என் மலர்
வழிபாடு
- தூணில் சரபேஸ்வரர் புடைப்புச் சிற்பமாக இருக்கிறார்.
- ஞான சம்பந்தருக்கு, அம்பிகை ஞானப்பால் அளிக்கும் மண்டபம் உள்ளன.
இந்த தஜாரோகண மண்டபத்தில்தான் அருள்தரும் கற்பகாம்பிகை நவராத்திரி கொலுவிருப்பாள். பஞ்ச மூர்த்திகள் திருவீதிஉலாவுக்கு புறப்படுவதற்கு முன் இங்கு வைத்து தான் அலங்காரம் செய்கிறார்கள். மண்டபத்தை யொட்டி திருமுறை பாராயண அறையும் உள்ளன. இதில் ஒரு தூணில் சரபேஸ்வரர் புடைப்புச் சிற்பமாக இருக்கிறார். இவருக்கு ஞாயிற்றுக் கிழமைகளில் ராகு காலத்தில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.

வேத மண்டபம்
12 கால் மண்டபத்தின் அருகே 4 கால் தூணுடன் விளங்கும் வேத மண்டபத்தில்தான் விழாகாலங்களில் உற்சவ மூர்த்திகளை ஊஞ்சலில் இருத்தி ஊஞ்சலாட்டுவர்.
அருணகிரிநாதர்
இங்கு அருணகிரிநாதருக்கென்று தனி சன்னதி கிழக்கு நோக்கி உள்ளது. அவரை ஆட்கொண்ட முருகனின் சன்னதிக்கு எதிரிலேயே கூப்பிய கரங்களுடன் இவரது சன்னிதியும் அமைந்துள்ளது சிறப்பு.
தங்கத்தேர் விசேஷ நாட்களில் உட்பிரகாரத்தில் உலா வரும் காட்சியைக் காண பேறு பெற்றிருக்க வேண்டும். விருப்பப்படும் பக்தர்கள் விசேஷ கட்டணம் செலுத்தி இறைவனை தங்கத்தேரில் எழுந்தருளச் செய்து உட்பிரகாரத்தில் வலம்வரச் செய்து நல்லாசி பெறுகின்றனர்.
திருக்குளம், நீராழி மண்டபம்
மேற்கு பிராகாரத்தின் நடுவில் அமைந்துள்ள மேலைக் கோபுரத்தின் வழியே வெளியில் சென்றால், கடல் போல் பரந்துள்ள திருக்குளம், கபாலீ தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. அதன் நடுவே அழகான நீராழி மண்டபம் உள்ளது. சக்தி தீர்த்தம், முக்தி தீர்த்தம் என்றழைக்கப்படும் இக்குளத்தின் மேற்கு கரையில் எட்டுக்கால் மண்டபம் உள்ளது. அதன் அருகில் ஜ்யேஷ்டா தேவியின் சிலை அமைக்கப்பட்டிருக்கிறது.
குளத்தின் வடமேற்கு மூலையில் மூன்று கால் மண்டபமும் தென்கரையில் ஞான சம்பந்தருக்கு பங்குனி விழாவில் அம்பிகை ஞானப்பால் அளிக்கும் மண்டபமும் உள்ளன. கிழக்கே மாட்டுப் பொங்கலன்று கற்பகாம்பாள் நீராடும் மண்டபமும், வடக்கில் சிவலிங்க மண்டபமும் அமைந்துள்ளது.
இத்திருக்குளத்தில் தெப்போற்சவம் தைப்பூசத்தன்று தொடங்கி மூன்று நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறுகிறது. முதல் நாள் சந்திசேகர சுவாமியும், இரண்டு மற்றும் மூன்றாவது நாட்களில் சிங்கார வேலரும், தெப்பத்தில் எழுந்தருளுவார். முதல்நாள் ஐந்து சுற்று, இரண்டாவது நாள் ஏழு சுற்று, மூன்றாவது நாள் ஒன்பது சுற்று என மூன்று நாட்கள் தெப்பம் நீராழி மண்டபத்தை சுற்றி வரும் அழகைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வருவர்.
தெப்பம் புறப்படுகையில் பெண்கள் வெற்றிலையில் கற்பூரமேற்றி தண்ணீரில் விடுகின்றனர். இத்திருக்குளத்தில் முழுகி பாவங்கள் களைந்தவர்கள் அனேகம். அவ்வாறே கலிங்கத்தை ஆண்ட தருமனின் புதல்வன் சாம்பன் என்பவனும் தனது பாவங்கள் தீர இக்குளத்தில் நீராடி கற்பகாம்பிகை, கபாலீஸ்வரரை வழிபட்டு முக்தியடைந்ததாக 'தீர்த்த சர்க்கம்' என்ற நூல் தெரிவிக்கிறது.
குளத்திற்கு எதிரே கோபுரத்தின் வடக்குப்புறத்தில் கற்பக விநாயகரையும், அருள்பாலிக்கின்றனர். தென்புறத்தில் பாலமுருகனும் நுழைவாயிலுக்கு எதிரே துவஜஸ்தம்பம் உயர்ந்து காட்சி தருகிறது. அதனருகே பலி பீடத்தையும், ரிஷப தேவரான நந்தியம் பெருமானையும், அடியார்க்கு அருள்புரிய வீற்றிருக்கும் விநாயகரையும் காணலாம்.
ஸ்ரீ கற்பகாம்பிகை சன்னதி
இங்கு அம்பாள் தெற்கு நோக்கிய வண்ணம் அருள் பாலிக்கிறாள். சதுர்புஜங்களுடன் நின்ற திருக்கோலம். அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்படுவதுண்டு. அதோடு வெள்ளி, ஞாயிறு, பவுர்ணமி, நவராத்திரி காலங்களில் பூப்பாவாடை, தங்கக் காசுமாலை மற்றும் வைரக்கிளி தாடங்கமும் அணிந்து காட்சி கொடுக்கிறாள். வெள்ளிக் கிழமைகளில் வெள்ளித் தொட்டிலில் அம்பாளை வைத்து வேத பாராயணம் ஒலிக்க மும்முறை வலம் வரும் அவளின் அழகைக்காண கண்கோடி வேண்டும். தமிழ் மாதத்தின் கடைசி சுக்ரவாரம் இந்த பவனியுடன் ஊஞ்சல் உற்சவமும் நடக்கும்.
சன்னிதியின் தென்மேற்கில் இறைவனின் பள்ளியறை உள்ளது. பிராகார சுவர்களில் பாமாலைகளும், சவுந்தர்ய லஹரியும், அபிராமி அந்தாதியும் சலவைக் கற்களில் பொறிக்கப் பட்டுள்ளதைக் காணலாம்.
- ஆலயம் கடற்கரைக்கு அருகில் இருந்ததாக கூறுகின்றனர்.
- கபாலீஸ்வரர் கோவில் கட்டப்பட்டு சுமார் 350 ஆண்டுகள் ஆகின்றன.
கோவில் வரலாறு:
இந்த ஆலயமானது கட்டப்பட்டு சுமார் 350 ஆண்டுகள் ஆகின்றன. இதற்கு முன் இந்த ஆலயம் கடற்கரைக்கு அருகில் இருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் உறுதியாக கூறுகின்றனர். இன்று உள்ள கபாலீஸ்வரர் கோவிலில் மற்ற கோவில்களில் உள்ளவை போன்ற முழு கல்வெட்டுகள் இல்லை. மேலும் கோயிலின் கட்டிடக் கலையில் பல்லவர்கள் அமைப்பையோ, சோழர்கள் அமைப்பையோ காண முடியவில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றார்கள்.
16-ஆம், 17-ஆம் நூற்றாண்டின் தூண் வேலைப்பாடுகள் (பிற்கால விஜயநகர முறையில்) காணப்படுகின்றன. மேலும் 1921-ல் சாந்தோம் மாதாகோவில் அருகே மயிலையைப் பற்றிய 12-ம் நூற்றாண்டைச் சார்ந்த ஒரு சில கல்வெட்டுக்கள் கிடைத்துள்ளன. ஆகவே மேற்குறிப்பிட்ட செய்திகள் மூலம் கபாலீச்சரம் கடற்கரையில் ஏறக்குறைய 350 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததென்றும், அது காலப்போக்கில் கடல் கொண்டதால் இப்பொழுது உள்ள இடத்தில் புதிதாகக் கட்டப்பட்டது என்றும் தெரிய வருகிறது.
இப்பொழுது இக்கோவில் மதில்சுவரின் உட்பகுதியில் 2 கல்வெட்டுக்களும், முருகன் சந்நிதியில் ஒரு கல்வெட்டும், அம்பாள் சந்நிதியின் உட்புறத்தில் இரண்டு கல்வெட்டுக்களும் வடக்கு- வெளிப்பிர காரத்தில் வடக்கு நோக்கி, 8 கற்களில் தொடர்பின்றிச் சிதறுண்ட கல்வெட்டுக்களும் உள்ளன. இவைகள் எல்லாம் முன்பு கடற்கரை ஓரம் இருந்த கோவிலில் இருந்து இங்கு கொண்டுவரப்பட்டவை என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
சமீபத்தில், 50 ஆண்டுகளுக்கு முன் தோண்டி எடுக்கப்பட்ட கல்வெட்டுக்களில் சில, சாந்தோம் மாதா கோவிலில் இருந்த பெரிய பாதிரியாரான பிஷப் வீட்டில் காட்சி பொருளாக வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. கந்தபுராணம், கூர்ம புராணம், வராக புராணம் ஆகியவற்றில் கபாலீஸ்வரர் ஆலய மகிமைகள் கூறப்பட்டுள்ளதன் மூலம் இத்தலத்தின் தொன்மை உணரப்படுகிறது.

