என் மலர்tooltip icon

    கோவில்கள்

    சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து ஆவடி, அம்பத்தூர் வழியில் இருக்கிறது, பாடி என்ற ஊர். இங்குள்ள லூகாஸ் டி.வி.எஸ். பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, சுமார் 5 நிமிடம் நடந்தால், திருவலிதாயநாதர் திருக்கோவிலை அடையலாம்.
    சென்னை பாரிமுனையில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் இருந்தாலும், திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கிறது பாடி என்ற ஊர். இது தேவாரம் பாடிய சமயக் குரவர்களின் காலத்தில் ‘திருவலிதாயம்’ என்று அழைக்கப்பட்டு வந்துள்ளது. இங்கு வல்லீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. மூலவரின் பெயர் ‘திருவல்லீஸ்வரர்’, ‘திருவலிதமுடையநாயனார்’ என்பதாகும். அம்மனின் பெயர் ‘ஜெகதாம்பிகை’, ‘தாயம்மை’. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில், இது 254-வது தலம் ஆகும். தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டுத்தலங்களில் இது 21-வது தலம்.

    பரத்துவாஜ முனிவர் கருங்குருவி (வலியன்) யாக வந்து, இத்தலத்தில் இறைவனை வழிபட்டதால் இத்தலம் ‘திருவலிதாயம்’ என்றும், இறைவன் ‘வலிதாயநாதர்’ என்றும் அழைக்கப்படுகிறார். இக்கோவில் சுமார் 1000 வருடங்களுக்கு முன் கட்டப்பட்டதாகத் தெரிகிறது. திருஞானசம்பந்தர், அருணகிரிநாதர் முதலியோரால் பாடல் பெற்ற தலமாக இது உள்ளது. மூலவர் சுயம்பு மூர்த்தி. இவருக்கு மேல் உள்ள விமானம் கஜபிருஷ்ட (யானையின் பின்புறம்) அமைப்புடையது.

    வியாழ பகவான் எனப்படும் குரு, தான் செய்த தவறால் தனது சகோதரனின் மனைவி மேனகையின் சாபத்தைப் பெற்றார். அவரை சந்தித்த மார்க்கண்டேய மகரிஷி, இத்தலத்தில் உள்ள சிவனை வணங்கினால், பாவம் நீங்கி மோட்சம் கிடைக்கும் என்று வழிகாட்டினார். அதன்படி இங்கு வந்த வியாழ பகவான், இத்தல புனித தீர்த்தத்தில் நீராடி சுவாமியை வணங்கி அருள் பெற்றார். இதனால், இது குரு தலம் என்ற சிறப்பையும் பெற்றிருக்கிறது. குரு பகவானுக்கு தனிச் சன்னிதி இருக்கிறது. குரு பரிகார தலங்களாக சொல்லப்படும் தலங்களில், திருவலிதாயமும் ஒன்றாகும்.

    இத்தலத்தில் முருகப்பெருமான் நான்கு கரங்களுடன் வள்ளி-தெய்வானை சமேதராக எழுந்தருளியுள்ளார். வெளிப் பிரகாரத்தில் இருந்து உள் மண்டபத்தில் நுழைந்தவுடன், மூலவர் திருவலிதாயநாதர் சன்னிதி கிழக்கு நோக்கி அமைந்திருக்கிறது. உள்பிரகாரத்தின் வலது புறம் தெற்கு நோக்கியபடி அம்பாள் சன்னிதி இருக்கிறது. அம்பாளின் திருநாமம் ‘தாயம்மை’ என்பதாகும். அம்பாள் சன்னிதிக்கு நேர் எதிரே தெற்கு வெளிப் பிரகாரத்தில் சிம்ம வாகனம் அம்பாளை நோக்கியவாறு உள்ளது.

    ஒரு நாட்டைச் சார்ந்த மன்னன், மற்றொரு நாட்டு மன்னனோடு போர் தொடுத்துச் செல்லும் போது, தமது படைகள் தங்குவதற்கென்று ஓர் இடத்தை ஏற்பாடு செய்து அங்கு தங்கியிருப்பது வழக்கம். இந்த மாதிரி இடங்களை ‘பாடிவீடு’ என்று குறிப்பிடுவார்கள். மேற்கூறியவற்றுள் இந்த பாடி என்ற ஊரின் பெயர், போர்க்கால பாடி வீட்டின் அடிப்படையில் அமைந்திருக்கலாம். சோழ மன்னர்களும், விஜய நகர மன்னர்களும் இவ்வூரை பாடிவீடாகப் பயன்படுத்தியிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

