என் மலர்
முக்கிய விரதங்கள்
யார் ஒருவர் குலதெய்வத்தை விடாமல், விரதம் இருந்து ஐதீகத்துடன் வழிபாடு செய்து வருகிறாரோ, அவரை எந்த கிரகமும் நெருங்கி தொல்லை கொடுக்காது.
உலகில் எத்தனையோ கடவுள் உருவங்கள் உள்ளன. ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு கடவுள் பிடிக்கும். சிலர் ஒன்றுக்கும் மேற்பட்ட கடவுள்களை விரதம் இருந்து மனதார வழிபடுவார்கள்.
சமீப காலமாக விரதம் இருந்து சீரடி சாய்பாபாவை இஷ்ட தெய்வமாக ஏற்று வழிபடுபவர்கள் எண்ணிக்கையும், சித்தர்களின் ஜீவசமாதிகளை தேடிச் சென்று வழிபடுபவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்தப்படி உள்ளது. அது போல பரிகாரத்தலங்களை புற்றீசல் போல மொய்க்கும் பக்தர்களையும் காணலாம்.
இறை வழிபாடு இப்படி பல கோணங்களில் இருந்தாலும், நாம் நமது குலதெய்வத்தை மட்டும் எந்த விதத்திலும் மறந்து விடக் கூடாது. ஏனெனில் நம் குலத்தை காத்து, பாதுகாப்புடன் வாழ வைப்பதே நமது குலதெய்வம்தான்.
குலதெய்வத்தை நினைக்காமல், பூஜிக்காமல் நாம் தொடங்கும் எந்த ஒரு செயலும் முழுமை பெறாது. குலதெய்வ வழிபாட்டை மறந்து விட்டால் திருமண தடை, குழந்தை பாக்கியம் கிடைக்காமல் இருப்பது, கடன், நோய், குடும்பத்துக்குள் பிரச்சினை என்று குழப்பமும், மன அமைதியின்மையும் ஏற்பட்டு விடும். இத்தகைய பிரச்சினைகளில் இருந்து நாம் விடுபட வேண்டுமானால், ஆண்டுக்கு ஒரு தடவையாவது குலதெய்வ வழிபாட்டை செய்ய வேண்டும். குலதெய்வத்துக்கு உரிய படையல் போட்டு திருப்தி ஏற்படுத்த வேண்டும்.
குலதெய்வம் மகிழ்ச்சி அடைந்தால், உங்கள் குலமே செழிக்கும். தினம், தினம் குலதெய்வத்தை வணங்குபவர்களுக்கு எந்த குறையும் வராது குதூகலம்தான் வரும். பூர்வீக ஊரில் இருப்பவர்களுக்கு குலதெய்வத்தை வழிபட எந்த சிக்கலும் இருக்காது. ஆனால் ஊரை விட்டு வெளியேறி நகரங்களில் குடியேறி விட்டவர்களுக்கு, குல தெய்வ வழிபாடு செய்வது என்பது அரிதான ஒன்றாகும்.
அப்படிப்பட்டவர்களுக்காகவே ஆண்டுக்கு ஒரு தடவை பங்குனி உத்திரம் தினத்தன்று ‘‘குலதெய்வ வழிபாடு’’ செய்யும் பழக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு குல தெய்வ வழிபாட்டுக்குரிய பங்குனி உத்திரம் 9-ந்தேதி (ஞாயிறு) வருகிறது.
அன்று குலதெய்வம் இருக்கும் ஆலயத்தில் நீங்கள் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். அது உங்களை மேன்மைப்படுத்தும். நீங்கள் எத்தனை கடவுள்களை வணங்கினாலும் சரி.... குல தெய்வத்தை வழிபடாவிட்டால் குண்டுமணி அளவுக்கு கூட பிரயோஜனம் இல்லை. ஆகையால் குலதெய்வத்தை அவசியம் வழிபடுங்கள்.
யார் ஒருவர் குலதெய்வத்தை விடாமல், விரதம் இருந்து ஐதீகத்துடன் வழிபாடு செய்து வருகிறாரோ, அவரை எந்த கிரகமும் நெருங்கி தொல்லை கொடுக்காது. அதுதான் குல தெய்வ வழிபாட்டின் மகிமை.
சமீப காலமாக விரதம் இருந்து சீரடி சாய்பாபாவை இஷ்ட தெய்வமாக ஏற்று வழிபடுபவர்கள் எண்ணிக்கையும், சித்தர்களின் ஜீவசமாதிகளை தேடிச் சென்று வழிபடுபவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்தப்படி உள்ளது. அது போல பரிகாரத்தலங்களை புற்றீசல் போல மொய்க்கும் பக்தர்களையும் காணலாம்.
இறை வழிபாடு இப்படி பல கோணங்களில் இருந்தாலும், நாம் நமது குலதெய்வத்தை மட்டும் எந்த விதத்திலும் மறந்து விடக் கூடாது. ஏனெனில் நம் குலத்தை காத்து, பாதுகாப்புடன் வாழ வைப்பதே நமது குலதெய்வம்தான்.
குலதெய்வத்தை நினைக்காமல், பூஜிக்காமல் நாம் தொடங்கும் எந்த ஒரு செயலும் முழுமை பெறாது. குலதெய்வ வழிபாட்டை மறந்து விட்டால் திருமண தடை, குழந்தை பாக்கியம் கிடைக்காமல் இருப்பது, கடன், நோய், குடும்பத்துக்குள் பிரச்சினை என்று குழப்பமும், மன அமைதியின்மையும் ஏற்பட்டு விடும். இத்தகைய பிரச்சினைகளில் இருந்து நாம் விடுபட வேண்டுமானால், ஆண்டுக்கு ஒரு தடவையாவது குலதெய்வ வழிபாட்டை செய்ய வேண்டும். குலதெய்வத்துக்கு உரிய படையல் போட்டு திருப்தி ஏற்படுத்த வேண்டும்.
குலதெய்வம் மகிழ்ச்சி அடைந்தால், உங்கள் குலமே செழிக்கும். தினம், தினம் குலதெய்வத்தை வணங்குபவர்களுக்கு எந்த குறையும் வராது குதூகலம்தான் வரும். பூர்வீக ஊரில் இருப்பவர்களுக்கு குலதெய்வத்தை வழிபட எந்த சிக்கலும் இருக்காது. ஆனால் ஊரை விட்டு வெளியேறி நகரங்களில் குடியேறி விட்டவர்களுக்கு, குல தெய்வ வழிபாடு செய்வது என்பது அரிதான ஒன்றாகும்.
அப்படிப்பட்டவர்களுக்காகவே ஆண்டுக்கு ஒரு தடவை பங்குனி உத்திரம் தினத்தன்று ‘‘குலதெய்வ வழிபாடு’’ செய்யும் பழக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு குல தெய்வ வழிபாட்டுக்குரிய பங்குனி உத்திரம் 9-ந்தேதி (ஞாயிறு) வருகிறது.
அன்று குலதெய்வம் இருக்கும் ஆலயத்தில் நீங்கள் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். அது உங்களை மேன்மைப்படுத்தும். நீங்கள் எத்தனை கடவுள்களை வணங்கினாலும் சரி.... குல தெய்வத்தை வழிபடாவிட்டால் குண்டுமணி அளவுக்கு கூட பிரயோஜனம் இல்லை. ஆகையால் குலதெய்வத்தை அவசியம் வழிபடுங்கள்.
யார் ஒருவர் குலதெய்வத்தை விடாமல், விரதம் இருந்து ஐதீகத்துடன் வழிபாடு செய்து வருகிறாரோ, அவரை எந்த கிரகமும் நெருங்கி தொல்லை கொடுக்காது. அதுதான் குல தெய்வ வழிபாட்டின் மகிமை.
மகத்துவம் வாய்ந்த நாளான மாசி மாத தேய்பிறை ஏகாதசி தினத்தன்று, உணவேதும் அருந்தாமல் விரதம் இருந்து மகாவிஷ்ணுவை வழிபட்டால் உங்களின் சகல பாவங்கள் நீங்கும்.
பெருமாளை வழிபடுவதற்கு ஒரு அற்புதமான நாளாக ஷட்திலா ஏகாதசி விரத தினம் வருகிறது. இந்த ஏகாதசி விரத தினத்தின் முக்கியத்துவம் பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
பூலோகத்தில் வாழ்ந்த பெண் ஒருத்தி தான் செய்த புண்ணிய பலன் காரணமாக மனித உடலோடு சொர்க்கம் செல்லும் பாக்கியம் பெற்றால். சொர்க்க லோகத்தில் தனக்கு அத்தனை வசதிகள் இருந்தாலும் தன்னால் நேரத்திற்கு தான் விரும்பிய உணவு கிடைக்காமல் அவதியுற்றார். அப்போது அங்கே ஒரு துறவி உருவத்தில் வந்த பெருமாளிடம் தனது இந்த நிலை குறித்து கூறி, அதற்கான காரணம் என்ன என்று கேட்டாள்
அதற்கு துறவி உருவில் இருந்த பெருமாள் அந்த பெண்ணிடம் அவள் பூலோகத்தில் அனைவருக்கும் அவர்களின் விருப்பத்திற்கேற்றவாறு தான தர்மங்களை செய்திருந்தாலும், ஒரு மனிதனுக்கு வாழ்நாள் முழுக்க இருக்கும் பிணியான பசி பிணியினை போக்கும் அன்னதானம் செய்ய மறந்து விட்டதாகவும், மேலும் ஒரு முறை துறவி ஒருவர் சாப்பிட உணவு கேட்டு பாத்திரத்துடன் அவள் வீட்டின் முன்பாக வந்த போது, அந்த பாத்திரத்தில் மண்ணை கொட்டி அவரை அவமதித்த பாவமே அந்த பெண் சொர்க்கலோகத்தில் இருந்தாலும் உணவு கிடைக்காமல் அவதியுற நேரிட்டதாக கூறினார் துறவி உருவத்தில் இருந்த பெருமாள்.
இதையறிந்து வருந்திய அந்த பெண்ணிடம் பெருமாள் மண்ணுலகில் வாழும் மனிதர்கள் நன்மைகளை பெற பல விரதங்களை கடைபிடிக்கின்றனர். அதில் ஒன்று தான் மாசி மாத தேய்பிறை காலத்தில் வரும் ஷட்திலா ஏகாதசி விரதம் ஆகும். இந்த விரதத்தை மேற்கொள்ளவர்கள் வாழ்வில் பசிப்பிணி தீர்ந்து அன்னம் எனப்படும் உணவிற்கு பஞ்சமிருக்காது என்றும், உன்னை இங்கு தரிசிக்க வரும் தேவலோக பெண்களிடம் இந்த ஷட்திலா விரதத்தின் பலன்களை பெற்றால் உனது பசிப்பிணி தீரும் என்று கூறி மறைந்தார்.