தல புராணம் 1:
கயிலையங்கிரியில் ஒரு சமயம் சிவபெருமானிடம் உமா தேவியார், மகிமை பொருந்திய பஞ்சாட்சர மந்திரத்தின் பெருமைகளை விளக்குமாறு கேட்டுக்கொண்டார். சிவபிரானும் சொல்லத் தொடங்கினார். அக்கறையாக கவனித்து வந்த தேவியின் கவனத்தை ஒரு மயிலின் நடனம் திசை திருப்பியது. இதை கவனித்த முக்கண்ணர் "எந்த மயிலின் ஆட்டத்தில் மயங்கினாயோ அந்த மயிலாகவே பிறக்கக் கடவது" என சபித்தார்.
சாப விமோசனம் அருளுமாறு அம்பிகை வேண்ட ஈசனும், "தொண்டை மண்டலத்தில் புன்னை மரத்தடியில் மயிலாய் நீ எமை பூஜிக்க, அங்கே வந்து ஆட்கொள்வோம்" என்றருளி மறைந்தார். அவ்வாறே அன்னையும் பூஜிக்க சிவபிரானும் தான் கூறியவண்ணமே ஆட்கொண்டார். மயில் பூஜித்த பதியானதால் மயிலாப்பூர் என்னும் நாமதேயம் வந்ததாக சொல்லப்படுகிறது. ஆதியில் காபாலிகர்கள் ஈசனை அனுதினமும் ஆராதித்து வந்ததால் கபாலீச்சரம் என்னும் நாமதேயம் வந்ததாகவும் சொல்லப்படுகிறது.
தல புராணம் 2:
அடி முடி காண இயலாத அண்ணாமலை ஜோதியின் முடியை தான் கண்டதாக தாழம்பூவை சாட்சியாக வைத்து பொய் சொன்னார் பிரம்மா. பொய் சொன்ன பிரம்மனின் தலையை கிள்ளி வீசினார் ஈசன். ஆனால் அந்த கபாலமோ கீழே விழாமல் ஈசனின் கையிலேயே ஒட்டிக் கொண்டது. இதனால் நான்முகன் படைப்பாற்றலை இழந்தார். பிறகு புவியில் வந்து தவமிருந்து பூஜைகள் செய்து மீண்டும் படைப்பாற்றலை பெற்றார். ஈசனை ஸ்தோத்தரித்து வணங்கிய பிரம்மன் அவரிடம், "எனது கபாலத்தை சிறிது காலம் தாங்கியதால் அந்த பெயருடன் சேர்த்து தாங்கள் அழைக்கப்பட வேண்டும்" என்று கேட்டுக் கொண்டாராம். அவ்வாறே அவரும் கபாலம் + ஈஸ்வரர் கபாலீஸ்வரர் ஆனார் என்றும் சொல்லப்படுகிறது. இங்கு கோவில் கொண்டுள்ள இறைவனின் நாமம் ஸ்ரீ கபாலீஸ்வரர், இறைவியின் நாமம் ஸ்ரீ கற்பகாம்பிகை.

பிற பெருமைகள்:
சமயக் குரவரான திருஞானசம்பந்தர் பாடியருளிய தேவாரப் பதிகம், திருமயிலை உலா, திருமயிலைக் கலம்பகம், கபாலீஸ்வரர் பஞ்ச ரத்தினம், கற்பகவல்லி மாலை, சிங்காரவேலர் வெண்பா, திருமயிலை யமக அந்தாதி முதலிய பிரபந்தங்கள் இத்தல மூர்த்திகளின் மகிமையை நன்கு விளக்குவன.
"மட்டிட்ட புன்னையங் கானல் மடமயிலைக் கட்டிட்டங் கொண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான் ஒட்டிட்ட பண்பின் உருத்திர பல்கணத்தார்க்கு அட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய்." -திருஞானசம்பந்தர்
என்ற பதிகத்தை தலத்துப் பாடலாக திருஞானசம்பந்தர் பாடியருளியுள்ளார்.
சென்னை மாநகரிலுள்ள மயிலாப்பூர் என்னும் திருமயிலையில் கிழக்கு மாடவீதியில், கம்பீரமாக நிற்கும் ராஜகோபுரம் நேர்த்தியான வேலைப்பாட்டுடன் சிறப்புற விளங்குகிறது. கோபுரத்தின் உயரம் சுமார் 40 மீட்டர். எழு நிலைகள்,ஒன்பது கலசங்களுடன் கம்பீரமாய் பக்தர்களை வரவேற்கிறது. இது 1902ல் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. பகீரதன் தவம், சிவபிரானின் எட்டு வீரச் செயல்கள், காளியுடனான போட்டி, அப்பர், சம்பந்தர், அப்பூதி அடிகள், கண்ணப்பர் ஆகியோரது வாழ்க்கை வரலாறுகள், போன்ற பல சிற்பங்கள் கண்களை கவருவதாக உள்ளன.
நர்த்தன கணபதி
பிரதான வாயில் வழியாக நுழைந்தால் எதிரே நர்த்தன விநாயகர் ஒய்யாரமாக வீற்றிருக்கிறார். இவரது நர்த்தன கோலத்திற்கும் சுவையான காரணத்தைக் கூறு கிறார்கள். ஒரு சமயம் முருகன் சிவபிரானின் திருக்கையால் வேல் வாங்கு வதற்காக இங்கு வந்தாராம்.
சிவபிரானும் அவருக்கு வேலினைவழங்கி ஆசிர்வதித்ததோடு 'தமை யனிடமும் ஆசிர்வாதத்தை வாங்கிக்கொள்' என்றாராம். அவ்வாறே தம்பியால் வணங்கப்பட்டதும் ஆனந்தக் கூத்தாடினாராம் விநாயகர். அதே நர்த்தன கோலத்தில் காட்சி யளிக்கிறார் என்று தல புராணம் விளக்குகிறது.
ஸ்ரீ உண்ணாமுலை அம்பாள் சமேத ஸ்ரீ அண்ணாமலையார் சன்னிதி நர்த்தன கணபதி சன்னிதிக்கு அடுத்து அருள்மிகு அண்ணா மலையார் லிங்க உருவில் அருள்பாலிக்கிறார். அதே சன்னிதியில் தெற்கு நோக்கி அருள்புரியும் உண்ணா முலை அம்பாளை சிறிய துவாரத்தின் வழியாகவும் பக்தர்கள் தரிசிக்கின்றனர். இங்கு கார்த்திகை தீபத்தன்று விசேஷ பூஜை நடைபெறுகிறது.
சிங்கார வேலவர்
அடுத்து கருங்கல் தளவரிசை அமைக்கப் பட்டுள்ள தெற்குப் பிராகார சுற்றில் அருள்மிகு சிங்காரவேலர் வீற்றிருக்கிறார். மேற்கு பார்த்த திருக்கோல காட்சி. வள்ளி தெய்வயானை சமேதராய் மயில் மீதமர்ந்து பக்த கோடிகளுக்கு அருள்புரிகிறார். கபாலீஸ்வ ரரின் கருவறை விமானத்தை விட சிங்கார வேலவரின் கருவறை விமானம் சற்றே உயரமானது. காரணம், ஆதியில் சிங்கார வேலவரின் கோவில் மட்டுமே இங்கிருந்தது. மூன்று முறை கடல் பொங்கி நிலப்பகுதியை அபகரித்துக் கொண்டதால், சுமார் முந்நூறு ஆண்டுகளுக்கு முன்வள்ளல் நயினியப்ப முதலியாரின் புதல்வர் முத்தியப்ப முதலியார் இக்கோயிலை அமைத்ததாக வரலாறு கூறுகிறது.
பழனி ஆண்டவர், வாயிலார் நாயனார், வில்வமரம் வடக்கு நோக்கி இருக்கும் அருள்மிகு பழனி ஆண்டவர், வாயிலார் நாயனார் சந்நிதிகளை அடுத்து பரமனுக்குப் பிரியமான வில்வ மரமும் காணப்படுகிறது.
மவுனமாகவே இருந்து பகவானை ஆராதித்து வந்ததால் வாயிலார் நாயனார் என்ற ழைக்கப்பட்டார். மயிலையில் பிறந்தவரான இந்த சிவபக்தர், சிவ பெருமானை உள்ளம் என்ற கோவிலில் இருத்தி, ஞானமாகிய சுடர் விளக்கேற்றி, அன்பாகிய அமுதத்தை நிவேதித்து, பல நாளாக ஞானபூஜை செய்து, சிவபெருமானின் அருள் பெற்றவர். அத்தகைய பெருமைமிகு பக்தருக்கு இங்கு தனி சந்நிதி உள்ளது.
- வருகிற 6-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை 4 நாட்கள் அனுமதி.
- சனி பிரதோஷ வழிபாடு சிறப்புமிக்கது.
வத்திராயிருப்பு:
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர சந்தன மகாலிங்கம் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு செல்ல மாதம்தோறும் அமாவாசை, பவுர்ணமியன்று தலா 4 நாட்கள் அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி வருகிற 8-ந்தேதி பங்குனி மாத அமாவாசையை முன்னிட்டும், 6-ந்தேதி சனி பிரதோஷத்தை முன்னிட்டும் சதுரகிரிக்கு செல்ல வருகிற 6-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் செல்ல வனத்துறை அனுமதி அளித்துள்ளது.
சனி பிரதோஷ வழிபாடு சிறப்புமிக்கது என்பதால் இந்த முறை பக்தர்கள் அதிகளவில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 6-ந் தேதி மாலை சனி பிரதோஷத்தை முன்னிட்டு சுந்தர மகாலிங்கம் சுவாமிக்கு பால், பழம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. அமாவாசையான 8-ந்தேதியும் சிறப்பு வழிபாடு நடக்கிறது.
