என் மலர்
நீங்கள் தேடியது "இந்தியா தென் ஆப்பிரிக்கா தொடர்"
- சாம்சன் தொடக்க வீரராக 3 சதங்கள் அடித்தார்.
- அபிஷேக் சர்மாவுக்கு அடுத்தபடியாக நல்ல சராசரியைக் கொண்ட ஓப்பனிங் பேட்ஸ்மேனாக சாம்சன் தன்னை நிரூபித்தார்.
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 51 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சுப்மன் கில் டக் அவுட் ஆகி வெளியேறினார்.
இந்நிலையில் எந்த தவறும் செய்யாத சாம்சனை சொதப்பும் கில்லுக்கு பதிலாக ஓப்பனிங்கில் விளையாட வைக்க வேண்டும் என்று முன்னாள் இந்திய வீரர் ராபின் உத்தப்பா கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
அபிஷேக் சர்மா - சஞ்சு சாம்சன் ஜோடியை மாற்றும் அளவுக்கு என்ன தவறு செய்தார்கள் என்ற கேள்வியை நான் கேட்கிறேன்? சம்சானுக்கு முன் கில் டி20 அணியில் இருந்தார் என்று சூர்யகுமார் செய்தியாளர்கள் சந்திப்பில் சொன்னதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.
ஆனால் சாம்சன் வாய்ப்பைப் பெற்ற போது 3 சதங்கள் அடித்தார். அதன் பின்பே அபிஷேக், திலக் வர்மா ஆகியோரும் சதங்களை அடித்தார்கள். எனவே அவருடைய சதம் நமது இளம் வீரர்களை உத்வேகமடைய வைத்துள்ளது. அந்த சமயத்தில் இந்தியாவுக்காக அடுத்த டி20 ஓப்பனர் யார்? என்ற நிலைமையே இருந்தது.
அந்த சூழ்நிலையில் அபிஷேக் சர்மாவுக்கு அடுத்தபடியாக நல்ல சராசரியைக் கொண்ட ஓப்பனிங் பேட்ஸ்மேனாக சாம்சன் தன்னை நிரூபித்தார். இருப்பினும் அவரை மிடில் ஆர்டருக்கு நகர்த்திய நீங்கள் தற்போது மெதுவாக கழற்றி விட்டுள்ளீர்கள். சாம்சன் என்ன தவறு செய்தார்? என்பதே என்னுடைய கேள்வி. தற்சமயத்தில் துணைக் கேப்டனாக இருந்தாலும் கில்லுக்கு எதுவும் வேலை செய்யாததால் அழுத்தத்திற்குள் இருக்கிறார். எனவே பெரிதாக எந்த தவறும் செய்யாத சாம்சனுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்.
என்று கூறினார்.
- அர்ஷ்தீப்சிங் ஒரு ஓவரில் மட்டும் எக்ஸ்டிரா வகையில் 7 வைடுகளை வாரி வழங்கினார்.
- பும்ரா, அர்ஷ்தீப்சிங் விக்கெட் ஏதும் எடுக்கவில்லை.
இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் தென் ஆப்பிரிக்கா அணி 51 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி நிறைய தடுமாற்றத்தை சந்தித்தது.
ஆட்டத்தின் 11-வது ஓவரை இந்திய வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப்சிங் வீசினார். பனியின் தாக்கத்தால் பந்து ஈரமானதால் அதை சரியாக பிடித்து வீச முடியாமல் சிரமப்பட்டார். அந்த ஓவரில் மட்டும் எக்ஸ்டிரா வகையில் 7 வைடுகளை வாரி வழங்கினார். இதையும் சேர்த்து அந்த ஓவரில் மொத்தம் 13 பந்துகள் வீசினார்.
இதனை பார்த்த இந்திய பயிற்சியாளர் கவுதம் கம்பீர் டக் அவுட்டில் இருந்து கோபமாக கத்தினார். இது சமூக வலைதளங்களில் வைரலானது.