வந்தது நாராயணனே என்றறிந்த பெண் தேவலோக பெண்கள் அவளின் தரிசனம் பெற வந்த போது ஒரு அறைக்குள் சென்று மறைந்துகொண்டாள். வந்த தேவலோக பெண்கள் அப்பெண் தங்களுக்கு தரிசனம் தருமாறு கெஞ்ஜினர். அதற்கு அந்த பெண், தேவலோக பெண்கள் கடைபிடித்த ஷட்திலா விரதத்தின் பலனை தனக்கு தந்தால் தான் அவர்களுக்கு தரிசனம் தருவதாக கூறினாள். அதற்கு அவர்களும் ஒப்புக்கொள்ள, விரதத்தின் பலனை பெற்ற பெண் தனது பசிப்பிணி நீங்க பெற்றாள்.
மகத்துவம் வாய்ந்த நாளான இந்த மாசி மாத தேய்பிறை ஏகாதசி தினத்தன்று, உணவேதும் அருந்தாமல் விரதம் இருந்து மகாவிஷ்ணுவான பெருமாளை விஷ்ணு சகஸ்ரநாமம் மற்றும் இதர பெருமாள் மந்திரங்கள் துதித்து வழிப்பட்டு உங்களால் முடிந்த அளவிற்கு ஏழைகளுக்கு அன்னதானம் செய்தால், உங்களின் சகல பாவங்கள் நீங்குவதோடு, உங்கள் வாழ்நாளில் உணவிற்கு ஏங்கும் உணவு பஞ்சம், வறுமை போன்ற நிலை ஏற்படாமல் பெருமாள் காத்தருள்வார்.
பூலோகத்தில் வாழ்ந்த பெண் ஒருத்தி தான் செய்த புண்ணிய பலன் காரணமாக மனித உடலோடு சொர்க்கம் செல்லும் பாக்கியம் பெற்றால். சொர்க்க லோகத்தில் தனக்கு அத்தனை வசதிகள் இருந்தாலும் தன்னால் நேரத்திற்கு தான் விரும்பிய உணவு கிடைக்காமல் அவதியுற்றார். அப்போது அங்கே ஒரு துறவி உருவத்தில் வந்த பெருமாளிடம் தனது இந்த நிலை குறித்து கூறி, அதற்கான காரணம் என்ன என்று கேட்டாள்
அதற்கு துறவி உருவில் இருந்த பெருமாள் அந்த பெண்ணிடம் அவள் பூலோகத்தில் அனைவருக்கும் அவர்களின் விருப்பத்திற்கேற்றவாறு தான தர்மங்களை செய்திருந்தாலும், ஒரு மனிதனுக்கு வாழ்நாள் முழுக்க இருக்கும் பிணியான பசி பிணியினை போக்கும் அன்னதானம் செய்ய மறந்து விட்டதாகவும், மேலும் ஒரு முறை துறவி ஒருவர் சாப்பிட உணவு கேட்டு பாத்திரத்துடன் அவள் வீட்டின் முன்பாக வந்த போது, அந்த பாத்திரத்தில் மண்ணை கொட்டி அவரை அவமதித்த பாவமே அந்த பெண் சொர்க்கலோகத்தில் இருந்தாலும் உணவு கிடைக்காமல் அவதியுற நேரிட்டதாக கூறினார் துறவி உருவத்தில் இருந்த பெருமாள்.
இதையறிந்து வருந்திய அந்த பெண்ணிடம் பெருமாள் மண்ணுலகில் வாழும் மனிதர்கள் நன்மைகளை பெற பல விரதங்களை கடைபிடிக்கின்றனர். அதில் ஒன்று தான் மாசி மாத தேய்பிறை காலத்தில் வரும் ஷட்திலா ஏகாதசி விரதம் ஆகும். இந்த விரதத்தை மேற்கொள்ளவர்கள் வாழ்வில் பசிப்பிணி தீர்ந்து அன்னம் எனப்படும் உணவிற்கு பஞ்சமிருக்காது என்றும், உன்னை இங்கு தரிசிக்க வரும் தேவலோக பெண்களிடம் இந்த ஷட்திலா விரதத்தின் பலன்களை பெற்றால் உனது பசிப்பிணி தீரும் என்று கூறி மறைந்தார்.
வந்தது நாராயணனே என்றறிந்த பெண் தேவலோக பெண்கள் அவளின் தரிசனம் பெற வந்த போது ஒரு அறைக்குள் சென்று மறைந்துகொண்டாள். வந்த தேவலோக பெண்கள் அப்பெண் தங்களுக்கு தரிசனம் தருமாறு கெஞ்ஜினர். அதற்கு அந்த பெண், தேவலோக பெண்கள் கடைபிடித்த ஷட்திலா விரதத்தின் பலனை தனக்கு தந்தால் தான் அவர்களுக்கு தரிசனம் தருவதாக கூறினாள். அதற்கு அவர்களும் ஒப்புக்கொள்ள, விரதத்தின் பலனை பெற்ற பெண் தனது பசிப்பிணி நீங்க பெற்றாள்.
மகத்துவம் வாய்ந்த நாளான இந்த மாசி மாத தேய்பிறை ஏகாதசி தினத்தன்று, உணவேதும் அருந்தாமல் விரதம் இருந்து மகாவிஷ்ணுவான பெருமாளை விஷ்ணு சகஸ்ரநாமம் மற்றும் இதர பெருமாள் மந்திரங்கள் துதித்து வழிப்பட்டு உங்களால் முடிந்த அளவிற்கு ஏழைகளுக்கு அன்னதானம் செய்தால், உங்களின் சகல பாவங்கள் நீங்குவதோடு, உங்கள் வாழ்நாளில் உணவிற்கு ஏங்கும் உணவு பஞ்சம், வறுமை போன்ற நிலை ஏற்படாமல் பெருமாள் காத்தருள்வார்.
செவ்வாய்க்கிழமையுடன் சேர்ந்து வரும் சதுர்த்தி மற்ற சதுர்த்தியைக் காட்டிலும் ஒப்பற்றது; இந்த நாளில் விரதம் இருந்து விநாயகரை வழிபடுவோரது சங்கடங்கள் அனைத்தும் விலகும்.
வசிஷ்டரின் பரம்பரையில் தோன்றியவர் பரத்வாஜ முனிவர். இவர், நர்மதை நதிக்கரையில் தவம் செய்து வந்தார். ஒருநாள்… நர்மதையில் நீராடிக்கொண்டிருந்த தேவ மங்கை ஒருத்தியைக் கண்டு மோகித்த பரத்வாஜர், அவளை அவந்தி நகருக்கு அழைத்துச் சென்று, இல்லறம் நடத்திவந்தார். இவர்களுக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்ததும் அந்தப் பெண் தேவலோகத்துக்குத் திரும்பிச் சென்றாள். பரத்வாஜ முனிவரும் குழந்தையை அங்கேயே விட்டுவிட்டு, நர்மதைக் கரைக்குச் சென்று தவத்தைத் தொடர்ந்தார்.
இதையடுத்து, அந்தக் குழந்தையை பூமாதேவி அரவணைத்து வளர்த்தாள். குழந்தையின் மேனி, செந்நிறத்துடன் அக்னி போல் பிரகாசித்ததால், அவனுக்கு ‘அங்காரகன்’ என்று பெயர் சூட்டினாள்.
அங்காரகனுக்கு ஏழு வயதானது. ஒருநாள், ‘`அம்மா, என் தந்தை யார்? அவரைக் காண ஆவலாக உள்ளது!’’ என்று பூமாதேவியிடம் கேட்டான். உடனே, ‘`குழந்தாய்… உன் தந்தையின் பெயர் பரத்வாஜர்; மகரிஷிகளில் மகிமை பெற்றவர். அவரிடம் உன்னை அழைத்துச் செல்கிறேன்!’’ என்ற பூமாதேவி, அவனுடன் பரத்வாஜரது ஆசிரமத்தை அடைந்தாள்.
அங்கு முனிவரைச் சந்தித்தவள், ‘’முனிவரே, இவனே தங்களின் மகன். உங்களைக் காண விரும்பியதால் இவனை இங்கு அழைத்து வந்தேன். தாங்கள் இவனை ஏற்றுக்கொள்ள வேண்டும்!’’ என வேண்டினாள். மிகவும் மகிழ்ந்த பரத்வாஜர், அன்புடன் தன் மகனை அணைத்துக்கொண்டார்.
அங்காரகன் தகுந்த வயதை அடைந்ததும், முறைப்படி அவனுக்கு உபநயனம் முதலிய சடங்குகளைச் செய்துவைத்து வேத அத்யயனத்தையும் ஆரம்பித்து வைத்தார் பரத்வாஜர். சதுர்வேதங்களை மிகக் குறுகிய காலத்திலேயே கசடறக் கற்றுத் தேர்ந்த அங்காரகன், இன்னும் பல கலைகளிலும் சிறந்து விளங்கினான்.
இதன் பிறகு… தான் சர்வ வல்லமை பெற விரும்புவதாகவும், தகுந்த வழி காட்டுமாறும் தந்தையிடம் பிரார்த்தித்தான். ‘தவமே சிறந்த வழி’ என்ற பரத்வாஜர், விநாயகரைக் குறித்து தவம் இருக்கும்படி அங்காரகனைப் பணித்தார். உரிய மந்திரங்களையும் அவனுக்கு உபதேசித்து அனுப்பி வைத்தார். அவந்தி நகரை அடுத்த அடர்ந்த வனத்தில் தக்க இடத்தைத் தேர்ந்தெடுத்து, ஒரு நன்னாளில் தனது தவத்தைத் துவக்கினான். பல நூறு ஆண்டுகள் நீடித்த அங்காரகனின் தவத்துக்கு பலன் கிடைக்கும் காலம் கனிந்தது.
மாசி மாதம், கிருஷ்ணபட்சம் (தேய்பிறை) சதுர்த்தியன்று இரவு சந்திரோதய காலத்தில், அங்காரனுக்கு தரிசனம் தந்தார் ஆனைமுகத்தோன். அவரது பாதக் கமலங்களை பணிந்த அங்காரகன், விநாயகரை பலவாறு துதித்துப் போற்றியதுடன், சில வரங்களையும் வேண்டினான்.