    இத்தீர்த்தத்தில் நீராடி சுவாமியை வணங்கிட தோஷங்கள் நீங்கும். இத்தல குருபகவானை வணங்கினால் பாவங்கள் விலகும் என்பது நம்பிக்கை. பிரம்மபுத்திரிகளான கமலி, வல்லி ஆகிய இருவரையும், விநாயகர் இத்தலத்தில்தான் திருமணம் செய்து கொண்டார் என வரலாறு கூறுகிறது. இதற்கு சான்றாக இங்கு கமலை, வல்லிகளுடன் இருக்கும்படியான விநாயகரின் உற்சவர் சிலை உள்ளது. திருஞானசம்பந்தர் இயற்றியுள்ள இத்தலத்திற்கான பதிகம் முதலாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. இந்தக் கோவில் காலை 6.30 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
    “பெரியநாயகி அம்மன்” கோவில் சிற்பங்கள், காண்போரை பரவசமடையச் செய்து தமிழர்களின் கலை மேன்மையை உலகுக்கு உணர்த்துவதாய் உள்ளது.
    12 இராசிகளுக்கு 12 கலைநுட்பம் மிகுந்த மிகப் பெரிய தூண்கள் ஒரே கல்லில் அமைக்கப்பட்டுள்ள கோவில் இது. 16ம் நூற்றாண்டில் பல்வேறு கால கட்டங்களில் நாயக்க மன்னர்களால் புணரமைப்பு செய்யப்பட்ட “ஊர்க்கோயில்” “யானைக்கோயில்” எனப்படும் “பெரியநாயகி அம்மன்” கோவில் சிற்பங்கள், காண்போரை பரவசமடையச் செய்து தமிழர்களின் கலை மேன்மையை உலகுக்கு உணர்த்துவதாய் உள்ளது. இந்தச் சிற்பங்கள் இதுவரை உலகுக்கு கவனப்படுத்தப்படாமல் குடத்திலிட்ட விளக்காய் உள்ளன. நவரங்க மண்டபத்தின் அமைப்பு: சிற்பக்கலையின் மேன்மையைப் பறைசாற்றும் விதமாக அமைந்துள்ள நவரங்க மண்டபம் என்று அழைக்கப்படும் முன் மண்டபத்தில் 12 இராசிகளுக்கு 12 கலைநுட்பம் மிகுந்த மிகப் பெரிய தூண்கள் ஒரே கல்லில் அமைக்கப்பட்டுள்ளது. அதை சுற்றிலும் 27 நட்சத்திரங்களை குறிப்பிடும் 27 தூண்கள் மண்டபத்தின் மேற்கூரையைjjத் தாங்கி நிற்கின்றது. முற்றிலும் கருங்கல்லில் வடிவமைக்கப்பட்ட இம்மண்டபத்தைக் காணக் கண் கோடி வேண்டும். வெறும் கடவுளாக மட்டுமே பார்ப்பவர்களுக்கு அதில் உள்ள கலை நுணுக்கமும், நுண்ணிய வேலைப்பாடுகளும் தெரிய முடியாது போகலாம். தூண் சிற்பங்கள்: மண்டபத்தின் மேற்கூரையில் 12 ராசிகளும், 27 நட்சத்திரங்களும் செதுக்கப்பட்டுள்ளது. அதற்குத் தகுந்தாற் போல் 12 உள்புறத் தூண்கள் அந்தந்த ராசிக்கு உரிய கடவுளர் உருவங்கள் தாங்கி கம்பீரமாக நிற்கின்றது. ஒவ்வொரு தூணிலும் ஒரு புராணக் காட்சி சித்தரிக்கப்பட்டுள்ளது. மேசராசி தூணில் ரிசபக் காளை வாகனத்தில் அமர்ந்து எதிர் தூணில் உக்கிரமாய்க் காட்சி தரும் நரசிம்மரை சாந்தப்படுத்துவது போன்று சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மிதுனராசி தூணில் மிதுன ராசிக்கு உரிய ரதியும், மன்மதனும் கரும்பு வில்லோடு காட்சி தருகின்றனர். கடகராசிக்காரராகிய முருகக்கடவுள் கோவனத்துடன் தண்டு ஊன்றி நிற்கும் காட்சி முன்னோர்களின் சிற்பக் கலைக்கு எடுத்துக்காட்டு. இத்தூணில் மேற்குப் பக்கம் அர்த்தனாரீஸ்வரரும், கிழக்குப் பக்கம் பூக்கூடையுடன் முருகன் அடியாரும் உள்ளனர். பூக்கூடை பனை ஓலையால் செய்யப்பட்டது போலவே நுட்பமாகச் செதுக்கப்பட்டுள்ளது. சிம்மராசிக்கு உரிய தூணில் பத்திரகாளியம்மன் தலைகவிழ்ந்து காட்சியளிக்கின்றாள். அதற்கு நேர் எதிரில் மகரராசித் தூணில் சிவதாண்டவக் காட்சி அருமையாய் செதுக்கப்பட்டுள்ளது. இச்சிற்பத்தின் கலை நுணுக்கம் காண்போரை வியப்படையச் செய்யும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளாது. துலாம் ராசித் தூணில் சூரியன் தேர் பூட்டிய ரதத்தில் செல்வது போன்ற சிற்பமும் சூரியனின் முழு உருவமும் 6 அடி உயரத்தில் கலை நுணுக்கத்துடன் வடித்துள்ளது பண்டைய தமிழ் மக்களின் கலைத் திறத்திற்கு எடுத்துக்காட்டு. கன்னிராசி தூணில் வாமன அவதாரக் காட்சி செதுக்கப்பட்டுள்ளது. விருச்சிக ராசித் தூணில் சந்திரன் குதிரை பூட்டிய தேரில் ஏறிச் செல்வது போன்று முழு உருவம் தத்ரூபமாய் வடிவமைக்கப்பட்டுள்ள காட்சியைக் காண கண் கோடி வேண்டும். நடராஜரும், மீனாட்சியம்மையும் மகர ராசித் தூணிலும் நடராஜர் பாதத்திற்கு கீழ் காரைக்கால் அம்மை பேய் உருவம் கொண்ட காட்சி சிற்பக்கலையின் அழகுக்கு அழகு. கும்ப ராசிக்கு உரிய தூணில் சுப்பிரமணியர் உருவமும் வள்ளி, தெய்வானை உருவங்களும் கலையழகுடன் செதுக்கப்பட்டுள்ளது. கல்லிலே கலை வண்ணம் கண்ட தமிழனின் கலை நுட்பத்திற்கு எடுத்துக்காட்டாய் உமையொரு பாகன் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. ஒரே கல்லில் சக்தியும் , சிவனும் அர்த்தனாரீஸ்வரராக செதுக்கப்பட்டுள்ளது கலை நுட்பத்திற்கு எடுத்துக்காட்டாகும். நடுவில் உள்ள தூண்களில் இக்கோயில் சிற்பங்கள் செதுக்க உதவிய அரசர்கள், அவர்களின் மனைவிமார்கள், மன்னர்களின் தளபதிகள் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. கலைக்கண் கொண்டு நோக்கின் இவர்கள் உண்மையிலேயே நிற்பது போன்ற காட்சி புலப்படுகின்றது. வெளிப்பிரகாரத்தில் உள்ள தூண்களில் நுழைவு வாயில் பக்கத்தில் உள்ள தூணில் மீனாட்சியம்மை திருமணக் காட்சியும் அதை தென்திசை அகத்தியர் பார்ப்பது போன்ற காட்சி 30 அடி அளவில் ஆறு தூண்கள் அப்பால் செதுக்கப்பட்டுள்ளது. கட்டிடக் கலை வடிவமைப்பிற்கு எடுத்துக்காட்டாகவும் அறிவியல் தொழில் நுட்பத்திற்கு சான்றாகவும் உள்ளது. அரசர்கள் புலியை வேட்டையாடிய காட்சி பல தூண்களில் இயற்கையாக அமைக்கப்பட்டுள்ளது. சனிபகவான் காக்கை வாகனத்தில் அமர்ந்திருக்கும் காட்சி சிறப்பானதாகும். சிவபெருமானின் அடியையும், முடியையும் காண பன்றியாகவும், அன்னமாகவும் சென்ற காட்சியும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கலை நுணுக்கத்துடன் வெளிநாட்டில் இச்சிற்பங்கள் இருந்திருக்குமேயானால், அவர்கள் இந்தச் சிற்பங்களின் பெருமையை உலகெங்கும் பரவச் செய்திருப்பர். எதையும் பக்தி கண்ணோட்டத்துடனே பார்க்கும் நம் மக்கள் அச்சிலைகளில் கடவுளை மட்டும் பார்த்தார்களேயன்றி அதில் உள்ள கலை நுட்பத்தையும், சிற்பியின் கலைத் திறனையும், அரசர்களின் முயற்சியையும் காணவில்லையாதலால் இச்சிற்பக் கலையின் பெருமை உலகோர்க்கு தெரியாமல் போய்விட்டது. ஒருசில இடங்களில் ஆண், பெண் உடல் உறவை சித்தரிக்கும் சிற்பங்கள் சிதைக்கப்பட்டு காணப்படுகின்றது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிற்பங்கள் இங்கு வடிவமைக்கப்பட்டுள்ளது சிறப்பானதாகும். மன்னர்கள் புலியை வேட்டையாடிய காட்சி, காட்டுப் பூனை அன்னப்பறவையை வேட்டையாடிய காட்சி தத்ரூபமாக வடிவமைக்கபட்டுள்ளாது. இக்கோயிலின் நவரங்க மண்டபத்திலும் அர்த்த மண்டபத்தில் எல்லாக் கடவுளர் சிற்பங்களும் உள்ளது. இக்கோயில் ஒரே மன்னர்களால் கட்டப்பட்டிருக்க வாய்ப்பு இல்லை எனலாம். அர்த்த மண்டபம் திருமலை மன்னரால் கட்டப்பட்டிருக்கலாம். அர்த்த மண்டப முன்புறத் தூண்களில் ஒரு தூணில் அரசரும் அவரது மனைவிமார்கள் இருவரும் மற்ற இரண்டு தூண்களில் அரசர் மற்றும் அவரது மனைவிமார்கள் செதுக்கப்பட்டுள்ளனர். அரசருக்குப் பக்கத்தில் உள்ள தூணில் அரசரின் குல குருவின் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. திருமாலின் அவதார காட்சிகள் பல தூண்களில் வடிவமைக்கப்பட்டுள்ளது. திருமால், இந்திரன், பலராமன், அனுமன், நரசிம்மர், வாமனர், வராகம் என பல சிற்பங்கள் தூண்களில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அர்த்த மண்டபம் எனப்படும் உள்மண்டபத்தில் 12 அடி உயரத்தில் 84 தூண்களில் பல நுண்ணிய இயற்கை காட்சிகள் வியக்க வைக்கும் வண்ணம் செதுக்கப்பட்டுள்ளது. ஒரே கல்லில் முருகனின் வாகனமாகிய மயில், யானை, குதிரைகள் ஆகியவை நேர்த்தியாக செதுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சிற்பமும் ஒவ்வொரு புராணச் செய்தியைக் கூறுவதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 12 அடி உயரமுடைய தூண்களின் மேல் யாழிகள் செதுக்கப்பட்டு மேற்கூரையைத் தாங்குவதாக உள்ளது.
    கால பைரவாஷ்டமி தினமான இன்று பைரவரை விரதமிருந்து வணங்குவதால் பைரவரின் அருளோடு அஷ்ட லஷ்மிகளின் அருளும் கிடைக்கப் பெறுவோம்.
    சிவாலங்களில் முதல் வழிபாடு விநாயகருக்கு என்றால் இறுதியாக வழிபாடு செய்யக்கூடிய தெய்வம் பைரவர். ஆலயத்தின் காவல் தெய்வமாக இருக்கும் பைரவர் சிவனுடைய அம்சமாக கருதப்படுகிறார்.

    ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறையில் அஷ்டமி திதி அன்று பைரவ வழிபாடு செய்ய உகந்ததாகும். அந்த நாள் தான் பைரவாஷ்டமி என்று சொல்லப்படுகிறது. அதிலும், தேய்பிறை அஷ்டமி கால பைரவாஷ்டமி என்று கருதப்படுகிறது. இந்த நாட்களில் விரதம் இருந்து வழிபாடு செய்தால் துன்பங்கள் பறந்தோடும்.

    இவருக்கு பவுர்ணமி தினத்திற்கு பிறகு வரும் தேய்பிறை அஷ்டமி திதியில் 5 விளக்குகளில் 5 நல்லெண்ணெய், இலுப்பு எண்ணெய், விளக்கு எண்ணெய், பசு நெய், தேங்காய் எண்ணெய் போன்றவற்றால் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். இப்படி தனித்தனியாக தீபம் ஏற்றி வழிபட்டால் தீரா பிரச்சினையும் தீரும், காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கும்.

