search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "23th Day of Fasting"

    • இறை நம்பிக்கைக்கு எதிரான தீய செயல்.
    • மது அருந்துவது இறைநம்பிக்கைக்கு எதிரான ஒரு தீய செயல்.

    இறை நம்பிக்கைக்கு எதிரான தீய செயல்

    இஸ்லாம் மது அருந்துவதை பெரும் "பாவங்களில் ஒன்றாக கருதுகிறது. மீறி மது அருந்துவோருக்கு கசையடி தண்டனை வழங்கும்படி பரிந்துரை செய்கிறது.

    மது அருந்துவது இறைநம்பிக்கைக்கு எதிரான ஒரு தீய செயல் ஆகும். மதுவை இஸ்லாம் ஒரே கட்டத்தில் தடை செய்யவில்லை. நான்கு கட்டங்களில் மதுவுக்கு எதிராக நடவடிக்கைகளை முன்வைத்து அது முற்றிலும் தடை செய்யப்பட்டது.

    மது தீய பானம் என்பதை இறைவன் அறிவுறுத்தி முதல் தடை நடவடிக்கையை மேற்கொள்கின்றான். இந்த அறிவுரையால் சில பேர் மது அருந்துவதை விட்டுவிட்டனர். உமர் (ரலி) நபியிடம் வந்து மது சம்பந்தமாக தெளிவான ஒரு தீர்வை எங்களுக்கு தாருங்கள் என வேண்டினார். ஆதலால், பின்வரும் இறை வசனம் இறங்கியது.

    'பேரீச்சை, திராட்சை பழங்களில் இருந்து மதுவையும், நல்ல ஆகாரங்களையும் நீங்கள் உண்டாக்குகிறீர்கள். நிச்சயமாக இதில் சிந்திக்கும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது. (திருக் குர்ஆன் 16:67)

    மது அருந்துவது பெரும் பாவமாகும் என இறைவன் பிரகடனப் படுத்தியபோது இந்த பெரும் பாவத்திலிருந்து பெரும்பான்மை மக்கள் விலகிக் கொண்டனர்.

    (நபியே!) மதுபானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். நீர் கூறும்: 'அவ்விரண்டிலும் பெரும்பாவம் அவ்விரண்டிலும் இருக்கிறது. மனிதர்களுக்கு (அவற்றில் சில) பலன்களுமுண்டு. ஆனால், அவ்விரண்டிலும் உள்ள பாவம் அவ்விரண்டிலும் உள்ள பலனை விட பெரிது. (திருக்குர்ஆன் 2:219)

    சில பேர் மதுவை விடாமல் அருந்திக்கொண்டு அறிவை இழந்து கொண்டும், சோதனையில் மாட்டிக்கொண்டும் இருந்தனர். இத்தகைய சூழ்நிலையில் மீண்டும் உமர் (ரலி) இறைவா! மது சம்பந்தமாக இன்னும் ஒரு தெளிவான ஒரு தீர்வை எங்களுக்கு வழங்கிடு!' என்றார்கள். உடனே இறைவன் மூன்றாம் கட்ட தடையை இறக்கி வைக்கின்றான்.

    'இறை நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் ஒதுவது இன்னது என்று நீங்கள் அறிந்துகொள்ள முடியாதவாறு நீங்கள் போதையில் இருக்கும்போது தொழுகைக்கு நெருங்காதீர்கள்' (திருக்குர் ஆன் 4:43)

    பின்னர், நிரந்தரத் தடை வேண்டி உமர் (ரலி) இறைவனிடம் இறைவா! மது சம்பந்தமாக இறுதியான தீர்க்கமான ஒரு தீர்வை தருவாயாக' என வேண்டியபோது நான்காவது நிரந்தரத் தடை வந்தது.

    'ஈமான் கொண்டோரே! மதுவும், சூதுவும், கற்சிலை வழிபாடும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும் ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களில் உள்ளவையாகும். ஆகவே, நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். நிச்சயமாக ஷைத்தான் விரும்புவதெல்லாம் மதுபானத்தைக் கொண்டும், சூதாட்டத்தைக் கொண்டும் உங்களிடையே பகைமையையும், வெறுப்பையும் உண்டு பண்ணி இறைவனின் நினைவில் இருந்தும், தொழுகையில் இருந்தும் உங்களை தடுத்துவிடத்தான். எனவே அவற்றை விட்டும் நீங்கள் விலகிக் கொள்ள மாட்டீர்களா?' (திருக்குர்ஆன் 5:90,91)

    ஹிஜ்ரி 3-ம் ஆண்டு உஹத் யுத்தத்திற்கு பின் மது நிரந்தரமாகத் தடை செய்யப்பட்டு விட்டது.

    இந்த தடை உத்தரவை நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரி 8-ம் ஆண்டு மக்கா வெற்றி கொள்ளப்பட்ட பிறகு புனித ரமலானில் மறுதடவையாகத் தடை செய்கிறார்கள். ஏனென்றால் இந்த தடை பற்றி தெரியாதவர் தெரிந்து கொண்டு, தவிர்த்துக் கொள்ள வேண்டியதாகும்.

    ×