‘`விக்னராஜனே… நான், அமிர்தம் அருந்தி அமரனாக ஆசைப்படுகிறேன். சர்வமங்கலமான திருவுருவோடு தங்களைத் தரிசித்த என்னை எல்லோரும், ‘மங்களன்’ என்று அழைக்க வேண்டும். அத்துடன், தங்களது திவ்விய தரிசனம் கிடைத்த இந்த சதுர்த்தி நன்னாளை அனைவரும் கொண்டாட வேண்டும். இந்நாளில் உம்மை வணங்கும் அடியவர்களது இன்னல்களை நீக்கி அருள வேண்டும். என்னை வணங்கும் அடியவர்களுக்கு செல்வம் அளிக்கும் கிரகமாக நான் மிளிர வேண்டும்!’’ என்று பல வரங்களைக் கேட்டான் அங்காரகன்.
அவனை கனிவுடன் நோக்கிய கணபதி, ‘’அன்பனே! நீ கேட்ட எல்லா வரங்களையும் தருகிறேன். அத்துடன், என்னிடம் நீ அனுக்கிரகம் பெற்ற இந்த நாள், ‘அங்காரக சதுர்த்தி’யாகப் போற்றப்படும். இந்த நாளில் திரிகரண சுத்தியுடன் என்னை வணங்குபவர்களது விக்னங்களை அடியோடு விலக்குவேன்!’’ என்று அருளி மறைந்தார்.
விநாயகரின் தரிசனம் கிடைத்த அந்தப் புனித இடத்தில், கணேசர் விக்கிரகத்தைப் பிரதிஷ்டை செய்து அல்லும் பகலும் அவரை வழிபட்டு வந்தான் அங்காரகன். இதனால் அந்த விநாயகருக்கு, ‘மங்கள விநாயகர்’ என்ற பெயர் வந்தது.
இதன் பிறகு, விநாயகப் பெருமானின் அருளால், தேவலோகம் அடைந்த அங்காரகன், அங்கு அமிர்தம் பருகியதுடன்… விரைவிலேயே, நவகிரகங்களில் ஒருவனாகும் பேறு பெற்றான். அவனுக்கு உகந்த தினம் செவ்வாய்.
எனவே செவ்வாய்க்கிழமையுடன் சேர்ந்து வரும் சதுர்த்தி மற்ற சதுர்த்தியைக் காட்டிலும் ஒப்பற்றது; விநாயகருக்கு மிக உகந்தது. இந்த நாளில் விரதம் இருந்து விநாயகரை வழிபடுவோரது சங்கடங்கள் அனைத்தும் விலகும். எனவே இந்த புனித தினம், சங்கடஹர சதுர்த்தி என்று பெயர் பெற்றது.
இதையடுத்து, அந்தக் குழந்தையை பூமாதேவி அரவணைத்து வளர்த்தாள். குழந்தையின் மேனி, செந்நிறத்துடன் அக்னி போல் பிரகாசித்ததால், அவனுக்கு ‘அங்காரகன்’ என்று பெயர் சூட்டினாள்.
அங்காரகனுக்கு ஏழு வயதானது. ஒருநாள், ‘`அம்மா, என் தந்தை யார்? அவரைக் காண ஆவலாக உள்ளது!’’ என்று பூமாதேவியிடம் கேட்டான். உடனே, ‘`குழந்தாய்… உன் தந்தையின் பெயர் பரத்வாஜர்; மகரிஷிகளில் மகிமை பெற்றவர். அவரிடம் உன்னை அழைத்துச் செல்கிறேன்!’’ என்ற பூமாதேவி, அவனுடன் பரத்வாஜரது ஆசிரமத்தை அடைந்தாள்.
அங்கு முனிவரைச் சந்தித்தவள், ‘’முனிவரே, இவனே தங்களின் மகன். உங்களைக் காண விரும்பியதால் இவனை இங்கு அழைத்து வந்தேன். தாங்கள் இவனை ஏற்றுக்கொள்ள வேண்டும்!’’ என வேண்டினாள். மிகவும் மகிழ்ந்த பரத்வாஜர், அன்புடன் தன் மகனை அணைத்துக்கொண்டார்.
அங்காரகன் தகுந்த வயதை அடைந்ததும், முறைப்படி அவனுக்கு உபநயனம் முதலிய சடங்குகளைச் செய்துவைத்து வேத அத்யயனத்தையும் ஆரம்பித்து வைத்தார் பரத்வாஜர். சதுர்வேதங்களை மிகக் குறுகிய காலத்திலேயே கசடறக் கற்றுத் தேர்ந்த அங்காரகன், இன்னும் பல கலைகளிலும் சிறந்து விளங்கினான்.
இதன் பிறகு… தான் சர்வ வல்லமை பெற விரும்புவதாகவும், தகுந்த வழி காட்டுமாறும் தந்தையிடம் பிரார்த்தித்தான். ‘தவமே சிறந்த வழி’ என்ற பரத்வாஜர், விநாயகரைக் குறித்து தவம் இருக்கும்படி அங்காரகனைப் பணித்தார். உரிய மந்திரங்களையும் அவனுக்கு உபதேசித்து அனுப்பி வைத்தார். அவந்தி நகரை அடுத்த அடர்ந்த வனத்தில் தக்க இடத்தைத் தேர்ந்தெடுத்து, ஒரு நன்னாளில் தனது தவத்தைத் துவக்கினான். பல நூறு ஆண்டுகள் நீடித்த அங்காரகனின் தவத்துக்கு பலன் கிடைக்கும் காலம் கனிந்தது.
மாசி மாதம், கிருஷ்ணபட்சம் (தேய்பிறை) சதுர்த்தியன்று இரவு சந்திரோதய காலத்தில், அங்காரனுக்கு தரிசனம் தந்தார் ஆனைமுகத்தோன். அவரது பாதக் கமலங்களை பணிந்த அங்காரகன், விநாயகரை பலவாறு துதித்துப் போற்றியதுடன், சில வரங்களையும் வேண்டினான்.
‘`விக்னராஜனே… நான், அமிர்தம் அருந்தி அமரனாக ஆசைப்படுகிறேன். சர்வமங்கலமான திருவுருவோடு தங்களைத் தரிசித்த என்னை எல்லோரும், ‘மங்களன்’ என்று அழைக்க வேண்டும். அத்துடன், தங்களது திவ்விய தரிசனம் கிடைத்த இந்த சதுர்த்தி நன்னாளை அனைவரும் கொண்டாட வேண்டும். இந்நாளில் உம்மை வணங்கும் அடியவர்களது இன்னல்களை நீக்கி அருள வேண்டும். என்னை வணங்கும் அடியவர்களுக்கு செல்வம் அளிக்கும் கிரகமாக நான் மிளிர வேண்டும்!’’ என்று பல வரங்களைக் கேட்டான் அங்காரகன்.
அவனை கனிவுடன் நோக்கிய கணபதி, ‘’அன்பனே! நீ கேட்ட எல்லா வரங்களையும் தருகிறேன். அத்துடன், என்னிடம் நீ அனுக்கிரகம் பெற்ற இந்த நாள், ‘அங்காரக சதுர்த்தி’யாகப் போற்றப்படும். இந்த நாளில் திரிகரண சுத்தியுடன் என்னை வணங்குபவர்களது விக்னங்களை அடியோடு விலக்குவேன்!’’ என்று அருளி மறைந்தார்.
விநாயகரின் தரிசனம் கிடைத்த அந்தப் புனித இடத்தில், கணேசர் விக்கிரகத்தைப் பிரதிஷ்டை செய்து அல்லும் பகலும் அவரை வழிபட்டு வந்தான் அங்காரகன். இதனால் அந்த விநாயகருக்கு, ‘மங்கள விநாயகர்’ என்ற பெயர் வந்தது.
இதன் பிறகு, விநாயகப் பெருமானின் அருளால், தேவலோகம் அடைந்த அங்காரகன், அங்கு அமிர்தம் பருகியதுடன்… விரைவிலேயே, நவகிரகங்களில் ஒருவனாகும் பேறு பெற்றான். அவனுக்கு உகந்த தினம் செவ்வாய்.
எனவே செவ்வாய்க்கிழமையுடன் சேர்ந்து வரும் சதுர்த்தி மற்ற சதுர்த்தியைக் காட்டிலும் ஒப்பற்றது; விநாயகருக்கு மிக உகந்தது. இந்த நாளில் விரதம் இருந்து விநாயகரை வழிபடுவோரது சங்கடங்கள் அனைத்தும் விலகும். எனவே இந்த புனித தினம், சங்கடஹர சதுர்த்தி என்று பெயர் பெற்றது.
குலதெய்வ விரத வழிபாட்டின் மூலம் மணமாகாதவர்களுக்கு திருமணம் அமைவது, குழந்தை வரம் பெறுவது, தீராத நோய்களுக்கு பரிகாரம் பெறுவது, முதலிய பயன்கள் பெறப்படுகிறது.
அடிப்படையில் இந்துமதம் பற்றற்ற தன்மையை போதிக்கிறது. அதாவது அனைத்தையும் துறந்து தியானம், தவம் மூலம் இறை நிலையை அடைவது. ஆனால் இந்த குலதெய்வம் மனிதன் லௌகீக வாழ்க்கைக்கு தேவையான பலன்களையே அளிக்கிறது. அப்படியானால் குலதெய்வமும் இறை நிலையும் வேறு வேறா? இல்லை. இதற்கு அருமையான விளக்கத்தை பகவான் கீதையில் சொல்கிறார்.
யார் என்னை எப்படி வழிபடுகிறார்களோ அவர்களை அப்படியே நான் வழிநடத்துகிறேன். செயல்களின் பயனை விரும்புபவர்கள் இங்கே தேவதைகளை வழிபடுகிறார்கள். அதாவது இறைவனை லட்சியமாகக் கொள்வதும் உலக இன்பங்களை ஒதுக்கிவிட்டு இறை நெறியில் செல்வதும் எல்லோராலும் முடியாது.