    12 ராசிகளையும் தன் உடலில் அங்கங்களாகக் கொண்டவர் ஸ்ரீ பைரவர். சனியின் வாத நோயை நீக்கியவரும் பைரவரே. தேய்பிறை அஷ்டமி நாளில் அஷ்ட லட்சுமிகளும் பைரவரை வணங்குகின்றனர். அந்நாளில் நாமும் பைரவரை விரதமிருந்து வணங்குவதால் பைரவரின் அருளோடு அஷ்ட லஷ்மிகளின் அருளும் கிடைக்கப் பெறுவோம்.
    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பட்டமங்கலம் ஒரு குருஸ்தலமாக விளங்குகிறது. இங்கு சிவபெருமான் குரு வடிவில் வந்து கார்த்திகை பெண்களின் சாபத்தை போக்கினார். அந்த புராண வரலாறு காண்போம்.
    கைலாய மலையில் சிவபெருமான் பார்வதியுடன் வீற்றிருந்தார். அப்போது அங்கு கார்த்திகை பெண்கள் ஆறு பேர் அங்கு வந்தனர். அவர்கள் சிவனிடம் தங்களுக்கு அஷ்டமாசித்தியை உபதேசிக்குமாறு வேண்டினர். அவர்களிடம் சிவபெருமான் சிவயோகிகள் யாரும் சித்திகளை விரும்ப மாட்டார்கள். ஆனால் அவர்களிடம் இச்சித்திகள் நிழல்போல் உடலோடு ஒட்டிக் கொண்டு அவர்களின் பெருமையை உலகிற்கு உணர்த்தும் என்றார். அப்போது பார்வதி தேவி அவர்களுக்கு அஷ்டமாசித்தியை உபதேசிக்கும்படி சிவனிடம் வேண்டினார். இதனால் சிவன் கார்த்திகை பெண்களிடம் உங்களுக்கு பராசக்தியாக விளங்கும் பார்வதிதேவி அஷ்டமாசித்தியை உபதேசிப்பார் என்று கூறி பார்வதியிடம் அவர்களுக்கு இச்சித்திகளை உபதேசிக்கும் படி கேட்டுக்கொண்டார்.

    ஆனால் கார்த்திகை பெண்களோ, பார்வதிதேவியை சிந்தனை செய்யாமல் அவள் சொன்ன அஷ்டமா சித்தியை பற்றிய உபதேசத்தை கேட்கவில்லை. இதனால் கோபம் கொண்ட சக்தி கார்த்திகை பெண்களை பாறைகளாக கிடக்க கடவீர்கள் என சாபமிட்டார். இதை கண்டு அஞ்சிய பெண்கள் சிவபெருமானிடம் சாபவிமோசனம் வேண்டினர். அவர்களிடம் சிவபெருமான் நீங்கள் பட்டமங்கலத்தில் ஆலமரத்தரடியில் கற்பாறைகளாக இருங்கள். யாம் மதுரையில் இருந்து குருவடிவில் வந்து உங்களுக்கு சாபவிமோசனம் கொடுப்போம் என்றார்.

    அதன்படி ஆறுகார்த்திகை பெண்களும் அங்கு பாறைகளாக ஆயிரம் ஆண்டுகள் கிடந்தனர். ஏற்கனவே கூறியபடி சிவபெருமான் வந்தபோது குருவடியில் பட்டமங்கலம் வந்து கார்த்திகை பெண்களின் சாபத்தை போக்கினார். பின்னர் அவர்களுக்கு அஷ்டமா சித்திகளை உபதேசித்தார். அதன்பின் கார்த்திகை பெண்கள் சிவனையும் பார்வதியையும் பூஜித்தனர்.

    கார்த்திகை பெண்களுக்கு அஷ்டமாசித்தியை உபதேசித்த சிவபெருமான் இங்கு தட்சிணாமூர்த்தியாக ஆலமரத்தடியில் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். பட்டமங்கலம் சுந்தரேசுவரர் கோவிலுக்கு வெளியில் இந்த தட்சிணாமூர்த்தி சன்னதி உள்ளது.

    இதற்கிடையே பார்வதிதேவி கார்த்திகை பெண்களுக்கு அஷ்டமாசித்தியை உபதேசிக்கும் படி சிவனுக்கு பரிந்துரை செய்ததால் சிவன் கோபத்திற்கு ஆளாகி காளியாக உருவெடுத்து பட்டமங்கலத்தில் நாவல் மரத்தடியில் கோவில் கொண்டாள். அந்த காளிக்கு நவ்வலடி காளி என்று பெயர். அவளுக்கும் சிவபெருமான் விமோசனம் கொடுத்தார். அதன்பின் அவர் காளி வடிவம் நீங்கி சவுந்தரி அம்மனாக காட்சி அளித்தார். இத்தலத்தில் சுந்தரேஸ்வரராக சிவனும், மீனாட்சியாக பார்வதியும் உள்ளனர்.

    ஐந்து முகங்கள் கொண்ட முருகன் சன்னதி இங்குள்ளது. சிவனின் அம்சம் கொண்டவர் என்பதால் சிவனுக்குரிய ஐந்து முகங்களுடன் இருக்கிறார். அருகில் வள்ளி, தெய்வானை உள்ளனர்.

    எல்லா கோவில்களிலும் தெற்கு நோக்கி தட்சிணாமூர்த்தி இருப்பார். ஆனால் இங்கு கிழக்கு நோக்கி அருள்கிறார். கல்லால் ஆன ஆலுமரத்தடியில்தான் தட்சிணாமூர்த்தி இருப்பார். ஆனால் இங்குதான் உண்மையான ஆலமரத்தடியில் உள்ளார். இவரை வியாழக்கிழமை களில் தட்சிணாமூர்த்தி யுடன், சன்னதிக்கு பின்புறமுள்ள ஆலமரத்தையும் சேர்த்து 12 முறை வலம் வந்தால் உயர்கல்வி யோகம் உண்டாகும். நல்ல மணவாழ்க்கையும் குழந்தைப்பேறும் அமையும். தல விருட்சமாக ஆலமரமும், தீர்த்தமாக பொற்றாமரை குளமும் உள்ளது.

    இங்கு வழக்கமாக வியாழக்கிழமை பக்தர்கள் ஏராளமானோர் சென்று வழிபடுவர். குருப்பெயர்ச்சி அன்று சிறப்பு பூஜைகள் நடைபெறும். தட்சிணாமூர்தியை வணங்கினால் குருவின் அருள் கிட்டும். குருதோஷம் விலகும்.

    விசேஷ நாட்கள்: திருக்கார்த்திகை, மாசி மகம், மகாசிவராத்திரி. வியாழக்கிழமைகளில் பகல் 12.00  -1.30 மணி வரை அபிஷேகம்.

    நேரம்: காலை 6.30 - 12.30 மணி; மாலை 4.30 - 8.00 மணி.
    முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில், பசுமை போர்த்திய இடமாக விளங்குவது ‘சோலைமலை’ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில், பசுமை போர்த்திய இடமாக விளங்குவது ‘சோலைமலை’ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில். ஆறுபடை வீடுகளின் வரிசையில் ‘பழமுதிர்சோலை’ என்று குறிப்பிடப்படும் இந்த ஆலயத்தில், முருகப்பெருமான் ஞானத்தை அருள்பவராக வீற்றிருக்கிறார். ‘பழம் உதிர்க்கப்பெற்ற சோலை’ என்பதே பேச்சு வழக்கில் ‘பழமுதிர்சோலை’ ஆனதாக சொல்லப்படுகிறது.

    தல வரலாறு

    முருகப்பெருமானின் சிறப்புகளைப் பாடிய சங்க கால புலவர்களில் ஒருவராக அறியப்படுபவர், அவ்வையார். முருகப்பெருமானின் மீது அவ்வையாருக்கும், அவ்வையாரின் மீதும் அவரது தமிழின் மீதும் முருகப்பெருமானுக்கும் தனிப் பற்றுதல் இருந்ததை அவரது பாடல்கள் பல எடுத்துரைக்கின்றன. அப்படிப்பட்ட அவ்வையாருக்கு ஞானத்தை முழுமையாக முருகப்பெருமான் வழங்கிய இடமாக பழமுதிர்சோலை திகழ்கிறது.

    ஒரு முறை அவ்வையார் பழமுதிர்சோலை வழியாக சென்று கொண்டிருந்தார். கடுமையான வெயில், நீண்ட தூரப் பயணம் காரணமாக அவருக்கு களைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் அங்கிருந்த ஒரு நாவல் மரத்தின் அடியில் அமர்ந்து இளைப்பாறினார். அந்த மரத்தில் ஏராளமான நாவல் பழங்கள் காய்ந்து கனிந்து தொங்கிக்கொண்டிருந்தன. அதை உண்டு பசியாறலாம் என்று நினைத்த அவ்வையின் கண்களில், மரத்தின் மீது அமர்ந்திருந்த ஆடு, மாடு மேய்க்கும் சிறுவன் தென்பட்டான்.

    அதே நேரம் அந்தச் சிறுவனே அவ்வையாரை நோக்கி, “என்ன பாட்டி.. மிகவும் களைப்பாக இருக்கிறதா? உங்களுடைய களைப்பைப் போக்க நாவல் பழங்களைப் பறித்து தரட்டுமா?” என்று கேட்டான்.

    மகிழ்ச்சியடைந்த அவ்வையார், ‘ஆமாம்.. பறித்துக் கொடுப்பா..” என்றார்.

    ஆனால் அந்தச் சிறுவன் உடனடியாக நாவல் பழங்களைப் பறித்துக் கொடுத்துவிடவில்லை. மாறாக, “பாட்டி.. உங்களுக்கு சுட்டப்பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?” என்று கேட்டான்.

    அதைக் கேட்டு புன்னகைத்த அவ்வையார், ‘சிறுவன் ஏதோ அறியாமையில் கேட்கிறான்’ என்று நினைத்தார். இருப்பினும் “சுட்டப்பழத்தையே கொடு” என்று கூறினார்.