60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள், 10 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும். இரவில் தங்குவதற்கு அனுமதி கிடையாது. சளி, இருமல், காய்ச்சல் உள்ளவர்கள் மலையேறி வருவதை தவிர்க்க வேண்டும். பாலித்தீன் கேரிப்பை மற்றும் எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்கள் உள்ளிட்டவை கொண்டு செல்ல தடை செய்யப் பட்டுள்ளது.
சுந்தர மகாலிங்கம் கோவில் பிரதோஷ, அமாவாசை பூஜை ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி, செயல் அலுவலர் ராமகிருஷ்ணன் ஆகியோர் செய்துள்ளனர்.
- கற்பகாம்பாள் சன்னிதியில் இடது பக்கம் பிடி அரிசி பெட்டி காணப்படுகிறது.
- ஈசனின் ஐந்து முகங்களில் மேற்கு பார்த்த முகம் 'சத்யோஜாதம்' எனப்படுகிறது.
மூலஸ்தானம்
நமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க கோகழி ஆண்ட குருமனிதன் தாள்வாழ்க ஆகம மாகிநின்-றண்ணிப்பான் தாள்வாழ்க ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க கற்பகாம்பாள் சன்னிதியில் இருந்த வந்தவுடன் இடது பக்கம் பிடி அரிசி பெட்டி காணப்படுகிறது. அதனருகில் சுவரில் விநாயகர் வீற்றிருக்கிறார். அடுத்துள்ள பாலகர்களைக் திரு துவார கடந்து சன்னிதியில் நுழைந்தால் ஈசன், பெரிய லிங்க உருவில் மேற்கு திசை பார்த்து காட்சி தருகிறார்.
ஈசனின் ஐந்து முகங்களில் மேற்கு பார்த்த முகம் 'சத்யோஜாதம்' எனப்படுகிறது. இம்மூர்த்தி, வழிபடுபவருக்கு உடனே காட்சி தந்து அருள்புரியும் என்கின்றனர். பாடல் பெற்ற 274 சிவத்தலங்களில் 40 தலங்கள் மட்டுமே மேற்கு பார்த்த சன்னிதிகள். அதில் ஒன்று நமது திருமயிலையில் உள்ளது சிறப்பு. சன்னதியின் வடக்கு உட்பிரகாரத்தில் ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான் உற்சவ மூர்த்தியாக கிழக்கு நோக்கி அருள்புரிகிறார். அடுத்து தெற்கு முகமாக ஸ்ரீ நடராஜர், சிவகாமியம்மை, பதஞ்சலி, வியாக்கிர பாதமுனிவர், மாணிக்கவாசகரின் திருஉருவங்கள் மற்றும் சைவத் திருமுறைகள் பன்னிரெண்டும் பேழையில் வைத்து வழிபடப்படுகின்றன.
274 சிவத்தலங்களில் 40 தலங்கள் மட்டுமே மேற்கு பார்த்த சன்னிதிகள். அதில் ஒன்று நமது திருமயிலையில் உள்ளது சிறப்பு.
சன்னதியின் வடக்கு உட்பிரகாரத்தில் ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத முருகப் பெருமான் உற்சவ மூர்த்தியாக கிழக்கு நோக்கி அருள்புரிகிறார். அடுத்து தெற்கு முகமாக ஸ்ரீ நடராஜர், சிவகாமியம்மை, பதஞ்சலி, வியாக்கிர பாதமுனிவர், மாணிக்கவாசகரின் திருஉருவங்கள் மற்றும் சைவத் திருமுறைகள் பன்னிரெண்டும் பேழையில் வைத்து வழிபடப்படுகின்றன.
துர்கை
கபாலீஸ்வரரின் கருவறையின் வடக்கு வெளிச்சுவரில் வடக்கு பார்த்து துர்கை வீற்றிருக்கிறாள். மகா வரப்ரசாதியான இந்த அன்னைக்கு செவ்வாய், வெள்ளிகிழமை தோறும் 9 வாரங்கள் ராகு கால வேளை பூஜை செய்து மங்கள சண்டிகா ஸ்தோத்ரம் படித்து வந்தால் நினைத்த காரியம் சித்தியாகும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.
அடுத்து கோமுகம். மேலே பிரம்ம தேவன் அருள்பாலிக்கிறார். கோமுகத்திற்கருகே சண்டிகேஸ்வரர் சன்னிதி அமைந்துள்ளது. வடக்குப் பிரகாரத்தில் ஸ்ரீ சந்திரசேகரர், சுக்கிரவார அம்மன், வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியர், பிட்சாடனர், மோகினி, குண்டோதரன், அஸ்திர தேவர்,விநாயகர், வீரபாகு மற்றும் சுமித்திரத் தொண்டர் வீற்றிருக்கின்றனர்.
அடுத்து 63 நாயன்மார்களின் உற்சவ மூர்த்திகள், தொகையடியார் 9 பேர்கள், சிவநேசர், அங்கம் பூம்பாவை, கிழக்கு நோக்கி துர்கா, லக்ஷ்மி, ஸரஸ்வதி, ஐந்துதலை நாகர், நாகப்படத்தின் கீழ் சிவலிங்கம், காமாட்சி, ஏகாம்பரேசுவரர், பெரிய சிவலிங்கம், ஐந்து தலை பாம்பின் கீழ் சிவலிங்கம், இரு நாகங்களின் படங்களின் கீழ் சிவலிங்கம், ஐந்து தலை பாம்பின் கீழ் 2 சிவலிங்கங்கள் மற்றும் தெற்கு நோக்கிய பைரவர் (அஷ்டமியில் இவருக்கு சிறப்பு வழிபாடுகள் ஆராதனைகள் நடத்தப்படுகிறது) திருஉருவங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.
கிழக்கு பிராகாரத்தில் மேற்கு நோக்கிய வண்ணம் ஒரு சிவலிங்கமும், இதனையடுத்து ஐந்து தலை நாகத்தின் படத்தின் நிழலில் மற்றொரு சிவலிங்கமும், கணேசர், வீரபத்திரர், சிவலிங்கம், சைவ நால்வர், அடுத்து ஒரு சிவலிங்கமும் நந்தி எம்பெருமானும் பொள்ளாப் பிள்ளையாரும் உள்ளனர். அதற்கெதிரே மூலஸ்தானத்தின் பின்புறம் திருமாலும் பிரம்மனும் தேடிக்காண முடியாத பிறையண்ணல், லிங்கோத் பவராகக் காட்சியளிக்கிறார். எதிரே பொள்ளாப் பிள்ளையார் அருகில் வரிசையாக 63 நாயன்மார்களின் மூலவ மூர்த்திகளும் சூரிய பகவானும் அருள்புரிகிறார்.
தட்சிணாமூர்த்தி
கருவறையின் தெற்கு சுவர் மாடத்தில் குரு தட்சிணாமூர்த்தியும் அவருக்கு அருகில் செல்வ கணபதியும் அருள்புரிகிறார்கள். அறுபத்துமூவர் திருஉருவங்களுக்கு அருகில் சேக்கிழார் கிழக்கு நோக்கி அருள்புரிகிறார். அடுத்து வடக்கு நோக்கியவாறு பெரிய கண்ணாடி பொருத்தப்பட்டுள்ளது. இதில் நேராக வடக்கிலுள்ள நடராஜர் திருஉருவப் பிம்பத்தை காணலாம்.
மேற்கு வரிசையில் கற்பகாம்பிகை, ஸோமாஸ்கந்தராகிய அம்மையப்பர் உற்சவ மூர்த்திகளை காணலாம். உள்ளே எங்கேயும் சாஷ்டாங்கமாக நமஸ்கரிப்பது சரியில்லை. ஏனெனில் எங்கு நோக்கினும் சன்னிதிகள். துவஜஸ்தம்பத்தின் அருகில் தான் அதுவும் வடக்கு நோக்கியே பெண்கள் அஷ்டாங்கமாகவும் ஆண்கள் சாஷ்டாங்கமாகவும், விழுந்து கும்பிடுவது சிறந்தது என்கிறது சாஸ்திரம்.

அங்கம் பூம்பாவை, திருஞானசம்பந்தர்
வெளி பிராகாரத்தில் அங்கம்பூம்பாவைக்கென்று சன்னிதி தனி விமானத்துடன் உள்ளது. அங்கம் பூம்பாவை கிழக்கு நோக்கி இருக்க அதே சன்னிதியில் திருஞான சம்பந்தர் வடபுறம் பார்த்துகாட்சி தருகிறார். சிவனருள் பெற்ற அங்கம் பூம்பாவையின் கதையை பார்க்கலாம்.
சிவபிரானின் அடியாரான சிவநேச செட்டியாரின் மகளான பூம்பாவை ஒரு நாள் நந்தவனத்தில் சிவபிரானுக்காக மலர் பறிக்கும் வேளையில் கொடிய விஷநாகம் தீண்டி மரணமடைந்தாள். செட்டியார் அவளை திருஞான சம்பந்தருக்கு மணமுடிக்க நிச்சயித்திருந்தார்.
ஆனால் திடீரென நிகழ்ந்த அவளது மரணத்தால் அவரது எண்ணம் ஈடேற முடியாமல் போயிற்று. மனதைக் கல்லாக்கிக் கொண்டு உடலை எரித்த அவர் அவளது சாம்பலை மட்டும் கரைக்க மனமில்லாமல் ஒரு பானையில் எடுத்து. வைத்துக் கொண்டார். அச் சமயம் மயிலைக்கு விஜயம் செய்திருந்த திருஞான சம்பந்தர் நடந்த விஷயத்தை அறிந்து சிவநேசரை கபாலீஸ்வரர் கோயிலுக்கு அருகில் அழைத்துவரச் செய்தார். அவரும் தனது மகளின் சாம்பல் அடங்கிய பானையுடன் அவ்விடம் வந்தார்.