உலகம் மற்றும் அதன் இன்பங்கள் வேண்டும் என்று நினைப்பவர்களுக்காக இறைவன் தேவதைகளைப் படைத்துள்ளார் அல்லது அவரே அப்படி அவதரிக்கிறார். வேத காலத்தில் இந்திரன், வருணன் முதலிய தேவர்கள் வழிபட்டனர். இக்காலத்தில் உள்ள தேவதைகள் தான் குலதெய்வங்கள். எனவே விரதம் இருந்து குலதேவதை ஒருவர் முறையாக வழிபட்டாலே உலக இன்பங்களைப் பெற்றுக்கொண்டே இறைநிலை அடையும் வாய்ப்பு உள்ளது.
குலதெய்வம் வழிபாட்டின் மூலம் மணமாகாதவர்களுக்கு திருமணம் அமைவது, குழந்தை வரம் பெறுவது, தீராத நோய்களுக்கு பரிகாரம் பெறுவது, கல்வி, தொழில் விருத்தி கிடைப்பது, வழக்குகளில் நீதி கிடைப்பது முதலிய பயன்கள் பெறப்படுகிறது.
யார் என்னை எப்படி வழிபடுகிறார்களோ அவர்களை அப்படியே நான் வழிநடத்துகிறேன். செயல்களின் பயனை விரும்புபவர்கள் இங்கே தேவதைகளை வழிபடுகிறார்கள். அதாவது இறைவனை லட்சியமாகக் கொள்வதும் உலக இன்பங்களை ஒதுக்கிவிட்டு இறை நெறியில் செல்வதும் எல்லோராலும் முடியாது.
உலகம் மற்றும் அதன் இன்பங்கள் வேண்டும் என்று நினைப்பவர்களுக்காக இறைவன் தேவதைகளைப் படைத்துள்ளார் அல்லது அவரே அப்படி அவதரிக்கிறார். வேத காலத்தில் இந்திரன், வருணன் முதலிய தேவர்கள் வழிபட்டனர். இக்காலத்தில் உள்ள தேவதைகள் தான் குலதெய்வங்கள். எனவே விரதம் இருந்து குலதேவதை ஒருவர் முறையாக வழிபட்டாலே உலக இன்பங்களைப் பெற்றுக்கொண்டே இறைநிலை அடையும் வாய்ப்பு உள்ளது.
குலதெய்வம் வழிபாட்டின் மூலம் மணமாகாதவர்களுக்கு திருமணம் அமைவது, குழந்தை வரம் பெறுவது, தீராத நோய்களுக்கு பரிகாரம் பெறுவது, கல்வி, தொழில் விருத்தி கிடைப்பது, வழக்குகளில் நீதி கிடைப்பது முதலிய பயன்கள் பெறப்படுகிறது.
ஒருவரது ஜாதகத்தில் ஞானகாரகன் என்றழைக்கப் படும் கேது கிரகத்தின் நிலை சிறப்பாக இருந்தால் மட்டுமே அவர் ஞானம் அடைய முடியம்.
மனித பிறவி எடுத்ததன் பயன் உயர்வான தெய்வீக நிலையான ஞான நிலை அடைவதாகும். இதற்கு முதலில் ஒவ்வொருவரும் ஆத்ம ஞானம் பெற வேண்டும். ஆனால் மிக எளிதாக நினைத்த உடன் எல்லோராலுமே இத்தகைய உயரிய நிலையை அடைந்து விட முடியாது.
ஒருவரது ஜாதகத்தில் ஞானகாரகன் என்றழைக்கப் படும் கேது கிரகத்தின் நிலை சிறப்பாக இருந்தால் மட்டுமே அவர் ஞானம் அடைய முடியம். அந்த கேது பகவானின் ஆதிக்கத் தில் மகம் நட்சத்திரக்காரர்கள் வருகிறார்கள்.
27 நட்சத்திர வரிசைகளில் 10-வது நட்சத்திரமாக வருவது மகம் நட்சத்திரம் ஆகும். இந்த நட்சத்திரத்தின் அதிபதியாக நவகிரக நாயகர்களில் நிழல் கிரகங்களில் ஒருவரான கேது ஆவார்.
மகத்தில் பிறந்தவர்கள் ஜெகத்தை ஆள்வார்கள் என்று இந்நட்சத்திரத்தை பற்றிய ஒரு பழமொழி உண்டு. ஆனால் உண்மையில் மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சில பரிகார பூஜைகளை செய்தால்தான் உரிய பலன்களை பெற முடியும் என்று கூறப்படுகிறது.
மகம் நட்சத்திரகாரர்கள் ஏதேனும் ஒரு மாதத்தில் வரும் தங்களின் பிறந்த நட்சத்திர தினத்தன்று திருப்பாம்புரம் சென்று விரதம் இருந்து அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். விரதம் இருந்து சித்தர்கள், ரிஷிகள் ஆகியோர்களின் ஜீவ சமாதி கோயிலுக்கு சென்று வழிபட வேண்டும். சிவயோகிகள், ஞானிகள் போன் றோருக்கு அன்ன தானம் அல்லது சேவைகளையோ செய்ய வேண்டும்.
மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எந்தக்காரணம் கொண்டும் பாம்புகளை துன்புறுத்தவோ, கொல்லவோ கூடாது. பாம்பு வசிக்கும் புற்றுகளையும் இடிக்க கூடாது. வருடந்தோறும் வரும் தை, ஆடி, மகாளய அமாவாசை தினங்களில் தர்ப்பணம் தந்து வழிபட வேண்டும். தினமும் காலையில் மறைந்த முன்னோர்களின் படங்களுக்கு தீபம் ஏற்றி வழிபடுவது கேது பகவானின் அருளை பெற்று தரும்.
ஒருவரது ஜாதகத்தில் ஞானகாரகன் என்றழைக்கப் படும் கேது கிரகத்தின் நிலை சிறப்பாக இருந்தால் மட்டுமே அவர் ஞானம் அடைய முடியம். அந்த கேது பகவானின் ஆதிக்கத் தில் மகம் நட்சத்திரக்காரர்கள் வருகிறார்கள்.
27 நட்சத்திர வரிசைகளில் 10-வது நட்சத்திரமாக வருவது மகம் நட்சத்திரம் ஆகும். இந்த நட்சத்திரத்தின் அதிபதியாக நவகிரக நாயகர்களில் நிழல் கிரகங்களில் ஒருவரான கேது ஆவார்.
மகத்தில் பிறந்தவர்கள் ஜெகத்தை ஆள்வார்கள் என்று இந்நட்சத்திரத்தை பற்றிய ஒரு பழமொழி உண்டு. ஆனால் உண்மையில் மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சில பரிகார பூஜைகளை செய்தால்தான் உரிய பலன்களை பெற முடியும் என்று கூறப்படுகிறது.
மகம் நட்சத்திரகாரர்கள் ஏதேனும் ஒரு மாதத்தில் வரும் தங்களின் பிறந்த நட்சத்திர தினத்தன்று திருப்பாம்புரம் சென்று விரதம் இருந்து அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். விரதம் இருந்து சித்தர்கள், ரிஷிகள் ஆகியோர்களின் ஜீவ சமாதி கோயிலுக்கு சென்று வழிபட வேண்டும். சிவயோகிகள், ஞானிகள் போன் றோருக்கு அன்ன தானம் அல்லது சேவைகளையோ செய்ய வேண்டும்.
மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எந்தக்காரணம் கொண்டும் பாம்புகளை துன்புறுத்தவோ, கொல்லவோ கூடாது. பாம்பு வசிக்கும் புற்றுகளையும் இடிக்க கூடாது. வருடந்தோறும் வரும் தை, ஆடி, மகாளய அமாவாசை தினங்களில் தர்ப்பணம் தந்து வழிபட வேண்டும். தினமும் காலையில் மறைந்த முன்னோர்களின் படங்களுக்கு தீபம் ஏற்றி வழிபடுவது கேது பகவானின் அருளை பெற்று தரும்.
பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திர தினத்தில் பவுர்ணமி நிலவு ஒளிவீசும் தினத்தை ஒரு விரத நாளாகவே கருதி முருகனை வழிபட்டால் கன்னியர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும்.
பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திர தினத்தில் பவுர்ணமி நிலவு ஒளிவீசும் தினத்தை ஒரு விரத நாளாகவே கருதி முருகனை வழிபட்டால் கன்னியர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும். திருமணம் ஆன பெண்களின் மாங்கல்யம் பலம் பெறும்.
பங்குனி உத்திர விரதத்தை எப்படி மேற்கொள்வது?
பங்குனி உத்திரம் தினத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு வீட்டில் விளக்கேற்றி முருகப்பெருமானை வணங்க வேண்டும். நாளை ஒரு வேலை மட்டுமே உணவு உண்டு விரதம் இருக்க வேண்டும்.
ஆண், பெண் என அனைவருமே இந்த விரதத்தை அனுசரிக்கலாம். அதிகாலையில் குளித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் ஒரு விளக்கு ஏற்றி வைத்து முருகன் துதிப் பாடல்களை பாடலாம். அன்று முழுவதும் எந்த உணவையும் எடுத்துக் கொள்ளாமல் விரதம் மேற்கொள்ளலாம்.
முடிந்தால் பகல் வேளையில் ஏழை- எளியவர்ளுக்கு அன்னதானம் செய்யலாம். இந்த திருநாளில் தண்ணீர் பந்தல் அமைத்து நீர், மோர் வழங்குபவர் வளம் பெறுவார்கள்.
மாலையில் அருகில் உள்ள முருகன் கோவில் அல்லது முருகன் சன்னதி உளள கோவிலுக்கு சென்று முருகனை தரிசித்து வரலாம். பிறகு இரவில் சாத்வீகமான உணவை எடுத்துக் கொண்டு விரதத்தை முடித்துக் கொள்ளலாம்.
பங்குனி உத்திர விரதத்தை எப்படி மேற்கொள்வது?
பங்குனி உத்திரம் தினத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு வீட்டில் விளக்கேற்றி முருகப்பெருமானை வணங்க வேண்டும். நாளை ஒரு வேலை மட்டுமே உணவு உண்டு விரதம் இருக்க வேண்டும்.
ஆண், பெண் என அனைவருமே இந்த விரதத்தை அனுசரிக்கலாம். அதிகாலையில் குளித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் ஒரு விளக்கு ஏற்றி வைத்து முருகன் துதிப் பாடல்களை பாடலாம். அன்று முழுவதும் எந்த உணவையும் எடுத்துக் கொள்ளாமல் விரதம் மேற்கொள்ளலாம்.