    உடனே அந்தச் சிறுவன், மரத்தில் இருந்து நாவல் பழங்களை உலுக்கினான். அவை தரையில் விழுந்தன. அதை எடுத்த அவ்வையார், பழத்தின் மீது ஒட்டியிருந்த மண்ணை அகற்றுவதற்காக, வாயால் ஊதினார். அதைப் பார்த்த சிறுவன், “என்ன பாட்டி.. பழம் மிகவும் சூடாக இருக்கிறதா?” என்று கேட்டான்.

    அதைக் கேட்ட திகைத்துப் போன அவ்வையார், வந்திருப்பது சாதாரண சிறுவன் இல்லை என்பதை உணர்ந்துகொண்டார். “நீ யாரப்பா?” என்று கேட்டார்.

    மரத்தின் மீதிருந்து கீழே குதித்த அந்தச் சிறுவன், முருகப்பெருமானாக மாறி அவ்வையாருக்கு காட்சி கொடுத்தார். இப்படி அவ்வையாருக்கு முருகப்பெருமான் காட்சி கொடுத்த இடம், சோலைமலை முருகப்பெருமானின் ஆலயத்திற்கு கொஞ்சம் முன்பாக அமைந் திருக்கிறது.

    இந்த உலகத்தில் உள்ள உயிர்கள் அனைத்துமே, நாவல் பழம் போலத்தான். அந்த உயிர்களின் மீது பாசபந்தம் என்னும் மண் ஒட்டிக்கொண்டிருக்கிறது. அதைப் போக்க வேண்டும் என்றால் வெறும் கல்வி அறிவுமட்டும் போதாது. அதோடு இறையருள் என்னும் மெய்யறிவும் வேண்டும் என்பதை உணர்த்திய இடமே, பழமுதிர்சோலை ஆகும்.

    இந்த ஆலயத்தில் முன்பு, வேல் வைத்து வழிபடும் முறையே இருந்து வந்துள்ளது. அதன் பிறகுதான் உருவ வழிபாடு வந்திருக்கிறது. மூலவராக சுப்பிரமணியரும், வள்ளி-தெய்வானை தேவியரும் இருக்கிறார்கள். இருப்பினும் அவர்களுக்கு அருகில் இருக்கும் வேலுக்குதான் வழிபாடு செய்யப்படுகிறது. இந்த ஆலயத்தில் உள்ள இறைவனை வழிபடுபவர்களுக்கு, கல்வியறிவும், ஞானமும் கிடைக்கும் என்கிறார்கள். தமிழ் வருடப்பிறப்பு, வைகாசி விசாகம், ஆடிக் கார்த்திகை, ஆவணி பூரத்தில் வருசாபிஷேகம், கந்தசஷ்டி, கார்த்திகை சோம வாரம், திருக்கார்த்திகை தீபத் திருநாள், பங்குனி உத்திரம் போன்றவை வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.

    அமைவிடம்

    மதுரை நகரில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது, அழகர்கோவில். இங்கு மலையின் அடிவாரத்தில் கள்ளழகருக்கு ஆலயம் உள்ளது. அதன் மேல் பகுதியில்தான் சோலைமலை முருகன் கோவில் இருக்கிறது. மதுரையில் இருந்து அழகர் கோவிலுக்கு ஏராளமான பஸ்வசதிகள் உள்ளன. அதே போல் அழகர்கோவிலின் அடிவாரத்தில் இருந்து சோலைமலை செல்லவும் சிறப்பு பஸ்கள் ஆலயத்திற்கு உள்ளேயே இயக்கப்படுகின்றன. தவிர அடிவாரத்தில் இருந்து மலைப் பாதை வழியாக நடந்தும் கோவிலுக்குச் செல்லலாம்.
    மயிலாடுதுறை திருப்புன்கூர் என்ற இடத்தில் உள்ளது, சவுந்தர நாயகி உடனாய சிவலோகநாதர் திருக்கோவில். இத்தல மூலவர் புற்று மண்ணால் ஆனவர்.
    திருப்புன்கூர் என்ற இடத்தில் உள்ளது, சவுந்தர நாயகி உடனாய சிவலோகநாதர் திருக்கோவில். இத்தல மூலவர் புற்று மண்ணால் ஆனவர். இந்த ஈசனை ஆராதித்தால் தோல் நோய், புற்று நோய், வறுமை, தரித்திரம் அகலும். கொள்ளிடக்கரை ஓரம் உள்ள புங்க மரங்கள் சூழ இருக்கும் இடம், திருப்புங்கூர். தற்போது இந்தப் பகுதி ‘திருப்புன்கூர்’ என்று அழைக்கப்படுகிறது. இங்கு சவுந்தர நாயகி உடனாய சிவலோகநாதர் கோவில் கொண்டு அருள்பாலித்து வருகிறார்.

    இத்தல இறைவனையும், இறைவியையும் தரிசிக்க, ஏயர்கோன் கலிக்காம நாயனாருடன் வந்திருந்தார், சுந்தரமூர்த்தி சுவாமிகள். இதுபற்றி அறிந்ததும் அந்தப் பகுதி மக்களும், மன்னன் ராஜேந்திரச் சோழனும் உள்ளம் மகிழ்ந்தனர். திருப்புன்கூர் முழுவதும் மழையில்லாமல் வறண்டு பஞ்சம் தலைவிரித்தாடிய தருணம் அது. ராஜேந்திரச் சோழன் ஓடோடி வந்து சுந்தரரைப் பணிந்து, “மழை பெய்ய அருள்புரிய வேண்டும்” என்று வேண்டி நின்றான். உடனே சுந்தரர், திருப்புன்கூர் ஈசனுக்கு 12 வேலி நிலம் கொடுத்தால், கோரிக்கையை நிறைவேற்றுவதாக மன்னனிடம் தெரிவித்தார். மன்னனும் சம்மதம் தெரிவித்து விட்டான்.

    இதையடுத்து ஈசனை வேண்டி பதிகம் பாடினார், சுந்தரர். வான்மழை, விடாது பெய்யத் தொடங்கியது. அந்த வான் மழையிலும், இறைவனின் அருள்மழையிலும் மன்னனும் மக்களும் ஆனந்தமாக நனைந்தனர். மழை தொடர்ந்து பெய்துகொண்டே இருந்தது. மழை மிகுதியைக் கண்ட மன்னன், ‘மழையை நிறுத்தாவிட்டால் பெருஞ்சேதம் உண்டாகுமே’ என்று அஞ்சினான். மழையை நிறுத்துமாறு, சுந்தரரிடம் மீண்டும் வேண்டி நின்றான். சுந்தரரோ, “மீண்டும் இத்தல ஈசனுக்கு 12 வேலி நிலம் கொடுக்க வேண்டும்” என்று கேட்க, அதனையும் மன்னன் கொடுத்தான். உடனே சுந்தரர் மீண்டும் பதிகம் பாடி மழையை நிறுத்தினார்.

    இந்த சம்பவத்திற்கு சாட்சியாக இன்னும் இங்கு ‘பன்னிரு வேலி’ என்ற ஊர் இருப்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் கூட மழை இல்லாதபோது நாகப்பட்டினம், தஞ்சாவூர், கடலூர், திருவாரூர் மாவட்ட விவசாயிகள் இங்கு வந்து ஒரு சிறப்பு பூஜை செய்தால் உடனே மழை பெய்வதாக நம்பிக்கை தெரிவிக்கின்றனர். அதே போல மழைக்காலத்தில் நிற்காது பெய்யும் தொடர் மழையை நிறுத்தவும், திருப்புன்கூர் ஈசனின் அருளைத்தான் நாடுவார்களாம்.

    இத்தலத்தில் ஐந்து நிலையுடன் உயர்ந்து நிற்கிறது ராஜகோபுரம். அதனை வணங்கி உள்ளே நுழைந்தால் நந்தி மண்டபம் உள்ளது. இங்கு 15 அடி நீளம், 7 அடி அகலம், 7 அடி உயரம் கொண்ட நந்திதேவர் மூலவரைப் பார்த்த வண்ணம் இல்லாமல், வழக்கத்துக்கு மாறாக 2 அடிக்கு வலப்புறமாக தள்ளி இருந்தபடி காட்சித் தருகிறார். வலது பிரகாரத்தில் முருகப்பெருமானும், தல மரமான புங்க மரமும் உள்ளது. புங்கமரத்தின் கீழ் பஞ்சலிங்கங்கள் உள்ளன. தென் பிரகாரத்தில் ‘குளம்வெட்டிய விநாயகர்’ என்ற பெயரில் இத்தல விநாயகர் அருள்பாலிக்கிறார்.

    இந்தக் கோவிலில் உள்ள ஈசனின் திருநாமம் ‘சிவலோகநாதர்’ என்பதாகும். அவரது உடனுறை சக்தியாக ‘சவுந்தரநாயகி அம்மன்’ தனிச் சன்னிதியில் அருள்பாலித்து வருகிறார். தேவார மூவரின் பாடல் பெற்ற ஒப்பற்ற தலம் இதுவாகும். நந்திதேவர் பிரதானமாக விளங்குவதால், இங்கு பிரதோஷ வழிபாடு செய்வது திருக்கயிலையில் பிரதோஷ வழிபாடு செய்வதற்கு இணையானது என்கிறார்கள். இத்தல மூலவர், புற்று மண்ணால் ஆனவர். அதனால் எப்போதும் செப்புக் கவசம் சாத்தி அதற்குத்தான் அபிஷேக ஆராதனை நடைபெறுகிறது. ஒவ்வொரு திங்கட் கிழமையும் அர்த்த ஜாம பூஜையின் போது மட்டும் இந்த செப்புக் கவசம் அகற்றப்பட்டு, புற்று மண்லிங்கத்துக்கு புனுகுச் சட்டம் சாத்தப்படும்.

