என் மலர்
கோவில்கள்
திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் நகரில் (சென்னைக்கு அருகில்) அமைந்துள்ள, தொன்மையும் புகழும் வாய்ந்த ஆலயம், கற்பகாம்பாள் சமேத கயிலாயநாதர் கோவில்.
திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் நகரில் (சென்னைக்கு அருகில்) அமைந்துள்ள, தொன்மையும் புகழும் வாய்ந்த ஆலயம், கற்பகாம்பாள் சமேத கயிலாயநாதர் கோவில்.
புராண காலத்தில், ‘பிருகுதாரண்யம்’ என்று அழைக்கப்பட்ட கதம்ப வனத்தில் சிவ தம்பதிகள் தனித் தனியாக அமர்ந்து தவம் புரிந்தனர். சிவனும் பார்வதியும் தவமிருந்த அந்த புண்ணிய இடத்தில் பின்னாளில் வியாசர் உள்ளிட்ட முனிவர்களும் தவமிருந்து பேரின்பம் அடைந்தனர். சிவபெருமான், ரிஷகளின் தவ பூமியாக விளங்கிய அந்த புண்ணிய தலம் ‘மகாதவபுரம்’ என்றும், ‘ஏகதீர சதுர்வேதி மங்கலம்’ என்றும் அழைக்கப்பட்டிருக்கிறது. அதுவே மருவி தற்போது மாதவபுரம் என்று வழங்கப்படுகிறது.
புராணப் பெருமை வாய்ந்த இந்த பூமியில், ஈசனுக்கும், பெருமாளுக்கும் ஆலயம் நிர்மாணிக்கும் பேறு பெற்றவன் இரண்டாம் நந்திவர்மப் பல்லவன். இந்த மன்னன் மாமல்லபுரம் என்ற சிறப்புமிக்க கோவில்களை தோற்றுவித்த பல்லவ சக்கரவர்த்தியான, நரசிம்மப் பல்லவனின் வழி வந்தவன். அந்த காலத்தில் கொள்ளை கூட்டம் ஒன்று, இந்தப் பகுதியில் கொள்ளையில் ஈடுபட்டு வந்தனர். அவர்களை அடக்க திக்விஜயம் புறப்பட்டான், இரண்டாம் நந்திவர்மன்.
சோலைவனமாக இருந்த இந்தப் பகுதியில் மன்னன் தங்கினான். அப்போது திறந்த வெளியில் இருந்த ரிஷிகள் வழிபட்ட சிவலிங்கத்தை தானும் பூஜித்து, கொள்ளையர் கூட்டத்தை விரட்டியடித்தான். பின்னர் ரிஷிகள் வழிபட்ட அந்த மரகத லிங்கத்தை ஓரிடத்தில் பிரதிஷ்டை செய்து கோவில் அமைத்தான். குலதெய்வமாகிய கயிலாயநாதர் கட்டளைப்படியே, மகாதவபுரத்தில் கற்கோவில் கட்டியதாக, இரண்டாம் நந்திவர்மன் செப்பேடு ஒன்று தெரிவிக்கிறது.
கல் திருப்பணி ரீதியாக 1,400 ஆண்டுகள் பழமை வாய்ந்தது இந்த ஆலயம். பல்லவர் காலக் கோவில் என்பதற்குச் சான்றாக, அமர்ந்த நிலையில் உள்ள சிங்கங்கள் துவார பாலகர்களாக (குந்து சிங்கம்) கல் தூண்களில் உள்ளன. தற்போதும் இந்த சிங்கமுக துவார பாலகர்களை, ஆலயத்தின் தெற்கு வாசல் அருகே, அம்பாள் சன்னிதி எதிரில் காணலாம். பல்லவர்கள் காலத்திற்குப் பிறகு வந்தவர்கள் மனித துவார பாலகர்களை அமைத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
மாதவரம் நகரில் கிழக்கு நோக்கி இந்த ஆலயம் அமைந்துள்ளது. மூலவராக இருக்கும் மரகத சிவலிங்கம், 4½ அடி உயரமும், 11¼ அடிச் சுற்றளவும் கொண்டதாக வட்ட வடிவ பீடத்துடன் இருக்கிறது. கயிலாயநாதருக்கு இடப்புறம் தெற்கு நோக்கிய சன்னிதியில் எழில் கோலத்துடன் கற்பகாம்பாள் வீற்றிருக்கிறார். இங்கு 12 ஜோதிர்லிங்கங்களும் தனித்தனி சன்னிதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. காசிவிஸ்வநாதர், சரபேஸ்வரர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, ஐயப்பன், ஆஞ்சநேயர் சன்னிதிகளும் உள்ளன.
இங்கு, பிரதோஷ நாளில் மரகத லிங்கத்துக்குப் பால் அபிஷேகம் செய்யும்போது, லிங்கத்தில் இருந்து ஒரு ஜோதி வெளிப்படுவதாக சொல் கிறார்கள். இதனைக் காணும் ஆவலிலேயே இங்கு கூடும் பக்தர்களின் எண்ணிக்கை ஏராளம். கயிலாயநாதரை பிரதோஷ நாளில் வணங்கினால், காரியங்கள் அனைத்தும் கைகூடும் என்கிறார்கள். ஆட்சியாளர்களுக்கு நெருக்கமாக அமரும் யோகத்தையும் தரவல்லவர் மாதவரம் கயிலாயநாதர்.
கயிலையம்பதி, தம் மனைவியுடன் தவம்புரிந்த இந்த திருத்தலத்தில் சிவனை வழிபடும் தம்பதியருக்கு புத்திர பாக்கியம் விரைந்து கிடைக்கும். பேச்சு இழந்த குழந்தைகளுக்கு பேசும் திறன் வாய்க்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
மாதவரம் கயிலாயநாதர் திருத்தலம் ‘தலை வாயில் கோவில்’ எனவும், புழல் பகுதியில் உள்ள சிவாலயம் ‘நடுவாயில் கோவில்’ எனவும், திருமுல்லைவாயிலில் உள்ள சிவாலயம் ‘கடைவாயில் கோவில்’ எனவும் அழைக்கப்படுகின்றன. இம்மூன்று கோவில்களையும் ஒரே நாளில் தரிசிப்பது வெகுசிறப்பு.
மாதவரம் கயிலாயநாதர் கோவில் தினமும் காலை 7.30 மணி முதல் 9.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந் திருக்கும்.
சென்னை அனைத்துப் பகுதியில் இருந்தும் மாதவரத்துக்குப் போக்குவரத்து வசதிகள் உள்ளன. மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் அருகில் கயிலாயநாதர் கோவிலும், கனகவல்லி நாயிகா சமேத கரிவரதராஜப் பெருமாள் கோவிலும் உள்ளன.
புராண காலத்தில், ‘பிருகுதாரண்யம்’ என்று அழைக்கப்பட்ட கதம்ப வனத்தில் சிவ தம்பதிகள் தனித் தனியாக அமர்ந்து தவம் புரிந்தனர். சிவனும் பார்வதியும் தவமிருந்த அந்த புண்ணிய இடத்தில் பின்னாளில் வியாசர் உள்ளிட்ட முனிவர்களும் தவமிருந்து பேரின்பம் அடைந்தனர். சிவபெருமான், ரிஷகளின் தவ பூமியாக விளங்கிய அந்த புண்ணிய தலம் ‘மகாதவபுரம்’ என்றும், ‘ஏகதீர சதுர்வேதி மங்கலம்’ என்றும் அழைக்கப்பட்டிருக்கிறது. அதுவே மருவி தற்போது மாதவபுரம் என்று வழங்கப்படுகிறது.
புராணப் பெருமை வாய்ந்த இந்த பூமியில், ஈசனுக்கும், பெருமாளுக்கும் ஆலயம் நிர்மாணிக்கும் பேறு பெற்றவன் இரண்டாம் நந்திவர்மப் பல்லவன். இந்த மன்னன் மாமல்லபுரம் என்ற சிறப்புமிக்க கோவில்களை தோற்றுவித்த பல்லவ சக்கரவர்த்தியான, நரசிம்மப் பல்லவனின் வழி வந்தவன். அந்த காலத்தில் கொள்ளை கூட்டம் ஒன்று, இந்தப் பகுதியில் கொள்ளையில் ஈடுபட்டு வந்தனர். அவர்களை அடக்க திக்விஜயம் புறப்பட்டான், இரண்டாம் நந்திவர்மன்.
சோலைவனமாக இருந்த இந்தப் பகுதியில் மன்னன் தங்கினான். அப்போது திறந்த வெளியில் இருந்த ரிஷிகள் வழிபட்ட சிவலிங்கத்தை தானும் பூஜித்து, கொள்ளையர் கூட்டத்தை விரட்டியடித்தான். பின்னர் ரிஷிகள் வழிபட்ட அந்த மரகத லிங்கத்தை ஓரிடத்தில் பிரதிஷ்டை செய்து கோவில் அமைத்தான். குலதெய்வமாகிய கயிலாயநாதர் கட்டளைப்படியே, மகாதவபுரத்தில் கற்கோவில் கட்டியதாக, இரண்டாம் நந்திவர்மன் செப்பேடு ஒன்று தெரிவிக்கிறது.
கல் திருப்பணி ரீதியாக 1,400 ஆண்டுகள் பழமை வாய்ந்தது இந்த ஆலயம். பல்லவர் காலக் கோவில் என்பதற்குச் சான்றாக, அமர்ந்த நிலையில் உள்ள சிங்கங்கள் துவார பாலகர்களாக (குந்து சிங்கம்) கல் தூண்களில் உள்ளன. தற்போதும் இந்த சிங்கமுக துவார பாலகர்களை, ஆலயத்தின் தெற்கு வாசல் அருகே, அம்பாள் சன்னிதி எதிரில் காணலாம். பல்லவர்கள் காலத்திற்குப் பிறகு வந்தவர்கள் மனித துவார பாலகர்களை அமைத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
மாதவரம் நகரில் கிழக்கு நோக்கி இந்த ஆலயம் அமைந்துள்ளது. மூலவராக இருக்கும் மரகத சிவலிங்கம், 4½ அடி உயரமும், 11¼ அடிச் சுற்றளவும் கொண்டதாக வட்ட வடிவ பீடத்துடன் இருக்கிறது. கயிலாயநாதருக்கு இடப்புறம் தெற்கு நோக்கிய சன்னிதியில் எழில் கோலத்துடன் கற்பகாம்பாள் வீற்றிருக்கிறார். இங்கு 12 ஜோதிர்லிங்கங்களும் தனித்தனி சன்னிதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. காசிவிஸ்வநாதர், சரபேஸ்வரர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, ஐயப்பன், ஆஞ்சநேயர் சன்னிதிகளும் உள்ளன.
இங்கு, பிரதோஷ நாளில் மரகத லிங்கத்துக்குப் பால் அபிஷேகம் செய்யும்போது, லிங்கத்தில் இருந்து ஒரு ஜோதி வெளிப்படுவதாக சொல் கிறார்கள். இதனைக் காணும் ஆவலிலேயே இங்கு கூடும் பக்தர்களின் எண்ணிக்கை ஏராளம். கயிலாயநாதரை பிரதோஷ நாளில் வணங்கினால், காரியங்கள் அனைத்தும் கைகூடும் என்கிறார்கள். ஆட்சியாளர்களுக்கு நெருக்கமாக அமரும் யோகத்தையும் தரவல்லவர் மாதவரம் கயிலாயநாதர்.
கயிலையம்பதி, தம் மனைவியுடன் தவம்புரிந்த இந்த திருத்தலத்தில் சிவனை வழிபடும் தம்பதியருக்கு புத்திர பாக்கியம் விரைந்து கிடைக்கும். பேச்சு இழந்த குழந்தைகளுக்கு பேசும் திறன் வாய்க்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
மாதவரம் கயிலாயநாதர் திருத்தலம் ‘தலை வாயில் கோவில்’ எனவும், புழல் பகுதியில் உள்ள சிவாலயம் ‘நடுவாயில் கோவில்’ எனவும், திருமுல்லைவாயிலில் உள்ள சிவாலயம் ‘கடைவாயில் கோவில்’ எனவும் அழைக்கப்படுகின்றன. இம்மூன்று கோவில்களையும் ஒரே நாளில் தரிசிப்பது வெகுசிறப்பு.
மாதவரம் கயிலாயநாதர் கோவில் தினமும் காலை 7.30 மணி முதல் 9.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந் திருக்கும்.
சென்னை அனைத்துப் பகுதியில் இருந்தும் மாதவரத்துக்குப் போக்குவரத்து வசதிகள் உள்ளன. மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் அருகில் கயிலாயநாதர் கோவிலும், கனகவல்லி நாயிகா சமேத கரிவரதராஜப் பெருமாள் கோவிலும் உள்ளன.
காவிரி வடகரைத் தலங்களில் மிகவும் பெரிய கோவிலாகத் திகழ்வது பந்தணைநல்லூர் பசுபதீஸ்வரர் ஆலயம். இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
சோழநாட்டு தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத் தலங்களில் மிகவும் பெரிய கோவிலாகத் திகழ்வது பந்தணைநல்லூர் பசுபதீஸ்வரர் ஆலயம். திருக்குளமும், எதிரே நந்தி மண்டபமும், ஐந்து நிலை ராஜகோபுரமும் ஆலயத்தை அழகு செய்கின்றன. ‘பந்தணை நல்லுர் நின்ற எம் பசுபதியாரே’ என்று திருஞானசம்பந்தரும், ‘பந்தணை நல்லுராரே’ என்றும், ‘எம்மை ஆளும் பசுபதியே’ என்றும் திருநாவுக்கரசரும் உருகிப் பாடிய திருத்தலம் இது.
பழமையான மண்டபங்கள் உள்ளடக்கியது மட்டுமின்றி திருநாவுக்கரசர் வாசல், மவுன குருவாசல், ராமலிங்கர் வாசல், அருணகிரி வாசல், ஞான சம்பந்தர் வாசல் என்று கோவிலுக்குள்ளேயே, இத்தலம் வந்து பாடிய அடிகளார்களின் பெயர்களில் நுழைவு வாசல்கள் அமைந்திருப்பது சிறப்பு. ஆலயத்திற்குள் மூலவர் பசுபதீஸ்வரர், சுயம்பு லிங்கமாக கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். புற்று வடிவான சிவலிங்கம் மீது பசுவின் குளம்படி பட்ட வடுவும், பந்து மோதிய வடுவும் தெரிகிறது. குவளை சாத்தி தான் மூலவருக்கு அபிஷேகம் செய் கிறார்கள்.
இறைவி, மூங்கில் தோள் அம்மையாக, ‘காம்பனைய தோளி’ என்ற தனித்தமிழ்ப் பெயருடன் தனிச் சன்னிதியில் நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறாள். அன்னை தனது வலது கையில் சக்கரமும், இடது கையில் கமண்டலமும் ஏந்தியிருக்கிறாள். பெரும்பாலான கோவில்களில் தெற்கு பார்த்தும், சில கோவில்களில் கிழக்கு அல்லது மேற்கு பார்த்தும் இருக்கும் அம்பாள், இந்த ஆலயத்தில் வடக்கு பார்த்து அருள்பாலிப்பது சிறப்புக்குரியது.
புராண வரலாறு :
திருக்கயிலையில் ஒரு நாள், பார்வதி தேவி, நான்கு வேதங்களையும் பந்து களாக்கி தனது தோழியருடன் விளையாடிக் கொண்டிருந்தாள். அன்னையின் அந்த அற்புத விளையாட்டை, சூரியனும் கூட மறைவதை மறந்து பார்த்துக் கொண்டிருந்தான். அந்த பெரும் பகல் பொழுதால், உயிர்கள் அனைத்தும் சோர்வுற்றன. பார்வதியின் தவறை உணர்த்தச் சென்ற நாரத முனிவரையும், சிவபெருமானையும் கண்டுகொள்ளாமல் பார்வதி விளையாட்டில் மும்முரமாக இருந்தாள். இதனால் கோபம் கொண்ட ஈசன், அந்த பந்தை காலால் உதைக்க, அது மண்ணுலகில் கொன்றைக் காட்டில் வந்து விழுந்தது. அந்த இடமே ‘பந்தணை நல்லூர்’ என்றானது.
சிவனின் கோபத்தால் பராசக்தி, பசுவாக மாறினாள். தனக்கு சுய உருவம் கிடைக்க இத்தலம் வந்து கொன்றை காட்டில் புற்றுக்குள் இருந்த சிவலிங்கத்திற்கு பால் சொரிந்து வழிபட்டாள். அவளுக்கு காவலாக திருமால், மாடு மேய்க்கும் ஆயனாகி வந்தார். அவர்கள் இருவரும் அங்கிருந்த கன்வ முனிவரின் ஆசிரமத்தில் தங்கியிருந்தனர். ஒரு நாள் பசுவின் காலடி பட்டு, புற்றுக்குள் இருந்த சிவலிங்கம் வெளிப்பட்டது. அதன்பின்னர் பார்வதியும், திருமாலும் சுய உருவம் பெற்றனர். அன்னை வடக்கு பார்த்து தவம் இருந்து ஈசனை மணந்து கொண்டாள் என்கிறது தல புராணம். அன்னை பார்வதி தேவி ஈசனை நோக்கி தவம் இருந்த போது, அவளுக்கு இடையூறு வராத படி, அஷ்டபுஜ பத்ரகாளியும், அய்யனாரும், முனீஸ்வரரும் காவல் இருந்தனர்.
ஆலயத்தின் கோபுர வாசலில் வட புறம் இருக்கும் ‘முனீஸ்வரர்’, இன்றும் மக்களுக்கு காவல் தெய்வமாக விளங்கி வருகிறார். இவரை நம்பிக்கையுடன் வழிபடுவோரின் மனசஞ்சலங்களை அகற்றுகிறார். இங்கு எலுமிச்சம்பழம், முடிகயிறு போன்றவை ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் வழங்கப்படுகிறது. திரளான மக்கள் வினைதீர முனீஸ்வரரை வழிபட்டு செல்கிறார்கள்.
சுவாமி சன்னிதிக்கு நுழையும் முன்பாக, வலதுபுறத்தில் தென் திசை நோக்கி தனி விமானத்தின் கீழ் கல்யாண சுந்தரேஸ்வரர் அருள்பாலிக் கிறார். இறைவனுடன் அம்பிகையும் வீற்றிருக்கிறார். இந்த ஆலயம் திருமண வரம் அருளும் தலம் என்பதால், இங்கு சிறப்பு வாய்ந்த மூர்த்தியே, கல்யாண சுந்தரேஸ்வரர் தான். இவரை அமாவாசை தினங்களில் அபிஷேக ஆராதனை செய்து, வில்வ இலையால் அர்ச்சித்து, 11 முறை வலம் வந்து வழிபட வேண்டும். தவிர மாசிமகப் பெருவிழாவின் 7-ம் நாள் நடைபெறும் திருக்கல்யாண உற்சவத்தில் கலந்து கொண்டு வழிபட்டால் பெரும் பலன் கிடைக்கும். இந்த நிகழ்வின் போது பக்தர்களுக்கு மங்கலப் பொருட்கள் பிரசாதமாக வழங்கப்படுகிறது.