முடிந்தால் பகல் வேளையில் ஏழை- எளியவர்ளுக்கு அன்னதானம் செய்யலாம். இந்த திருநாளில் தண்ணீர் பந்தல் அமைத்து நீர், மோர் வழங்குபவர் வளம் பெறுவார்கள்.
மாலையில் அருகில் உள்ள முருகன் கோவில் அல்லது முருகன் சன்னதி உளள கோவிலுக்கு சென்று முருகனை தரிசித்து வரலாம். பிறகு இரவில் சாத்வீகமான உணவை எடுத்துக் கொண்டு விரதத்தை முடித்துக் கொள்ளலாம்.
பங்குனி உத்திரம் அன்று பரம்பொருளான அண்ணாமலையாரை அன்போடு முறைப்படி விரதம் இருந்து வழிபட்டால் நம் வாழ்வில் எத்துனை இகபர இன்பங்கள் உண்டோ, அத்தனை இன்பங்களையும் பெறலாம்.
அங்கு இங்கு எனாதபடி எங்கும் நிறைந்து இருக்கும் பரபிரம்மம் சிவபெருமானே. பிரணவத்தின் ரூபமாகவும், தேஜோமயமாகவும், பிரம்ம, விஷ்ணு மூர்த்திகளே காண இல்லாத மூர்த்தியான அண்ணாமலையார், நமக்கு கல்யாண திருக்கோலத்தில் காட்சி அளிக்கும் தினமே பங்குனி உத்திர தினமாகும்.
இப்படி பெருமைமிக்க திருவண்ணாமலையில் ‘பங்குனி உத்தரம்’ திருக்கல்யாண உற்சவ வைபவம் பெரும் சிறப்புடையது. அன்றையதினம் உச்சிக்காலத்தில் பஞ்சமூர்த்திகளுக்கும் அபிஷேக அலங்காரம் செய்விக்கப்படும். அதன்பின் எங்குமே காணாத வண்ணம் கருவறையில் வீற்றிருக்கும் மூலவரான அருணாசலேஸ்வரர் போகசக்தி தாயாருக்கும் அதனை தொடர்ந்து உபசாரம் நடைபெறும். பின்னர் மாலை பொழுதில் உண்ணாமலை அம்மன் குமரக்கோவிலில் இருந்து மணப்பெண்ணாக சீர்வரிசையுடன் திருமணக்கோலம் கொண்டு திருக்கோவிலுக்குள் அழைத்து வரப்படுவார்.
அங்கே மாப்பிள்ளையாக அலங்கார ரூபமாக அண்ணாமலையார் மேளதாளம் முழக்க தன் யதஸ்தானம் விட்டு வெளியே வருவார். அக்காட்சி காண நமக்கு நூறு கண்கள் வேண்டும். பின் சுவாமி கொடிமரம் அருகில் உற்சவர் அண்ணாமலையாருக்கும், உண்ணாமலை அம்மனுக்கும் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெறும்.
அதனை தொடர்ந்து திருக்கல்யாண மண்டபத்திற்கு எழுந்து அருளுவார்கள். பின்னர் பூஜைகள் முடிவுற்று மூலஸ்தானம் முழுக்கு, வேதகாம மந்திரங்கள் ஒலிக்க, பக்தர்களின் ‘அரகர’ கோஷம் விண்ணை பிளக்க திருமாங்கல்ய தாரனம் என்னும் திருதாலி கட்டப்படும். பின்பு உபசாரங்கள், சைவாகமங்கள், திருமுறைகள் பாராயணம் செய்து அண்ணாமலையாருக்கும் உண்ணாமலை அம்மனுக்கும் சமர்ப்பணம் செய்யப்படும். பின் தர்மத்தின் வடிவான ரிஷப வாகனம் மீது (தங்க ரிஷபம்) பவனி வருதல் நடைபெறும்.
மறுநாள் கீழ்நாத்தூர் சென்று மருவுண்ணலும், அதனை தொடர்ந்து நலங்கு மற்றும் ஊஞ்சல் உற்சவம் மூன்று நாட்கள் நடைபெறும். இக்காலத்தில் காலையில் ஹோமமும், இரவு பொழுதில் ஊஞ்சல் சேவையும் காணலாம். பின்பு மறுநாள் உச்சிக்காலம் முடிவு பெற்று பாலிகை கரைக்கும் நிகழ்ச்சி நடைபெறும். இதற்கு தேவியரும், ஈசணாரும் தாமரை குளத்திற்கு செல்வார்கள். அங்கு நிகழ்ச்சி நிறைவு பெற்று தாமரைகுளம் ராஜா மண்டபத்தில் அபிஷேகமும், மாலை குமரகோவிலில் மண்டகப்படி, காமாட்சியம்மன் கோவிலில் மண்டகப்படி ஏற்று திருவீதி உலா வந்து திருக்கோவில் அடைவர்.
இப்படி மிக, மிக சிறப்பாக கொண்டாடப்படும் விழா பங்குனி உத்திர விழா. மேலும் அந்த தினத்தில் அனேக கோவில்களில் திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடைபெறும். இந்த பெருமைமிக்க வைபவத்தில் இருக்க கூடிய விரதத்தின் பலன் ஏராளம். முன்பொரு சமயம் பிரும்மதேவர், சரஸ்வதி தேவியையும், தேவேந்திரன் இந்திரராணியையும் தங்கள் மனைவிகளாக அடைந்தார்கள். சந்திரன் இந்த விரத மகிமையால் அசுவினி முதலான இருப்பத்தியேழு நட்சத்திரங்களை தம் மனைவிகளாக அடைந்தான்.
அகஸ்திய முனிவரும் பூர்வத்தில் இந்த சிறந்த விரதத்தை, அனுஷ்டித்து, அதன் பயனாக லோபாமுத்திரையை தம் மனைவியாக அடைந்தார். இந்த விரத மகிமையாலேயே மன்மதன் ரதிதேவியை தன் மனைவியாக அடைந்தான்.
பங்குனி விரதத்தை முறைப்படி குறைவில்லாது அனுஷ்டித்து வரும் இளைஞர்களுக்கு நல்ல பெண்ணும், கன்னிப் பெண்களுக்கு நல்ல வரனும் அமையும். தம்பதிகள் இந்த விரதத்தை அனுஷ்டிப்பதன் மூலம் புத்திரச் செல்வங்களையும் விரும்பிய பொருட்களையும் பெற்று மகிழ்வார்கள் என்று புராணங்கள் கூறுகின்றன.
இந்த நன்நாளில் பரம்பொருளான அண்ணாமலையாரை அன்போடு முறைப்படி விரதம் இருந்து வழிபட்டால் நம் வாழ்வில் எத்துனை இகபர இன்பங்கள் உண்டோ, அத்தனை இன்பங்களையும் பெறலாம். இத்தகைய சிறப்புகள் கொண்ட பங்குனி உத்திரம் விழாவை கண்டு வாழ்வில் அனைத்து இன்பங்களும் பெற எல்லாம் வல்ல உண்ணாமலை உடனாகிய அண்ணாமலையாரை பிரார்த்திக்கிறேன்.
இப்படி பெருமைமிக்க திருவண்ணாமலையில் ‘பங்குனி உத்தரம்’ திருக்கல்யாண உற்சவ வைபவம் பெரும் சிறப்புடையது. அன்றையதினம் உச்சிக்காலத்தில் பஞ்சமூர்த்திகளுக்கும் அபிஷேக அலங்காரம் செய்விக்கப்படும். அதன்பின் எங்குமே காணாத வண்ணம் கருவறையில் வீற்றிருக்கும் மூலவரான அருணாசலேஸ்வரர் போகசக்தி தாயாருக்கும் அதனை தொடர்ந்து உபசாரம் நடைபெறும். பின்னர் மாலை பொழுதில் உண்ணாமலை அம்மன் குமரக்கோவிலில் இருந்து மணப்பெண்ணாக சீர்வரிசையுடன் திருமணக்கோலம் கொண்டு திருக்கோவிலுக்குள் அழைத்து வரப்படுவார்.
அங்கே மாப்பிள்ளையாக அலங்கார ரூபமாக அண்ணாமலையார் மேளதாளம் முழக்க தன் யதஸ்தானம் விட்டு வெளியே வருவார். அக்காட்சி காண நமக்கு நூறு கண்கள் வேண்டும். பின் சுவாமி கொடிமரம் அருகில் உற்சவர் அண்ணாமலையாருக்கும், உண்ணாமலை அம்மனுக்கும் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெறும்.
அதனை தொடர்ந்து திருக்கல்யாண மண்டபத்திற்கு எழுந்து அருளுவார்கள். பின்னர் பூஜைகள் முடிவுற்று மூலஸ்தானம் முழுக்கு, வேதகாம மந்திரங்கள் ஒலிக்க, பக்தர்களின் ‘அரகர’ கோஷம் விண்ணை பிளக்க திருமாங்கல்ய தாரனம் என்னும் திருதாலி கட்டப்படும். பின்பு உபசாரங்கள், சைவாகமங்கள், திருமுறைகள் பாராயணம் செய்து அண்ணாமலையாருக்கும் உண்ணாமலை அம்மனுக்கும் சமர்ப்பணம் செய்யப்படும். பின் தர்மத்தின் வடிவான ரிஷப வாகனம் மீது (தங்க ரிஷபம்) பவனி வருதல் நடைபெறும்.
மறுநாள் கீழ்நாத்தூர் சென்று மருவுண்ணலும், அதனை தொடர்ந்து நலங்கு மற்றும் ஊஞ்சல் உற்சவம் மூன்று நாட்கள் நடைபெறும். இக்காலத்தில் காலையில் ஹோமமும், இரவு பொழுதில் ஊஞ்சல் சேவையும் காணலாம். பின்பு மறுநாள் உச்சிக்காலம் முடிவு பெற்று பாலிகை கரைக்கும் நிகழ்ச்சி நடைபெறும். இதற்கு தேவியரும், ஈசணாரும் தாமரை குளத்திற்கு செல்வார்கள். அங்கு நிகழ்ச்சி நிறைவு பெற்று தாமரைகுளம் ராஜா மண்டபத்தில் அபிஷேகமும், மாலை குமரகோவிலில் மண்டகப்படி, காமாட்சியம்மன் கோவிலில் மண்டகப்படி ஏற்று திருவீதி உலா வந்து திருக்கோவில் அடைவர்.