ஞானசம்பந்தர் மனமுருகி சிவபிரானை பிரார்த்தித்தார். உடனே அவர் நாவினின்று 'மட்டிட்ட புன்னையங்கானல் மடமயிலை' என்ற பதிகத்துடன் பாடல்கள் சரளமாக வெளிவந்தன. அவர், ஒவ்வொரு திருநாளாகக் குறிப்பிட்டு, அவ்வைபவத்தை 'அதைக் காணாமல் போகலாமா பூம்பவாய்' என பாடப்பாட சிவபெருமான் அருளுடன் எலும்புகள் இணைந்து சாம்பல் சதை பெற்றது. 12 வயது பெண்ணாக குடம் உடை வெளிப்பட்டாள். சாம்பலும், எலும்பும் கபாலீஸ்வரர் அருளால் மீண்டும் பெண்ணாக மாறிய புண்ணிய க்ஷேத்திரமிது.
வாகனம், யாக சாலை அனுதினமும் கபாலீஸ்வரருக்கு தீபாராதனை நடக்கும்போது அடிக்கும் பெரியமணி உயரே மதில் சுவரில் கட்டப்பட்டுள்ளது. வடக்குப் பிரகாரத்தில் வரிசையாக வாகனங்கள் வைக்கும் அறைகளும், யாக சாலையும் உள்ளன. வலது புறத்தில் புன்னைவன நாதருக்கு அம்பிகை மயிலாக வந்து பூஜை செய்யும் காட்சியும் அருகில் தல விருட்சமாகிய புன்னை மரம் உள்ளது.
சனீஸ்வர பகவான்
சனீஸ்வர பகவானுக்கென்று சன்னிதி தனியாக உள்ளது. காக வாகனத்துடன் மேற்கு பக்கம் பார்த்து அருள்புரியும் இவரை சனிக்கிழமைகளில் தீபமேற்றி வழிபடுகின்றனர் பக்தர்கள்.
நவக்கிரகம்
சனீஸ்வரருக்கு எதிர்பக்கம் கிழக்கு பிரகாரத்தில் திரும்பினால் ஸ்ரீ சுந்தரேஸ்வரர் நவக்கிரகங்கள் மற்றும் ஜகதீச்வரரின் சன்னிதிகள் காணப்படுகின்றன.
கோவில் பிராகாரம்
தரிசனம் முடித்து கிளம்புவதற்கு முன் சிறிது நேரம் பிராகாரத்தில் உட்கார்ந்து விட்டே கிளம்ப வேண்டும் என்பது மரபு. தெய்வ சிந்தனையுடன் உட்காரும் அந்த சில நிமிட துளிகளில் கிடைக்கும் மன அமைதி வேறு எதிலும் கிடைக்காது என்பது நிதர்சனம்.
வீதி உலா
கோவிலைவிட்டு வெளியே வந்தால் வீதியுலா வரும் தெய்வ மூர்த்திகள் சற்று நேரம் நின்று தரிசனமளிக்கும் 16 கால்மண்டபமும், சன்னிதித் தெருவின் முடிவில் திருத்தேரும் உள்ளன.
- ஸ்ரீ கற்பகாம்பாளை தரிசனம் செய்தால் சுபமங்களம் கிட்டும்.
- கோவிலில் சித்தர்கள் புறாக்களின் வடிவில் வாசம் செய்கின்றனர்.
1. ஸ்ரீவெள்ளீஸ்வரர் கோவிலில் உள்ள ஸ்ரீகாமாட்சி அம்மனைத் தரிசனம் செய்த பின்பு, ஸ்ரீவெள்ளீஸ்வரரை தரிசனம் செய்து ஸ்ரீகபாலீஸ்வரர் கோவிலில் உள்ள அன்னை ஸ்ரீகற்பகாம்பாளைத் தரிசனம் செய்தால் சுபமங்கள சவுபாக்கியம் கிட்டும். இது தரிசன நியதியுமாகும்.
2. மகாசிவராத்திரி, மாத சிவராத்திரிகளில் ஸ்ரீகற்பகாம்பாளைத் தரிசித்து சிவ சிவ என்று கூறினால் நமது கர்ம வினைகள் குறைந்து பிறவிகள் தீரும்.
3. ஸ்ரீகபாலீஸ்வரர் கோவிலில் சித்தர்கள் புறாக்களின் வடிவில் வாசம் செய்கின்றனர். எனவே, இங்குள்ள புறாக்களின் தரிசனம் மிகுந்த புண்ணியத்தைத் தரும்.
4. ஸ்ரீகபாலீஸ்வரர் கோவிலின் உட்பிரகாரத்தில் 3500-க்கும் மேற்பட்ட அதிஅற்புத உன்னத தேவதைகள் இருக்கிறார்கள். எனவே இப்பிரகாரத்தை வலம் வரும் பொழுது நல்ல எண்ணங்களையும், நியாயமான பிரார்த்தனைகளையும் மாத்திரமே மனதில் கொள்ள வேண்டும். வேறு எந்தவிதமான மாற்று எண்ணங்களுடன் இப்பிரகாரத்தை வலம் வருதல் கூடாது.
5. தட்ச யாகத்தில் தட்சனின் யாகத்தை அழித்த கோபாவேசம் கொண்ட ஸ்ரீவீரபத்திரரை சாந்தப்படுத்தவதற்காக மகரிஷிகளும், முனிவர்களும் பனி மலையைக் கொண்டு அழுத்தி சுவாமியின் உக்ரகத்தைத் தணிக்க முயற்சித்தனர். தந்தையாகிய சிவனுடைய கோபம் தணிந்ததே அன்றி, ஸ்ரீவீரபத்திரரின் கோபம் சிறிதும் தணியவில்லை. பல்வேறு வடிவங்களில் ஸ்ரீவீரபத்திரருக்கு சித்தர்களும், மகான்களும் கோவில்கள் அமைத்தனர். அவ்வாறு அமைக்கப்பட்டுள்ள சிலா ரூபங்களில், மூலாதார சக்தியின் 500-வது பிரதி பிம்பமே ஸ்ரீகபாலீஸ்வரர் கோவிலின் உட்பிரகாரத்தில் உள்ள ஸ்ரீவீரபத்திர மூர்த்தி ஆவார்.
6. மேற்குப் பார்த்த சூரியனை, சூரிய ஹோரையில் வழிபடுவது மிகவும் விசேஷமாகும். இவரை வழிபடுவதால் கர்பப்பை சம்பந்தமான கோளாறுகள் நிவர்த்திக்கான வழி கிட்டும்.
7. இக்கோவில் ராகு, கேது பரிகார தலமாகும். இத்தலம் முந்தைய யுகங்களில் ராகு, கேது பரிஹார தலமாக விளங்கியது. இதுபோன்று எதிர் காலத்தில் ராகு, கேது பரிகார தலமாக அமையும் என்பது சித்தர்களின் வாக்காகும்.
8. ஸ்ரீகபாலீஸ்வரர் கோவிலின் உற்சவ காலங்களில் வெயில் நேரத்தில் ஆரஞ்சு ஜூஸ் தானத்தை தரிசிக்க வரும் பக்தர்கள் சுவாமியை சுமந்து வரும் அடியார்களுக்கும் அளித்திடில் தொலைத்தொடர்பு துறையில் இருப்போர் மேன்மை அடைவர். தொலைத்தொடர்பில் இருக்கக் கூடிய இன்னல்கள் தீரும்.
9. "எண்ஜான் உடம்பிற்கு சிரசே பிரதானம்" என்பர். அந்த சிரசில் உள்ள கபாலம் மிகவும் முக்கியமானது. கபாலம் சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் தீர்வு கொடுக்கும் அபூர்வமான மூர்த்தி ஸ்ரீகபாலீஸ்வரர் ஆவார். கபாலம் சம்பந்தமான நோய்களுக்கு நிவர்த்தித் தலமாக இக்கோவில் அமைந்துள்ளது.
10. நாம் காலையில் எழுந்தவுடன் ஒரு ரூபாய் அளவு உள்ளங்கையில் தேங்காய் எண்ணெயை எடுத்துக் கொண்டு உச்சந்தலையில் தடவிக் கொள்ள வேண்டும். அவ்வாறு தடவும் பொழுது, ஸ்ரீகேசல குசலாம்பிகாயை நமஹ, ஸ்ரீதையல் நாயகியே நமஹ, ஸ்ரீகபாலீஸ்வராய நமஹ என்று சொல்ல வேண்டும். இதனால் கபாலம் சம்பந்தபட்ட நோய்கள் தணியும். உடலின் உஷ்ணமும் குறையும்.
11. இக்கோவிலில் உள்ள திருஞானசம்பந்தர் சன்னதி முன்பாக விளக்கெண்ணெயுடன் பசு நெய் கலந்து, தீபம் இட்டு அன்னதானம் செய்திடில், எலும்பு முறிவு சம்பந்தமான நோய்கள் நிவர்த்தியாகும். முறிந்த எலும்பானது விரைவாகக் கூடும்.
12. இங்கு ஸ்ரீஜகதீஸ்வரர் தனிச்சன்னதி கொண்டுள்ளார். இது வாஸ்து பூஜைக்கு உகந்த இடமாகும். இவருக்கு வழிபாடு செய்திட வாஸ்து குற்றங்கள் குறையும்.