    இவ்வாலயத்தில் புங்க மரத்தின் கீழ் உள்ள பஞ்ச லிங்கங்களை, பால், தேன் ஆகியவற்றால் அபிஷேகம் செய்து, 5 அகல் விளக்குகளை ஏற்றி வழிபட்டால் தம்பதியர்களுக்கு இடையே உள்ள மனப் பிணக்குகள் யாவும் அகலும். திருப்புன்கூர் தல ஈசனை நாம் குடும்பத்தோடு வழிபட்டால் முன்ஜென்ம வினை, மூதாதையர் சாபம் எனும் பித்ரு தோஷம் முதலியன அகன்று போகும். சமீபத்திய சென்னை தொடர் பெருமழையை நிறுத்த அடியவர்களால் இங்கு சுவாமிக்கு சிறப்பு பூஜைகளும், சுந்தரரின் இத்தல ‘அந்தணாளன் உன் அடைக்கலம் புகுத..’ என்னும் திருமுறை பதிகம்களும் ஓதப்பெற்றன.

    அமைவிடம்

    மயிலாடுதுறையில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது, திருப்புன்கூர். மயிலாடுதுறையில் இருந்து செல்ல ஏராளமான பஸ்வசதிகள் உள்ளன.

    திருச்சி, திருவெள்ளறையில் அமைந்துள்ள புண்டரீகாட்சன் திருகோவிலின் பெருமாள் பல்வேறு சிறப்புகளுடன் அமைந்துள்ளார். திருக்கோவிலின் வரலாறு மற்றும் சிறப்பம்சங்கள் இங்கு பார்ப்போம்.
    திருச்சியிலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் திருச்சி - துறையூர் சாலையில் இருக்கிறது இந்த திருவெள்ளறை எனும் சிற்றூர் அங்கே வெண் பாறைகளால் ஆன குன்றின் மேல் ஒரு கோட்டை போலவே அமைக்கப்பட்டுள்ளது இக்கோவில். திருவரங்கம் கோவில் 108 திவ்ய தேசங்களில் முதன்மையாகச் சொல்லப்பட்டாலும், இந்த திருவெள்ளறை திருவரங்கத்தினை விட பழமையான கோவில் என கருதப்படுகிறது. 

    மூலவர்

    புண்டரீகாட்சன் - செந்தாமரைக் கண்ணன், நின்ற கோலத்தில் காட்சி அளிக்கின்றார்.

    தாயார் - செண்பகவல்லி தாயார் எனும் பங்கயச் செல்விக்கு தனி சன்னதி உண்டு. தாயாரின் உற்சவமூர்த்திக்கு பங்கஜவல்லி என்ற திருநாமம்

    பெயர் காரணம்:

    இந்த திருத்தலம் ஸ்ரீரங்கம் பெருமாள் கோவிலை விட மிகவும் பழமையானது. அதனால் ஆதிவெள்ளறை என்றும் அழைக்கப்படுகிறது.

    தீர்த்தம்:

    திருக்கோவிலில் திவ்யகந்த, க்ஷீரபுஷ்கரிணிகள், மணிகர்ணிகா என்று 7 தீர்த்தங்கள் கோவிலுக்குள்ளேயே அமைந்துள்ளது.

    விமானம்:

    விமலாக்ருதி விமானம்.- கோவில் கோபுரம் பாதி சிதைந்து பாதிமட்டுமே எஞ்சி இருக்கின்றது.

    கோவிலின் சிறப்பம்சம்:

    எந்த கோவிலிலும் இல்லாத வகையில் இங்கு உத்தராயண வாசல் (வடக்கு வாசல்), தட்சிணாய வாசல் (தெற்கு வாசல்) என இரு வாசல்கள் உண்டு.
    தை முதல் ஆனி வரை உத்தராயண வாசல் வழியாகவும், ஆடி முதல் மார்கழி வரை தட்சினாய வாசல் வழியாக பெருமாளை தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

    சிபிச்சக்கரவர்த்திக்கு பெருமாள் ச்வேத வராகனாக (வெள்ளைப் பன்றி) காட்சி அளித்ததாக தல புராணம் கூறுகிறது. இதனால் ஸ்வேதபுரி நட்சத்திரம் எனவும் பெயர் வந்தது.

    ஸ்ரீதேவி, பூதேவி, சூர்ய, சந்திரர்கள், ஆதிசேசன் முதலியோர் மனித வடிவில் வந்து பெருமாளுக்கு கைங்கர்யம் செய்ததாக் கூறப்படுகிறது.

    இங்கு ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி என மூன்று நாச்சியார்களுக்கு மூன்று திவ்ய தேசங்கள் பெருமை.

    தல வரலாறு:

    திருப்பாற்கடலில் மகாவிஷ்ணுவும், மகாலட்சுமியும் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது பெருமாள், லட்சுமி உனது கருணையால் இந்த உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் மிகவும் சந்தோஷமாக உள்ளது. இதனால் எனக்கு பரம திருப்தி ஏற்படுகிறது. எனவே உனக்கு வேண்டிய வரத்தை என்னிடமிருந்து கேட்டு பெறலாம் என்றார். அதற்கு லட்சுமி, தங்களின் திருமார்பில் நித்ய வாசம் செய்யும் எனக்கு வேறு வரம் எதற்கு  என்றாள். இருந்தாலும், எனது பிறந்த இடமான இந்த பாற்கடல்.

    இங்கு தேவர்களை காட்டிலும் எனக்கு தான் அதிக உரிமை வேண்டும் என்கிறாள். அதற்கு பெருமாள், உனது கோரிக்கையை இங்கு நிறைவேற்ற முடியாது. இங்கு நான் தான் அனைத்துமாக இருக்கிறேன். இருந்தாலும் பூமியில் சிபி சக்கரவர்த்திக்கு நான் தரிசனம் தரும்போது உனது விருப்பத்தை நிறைவேற்றி வைக்கிறேன் என்றார். இந்நிலையில் இந்தியாவின் தென்பகுதியில் ராட்சஷர்கள் மிகுந்த தொல்லை கொடுத்து வந்தார்கள். அவர்களை அடக்க சிபி சக்கரவர்த்தி தன் படைகளுடன் சென்றபோது, ஒரு வெள்ளை பன்றி அவர்கள் முன் தோன்றி இவர்களுக்கு பெரும் தொந்தரவு கொடுத்தது.

    படைவீரர்களால் அந்த பன்றியை பிடிக்க முடியாமல் போக, சக்ரவர்த்தியே அதை பிடிக்க சென்றார். பன்றியும் இவரிடம் பிடிபடாமல் இங்கு மலைமீதுள்ள புற்றில் மறைந்து கொண்டது. அரசனும் இதை பிடிக்க மலையை சுற்றி வரும்போது, ஒரு குகையில் மார்க்கண்டேய முனிவர் கடுமையாக தவம் செய்து கொண்டிருப்பதை கண்டு அவரிடம் விஷயத்தை கூறினான். அதற்கு முனிவர், நீ மிகவும் கொடுத்து வைத்தவன்.
    நாராயணனின் தரிசனத்திற்கு தான் நான் தவம் செய்து கொண்டிருக்கிறேன். ஆனால் அவர் உனக்கு வராக (பன்றி) உருவத்தில் காட்சி கொடுத்திருக்கிறார். நீ இந்த புற்றில் பாலால் அபிஷேகம் செய் என்றார்.

    அரசனும் அப்படியே செய்ய நாராயணன் தோன்றி அனைவருக்கும் காட்சிகொடுக்கிறார். இந்த தரிசனத்திற்கு வந்த மகாலட்சுமியிடம், நீ விரும்பியபடி இத்தலத்தில் உனக்கு சகல அதிகாரத்தையும் தந்து விட்டு, அர்சாரூபமாக இருந்து கொண்டு நான் அனைவருக்கும் அருள்பாலிக்கிறேன் என்றார் பெருமாள். இதன் பின் அரசன் அனைவரிடமும் விடைபெற்று ராவண ராட்சஷர்களை அழிக்க சென்றான். ஆனால் மார்க்கண்டேயர், இவர்களை அழிக்க பெருமாள் ராம அவதாரம் எடுக்க உள்ளார். எனவே நீ திரும்ப நாட்டை ஆள செல் என்றார். ஆனால் மன்னனுக்கு மனம் திருப்தி அடையவில்லை. அதற்கு மார்க்கண்டேயர், உனக்கு தரிசனம் கொடுத்த பெருமாளுக்கு நீ கோவில் கட்டி திருப்தி பெறுக’ என்றார்.