இப்படி மிக, மிக சிறப்பாக கொண்டாடப்படும் விழா பங்குனி உத்திர விழா. மேலும் அந்த தினத்தில் அனேக கோவில்களில் திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடைபெறும். இந்த பெருமைமிக்க வைபவத்தில் இருக்க கூடிய விரதத்தின் பலன் ஏராளம். முன்பொரு சமயம் பிரும்மதேவர், சரஸ்வதி தேவியையும், தேவேந்திரன் இந்திரராணியையும் தங்கள் மனைவிகளாக அடைந்தார்கள். சந்திரன் இந்த விரத மகிமையால் அசுவினி முதலான இருப்பத்தியேழு நட்சத்திரங்களை தம் மனைவிகளாக அடைந்தான்.
அகஸ்திய முனிவரும் பூர்வத்தில் இந்த சிறந்த விரதத்தை, அனுஷ்டித்து, அதன் பயனாக லோபாமுத்திரையை தம் மனைவியாக அடைந்தார். இந்த விரத மகிமையாலேயே மன்மதன் ரதிதேவியை தன் மனைவியாக அடைந்தான்.
பங்குனி விரதத்தை முறைப்படி குறைவில்லாது அனுஷ்டித்து வரும் இளைஞர்களுக்கு நல்ல பெண்ணும், கன்னிப் பெண்களுக்கு நல்ல வரனும் அமையும். தம்பதிகள் இந்த விரதத்தை அனுஷ்டிப்பதன் மூலம் புத்திரச் செல்வங்களையும் விரும்பிய பொருட்களையும் பெற்று மகிழ்வார்கள் என்று புராணங்கள் கூறுகின்றன.
இந்த நன்நாளில் பரம்பொருளான அண்ணாமலையாரை அன்போடு முறைப்படி விரதம் இருந்து வழிபட்டால் நம் வாழ்வில் எத்துனை இகபர இன்பங்கள் உண்டோ, அத்தனை இன்பங்களையும் பெறலாம். இத்தகைய சிறப்புகள் கொண்ட பங்குனி உத்திரம் விழாவை கண்டு வாழ்வில் அனைத்து இன்பங்களும் பெற எல்லாம் வல்ல உண்ணாமலை உடனாகிய அண்ணாமலையாரை பிரார்த்திக்கிறேன்.
கன்னிப்பெண்களும், சுமங்கலிப் பெண்களும் ராகுகால விரத பூஜை செய்தால் அவர்கள் மனதில் எண்ணிய காரியம் நிறைவேறும்.
கன்னிப்பெண்களும், சுமங்கலிப் பெண்களும் ராகுகால விரத பூஜை செய்தால் அவர்கள் மனதில் எண்ணிய காரியம் நிறைவேறும்.
பொதுவாக வெள்ளிக்கிழமைகளில் ராகுகால விரத பூஜை செய்வார்கள். ஆனால் அனைத்துக் கிழமைகளிலும் ராகுகாலத்தின்போது பூஜைகள் செய்து வழிபடலாம். அப்படி வழிபடும் போது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான மலர்களைக் கொண்டு வழிபட வேண்டும்.
அப்படி வழிபட்டால் அனைத்து நலன்களும் பெறலாம். பலன்கள் இரட்டிப்பாகும் என்பது நம்பிக்கை.
ஞாயிற்றுக்கிழமை - பாரிஜாதம், வில்வம்
திங்கட்கிழமை - வெள்ளை அரளி
செவ்வாய்க்கிழமை - செம்பருத்தி, செவ்வரளி
புதன்கிழமை - துளசி
வியாழக்கிழமை - சாமந்தி
வெள்ளிக்கிழமை - வெள்ளை அரளி
சனிக்கிழமை - சங்கு புஷ்பம்
பொதுவாக வெள்ளிக்கிழமைகளில் ராகுகால விரத பூஜை செய்வார்கள். ஆனால் அனைத்துக் கிழமைகளிலும் ராகுகாலத்தின்போது பூஜைகள் செய்து வழிபடலாம். அப்படி வழிபடும் போது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான மலர்களைக் கொண்டு வழிபட வேண்டும்.
அப்படி வழிபட்டால் அனைத்து நலன்களும் பெறலாம். பலன்கள் இரட்டிப்பாகும் என்பது நம்பிக்கை.
ஞாயிற்றுக்கிழமை - பாரிஜாதம், வில்வம்
திங்கட்கிழமை - வெள்ளை அரளி
செவ்வாய்க்கிழமை - செம்பருத்தி, செவ்வரளி
புதன்கிழமை - துளசி
வியாழக்கிழமை - சாமந்தி
வெள்ளிக்கிழமை - வெள்ளை அரளி
சனிக்கிழமை - சங்கு புஷ்பம்
சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமையன்று விரதம் இருந்து பிரதோஷ தரிசனம் செய்பவர்கள் எல்லா தேவர்களையும் தரிசித்த புண்ணியத்தை பெறுகிறார்கள்.
சிவபெருமானுக்கு உகந்த நாள், சோமவாரம். திங்கட் கிழமையைத் தான் சோமவாரம் என்று அழைப்பார்கள். ‘சோம’ என்றால் பார்வதியுடன் கூடிய சிவபெருமான் என்றும், சந்திரன் என்றும் பொருள்படும். கொடிய நோயால் பாதிக்கப்பட்ட சந்திரன், தன் நோய் குணமாக வேண்டி ஈசனை நினைத்து தவம் இருந்தான். சந்திரனின் தவத்தால் மகிழ்ந்த சிவபெருமான், அவனது நோயை நீக்கியதுடன், நவக்கிரகங் களில் ஒருவராக திகழும் வாய்ப்பையும் வழங்கினார். அந்த நாள் சோமவாரம் ஆகும்.
சிவபெருமானுக்கு திங்கள் கிழமை மிகவும் விசேஷம். திங்கள் கிழமை வரும் பிரதோஷத்திற்கு விரதம் இருந்து சிவபெருமானை வழிபாடு செய்தால் எண்ணிய எண்ணங்கள் அனைத்தும் ஈடேறும் என்பது ஐதீகம்.
இன்றைய பிரதோஷத்தின் மகிமை என்னவென்றால் சிவனுக்கு உகந்த நாள் நட்சத்திரம் திதி ஒன்றாக வரும் அபூர்வ அமைப்பு கொண்டது. சிவனுக்குரிய வழிபாடுகளில் சிவராத்திரியும் பிரதோஷமும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றன. மனிதர்களின் தோஷமான பாவத்தை நீக்குவதால் பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது.
சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமையன்று பிரதோஷ தரிசனம் செய்பவர்கள் எல்லா தேவர்களையும் தரிசித்த புண்ணியத்தை பெறுகிறார்கள். சோமவார பிரதோஷ தினத்தில் ஈஸ்வரனை வழிபட்டால் அவர் உள்ளம் குளிரும். நம் சோதனைகளைத் தவிடுபொடியாக்குவார்; நாம் தொட்டதெல்லாம் துலங்கும்படி வரம் அருளுவார். ஈசனின் பாதத்தை சிக்கெனப் பற்றுவோம். வேண்டியன எல்லாம் பெறுவோம்!
நம்பிக்கையோடு 'நமசிவாய' எனும் ஐந்தெழுத்து மந்திரத்தை உளமார ஜபித்து, பிரதோஷ காலத்தில் நந்தியம்பெருமானுக்கு நடக்கும் அபிஷேக ஆராதனையிலும், ஈஸ்வர பூஜையிலும் கலந்து கொண்டு இறைவனை வழிபட்டால் நினைத்தது நடக்கும்; தீவினை விலகும்; நன்மையெல்லாம் பெருகும். அதிலும், சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமை சிவபெருமானுக்கு உகந்த தினம்.
அன்றைக்கு வரும் பிரதோஷம் மிக விசேஷம். சோமவார பிரதோஷத்தில் ஈசனை வணங்கினால், நம்முடைய தோஷங்கள் நீங்கும். சோதனைகள் எல்லாம் சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப்போகும்.
இந்த சோமவார பிரதோஷ தினத்தில் ஈஸ்வரனை வழிபட்டால் அவர் உள்ளம் குளிரும். நம் சோதனைகளைத் தவிடுபொடியாக்குவார். நாம் தொட்டதெல்லாம் துலங்கும்படி வரம் அருளுவார். ஈசனின் பாதத்தை பற்றுவோம். வேண்டியன எல்லாம் பெறுவோம்!
சிவபெருமானுக்கு திங்கள் கிழமை மிகவும் விசேஷம். திங்கள் கிழமை வரும் பிரதோஷத்திற்கு விரதம் இருந்து சிவபெருமானை வழிபாடு செய்தால் எண்ணிய எண்ணங்கள் அனைத்தும் ஈடேறும் என்பது ஐதீகம்.
இன்றைய பிரதோஷத்தின் மகிமை என்னவென்றால் சிவனுக்கு உகந்த நாள் நட்சத்திரம் திதி ஒன்றாக வரும் அபூர்வ அமைப்பு கொண்டது. சிவனுக்குரிய வழிபாடுகளில் சிவராத்திரியும் பிரதோஷமும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றன. மனிதர்களின் தோஷமான பாவத்தை நீக்குவதால் பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது.
சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமையன்று பிரதோஷ தரிசனம் செய்பவர்கள் எல்லா தேவர்களையும் தரிசித்த புண்ணியத்தை பெறுகிறார்கள். சோமவார பிரதோஷ தினத்தில் ஈஸ்வரனை வழிபட்டால் அவர் உள்ளம் குளிரும். நம் சோதனைகளைத் தவிடுபொடியாக்குவார்; நாம் தொட்டதெல்லாம் துலங்கும்படி வரம் அருளுவார். ஈசனின் பாதத்தை சிக்கெனப் பற்றுவோம். வேண்டியன எல்லாம் பெறுவோம்!
நம்பிக்கையோடு 'நமசிவாய' எனும் ஐந்தெழுத்து மந்திரத்தை உளமார ஜபித்து, பிரதோஷ காலத்தில் நந்தியம்பெருமானுக்கு நடக்கும் அபிஷேக ஆராதனையிலும், ஈஸ்வர பூஜையிலும் கலந்து கொண்டு இறைவனை வழிபட்டால் நினைத்தது நடக்கும்; தீவினை விலகும்; நன்மையெல்லாம் பெருகும். அதிலும், சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமை சிவபெருமானுக்கு உகந்த தினம்.