ஐ.சி.சி.யின் முழு உறுப்பினர் நாடுகளில் ஒரு ஓவரில் அதிக பந்துகள் போட்ட மோசமான பவுலர்களின் வரிசையில் பாகிஸ்தானின் நவீன் உல்-ஹக்கை (கடந்த ஆண்டு ஜிம்பாப்வேக்கு எதிராக ஒரே ஓவரில் 13 பந்து வீசினார்) சமன் செய்தார்.
இந்த ஆட்டத்தில் இந்திய பிரதான வேகப்பந்து வீச்சாளர்கள் பும்ரா, அர்ஷ்தீப்சிங் விக்கெட் ஏதும் எடுக்கவில்லை. இருவரும் இணைந்து மொத்தம் 99 ரன்களை விட்டுக்கொடுத்தது பின்னடைவாக அமைந்தது.
இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவின் தடுமாற்றம் தொடருகிறது. 20 ஓவர் கிரிக்கெட்டில் கடைசி 20 இன்னிங்சில் அவர் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை.
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய அணியின் 13-வது தோல்வி இதுவாகும். 20 ஓவர் கிரிக்கெட்டில் குறிப்பிட்ட அணிக்கு எதிராக இந்தியா சந்தித்த அதிக தோல்வி இதுதான்.
- அர்ஷ்தீப் சிங் ஒரே ஓவரில் 7 வைடு பந்துகளை வீசினார்.
- 4 ஓவர்கள் பந்துவீசிய அர்ஷ்தீப் சிங் 54 ரன்கள் விட்டுக்கொடுத்தார்
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இதனால் தொடர் 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.
இன்று பஞ்சாப் மாநிலம் முல்லன்பூரில் 2 ஆவது டி20 போட்டி நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது.
அதன்படி முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக டீ காக் 90 ரன்கள் அடித்து அவுட்டானார். இந்திய அணி தரப்பில் வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டும் அக்சர் படேல் 1 விக்கெட்டும் வீழ்த்தினார்.
இந்த போட்டியில் இந்திய பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் ஒரே ஓவரில் 7 வைடு பந்துகளை வீசி மோசமான சாதனை படைத்தார்.
அதாவது டி20 போட்டிகளில் ஒரே ஓவரில் அதிக வைடு வீசிய இந்திய வீரர் என்ற மோசமான சாதனையை அர்ஷ்தீப் சிங் படைத்தார். இதற்கு முன்பு கலீல் அகமது 6 வைடு பந்துகளை வீசியதே சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
- முதல் பந்திலேயே கேட்ச் கொடுத்து துணை கேப்டன் சுப்மன் கில் கோல்டன் டக் அவுட்டானார்.
- கடந்த போட்டியில் துணை கேப்டன் சுப்மன் கில் 4 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2 ஆவது டி20 போட்டி முல்லன்பூரில் நடைபெற்று வருகிறது . இதில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 213 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து இந்திய அணி 214 ரன்கள் என்ற இலக்குடன் விளையாடி வருகிறது. இப்போட்டியில் தான் சந்தித்த முதல் பந்திலேயே கேட்ச் கொடுத்து துணை கேப்டன் சுப்மன் கில் கோல்டன் டக் அவுட்டானார்.
முன்னதாக கடந்த போட்டியில் துணை கேப்டன் சுப்மன் கில் 4 ரன்னில் ஆட்டமிழந்தார். சுப்மன் கில் கடைசியாக விளையாடிய 15 போட்டிகளில் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. இதில் 3 முறை மட்டும் 30 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார். கடைசியா விளையாடிய 13 20(9), 10(7), 5(8), 47(28), 29(19), 4(3), 12(10), 37*(20), 5(10), 15(12), 46(40), 29(16), 4(2).