காம்பிலி நாட்டு மன்னன் பூபதி சூடாமணி. இவனது மகன் பிறக்கும்போதே கண்பார்வையை இழந்தவன். அவன் இத்தலம் வந்து மண்ணியாற்றில் நீராடி பசுபதீஸ்ரவரை வணங்கி கண் பார்வை பெற்றான். இதனால் இத்தலம் கண்ணொளி வழங்கும் ஆலயமாகவும் திகழ்கிறது. இத்தல இறைவனுக்கு திங்கட் கிழமையில் வில்வ அர்ச்சனையும், 5 நைவேத்தியங்கள் படைத்தும் வழிபட்டால் பித்ரு தோஷம் விலகும் என்கிறார்கள்.
ஆலயத்தில் வள்ளி- தெய்வானை சமேத ஆறுமுகப் பெருமான் வீற்றிருக்கிறார். இங்கு நவக்கிரகங்கள் அனைத்தும் ஒரே நேர்கோட்டில் நிற்கின்றன. கோஷ்டத்தில் இருக்கும் துர்க்கை அம்மன் அற்புதங்கள் நிறைந்தவள். ஆலயத்தின் தல விருட்சம், சரக்கொன்றை மரம் ஆகும்.
இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையும் தரி சனத்திற்காக திறந்திருக்கும்.
அமைவிடம் :
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் வட்டத்தில் கும்ப கோணத்தில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் பந்தணைநல்லூர் உள்ளது. குடந்தை அணைக்கரை சாலையில், தத்துவாஞ்சேரியில் இருந்து 7 கி.மீ தொலைவிலும், மணல் மேட்டில் இருந்து 10 கி.மீ தொலைவிலும் இந்த ஊர் இருக்கிறது. குடந்தை, மயிலாடுதுறை, சிதம்பரம், நெய்வேலி போன்ற ஊர்களில் இருந்து பேருந்து வசதி உள்ளது.
பழமையான மண்டபங்கள் உள்ளடக்கியது மட்டுமின்றி திருநாவுக்கரசர் வாசல், மவுன குருவாசல், ராமலிங்கர் வாசல், அருணகிரி வாசல், ஞான சம்பந்தர் வாசல் என்று கோவிலுக்குள்ளேயே, இத்தலம் வந்து பாடிய அடிகளார்களின் பெயர்களில் நுழைவு வாசல்கள் அமைந்திருப்பது சிறப்பு. ஆலயத்திற்குள் மூலவர் பசுபதீஸ்வரர், சுயம்பு லிங்கமாக கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். புற்று வடிவான சிவலிங்கம் மீது பசுவின் குளம்படி பட்ட வடுவும், பந்து மோதிய வடுவும் தெரிகிறது. குவளை சாத்தி தான் மூலவருக்கு அபிஷேகம் செய் கிறார்கள்.
இறைவி, மூங்கில் தோள் அம்மையாக, ‘காம்பனைய தோளி’ என்ற தனித்தமிழ்ப் பெயருடன் தனிச் சன்னிதியில் நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறாள். அன்னை தனது வலது கையில் சக்கரமும், இடது கையில் கமண்டலமும் ஏந்தியிருக்கிறாள். பெரும்பாலான கோவில்களில் தெற்கு பார்த்தும், சில கோவில்களில் கிழக்கு அல்லது மேற்கு பார்த்தும் இருக்கும் அம்பாள், இந்த ஆலயத்தில் வடக்கு பார்த்து அருள்பாலிப்பது சிறப்புக்குரியது.
புராண வரலாறு :
திருக்கயிலையில் ஒரு நாள், பார்வதி தேவி, நான்கு வேதங்களையும் பந்து களாக்கி தனது தோழியருடன் விளையாடிக் கொண்டிருந்தாள். அன்னையின் அந்த அற்புத விளையாட்டை, சூரியனும் கூட மறைவதை மறந்து பார்த்துக் கொண்டிருந்தான். அந்த பெரும் பகல் பொழுதால், உயிர்கள் அனைத்தும் சோர்வுற்றன. பார்வதியின் தவறை உணர்த்தச் சென்ற நாரத முனிவரையும், சிவபெருமானையும் கண்டுகொள்ளாமல் பார்வதி விளையாட்டில் மும்முரமாக இருந்தாள். இதனால் கோபம் கொண்ட ஈசன், அந்த பந்தை காலால் உதைக்க, அது மண்ணுலகில் கொன்றைக் காட்டில் வந்து விழுந்தது. அந்த இடமே ‘பந்தணை நல்லூர்’ என்றானது.
சிவனின் கோபத்தால் பராசக்தி, பசுவாக மாறினாள். தனக்கு சுய உருவம் கிடைக்க இத்தலம் வந்து கொன்றை காட்டில் புற்றுக்குள் இருந்த சிவலிங்கத்திற்கு பால் சொரிந்து வழிபட்டாள். அவளுக்கு காவலாக திருமால், மாடு மேய்க்கும் ஆயனாகி வந்தார். அவர்கள் இருவரும் அங்கிருந்த கன்வ முனிவரின் ஆசிரமத்தில் தங்கியிருந்தனர். ஒரு நாள் பசுவின் காலடி பட்டு, புற்றுக்குள் இருந்த சிவலிங்கம் வெளிப்பட்டது. அதன்பின்னர் பார்வதியும், திருமாலும் சுய உருவம் பெற்றனர். அன்னை வடக்கு பார்த்து தவம் இருந்து ஈசனை மணந்து கொண்டாள் என்கிறது தல புராணம். அன்னை பார்வதி தேவி ஈசனை நோக்கி தவம் இருந்த போது, அவளுக்கு இடையூறு வராத படி, அஷ்டபுஜ பத்ரகாளியும், அய்யனாரும், முனீஸ்வரரும் காவல் இருந்தனர்.
ஆலயத்தின் கோபுர வாசலில் வட புறம் இருக்கும் ‘முனீஸ்வரர்’, இன்றும் மக்களுக்கு காவல் தெய்வமாக விளங்கி வருகிறார். இவரை நம்பிக்கையுடன் வழிபடுவோரின் மனசஞ்சலங்களை அகற்றுகிறார். இங்கு எலுமிச்சம்பழம், முடிகயிறு போன்றவை ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் வழங்கப்படுகிறது. திரளான மக்கள் வினைதீர முனீஸ்வரரை வழிபட்டு செல்கிறார்கள்.
சுவாமி சன்னிதிக்கு நுழையும் முன்பாக, வலதுபுறத்தில் தென் திசை நோக்கி தனி விமானத்தின் கீழ் கல்யாண சுந்தரேஸ்வரர் அருள்பாலிக் கிறார். இறைவனுடன் அம்பிகையும் வீற்றிருக்கிறார். இந்த ஆலயம் திருமண வரம் அருளும் தலம் என்பதால், இங்கு சிறப்பு வாய்ந்த மூர்த்தியே, கல்யாண சுந்தரேஸ்வரர் தான். இவரை அமாவாசை தினங்களில் அபிஷேக ஆராதனை செய்து, வில்வ இலையால் அர்ச்சித்து, 11 முறை வலம் வந்து வழிபட வேண்டும். தவிர மாசிமகப் பெருவிழாவின் 7-ம் நாள் நடைபெறும் திருக்கல்யாண உற்சவத்தில் கலந்து கொண்டு வழிபட்டால் பெரும் பலன் கிடைக்கும். இந்த நிகழ்வின் போது பக்தர்களுக்கு மங்கலப் பொருட்கள் பிரசாதமாக வழங்கப்படுகிறது.
காம்பிலி நாட்டு மன்னன் பூபதி சூடாமணி. இவனது மகன் பிறக்கும்போதே கண்பார்வையை இழந்தவன். அவன் இத்தலம் வந்து மண்ணியாற்றில் நீராடி பசுபதீஸ்ரவரை வணங்கி கண் பார்வை பெற்றான். இதனால் இத்தலம் கண்ணொளி வழங்கும் ஆலயமாகவும் திகழ்கிறது. இத்தல இறைவனுக்கு திங்கட் கிழமையில் வில்வ அர்ச்சனையும், 5 நைவேத்தியங்கள் படைத்தும் வழிபட்டால் பித்ரு தோஷம் விலகும் என்கிறார்கள்.
ஆலயத்தில் வள்ளி- தெய்வானை சமேத ஆறுமுகப் பெருமான் வீற்றிருக்கிறார். இங்கு நவக்கிரகங்கள் அனைத்தும் ஒரே நேர்கோட்டில் நிற்கின்றன. கோஷ்டத்தில் இருக்கும் துர்க்கை அம்மன் அற்புதங்கள் நிறைந்தவள். ஆலயத்தின் தல விருட்சம், சரக்கொன்றை மரம் ஆகும்.
இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையும் தரி சனத்திற்காக திறந்திருக்கும்.
அமைவிடம் :
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் வட்டத்தில் கும்ப கோணத்தில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் பந்தணைநல்லூர் உள்ளது. குடந்தை அணைக்கரை சாலையில், தத்துவாஞ்சேரியில் இருந்து 7 கி.மீ தொலைவிலும், மணல் மேட்டில் இருந்து 10 கி.மீ தொலைவிலும் இந்த ஊர் இருக்கிறது. குடந்தை, மயிலாடுதுறை, சிதம்பரம், நெய்வேலி போன்ற ஊர்களில் இருந்து பேருந்து வசதி உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் மாம்பாறை கிராமத்தில் உள்ள முனியப்பசாமி கோவிலில் பெண்கள் வழிபடவும், பூஜைகளில் பங்கேற்கவும் அனுமதியில்லை.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் இருந்து 25 கி.மீ தூரத்தில் உள்ளது மாம்பாறை கிராமம். இங்குள்ள முனியப்பசாமி கோவிலில் பெண்கள் வழிபடவும், பூஜைகளில் பங்கேற்கவும் அனுமதியில்லை. மேலும் கோவிலில் பலியிடப்படும் விலங்குகள் கூட ஆட்டுக்கிடா மற்றும் சேவல் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.
பஞ்சபாண்டவர்கள் வனவாசத்தின் போது இப்பகுதிக்கு வந்தனர். அப்போது 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பழம் தரும் மரத்தின் அடியில் சைந்தவா முனிவர் தவமிருந்தார். அந்த மரத்தின் பழத்தை உண்ண பாஞ்சாலி விரும்பியதால், அர்ஜூணன் அம்பு எய்தவுடன் பழம் தரையில் விழுந்ததாம். அப்போது அங்கு தோன்றி கிருஷ்ணர் அந்த அற்புதமான மாம்பழத்தை முனிவர் உண்ண விரும்பினார் என்றும், பழம் மரத்தில் இல்லை என்றால் முனிவரின் சாபத்துக்கு ஆளாக நேரிடும். எனவே மாம்பழத்தை பழையபடி மரத்திலேயே ஒட்ட வைத்து விடும்படி கூறினார். அதன்பேரில் பாண்டவர்கள் அந்த அற்புத பழத்தை மரத்தில் ஒட்ட வைத்து விட்டு அங்கிருந்து கிளம்பி விட்டார்களாம்.
கிருஷ்ணர் மட்டும் இடையர் உருவத்தில் அங்கு மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். தவம் கலைத்த முனிவர் அந்த மரத்தில் இருந்த மாம்பழத்தில் காயம் இருப்பதை கண்டார். அந்தப்பழம் காயம்பட்டதற்கு மாடு மேய்ப்பவர்தான் காரணம் என்று எண்ணி அவரை துரத்த முயன்றார். அப்போது கிருஷ்ணரின் தலை முடியை பிடித்த முனிவர், ஞானப்பார்வையால் நடந்தவற்றை அறிந்து கொண்டார்.
ஒரு பெண்ணால்தான் தனக்கு கிடைக்க வேண்டிய கனி மரத்திலிருந்து பறிக்கப்பட்டது. அதனால் பெண்களுக்கு என்னுடைய தரிசனம் கிடையாது என்றும் நான் தவிமிருந்த காலத்தில் எனக்கு உதவிய முனியப்பசாமிக்கு எனக்கு எதிரே கூடாரம் அமைத்து என்னையும், அவரையும் தரிசனம் செய்யலாம். முனியப்பசாமிக்கு மட்டும் கிடா மற்றும் சேவல் வெட்டி படைக்கலாம் என்று கூறிய முனிவர் அப்படியே சிலையாகி விட்டார். இதுதான் இக்கோவிலின் தல வரலாறு என்றார் பூசாரி சேகர்.
இந்த கோவிலின் சிறப்பு, வசூலாகாத கடன்கள் குறித்து சீட்டில் எழுதி கோவிலில் உள்ள வேல்கம்பில் தொங்கவிட்டால் உடனே அக்கடன் தொகை வசூலாகி விடும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. கடன் தொகை வசூலான பிறகு நேர்த்திக்கடனாக கிடா வெட்டி பிரார்த்தனையும் செய்கின்றனர். இங்கு சாதாரண நாட்களில் சுமார் 50 கிடாக்களும், தை, மாசி, ஆடி மாதங்களில் நூற்றுக்கணக்கான கிடாக்களும் நேர்த்திக்கடனாக வெட்டப்படுகின்றன.
நேர்த்திக்கடனாக கோழிகள், ஆடுகளில் பெண் இனங்களை தவிர்த்து விடுகின்றனர். இங்கு சமைப்பது முதல் சாப்பிடுவது வரை ஆண்கள் மட்டுமே. சாப்பாடு, கறி மீதி இருந்தால் வீட்டுக்கு கூட எடுத்துச் செல்வதில்லை. அங்கேயே குழி தோண்டி புதைத்து விடுகின்றனர். இந்த முனியப்பசாமியை தரிசனம் செய்ய தமிழகம் மட்டுமின்றி கேரளம், கர்நாடகம், ஆந்திர பிரதேசம் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கத்திரிநத்தம் என்ற சிறு கிராமத்தில், காளகஸ்தீஸ்வரர் ஆலயம் இருக்கிறது. இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கத்திரிநத்தம் என்ற சிறு கிராமத்தில், காளகஸ்தீஸ்வரர் ஆலயம் இருக்கிறது. இங்கு அருள்பாலிக்கும் இறைவன் காளகஸ்தீஸ்வரர். இறைவி ஞானாம்பிகை.
ஒரு சமயம் சப்த ரிஷிகளாகிய மரீசி, அத்ரி, புலத்தியர், பிருகு, ஆங்கிரசர், வசிஷ்டர், பரத்வாஜர் ஆகியோர், இறைவனின் சாபத்திற்கு ஆளானார்கள். அதில் இருந்து விடுபடுவதற்காக, 48 நாட்கள் இந்தக் கோவில் எதிரில் உள்ள குளத்தில் நீராடி, இத்தல இறைவனான காளகஸ்தீஸ்வரரை வழிபட்டு வந்தனர். இதையடுத்து அவர்கள் சாபம் நீங்கப் பெற்று, கடுமையான நோயும் நீங்கப் பெற்றனர் என தலபுராணம் கூறுகிறது.
இதனாலேயே இத்தலம் ‘சப்தரிஷி நத்தம்’ என்ற பெயருடன் விளங்கியது. தற்போது இத்தலம் கத்திரி நத்தம் எனப் பெயர் மாற்றம் பெற்று விளங்குகிறது.
மாமன்னன் ராஜராஜசோழன் தன் ஆட்சி காலத்தில், சோழ மண்டலத்தை பல வளநாடுகளாகப் பிரிக்கப்பட்டது. ஒவ்வொரு வளநாடும் பல கூற்றங்களையும், நாடுகளையும் பெற்று திகழ்ந்தன. அப்படி பகுக்கப்பட்ட நாடுகளில் முக்கிய நாடாக, சிங்க வளநாடு திகழ்ந்தது. இந்த சிங்க வளநாட்டில் குளிச்சப்பட்டு, கத்திரிநத்தம், தளவாபாளையம், மருங்கை ஆகிய கிராமங்கள் உள்ளடங்கி இருந்தன. இந்த கிராமங்களுக்கு புன்னை நல்லூர் மாரியம்மன் கோவிலுடன் இணைந்து தற்போது திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன.
ஆலயம் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. முகப்பில் பலிபீடமும், நந்தியும் இருக்க முகப்பைத் தாண்டியதும் அகன்ற பிரகாரம் உள்ளது. அடுத்துள்ள மகாமண்டபத்தின் வலதுபுறம் அன்னை ஞானாம்பிகையின் சன்னிதி உள்ளது. முகப்பில் துவாரபாலகிகளின் சுதை வடிவ சிலை காவல் காக்க, உள்ளே கருவறையில் இறைவி ஞானாம்பிகை நான்கு கரங்களுடன், நின்ற கோலத்தில் இன்முகம் மலர தென்திசை நோக்கி அருள்பாலிக்கிறாள்.
மகாமண்டபத்தை அடுத்து அர்த்த மண்டபம் இருக்கிறது. அதையடுத்த கருவறையில் இறைவன் காளகஸ்தீஸ்வரர், லிங்க திருமேனியில் கிழக்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார். திருச்சுற்றில் மேற்கில் கன்னி மூலை கணபதி, முருகன், வள்ளி, தெய்வானை, கஜலட்சுமி, வடக்கில் காலபைரவர், வடகிழக்கில் நவக்கிரக நாயகர்கள் வீற்றிருக்கின்றனர். தேவகோட்டத்தில் தட்சிணாமூர்த்தி, அர்த்தநாரீஸ்வரர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் திருமேனிகள் உள்ளன. அம்மன் ஆலய தேவக்கோட்டத்தில் வைஷ்ணவி, பிரமணி, இந்திராணி ஆகியோரின் சுதை வடிவ திருமேனிகள் உள்ளன.
இத்தலம் ராகு - கேது பரிகார தலமாக விளங்குகிறது. இங்கு நவக்கிரகங்கள் முறையே மேல்திசையில் சனியும் சந்திரனும், வடதிசையில் குருவும், தெற்கு திசையில் ராகு, கேது, செவ்வாயும், கிழக்கு திசையில் புதன், சூரியன், சுக்ரனும் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆகமப்படி சனி பகவான் நடுவில் இருப்பார். இங்கு சனி பகவான் முதலிலேயே இருப்பது விசேஷ அமைப்பாக கருதப்படுகிறது.
ஆலயத்தின் தலவிருட்சமான வில்வம், தெற்குப் பிரகாரத்தில் உள்ளது. சுமார் 1000 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இந்த ஆலயம், அழகிய சுற்றுச் சுவருடன் விளங்குகிறது. இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் இந்த ஆலயத்தின் முன் அழகிய திருக்குளமும், கோடி விநாயகர் ஆலயமும் உள்ளன.

இந்த ஆலயத்தில் உள்ள விநாயகர், சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர், காலபைரவர், நந்தீஸ்வரர் ஆகியோர் திருமேனிகள் முதலாம் ராஜராஜ சோழன் காலத்து படைப்புகள் ஆகும். பழங்காலம் முதற்கொண்டு இக்கோவில் செங்கல் தளியாகவே இருந்து வந்துள்ளது. தற்போதுள்ள கட்டுமானம் தஞ்சாவூர் மராட்டியர் காலத்தில் கி.பி. 18-ம் நூற்றாண்டில் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இக்கோவிலின் முன் மண்டபத்தில் தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர் முதலாம் துக்கோஜி எனும் துளஜாவின் கல்வெட்டு சாசனம் ஒன்று உள்ளது. அந்த சாசனம் ஆங்கீரஸ் ஆண்டு கார்த்திகை மாதம் 28-ம் நாள் செவ்வாய்க்கிழமையை குறிப்பதாகும். திருக்காளத்தி எனும் காளகஸ்திக்கு நிகரானதாகவும், தென் காளகஸ்தி என்ற சிறப்புடனும் இத்தலம் விளங்குகிறது.