அன்றைக்கு வரும் பிரதோஷம் மிக விசேஷம். சோமவார பிரதோஷத்தில் ஈசனை வணங்கினால், நம்முடைய தோஷங்கள் நீங்கும். சோதனைகள் எல்லாம் சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப்போகும்.
இந்த சோமவார பிரதோஷ தினத்தில் ஈஸ்வரனை வழிபட்டால் அவர் உள்ளம் குளிரும். நம் சோதனைகளைத் தவிடுபொடியாக்குவார். நாம் தொட்டதெல்லாம் துலங்கும்படி வரம் அருளுவார். ஈசனின் பாதத்தை பற்றுவோம். வேண்டியன எல்லாம் பெறுவோம்!
மாசி மாதம் ஏகாதசியை ஒட்டி வரும் சிறப்பு மிக்க விரதம் ‘காரடையான் நோன்பு.’ பெண்களின் மாங்கல்ய பலத்துக்காக மேற்கொள்ளப்படும் விரதத்தில் இது முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.
மாசி மாதம் ஏகாதசியை ஒட்டி வரும் சிறப்பு மிக்க விரதம் ‘காரடையான் நோன்பு.’ பெண்களின் மாங்கல்ய பலத்துக்காக மேற்கொள்ளப்படும் விரதத்தில் இது முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. இந்த விரதம் ‘சாவித்திரி விரதம்’, ‘காமாட்சி விரதம்’ எனப் பல பெயர்களால் அழைக்கப்படுகிறது.
அஸ்வபதி என்ற மன்னனின் மகள் சாவித்திரி. இவள் ஒரு முறை காட்டிற்குள் சென்றபோது, அங்கு வாழ்ந்து வந்த சத்தியவான் என்ற இளைஞனை சந்தித்து காதல் வயப்பட்டாள். நாட்டிற்கு திரும்பியதும், தன்னுடைய காதலைப்பற்றி தந்தையிடம் தெரிவித்தாள்.
அஸ்வபதி மன்னன், அந்த இளைஞன் யார் என்று விசாரிக்க நினைத்தார். அப்போது நாரதர் மூலமாக, அவன் ஒரு அரசகுமாரன் என்பதும், குறைந்த ஆயுளைக் கொண்டவன் என்பதும் தெரியவந்தது. சத்தியவானின் ரகசியத்தை அறிந்து கொண்ட மன்னன், தன்னுடைய மகளை அவனுக்கு மணம் முடித்துக் கொடுக்கத் தயங்கினான். ஆனால் சாவித்திரி அதை ஏற்றுக்கொள்ளவில்லை. “சத்தியவானைத் தான் திருமணம் செய்து கொள்வேன்” என்று தந்தையிடம் உறுதியாகச் சொல்லிவிட்டாள்.
மகளின் பிடிவாதத்தை கண்டு மனம் பதறினாலும், வேறு வழியில்லாமல் சத்தியவானுக்கே, சாவித்திரியை மணம் முடித்துக் கொடுத்தார். திருணத்திற்குப் பிறகு காட்டில் சத்தியவானுடன் வாழ்ந்து வந்தாள், சாவித்திரி. சரியாக ஒரு வருடம் முடிந்த நிலையில், சாவித்திரியின் மடியில் படுத்திருந்த நிலையிலேயே சத்தியவான் உயிர் பிரிந்தது. அன்றைய தினம் ‘காரடையான் நோன்பு’ ஆகும்.
யார் கண்ணுக்கும் தென் படாத வகையில் அரூபமாக வந்த எமதர்மன், சத்தியவானின் உயிரை எடுத்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டார். ஆனால் காரடையான் நோன்பை முறைப்படி செய்து வந்த சாவித்திரியின் கண்களில் இருந்து எமதர்மன் தப்ப முடியவில்லை. அது எமதர்மனுக்கே தெரிந்தாலும் கூட, அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அங்கிருந்து அகல முற்பட்டார்.
எமதர்மன் செல்லச் செல்ல, அவரைப் பின்தொடர்ந்து சென்றாள் சாவித்திரி. ‘இவள் எதற்காக நம்மை பின் தொடர்ந்து வருகிறாள்’ என்று நினைத்த எம தர்மன், அதை அவளிடமே கேட்டுத் தெரிந்து கொள்வது என்று முடிவு செய்தார். “ஏ, பெண்ணே.. உனக்கு என்ன வேண்டும். எதற்காக என்னைப் பின் தொடர்ந்து வருகிறாய்?” என்று கேட்டார்.
சாவித்திரி அதற்கு எந்தப் பதிலையும் சொல்லவில்லை.
எமதர்மனே தொடர்ந்தார். “உன்னுடைய கணவனுக்காகத்தான் நீ என்னை பின் தொடர்கிறாய் என்றால், அதில் உனக்கு என்னால் எந்த நன்மைகளையும் செய்ய முடியாது. அவனது உயிர் திரும்புவது முடியாத காரியம். எனவே வேறு ஏதாவது வரம் என்னிடம் இருந்து உனக்கு வேண்டுமானால் கேள், நிச்சயமாக தருகிறேன்” என்றார்.
எமதர்மன் அப்படிக் கேட்டதும், சாவித்திரி சாதுரியமாக செயல்பட்டு ஒரு வரத்தைக் கேட்டாள். அதாவது “எனக்குப் பிறக்கின்ற நூறு குழந்தைகளைத் தன்னுடைய மடியில் வைத்துக் கொண்டு, என் மாமனார் கொஞ்ச வேண்டும்” என்று கேட்டாள்.
சாவித்திரி அப்படிக் கேட்டதும், யோசிக்காமல் எமதர்மன் “அப்படியே ஆகட்டும்” என்று சொல்லி விட்டு, அங்கிருந்து புறப்பட்டார்.
ஆனால் அவரை மீண்டும் சாவித்திரி தடுத்து நிறுத்தினாள்.
‘எதற்காக தடுத்தாய்?’ என்பது போல் பார்த்த எமதர்மனிடம், “சரி.. நீங்கள் கொடுத்த வரத்தின்படி என்னுடைய கணவரின் உயிரைத் திருப்பித் தாருங்கள்” என்று கேட்டாள்.
அப்போதுதான் அவருக்கு, எப்படிப்பட்ட ஒரு வரத்தைக் கொடுத்திருக்கிறோம் என்பது தெரிந்தது. கொடுத்த வரத்தை மீற முடியாது என்பதால், சத்தியவானின் உயிரை திருப்பிக் கொடுத்து விட்டு அங்கிருந்து அகன்றார் எமதர்மன்.
சத்தியவானின் உயிரை சாவித்திரி மீண்டும் பெறு வதற்கு அவளுக்கு பெரும் உதவியாக இருந்தது, அவள் முறையாக கடைப்பிடித்து வந்த ‘காரடையான் நோன்பு’தான். அதனால் தான் இந்த விரதம் ‘சாவித்திரி விரதம்’ என்றும் பெயர்பெற்றது. இது காமாட்சி அம்மன் கடைப்பிடித்த விரதம் என்பதால் அது ‘காமாட்சி விரதம்’ என்றும் பெயரானது.
விரதம் இருப்பது எப்படி?
திருமணம் முடித்த பெண்கள், காரடையான் நோன்பு தினத்தன்று அதிகாலையில் எழுந்து நீராட வேண்டும். நீராடும் போது முகத்தில் மஞ்சள் பூசி நீராடுவது சிறப்பு. நெற்றியில் குங்குமம் வைத்து வீட்டை சுத்தம் செய்ய வேண்டும். பின்னர் பூஜை அறைக்குள் கோலம் போட வேண்டும். அந்த கோலத்தின் மீது கும்பம் வைத்து, கும்பத்திற்கு சந்தனம், குங்குமம் இட்டு, பூ சூட்டி, கும்பத்தின் மீது மஞ்சள் தடவிய நோன்பு கயிற்றைக் கட்ட வேண்டும். இந்த விரதத்திற்காக காரடை செய்து நைவேத்தியம் படைக்கலாம்.
கார் அரிசியை மாவாக மாற்றி, அதனுடன் புதியதாக விளைந்த துவரையையும் சேர்த்து அடை செய்து நைவேத்தியமாக படைக்க வேண்டும். அப்போது அம்மனுக்குரிய சுலோகங்களை சொல்லி, கும்பத்தில் கட்டியிருக்கும் நோன்பு கயிற்றை எடுத்து, “நீடித்த மாங்கல்ய பலம் தர வேண்டும் தாயே” என்று வேண்டிக்கொண்டு, இறைவியை நினைத்து கணவன் கையால், தங்களது கையில் அல்லது கழுத்தில் கட்டிக் கொள்ள வேண்டும். இந்த விரதத்தை பெண்கள் மேற்கொள்வதால், கணவனுக்கு நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது ஐதீகம்.
அஸ்வபதி என்ற மன்னனின் மகள் சாவித்திரி. இவள் ஒரு முறை காட்டிற்குள் சென்றபோது, அங்கு வாழ்ந்து வந்த சத்தியவான் என்ற இளைஞனை சந்தித்து காதல் வயப்பட்டாள். நாட்டிற்கு திரும்பியதும், தன்னுடைய காதலைப்பற்றி தந்தையிடம் தெரிவித்தாள்.
அஸ்வபதி மன்னன், அந்த இளைஞன் யார் என்று விசாரிக்க நினைத்தார். அப்போது நாரதர் மூலமாக, அவன் ஒரு அரசகுமாரன் என்பதும், குறைந்த ஆயுளைக் கொண்டவன் என்பதும் தெரியவந்தது. சத்தியவானின் ரகசியத்தை அறிந்து கொண்ட மன்னன், தன்னுடைய மகளை அவனுக்கு மணம் முடித்துக் கொடுக்கத் தயங்கினான். ஆனால் சாவித்திரி அதை ஏற்றுக்கொள்ளவில்லை. “சத்தியவானைத் தான் திருமணம் செய்து கொள்வேன்” என்று தந்தையிடம் உறுதியாகச் சொல்லிவிட்டாள்.
மகளின் பிடிவாதத்தை கண்டு மனம் பதறினாலும், வேறு வழியில்லாமல் சத்தியவானுக்கே, சாவித்திரியை மணம் முடித்துக் கொடுத்தார். திருணத்திற்குப் பிறகு காட்டில் சத்தியவானுடன் வாழ்ந்து வந்தாள், சாவித்திரி. சரியாக ஒரு வருடம் முடிந்த நிலையில், சாவித்திரியின் மடியில் படுத்திருந்த நிலையிலேயே சத்தியவான் உயிர் பிரிந்தது. அன்றைய தினம் ‘காரடையான் நோன்பு’ ஆகும்.
