்ந்திருக்கும். அந்த சமயத்தில் குளிக்கும்போது உடலின் வெப்பநிலை மாறத் தொடங்கும். உடலை அதன் அசல் வெப்பநிலைக்கு திருப்புவதற்காக வயிற்றில் இருந்து ரத்தத்தை திசை திருப்பும். இதனால் ரத்தத்தின் பங்களிப்பு குறைந்து செரிமானம் பாதிப்புக்குள்ளாகும். வழக்கத்தை விட மெதுவாக செரிமானம் நடக்கும். அது தேவையற்ற அசவுகரியங்களை ஏற்படுத்தும்.
பெல்ட்டை தளர்த்துதல்
உணவு உட்கொண்ட பிறகு பெல்ட்டை தளர்த்தும் வழக்கம் பலருக்கு இருக்கிறது. அதனை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அது இரைப்பையின் செயல்பாடுகளை தடுக்கும். பிற உடல்நல பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கும்.
புகை, மது பழக்கம்
சாப்பிட்ட பிறகு புகைப்பிடிப்பதும், மது அருந்துவதும் 10 மடங்கு கூடுதலாக தீங்கு விளைவிக்கும். சிகரெட்டில் உள்ள நிகோடின் ஆக்சிஜன் மற்றும் ஹீமோகுளோபினுடன் கலந்து உடலின் பிற பகுதிகளுக்கு செல்லும் ரத்த வினியோகத்தை தடுத்துவிடும். குடலில் எரிச்சலை உண்டாக்கும். புண்களையும் ஏற்படுத்தும்.
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- நெல்லிக்காய்னு சொன்னதுமே பெரிய நெல்லிக்காயா? சின்ன நெல்லிக்காயான்னுதான் நிறையபேர் கேள்வி கேப்பாங்க.
- நெல்லிக்காய் இதயத்தை பாதுகாக்குறதோட கொழுப்பை கரைக்கும். அதோட ரத்தக்குழாய்ல கொழுப்பு படியாம தடுக்கக்கூடியது.
இந்தியாவை பொறுத்தவரைக்கும் இன்றைக்கு பெரும்பாலானவர்கள் இதய நோய், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு ரொம்பவே அவதிப்பட்டு வர்றாங்க. அப்படிப்பட்டவங்க தினமும் காலையில வெறும் வயிற்றில் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தாலே போதும், நோயிலிருந்து நிவாரணம் பெறலாம்.
அதுசரி, நெல்லிக்காய்னு சொன்னதுமே பெரிய நெல்லிக்காயா? சின்ன நெல்லிக்காயான்னுதான் நிறையபேர் கேள்வி கேப்பாங்க. பொதுவா அரிநெல்லின்னு சொல்லக்கூடிய சின்ன நெல்லிக்காயை பெரும்பாலும் யாரும் பயன்படுத்துறது இல்லை. ஆனாலும் ஒரு கேள்வி கேட்டு வைப்பாங்க... நம்ம மக்கள். நெல்லிக்காய்... நாட்டு நெல்லிக்காய், எலுமிச்சம்பழம் அளவு பெரிதாக இருக்குமே அந்த நெல்லிக்காய்தான் நான் சொல்லக்கூடியது.
வெறுமனே நெல்லிக்காய் சாப்பிட முடியலைனா நெல்லிக்காயோட இஞ்சி சேர்த்து அரைச்சி அதோட எலுமிச்சை சாறு சேர்த்து சர்க்கரை, தேவைப்பட்டா உப்பும் சேர்த்து தண்ணி கலந்து சாப்பிடலாம். காலையில் டீக்கு பதிலாக இந்த ஜூஸை குடிக்கலாம்.
நெல்லிக்காய் இதயத்தை பாதுகாக்குறதோட கொழுப்பை கரைக்கும். அதோட ரத்தக்குழாய்ல கொழுப்பு படியாம தடுக்கக்கூடியது. கல்லீரல், கணையத்தை பாதுகாக்கும். அந்த வகையில கல்லீரல், கணையத்தில் வரக்கூடிய புற்றுநோய்களையும் சரி செய்யும் நெல்லிக்காய். ஏன்... ரகசியமா வரக்கூடிய எய்ட்ஸ் நோயைக்கூட நெல்லிக்காய் குணப்படுத்தும்னு ஆராய்ச்சியில கண்டுபிடிச்சிருக்காங்க. ஆனா நாம சாப்பிடுற முறையிலதான் நோய் குணமாகும்.
-மரியா பெல்சின்
- இறைச்சி வகைகளுடன் சேர்த்து பழங்களை உட்கொள்ளக்கூடாது.
- பழங்களை தனியாகத்தான் சாப்பிட வேண்டும்.