13. ஒரு நாளைக்கு குறைந்தது பதிமூன்று கோபுர கலசங்களையாவது தரிசனம் செய்தல் விசேஷமாகும். இக்கோவிலில் பதிமூன்றிற்கும் மேலாகவே கோபுர கலசங்கள் உள்ளன. தினந்தோறும் கோபுர தரிசனம் செய்வதால் பாவங்கள் தீரும். இதனையே, `கோபுர தரிசனம் கோடி புண்ணியம்' என்றார்கள் பெரியவர்கள். இக்கோவிலில் அருள்பாலிக்கும் துர்க்கையின் கலியுக திருநாமம் ஸ்ரீபஸ்பத்ரயாக்னி. அமர்ந்த கோலத்தில் மூன்று தேவியர் அருள்பாலிப்பது இச்சிவலாயத்தில் மிகவும் சிறப்புவாய்ந்தது.
- இறை நம்பிக்கைக்கு எதிரான தீய செயல்.
- மது அருந்துவது இறைநம்பிக்கைக்கு எதிரான ஒரு தீய செயல்.
இறை நம்பிக்கைக்கு எதிரான தீய செயல்
இஸ்லாம் மது அருந்துவதை பெரும் "பாவங்களில் ஒன்றாக கருதுகிறது. மீறி மது அருந்துவோருக்கு கசையடி தண்டனை வழங்கும்படி பரிந்துரை செய்கிறது.
மது அருந்துவது இறைநம்பிக்கைக்கு எதிரான ஒரு தீய செயல் ஆகும். மதுவை இஸ்லாம் ஒரே கட்டத்தில் தடை செய்யவில்லை. நான்கு கட்டங்களில் மதுவுக்கு எதிராக நடவடிக்கைகளை முன்வைத்து அது முற்றிலும் தடை செய்யப்பட்டது.
மது தீய பானம் என்பதை இறைவன் அறிவுறுத்தி முதல் தடை நடவடிக்கையை மேற்கொள்கின்றான். இந்த அறிவுரையால் சில பேர் மது அருந்துவதை விட்டுவிட்டனர். உமர் (ரலி) நபியிடம் வந்து மது சம்பந்தமாக தெளிவான ஒரு தீர்வை எங்களுக்கு தாருங்கள் என வேண்டினார். ஆதலால், பின்வரும் இறை வசனம் இறங்கியது.
'பேரீச்சை, திராட்சை பழங்களில் இருந்து மதுவையும், நல்ல ஆகாரங்களையும் நீங்கள் உண்டாக்குகிறீர்கள். நிச்சயமாக இதில் சிந்திக்கும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது. (திருக் குர்ஆன் 16:67)
மது அருந்துவது பெரும் பாவமாகும் என இறைவன் பிரகடனப் படுத்தியபோது இந்த பெரும் பாவத்திலிருந்து பெரும்பான்மை மக்கள் விலகிக் கொண்டனர்.
(நபியே!) மதுபானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். நீர் கூறும்: 'அவ்விரண்டிலும் பெரும்பாவம் அவ்விரண்டிலும் இருக்கிறது. மனிதர்களுக்கு (அவற்றில் சில) பலன்களுமுண்டு. ஆனால், அவ்விரண்டிலும் உள்ள பாவம் அவ்விரண்டிலும் உள்ள பலனை விட பெரிது. (திருக்குர்ஆன் 2:219)
சில பேர் மதுவை விடாமல் அருந்திக்கொண்டு அறிவை இழந்து கொண்டும், சோதனையில் மாட்டிக்கொண்டும் இருந்தனர். இத்தகைய சூழ்நிலையில் மீண்டும் உமர் (ரலி) இறைவா! மது சம்பந்தமாக இன்னும் ஒரு தெளிவான ஒரு தீர்வை எங்களுக்கு வழங்கிடு!' என்றார்கள். உடனே இறைவன் மூன்றாம் கட்ட தடையை இறக்கி வைக்கின்றான்.
'இறை நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் ஒதுவது இன்னது என்று நீங்கள் அறிந்துகொள்ள முடியாதவாறு நீங்கள் போதையில் இருக்கும்போது தொழுகைக்கு நெருங்காதீர்கள்' (திருக்குர் ஆன் 4:43)
பின்னர், நிரந்தரத் தடை வேண்டி உமர் (ரலி) இறைவனிடம் இறைவா! மது சம்பந்தமாக இறுதியான தீர்க்கமான ஒரு தீர்வை தருவாயாக' என வேண்டியபோது நான்காவது நிரந்தரத் தடை வந்தது.
'ஈமான் கொண்டோரே! மதுவும், சூதுவும், கற்சிலை வழிபாடும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும் ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களில் உள்ளவையாகும். ஆகவே, நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். நிச்சயமாக ஷைத்தான் விரும்புவதெல்லாம் மதுபானத்தைக் கொண்டும், சூதாட்டத்தைக் கொண்டும் உங்களிடையே பகைமையையும், வெறுப்பையும் உண்டு பண்ணி இறைவனின் நினைவில் இருந்தும், தொழுகையில் இருந்தும் உங்களை தடுத்துவிடத்தான். எனவே அவற்றை விட்டும் நீங்கள் விலகிக் கொள்ள மாட்டீர்களா?' (திருக்குர்ஆன் 5:90,91)
ஹிஜ்ரி 3-ம் ஆண்டு உஹத் யுத்தத்திற்கு பின் மது நிரந்தரமாகத் தடை செய்யப்பட்டு விட்டது.
இந்த தடை உத்தரவை நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரி 8-ம் ஆண்டு மக்கா வெற்றி கொள்ளப்பட்ட பிறகு புனித ரமலானில் மறுதடவையாகத் தடை செய்கிறார்கள். ஏனென்றால் இந்த தடை பற்றி தெரியாதவர் தெரிந்து கொண்டு, தவிர்த்துக் கொள்ள வேண்டியதாகும்.
- சுப்ரபாதத்தை அருளிச் செய்வதவர் ஹஸ்திகிரிநாதன்.
- பங்குனி மாதம் நவமி பூசம் நட்சத்திரத்தில் ஆசார்யன் திருவடி அடைந்தார்.
கலியுக தெய்வம் திருவேங்கமுடையானுக்கு பிரதி நித்யம் சேவிக்கின்ற மேற்குறிப்பிட்ட சுப்ரபாதத்தை அருளிச் செய்வதவர் ஹஸ்திகிரிநாதன் இவரை அன்பாக அண்ணன் என்றும் அழைப்பர். இவர் வேதாந்த தேசிகரின் குமாரரான வரதாசார்யலு (குமார தேசிகர்) இடத்தே சமஸ்கிருத வேதாந்தத்தையும் மணவாளமாமுனிகளிடத்தே திராவிட வேதாந்தத்தையும் கற்றுத் தேர்ந்தார்.
மணவாளமாமுனிகள் அண்ணனை விட எட்டு ஆண்டுகள் வயதில் சிறியவர் இவர் காலத்திற்கு பிறகு அண்ணன் சுமார் பத்து ஆண்டுகள் வாழ்ந்தார். இவர் கி.பி.1361 ப்ளவ வருடம் ஆடி மாதம் பூசம் நட்சத்திரத்தில் பிறந்தார் கி.பி. 1454 ஸ்ரீமுக வருடம் பங்குனி மாதம் நவமி பூசம் நட்சத்திரத்தில் ஆசார்யன் திருவடி அடைந்தார்.
இவர் ஒருநாள் குருவான மணவாள மாமுனிகளோடு சேர்ந்து ஸ்ரீநிவாசனை சேவிப்பதற்காக திருமலைக்கு வந்தார் அவ்விடியற்காலை வேளை சீடனை பார்த்து ஸ்வாமி மீது சுப்ரபாதம் அருளக்கூடாதா எனக் கூற, அடுத்த கணமே. அவரின் கட்டளையின்படி வேங்கடேஸ்வர சுப்ரபாதம் ஸ்தோத்திரம், பிரபத்தி, மங்களாசாசனம் என்னும் நான்கினையும் தன்னிசையாகப் பாடினார்.
இந்த சுப்ரபாதத்திற்கு முன்னர் தொண்டரடிப்பொடியாழ்வார் (விப்ரநாராயணர்) அருளிச் செய்த திருப்பள்ளி எழுச்சி யையே சுப்ரபாதமாக சேவிப்பது வழக்கம். இவருடைய வேதாந்த ஞானத்தைப் பாராட்டி குரு பிரதிவாதி பயங்கரம் என்னும் விருது வழங்கி கவுரவித்தார்.
இன்றும் இவருடைய வம்சத்தினர் பிரதிவாதி பயங்கரம் என்னும் வீட்டுப் பெயரோடு அழைக்கப்படு கிறார்கள் திருப்பதி கோவிந்தராஜ ஸ்வாமி கோயில் தெற்கு மாடவீதியில் உள்ள லக்ஷ்மி நாராயண ஸ்வாமி கோயிலில் இன்றைக்கும் இவருக்கு விக்ரஹ ஆராதனை நடந்து வருகிறது.
வைண சமயத்தை வளர்ப்பதற்காக ராமானுசர் நியமித்த 74 சிம்மாசனாதிகளில் ஒருவரான முடும்பை நம்பியின் வழித்தோன்றலில் பிறந்தவர் பிரதிவாதி பயங்கரம் அண்ணன். அவர் அவதார நட்சத்திரம் இன்று.
- ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி திருமஞ்சன சேவை.