    அரசனும் கோவில் கட்டி, சேவை செய்வதற்காக 3700 குடும்பங்களை அழைத்து வந்தான். வரும் வழியில் ஒருவர் இறந்து விட்டார். அதற்கு பெருமாள், அரசனிடம் நீ கவலைப்பட வேண்டாம். நானே இறந்தவருக்கு பதிலாக 3700 பேரில் ஒருவராக இருந்து, நீ நினைத்த மூவாயிரத்து எழுநூறு குடும்பக்கணக்கு குறைவு படாமல் பார்த்து கொள்கிறேன் என்றார். பெருமாள் அளித்த வரத்தின் படி தாயார்செங்கமலவல்லி மூலஸ்தானத்திலேயே இருந்து கொண்டு, திருவிழா காலங்களில் பெருமாளுக்கு முன்பாக பல்லக்கில் எழுந்தருளுகிறார்.

    கோவில் சுமார் 50 அடி உயரத்தில் வெண்மையான பாறையால் ஆன ஒரு குன்றின் மீது அமைந்துள்ளதால் இத்தலம்  வெள்ளறை என்ற பெயர் பெற்று  தற்போது திருவெள்ளறை ஆனது. முன் கோபுரம் பூர்த்தியாகாத நிலையில் உள்ளது. புண்டரீகன் என்ற யோகி திருவெள்ளறையில் ஒரு நந்தவனம் அமைத்து அதில் வளர்ந்த துளசியால் பெருமாளையும், தாயாரையும் பூஜித்து வந்தார். இதில் மகிழ்ந்த பெருமாள் இவருக்கு தரிசனம் கொடுத்தார். இதனாலேயே இங்குள்ள பெருமாள்புண்டரீகாட்சப்பெருமாள் ஆனதாக வரலாறு கூறுகிறது.
          
    கோவில் கோட்டை போல் அமைக்கப்பட்டுள்ளது. பெரிய பிரகாரத்தில் தென்பகுதியில் கல் அறைகள்உள்ளது. இங்கிருந்து ஒலி எழுப்பினால் எதிரொலி தெளிவாக கேட்கும். பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 4வது திவ்ய தேசம். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் கார்த்திகை ஞாயிற்றுக்கிழமைகளில் இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி,பெருமாளுக்கு படைத்த பொங்கலை சாப்பிட்டால் புத்ரபாக்கியம் நிச்சயம் என்பது ஐதீகம்.
    இந்தியாவில் மட்டுமல்ல, உலகிலேயே மிகப் பெரிய செல்வ வளம் மிக்க ஆலயமாகத் திகழ்வது, கேரளத் தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாப சுவாமி ஆலயம்தான்.
    அண்டை மாநிலமான கேரளத்தில் உள்ள மிகப் பிரபலமான புராதன ஆலயம் ஒன்று உள்ளது. இது உலகிலேயே மிக அதிகமான செல்வ வளம் கொண்ட கோவிலாகத் திகழ்கிறது. தமிழகத்தின் பண்டைய வரலாறு மற்றும் கலாச்சாரத்தோடு மிகவும் நெருங்கிய அந்தக் கோவிலுக்கு தினந்தோறும் பல்லாயிரக்கணக்கானோர் வந்து வழிபட்டு காணிக்கை செலுத்துகின்றனர்.

    இந்தியாவில் அதிகம் காணிக்கை செலுத்துகின்ற கோவில் எது என்றால் திருப்பதி ஏழுமலையான் கோவில்தான் நம்  நினைவுக்கு வரும். இந்தகோவில் இந்தியாவின் மிகப்பெரிய பணக்கார ஆலயம் என்று நீங்கள் கருதினால், உங்கள் கருத்து தவறு. இந்தியாவில் மட்டுமல்ல, உலகிலேயே மிகப் பெரிய செல்வ வளம் மிக்க ஆலயமாகத் திகழ்வது, கேரளத் தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாப சுவாமி ஆலயம்தான்.

    இது இன்றைய பக்தர்களின் தினசரி காணிக்கையால் கிடைத்த செல்வ வளம் அல்ல. முந்தைய ஆட்சியாளர்களும், செல்வந்தர்களும், பெரும் பக்தர்களும் காணிக்கையாகவும், நன்கொடையாகவும், நிவந்தமாகவும் அளித்துள்ள செல்வக் குவியலாகும். பல நூற்றாண்டுகளாக இக் கோவிலின் ரகசிய நிலவறைகளில் உறங்கிக் கிடந்த பழங்காலப் பொக்கிஷங்கள் திடீரென வெளிச்சத்துக்கு வந்ததை அடுத்தே, இக்கோவிலின் செல்வ வளம் உலகுக்குத் தெரியவந்ததாக கூறப்படுகிறது.

    இக்கோவிலில் கிடைத்துள்ள பழங்கால நகைகள் உள்ளிட்ட பொக்கிஷங்களின் மதிப்பு சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கலாம் எனத் தோராயமாக மதிப்பிடப்பட்டுள்ளது. இன்றைய சந்தை நிலவரப்படி மிகத் துல்லியமாக என்னால் கணக்கிட முடியவில்லை. இந்த அளவு பொக்கிஷங்கள், திருவனந்தபுரம் கோவில் ரகசிய அறைகளில் மறைத்து வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டதன் காரணம் என்ன என்பதைத் தெரிந்து கொள்வோம்.

    இக்கோவிலின் புராதனப் பெருமைகள் :

    கேரளா தற்போது தனி மாநிலமாக இருந்தாலும், பண்டைய தமிழ் மூவேந்தர்களில் ஒருவரான சேரர்களின் ராஜ்ஜியம்தான் கேரளம். கேரள மாநிலத்தினர் பேசும் மலையாளம்கூட, பண்டைய தமிழோடு காலப்போக்கில் சம்ஸ்கிருதம் கலந்து உருவானதுதான். இத்தகு கேரள மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரத்தின் மையத்தில் அமைந்துள்ள பத்மநாப சுவாமி கோவிலும் பண்டைத் தமிழகத்தின் பண்பாட்டுப் பெருமைகளில் ஒன்றே.

    கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் இருந்து கி.பி. மூன்றாம் நூற்றாண்டு வரையான காலகட்டத்தில் உருவான தமிழ்ச் சங்க இலக்கியங்களில் இக் கோவிலின் பெருமை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. சங்க இலக்கியங்களில் பொற்கோவில் என்று புகழப்படும் கோவில் இதுதான் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 

    கேரளாவில் திருவனந்தபுரம், கண்ணனூர், வயநாடு, பாலக்காடு உள்ளிட்ட இடங்களில் அக்காலத்தில் தங்கச் சுரங்கங்கள் இருந்ததாக வரலாற்று ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் சேர நாட்டுப் பகுதிகள், அக்காலத்தில் சுமேரியா, கிரேக்கம், ரோம் உள்ளிட்ட வெளிநாடுகளுடன் வணிகத் தொடர்பும் கொண்டுள்ளன. இதனால் திருவனந்தபுரம் கோவிலுக்கு காணிக்கையாக அக்காலத்தில் பெருமளவு தங்கம் குவிந்துள்ளது.

    கேரளாவில் திருவனந்தபுரம், கண்ணனூர், வயநாடு, பாலக்காடு உள்ளிட்ட இடங்களில் அக்காலத்தில் தங்கச் சுரங்கங்கள் இருந்ததாக வரலாற்று ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் சேர நாட்டுப் பகுதிகள், அக்காலத்தில் சுமேரியா, கிரேக்கம், ரோம் உள்ளிட்ட வெளிநாடுகளுடன் வணிகத் தொடர்பும் கொண்டுள்ளன. இதனால் திருவனந்தபுரம் கோவிலுக்கு காணிக்கையாக அக்காலத்தில் பெருமளவு தங்கம் குவிந்துள்ளது.

    இக்கோவிலில் 6 ரகசிய அறைகள் இருப்பதாகவும் அதற்குள் தங்க நகைகள் உள்ளிட்ட பொக்கிஷங்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக வழக்குகளும் உள்ளன. கடந்த 1750-ஆம் ஆண்டில் அன்றைய திருவிதாங்கூர் மன்னரான அனிழம் திருநாள், தமது அரசையே பத்மநாப சுவாமிக்கு காணிக்கையாகச் செலுத்தினார்.

    அதனால் இன்று வரையில் அந்த அரச வம்சத்து ஆண்கள் பத்மநாப தாசர்கள் என்றும் பெண்கள் பத்மநாப சேவினிகள் என்றும் அழைக்கப்படுகின்றனர். வெளிச்சத்துக்கு வந்த ஏராளமான செல்வ வளத்தோடு, வெளிவராத மர்மங்களோடும் கம்பீரமாக காட்சி தருகிறது திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி ஆலயம்.
    வேலூர் மாவட்டம் திருமணிக்குன்றம் அருகே உள்ளது ரத்தினகிரி பாலமுருகன் கோவில். இக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு பழமையான கோவிலாகும்.
    வேலூர் மாவட்டம் திருமணிக்குன்றம் அருகே உள்ளது ரத்தினகிரி பாலமுருகன் கோயில்.  இக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு பழமையான கோவிலாகும்.  இக்கோவில் 14ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. ரத்னகிரி பாலமுருகன் கோயில்  மலை உச்சியில் அமைந்துள்ளது. எங்கெல்லாம் குன்றுகள் உள்ளதோ அங்கெல்லாம் முருகன் கோயில் இருக்கும் என இந்து வேதங்கள் கூறுகின்றன. காலப்போக்கில் ஒரு சாதாரண மணல் அமைப்பானது பின்னர் கல் கோவிலாக மாற்றி அமைக்கப்பட்டது. 14வது நூற்றாண்டு புலவர் அருணகிரிநாதர் இந்த கோவிலில் 'ரத்தினிகரி வாழ் முருகனே இளைய வாராமாரர் பெருமாளே' என்று பாடியுள்ளார்.  