இந்த ஆலயம் திங்கட்கிழமைகளில் பக்தர்களால் நிறைந்திருக்கும். அன்று ராகு கால வேளையான காலை 7.30 மணி முதல் 9 மணி வரை, இறைவனுக்கு சிறப்பு ஆராதனை நடைபெறும். திருமணம் நடைபெற வேண்டும் என எண்ணும் கன்னியரோ, இளைஞரோ அல்லது அவர்களது பெற்றோர்களோ, சம்பந்தப்பட்டவர்களின் ஜாதகத்தை அர்ச்சனை தட்டில் வைத்து அர்ச்சனை செய்கின்றனர். அப்படிச் செய்தால், அந்த வரனுக்கு மூன்று மாதங்களில் திருமணம் நடைபெறுவது உறுதி என்று பக்தர்கள் சிலிர்ப்போடு கூறுகின்றனர். அன்று வெகு தொலைவிலிருந்தும் பக்தர்கள் இங்கு வந்து ஆராதனை செய்வது வழக்கமாக உள்ளது.
ஐப்பசி பவுர்ணமியில் இறைவனுக்கு அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. பலநூறு பக்தர்கள் இதில் கலந்து கொண்டு பயன் பெறுகின்றனர். மார்கழி 30 நாட்கள், கார்த்திகை சோம வாரங்கள், சிவராத்திரி, நவராத்திரி, வருடப்பிறப்பு, பொங்கல் போன்ற நாட்களில் இறைவனுக்கும் இறைவிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. பொங்கல் அன்று ஆலயம் சார்பில் திருச்சுற்றில் பொங்கல் வைத்து படைக்கின்றனர். பின்னர் அதை பக்தர்களுக்கு பிரசாதமாக வினியோகம் செய்கின்றனர். கார்த்திகை மாத கார்த்திகையில் ஆலயம் முன்பு சொக்கப்பனை தீபம் ஏற்றுவதும் இங்கு வழக்கமே. தைப்பூசத்தன்று இங்கிருந்து பஞ்சமூர்த்திகள் புறப்பட்டு, புன்னைநல்லூர் சென்று அங்கு தீர்த்தவாரி நடைபெறும்.
இங்கு குடும்ப ஒற்றுமைக்கு அர்த்தநாரீஸ்வரர் வழிபாடும், நோயற்ற வாழ்வுக்கும் குறைவற்ற செல்வத்திற்கும் கால பைரவர் வழிபாடும், சிறப்பான பிரதோஷ வழிபாடும் வெகு விமரிசையாக நடைபெறுகிறது.
இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
விரைந்து திருமணம் நடக்கவும் தடைபட்ட விவாகம் விரைந்து நடக்கவும், குழந்தை பேறு வேண்டியும் வரும் பக்தர்களின் குறைகளை நீங்கவும் காளகஸ்தீஸ்வரரை நாமும் ஒருமுறை தரிசிக்கலாமே.
அமைவிடம் :
தஞ்சையில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவிலும், புன்னை நல்லூர் மாரியம்மன் கோவிலில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது கத்திரிநத்தம் திருத்தலம்.
ஒரு சமயம் சப்த ரிஷிகளாகிய மரீசி, அத்ரி, புலத்தியர், பிருகு, ஆங்கிரசர், வசிஷ்டர், பரத்வாஜர் ஆகியோர், இறைவனின் சாபத்திற்கு ஆளானார்கள். அதில் இருந்து விடுபடுவதற்காக, 48 நாட்கள் இந்தக் கோவில் எதிரில் உள்ள குளத்தில் நீராடி, இத்தல இறைவனான காளகஸ்தீஸ்வரரை வழிபட்டு வந்தனர். இதையடுத்து அவர்கள் சாபம் நீங்கப் பெற்று, கடுமையான நோயும் நீங்கப் பெற்றனர் என தலபுராணம் கூறுகிறது.
இதனாலேயே இத்தலம் ‘சப்தரிஷி நத்தம்’ என்ற பெயருடன் விளங்கியது. தற்போது இத்தலம் கத்திரி நத்தம் எனப் பெயர் மாற்றம் பெற்று விளங்குகிறது.
மாமன்னன் ராஜராஜசோழன் தன் ஆட்சி காலத்தில், சோழ மண்டலத்தை பல வளநாடுகளாகப் பிரிக்கப்பட்டது. ஒவ்வொரு வளநாடும் பல கூற்றங்களையும், நாடுகளையும் பெற்று திகழ்ந்தன. அப்படி பகுக்கப்பட்ட நாடுகளில் முக்கிய நாடாக, சிங்க வளநாடு திகழ்ந்தது. இந்த சிங்க வளநாட்டில் குளிச்சப்பட்டு, கத்திரிநத்தம், தளவாபாளையம், மருங்கை ஆகிய கிராமங்கள் உள்ளடங்கி இருந்தன. இந்த கிராமங்களுக்கு புன்னை நல்லூர் மாரியம்மன் கோவிலுடன் இணைந்து தற்போது திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன.
ஆலயம் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. முகப்பில் பலிபீடமும், நந்தியும் இருக்க முகப்பைத் தாண்டியதும் அகன்ற பிரகாரம் உள்ளது. அடுத்துள்ள மகாமண்டபத்தின் வலதுபுறம் அன்னை ஞானாம்பிகையின் சன்னிதி உள்ளது. முகப்பில் துவாரபாலகிகளின் சுதை வடிவ சிலை காவல் காக்க, உள்ளே கருவறையில் இறைவி ஞானாம்பிகை நான்கு கரங்களுடன், நின்ற கோலத்தில் இன்முகம் மலர தென்திசை நோக்கி அருள்பாலிக்கிறாள்.
மகாமண்டபத்தை அடுத்து அர்த்த மண்டபம் இருக்கிறது. அதையடுத்த கருவறையில் இறைவன் காளகஸ்தீஸ்வரர், லிங்க திருமேனியில் கிழக்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார். திருச்சுற்றில் மேற்கில் கன்னி மூலை கணபதி, முருகன், வள்ளி, தெய்வானை, கஜலட்சுமி, வடக்கில் காலபைரவர், வடகிழக்கில் நவக்கிரக நாயகர்கள் வீற்றிருக்கின்றனர். தேவகோட்டத்தில் தட்சிணாமூர்த்தி, அர்த்தநாரீஸ்வரர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் திருமேனிகள் உள்ளன. அம்மன் ஆலய தேவக்கோட்டத்தில் வைஷ்ணவி, பிரமணி, இந்திராணி ஆகியோரின் சுதை வடிவ திருமேனிகள் உள்ளன.
இத்தலம் ராகு - கேது பரிகார தலமாக விளங்குகிறது. இங்கு நவக்கிரகங்கள் முறையே மேல்திசையில் சனியும் சந்திரனும், வடதிசையில் குருவும், தெற்கு திசையில் ராகு, கேது, செவ்வாயும், கிழக்கு திசையில் புதன், சூரியன், சுக்ரனும் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆகமப்படி சனி பகவான் நடுவில் இருப்பார். இங்கு சனி பகவான் முதலிலேயே இருப்பது விசேஷ அமைப்பாக கருதப்படுகிறது.
ஆலயத்தின் தலவிருட்சமான வில்வம், தெற்குப் பிரகாரத்தில் உள்ளது. சுமார் 1000 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இந்த ஆலயம், அழகிய சுற்றுச் சுவருடன் விளங்குகிறது. இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் இந்த ஆலயத்தின் முன் அழகிய திருக்குளமும், கோடி விநாயகர் ஆலயமும் உள்ளன.

இந்த ஆலயத்தில் உள்ள விநாயகர், சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர், காலபைரவர், நந்தீஸ்வரர் ஆகியோர் திருமேனிகள் முதலாம் ராஜராஜ சோழன் காலத்து படைப்புகள் ஆகும். பழங்காலம் முதற்கொண்டு இக்கோவில் செங்கல் தளியாகவே இருந்து வந்துள்ளது. தற்போதுள்ள கட்டுமானம் தஞ்சாவூர் மராட்டியர் காலத்தில் கி.பி. 18-ம் நூற்றாண்டில் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இக்கோவிலின் முன் மண்டபத்தில் தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர் முதலாம் துக்கோஜி எனும் துளஜாவின் கல்வெட்டு சாசனம் ஒன்று உள்ளது. அந்த சாசனம் ஆங்கீரஸ் ஆண்டு கார்த்திகை மாதம் 28-ம் நாள் செவ்வாய்க்கிழமையை குறிப்பதாகும். திருக்காளத்தி எனும் காளகஸ்திக்கு நிகரானதாகவும், தென் காளகஸ்தி என்ற சிறப்புடனும் இத்தலம் விளங்குகிறது.
இந்த ஆலயம் திங்கட்கிழமைகளில் பக்தர்களால் நிறைந்திருக்கும். அன்று ராகு கால வேளையான காலை 7.30 மணி முதல் 9 மணி வரை, இறைவனுக்கு சிறப்பு ஆராதனை நடைபெறும். திருமணம் நடைபெற வேண்டும் என எண்ணும் கன்னியரோ, இளைஞரோ அல்லது அவர்களது பெற்றோர்களோ, சம்பந்தப்பட்டவர்களின் ஜாதகத்தை அர்ச்சனை தட்டில் வைத்து அர்ச்சனை செய்கின்றனர். அப்படிச் செய்தால், அந்த வரனுக்கு மூன்று மாதங்களில் திருமணம் நடைபெறுவது உறுதி என்று பக்தர்கள் சிலிர்ப்போடு கூறுகின்றனர். அன்று வெகு தொலைவிலிருந்தும் பக்தர்கள் இங்கு வந்து ஆராதனை செய்வது வழக்கமாக உள்ளது.
ஐப்பசி பவுர்ணமியில் இறைவனுக்கு அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. பலநூறு பக்தர்கள் இதில் கலந்து கொண்டு பயன் பெறுகின்றனர். மார்கழி 30 நாட்கள், கார்த்திகை சோம வாரங்கள், சிவராத்திரி, நவராத்திரி, வருடப்பிறப்பு, பொங்கல் போன்ற நாட்களில் இறைவனுக்கும் இறைவிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. பொங்கல் அன்று ஆலயம் சார்பில் திருச்சுற்றில் பொங்கல் வைத்து படைக்கின்றனர். பின்னர் அதை பக்தர்களுக்கு பிரசாதமாக வினியோகம் செய்கின்றனர். கார்த்திகை மாத கார்த்திகையில் ஆலயம் முன்பு சொக்கப்பனை தீபம் ஏற்றுவதும் இங்கு வழக்கமே. தைப்பூசத்தன்று இங்கிருந்து பஞ்சமூர்த்திகள் புறப்பட்டு, புன்னைநல்லூர் சென்று அங்கு தீர்த்தவாரி நடைபெறும்.
இங்கு குடும்ப ஒற்றுமைக்கு அர்த்தநாரீஸ்வரர் வழிபாடும், நோயற்ற வாழ்வுக்கும் குறைவற்ற செல்வத்திற்கும் கால பைரவர் வழிபாடும், சிறப்பான பிரதோஷ வழிபாடும் வெகு விமரிசையாக நடைபெறுகிறது.
இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
விரைந்து திருமணம் நடக்கவும் தடைபட்ட விவாகம் விரைந்து நடக்கவும், குழந்தை பேறு வேண்டியும் வரும் பக்தர்களின் குறைகளை நீங்கவும் காளகஸ்தீஸ்வரரை நாமும் ஒருமுறை தரிசிக்கலாமே.
அமைவிடம் :
தஞ்சையில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவிலும், புன்னை நல்லூர் மாரியம்மன் கோவிலில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது கத்திரிநத்தம் திருத்தலம்.
கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம், ஊரகம் என்னும் இடத்தில் அமைந்திருக்கும் அம்மா திருவடி கோவில், எதிரிகளின் தொல்லைகளை நீக்கி, வாழ்க்கையில் வளம் பெருகச் செய்யும் ஆலயமாக திகழ்கிறது.
கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம், ஊரகம் என்னும் இடத்தில் அமைந்திருக்கும் அம்மா திருவடி கோவில், எதிரிகளின் தொல்லைகளை நீக்கி, வாழ்க்கையில் வளம் பெருகச் செய்யும் ஆலயமாக திகழ்கிறது.
தல வரலாறு :
சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, ஊரகம் கிராமத்தைச் சேர்ந்த பூமுள்ளி நம்பூதிரி என்பவர் காஞ்சீபுரம் காமாட்சி அம்மனை வழிபடச் சென்றார். அவரது வழிபாட்டில் மனம் மகிழ்ந்த அம்மன், அவர் கொண்டு வந்திருந்த பனை ஓலைக் குடையில் அமர்ந்து கொண்டு அவருடன் சென்றாள். சொந்த ஊருக்குத் திரும்பிய நம்பூதிரி, அந்தக் குடையைத் தனது வீட்டினுள்ளே தரையில் வைத்தார்.
மறுநாள் அவர் வெளியில் செல்லும் போது, வழக்கமாக எடுத்துச் செல்லும் குடையை எடுக்க முயன்றார். ஆனால் அந்தக் குடை, தரையோடு சேர்ந்து மிகவும் கனமாக இருப்பது போல் தோன்றியது. பலமுறை முயற்சித்தும், அவரால் அந்தக் குடையைத் தரையில் இருந்து எடுக்க முடியவில்லை. அதன் பின்பு, அவர் அதை அப்படியே விட்டுவிட்டார்.
அன்றிரவு அவரது கனவில் தோன்றிய இறைவி, காஞ்சீபுரத்தில் இருந்து குடையில் அமர்ந்து அவருடன் வந்ததாகத் தெரிவித்தாள். மேலும் அன்னையானவள், அந்தக் குடை இருக்கும் இடத்திலேயேக் கோவில் கொள்ள விரும்புவதாகவும், அங்கிருந்து சிறிது தொலைவில் உள்ள கிணறு ஒன்றில் தனது உருவச்சிலை இருப்பதாகவும், அதை எடுத்து வந்து, குடை இருக்கும் இடத்தில் நிறுவி கோவில் அமைக்கும்படியும் உத்தரவிட்டாள்.
நம்பூதிரியும் அம்மன் கனவில் சொன்னபடி, கிணற்றில் தேடியபோது அங்கு ஆச்சரியப்படத்தக்க வகையில் ஒரு சிலை கிடைத்தது. அந்தச் சிலையை எடுத்து வந்து குடை இருந்த இடத்தில் நிறுவி, தனது வீட்டைக் கோவிலாக மாற்றியமைத்தார். தனது சொத்துகள் அனைத்தையும் கோவிலுக்குத் தானமாக வழங்கிய அவர், கோவிலை நிர்வகிக்கும் பொறுப்பைக் கொச்சி மகாராஜாவிடம் ஒப்படைத்தார். அன்று முதல், இந்த ஆலயத்தில் இருக்கும் இறைவி ‘அம்மாதிருவடி’ என்று அழைக்கப்பட்டார் என்பதாக ஆலயத்தின் தல வரலாறு சொல்லப்படுகிறது.

கோவில் அமைப்பு :
கேரளாவில் புகழ்பெற்ற 108 துர்க்கை அம்மன் கோவில்களில் ஒன்றாக இந்த ஆலயம் திகழ்கிறது. ஆலயத்தின் கருவறையில் ‘அம்மாதிருவடி’ நின்ற நிலையில் காட்சி தருகிறாள். இந்த அன்னையை ஊரின் பெயரால் ‘ஊரகத்தம்மன்’ என்றும் அழைக்கின்றனர். கோவில் வளாகத்தில் சாஸ்தா, கணபதி ஆகியோருக்கும் தனிச் சன்னிதிகள் இருக்கின்றன.
புரட்டாசி மாதத்தில் ஒன்பது நாட்கள் நடைபெறும் நவராத்திரி விழா, கார்த்திகை மாதம் வரும் திருக்கார்த்திகை திருநாள், பங்குனி மாதத்தில் பதின்மூன்று நாட்கள் நடைபெறும் பூரம் திருவிழா போன்றவை இங்கு முக்கியத் திருவிழாக்களாக இருக்கின்றன. இதில் கார்த்திகை திருநாள் தான் அன்னையின் பிறந்த நாள் விழாவாக கொண்டாடப்படுகிறது. மேலும் ஆவணி மாதத்தில் நடைபெறும் ‘இல்லம் நிரா’ மற்றும் ஐப்பசி மாதத்தில் நடைபெறும் ‘வாவரத்’ எனப்படும் விழாக்களும் சிறப்பாக நடைபெறுகின்றன.
தேவமேளா எனப்படும் ஆறாட்டுப்புழா பூரம் விழாவில், திருப்பிரையார் ராமர் முன்னிலையில் அணி வகுத்து நிற்கும் தெய்வங்களில், அம்மாதிருவடி முதன்மை தெய்வமாக இருக்கிறாள். இங்கு வந்து அன்னையை வழிபடுபவர்களுக்கு, எதிரிகளின் தொல்லை நீங்கி, வாழ்க்கையில் வளங்கள் பெருகும் என்று பக்தர்கள் சொல்கின்றனர்.
இந்த ஆலயம் தினமும் காலை 5 மணி முதல் மதியம் 11.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
அமைவிடம் :
கேரள மாநிலம், திருச்சூர் நகரில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஊரகம் என்னும் இடத்தில் இந்த ஆலயம் உள்ளது. திருச்சூரில் இருந்து ஏராளமான பேருந்து வசதிகள் உள்ளன.
தல வரலாறு :
சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, ஊரகம் கிராமத்தைச் சேர்ந்த பூமுள்ளி நம்பூதிரி என்பவர் காஞ்சீபுரம் காமாட்சி அம்மனை வழிபடச் சென்றார். அவரது வழிபாட்டில் மனம் மகிழ்ந்த அம்மன், அவர் கொண்டு வந்திருந்த பனை ஓலைக் குடையில் அமர்ந்து கொண்டு அவருடன் சென்றாள். சொந்த ஊருக்குத் திரும்பிய நம்பூதிரி, அந்தக் குடையைத் தனது வீட்டினுள்ளே தரையில் வைத்தார்.
மறுநாள் அவர் வெளியில் செல்லும் போது, வழக்கமாக எடுத்துச் செல்லும் குடையை எடுக்க முயன்றார். ஆனால் அந்தக் குடை, தரையோடு சேர்ந்து மிகவும் கனமாக இருப்பது போல் தோன்றியது. பலமுறை முயற்சித்தும், அவரால் அந்தக் குடையைத் தரையில் இருந்து எடுக்க முடியவில்லை. அதன் பின்பு, அவர் அதை அப்படியே விட்டுவிட்டார்.
அன்றிரவு அவரது கனவில் தோன்றிய இறைவி, காஞ்சீபுரத்தில் இருந்து குடையில் அமர்ந்து அவருடன் வந்ததாகத் தெரிவித்தாள். மேலும் அன்னையானவள், அந்தக் குடை இருக்கும் இடத்திலேயேக் கோவில் கொள்ள விரும்புவதாகவும், அங்கிருந்து சிறிது தொலைவில் உள்ள கிணறு ஒன்றில் தனது உருவச்சிலை இருப்பதாகவும், அதை எடுத்து வந்து, குடை இருக்கும் இடத்தில் நிறுவி கோவில் அமைக்கும்படியும் உத்தரவிட்டாள்.