- இன்று திருவோண விரதம்.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, பங்குனி 21 (புதன்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: நவமி பிற்பகல் 2.09 மணி வரை பிறகு தசமி
நட்சத்திரம்: உத்திராடம் மாலை 5.43 மணி வரை பிறகு திருவோணம்
யோகம்: அமிர்த, சித்தயோகம்
ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை
இன்று திருவோண விரதம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். கரிவலம் வந்த நல்லூர் ஸ்ரீ பால் வண்ணநாதர் விழா தொடக்கம். மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி ரிஷிமுக பர்வதம் பட்டாபிராமர் திருக்கோலமாய்க் காட்சி. தாயமங்கலம் ஸ்ரீ முத்து மாரியம்மன் பூத வாகனத்தில் திருவீதிஉலா. ஒழுகைமங்கலம் ஸ்ரீ மாரியம்மன் வெள்ளி காமதேனு வாகன பவனி. மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி திருமஞ்சன சேவை. பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம் பெருமான் சிறப்பு திருமஞ்சன சேவை.
இன்றைய ராசிபலன்
மேஷம்-புகழ்
ரிஷபம்-பக்தி
மிதுனம்-பிரீதி
கடகம்-சுகம்
சிம்மம்-நிம்மதி
கன்னி-சுபம்
துலாம்- உயர்வு
விருச்சிகம்-தேர்வு
தனுசு- தனித்தன்மை
மகரம்-நட்பு
கும்பம்-கடமை
மீனம்-பொறுமை
- சுவர்க்கத்தின் பக்கம் அழைத்துச்செல்ல இஸ்லாம் மார்க்கம் உதவுகிறது.
- வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை.
உலக மக்கள் அனைவருக்கும் நேர் வழி காட்டவும், அவர்களை சுவர்க்கத்தின் பக்கம் அழைத்துச்செல்லவும் இஸ்லாம் மார்க்கம் உதவுகிறது. கலிமா, தொழுகை, நோன்பு, ஜக்காத் மற்றும் ஹஜ் ஆகிய 5 கடமைகளை உள்ளடக்கியது இஸ்லாம் மார்க்கம்.
'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர்' என்பதே முதல் கலிமா ஆகும். இந்தக் கலிமாவை யார் ஒருவர் உள்ளத்தால் ஏற்று நாவால் சொல்கிறாரோ அவர் நற்பாக்கியம் பெற்றவர்களில் இடம்பிடித்துவிடுவார்.
அடுத்தது தொழுகை. கடமையான ஐந்து நேரத் தொழுகைகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும். ஒவ்வொரு ஆணுக்கும் 7 வயது முதல் மரணம் வரை தொழுகை கட்டாயம் ஆகும். தொழுகை மனிதர்களை நேர்வழியில் நடத்தி இம்மையிலும், மறுமையிலும் நன்மைகள் பெற உதவுகின்றது.
தொழுகைக்கு அடுத்து வருவது நோன்பு. ஒவ்வொரு ஆண்டும் ரமலான் மாதம் முழுவதும் நோன்பு வைக்க வேண்டும். சூரிய உதயத்தில் இருந்து மறையும் வரை எதையும் உண்ணாமல், பருகாமல் இருந்து மன ஆசைகளை கட்டுப் படுத்தி நோன்பு நோற்க வேண்டும். இரவு நேரங்களில் தொழுகையில் ஈடுபடவேண்டும். பகல் முழுவதும் பசித்திருப்பதாலும், தாகத்துடன் இருப்பதாலும் உடலும் உள்ளமும் தூய்மை பெறுகிறது. இறையச்சத்துடன் நடத்தப்படும் தொழுகைகள் நமது பாவங்களுக்கு மன்னிப்பை வழங்குகிறது.
மேலும் பிறரின் பசித்துன்பத்தை நாம் இதன் மூலம் அறிந்து கொள்ள முடியும்.
நோன்பைப் போன்று ஜகாத்தும் முக்கிய கடமையாகும். ஒவ்வொருவரும் தங்களது வருமானத்தில், செல்வத்தில் இரண்டரை சதவீதம் ஏழைகளுக்கு தானமாக கொடுக்க வேண்டும். இதுவே `ஜகாத்' என்று சொல்லப்படுகிறது. ரமலான் நோன்பில் வரும் முக்கியமான இரவு லைலத்துல் கத்ர் இரவாகும்.
`நபியே! லைலத்துல் கத்ர் என்றால் என்னவென்று நீர் அறிவீரா? கண்ணியமிக்க அந்த இரவு ஆயிரம் மாதங்களை விட சிறந்ததாகும்' என்று திருக்குர்ஆன் (97:23) கூறுகின்றது.
மகத்துவமும், புனிதமும் மிக்க அந்த இரவு ரமலானில் எப்பொழுது வருகிறது?. இது குறித்த நபி மொழி வருமாறு:
லைலத்துல் கத்ர் எனும் மகத்தான இரவு எப்பொழுது என்பதை அறிவிப்பதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வந்து கொண்டிருந்தார்கள். அப்பொழுது இரண்டு பேர் தங்களுக்குள் கடன் சம்பந்தமான சர்ச்சையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இதை தீர்த்து வைப்பதில் நபி களார் ஈடுபட்டதால், அந்த இரவு எந்த நாள் என்று குறிப்பிட்டுச் சொல்வதை இறைவன் மறக்க செய்துவிட்டான்.
என்றாலும், அந் நாளில் மட்டும் நற்கருமங்களை செய்து விட்டு மக்கள் மேம்போக்காக இருந்து விடக்கூடாது என்பதால் 'மறக்கடிக்கச் செய்ததும் நன்மைக்கே' என்று கூறிய நபிகளார், 'ரமலானில் கடைசி பத்தில் ஒற்றைப்படையான இரவில் (21, 23, 25, 27, 29) தேடிக் கொள்ளுங்கள் என்று கூறினார்கள்'. (நூல்: மிஷ்காத்)
இமாம் ராஜி (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: 'இந்த இரவில் வானவர் எல்லோரும் சாந்தி மயமாகட்டும் என்று கூறிக் கொண்டு இருப்பார்கள். அதிகாலையில் புறப்படும் போது மலக்குகள், 'இந்த இரவில் முகம்மதுடைய (ஸல்) சமுதாயத்திற்கு இறைவன் என்ன செய்தான்?' என்று கேட்பார்கள்.
உடனே வானவர் தலைவர், `இறைவன் தனது அருள் பார்வையை செலுத்தினான். அவர்கள் அனைவரின் பாவத்தையும் மன்னித்தான். அதே நேரத்தில், மது அருந்துபவர், பெற்றோருக்கு எதிராக இருப்பவர், சொந்தங்களை துண்டித்து வாழ்பவர், சகோதரனிடம் சண்டைபோட்டு மூன்று நாளுக்கு மேல் பேசாமல் இருப்பவர் ஆகியோரை இறைவன் மன்னிப்பதில்லை, அவர்களுக்கு இறைவனின் அருளும் கிடைப்பதில்லை என்று கூறினார்.
மனிதர்கள் பலரும் பாவம் செய்பவர்களாகவே உள்ளனர். மனிதன் பாவத்தில் இருந்து விடுபட்டு, பாவ மன்னிப்பு பெற்று இம்மையிலும், மறுமையிலும் இறைவனின் திருப்பொருத்தத்தை அடையவே இஸ்லாம் மார்க்கம் வழிகாட்டுகின்றது. மேலும் பாவமன்னிப்பு கேட்பவர்களை அல்லாஹ் நேசிக்கின்றான் என்று திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகின்றது:
`நிச்சயமாக அல்லாஹ் பாவங்களை விட்டு மீளுபவர்களை நேசிக்கிறான்'. (திருகுர்ஆன் 2:222). இது போல நபிகள் நாயகம் அவர்கள் குறிப்பிடும்போது, `எல்லோரும் பாவம் செய்பவர்கள் தான். அவர்களில் சிறந்தவர் யார் எனில், தனது பாவத்திற்கு பரிகாரம் தேடுகிறாரோ அவர்தான்' என்று கூறினார்கள்.
`நபியே! இறை நம்பிக்கை கொண்டு நல்ல செயல் களைச் செய்வோருக்கு சொர்க்கம் உண்டு என்று கூறுங்கள்' என்பது இறை கட்டளையாகும். உலக மக்கள் அனைவரும் அல்லாஹ் மீது நம்பிக்கை கொண்டு நோன்பு வைத்து லைலத்துல் கத்ர் என்ற உன்னதமான இரவை பெற்று உளமார இறைவனை தொழுது சொர்க்கத்தைப் பெற அல்லாஹ் வாய்ப்பை வழங்குவானாக, ஆமீன்.
- தேவாலயங்கள் மனிதர்களுக்கும் ஆறுதலை தரக்கூடிய இடமாக இருக்கிறது.
- இயேசு ஆலயத்தை தன் தந்தையின் இல்லமாக பார்த்தார்.
தேவாலயம் அல்லது வழிபாட்டுக்கூடம் என்பது எல்லா மனிதர்களுக்கும் ஆறுதலை தரக்கூடிய இடமாக இருக்கிறது. மனதில் உள்ள கவலைகளை, கண்ணீரை கொட்டித் தீர்க்கிற இடமாகவும், விடை தெரியா கேள்விகளுக்கு விடை தருகிற இடமாகவும், வழி தெரியா வாழ்க்கைக்கு வழிகாட்டுகிற இடமாகவும் இருக்கிறது.