    பல்லாண்டுகளுக்கு முன்பு முருகனின் தீவிர பக்தையான பெண் ஒருவர் நீண்ட வருடங்களாக குழந்தைபாக்கியம் இன்றி தவித்தார். தினசரி ரத்தினகிரியில் குடிகொண்டிருந்த முருகனை தரிசித்து தனக்கு குழந்தை வரம் தரும்படி மனமுருகி வேண்டி கடும் விரதம் மேற்கொண்டார். ஒரு நாள் அவர் தனிமையில் யாரும் இல்லாத வேளையில் ரத்தினகிரிக்கு வந்து முருகனை நீண்ட நேரம் வணங்கி, தனது குறையைக் கூறி கண்ணீர் விட்டு சுவாமியை வலம் வந்தார். 

    அப்போது அங்கு வந்த ஆடுமேய்க்கும் சிறுவன் ஒருவன் அவரிடம், அழுவதற்கான காரணத்தைக் கேட்க அவர், தனக்கு புத்திர பாக்கியம் இல்லாததைக் கூறி வருந்தினார். அவர் கூறியதை பொறுமையுடன் கேட்ட அச்சிறுவன் கோயிலில் இருந்த விபூதியை எடுத்து அவரிடம் கொடுத்து விட்டு, பக்தியுடன் சுவாமியை வலம் வரும்படி கூறினான். 

    அதன்படி அப்பெண் பக்தை, விபூதியை பெற்றுக்கொண்டு சுவாமியை வலம் வந்தார். சுவாமியை ஒரு முறை வலம் வந்த அவர் தன்னிடம் விபூதி கொடுத்த சிறுவனைக் காணாது அதிர்ந்தார்.  இச்சம்பவம் நிகழ்ந்த  சில  தினங்களிலேயே  அப்பெண்  கருவுற்றார்.  அதன் பின்னரே அவரிடம் ஆடு மேய்க்கும் சிறுவனாக வந்து பேசியது முருகப்பெருமான் என அறிந்து கொண்டார் அந்த பெண். முருகனே நேரில் வந்து பெண் பக்தைக்காக அருள்புரிந்து அற்புதம் நிகழ்த்திய சிறந்த தலம் இதுவாகும். 

    ரத்தினகிரி பாலமுருகன் கோவிலில் மகா சண்டியாஜ பூஜை மிக விமர்சியாக நடத்தப்படுகிறது. ஒவ்வொரு வாரமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இக்கோவிலுக்கு சென்று சுவாமி தரிசன செய்கின்றனர். இரவில் அர்த்த ஜாம பூஜையில் அவருக்கு பாலை நிவேதனமாக படைகின்றனர். கோவிலின் அடிவாரத்தில் துர்க்கைக்கு தனி சன்னதி உள்ளது. கீழ் இருந்து படிகட்டுகள் வழியாக சென்றால் மலைமேல் உள்ள முருகன் கோவிலை அடைந்துவிடலாம்.

    இத்தலத்தில் உள்ள முருகன் நான்கு கைகளுடன் ஆயுதங்கள் ஏந்தியபடி இடதுபுறம் நோக்கிய மயிலுடன் காட்சி தருகிறார்.  இந்தக் கோயிலில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒரு பழக்கம் இருந்தது. முறைப்பெண்ணும், முறை மாப்பிள்ளையும் பொங்கலுக்கு மறுநாள் இங்கு வருவர். தங்கள் அன்பைப் பரிமாறிக் கொள்ளும் வகையில், தாங்கள் கொண்டு வரும் பூக்களை மாப்பிள்ளைகள் தங்கள் வருங்கால மனைவியருக்கு சூட்டுவர். குழந்தை பாக்கியம் தரும் மிக புண்ணியமான தலதமாக ரத்தினகிரி பாலமுருகன் கோவில் இன்று கருதப்படுகிறது. 
    ஈரோடு மாவட்டம் திண்டல் மலையில் அமைந்துள்ளது திண்டல் முருகன் கோவில் என்னும் அருள்மிகு வேலாயுதசாமி திருக்கோவில்.
    ஈரோடு மாவட்டம் திண்டல் மலையில் அமைந்துள்ளது திண்டல் முருகன் கோவில் என்னும் அருள்மிகு வேலாயுதசாமி திருக்கோவில். அருணகிரிநாதரால் பாடல் பெற்ற 178 தலங்களில் திண்டல் மலை வேலாயுத சுவாமி கோவிலும் ஒன்று.

    தமிழகத்தில் ஈரோடு மாவட்டம் திண்டல் மலையில் அமைந்துள்ளது திண்டல் முருகன் கோவில் என்னும் அருள்மிகு வேலாயுதசாமி திருக்கோவில். அருணகிரிநாதரால் பாடல் பெற்ற 178 தலங்களில் திண்டல் மலை வேலாயுத சுவாமி கோவிலும் ஒன்று. இந்த திண்டல் மலை முழுவதும் உயர்ந்த மரங்கள்  நிறைந்து காணப்படுகிறது.

    திண்டல் மலை மீது தீபஸ்தம்பம் அமைக்கப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பாகும். இங்கு தீபத்திருநாள் அன்று திருவிளக்கு ஏற்றி பக்தர்கள் ஜோதி வழிபாடு நடத்தி வருகின்றனர். இக்கோவிலில்  மூலவர்  குழந்தை வேலாயுத சுவாமி, குமார வேலாயுத சுவாமி என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறார்.  

    இக்கோவிலில் உள்ள இடும்பனார், பஞ்சம் ஏற்பட்டபோது மழை பொழிய வேண்டியதாகவும் வேண்டுதலை கேட்டு மழை பொழிந்ததாகவும் வரலாறு கூறுகிறது. ஆகையால் இங்கு உள்ள மக்கள் தங்களது வேண்டுகோளை இடும்பன் மூலம் தெரிவித்து முருகனின் அருளை பெருவது இன்றும் நடைமுறையில் உள்ளது.

    தீராவினை தீர்க்கும் வேலுடன் காட்சி தருகிறார் திண்டல்மலை முருகன். கருவறையின் வடமேற்கு பகுதி மலைச்சரிவில் சற்று தாழ்வான பகுதியில் தன்னாசி குகை உள்ளது.  இந்த தன்னாசி குகையில் கார்த்திகை தீபத்தன்று மட்டும் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. இந்தக் கோயிலில் இரண்டு எலுமிச்சை பழங்களை வைத்து பூஜிக்கும் பக்தர்கள், அதில் ஒன்றை வீட்டுக்கு எடுத்துச் செல்கிறார்கள். அதை நறுக்கி வீட்டின் நான்கு பக்கங்களிலும் வீசினால், துஷ்டர்களாளும் எதிரிகளாலும் ஏற்படும் ஆபத்துகள் நீங்கும் என்பது  மக்களின் நம்பிக்கை. பங்குனி உத்திரம், கந்தசஷ்டி முதலான விழாக்களில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.  

    இக்கோவிலில்  முதலில் காணப்படும் அரச மரத்து விநாயகர், நாகர் படை சூழ அமர்ந்துள்ளார். அரச மரத்தடியில் அமர்ந்திருக்கும் விநாயகரை வழிபட்டு சென்றால் பக்தர்களின் குறைகள் தீரும் என்பது ஐதீகம். அடுத்ததாக இரண்டு நாகர் சிற்பங்களுடன் சித்தி விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மலையின் வடகிழக்கு பகுதியில் உள்ள அழகிய இயற்கைச்சுனையில் வற்றா நீரூற்று ஆண்டவனின் அபிஷேகத்திற்கும் பக்தர்களின் தாகம் தீர்க்கவும் பயன்படுகிறது. இது சமய பெரியார்களான சன்னியாசிகள் வாழ்ந்த சிறப்பு பெற்றது. இக்கோவிலின் முன் மண்டப முகப்பில் வேலாயுதசாமி சிலையும்,  படிகளை கடந்தால் இடும்பன் கோவிலும் அமைந்துள்ளது.

    காண்போரை மெய்சிலிர்க்க வைக்கும் வேலாயுதசாமி கருவறையில் குடிகொண்டு பக்தர்களின் குறைகளை நிவர்த்தி செய்கிறார். நகரின் வளத்திற்கும் செழிப்பிற்கும் தீர்க்கமாய் திண்டல் முருகன் கண்பார்வையில் இந்நகரம் அமைந்திருப்பதே ஈரோடு நகரத்தின் கூடுதல் சிறப்பாகும்.
    மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகிலுள்ளது, குருவித்துறை என்ற திருத்தலம். இந்த கோவிலின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகிலுள்ளது, குருவித்துறை என்ற திருத்தலம். இங்குள்ள சித்திர ரத வல்லப பெருமாள் கோவிலில், ஒரே சன்னிதியில் குரு பகவானும், சக்கரத்தாழ்வாரும் சுயம்பு மூர்த்திகளாக வீற்றிருந்து காட்சி தருகின்றனர். தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் அடிக்கடி யுத்தம் நடைபெறுவது வாடிக்கை. அதுபோன்ற காலத்தில் எல்லாம் இரு பக்கங்களிலும் பலர் உயிரிழப்பார்கள்.