நம்பூதிரியும் அம்மன் கனவில் சொன்னபடி, கிணற்றில் தேடியபோது அங்கு ஆச்சரியப்படத்தக்க வகையில் ஒரு சிலை கிடைத்தது. அந்தச் சிலையை எடுத்து வந்து குடை இருந்த இடத்தில் நிறுவி, தனது வீட்டைக் கோவிலாக மாற்றியமைத்தார். தனது சொத்துகள் அனைத்தையும் கோவிலுக்குத் தானமாக வழங்கிய அவர், கோவிலை நிர்வகிக்கும் பொறுப்பைக் கொச்சி மகாராஜாவிடம் ஒப்படைத்தார். அன்று முதல், இந்த ஆலயத்தில் இருக்கும் இறைவி ‘அம்மாதிருவடி’ என்று அழைக்கப்பட்டார் என்பதாக ஆலயத்தின் தல வரலாறு சொல்லப்படுகிறது.

கோவில் அமைப்பு :
கேரளாவில் புகழ்பெற்ற 108 துர்க்கை அம்மன் கோவில்களில் ஒன்றாக இந்த ஆலயம் திகழ்கிறது. ஆலயத்தின் கருவறையில் ‘அம்மாதிருவடி’ நின்ற நிலையில் காட்சி தருகிறாள். இந்த அன்னையை ஊரின் பெயரால் ‘ஊரகத்தம்மன்’ என்றும் அழைக்கின்றனர். கோவில் வளாகத்தில் சாஸ்தா, கணபதி ஆகியோருக்கும் தனிச் சன்னிதிகள் இருக்கின்றன.
புரட்டாசி மாதத்தில் ஒன்பது நாட்கள் நடைபெறும் நவராத்திரி விழா, கார்த்திகை மாதம் வரும் திருக்கார்த்திகை திருநாள், பங்குனி மாதத்தில் பதின்மூன்று நாட்கள் நடைபெறும் பூரம் திருவிழா போன்றவை இங்கு முக்கியத் திருவிழாக்களாக இருக்கின்றன. இதில் கார்த்திகை திருநாள் தான் அன்னையின் பிறந்த நாள் விழாவாக கொண்டாடப்படுகிறது. மேலும் ஆவணி மாதத்தில் நடைபெறும் ‘இல்லம் நிரா’ மற்றும் ஐப்பசி மாதத்தில் நடைபெறும் ‘வாவரத்’ எனப்படும் விழாக்களும் சிறப்பாக நடைபெறுகின்றன.
தேவமேளா எனப்படும் ஆறாட்டுப்புழா பூரம் விழாவில், திருப்பிரையார் ராமர் முன்னிலையில் அணி வகுத்து நிற்கும் தெய்வங்களில், அம்மாதிருவடி முதன்மை தெய்வமாக இருக்கிறாள். இங்கு வந்து அன்னையை வழிபடுபவர்களுக்கு, எதிரிகளின் தொல்லை நீங்கி, வாழ்க்கையில் வளங்கள் பெருகும் என்று பக்தர்கள் சொல்கின்றனர்.
இந்த ஆலயம் தினமும் காலை 5 மணி முதல் மதியம் 11.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
அமைவிடம் :
கேரள மாநிலம், திருச்சூர் நகரில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஊரகம் என்னும் இடத்தில் இந்த ஆலயம் உள்ளது. திருச்சூரில் இருந்து ஏராளமான பேருந்து வசதிகள் உள்ளன.
பரமேஸ்வரன், மன்மதனை எரித்ததால் ‘மன்மத பரமேஸ்வரர்’ என்ற திருநாமத்துடன் வீற்றிருக்கும் இறைவன், வரதம்பட்டு என்ற கிராமத்தில் கோவில் கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
தங்களுக்கு பெரும் துன்பத்தை விளைவித்து வந்த அசுரர்களை அழிப்பதற்காக, சிவபெருமானை நாடிச் சென்றனர் தேவர்கள். அந்த நேரத்தில் சிவபெருமான் ஆழ்ந்த தியானத்தில் மூழ்கியிருந்தார். அவரை தியானத்தில் இருந்து எழுப்ப, தேவர்கள் எவருக்கும் தைரியம் இல்லை. அதனால் எப்படி சிவபெருமானிடம் தங்களின் முறையீட்டை வைப்பது என்று வழி தெரியாமல் நின்றனர்.
பின்னர் தேவர்கள் அனைவரும், மன்மதனின் உதவியை நாடினார்கள். ஆனால் ஈசனை தியானத்தில் இருந்து எழுப்ப மன்மதன் தயங்கினான்; மறுத்தான். ஆனால் தேவர்கள் அனைவரும், சாபம் கொடுத்து விடுவோம் என்று மிரட்டியதன் காரணமாக பயந்து போன மன்மதன், சிவபெருமானின் தியானத்தைக் கலைக்க அவர் மீது மன்மத பானத்தை ஏவினான்.
தியானம் கலைந்து விழித்த சிவபெருமான், கடும் சினம் கொண்டார். அதற்கு காரணமாக மன்மதனைத் திரும்பிப் பார்த்தார். ஈசனின் நெற்றிக்கண்ணில் இருந்து வெளிப்பட்ட வெப்பமானது, மன்மதனை எரித்துச் சாம்பலாக்கியது.
பரமேஸ்வரன், மன்மதனை எரித்ததால் ‘மன்மத பரமேஸ்வரர்’ என்ற திருநாமம் கொண்டார். அந்த திருநாமத்துடன் வீற்றிருக்கும் இறைவன், வரதம்பட்டு என்ற கிராமத்தில் கோவில் கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
சுற்றிலும் வயல்வெளிகள் சூழ அமைந்துள்ள கிராமம் வரதம்பட்டு. ஊரின் நடுநாயகமாக அமைந்துள்ளது மன்மத பரமேஸ்வரர் திருக்கோவில். கிழக்கு நோக்கி அமைந்திருக்கும் இந்த ஆலயத்தின் உள்ளே நுழைந்ததும், மகா மண்டபமும், கருவறைக்கு முன் நந்தியும், பலிபீடமும் காணப் படுகின்றன. கருவறை நுழைவு வாசலில் இடதுபுறம் விநாயகப்பெருமான் மற்றும் வலது புறத்தில் முருகப்பெருமான் ஆகியோரது திருமேனிகள் இருக்கின்றன.
ஆலயத்தின் உள்ளே கருவறையில் மூலவரான மன்மத பரமேஸ்வரர், லிங்கத் திருமேனியில் கிழக்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார். இந்த ஆலயத்தில் அம்மன் திருமேனி கிடையாது. ஊரின் நடுவே அமைந்துள்ள இந்த ஆலயத்திற்கு எதிரே அமைந்துள்ள நீண்ட வீதியானது, சித்திரா பவுர்ணமி நாள் அன்று, விளக்குகள் ஒளிவீச அற்புதமாக காட்சி தரும்.
ஆம்... ஊர் மக்கள் அன்றைய தினம் இறைவனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்வதுடன், திருவிளக்கு ஏற்றி வைத்து வழிபாடு செய்கின்றனர்.
எப்படி?
ஆலயத்தின் எதிரே உள்ள வீதியில், சுமார் 300-க்கும் மேற்பட்ட விளக்குகளை வரிசையாக ஏற்றி வைத்து, வீதியை ஒளி மயமாக்கி விடுகின்றனர் இப்பகுதி மக்கள். அந்த ஒளியினூடே இறைவனை வழிபடும் காட்சி கண்கொள்ளா காட்சியாக இருக்கும். அன்றைய தினம் இறைவனுக்கு பால் குடம், காவடி எடுத்து வந்து தங்கள் பிரார்த்தனையையும் பக்தர்கள் நிறைவேற்றுகின்றனர். கடந்த 2003-ம் ஆண்டு கும்பாபிஷேகம் கண்ட இந்த திருக்கோவில், அந்தப் பகுதி மக்கள் மற்றும் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த வர்களுக்கும் பல காலமாக குலதெய்வமாக விளங்கி வருவது சிறப்புக்குரியதாகும்.
இந்த ஆலயத்தில் தீபாவளி, பொங்கல், சிவராத்திரி, சோமவாரங்கள், கார்த்திகை, ஆண்டுப் பிறப்பு போன்ற விசேஷ நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் இறைவனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. பங்குனி உத்திரம் அன்று சந்தனக் காப்பு அலங்காரத்தில் பூக்குவியலுக்கு இடையே அருள்பாலிக்கும் இந்த மன்மத பரமேஸ்வரனை தரிசிக்க மக்களின் கூட்டம் அலைமோதுவது வாடிக்கை.
இந்தக் கோவில் தினமும் காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
மன்மதனை அழித்து மன்மதன் பெயரையும் தன் பெயருடன் இணைத்துக் கொண்ட இத்தல இறைவன், நம் பகைவர்களின் மனதை மாற்றி, அவர்களை நம் நண்பர்களாக்க வல்லவர் என்று பக்தர்கள் நம்புகிறார்கள்.
அமைவிடம்
நாகை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவில் - பந்தநல்லூர் பேருந்து தடத்தில் உள்ளது திருவாளப்புத்தூர். இங்கிருந்து 2 கிலோமீட்டர் தூரம் தென்கிழக்கு பகுதியில் சென்றால் வரதம்பட்டு ஊரை அடையலாம்.
பின்னர் தேவர்கள் அனைவரும், மன்மதனின் உதவியை நாடினார்கள். ஆனால் ஈசனை தியானத்தில் இருந்து எழுப்ப மன்மதன் தயங்கினான்; மறுத்தான். ஆனால் தேவர்கள் அனைவரும், சாபம் கொடுத்து விடுவோம் என்று மிரட்டியதன் காரணமாக பயந்து போன மன்மதன், சிவபெருமானின் தியானத்தைக் கலைக்க அவர் மீது மன்மத பானத்தை ஏவினான்.
தியானம் கலைந்து விழித்த சிவபெருமான், கடும் சினம் கொண்டார். அதற்கு காரணமாக மன்மதனைத் திரும்பிப் பார்த்தார். ஈசனின் நெற்றிக்கண்ணில் இருந்து வெளிப்பட்ட வெப்பமானது, மன்மதனை எரித்துச் சாம்பலாக்கியது.
பரமேஸ்வரன், மன்மதனை எரித்ததால் ‘மன்மத பரமேஸ்வரர்’ என்ற திருநாமம் கொண்டார். அந்த திருநாமத்துடன் வீற்றிருக்கும் இறைவன், வரதம்பட்டு என்ற கிராமத்தில் கோவில் கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
சுற்றிலும் வயல்வெளிகள் சூழ அமைந்துள்ள கிராமம் வரதம்பட்டு. ஊரின் நடுநாயகமாக அமைந்துள்ளது மன்மத பரமேஸ்வரர் திருக்கோவில். கிழக்கு நோக்கி அமைந்திருக்கும் இந்த ஆலயத்தின் உள்ளே நுழைந்ததும், மகா மண்டபமும், கருவறைக்கு முன் நந்தியும், பலிபீடமும் காணப் படுகின்றன. கருவறை நுழைவு வாசலில் இடதுபுறம் விநாயகப்பெருமான் மற்றும் வலது புறத்தில் முருகப்பெருமான் ஆகியோரது திருமேனிகள் இருக்கின்றன.
ஆலயத்தின் உள்ளே கருவறையில் மூலவரான மன்மத பரமேஸ்வரர், லிங்கத் திருமேனியில் கிழக்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார். இந்த ஆலயத்தில் அம்மன் திருமேனி கிடையாது. ஊரின் நடுவே அமைந்துள்ள இந்த ஆலயத்திற்கு எதிரே அமைந்துள்ள நீண்ட வீதியானது, சித்திரா பவுர்ணமி நாள் அன்று, விளக்குகள் ஒளிவீச அற்புதமாக காட்சி தரும்.
ஆம்... ஊர் மக்கள் அன்றைய தினம் இறைவனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்வதுடன், திருவிளக்கு ஏற்றி வைத்து வழிபாடு செய்கின்றனர்.
எப்படி?
ஆலயத்தின் எதிரே உள்ள வீதியில், சுமார் 300-க்கும் மேற்பட்ட விளக்குகளை வரிசையாக ஏற்றி வைத்து, வீதியை ஒளி மயமாக்கி விடுகின்றனர் இப்பகுதி மக்கள். அந்த ஒளியினூடே இறைவனை வழிபடும் காட்சி கண்கொள்ளா காட்சியாக இருக்கும். அன்றைய தினம் இறைவனுக்கு பால் குடம், காவடி எடுத்து வந்து தங்கள் பிரார்த்தனையையும் பக்தர்கள் நிறைவேற்றுகின்றனர். கடந்த 2003-ம் ஆண்டு கும்பாபிஷேகம் கண்ட இந்த திருக்கோவில், அந்தப் பகுதி மக்கள் மற்றும் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த வர்களுக்கும் பல காலமாக குலதெய்வமாக விளங்கி வருவது சிறப்புக்குரியதாகும்.
இந்த ஆலயத்தில் தீபாவளி, பொங்கல், சிவராத்திரி, சோமவாரங்கள், கார்த்திகை, ஆண்டுப் பிறப்பு போன்ற விசேஷ நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் இறைவனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. பங்குனி உத்திரம் அன்று சந்தனக் காப்பு அலங்காரத்தில் பூக்குவியலுக்கு இடையே அருள்பாலிக்கும் இந்த மன்மத பரமேஸ்வரனை தரிசிக்க மக்களின் கூட்டம் அலைமோதுவது வாடிக்கை.
இந்தக் கோவில் தினமும் காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
மன்மதனை அழித்து மன்மதன் பெயரையும் தன் பெயருடன் இணைத்துக் கொண்ட இத்தல இறைவன், நம் பகைவர்களின் மனதை மாற்றி, அவர்களை நம் நண்பர்களாக்க வல்லவர் என்று பக்தர்கள் நம்புகிறார்கள்.
அமைவிடம்
நாகை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவில் - பந்தநல்லூர் பேருந்து தடத்தில் உள்ளது திருவாளப்புத்தூர். இங்கிருந்து 2 கிலோமீட்டர் தூரம் தென்கிழக்கு பகுதியில் சென்றால் வரதம்பட்டு ஊரை அடையலாம்.
விதியும், திதியும் மாறிய திருத்தலமாக சிறப்பு பெற்று விளங்குகிறது திருக்கடையூர் திருத்தலம்.இந்த கோவிலின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
தன்னை தஞ்சமடைந்த பக்தன் மார்கண்டேயனுக்காக, காலனை சம்ஹாரம் செய்ததோடு, 16 வயதில் முடியும் மார்க்கண்டேயனின் விதியை, என்றும் சிரஞ்சீவியாக இருக்க அருளி மாற்றம் செய்தவர் அமிர்தகடேஸ்வரர். அதுபோல தம் பக்தனின் வாக்கை மெய்ப்பிப்பதற்காக, அமாவாசை திதியையே பவுர்ணமி திதியாக மாற்றிக் காட்டியவள் இத்தல அபிராமி அன்னை. இப்படி விதியும், திதியும் மாறிய திருத்தலமாக சிறப்பு பெற்று விளங்குகிறது திருக்கடையூர் திருத்தலம்.
இதில் அபிராமி அன்னையின் திருவிளையாடல் சிறப்புக்குரியதாகும். திருக்கடையூர் அபிராமி அம்மன் ஆலயத்தின் பட்டராக இருந்தவர், அமிர்தலிங்கம். இவரது தவப்புதல்வன் சுப்பிரமணியன். இவர் இயல்பாகவே அன்னை அபிராமியிடம் தனியொரு ஈர்ப்பு பெற்றவர். அதன் காரணமாகவே பின்னாளில் அபிராமி ஆலயத்தில் பஞ்சாங்கம் வாசிக்கும் பணியை சிறப்பாக செய்து வந்தார். திருமணமாகியும் இல்லறத்தில் பற்றற்ற நிலையில் வாழ்ந்து வந்தார். இதனால் மக்கள் பலரும் இவரை பித்தன், கிறுக்கன் என்று பரிகசித்து வந்தனர்.
அந்த காலத்தில் தஞ்சையை தலைநகராகக் கொண்டு, இரண்டாம் சரபோஜிராவ் போன்ஸ்லே எனும் மன்னன் ஆட்சி செய்து வந்தார். ஒரு தை அமாவாசை நாளில் அவர் திருக்கடையூர் ஆலயத்திற்கு தரிசனம் செய்ய வந்தார். அங்கிருந்த பலரும் அவருக்கு மரியாதை செலுத்தினர். ஆனால் அபிராமி சன்னிதியில் இருந்த சுப்பிரமணியன், தன்னை மறந்து அபிராமியை நினைத்து யோக நிஷ்டையில் ஆழ்ந்திருந்தார். அதனால் மன்னரின் வருகையை அவர் கவனிக்கவில்லை.
சுற்றியிருந்தவர்கள் மன்னரிடம்,‘தங்களுக்கு தர வேண்டிய மரியாதையை வழங்காமல் கண்மூடி இருக்கிறார் பாருங்கள். இவர் ஒரு பித்தன். இங்கு தினமும் பஞ்சாங்கம் வாசிப்பார்” என்று புகார் கூறினர். சரபோஜி மன்னர், அந்த புகாரை உடனடியாக நம்பிவிடவில்லை.
மாறாக சுப்பிரமணியம் நிஷ்டையில் இருந்து விழித்ததும், “இன்று என்ன திதி?” என்று கேட்டார். அதற்கு சுப்பிரமணியம், தன் மனதில் அபிராமியின் முழு மதி போன்ற திருமுகம் நிரம்பியிருந்ததால், “பவுர்ணமி” என்று கூறிவிட்டார்.
ஏதோ ஒரு நினைவில் சொல்கிறார் என்று நினைத்த மன்னன், மீண்டும் அதே கேள்வியைக் கேட்டார். அப்போதும் சுப்பிரமணியத்திடம் இருந்து “பவுர்ணமி” என்ற பதிலே வந்தது. ஆனால் அன்றைய தினமோ தை அமாவாசை நன்னாள் ஆகும்.
இரு முறை கேட்டும் எதிர்மறையான பதிலைச் சொன்னதால், கோபம் கொண்ட மன்னன், “அப்படியானால் இன்று இரவு வானில் முழு நிலவைக் காட்ட வேண்டும். இரவு முழு நிலவு தோன்றாவிட்டால், உம்மை அக்னிக் குண்டத்தில் ஏற்றிவிடுவேன்' என்று கூறிவிட்டு அங்கிருந்து வெளியேறி விட்டார்.
மன்னர் அங்கிருந்து அகன்ற பிறகுதான், சுப்பிரமணியத்திற்கு அன்னையின் முழுமதி முகத்தில் மதி மயங்கி, தான் திதியை மாற்றிச் சொன்னது புரிந்தது. அன்னையின் காரணமாக தான் சொன்ன தவறை, அந்த அபிராமி அன்னையே சரி செய்வாள் என்று சுப்பிரமணியன் நம்பினார்.