ஆனால் சஞ்சு சாம்சன் தொடக்க வீரராக கடைசி 10 போட்டியில் 3 சதம் விளாசியுள்ளார். இந்நிலையில் தொடர்ந்து இரு சதம் விளாசி அணியின் தொடக்க வீரராக நிரந்தர இடம் பிடித்த சஞ்சு சாம்சனை நீக்கி கில்லை தொடக்க வீரராக களமிறங்கினர். ஆனால் கில் பெரிய அளவில் சாதிக்கவில்லை. சஞ்சுவின் தொடக்க வீரர் இடத்தையும் பரித்துவிட்டு பின் வரிசையில் இறக்கி அவரது நம்பிக்கையை இழக்கும் வண்ணம் செய்தனர். அதனை தொடர்ந்து அணியில் இருந்தே சஞ்சு சாம்சனை தூக்கினர்.
தொடர்ந்து தொடர்ந்து சொதப்பும் கில்லுக்கு பதிலாக சஞ்சு சாம்சனை அணிக்கு கொண்டு வரவேண்டும் என்று ரசிகர்கள் காட்டமாக பதிவிட்டு வருகின்றனர்.
- டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
- அதிகபட்சமாக டீ காக் 90 ரன்கள் அடித்து அவுட்டானார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இதனால் தொடர் 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.
இன்று பஞ்சாப் மாநிலம் முல்லன்பூரில் 2 ஆவது டி20 போட்டி நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது.
அதன்படி முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக டீ காக் 90 ரன்கள் அடித்து அவுட்டானார்.
இந்திய அணி தரப்பில் வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டும் அக்சர் படேல் 1 விக்கெட்டும் வீழ்த்தினார்.
- முதல் டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.
- இன்று பஞ்சாப் மாநிலம் முல்லன்பூரில் 2 ஆவது டி20 போட்டி நடைபெற்று வருகிறது..
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இதனால் தொடர் 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.
இன்று பஞ்சாப் மாநிலம் முல்லன்பூரில் 2 ஆவது டி20 போட்டி நடைபெற்று வருகிறது..
இந்நிலையில், முல்லன்பூர் மைதானத்தில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் ஆகியோர் பெயரில் அமைக்கப்பட்டுள்ள கேலரிகள் இன்று திறக்கப்பட்டது.
- தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.
- முதல் டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இதனால் தொடர் 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.
இன்று 2 ஆவது டி20 போட்டி நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது.
- முதல் 2 போட்டிகளிலும் ரன்கள் எடுக்காததால் கடைசி ஒருநாள் போட்டியில் பதட்டமாக இருந்தேன்.
- நான் எப்படி விளையாடலாம், என்ன செய்ய வேண்டும் என்று ரோகித் என்னிடம் விளக்கிக்கொண்டே இருந்தார்.
இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் இந்தியா 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்த தொடரின் முதல் 2 போட்டிகளில் பெரிய அளவில் விளையாடாத தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் சதம் அடித்து அசத்தினார்.
இந்நிலையில் கடைசி ஒருநாள் போட்டியில் பேட்டிங் செய்ய தொடங்கிய போது பதட்டமாக இருந்ததாகவும் ரோகித் அடிக்கடி என்னிடம் பேசி விளக்கி கொண்டே இருந்ததாக ஜெய்ஸ்வால் கூறினார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
கடந்த இரண்டு போட்டிகளிலும் ரன்கள் எடுக்காததால் கடைசி ஒருநாள் போட்டியில் நான் பேட்டிங் செய்ய தொடங்கியபோது, பதட்டமாக இருந்தேன். அந்த இன்னிங்சில், நான் எப்படி விளையாடலாம், என்ன செய்ய வேண்டும் என்று ரோகித் என்னிடம் விளக்கிக்கொண்டே இருந்தார்.