    அசுர குருவான சுக்ராச்சாரியார், இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் ‘மிருத சஞ்சீவினி’ என்ற மந்திரத்தை கற்றறிந்திருந்தார். இதனால் தன் பக்கம் உயிரிழந்த அசுரர்களை எல்லாம், அந்த மந்திரத்தை உச்சரித்து உயிர்ப்பித்து விடுவார் சுக்ராச்சாரியார். இதனால் அசுரர்களின் பலம் கூடிக்கொண்டே இருந்தது. தேவர்களின் படையோ குறைந்து கொண்டே இருந்தது.

    இதையடுத்து சுக்ராச்சாரியாரிடம் இருந்து ‘மிருத சஞ்சீவினி’ மந்திரத்தை கற்க விரும்பிய தேவர்கள், தங்கள் படையில் இருந்து ஒருவரை சுக்ராச்சாரியாரிடம் கல்வி கற்பதற்காக அனுப்ப முடிவு செய்தனர். அப்படி கல்வி கற்கும்போது, ‘மிருத சஞ்சீவினி’ மந்திரத்தையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்பது அவர்களின் யோசனையாக இருந்தது. இதற்காக தேவகுரு பிரகஸ்பதியின் (வியாழன்) மகன் கசன் தேர்வு செய்யப்பட்டான்.

    சுக்ராச்சாரியாரிடம் சென்ற கசன், அவரிடம் கல்வி கற்றபடியே அவரது மகள் தேவயானியிடம் அன்பு செலுத்துவது போல நடித்தான். சுக்ராச்சாரியாரிடம் கல்வி கற்க வந்த கசன், தேவ குலத்தைச் சேர்ந்தவன் என்பதை அசுரர்கள் அறிந்தனர். மேலும் கசன், ‘மிருத சஞ்சீவினி’ மந்திரத்தை கற்கவே இங்கு வந்திருப்பதையும் அவர்கள் தெரிந்துகொண்டனர். எனவே கசனை எரித்து சாம்பலாக்கி, சுக்ராச்சாரியார் பருகிய பானத்தில் கலந்து கொடுத்து விட்டனர்.

    கசனைக் காணாத தேவயானி, தந்தையான சுக்ராச்சாரியாரிடம் அவனைக் கண்டுபிடித்துத் தரும்படி வேண்டினாள். சுக்ராச்சாரியார் அவனை உயிர்ப்பித்தார். இதற்கிடையில் மகனைக் காணாத குரு பகவான், அவனை அசுரலோகத்தில் இருந்து மீட்டு வர அருளும்படி, இத்தலப் பெருமாளை வேண்டி தவமிருந்தார். சுவாமி, சக்கரத்தாழ்வாரை அனுப்பி கசனை மீட்டு வந்தார். குரு பகவானுக்கு அருளிய பெருமாள், இங்கே எழுந்தருளியுள்ளார். இதனாலும் இது குரு தலமாக கருதப்படுகிறது. இங்கு வழிபட்டாலும் குருவால் கிடைக்கும் நன்மைகள் பல நம்மை வந்தடையும்.இக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி மற்றும் குரு பெயர்ச்சி மிகவும் விசேஷமாக நடைபெறும். மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே குருவித்துறையில் அமைந்துள்ளது. குரு தன் மகனுக்காக வைகையில் துறை அமைத்து தவமிருந்ததால் இந்த இடத்திற்கு குருவித்துறை(குருவின்துறை) என்ற பெயர் ஏற்பட்டது. சித்திரை நட்சத்திரக்காரர்கள் மட்டுமின்றி மற்ற நட்சத்திரக்காரர்களும் ஏராளமாக குருவின் யோக பார்வை கிடைக்க இந்த தளதிற்கு வருகை புரிகின்றனர்.
    நெல்லை சந்திப்பு தாமிரபரணி நதிக்கரையோரம் உள்ள மணிமூர்த்தீஸ்வரத்தில் அமர்ந்து அருள்பாலிக்கிறார் ஸ்ரீமூர்த்தி விநாயகர் என்ற உச்சிஷ்ட கணபதி.
    நெல்லை சந்திப்பு தாமிரபரணி நதிக்கரையோரம் உள்ள மணிமூர்த்தீஸ்வரத்தில் அமர்ந்து அருள்பாலிக்கிறார் ஸ்ரீமூர்த்தி விநாயகர் என்ற உச்சிஷ்ட கணபதி. விநாயகருக்கு என தனி கோயிலாக கொண்டு அருளும் இங்கு மட்டுமே ராஜகோபுரம் உள்ளது. இதனால் ஆசியாவிலேயே ராஜகோபுரம் கொண்ட தனி விநாயகர் ஆலயம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது. ராஜகோபுரத்தில் மட்டும் 108 விநாயகர் சிலைகள் இடம்பெற்றுள்ளன. சுமார் ஆயிரத்து 500 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக உள்ள இக்கோயிலில் நாயக்கர்கள், பாண்டிய மன்னர்கள் ஆண்ட காலங்களில் சிறப்பான வழிபாடுகள் நடந்ததாக வரலாறுகள் உள்ளன.

    இடையில் சரியாக பராமரிக்கப்படாமல் இருந்த இந்த ஆலயம் கடந்த 5 ஆண்டுகளாக பல்வேறு உபயதாரர்கள் அறநிலையத்துறையுடன் இணைந்து மீண்டும் சீரமைத்து ராஜகோபுரத்தை புதுப்பித்துள்ளனர். புதிய கொடிமரமும் அமைக்கப்பட்டு 100 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த ஆண்டு இக்கோயிலில் கொடியேற்றத்துடன் 10 நாட்கள் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதில் சிறப்பம்சமாக 8ம் திருநாளான வருகிற 9ம் தேதி வெள்ளிக்கிழமை ஆயிரத்து 8 தேங்காய்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. மூர்த்தி விநாயகர் தனது இடப்பக்க மடியில் ஸ்ரீநீலவாணியை அமர்த்தியபடி அருளுகிறார். ஸ்ரீநீலவாணி என்பது லட்சுமி, துர்க்கை, சரஸ்வதி ஆகிய தேவியரை உள்ளடக்கிய தெய்வமாக கருதப்படுகிறது.

    ஆனந்த நிலையில் காட்சியளிக்கும் இவரை வணங்கினால் பல்வேறு பலன்களை பெறமுடிகிறது. குறிப்பாக இவருக்கு தேங்காய் மாலை அணிவிப்பது விசேஷமாக உள்ளது. திருமணம் வேண்டி வருபவர்களுக்கு தடைகள் அகன்று விரைவில் திருமணம் கைகூடுகிறது. இதற்காக தேன் கலந்த மாதுளை மாலை மற்றும் தேங்காய் மாலை அணிவித்து வழிபடுகின்றனர். சபரிமலை சீசன் காலங்களில் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் வந்து வழிபடுகின்றனர். இக்கோயிலில் உள்ள பைரவர் சன்னதியில் உள்ள தீர்த்த கட்டம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஆண்டுதோறும் சித்திரை மாதம் முதல் 3 நாட்கள் சூரிய ஒளி நேராக விநாயகர் சன்னதியில் படுவது கூடுதல் சிறப்பம்சமாகும் என கோயில் பட்டர் பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.

    பிரகாரத்தில் 16 வகையான விநாயகர்

    உச்சிஷ்ட கணபதி கோயிலின் உள் பிரகாரத்தில் விநாயகர் 16 வடிவங்களுடன் தனிச்சிறப்புகளுடன் அருளுகிறார். குஷி கணபதி (நோய் அகல), ஹரித்ர கணபதி (காரியத்தடை, வியாதி நீங்க), ஸ்வர்ண கணபதி (தங்கம் அடைய), விஜய கணபதி (வெற்றி அடைய), அர்க கணபதி (நவக்ரக தோஷம் நீங்க), குருகணபதி (குருவருள் பெற), சந்தான லட்சுமி கணபதி (நன்மகவு அடைய), ஹேரம்ப கணபதி (அமைதிபெற), சக்தி கணபதி (செயல் வெற்றிபெற), சங்கடஹர கணபதி (தடங்கல் நீங்க), துர்கா கணபதி (துன்பம் நீங்க), ருணஹரண கணபதி (கடன் தொல்லை தீர), ஸ்ரீவல்லப கணபதி காயத்ரீ (காரிய சித்தி, கணவன் மனைவி அன்பு பெருக), சித்தி கணபதி (முயற்சிகள் வெற்றிபெற), வீர கணபதி (தைரியம் அடைய), சர்வ சக்தி கணபதி (உடற் பலம் பெற) ஆகிய கணபதி சன்னதிகள் உள்ளன.
    ×