ஆலயத்திற்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்புகிற போது ஒரு இனம் புரியாத அமைதி மனதில் தங்கி விடுகிறது. வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை நோக்கி நடந்திட ஆற்றல் கிடைக்கிறது. அத்தகைய சிறப்புமிகு ஆலயத்தை யூதர்கள் எப்படி பார்த்தார்கள்? இயேசு எப்படி பார்த்தார்? நாம் எப்படி பார்க்க வேண்டும்? என்கிற மூன்று நிலைகளில் யோவான் நற்செய்தி 2-வது அதிகாரம் 13 முதல் 22 வரை உள்ள இறைவார்த்தை பகுதியை தியானித்து பார்ப்போம்...! அந்த பகுதி பின்வருமாறு:
யூதர்களுடைய பாஸ்கா விழா விரைவில் வரவிருந்ததால் இயேசு எருசலேமுக்குச் சென்றார். கோவிலில் ஆடு, மாடு, புறா விற்போரையும், அங்கே உட்கார்ந்து இருந்து நாணயம் மாற்றுவோரையும் கண்டார். அப்போது கயிறுகளால் ஒரு சாட்டை பின்னி அவர்கள் எல்லோரையும் கோவிலில் இருந்து துரத்தினார். ஆடு, மாடுகளையும் விரட்டினார். நாணயம் மாற்றுவோரின் சில்லரைக் காசுகளையும் அவை இருந்த மேசைகளையும் கவிழ்த்து போட்டார். அவர் புறா விற்பவர்களிடம், இவற்றை இங்கிருந்து எடுத்துச்செல்லுங்கள். என் தந்தையின் இல்லத்தை சந்தை ஆக்காதீர்கள்' என்று கூறினார்.
யூதர்கள் அவரைப் பார்த்து, இவற்றை எல்லாம் செய்வதற்கு உமக்கு உரிமை உண்டு என்பதற்கு நீர் காட்டும் அடையாளம் என்ன? என்று கேட்டார்கள். அதற்கு இயேசு மறுமொழியாக, `இக்கோவிலை இடித்து விடுங்கள் நான் மூன்று நாளில் கட்டிவிடுவேன்' என்றார்.
அப்போது யூதர்கள், `இந்த கோவிலை கட்ட நாற்பத்தாறு ஆண்டுகள் ஆயிற்றே நீர் இதை மூன்றே நாளில் எழுப்பிவிடுவீரோ' என்று கேட்டார்கள். ஆனால் அவர் தம் உடலாகிய கோவிலை பற்றியே பேசினார் என்பது அவர்களுக்கு புரியவில்லை. (யோவான் 2:13-22)
மேலே பார்த்த நற்செய்தி பகுதியில், இயேசு கோபப்படுவதை பார்க்கிறோம். அமைதியையும், கனிவையும், தனது வாழ்நாள் முழுவதும் வெளிப்படுத்திய இயேசு கோபப்படுகிறாறே அது நியாயமா என்ற கேள்வி நம்மில் பலருக்கு தோன்றலாம். ஆனால் இயேசு எதற்காக கோபப்பட்டார் என்பதை சிந்தித்து பார்க்கும் போது நமக்கு புரியும்.
இயேசு ஆலயத்தை தன் தந்தையின் இல்லமாக பார்த்தார். எனவே தான் அதனை வியாபாரக்கூடமாக பார்த்த யூதர்கள் மீது கோபம் கொண்டார். அதனால் தான் அவரது கோபம் சாதாரணமாய் இல்லை. கடுமையாக இருந்தது. சாட்டையால் அவர்களை அடித்து விரட்டினார். அவர்களின் பொருட்களை கவிழ்த்துப் போடுகிறார்.
இதன் மூலம் இயேசு தன் தந்தையின் இல்லமாகிய தேவாலயத்திற்கு எத்தகைய முக்கியத்துவம் கொடுக்கிறார் என்பது தெரிகிறது. இதுமட்டுமன்று நம் கண் எதிரே நடக்கும் அநீதியை கண்டு அமைதியாக இருக்காமல் குரல் கொடுக்க வேண்டும் என்கிற செய்தியையும் இயேசு நமக்கு தருகிறார். இயேசுவின் சாட்டையடி யூதர்களுக்கு மட்டுமல்ல மக்களின் நம்பிக்கையை பயன்படுத்தி, ஆலயங்களை வியாபாரக்கூடமாய் மாற்றும் ஒவ்வொருவருக்குமே பொருந்தும்.
இரண்டாவதாக இந்த பகுதியில் நாம் கவனிக்க வேண்டியது யோவான்: 2:22. இதில் இயேசு, 'இந்தக் கோவிலை இடித்து விடுங்கள், நான் மூன்று நாளில் கட்டிவிடுவேன்' என்று கூறுகிறார். இதில் அவர் கோவிலாகிய கட்டிடத்தை குறிப்பிடவில்லை. மாறாக தம் உடலாகிய கோவில் பற்றியே குறிப்பிடுகிறார். இதன் வழியாக அவர் இறந்து மூன்றாம் நாள் உயிர்தெழுவதையே, `மூன்று நாளில் கட்டி விடுவேன்' என்று குறிப்பிடுகிறார்.
ஆக, தனது உடலை இயேசு கோவிலாகவே பார்த்தார். தன்னில் இருக்கும் இறைவனை நற்செயல்களால் வெளிப்படுத்தி நடமாடும் ஆலயமாகவே வாழ்ந்தார். அவ்வாறு வாழ நமக்கும் அழைப்பு விடுக்கிறார். இதனையே திருத்தூதர் பவுல் கொரிந்திய மக்களுக்கு எழுதிய கடிதத்தில், நீங்கள் கடவுளுடைய கோவிலென்றும், கடவுளின் ஆவியார் உங்களுள் குடியிருக்கிறார் என்றும் உங்களுக்கு தெரியாதா? ஒருவர் கடவுளின் கோவிலை அழித்தால் கடவுள் அவரை அழித்துவிடுவார். ஏனெனில் கடவுளின் கோவில் தூயது. நீங்களே அக்கோவில், என்று கூறுகிறார் (1 கொரிந்தியர் 3:16).
இதன் மூலம் நமது உடல் இறைவனின் ஆலயம் என்பது தெளிவாக தெரிகிறது. அந்த உடலை நாம் எப்படி பார்க்க வேண்டும் என்பதும் புரிகிறது. ஆகவே நாம் நமது உடலில் இறைவன் தங்கியிருக்கிறார் என்பதை நம்புகிறோமா? அப்படி நம்பினால், நம்மில் இருக்கும் இறைவனை நமது நல்ல செயல்களால் நமக்கு அடுத்து இருப்பவருக்கு வெளிப்படுத்தி இருக்கிறோமா? சிந்திப்போம்.
அன்பு, அமைதி, இரக்கம், மன்னிப்பு, சமத்துவம் ஆகிய இறைத்தன்மைகளை அனைவருக்கும் வெளிப்படுத்துவோம். நடமாடும் ஆலயங்களாக வாழ்வோம்.
- ராம என்ற நாமத்தை விட உயர்ந்த மந்திரம் எதுவும் இல்லை.
- ராமர் ஜாதகத்தில் நவக்கிரகங்கள் அமைந்த நிலை மகத்துவம் மிகுந்தது.
ராமர் ஜாதகம்
ராமர் ஜாதகத்தில் நவக்கிரகங்கள் அமைந்த நிலை மகத்துவம் மிகுந்தது. (கடக லக்னம் புனர்பூச நட்சத்திரம், கடக ராசி) மேஷத்தில் சூரியன் உச்சம், கடகத்தில் சந்திரன் ஆட்சி, குரு உச்சம், துலாம் ராசியில் சனி உச்சம், மகரத்தில் செவ்வாய் உச்சம், மீன ராசியில் சுக்ரன் உச்சம் என மொத்தம் 5 கிரகங்கள் உச்சம் பெற்றும், சந்திரன் ஆட்சி பெற்றும் ராகு ஆறாம் இடமான தனுசு ராசியிலும், கேது பன்னிரண்டாம் இடத்திலும் உள்ள சிறப்பு பெற்றது ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் ஜாதகம்.
ஸ்ரீராமரின் தாரக மந்திரம்
உலகத்தில் `ராம' என்ற நாமத்தை விட உயர்ந்த மந்திரம் எதுவும் இல்லை என்பார்கள். காசியில் இறந்தவர்களின் காதுகளில், சிவபெருமானே இந்த தாரக மந்திரத்தை கூறி, அவர்களை மோட்சத்திற்கு அனுப்புவதாக சொல்லப்படுகிறது. இதை ராமகிருஷ்ண பரமஹம்சரும் தன் கண்களால் கண்டதாகக் கூறுவார்கள்.

ராமபிரான் அங்க பூஜை
* ஓம் அஹல்யோத்தாரகாய நம: பாதௌ பூஜயாமி (கால்)
* ஓம் விநதகல்பத்ருமாய நம: குல்பௌ பூஜயாமி (கணுக்கால்)
* ஓம் தண்டகாரண்ய கமந ஜங்காலாய நம: ஜங்கே பூஜயாமி (முழங்கால்)
* ஓம் ஜாநுந்யஸ்த தராம்புஜாய நம: ஜானுனீ பூஜயாமி (முட்டி)
* ஓம் வீராஸநாத்யாஸிநே நம: ஊரூ பூஜயாமி (தொடை)
* ஓம் பீதாம்பரா லங்க்ருதாய நம: கடிம் பூஜயாமி (இடுப்பு)
* ஓம் ஆகாச மத்யகாய நம: குஹ்யம் பூஜயாமி (மர்மம்)
* ஓம் அப்தி மேகலாபதயே நம: நாபிம் பூஜயாமி (தொப்புள்)
* ஓம் உதரஸ்த்தித ப்ரஹ்மாண்டாய நம: உதரம் பூஜயாமி (வயிறு)
* ஓம் ஸீதாநுலேபித காச்மீர சந்தனாய நம: வக்ஷ பூஜயாமி (மார்பு)
* ஓம் அபயப்ரதான சௌ'ண்டாய நம: பார்ச்'வௌ பூஜயாமி (இடுப்பு)
* ஓம் ஜ்ஞானவிஜ்ஞாந பாஸ்கராய நம: ஹ்ருதயம் பூஜயாமி (மார்பு)
* ஓம் தசானன காலரூபிணே நம: ஸ்கந்தௌ பூஜயாமி (தோள்)
* ஓம் ஸீதாபாஹு லதாலிங்கிதாய நம: கண்டம் பூஜயாமி (கழுத்து)
* ஓம் விதரணஜித கல்பத்ருமாய நம: ஹஸ்தான் பூஜயாமி (கைகள்)
* ஓம் அரிநிக்ரஹ பராய நம: பாஹூன் பூஜயாமி (புஜதண்டம்)
* ஓம் ஸுமுகாய நம: முகம் பூஜயாமி (முகம்)
* ஓம் அநாஸாதித பாபகந்தாய நம: நாஸிகாம் பூஜயாமி (மூக்கு)
* ஓம் புண்டரீகாக்ஷாய நம்: அக்ஷிணீ பூஜயாமி (கண்கள்)
* ஓம் கபாலி பூஜிதாய நம: கர்ணௌ பூஜயாமி (காதுகள்)
* ஓம் கஸ்தூரீ திலகாங்கிதாய நம: பாலம் பூஜயாமி (நெற்றி)
* ஓம் ராஜாதிராஜவேஷாய நம: கிரீடம் பூஜயாமி (தலை )
* ஓம் ஸர்வேச்வராய நம: ஸர்வாண்யங்கானி பூஜயாமி (முழுவதும்)
- ராமாயணம் என்பது மிகப்பெரிய காவியம்.