நிறைய டாட் பந்துகளை ஆடியதால் அழுத்தத்தில் இருந்தேன், மேலும் ஒரு நல்ல ஸ்ட்ரைக் ரேட்டை பராமரிக்க வேண்டும் என்று யோசிக்க வேண்டியிருந்தது. அப்போது ரோகித் என்னிடம், 'நீ நிதானமாக விளையாடு, நான் ரிஸ்க் எடுக்கிறேன்' என்று சொன்னார். நான் நிலைத்து நின்று விளையாட வேண்டும் என்பதற்காக, அவரே பெரும்பாலான ரிஸ்க்குகளை எடுத்துக்கொண்டார்.
என ஜெய்ஸ்வால் கூறினார்.
- சுப்மன் கில் கடைசியாக விளையாடிய 14 போட்டிகளில் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை.
- இதில் 3 முறை மட்டுமே 30 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார்.
இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி கட்டாக்கில் நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க்கா அணி 12.3 ஓவரில் 74 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
முன்னதாக இந்த போட்டியில் துணை கேப்டன் சுப்மன் கில் 4 ரன்னில் ஆட்டமிழந்தார். சுப்மன் கில் கடைசியாக விளையாடிய 14 போட்டிகளில் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. இதில் 3 முறை மட்டும் 30 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார். கடைசியா விளையாடிய 13 20(9), 10(7), 5(8), 47(28), 29(19), 4(3), 12(10), 37*(20), 5(10), 15(12), 46(40), 29(16), 4(2).
அதேபோல சஞ்சு சாம்சன் தொடக்க வீரராக கடைசி 10 போட்டியில் 3 சதம் விளாசியுள்ளார்.
இந்நிலையில் தொடர்ந்து இரு சதம் விளாசி அணியின் தொடக்க வீரராக நிரந்தர இடம் பிடித்த சஞ்சு சாம்சனை நீக்கி கில்லை தொடக்க வீரராக களமிறங்கினர். ஆனால் கில் பெரிய அளவில் சாதிக்கவில்லை. சஞ்சுவின் தொடக்க வீரர் இடத்தையும் பரித்துவிட்டு பின் வரிசையில் இறக்கி அவரது நம்பிக்கையை இழக்கும் வண்ணம் செய்தனர். அதனை தொடர்ந்து அணியில் இருந்தே சஞ்சு சாம்சனை தூக்கினர்.
சதம் அடித்தும் தொடக்க வீரராக சிறப்பாக விளையாடியும் ஒரு வீரரை அணியில் இருந்து நீக்குவது இந்திய அணியால் மட்டுமே முடியும் என ரசிகர்கள் காட்டமாக பதிவிட்டு வருகின்றனர்.
- தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் 20 ஓவர் போட்டியில் இந்தியா 101 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- தென் ஆப்பிரிக்கா 6-வது முறையாக இது மாதிரியான தோல்வியை தழுவியது.
இந்தியா தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் 9-வது முறையாக இந்தியா 100 ரன்னுக்கு வெற்றியை பெற்று சாதனை படைத்தது. ஐ.சி.சி. முழு நேர உறுப்பினர்களின் வேறு எந்த அணியும் 9 முறை இது மாதிரியான வெற்றியை பெற்றது கிடையாது. மற்ற அணிகள் 4 தடவைதான். 100 ரன்னுக்கு மேல் வெற்றி பெற்றுள்ளன.
கனடா அணி அதிகபட்ச மாக 10 தடவை 100 ரன்னுக்கு மேல் வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணி 2023-ம் ஆண்டு நியூசிலாந்தை 168 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியதே மிகப்பெரிய வெற்றியாகும்.
தென் ஆப்பிரிக்கா 6-வது முறையாக இது மாதிரியான தோல்வியை தழுவியது. வேறு எந்த ஐ.சி.சி. முழு நேர நாடுகளும் இப்படி தோற்றது இல்லை. இந்தியாவிடம் மட்டும் 3-வது தடவையாக 100 ரன்னுக்கு மேல் தோற்றது. 74 ரன்னில் சுருண்டது தென் ஆப்பிரிக்காவின் குறைந்த பட்ச ஸ்கோராகும்.
