search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பைரவர்
    X
    பைரவர்

    கால பைரவாஷ்டமி: விரதம் இருந்து வழிபாடு செய்யும் முறை

    கால பைரவாஷ்டமி தினமான இன்று பைரவரை விரதமிருந்து வணங்குவதால் பைரவரின் அருளோடு அஷ்ட லஷ்மிகளின் அருளும் கிடைக்கப் பெறுவோம்.
    சிவாலங்களில் முதல் வழிபாடு விநாயகருக்கு என்றால் இறுதியாக வழிபாடு செய்யக்கூடிய தெய்வம் பைரவர். ஆலயத்தின் காவல் தெய்வமாக இருக்கும் பைரவர் சிவனுடைய அம்சமாக கருதப்படுகிறார்.

    ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறையில் அஷ்டமி திதி அன்று பைரவ வழிபாடு செய்ய உகந்ததாகும். அந்த நாள் தான் பைரவாஷ்டமி என்று சொல்லப்படுகிறது. அதிலும், தேய்பிறை அஷ்டமி கால பைரவாஷ்டமி என்று கருதப்படுகிறது. இந்த நாட்களில் விரதம் இருந்து வழிபாடு செய்தால் துன்பங்கள் பறந்தோடும்.

    இவருக்கு பவுர்ணமி தினத்திற்கு பிறகு வரும் தேய்பிறை அஷ்டமி திதியில் 5 விளக்குகளில் 5 நல்லெண்ணெய், இலுப்பு எண்ணெய், விளக்கு எண்ணெய், பசு நெய், தேங்காய் எண்ணெய் போன்றவற்றால் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். இப்படி தனித்தனியாக தீபம் ஏற்றி வழிபட்டால் தீரா பிரச்சினையும் தீரும், காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கும்.

    12 ராசிகளையும் தன் உடலில் அங்கங்களாகக் கொண்டவர் ஸ்ரீ பைரவர். சனியின் வாத நோயை நீக்கியவரும் பைரவரே. தேய்பிறை அஷ்டமி நாளில் அஷ்ட லட்சுமிகளும் பைரவரை வணங்குகின்றனர். அந்நாளில் நாமும் பைரவரை விரதமிருந்து வணங்குவதால் பைரவரின் அருளோடு அஷ்ட லஷ்மிகளின் அருளும் கிடைக்கப் பெறுவோம்.
    Next Story
    ×