அசிடிட்டி, நெஞ்செரிச்சல் போன்ற உணர்வு, சளி, இருமல், ஒவ்வாமை, ஆஸ்துமா, காய்ச்சல், நுரையீரல் பாதிப்பு, மூச்சுக்குழாய் அழற்சி, நீரிழிவு, உடல் பருமன் போன்ற பிரச்சினைகள், அறிகுறிகள் கொண்டவர்கள் காலையில் வெறும் வயிற்றில் பழங்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
யார் பழங்களை சாப்பிடலாம்?
மலச்சிக்கல், சரும வறட்சி, வறண்ட கூந்தல், செரிமான கோளாறு, வளர்சிதை மாற்ற குறைபாடு போன்ற அறிகுறிகளை கொண்டவர்கள் பழங்களை சாப்பிடலாம். ஏனெனில் பழங்கள் குடலில் உள்ள பாக்டீரியாக்களின் செயல்பாடுகளை மேம்படுத்தும். செரிமான செயல்பாடுகளை தூண்டும்.
எப்படி சாப்பிட வேண்டும்?
பழங்களை தனியாகத்தான் சாப்பிட வேண்டும். சாப்பாட்டுடன் பழங்களை சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். காய்கறிகள், பால் பொருட்கள், தானியங்கள், இறைச்சி வகைகளுடன் சேர்த்து பழங்களை உட்கொள்ளக்கூடாது. ஏனெனில் அவை நச்சுத்தன்மையுடையதாக மாறிவிடும்.
காலையில் பழங்கள் சாப்பிடலாமா? வேண்டாமா? என்ற விவாதம் நீண்ட காலமாக நடந்து கொண்டிருக்கிறது. வெறும் வயிற்றில் பழங்களை சாப்பிட்டால் செரி மானம், சருமம், கூந்தல், வளர்சிதை மாற்றம், நோய் எதிர்ப்பு சக்தி போன்றவை மேம்படும் என்ற கருத்து நிலவுகிறது. இருப்பினும் ஒவ்வொரு நபரின் உடல் வகையும், வளர்சிதை மாற்றமும் மாறுபடக்கூடும். அதற்கேற்பவே உணவு பழக்கங்களை தேர்ந்தெடுக்க வேண்டும். ஏனெனில் ஒவ்வொரு பழத்திலும் பல்வேறு வகையான நொதிகள் மற்றும் அமிலங்கள் உள்ளன. அவை குடலில் உள்ள பாக்டீரியாவுடன் வினை புரிவதை பொறுத்தே சம்பந்தப்பட்ட நபருக்கு நன்மை செய்யுமா? தீங்கு விளைவிக்குமா என்பது தெரியவரும்.
''பழங்களில் உள்ள சிட்ரிக் அமிலம், டார்டாரிக் அமிலம், ஆக்ஸாலிக் அமிலம், மாலிக் அமிலம் போன்றவை பால் பொருட்களில் உள்ள லாக்டிக் அமிலத்துடன் விரைவாக வினைபுரிந்துவிடும். ஆனால் காய்கறிகள், தானியங்கள், இறைச்சி வகைகள் போன்றவற்றுடன் நன்றாக கலக்காமல் செரிக்கப்படாத வளர்சிதை மாற்ற கழிவுகளை உருவாக்கிவிடும். அதனால் வளர்சிதை மாற்ற செயல்பாடுகளிலும், திசுக்களை உருவாக்கும் செயல்முறைகளிலும் பாதிப்பு ஏற்படலாம்'' என்பது மருத்துவ நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது.
காலையில் பழங்கள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:
* உடல் நல பிரச்சினைகள் எதுவும் இல்லாதவர்கள் காலையில் பழங்கள் சாப்பிடலாம். நமது உடல் காலை 7 மணி முதல் 11 மணிக்குள் நச்சுக்களை நீக்கும் செயல்முறையை மேற்கொள்ளும். அந்த சமயத்தில் நிறைய கொழுப்பு சத்து அல்லாத உணவுகளை சாப்பிடுவது நல்லது. குறிப்பாக பழங்களை சாப்பிடுவது நச்சுக்களை நீக்கும் செயல்முறையை துரிதப்படுத்துவதற்கு தேவையான ஆற்றலை கொடுக்கும்.
* மற்ற உணவுகளை விட பழங்கள் எளிதில் ஜீரணமாகக்கூடியவை. காலை வேளையில் பழங்களை சாப்பிடும்போது அதில் இருக்கும் இயற்கையான சர்க்கரையானது வளர்சிதை மாற்ற செயல்பாடுகளை அதிகரிக்கச்செய்யும்.
* காலையில் எழுந்த உடனேயே உடலுக்கு இயற்கையான சர்க்கரை தேவைப்படும். அதனை உட்கொள்வது மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்க தூண்டும்.
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health