2 விக்கெட் கைப்பற்றிய தன் மூலம் அர்ஷ்தீப் சிங், புவனேஷ்வர் குமாரின் சாதனையை சமன் செய்தார். முதல் 6 ஓவரில் (பவர் பிளே) புவனேஷ்வர் குமார் 47 விக்கெட்டுகளை (1152 பந்துகள்) வீழ்த்தி இந்திய வீரர்களில் முதல் இடத்தில் உள்ளார்.
அர்ஷ்தீப் சிங் 750 பந்துகளில் 47 விக்கெட்டுகளை கைப்பற்றி சமன் செய்தார். பும்ரா முதல் 6 ஓவரில் 33 விக்கெட் (840 பந்து) எடுத்து 3 -வது இடத்தில் உள்ளார்.
- நான் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் அபிஷேக் உடன் இணைந்து விளையாடியுள்ளேன்.
- புதிய பந்தை எடுக்கும் பந்துவீச்சாளருக்கு அவரைச் சீக்கிரம் வீழ்த்துவதுதான் பெரிய சவாலாக இருக்கும்.
கட்டாக்:
இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்று (டிசம்பர் 9) கட்டாக்கில் தொடங்குகிறது.
போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்களைச் தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் மார்க்ரம் சந்தித்தார்.
அப்போது அபிஷேக் சர்மா விக்கெட்டை வீழ்த்துவதுதான் எங்களுடைய இலக்கு என கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-
நான் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் அபிஷேக் உடன் இணைந்து விளையாடியுள்ளேன். அவர் ஒரு அற்புதமான பையன் மற்றும் மிகச்சிறந்த பேட்ஸ்மேன். என்பதில் சந்தேகமே இல்லை. அவர் தான் எங்களுக்கு பெரிய விக்கெட்.
புதிய பந்தை எடுக்கும் பந்துவீச்சாளருக்கு அவரைச் சீக்கிரம் வீழ்த்துவதுதான் பெரிய சவாலாக இருக்கும். அவர் ஒரு மேட்ச் வின்னர். அவரை விரைவாக அவுட் ஆக்குவது எங்களுக்கு மிக முக்கியம்.
முதல் பந்திலிருந்தே அடித்து ஆட அவர்களுக்கு முழு சுதந்திரம் கொடுக்கப்படுகிறது. இதுதான் நவீன கிரிக்கெட். இது பார்ப்பதற்கு என்டர்டெயின்மென்ட்டாக இருக்கிறது. மேலும் டி20 லீக் போட்டிகளில் வாய்ப்பு பெறவும் இது அவர்களுக்கு உதவுகிறது
என்று மார்க்ரம் கூறினார்.
ஐசிசி டி20 தரவரிசையில் உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேன் அபிஷேக் சர்மா என்பது குறிப்பிடத்தக்கது.
- டி20 தொடருக்கான முதல் டி20 போட்டி நாளை நடக்கிறது.
- சுப்மன் கில் முழுவதுமாக குணமடைந்துள்ளார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் டெஸ்ட், ஒருநாள் தொடரில் விளையாடியது. இதில் டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்காவும் ஒருநாள் தொடரை இந்தியாவும் கைப்பற்றியது.
இதனையடுத்து இரு அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. டி20 தொடருக்கான முதல் டி20 போட்டி நாளை நடக்கிறது.
இந்த போட்டியில் காயம் காரணமாக டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடாத இந்திய அணியின் துணை கேப்டன் சுப்மன் கில், நாளை நடக்கவுள்ள முதல் டி20 போட்டியில் விளையாடுவார் என பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காயம் காரணமாக இந்திய அணியில் இடம் பிடிக்காமல் இருந்த ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவும் ஆடும் லெவனில் களமிறங்குவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