அமாவாசை அன்று முழுநிலவு தோன்றாது என்பதால், சுப்பிரமணியத்தை அக்னிக்குண்டத்தில் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்தன. அக்கால மரபுப்படி, அரிகண்டம் பாட ஏற்பாடு செய்யப்பட்டது. அதாவது, அபிராமி அம்மன் சன்னிதி எதிரில் ஆழக்குழியில் எரியும் நெருப்பின் மேல் விட்டம் ஒன்று வைத்து, அதில் நூறு கயிறுகளால் ஆன உறியினை கட்டி சுப்பிரமணியனை ஏற்றிவிடுவர். அபிராமி அம்மன் மேல் அந்தாதி பாடுவார், சுப்பிர மணியன். அந்தாதியின் ஒவ்வொரு பாடலின் நிறைவின் போதும் ஒவ்வொரு கயிறாக அறுக்கப்பட்டு நூறு பாடல்களைப் பாடி முடிக்கும் தருவாயில் அவர் அக்னி குண்டத்தில் விழுந்து உயிர் இழப்பது போல் அமைக்கப்பட்டிருக்கும்.
எரியும் நெருப்பின்மேல் தொங்கும் உறியில் சுப்பிரமணியன் ஏற்றப்பட்டார். மன்னரும், பக்தர்களும், ஊர்மக்களும் சூழ்ந்திருக்க, அன்னை அபிராமியை நினைத்து அந்தாதி பாடத் தொடங்கினார். 78 பாடல்கள் முடிந்து விட்டது. 78 கயிறுகள் அறுபட்டு விட்டன. 79-வது பாடலை சுப்பிரமணியன் தொடங்கும் போது, அன்னை அபிராமி வானில் காட்சி தந்து, தனது இடது காதில் இருந்த சந்திர தாடங்கத்தினை கழற்றி வானில் வீசினாள். அது பலகோடி நிலவின் ஒளியை அந்த அமாவாசை வானில் உமிழ்ந்தது. அமாவாசை இருள் நீங்கி, வானில் பூரண பவுர்ணமி நிலவு தோன்றியது.
உறியின் கீழே மூட்டப்பட்டிருந்த நெருப்பு முழுவதும் நறுமண மலர்களாய் மாறியிருந்தன. அப்போது அபிராமி அம்மன் “அன்பனே! வாய் தவறி மன்னனிடம் கூறிய நின் சொல்லையும் மெய்யே என நிரூபித்தேன். தொடங்கிய அந்தாதியை தொடர்ந்து பாடி நிறைவு செய்க' என்று கூறியதும், எஞ்சிய 21 பாடல்களையும் சுப்பிரமணியன் பாடினார்.
மன்னன் உள்பட அங்கு கூடியிருந்த அனைவரும், அபிராமியின் அருளையும், சுப்பிரமணியத்தின் பக்தியையும் எண்ணி மெய்சிலிர்த்தனர். சுப்பிரமணியத்திற்கு ‘அபிராமி பட்டர்’ என்ற பட்டத்தை மன்னன் சூட்டினான். அபிராமிபட்டர் மறுத்தாலும், அவரது சந்ததியினருக்காக நிலபுலன்களும் அளித்தான். அதற்கான உரிமைச் செப்பு பட்டயம் பட்டர் சந்ததியினரிடம் இன்றும் இருக்கிறதாம்.
சிவத்திருப்பணிகள் பல செய்து, பின்னாளில் ஒரு ரேவதி நட்சத்திர தினத்தில் அன்னை அபிராமியுடன் ஒன்றினார் அபிராமி பட்டர்.
தை அமாவாசை தினத்தன்று, ஆண்டு தோறும் திருக்கடையூர் அபிராமி அம்மன் சன்னிதி முன்பாக அபிராமி அந்தாதி பாடப்படுவதுடன், பவுர்ணமி தோன்றும் நிகழ்வும் நடத்திக் காட்டப்படும்.
அமைவிடம்
திருக்கடையூர் திருத்தலம் சீர்காழியில் இருந்து கருவி (கருவிழுந்த நாதபுரம்), ஆக்கூர் வழியாக காரைக்கால் செல்லும் வழியில் 18 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது. மயிலாடுதுறையில் இருந்து செம்பொனார்கோவில், ஆக்கூர் வழியாகவும் திருக்கடையூர் செல்லலாம்.
இதில் அபிராமி அன்னையின் திருவிளையாடல் சிறப்புக்குரியதாகும். திருக்கடையூர் அபிராமி அம்மன் ஆலயத்தின் பட்டராக இருந்தவர், அமிர்தலிங்கம். இவரது தவப்புதல்வன் சுப்பிரமணியன். இவர் இயல்பாகவே அன்னை அபிராமியிடம் தனியொரு ஈர்ப்பு பெற்றவர். அதன் காரணமாகவே பின்னாளில் அபிராமி ஆலயத்தில் பஞ்சாங்கம் வாசிக்கும் பணியை சிறப்பாக செய்து வந்தார். திருமணமாகியும் இல்லறத்தில் பற்றற்ற நிலையில் வாழ்ந்து வந்தார். இதனால் மக்கள் பலரும் இவரை பித்தன், கிறுக்கன் என்று பரிகசித்து வந்தனர்.
அந்த காலத்தில் தஞ்சையை தலைநகராகக் கொண்டு, இரண்டாம் சரபோஜிராவ் போன்ஸ்லே எனும் மன்னன் ஆட்சி செய்து வந்தார். ஒரு தை அமாவாசை நாளில் அவர் திருக்கடையூர் ஆலயத்திற்கு தரிசனம் செய்ய வந்தார். அங்கிருந்த பலரும் அவருக்கு மரியாதை செலுத்தினர். ஆனால் அபிராமி சன்னிதியில் இருந்த சுப்பிரமணியன், தன்னை மறந்து அபிராமியை நினைத்து யோக நிஷ்டையில் ஆழ்ந்திருந்தார். அதனால் மன்னரின் வருகையை அவர் கவனிக்கவில்லை.
சுற்றியிருந்தவர்கள் மன்னரிடம்,‘தங்களுக்கு தர வேண்டிய மரியாதையை வழங்காமல் கண்மூடி இருக்கிறார் பாருங்கள். இவர் ஒரு பித்தன். இங்கு தினமும் பஞ்சாங்கம் வாசிப்பார்” என்று புகார் கூறினர். சரபோஜி மன்னர், அந்த புகாரை உடனடியாக நம்பிவிடவில்லை.
மாறாக சுப்பிரமணியம் நிஷ்டையில் இருந்து விழித்ததும், “இன்று என்ன திதி?” என்று கேட்டார். அதற்கு சுப்பிரமணியம், தன் மனதில் அபிராமியின் முழு மதி போன்ற திருமுகம் நிரம்பியிருந்ததால், “பவுர்ணமி” என்று கூறிவிட்டார்.
ஏதோ ஒரு நினைவில் சொல்கிறார் என்று நினைத்த மன்னன், மீண்டும் அதே கேள்வியைக் கேட்டார். அப்போதும் சுப்பிரமணியத்திடம் இருந்து “பவுர்ணமி” என்ற பதிலே வந்தது. ஆனால் அன்றைய தினமோ தை அமாவாசை நன்னாள் ஆகும்.
இரு முறை கேட்டும் எதிர்மறையான பதிலைச் சொன்னதால், கோபம் கொண்ட மன்னன், “அப்படியானால் இன்று இரவு வானில் முழு நிலவைக் காட்ட வேண்டும். இரவு முழு நிலவு தோன்றாவிட்டால், உம்மை அக்னிக் குண்டத்தில் ஏற்றிவிடுவேன்' என்று கூறிவிட்டு அங்கிருந்து வெளியேறி விட்டார்.
மன்னர் அங்கிருந்து அகன்ற பிறகுதான், சுப்பிரமணியத்திற்கு அன்னையின் முழுமதி முகத்தில் மதி மயங்கி, தான் திதியை மாற்றிச் சொன்னது புரிந்தது. அன்னையின் காரணமாக தான் சொன்ன தவறை, அந்த அபிராமி அன்னையே சரி செய்வாள் என்று சுப்பிரமணியன் நம்பினார்.
அமாவாசை அன்று முழுநிலவு தோன்றாது என்பதால், சுப்பிரமணியத்தை அக்னிக்குண்டத்தில் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்தன. அக்கால மரபுப்படி, அரிகண்டம் பாட ஏற்பாடு செய்யப்பட்டது. அதாவது, அபிராமி அம்மன் சன்னிதி எதிரில் ஆழக்குழியில் எரியும் நெருப்பின் மேல் விட்டம் ஒன்று வைத்து, அதில் நூறு கயிறுகளால் ஆன உறியினை கட்டி சுப்பிரமணியனை ஏற்றிவிடுவர். அபிராமி அம்மன் மேல் அந்தாதி பாடுவார், சுப்பிர மணியன். அந்தாதியின் ஒவ்வொரு பாடலின் நிறைவின் போதும் ஒவ்வொரு கயிறாக அறுக்கப்பட்டு நூறு பாடல்களைப் பாடி முடிக்கும் தருவாயில் அவர் அக்னி குண்டத்தில் விழுந்து உயிர் இழப்பது போல் அமைக்கப்பட்டிருக்கும்.
எரியும் நெருப்பின்மேல் தொங்கும் உறியில் சுப்பிரமணியன் ஏற்றப்பட்டார். மன்னரும், பக்தர்களும், ஊர்மக்களும் சூழ்ந்திருக்க, அன்னை அபிராமியை நினைத்து அந்தாதி பாடத் தொடங்கினார். 78 பாடல்கள் முடிந்து விட்டது. 78 கயிறுகள் அறுபட்டு விட்டன. 79-வது பாடலை சுப்பிரமணியன் தொடங்கும் போது, அன்னை அபிராமி வானில் காட்சி தந்து, தனது இடது காதில் இருந்த சந்திர தாடங்கத்தினை கழற்றி வானில் வீசினாள். அது பலகோடி நிலவின் ஒளியை அந்த அமாவாசை வானில் உமிழ்ந்தது. அமாவாசை இருள் நீங்கி, வானில் பூரண பவுர்ணமி நிலவு தோன்றியது.
உறியின் கீழே மூட்டப்பட்டிருந்த நெருப்பு முழுவதும் நறுமண மலர்களாய் மாறியிருந்தன. அப்போது அபிராமி அம்மன் “அன்பனே! வாய் தவறி மன்னனிடம் கூறிய நின் சொல்லையும் மெய்யே என நிரூபித்தேன். தொடங்கிய அந்தாதியை தொடர்ந்து பாடி நிறைவு செய்க' என்று கூறியதும், எஞ்சிய 21 பாடல்களையும் சுப்பிரமணியன் பாடினார்.
மன்னன் உள்பட அங்கு கூடியிருந்த அனைவரும், அபிராமியின் அருளையும், சுப்பிரமணியத்தின் பக்தியையும் எண்ணி மெய்சிலிர்த்தனர். சுப்பிரமணியத்திற்கு ‘அபிராமி பட்டர்’ என்ற பட்டத்தை மன்னன் சூட்டினான். அபிராமிபட்டர் மறுத்தாலும், அவரது சந்ததியினருக்காக நிலபுலன்களும் அளித்தான். அதற்கான உரிமைச் செப்பு பட்டயம் பட்டர் சந்ததியினரிடம் இன்றும் இருக்கிறதாம்.
சிவத்திருப்பணிகள் பல செய்து, பின்னாளில் ஒரு ரேவதி நட்சத்திர தினத்தில் அன்னை அபிராமியுடன் ஒன்றினார் அபிராமி பட்டர்.
தை அமாவாசை தினத்தன்று, ஆண்டு தோறும் திருக்கடையூர் அபிராமி அம்மன் சன்னிதி முன்பாக அபிராமி அந்தாதி பாடப்படுவதுடன், பவுர்ணமி தோன்றும் நிகழ்வும் நடத்திக் காட்டப்படும்.
அமைவிடம்
திருக்கடையூர் திருத்தலம் சீர்காழியில் இருந்து கருவி (கருவிழுந்த நாதபுரம்), ஆக்கூர் வழியாக காரைக்கால் செல்லும் வழியில் 18 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது. மயிலாடுதுறையில் இருந்து செம்பொனார்கோவில், ஆக்கூர் வழியாகவும் திருக்கடையூர் செல்லலாம்.
விருத்தாச்சலம் - திட்டக்குடி நெடுஞ்சாலையில் சிவாலயம் ஒன்று உள்ளது. இத்தலத்தில் அன்னபூரணி சமேத தாகந்தீர்த்தபுரீஸ்வரர் அருள்பாலிக்கிறார்.
திருஞானசம்பந்தர் பாடிய தேவாரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் ‘பாடி’ என்பது, திருமாறன்பாடி என்ற இறையூர் ஆகும். பாடி நான்கில் ஒன்றாகப் கருதப்படும் வைப்புத்தலம் திருமாறன்பாடி என்ற இறையூர். இங்கு வெள்ளாறு எனப்படும் நிவாநதியின் வடகரையில், விருத்தாச்சலம்- திட்டக்குடி நெடுஞ்சாலையில் சிவாலயம் ஒன்று உள்ளது. இத்தலத்தில் அன்னபூரணி சமேத தாகந்தீர்த்தபுரீஸ்வரர் அருள்பாலிக்கிறார்.
நடு நாட்டில் பாடல் பெற்ற சிவத்தலங்களான பெண்ணாகடம், திருவட்டத்துறை ஆகியவற்றுக்கு இடையே, திருஞானசம்பந்தரால் வழிபடப்பட்ட திருத்தலம் இந்த சிற்றூர். திருஞானசம்பந்தர் தில்லை (சிதம்பரம்), திருஎருக்கத்தம்புலியூர் (ராசேந்திரபட்டிணம்), திருமுதுகுன்றம் (விருத்தாச்சலம்), திருத்தூங்கானை மாடம் (பெண்ணாகடம்) ஆகிய சிவத்தலங்களை வணங்கித் திருப்பதிகங்கள் பாடிய பின்னர், திருவட்டத்துறை ஈசனை வணங்க வேண்டும் என்று விருப்பம் கொண்டார்.
ஆனால் வழக்கமாக தன் தந்தை சிவபாத இருதயர் தோளில் அமர்ந்து செல்லும் சம்பந்தர், 5 வயதே ஆகியிருந்தாலும் கூட திருவட்டத்துறை ஈசனைக் காண அடியார்களுடன் நடந்தே சென்றார். நெடுந்தூரம் நடந்த களைப்பாலும், இரவு நேரம் என்பதாலும் மாறன்பாடியில் உள்ள ஈசன் திருக்கோவிலில் தங்கினார். அங்கு சுவாமியை வழிபட்டு விட்டு உறங்கும்போது, திருஞானசம்பந்தரின் கனவில் இறைவன் தோன்றினார். அந்தக்கனவில் தனது தண்டாயுதத்தை தரையில் ஊன்றியதில் நீர் பெருக்கெடுத்தது. அந்த நீரை சம்பந்தரும், அவரது அடியார்களும் பருகி தாகமும், களைப்பும் நீங்கப்பெற்றனர். இறைவியும் அவர்களுக்கு அன்னதானம் படைத்து அருளினார்.
மேலும் ஈசன், சிறு குழந்தையான சம்பந்தரின் திருவடிகள் காயம் படக்கூடாது என்பதற்காக, முத்துச் சிவிகையும், மணிக்குடையும், பொற்சின்னமும் திருவட்டத்துறை திருக்கோவிலில் இருக்கும் என்றும் கனவிலேயே அருளினார்.
மறுநாள் பொழுது புலர்ந்து எழுந்த திருஞானசம்பந்தரைக் காண, திருவட்டத்துறையில் இருந்து அடியார்கள் வந்திருந்தனர். அவர்கள் தங்களின் கனவில் ஈசன் வந்து, முத்துச் சிவிகை, மணிக்குடை, பொற்சின்னம் தர அருளியதாக கூறி அதனை சம்பந்தரிடம் கொடுத்தனர். கனவில் தோன்றிய, ஈசன் நினைவில் செய்தருளியதை நினைத்து சம்பந்தரும், அவரது அடியார்களும் அகமகிழ்ந்து போயினர். ஈசனின் பெரும் உவகையை நினைத்து அவர் பதிகம் பாடினார். பின்னர் முத்துச் சிவிகையில் ஏறி, திருவட்டத்துறை சென்று அங்கு ஈசனை வழிபட்டு, மீண்டும் பல தலங்களுக்கு யாத்திரை மேற்கொண்டார்.

இந்த வரலாற்றை பெரிய புராணம் முதலான நூல்களின் வாயிலாக நாம் அறிய முடிகிறது. அதன் மூலம் சம்பந்தர் தங்கியிருந்து வழிபட்ட தலம் மாறன்பாடி என்பதையும், அவரது காலமாக 6-ம் நூற்றாண்டிற்கு முந்தைய பழமையும் பெருமையும் கொண்டது இந்த சிவாலயம் என்பது நமக்கு புலனாகிறது.
மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற முப்பெருமையும் உடைய ஊர், மாறன்பாடி. தாகந்தீர்த்தபுரீஸ்வரர் என்ற இறைவனின் திருநாமத்திற்குப் பொருத்தமாக, இன்றும் அவர் அருளால் இவ்வூரில் இருந்து சுற்றியுள்ள 40-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குத் தண்ணீர் வழங்கும் பேறு பெற்றுள்ளது இறையூர்.
ஆலய அமைப்பு
கோவிலின் வாசலை ஒட்டி செல்வ விநாயகர் வீற்றிருக்கிறார். திருஞானசம்பந்தர் திருவட்டத்துறை ஈசனால் முத்துச் சிவிகையும், மணிக்குடையும், பொற் சின்னமும் அருளப் பெற்ற திருக்காட்சியை, இங்கு தரிசிக்கலாம். அதை தரிசித்தபடி வெளிச்சுற்றில் மும்முறை வலம் வந்து, நந்தியம் பெருமானை வணங்கி அனுமதி பெற்று ஆலயம் நுழைய வேண்டும். பின்னர் விநாயகர், அன்னபூரணி அம்பாள் ஆகியோரை தரிசனம் செய்யலாம். உள் சுற்றில் சமயக்குரவர்கள் நால்வர், நர்த்தன கணபதி, தட்சிணாமூர்த்தி, அண்ணாமலையார், பிரம்மன், துர்க்கை, சண்டிகேஸ்வரர், நவக்கிரகங்கள், சனீஸ்வரர், பைரவர், சந்திரன், சூரியன் ஆகிய தெய்வங்களுக்கு திருமேனிகள் உள்ளன.
இந்த ஆலயத்தில் சனிப்பெயர்ச்சி பெருவிழா, குருப்பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி, மாசி மாதத்தில் மாசி மகம் ஆகியவை சிறப்பாக நடைபெறும். மாசி மக திருவிழாவின் 2-ம் நாள், திருஞானசம்பந்தரை திருவட்டத்துறைக்கு அழைத்துச் சென்று, மகம் முடித்த பின்னர் மாறன்பாடிக்கு திரும்பி அழைத்து வரும் நிகழ்ச்சி பிரசித்தி பெற்றது. ஆண்டுதோறும் கார்த்திகை சோம வாரங்களில் சங்காபிஷேகமும் நடைபெறுகிறது.