- ராமர் பிறந்த திதியே ராம நவமி.
ஸ்ரீ ராம நவமி என்றாலே, ராமனைப் பற்றி பேசாமல் இருக்க முடியாது. ராமாயணம் என்பது மிகப்பெரிய காவியம். விபண்டகர் என்ற முனிவருக்கு ரிஷ்ய சிங்கர் என்ற புதல்வன் பிறந்தார். தசரத மகாராஜா அவரை அழைத்து வந்து, நாடு செழிக்க யாகம் செய்ய நினைத்தார். ஒரு வசந்த காலத்தில் அஸ்வமேத யாகத்தை ஆரம்பித்தார். அதற்காக வசிஷ்டர் மூலமாக யாகசாலையை நன்றாக கட்டக் கூடிய திறமை வாய்ந்த சிற்பிகளையும், நன்கு வேதம் படித்த யாகம் செய்யக்கூடிய பிராமணர்களையும் அழைத்து வரச் சொன்னார். வசிஷ்டரும் தசரத மன்னன் சொன்ன படியே அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார்.
இந்த யாகம் நடக்கும் பொழுது அயோத்தியில் இருக்கக்கூடிய நான்கு வர்ணத்தவருக்கும், எவ்விதமான உயர்வு தாழ்வும் இன்றி நல்ல மரியாதை, மதிப்புடனும் விருந்தளிக்குமாறும் தசரதர் கட்டளை இட்டிருந்தார். பல தேசத்து அரசர்களும் விலை உயர்ந்த பரிசுப் பொருட்களுடன் தசரத மகாராஜாவை காண வந்தனர். வசிஷ்டர் தலைமையில் யாகம் நடைபெற்றது. பல பண்டிதர்களும் அந்த நேரத்தில் தர்மங்களை பற்றி விவாதம் செய்தனர்.
ஒரு வருடம் பூர்த்தியான பிறகு அஸ்வமேத யாக குதிரை சரயு நதியின் வடக்கு கரையில் அமைந்த யாகசாலைக்கு அருகே வந்து சேர்ந்தது. முதல் நாள் அக்னிஷ்டோமம், இரண்டாம் நாள் உக்த்யம், மூன்றாம் நாள் அதிராத்ரம் என்ற யாகங்கள் கல்ப சூத்திரத்தில் சொல்லியபடி நடைபெற்றது.
அஸ்வமேத யாகம் நிறைவடைந்ததும் ரிஷ்ய சிங்கரை அணுகிய தசரத மன்னன், "நான் வெகு காலமாக புத்திர பாக்கியம் இன்றி தவிக்கிறேன். எங்கள் குலம் தழைக்க, அதற்குரிய யாகத்தை செய்து கொடுங்கள்" என்றார்.
ரிஷ்ய சிங்கர் அதர்வண வேதத்தில் சொல்லப்பட்ட ரகசியமான `இஷ்டி' என்ற யாகத்தை செய்து, பின் முறைப்படி புத்திர காமேஷ்டி யாகத்தை செய்தார். அந்த வேளையில் முப்பத்து முக்கோடி தேவர்களும், மகாவிஷ்ணுவை துதி செய்து `பூலோகத்தில் தர்மம் தழைக்க வேண்டும்' என வேண்டிக்கொண்டனர்.
மகாவிஷ்ணு அவர்களிடம் "நான் பதினோறாயிரம் வருஷம் இந்த பூமியில் பிறந்து நாட்டை ஆளப்போகிறேன்" எனக்கூறி, தன்னை நான்கு பாகமாக மாற்றி புத்திர காமேஷ்டி யாகம் செய்யும் யாகசாலை வந்து சேர்ந்தார். புத்திர காமேஷ்டி யாகம் செய்யும் அக்னியில் இருந்து தேஜஸ்வியான ஒரு பெருத்த உருவம் தோன்றியது. அதன் கையில் தங்க பாத்திரம் ஜொலித்தது. அதில் பால் பாயசம் இருந்தது. அந்த பால் பாயசத்தில் நான்கு பாகமாக மாறிய மகாவிஷ்ணு கலந்தார்.
தேஜஸ்வியான அந்த உருவம் தசரதரை நோக்கி "இந்த பால் பாயசத்தை உனது பிரியமான மனைவிகளுக்கு பிரித்துக் கொடு. அவர்களுக்கு நான்கு குழந்தைகள் பிறப்பார்கள்" எனக் கூறி மறைந்தது.
தசரத மகாராஜா, அந்த பாயசத்தில் பாதியை கவுசல்யாவிற்கு கொடுத்தார். மீதமுள்ள பாதியில் அரை பங்கை சுமித்திராவுக்கு கொடுத்தார். மேலும் மீதம் இருந்த அரை பங்கில் பாதியை கைகேயிக்கு அளித்தார். அதன்பிறகும் எஞ்சிய பாயசத்தை மீண்டும் சுமித்திராவுக்கு கொடுத்தார்.
பாயசத்தில் பாதியை அருந்திய கவுசல்யாவுக்கு சித்திரை மாதம் வளர்பிறை புனர்பூச நட்சத்திரம் கடக ராசியில் கடக லக்னத்தில் நவமி திதியில் ராமபிரான் பிறந்தார். கைகேயிக்கு பூச நட்சத்திரம் கடக ராசி மீன லக்னத்தில் பரதன் பிறந்தார். இரண்டு முறை பாயசம் அருந்திய சுமித்திராவுக்கு ஆயில்யம் நட்சத்திரம் கடன ராசி கடக லக்னத்தில் லட்சுமணனும், சத்ருக்ணனும் பிறந்தனர்.
பிரம்ம தேவர், ராம பிரானுக்கு உதவுவதற்காக தேவர்களையும், மகரிஷிகளையும், கந்தர்வர்களையும், கருடர்களையும், யட்சர்களையும், நாகர்களையும், கிம்புருஷர்களையும், சித்தர்களையும், வித்யாதரர்களையும், உரகர்களையும், பெரிய உருவங்களுடன் வனத்தில் வசிக்கக்கூடிய வானரர்களாக பிறக்கும்படி செய்தார். இதில் நாம் ராமர் பிறந்த தினத்தை `ராம நவமி' என்ற பெயரில் சிறப்பாகக் கொண்டாடுகிறோம்.
ஒரு சமயம் அஷ்டமி திதியும், நவமி திதியும் மன வருத்தம் கொண்டன. 'எல்லா திதிகளும் கொண்டாடப்படுகின்றன. நம்மை மக்கள் யாரும் கொண்டாடவில்லையே' என எண்ணி, வைகுண்டம் சென்று விஷ்ணு பகவானிடம் முறையிட்டன. அதற்கு விஷ்ணு, "நீங்கள் கவலைப்பட வேண்டாம். அஷ்டமி அன்று கிருஷ்ண அவதாரமும், நவமி அன்று ராம அவதாரமும் செய்யப்போகிறேன். அந்த தினங்களில் உலக மக்கள் அனைவரும் உங்களைக் கொண்டாடுவார்கள்" என்று வரம் கொடுத்தார்.
அதன் படியே கிருஷ்ணர் பிறந்த அஷ்டமி திதியை `கோகுலாஷ்டமி' என்றும், ராமர் பிறந்த நவமி திதியை `ராம நவமி' என்றும் சிறப்பித்து வழிபடத் தொடங்கினர். ராம நவமி தினத்திற்கு 9 நாட்கள் முன்பு `கர்ப்போத்ஸவம்' என்று கோவில்களில் கொண்டாடுவார்கள். அப்போது ஆலயங்களில் விசேஷ பூஜைகளும் நடக்கும்.
ராவணன், கரன், தூஷணன், திரிசிரன், மாரீசன், சுபாகு, தாடகை, விரதன், கபந்தன் போன்ற ராட்சசர்களை அழிக்க ராமனாக, விஷ்ணு பகவான் அவதரிக்கப் போவதை அறிந்து கொண்ட முனிவர்கள், ராமர் பிறப்பதற்கு முன்பிருந்தே கர்ப்போத்ஸவத்தை கொண்டாடியதாகச் சொல்வார்கள். அதேபோல் ராமபிரான் பிறந்ததில் இருந்து வரக்கூடிய ஒன்பது நாட்களை `ஜனோத்ஸவம்' என்று கொண்டாடுவார்கள்.