அமைவிடம்
விருத்தாச்சலத்தில் இருந்து திட்டக்குடி செல்லும் பேருந்தில் ஏறி, தொளார் கைக்காட்டி விலக்கில் இறங்கினால், நடந்து செல்லும் தூரத்தில் இறையூர் தாகந்தீர்த்தபுரீஸ்வரர் ஆலயம் உள்ளது.
நடு நாட்டில் பாடல் பெற்ற சிவத்தலங்களான பெண்ணாகடம், திருவட்டத்துறை ஆகியவற்றுக்கு இடையே, திருஞானசம்பந்தரால் வழிபடப்பட்ட திருத்தலம் இந்த சிற்றூர். திருஞானசம்பந்தர் தில்லை (சிதம்பரம்), திருஎருக்கத்தம்புலியூர் (ராசேந்திரபட்டிணம்), திருமுதுகுன்றம் (விருத்தாச்சலம்), திருத்தூங்கானை மாடம் (பெண்ணாகடம்) ஆகிய சிவத்தலங்களை வணங்கித் திருப்பதிகங்கள் பாடிய பின்னர், திருவட்டத்துறை ஈசனை வணங்க வேண்டும் என்று விருப்பம் கொண்டார்.
ஆனால் வழக்கமாக தன் தந்தை சிவபாத இருதயர் தோளில் அமர்ந்து செல்லும் சம்பந்தர், 5 வயதே ஆகியிருந்தாலும் கூட திருவட்டத்துறை ஈசனைக் காண அடியார்களுடன் நடந்தே சென்றார். நெடுந்தூரம் நடந்த களைப்பாலும், இரவு நேரம் என்பதாலும் மாறன்பாடியில் உள்ள ஈசன் திருக்கோவிலில் தங்கினார். அங்கு சுவாமியை வழிபட்டு விட்டு உறங்கும்போது, திருஞானசம்பந்தரின் கனவில் இறைவன் தோன்றினார். அந்தக்கனவில் தனது தண்டாயுதத்தை தரையில் ஊன்றியதில் நீர் பெருக்கெடுத்தது. அந்த நீரை சம்பந்தரும், அவரது அடியார்களும் பருகி தாகமும், களைப்பும் நீங்கப்பெற்றனர். இறைவியும் அவர்களுக்கு அன்னதானம் படைத்து அருளினார்.
மேலும் ஈசன், சிறு குழந்தையான சம்பந்தரின் திருவடிகள் காயம் படக்கூடாது என்பதற்காக, முத்துச் சிவிகையும், மணிக்குடையும், பொற்சின்னமும் திருவட்டத்துறை திருக்கோவிலில் இருக்கும் என்றும் கனவிலேயே அருளினார்.
மறுநாள் பொழுது புலர்ந்து எழுந்த திருஞானசம்பந்தரைக் காண, திருவட்டத்துறையில் இருந்து அடியார்கள் வந்திருந்தனர். அவர்கள் தங்களின் கனவில் ஈசன் வந்து, முத்துச் சிவிகை, மணிக்குடை, பொற்சின்னம் தர அருளியதாக கூறி அதனை சம்பந்தரிடம் கொடுத்தனர். கனவில் தோன்றிய, ஈசன் நினைவில் செய்தருளியதை நினைத்து சம்பந்தரும், அவரது அடியார்களும் அகமகிழ்ந்து போயினர். ஈசனின் பெரும் உவகையை நினைத்து அவர் பதிகம் பாடினார். பின்னர் முத்துச் சிவிகையில் ஏறி, திருவட்டத்துறை சென்று அங்கு ஈசனை வழிபட்டு, மீண்டும் பல தலங்களுக்கு யாத்திரை மேற்கொண்டார்.

அன்னபூரணி, தாகந்தீர்த்தபுரீஸ்வரர்
இந்த வரலாற்றை பெரிய புராணம் முதலான நூல்களின் வாயிலாக நாம் அறிய முடிகிறது. அதன் மூலம் சம்பந்தர் தங்கியிருந்து வழிபட்ட தலம் மாறன்பாடி என்பதையும், அவரது காலமாக 6-ம் நூற்றாண்டிற்கு முந்தைய பழமையும் பெருமையும் கொண்டது இந்த சிவாலயம் என்பது நமக்கு புலனாகிறது.
மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற முப்பெருமையும் உடைய ஊர், மாறன்பாடி. தாகந்தீர்த்தபுரீஸ்வரர் என்ற இறைவனின் திருநாமத்திற்குப் பொருத்தமாக, இன்றும் அவர் அருளால் இவ்வூரில் இருந்து சுற்றியுள்ள 40-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குத் தண்ணீர் வழங்கும் பேறு பெற்றுள்ளது இறையூர்.
ஆலய அமைப்பு
கோவிலின் வாசலை ஒட்டி செல்வ விநாயகர் வீற்றிருக்கிறார். திருஞானசம்பந்தர் திருவட்டத்துறை ஈசனால் முத்துச் சிவிகையும், மணிக்குடையும், பொற் சின்னமும் அருளப் பெற்ற திருக்காட்சியை, இங்கு தரிசிக்கலாம். அதை தரிசித்தபடி வெளிச்சுற்றில் மும்முறை வலம் வந்து, நந்தியம் பெருமானை வணங்கி அனுமதி பெற்று ஆலயம் நுழைய வேண்டும். பின்னர் விநாயகர், அன்னபூரணி அம்பாள் ஆகியோரை தரிசனம் செய்யலாம். உள் சுற்றில் சமயக்குரவர்கள் நால்வர், நர்த்தன கணபதி, தட்சிணாமூர்த்தி, அண்ணாமலையார், பிரம்மன், துர்க்கை, சண்டிகேஸ்வரர், நவக்கிரகங்கள், சனீஸ்வரர், பைரவர், சந்திரன், சூரியன் ஆகிய தெய்வங்களுக்கு திருமேனிகள் உள்ளன.
இந்த ஆலயத்தில் சனிப்பெயர்ச்சி பெருவிழா, குருப்பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி, மாசி மாதத்தில் மாசி மகம் ஆகியவை சிறப்பாக நடைபெறும். மாசி மக திருவிழாவின் 2-ம் நாள், திருஞானசம்பந்தரை திருவட்டத்துறைக்கு அழைத்துச் சென்று, மகம் முடித்த பின்னர் மாறன்பாடிக்கு திரும்பி அழைத்து வரும் நிகழ்ச்சி பிரசித்தி பெற்றது. ஆண்டுதோறும் கார்த்திகை சோம வாரங்களில் சங்காபிஷேகமும் நடைபெறுகிறது.
அமைவிடம்
விருத்தாச்சலத்தில் இருந்து திட்டக்குடி செல்லும் பேருந்தில் ஏறி, தொளார் கைக்காட்டி விலக்கில் இறங்கினால், நடந்து செல்லும் தூரத்தில் இறையூர் தாகந்தீர்த்தபுரீஸ்வரர் ஆலயம் உள்ளது.
நாகப்பட்டினம் அருகே உள்ளது மஞ்சக்கொல்லை குமரன் கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
நாகப்பட்டினம் அருகே உள்ளது மஞ்சக்கொல்லை குமரன் கோவில். இந்த ஆலயம் கந்த சஷ்டி விழாவிற்கு பெயர் பெற்றதாக விளங்குகிறது.
சூரசம்ஹாரத்திற்காக அன்னை பார்வதியிடம் முருகப்பெருமான் வேல் வாங்கும் நிகழ்வு சிக்கல் சிங்காரவேலர் ஆலயத்தில் சிறப்பாக நடைபெறும். அந்த நிகழ்வின் போது, முருகப் பெருமானின் முகத்தில் வியர்வைத் துளிகள் தோன்றுவது, சிக்கல் சிங்காரவேலர் ஆலயத்தில் ஆண்டு தோறும் நடைபெறும் ஆச்சரியம் என்பது உலகம் அறிந்த உண்மை. சிக்கலுக்கு 3 கி.மீ. தொலைவில் உள்ள மஞ்சக்கொல்லை குமரன்கோவில் தலத்திலும், இதே அதிசயம் நிகழ்வது பலரும் அறிந்திராத செய்தியாகும்.
தலவரலாறு :
தேவலோகத்தில் ஒரு சமயம் பேரழகியான திலோத்தமையின் நடன நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. அவளின் நடனத்தைக் கண்டு ரசித்த பிரம்மனுக்கு, அவள் மீது மோகம் ஏற்பட்டது. அதை அவளிடம் கூறினார். அதற்குத் திலோத்தமை `படைப்புத் தொழிலைச் செய்யும் தாங்கள் எனக்கு தந்தை போன்றவர். நான் உங்கள் மகள் போன்றவள்' என்று கூறி, பிரம்மனின் விருப்பத்தை மறுத்தாள். இதனால் கோபம் கொண்ட பிரம்மன், ‘நீ பூமியில் தாசியாக பிறப்பாய்’ என சாபமிட்டார். தன் மீது தவறேதும் இல்லாத நிலையில் சாபமிட்ட பிரம்மன் மீது கோபங்கொண்டாள், திலோத்தமை.
‘உன்னுடைய தவறை சற்றும் உணராமல் சாபமிட்ட உனக்கு, பூமியில் தனியே ஆலயம் இல்லாது போகட்டும்’ என்று திலோத்தமையும் பதில் சாபமிட்டாள். இருவரின் சாபமும் பலித்தது.

இந்த சாப விமோசன தலத்தில் இருக்கும் சிவகுமாரனும், தனிச்சிறப்பு பெற்றவராகத் திகழ்கின்றார். சூரசம்ஹாரத்தின் போது சிக்கல் சிங்காரவேலனுக்கு வியர்வைத் துளிகள் தோன்றுவது போல, இந்த ஆலயத்தில் உள்ள முருகப்பெருமானுக்கும் வியர்வைத் துளிகள் தோன்றுவதை பார்க்கலாம். இந்த வியர்வைத் துளிகள் குழந்தைப்பேறு வேண்டுவோருக்கும், கர்ப்பிணி களுக்கும் அருமருந்தாகப் போற்றப்படுகிறது.
சிவபெருமானின் திருமுகத்தில் தோன்றிய தீப்பொறிகளின் ஒன்றிணைப்பே முருகப்பெருமானின் அவதாரம் என்கின்றது புராணங்கள். இத்திருவிளையாடலின் போது பார்வதி அச்சமடைந்து ஓடியதால், அன்னையின் சிலம்பில் இருந்து நவமணிகள் சிதறி நவசக்திகளாக உருவம் கொண்டன. அந்த நவசக்தியே, வீரபாகு, வீரகேசரி, வீரமகேந்திரன், வீரமகேசுவரர், வீரபுரந்தரர், வீரராக்கதர், வீரமார்த்தாண்டர், வீராந்தகர், வீரதீரர் என நவ வீரர்களாகத் தோன்றின. இவர்களே சூரசம்ஹாரத்தில் முருகப் பெருமானுக்கு துணை நின்றவர்கள் ஆவர்.
இந்த ஐதீகத்தையே இத்தலத்தில் பின்பற்று கிறார்கள். இங்குள்ள விநாயகர் கோவிலில் இருந்து புறப்பட்டு முருகன் கோவிலுக்கு, ‘சஷ்டி சூரசம்காரம்’ என்ற விருத்திப் பாடலைப் பாடியபடி காலை, மாலை என இரு வேளைகளிலும் வருவது வழக்கம். சூரசம்ஹாரத்தன்று ஊர்ப் பெரியவர் ஒருவர், வேல் வகுப்பு பாடியபிறகு, வேல் வாங்குவார். அப்போது உற்சவரான விஜய வேலாயுதசுவாமிக்கு முகத்தில் வியர்வைத் துளிகள் தோன்றுவதைக் காணலாம்.
ஆலய அமைப்பு :
கிழக்கு நோக்கிய ஆலயத்திற்கு ராஜகோபுரம் இல்லை. ஆலயத்தில் மயில்மேடை, பலிபீடம், நடராஜர், சிவகாமி, மாணிக்கவாசகர், திரு முறைக்கோவில், சுதை துவாரபாலகர்கள், கிழக்கு முகமாய் மூலவர் ஞானலிங்கேஸ்வரர், எதிரே நந்திதேவர், தெற்கு முகமாய் அன்னை ஞானவல்லி, வள்ளி-தெய்வானையுடன் வெற்றி வேலாயுத சுவாமி, தட்சிணாமூர்த்தி, சமயக்குரவர், சந்தானக்குரவர் என ஒருங்கே அமைந்துள்ளனர். மூலகணபதி, பொய்யாமொழி விநாயகர், ஜமதக்கினி முனிவர், மகாலட்சுமி, துர்க்கை, சண்டிகேஸ்வரர், சுமத்திரசண்டர், நவக்கிரகங்கள், சூரியன், சந்திரன் உள்ளிட்ட சிலா வடிவங்களும் ஒருங்கே அமைந்துள்ளன.
இவ்வாலயத்தில் உற்சவராக விஜய வேலாயுத சுவாமி வள்ளி-தெய்வானையோடு காட்சி தருகிறார். இவரே வீதியுலா வந்து சூரசம்ஹாரத்திலும் காட்சிதருவார். வியர்வைத் துளிகள் இவரிடம் இருந்தே தோன்றும். இதுதவிர, நடராஜர், சிவகாமி, மாணிக்கவாசகர், தியாகராஜர், கமலாம்பாள், சோமாஸ்கந்தர் என உற்சவத் திருமேனிகளும் எழிலாக அமைந்துள்ளன. இத்தலத்தின் தலமரமாக வில்வ மரமும், தலத் தீர்த்தமாக ஞானத் தீர்த்தமும் உள்ளன.
இந்த ஆலயம் தினமும் காலை 9 மணி முதல் பகல் 12.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
அமைவிடம் :
நாகப்பட்டினம் நகரில் இருந்து, சிக்கல் செல்லும் வழியில் 2 கி.மீ. தொலைவில், மஞ்சக்கொல்லை திருத்தலம் அமைந்துள்ளது. ஆட்டோ, பஸ் வசதிகள் உள்ளன. ஞானலிங்கேஸ்வரர் மூலவராக இருந்தாலும், இந்த ஆலயத்தை குமரன்கோவில் என்றே அழைக்கின்றனர்.
சூரசம்ஹாரத்திற்காக அன்னை பார்வதியிடம் முருகப்பெருமான் வேல் வாங்கும் நிகழ்வு சிக்கல் சிங்காரவேலர் ஆலயத்தில் சிறப்பாக நடைபெறும். அந்த நிகழ்வின் போது, முருகப் பெருமானின் முகத்தில் வியர்வைத் துளிகள் தோன்றுவது, சிக்கல் சிங்காரவேலர் ஆலயத்தில் ஆண்டு தோறும் நடைபெறும் ஆச்சரியம் என்பது உலகம் அறிந்த உண்மை. சிக்கலுக்கு 3 கி.மீ. தொலைவில் உள்ள மஞ்சக்கொல்லை குமரன்கோவில் தலத்திலும், இதே அதிசயம் நிகழ்வது பலரும் அறிந்திராத செய்தியாகும்.
தலவரலாறு :
தேவலோகத்தில் ஒரு சமயம் பேரழகியான திலோத்தமையின் நடன நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. அவளின் நடனத்தைக் கண்டு ரசித்த பிரம்மனுக்கு, அவள் மீது மோகம் ஏற்பட்டது. அதை அவளிடம் கூறினார். அதற்குத் திலோத்தமை `படைப்புத் தொழிலைச் செய்யும் தாங்கள் எனக்கு தந்தை போன்றவர். நான் உங்கள் மகள் போன்றவள்' என்று கூறி, பிரம்மனின் விருப்பத்தை மறுத்தாள். இதனால் கோபம் கொண்ட பிரம்மன், ‘நீ பூமியில் தாசியாக பிறப்பாய்’ என சாபமிட்டார். தன் மீது தவறேதும் இல்லாத நிலையில் சாபமிட்ட பிரம்மன் மீது கோபங்கொண்டாள், திலோத்தமை.
‘உன்னுடைய தவறை சற்றும் உணராமல் சாபமிட்ட உனக்கு, பூமியில் தனியே ஆலயம் இல்லாது போகட்டும்’ என்று திலோத்தமையும் பதில் சாபமிட்டாள். இருவரின் சாபமும் பலித்தது.
திலோத்தமை காஞ்சீபுரத்தில் தாசி குலத்தில் தோன்றினாள். பருவமடைந்த அவள், விதிப்பயனால் அந்தணன் ஒருவனின் சாபத்துக்கு ஆளாகி தன் அழகை இழந்தாள். சாப விமோசனம் வேண்டி பல்வேறு தலங்களுக்குச் சென்று வழிபட்டாள். நிறைவாக ‘குங்குமாரண்யம்’ என்று அழைக்கப்படும் மஞ்சக்கொல்லை தலம் வந்தாள்.
அங்கே அவள் வந்த நாள், கார்த்திகை மாதம், ஞாயிற்றுக்கிழமை. பின்னர் அங்குள்ள ஞானத் தீர்த்தத்தில் நீராடி, ஞானலிங்கப் பெருமானைத் தரிசித்ததும் அவளின் சாபம் நீங்கியது. தன் இயல்பான அழகிய உருவம் பெற்றாள். அப்போது வானில் புஷ்பக விமானம் தோன்றியது. தேவலோகம் அவளை இருகரம் கொண்டு வரவேற்றது. திலோத்தமை தன் சாபம் நீங்கி இயல்பான நிலையில் வாழத் தொடங்கினாள். ஆனால் பிரம்மனுக்கு இவள் கூறிய சாபம் நிலைத்துவிட்டது.

வள்ளி-தெய்வானை சமேத முருகன்
இந்த சாப விமோசன தலத்தில் இருக்கும் சிவகுமாரனும், தனிச்சிறப்பு பெற்றவராகத் திகழ்கின்றார். சூரசம்ஹாரத்தின் போது சிக்கல் சிங்காரவேலனுக்கு வியர்வைத் துளிகள் தோன்றுவது போல, இந்த ஆலயத்தில் உள்ள முருகப்பெருமானுக்கும் வியர்வைத் துளிகள் தோன்றுவதை பார்க்கலாம். இந்த வியர்வைத் துளிகள் குழந்தைப்பேறு வேண்டுவோருக்கும், கர்ப்பிணி களுக்கும் அருமருந்தாகப் போற்றப்படுகிறது.
சிவபெருமானின் திருமுகத்தில் தோன்றிய தீப்பொறிகளின் ஒன்றிணைப்பே முருகப்பெருமானின் அவதாரம் என்கின்றது புராணங்கள். இத்திருவிளையாடலின் போது பார்வதி அச்சமடைந்து ஓடியதால், அன்னையின் சிலம்பில் இருந்து நவமணிகள் சிதறி நவசக்திகளாக உருவம் கொண்டன. அந்த நவசக்தியே, வீரபாகு, வீரகேசரி, வீரமகேந்திரன், வீரமகேசுவரர், வீரபுரந்தரர், வீரராக்கதர், வீரமார்த்தாண்டர், வீராந்தகர், வீரதீரர் என நவ வீரர்களாகத் தோன்றின. இவர்களே சூரசம்ஹாரத்தில் முருகப் பெருமானுக்கு துணை நின்றவர்கள் ஆவர்.
இந்த ஐதீகத்தையே இத்தலத்தில் பின்பற்று கிறார்கள். இங்குள்ள விநாயகர் கோவிலில் இருந்து புறப்பட்டு முருகன் கோவிலுக்கு, ‘சஷ்டி சூரசம்காரம்’ என்ற விருத்திப் பாடலைப் பாடியபடி காலை, மாலை என இரு வேளைகளிலும் வருவது வழக்கம். சூரசம்ஹாரத்தன்று ஊர்ப் பெரியவர் ஒருவர், வேல் வகுப்பு பாடியபிறகு, வேல் வாங்குவார். அப்போது உற்சவரான விஜய வேலாயுதசுவாமிக்கு முகத்தில் வியர்வைத் துளிகள் தோன்றுவதைக் காணலாம்.
ஆலய அமைப்பு :
கிழக்கு நோக்கிய ஆலயத்திற்கு ராஜகோபுரம் இல்லை. ஆலயத்தில் மயில்மேடை, பலிபீடம், நடராஜர், சிவகாமி, மாணிக்கவாசகர், திரு முறைக்கோவில், சுதை துவாரபாலகர்கள், கிழக்கு முகமாய் மூலவர் ஞானலிங்கேஸ்வரர், எதிரே நந்திதேவர், தெற்கு முகமாய் அன்னை ஞானவல்லி, வள்ளி-தெய்வானையுடன் வெற்றி வேலாயுத சுவாமி, தட்சிணாமூர்த்தி, சமயக்குரவர், சந்தானக்குரவர் என ஒருங்கே அமைந்துள்ளனர். மூலகணபதி, பொய்யாமொழி விநாயகர், ஜமதக்கினி முனிவர், மகாலட்சுமி, துர்க்கை, சண்டிகேஸ்வரர், சுமத்திரசண்டர், நவக்கிரகங்கள், சூரியன், சந்திரன் உள்ளிட்ட சிலா வடிவங்களும் ஒருங்கே அமைந்துள்ளன.
இவ்வாலயத்தில் உற்சவராக விஜய வேலாயுத சுவாமி வள்ளி-தெய்வானையோடு காட்சி தருகிறார். இவரே வீதியுலா வந்து சூரசம்ஹாரத்திலும் காட்சிதருவார். வியர்வைத் துளிகள் இவரிடம் இருந்தே தோன்றும். இதுதவிர, நடராஜர், சிவகாமி, மாணிக்கவாசகர், தியாகராஜர், கமலாம்பாள், சோமாஸ்கந்தர் என உற்சவத் திருமேனிகளும் எழிலாக அமைந்துள்ளன. இத்தலத்தின் தலமரமாக வில்வ மரமும், தலத் தீர்த்தமாக ஞானத் தீர்த்தமும் உள்ளன.
இந்த ஆலயம் தினமும் காலை 9 மணி முதல் பகல் 12.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
அமைவிடம் :
நாகப்பட்டினம் நகரில் இருந்து, சிக்கல் செல்லும் வழியில் 2 கி.மீ. தொலைவில், மஞ்சக்கொல்லை திருத்தலம் அமைந்துள்ளது. ஆட்டோ, பஸ் வசதிகள் உள்ளன. ஞானலிங்கேஸ்வரர் மூலவராக இருந்தாலும், இந்த ஆலயத்தை குமரன்கோவில் என்றே அழைக்கின்றனர்.
திருச்செந்தூருக்கு தென்மேற்கே சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில், உடன்குடியில் இருந்து ஸ்ரீவைகுண்டம் செல்லும் சாலையில் செட்டியாபத்து என்ற ஊரில் உள்ளது ஐந்துவீட்டு சுவாமி திருக்கோவில்.
திருச்செந்தூருக்கு தென்மேற்கே சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில், உடன்குடியில் இருந்து ஸ்ரீவைகுண்டம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது செட்டியாபத்து என்ற ஊர். இங்கு ஐந்துவீட்டு சுவாமி திருக்கோவில் 4 ஏக்கர் பரப்பளவில் இயற்கை எழிலுற அமைய பெற்றுள்ளது. கிழக்குபுறம் ஒரு வாசலும், மேற்குபுறம் ஒரு வாசலும், வடக்கு புறம் ஒரு வாசலுமாக மூன்று வாசல்களைக் கொண்டிருக்கிறது இந்த ஆலயம்.
வடக்கு புற வாசல் வழியாக உள்ளே நுழைந்ததும் முதலில் பெரியசாமி சன்னிதியும், அடுத்து வயனப்பெருமாள் மற்றும் அனந்தம்மாள் வீற்றிருக்கும் சன்னிதியும் காணப்படுகிறது. அடுத்ததாக ஆத்தி சுவாமி சன்னிதியும், தொடர்ந்து திருப்புளி ஆழ்வார் சன்னிதியும், அதன் அருகில் பெரியபிராட்டி சன்னிதியும் அமைக்கப்பட்டு உள்ளன. ஒரே கோட்டை சுவருக்குள் 6 தெய்வங்களும், 5 சன்னிதிகளும் அமைந்து உள்ளதால், இந்த ஆலயமானது ‘ஐந்து வீட்டு சுவாமிகள் திருக் கோவில்’ என்று அழைக்கப்படுகிறது. பெரிய சுவாமி சன்னிதியின் எதிர்புறம் ஆஞ்சநேயர் சன்னிதியும், ஆத்தி சுவாமி அருகே குதிரை சுவாமி சன்னிதியும் அமைந்துள்ளன.
பெரியசாமி சன்னிதி தவிர மற்ற சன்னிதிகளில் மூல வருக்கு விக்கிரகங்கள் கிடையாது. பெரியசாமிக்கு மட்டுமே மூலவர் விக்கிரகம் உள்ளது. இந்தக் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மூலஸ்தானம் வரை சென்று சுவாமியை தொட்டு தரிசனம் செய்யலாம். ஜாதி, மத வேறுபாடின்றி எல்லோரும் மூலஸ்தானம் வரை சென்று வணங்கும் சிறப்பு, இந்தக் கோவிலுக்கு மட்டுமே உள்ளது என்று சொல்லப்படுகிறது.
ஐந்து வீட்டு சுவாமி கோவிலில் தினசரி 3 கால பூஜைகள் நடைபெறுகின்றன. காலை 8 மணிக்கு காலசாந்தி பூஜையும், மதியம் 12 மணிக்கு உச்சிகால பூஜையும், இரவு 7 மணிக்கு அர்த்தசாம பூஜையும் நடைபெறுகின்றன. மேலும் மாலை நேரத்தில், ‘மாலை சாத்துதல்' பூஜையும் செய்யப்படுகிறது. இடைப்பட்ட நேரங்களில் பணிவிடை (படையல் போடுபவர்கள்) செய்கிறவர்களுக்கு கோவில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் செய்யப்படுகிறது. இதுதவிர தினசரி அதிகாலை 4 மணிக்கு சங்கநாதமும், சேகண்டி ஓசையும் முழங்கப் படுகிறது. பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேறியதும் தங்களால் முடிந்த பணிவிடைகளை (ஆடு, கோழி, பன்றி போன்றவற்றை பலியிட்டு), படையல் போடுவார்கள். முன்னதாக ஐந்து வீட்டு சுவாமிகளுக்கு இந்த படையல்கள் போடப்படும். அதன்பிறகு பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படும்.
300 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலில், விரதம் இருந்து தரிசனம் செய்பவர்களுக்கு தீராத நோய்கள் தீரும் என்பது ஐதீகம். குழந்தைப்பேறு மற்றும் சுகப்பிரசவம் வேண்டுவோர், பெரியபிராட்டி அம்மனுக்கு வளையல் காணிக்கை செலுத்தினால் வேண்டியது நிறைவேறும். மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள், ஆத்தி சுவாமியை வழிபட்டு ஆத்தி மர இலையை அரைத்து நீரில் கலந்து குடித்து வந்தால் அவர்கள் குணம் பெறுவார்கள்.
கால் உபாதைகளால் பாதிக்கப்பட்டவர்கள், ஆத்தி சுவாமி கோவிலுக்கு நேர்த்திக்கடனாக செருப்பு மற்றும் கதாயுதம் காணிக்கை செலுத்துகின்றனர். இவ்வாறு பக்தர்கள் செலுத்தும் செருப்புகளை அணிந்ததின் அடையாளமாக, கோவிலில் உள்ள செருப்புகளில் ஆத்தி சுவாமியின் கால் விரல்கள் பதிந்த தடங்களை இன்றும் காணலாம். பெரியசாமி சன்னிதியில் கட்டில், தலையணை வைக்கப்பட்டு இருக்கும். இதில் இரவு நேரத்தில் பெரியசாமி படுத்து ஓய்வு எடுப்பதாக நம்பப்படுகிறது. காலையில் நாம் இதனை பார்த்தால் இந்த படுக்கை விரிப்புகள் கலைந்து இருப்பதை காணலாம்.
ஒவ்வொரு ஆண்டும் இந்தக் கோவிலில் சித்திரை திருவிழாவும், தைத்திருவிழாவும் வெகு விமரிசையாக கொண்டாடப்படு கிறது. இதேபோல் அமாவாசை, பவுர்ணமி, திருக்கார்த்திகை ஆகிய விழாக்களும் வெகு விமரிசையாக நடத்தப்படுகின்றன. சித்திரை திருவிழாவின் இறுதி நாள் அன்று ஆலயத்தில் வழங்கப்படும் அன்னமுத்திரி என்ற பிரசாதம் மிகவும் மகிமை பெற்றதாக கருதப்படுகிறது.
திருமணிக்கட்டி மகிமைகள் :
ஐந்து வீட்டு சுவாமி பக்தர்கள் நெற்றியில் திருமணி என்னும் வெள்ளைப்பொட்டு இட்டுக்கொள்வார்கள். இந்த திருமணி என்பது நாமக்கட்டி போன்று வெள்ளை நிறத்தில் தோற்றமளிக்கும் திருமண்ணாகும். இதை தண்ணீரில் குழைத்து பொட்டு இட்டுக்கொள்வர். இந்த கோவிலில் பிரசாதமாக திருமணிக்கட்டியே வழங்கப்படுகிறது. கோவிலில் முடி காணிக்கை செலுத்தியவர்கள் கூட, தலையில் சந்தனத்திற்கு பதிலாக திருமணிக்கட்டியை குழைத்து தான் பூசிக்கொள்கின்றனர். தீராத நோயால் அவதிப்படுபவர்கள் இந்த திருமணியை தண்ணீரில் குழைத்து சாப்பிடுவார்கள். இதன் மூலம் நோய் குணமாகுவதாக பக்தர்கள் இன்றளவும் நம்பி வருகிறார்கள்.
இந்த கோவிலுக்கு வந்து வழிபடும் பக்தர்கள் பலரும் தங்கள் குழந்தைகளுக்கு திருமணி என்று பெயர் சூட்டியிருப்பதில் இருந்தே திருமணிக்கட்டி பிரசாதத்தின் மகிமையை நாம் உணர முடியும்.
பூஜை கால அட்டவணை
காலசந்தி நடைதிறப்பு - காலை 7 மணி.
பூஜை ஆரம்பம் - காலை 8 மணி.
உச்சி காலை நடைதிறப்பு - பகல் 11 மணி.
பூஜை ஆரம்பம் - பகல் 12 மணி.
இராக்காலம் நடைதிறப்பு - மாலை 5.30 மணி.
பூஜை ஆரம்பம் - இரவு 7 மணி.
வடக்கு புற வாசல் வழியாக உள்ளே நுழைந்ததும் முதலில் பெரியசாமி சன்னிதியும், அடுத்து வயனப்பெருமாள் மற்றும் அனந்தம்மாள் வீற்றிருக்கும் சன்னிதியும் காணப்படுகிறது. அடுத்ததாக ஆத்தி சுவாமி சன்னிதியும், தொடர்ந்து திருப்புளி ஆழ்வார் சன்னிதியும், அதன் அருகில் பெரியபிராட்டி சன்னிதியும் அமைக்கப்பட்டு உள்ளன. ஒரே கோட்டை சுவருக்குள் 6 தெய்வங்களும், 5 சன்னிதிகளும் அமைந்து உள்ளதால், இந்த ஆலயமானது ‘ஐந்து வீட்டு சுவாமிகள் திருக் கோவில்’ என்று அழைக்கப்படுகிறது. பெரிய சுவாமி சன்னிதியின் எதிர்புறம் ஆஞ்சநேயர் சன்னிதியும், ஆத்தி சுவாமி அருகே குதிரை சுவாமி சன்னிதியும் அமைந்துள்ளன.
பெரியசாமி சன்னிதி தவிர மற்ற சன்னிதிகளில் மூல வருக்கு விக்கிரகங்கள் கிடையாது. பெரியசாமிக்கு மட்டுமே மூலவர் விக்கிரகம் உள்ளது. இந்தக் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மூலஸ்தானம் வரை சென்று சுவாமியை தொட்டு தரிசனம் செய்யலாம். ஜாதி, மத வேறுபாடின்றி எல்லோரும் மூலஸ்தானம் வரை சென்று வணங்கும் சிறப்பு, இந்தக் கோவிலுக்கு மட்டுமே உள்ளது என்று சொல்லப்படுகிறது.
ஐந்து வீட்டு சுவாமி கோவிலில் தினசரி 3 கால பூஜைகள் நடைபெறுகின்றன. காலை 8 மணிக்கு காலசாந்தி பூஜையும், மதியம் 12 மணிக்கு உச்சிகால பூஜையும், இரவு 7 மணிக்கு அர்த்தசாம பூஜையும் நடைபெறுகின்றன. மேலும் மாலை நேரத்தில், ‘மாலை சாத்துதல்' பூஜையும் செய்யப்படுகிறது. இடைப்பட்ட நேரங்களில் பணிவிடை (படையல் போடுபவர்கள்) செய்கிறவர்களுக்கு கோவில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் செய்யப்படுகிறது. இதுதவிர தினசரி அதிகாலை 4 மணிக்கு சங்கநாதமும், சேகண்டி ஓசையும் முழங்கப் படுகிறது. பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேறியதும் தங்களால் முடிந்த பணிவிடைகளை (ஆடு, கோழி, பன்றி போன்றவற்றை பலியிட்டு), படையல் போடுவார்கள். முன்னதாக ஐந்து வீட்டு சுவாமிகளுக்கு இந்த படையல்கள் போடப்படும். அதன்பிறகு பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படும்.
300 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலில், விரதம் இருந்து தரிசனம் செய்பவர்களுக்கு தீராத நோய்கள் தீரும் என்பது ஐதீகம். குழந்தைப்பேறு மற்றும் சுகப்பிரசவம் வேண்டுவோர், பெரியபிராட்டி அம்மனுக்கு வளையல் காணிக்கை செலுத்தினால் வேண்டியது நிறைவேறும். மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள், ஆத்தி சுவாமியை வழிபட்டு ஆத்தி மர இலையை அரைத்து நீரில் கலந்து குடித்து வந்தால் அவர்கள் குணம் பெறுவார்கள்.
கால் உபாதைகளால் பாதிக்கப்பட்டவர்கள், ஆத்தி சுவாமி கோவிலுக்கு நேர்த்திக்கடனாக செருப்பு மற்றும் கதாயுதம் காணிக்கை செலுத்துகின்றனர். இவ்வாறு பக்தர்கள் செலுத்தும் செருப்புகளை அணிந்ததின் அடையாளமாக, கோவிலில் உள்ள செருப்புகளில் ஆத்தி சுவாமியின் கால் விரல்கள் பதிந்த தடங்களை இன்றும் காணலாம். பெரியசாமி சன்னிதியில் கட்டில், தலையணை வைக்கப்பட்டு இருக்கும். இதில் இரவு நேரத்தில் பெரியசாமி படுத்து ஓய்வு எடுப்பதாக நம்பப்படுகிறது. காலையில் நாம் இதனை பார்த்தால் இந்த படுக்கை விரிப்புகள் கலைந்து இருப்பதை காணலாம்.
ஒவ்வொரு ஆண்டும் இந்தக் கோவிலில் சித்திரை திருவிழாவும், தைத்திருவிழாவும் வெகு விமரிசையாக கொண்டாடப்படு கிறது. இதேபோல் அமாவாசை, பவுர்ணமி, திருக்கார்த்திகை ஆகிய விழாக்களும் வெகு விமரிசையாக நடத்தப்படுகின்றன. சித்திரை திருவிழாவின் இறுதி நாள் அன்று ஆலயத்தில் வழங்கப்படும் அன்னமுத்திரி என்ற பிரசாதம் மிகவும் மகிமை பெற்றதாக கருதப்படுகிறது.
திருமணிக்கட்டி மகிமைகள் :
ஐந்து வீட்டு சுவாமி பக்தர்கள் நெற்றியில் திருமணி என்னும் வெள்ளைப்பொட்டு இட்டுக்கொள்வார்கள். இந்த திருமணி என்பது நாமக்கட்டி போன்று வெள்ளை நிறத்தில் தோற்றமளிக்கும் திருமண்ணாகும். இதை தண்ணீரில் குழைத்து பொட்டு இட்டுக்கொள்வர். இந்த கோவிலில் பிரசாதமாக திருமணிக்கட்டியே வழங்கப்படுகிறது. கோவிலில் முடி காணிக்கை செலுத்தியவர்கள் கூட, தலையில் சந்தனத்திற்கு பதிலாக திருமணிக்கட்டியை குழைத்து தான் பூசிக்கொள்கின்றனர். தீராத நோயால் அவதிப்படுபவர்கள் இந்த திருமணியை தண்ணீரில் குழைத்து சாப்பிடுவார்கள். இதன் மூலம் நோய் குணமாகுவதாக பக்தர்கள் இன்றளவும் நம்பி வருகிறார்கள்.
இந்த கோவிலுக்கு வந்து வழிபடும் பக்தர்கள் பலரும் தங்கள் குழந்தைகளுக்கு திருமணி என்று பெயர் சூட்டியிருப்பதில் இருந்தே திருமணிக்கட்டி பிரசாதத்தின் மகிமையை நாம் உணர முடியும்.
பூஜை கால அட்டவணை
காலசந்தி நடைதிறப்பு - காலை 7 மணி.
பூஜை ஆரம்பம் - காலை 8 மணி.
உச்சி காலை நடைதிறப்பு - பகல் 11 மணி.
பூஜை ஆரம்பம் - பகல் 12 மணி.
இராக்காலம் நடைதிறப்பு - மாலை 5.30 மணி.
பூஜை ஆரம்பம் - இரவு 7 மணி.
உத்திரகாண்ட் மாநிலத்தில் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ளது ஜசோலி கிராமம். இங்கு தான் ஹரியாழி தேவி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
செல்வத்துக்கு அதிபதி மகாலட்சுமி. வாழ்க்கைக்கு தேவையான எல்லாவிதமான வசதிகளையும், அதாவது வீட்டுமனை, மாடு, நிலம், செல்வம் போன்ற அனைத்து செல்வங்களையும் அளிப்பவள். மகா விஷ்ணுவின் பல பெயர்களில் ‘ஹரி’ என்பதும் ஒன்றாகும். அவரின் அம்சமாக அவதரித்தவளே ‘ஹரியாழி தேவி.’ இந்த அன்னைக்கு இமயமலை உச்சியில் ஜசோலி என்ற இடத்தில் கோவில் உள்ளது. இங்கு வீற்றிருக்கும் ஹரியாழி தேவி தன்னை நாடி வரும் பக்தர்களின், குறைகளை நீக்கி, அனைத்து செல்வங்களையும் வாரி வழங்கி வருகிறாள்.
உத்திரகாண்ட் மாநிலத்தில் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ளது ஜசோலி கிராமம். இங்கு தான் ஹரியாழி தேவி கோவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 1,371 மீட்டர் உயரத்தில் இமயமலை உச்சியில் இந்த ஆலயம் இருக்கிறது. சக்தி பீடத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் அன்னையர் களுக்கு ஈடாக இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் ஹரியாழி அன்னையும் போற்றப்படுகிறாள். இந்த தேவியை தரிசிப்பதன் மூலம் இவ்வுலகில் வாழும்போதே முக்தி கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
தல வரலாறு :
மதுராவின் அரசனான கம்சனின் உயிருக்கு, அவனது தங்கை தேவகி வயிற்றில் பிறக்கும் எட்டாவது குழந்தையால் ஆபத்து ஏற்படும் என்று கூறப்பட்டது. இதனால் அச்சமடைந்த கம்சன், தேவகியையும் அவளது கணவன் வசுதேவரையும் சிறையில் அடைத்தான். தேவகிக்கு பிறந்த ஒவ்வொரு குழந்தையையும் இரக்கம் இன்றி வெட்டிக் கொலை செய்தான். தேவகிக்கு ஏழாவது பெண் குழந்தை பிறந்திருப்பதை அறிந்த கம்சன், சிறைச் சாலைக்குச் சென்றான்.
அந்தக் குழந்தையைக் கொல்வதற்காக தரையில் தூக்கி வீசினான். தரையில் விழுந்த அந்தக் குழந்தையின் உடல் சிதறி விண்ணில் பறந்தது. உடலின் பல பாகங்களும், பல்வேறு இடங்களில் விழுந்தது. அதில் கை விழுந்த இடம் தான் ஜசோலி கிராமம் ஆகும். இந்த இடத்தில் பின்னர் கோவில் ஒன்று எழுப்பட்டது. இந்த கோவில் உயரமான மலையாலும், அடர்த்தியான காடுகளாலும் சூழப்பட்டது. இங்குள்ள அம்மன் மஞ்சள் நிற உடையை அணிந்து, ஒரு சிங்கத்தின் மேல் உட்கார்ந்து காட்சிக்கொடுக்கிறாள். இந்த கோவிலில் சத்ரபாலு மற்றும் ஹீத் தேவி ஆகியோரின் சிலைகளும் உள்ளன.

கோவில் அமைப்பு :
கோவில் செங்கல் மற்றும் சுண்ணாம்பினால் கட்டப்பட்ட அழகான கட்டமைப்பு ஆகும். கோவிலின் அடிப்படை அலங்காரமானது, பச்சை மற்றும் மஞ்சள் வண்ணங்களைக் கொண்டு செய்யப்படுகிறது. இந்த ஆலயம் புனித தலமாக கருதப்படுகிறது. 1371 மீட்டர் உயரத்தில் உள்ளதாலும், காலநிலைக்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துவதாலும், ஆலயம் பல முறை புதுப்பிக்கப்பட்டு வந்துள்ளது. ஹரியாழி தேவி கோவில், கட்டிடக்கலையை விட ஆன்மிகத்திற்கு முக்கியத்துவம் பெற்றதாக விளங்குகிறது.
கோவில் முன் இரண்டு சிங்கத்தின் சிலைகள் உள்ளன. கோவிலின் உள்ளே கண் கவரும் வண்ணம் அம்பாள் சிங்கத்தின் மேல் அமர்ந்து காட்சிக் கொடுக்கிறாள். கோவில் அர்ச்சகர் வருபவர்களுக்கு அர்ச்சனை செய்து பக்தர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு சொல்கிறார்.
ஜென்மாஷ்டமி, நவராத்திரி மற்றும் தீபாவளி பண்டிகைகள் இந்த ஆலயத்தில் மிக சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்தக் கோவிலுக்கு வந்து செல்கின்றனர். இந்த புனித நாட்களில், பக்தர்கள் ஹரியாழி சிலையை எடுத்துக்கொண்டு 7 கிலோமீட்டர் தொலைவில் ஹரியியாகி காந்தாவை அடைகின்றனர். இது மலையுச்சியில் இருக்கிறது. இங்கு சக்திவாய்ந்த காளி கோவில் உள்ளது. விரதமிருந்து இக்கோவிலுக்கு செல்கின்றனர்.
எப்படி செல்வது? :
விமானத்தில் டெஹ்ராடூன் சென்று அங்கு இருந்து காரிலும், ரெயில் மூலமும் ரிஷிகேஷ் மற்றும் ஹரித்வார் செல்ல வேண்டும். அங்கிருந்து சாலை வழியாக ருத்ரபிரயாக் என்ற பகுதிக்குச் சென்று, அந்த இடத்தில் இருந்து ஹரியாழி தேவி கோவிலை அடையலாம்.
உத்திரகாண்ட் மாநிலத்தில் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ளது ஜசோலி கிராமம். இங்கு தான் ஹரியாழி தேவி கோவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 1,371 மீட்டர் உயரத்தில் இமயமலை உச்சியில் இந்த ஆலயம் இருக்கிறது. சக்தி பீடத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் அன்னையர் களுக்கு ஈடாக இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் ஹரியாழி அன்னையும் போற்றப்படுகிறாள். இந்த தேவியை தரிசிப்பதன் மூலம் இவ்வுலகில் வாழும்போதே முக்தி கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
தல வரலாறு :
மதுராவின் அரசனான கம்சனின் உயிருக்கு, அவனது தங்கை தேவகி வயிற்றில் பிறக்கும் எட்டாவது குழந்தையால் ஆபத்து ஏற்படும் என்று கூறப்பட்டது. இதனால் அச்சமடைந்த கம்சன், தேவகியையும் அவளது கணவன் வசுதேவரையும் சிறையில் அடைத்தான். தேவகிக்கு பிறந்த ஒவ்வொரு குழந்தையையும் இரக்கம் இன்றி வெட்டிக் கொலை செய்தான். தேவகிக்கு ஏழாவது பெண் குழந்தை பிறந்திருப்பதை அறிந்த கம்சன், சிறைச் சாலைக்குச் சென்றான்.
அந்தக் குழந்தையைக் கொல்வதற்காக தரையில் தூக்கி வீசினான். தரையில் விழுந்த அந்தக் குழந்தையின் உடல் சிதறி விண்ணில் பறந்தது. உடலின் பல பாகங்களும், பல்வேறு இடங்களில் விழுந்தது. அதில் கை விழுந்த இடம் தான் ஜசோலி கிராமம் ஆகும். இந்த இடத்தில் பின்னர் கோவில் ஒன்று எழுப்பட்டது. இந்த கோவில் உயரமான மலையாலும், அடர்த்தியான காடுகளாலும் சூழப்பட்டது. இங்குள்ள அம்மன் மஞ்சள் நிற உடையை அணிந்து, ஒரு சிங்கத்தின் மேல் உட்கார்ந்து காட்சிக்கொடுக்கிறாள். இந்த கோவிலில் சத்ரபாலு மற்றும் ஹீத் தேவி ஆகியோரின் சிலைகளும் உள்ளன.

ஹரியாழி தேவி
கோவில் அமைப்பு :
கோவில் செங்கல் மற்றும் சுண்ணாம்பினால் கட்டப்பட்ட அழகான கட்டமைப்பு ஆகும். கோவிலின் அடிப்படை அலங்காரமானது, பச்சை மற்றும் மஞ்சள் வண்ணங்களைக் கொண்டு செய்யப்படுகிறது. இந்த ஆலயம் புனித தலமாக கருதப்படுகிறது. 1371 மீட்டர் உயரத்தில் உள்ளதாலும், காலநிலைக்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துவதாலும், ஆலயம் பல முறை புதுப்பிக்கப்பட்டு வந்துள்ளது. ஹரியாழி தேவி கோவில், கட்டிடக்கலையை விட ஆன்மிகத்திற்கு முக்கியத்துவம் பெற்றதாக விளங்குகிறது.
கோவில் முன் இரண்டு சிங்கத்தின் சிலைகள் உள்ளன. கோவிலின் உள்ளே கண் கவரும் வண்ணம் அம்பாள் சிங்கத்தின் மேல் அமர்ந்து காட்சிக் கொடுக்கிறாள். கோவில் அர்ச்சகர் வருபவர்களுக்கு அர்ச்சனை செய்து பக்தர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு சொல்கிறார்.
ஜென்மாஷ்டமி, நவராத்திரி மற்றும் தீபாவளி பண்டிகைகள் இந்த ஆலயத்தில் மிக சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்தக் கோவிலுக்கு வந்து செல்கின்றனர். இந்த புனித நாட்களில், பக்தர்கள் ஹரியாழி சிலையை எடுத்துக்கொண்டு 7 கிலோமீட்டர் தொலைவில் ஹரியியாகி காந்தாவை அடைகின்றனர். இது மலையுச்சியில் இருக்கிறது. இங்கு சக்திவாய்ந்த காளி கோவில் உள்ளது. விரதமிருந்து இக்கோவிலுக்கு செல்கின்றனர்.
எப்படி செல்வது? :
விமானத்தில் டெஹ்ராடூன் சென்று அங்கு இருந்து காரிலும், ரெயில் மூலமும் ரிஷிகேஷ் மற்றும் ஹரித்வார் செல்ல வேண்டும். அங்கிருந்து சாலை வழியாக ருத்ரபிரயாக் என்ற பகுதிக்குச் சென்று, அந்த இடத்தில் இருந்து ஹரியாழி தேவி கோவிலை அடையலாம்.
கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம், காலடி என்ற இடத்தின் அருகில் மஞ்சப்புரா என்ற கிராமம் உள்ளது. இங்கு அம்பாடத்து மாளிகை ஐயப்பன் கோவில் இருக்கிறது
கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம், காலடி என்ற இடத்தின் அருகில் மஞ்சப்புரா என்ற கிராமம் உள்ளது. இங்கு அம்பாடத்து மாளிகை ஐயப்பன் கோவில் இருக்கிறது. இந்த ஆலயத்தில் ஐயப்பனுக்குச் சிலை எதுவுமில்லை.வெள்ளி முத்திரையுடனான தடி, திருநீற்றுப் பை, ஒரு கல் ஆகியவற்றையே ஐயப்பனாக நினைத்து வழிபட்டு வருகின்றனர்.
தல வரலாறு
அம்பாடத்து மாளிகை குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர், ஆண்டுதோறும் சபரிமலைக்குச் சென்று ஐயப்பனை வழிபட்டு வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். வயதான காலத்தில், அவருக்குச் சபரிமலை சென்று வருவது கடினமாகிப் போனது. ஒருமுறை அவர் சபரி மலைக்குச் சென்ற போது, மலைப் பாதையில் செல்வது சிரமமாக இருந்தது. அதனால் அவ்வப்போது ஆங்காங்கே தங்கி ஓய்வெடுத்துச் சென்று கொண்டிருந்தார்.
அப்படி ஓரிடத்தில் அவர் தங்கியிருந்த போது, ஒரு வயதானவர் அங்கு வந்து, வெள்ளி முத்திரையுடனான தடி, திருநீற்றுப் பை மற்றும் ஒரு கல் ஆகியவற்றைக் கொடுத்து, சிறிது நேரத்தில் திரும்பி வந்து வாங்கிக் கொள்வதாகச் சொல்லிவிட்டுச் சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் அந்த முதியவர் வரவில்லை. அதனால் அந்தப் பொருட்களுடன் சபரி மலைக்குச் சென்று ஐயப்பனை வழிபட்டு விட்டு வீடு திரும்பினார்.
அப்போது அவரது வீட்டுக்கு, சபரிமலையில் சந்தித்த முதியவர் வந்து, தான் கொடுத்த மூன்று பொருட்களையும் வைத்துக் கொள்ளும்படியும், அப்பொருட்களையே ஐயப்பனாக நினைத்து வழி படும்படியும் சொல்லிவிட்டு மறைந்தார். அதன் பிறகே, அந்தப் பொருட்களைத் தன்னிடம் கொடுத்துச் சென்றவர் இறையம்சம் பொருந்தியவர் என்பதை அவர் உணர்ந்தார். அதனைத் தொடர்ந்து, அங்கே சிறிய கோவில் ஒன்றைக் கட்டி, அந்த மூன்று பொருட்களையும் வழிபாட்டுக்காக வைத்து, அவற்றையே ஐயப்பனாக நினைத்து வழிபடத் தொடங்கினார் என்று ஆலயம் அமைந்த வரலாற்றைச் சொல்கின்றனர்.
கோவில் அமைப்பு
இந்த ஆலய கருவறையில் ஐயப்பன் சிலை எதுவுமில்லை. வெள்ளி முத்திரையுடனான தடி, திருநீற்றுப் பை மற்றும் கல் மட்டுமே வழிபாட்டிற்காக வைக்கப்பட்டிருக்கின்றன. இங்கே மாளிகப்புறத்து அம்மனுக்கும் சன்னிதி அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆலயம் பக்தர்கள் வழிபாட்டுக்காகத் தினமும் திறக்கப்படுவதில்லை. சபரிமலை வழிபாட்டுக்கான நிகழ்ச்சி நிரலின்படியே ஆலயம் திறக்கப்படுகிறது.
ஒவ்வொரு மாதத்திலும் முதல் ஐந்து நாட்களிலும், கார்த்திகை மாதம் முதல் நாளில் தொடங்கி 41 நாட்கள் வரை நடைபெறும் மண்டல பூஜை நாட்களிலும், ஐயப்பன் தோற்றம் பெற்ற நாளாகக் கருதப்படும் பங்குனி மாதம், உத்திரம் நட்சத்திரம் நாளிலும் ஆலயம் திறந்திருக்கும். அந்த நாட்களில் காலை 5 மணி முதல் பகல் 1 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் ஆலய தரிசனம் செய்யலாம்.
இங்கு வந்து வழிபடுபவர்களுக்குத் திருமணத் தடை நீங்கும். குழந்தைப்பேறு கிடைக்கும், தீராத நோய் தீரும் என்று சொல்லப்படுகிறது. மேலும் சனி தோசத்தால் ஏற்படும் துன்பங்கள் அனைத்தும் இந்த ஆலய வழிபாட்டால் விலகுவதாக பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். சபரிமலை வழிபாடு காலங்களில் மட்டுமே ஆலயம் திறக்கப்பட்டாலும், இங்கு பெண்கள் வழிபாட்டிற்காக அனுமதிக்கப் படுகின்றனர்.
அமைவிடம்
எர்ணாகுளம் நகரிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது காலடி. அங்கிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மஞ்சப்புரா பகுதிக்கு செல்ல வேண்டும். எர்ணாகுளம் மற்றும் காலடியிலிருந்து பேருந்து வசதிகள் இருக்கின்றன.
தல வரலாறு
அம்பாடத்து மாளிகை குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர், ஆண்டுதோறும் சபரிமலைக்குச் சென்று ஐயப்பனை வழிபட்டு வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். வயதான காலத்தில், அவருக்குச் சபரிமலை சென்று வருவது கடினமாகிப் போனது. ஒருமுறை அவர் சபரி மலைக்குச் சென்ற போது, மலைப் பாதையில் செல்வது சிரமமாக இருந்தது. அதனால் அவ்வப்போது ஆங்காங்கே தங்கி ஓய்வெடுத்துச் சென்று கொண்டிருந்தார்.
அப்படி ஓரிடத்தில் அவர் தங்கியிருந்த போது, ஒரு வயதானவர் அங்கு வந்து, வெள்ளி முத்திரையுடனான தடி, திருநீற்றுப் பை மற்றும் ஒரு கல் ஆகியவற்றைக் கொடுத்து, சிறிது நேரத்தில் திரும்பி வந்து வாங்கிக் கொள்வதாகச் சொல்லிவிட்டுச் சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் அந்த முதியவர் வரவில்லை. அதனால் அந்தப் பொருட்களுடன் சபரி மலைக்குச் சென்று ஐயப்பனை வழிபட்டு விட்டு வீடு திரும்பினார்.
அப்போது அவரது வீட்டுக்கு, சபரிமலையில் சந்தித்த முதியவர் வந்து, தான் கொடுத்த மூன்று பொருட்களையும் வைத்துக் கொள்ளும்படியும், அப்பொருட்களையே ஐயப்பனாக நினைத்து வழி படும்படியும் சொல்லிவிட்டு மறைந்தார். அதன் பிறகே, அந்தப் பொருட்களைத் தன்னிடம் கொடுத்துச் சென்றவர் இறையம்சம் பொருந்தியவர் என்பதை அவர் உணர்ந்தார். அதனைத் தொடர்ந்து, அங்கே சிறிய கோவில் ஒன்றைக் கட்டி, அந்த மூன்று பொருட்களையும் வழிபாட்டுக்காக வைத்து, அவற்றையே ஐயப்பனாக நினைத்து வழிபடத் தொடங்கினார் என்று ஆலயம் அமைந்த வரலாற்றைச் சொல்கின்றனர்.
கோவில் அமைப்பு
இந்த ஆலய கருவறையில் ஐயப்பன் சிலை எதுவுமில்லை. வெள்ளி முத்திரையுடனான தடி, திருநீற்றுப் பை மற்றும் கல் மட்டுமே வழிபாட்டிற்காக வைக்கப்பட்டிருக்கின்றன. இங்கே மாளிகப்புறத்து அம்மனுக்கும் சன்னிதி அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆலயம் பக்தர்கள் வழிபாட்டுக்காகத் தினமும் திறக்கப்படுவதில்லை. சபரிமலை வழிபாட்டுக்கான நிகழ்ச்சி நிரலின்படியே ஆலயம் திறக்கப்படுகிறது.
ஒவ்வொரு மாதத்திலும் முதல் ஐந்து நாட்களிலும், கார்த்திகை மாதம் முதல் நாளில் தொடங்கி 41 நாட்கள் வரை நடைபெறும் மண்டல பூஜை நாட்களிலும், ஐயப்பன் தோற்றம் பெற்ற நாளாகக் கருதப்படும் பங்குனி மாதம், உத்திரம் நட்சத்திரம் நாளிலும் ஆலயம் திறந்திருக்கும். அந்த நாட்களில் காலை 5 மணி முதல் பகல் 1 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் ஆலய தரிசனம் செய்யலாம்.
இங்கு வந்து வழிபடுபவர்களுக்குத் திருமணத் தடை நீங்கும். குழந்தைப்பேறு கிடைக்கும், தீராத நோய் தீரும் என்று சொல்லப்படுகிறது. மேலும் சனி தோசத்தால் ஏற்படும் துன்பங்கள் அனைத்தும் இந்த ஆலய வழிபாட்டால் விலகுவதாக பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். சபரிமலை வழிபாடு காலங்களில் மட்டுமே ஆலயம் திறக்கப்பட்டாலும், இங்கு பெண்கள் வழிபாட்டிற்காக அனுமதிக்கப் படுகின்றனர்.
அமைவிடம்
எர்ணாகுளம் நகரிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது காலடி. அங்கிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மஞ்சப்புரா பகுதிக்கு செல்ல வேண்டும். எர்ணாகுளம் மற்றும் காலடியிலிருந்து பேருந்து வசதிகள் இருக்கின்றன.