யார் கண்ணுக்கும் தென் படாத வகையில் அரூபமாக வந்த எமதர்மன், சத்தியவானின் உயிரை எடுத்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டார். ஆனால் காரடையான் நோன்பை முறைப்படி செய்து வந்த சாவித்திரியின் கண்களில் இருந்து எமதர்மன் தப்ப முடியவில்லை. அது எமதர்மனுக்கே தெரிந்தாலும் கூட, அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அங்கிருந்து அகல முற்பட்டார்.
எமதர்மன் செல்லச் செல்ல, அவரைப் பின்தொடர்ந்து சென்றாள் சாவித்திரி. ‘இவள் எதற்காக நம்மை பின் தொடர்ந்து வருகிறாள்’ என்று நினைத்த எம தர்மன், அதை அவளிடமே கேட்டுத் தெரிந்து கொள்வது என்று முடிவு செய்தார். “ஏ, பெண்ணே.. உனக்கு என்ன வேண்டும். எதற்காக என்னைப் பின் தொடர்ந்து வருகிறாய்?” என்று கேட்டார்.
சாவித்திரி அதற்கு எந்தப் பதிலையும் சொல்லவில்லை.
எமதர்மனே தொடர்ந்தார். “உன்னுடைய கணவனுக்காகத்தான் நீ என்னை பின் தொடர்கிறாய் என்றால், அதில் உனக்கு என்னால் எந்த நன்மைகளையும் செய்ய முடியாது. அவனது உயிர் திரும்புவது முடியாத காரியம். எனவே வேறு ஏதாவது வரம் என்னிடம் இருந்து உனக்கு வேண்டுமானால் கேள், நிச்சயமாக தருகிறேன்” என்றார்.
எமதர்மன் அப்படிக் கேட்டதும், சாவித்திரி சாதுரியமாக செயல்பட்டு ஒரு வரத்தைக் கேட்டாள். அதாவது “எனக்குப் பிறக்கின்ற நூறு குழந்தைகளைத் தன்னுடைய மடியில் வைத்துக் கொண்டு, என் மாமனார் கொஞ்ச வேண்டும்” என்று கேட்டாள்.
சாவித்திரி அப்படிக் கேட்டதும், யோசிக்காமல் எமதர்மன் “அப்படியே ஆகட்டும்” என்று சொல்லி விட்டு, அங்கிருந்து புறப்பட்டார்.
ஆனால் அவரை மீண்டும் சாவித்திரி தடுத்து நிறுத்தினாள்.
‘எதற்காக தடுத்தாய்?’ என்பது போல் பார்த்த எமதர்மனிடம், “சரி.. நீங்கள் கொடுத்த வரத்தின்படி என்னுடைய கணவரின் உயிரைத் திருப்பித் தாருங்கள்” என்று கேட்டாள்.
அப்போதுதான் அவருக்கு, எப்படிப்பட்ட ஒரு வரத்தைக் கொடுத்திருக்கிறோம் என்பது தெரிந்தது. கொடுத்த வரத்தை மீற முடியாது என்பதால், சத்தியவானின் உயிரை திருப்பிக் கொடுத்து விட்டு அங்கிருந்து அகன்றார் எமதர்மன்.
சத்தியவானின் உயிரை சாவித்திரி மீண்டும் பெறு வதற்கு அவளுக்கு பெரும் உதவியாக இருந்தது, அவள் முறையாக கடைப்பிடித்து வந்த ‘காரடையான் நோன்பு’தான். அதனால் தான் இந்த விரதம் ‘சாவித்திரி விரதம்’ என்றும் பெயர்பெற்றது. இது காமாட்சி அம்மன் கடைப்பிடித்த விரதம் என்பதால் அது ‘காமாட்சி விரதம்’ என்றும் பெயரானது.
விரதம் இருப்பது எப்படி?
திருமணம் முடித்த பெண்கள், காரடையான் நோன்பு தினத்தன்று அதிகாலையில் எழுந்து நீராட வேண்டும். நீராடும் போது முகத்தில் மஞ்சள் பூசி நீராடுவது சிறப்பு. நெற்றியில் குங்குமம் வைத்து வீட்டை சுத்தம் செய்ய வேண்டும். பின்னர் பூஜை அறைக்குள் கோலம் போட வேண்டும். அந்த கோலத்தின் மீது கும்பம் வைத்து, கும்பத்திற்கு சந்தனம், குங்குமம் இட்டு, பூ சூட்டி, கும்பத்தின் மீது மஞ்சள் தடவிய நோன்பு கயிற்றைக் கட்ட வேண்டும். இந்த விரதத்திற்காக காரடை செய்து நைவேத்தியம் படைக்கலாம்.
கார் அரிசியை மாவாக மாற்றி, அதனுடன் புதியதாக விளைந்த துவரையையும் சேர்த்து அடை செய்து நைவேத்தியமாக படைக்க வேண்டும். அப்போது அம்மனுக்குரிய சுலோகங்களை சொல்லி, கும்பத்தில் கட்டியிருக்கும் நோன்பு கயிற்றை எடுத்து, “நீடித்த மாங்கல்ய பலம் தர வேண்டும் தாயே” என்று வேண்டிக்கொண்டு, இறைவியை நினைத்து கணவன் கையால், தங்களது கையில் அல்லது கழுத்தில் கட்டிக் கொள்ள வேண்டும். இந்த விரதத்தை பெண்கள் மேற்கொள்வதால், கணவனுக்கு நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது ஐதீகம்.
காரடையான் நோன்பு பொதுவாக கெளரி நோன்பு, சாவித்திரி விரதம், காமாட்சி நோன்பு என கூறுவர். சாவித்திரி நோன்பு என அழைக்கப்படும் இந்த விரதம் இருந்தால் கணவனின் ஆயுளை அதிகரிக்கும் என்பது ஐதீகம்.
மாசி மாதமும், பங்குனியும் கூடும் வேளையில் நோற்கப்படுவது தான் காரடையான் நோன்பு. கணவனின் ஆரோக்கியம் மற்றும் ஆயுள் விருத்தியை கொடுக்கும் காரடையான் நோன்பு இன்று கடைப்பிடிக்கப்படுகின்றது.
பூஜை செய்யும் காலம்:
காரடையான் நோன்பு தினம்: பங்குனி 1ம் தேதி (15-03-19)
நைவேத்தியம்:- காரடையான் நோன்பு அடை ( இனிப்பு, உப்பு)

கற்பில் சிறந்தவளான சாவித்திரி, ஆயுள் காலம் முடிந்து அவரின் கணவன் சத்யவானின் உயிரை எமதர்ம ராஜன் பரித்துச் சென்ற போது, எமனிடமிருந்து மீட்டு வந்தாள் என நம்பப்படுகிறது.
விரதம் இருக்கும் முறை:
இந்த விரதத்தை கடைப்பிடிக்கும் பெண்கள் பூஜை முடியும் வரை உண்ணாமல் இருக்க வேண்டும். முடியாதவர்கள் பழங்களை சாப்பிடலாம். அதிகாலை நீராடி, வீட்டை சுத்தம் செய்து, பூஜை அறையை அலங்கரித்து, வாசலை மா இலை தோரணம் கட்ட வேண்டும். பூஜை அறையில் காமாட்சி அம்மனின் படங்கள் அல்லது விக்ரகத்தை பூ மாலையால் அலங்கரிக்க வேண்டும்.
விரதம் அன்று செய்த அடையை சிறிது மீதம் வைத்து மறுநாள் பசுவுக்கு கொடுத்து, பசுவை வலம் வர வேண்டும் என்பது ஐதீகம். அதனால் தான் விரதத்தின் போது பால், தயிர் பொருட்களை சாப்பிடக்கூடாது.
இந்த விரதம் இருந்தால் விரதம் இருக்கும் பெண்ணின் கணவன் ஆயுள் விருத்தி, ஆரோக்கியம் பெருவான் என்பது ஐதீகம்.
பூஜை செய்யும் காலம்:
காரடையான் நோன்பு தினம்: பங்குனி 1ம் தேதி (15-03-19)
நைவேத்தியம்:- காரடையான் நோன்பு அடை ( இனிப்பு, உப்பு)
காரடையான் நோன்பு பொதுவாக கெளரி நோன்பு, சாவித்திரி விரதம், காமாட்சி நோன்பு என கூறுவர். சாவித்திரி நோன்பு என அழைக்கப்படும் இந்த விரதம் இருந்தால் கணவனின் ஆயுளை அதிகரிக்கும் என்பது ஐதீகம்.

கற்பில் சிறந்தவளான சாவித்திரி, ஆயுள் காலம் முடிந்து அவரின் கணவன் சத்யவானின் உயிரை எமதர்ம ராஜன் பரித்துச் சென்ற போது, எமனிடமிருந்து மீட்டு வந்தாள் என நம்பப்படுகிறது.
விரதம் இருக்கும் முறை:
இந்த விரதத்தை கடைப்பிடிக்கும் பெண்கள் பூஜை முடியும் வரை உண்ணாமல் இருக்க வேண்டும். முடியாதவர்கள் பழங்களை சாப்பிடலாம். அதிகாலை நீராடி, வீட்டை சுத்தம் செய்து, பூஜை அறையை அலங்கரித்து, வாசலை மா இலை தோரணம் கட்ட வேண்டும். பூஜை அறையில் காமாட்சி அம்மனின் படங்கள் அல்லது விக்ரகத்தை பூ மாலையால் அலங்கரிக்க வேண்டும்.
விரதம் அன்று செய்த அடையை சிறிது மீதம் வைத்து மறுநாள் பசுவுக்கு கொடுத்து, பசுவை வலம் வர வேண்டும் என்பது ஐதீகம். அதனால் தான் விரதத்தின் போது பால், தயிர் பொருட்களை சாப்பிடக்கூடாது.
இந்த விரதம் இருந்தால் விரதம் இருக்கும் பெண்ணின் கணவன் ஆயுள் விருத்தி, ஆரோக்கியம் பெருவான் என்பது ஐதீகம்.
ஸ்ரீதுர்க்காதேவிக்கு விரதம் இருந்து செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் எலுமிச்சை தீபம் ஏற்றி வந்தால் எந்தவிதமான திருமணத்தடைகளும் நீங்கி திருமணம் நடக்கும்.
ராகு காலமே பல பரிகாரங்கள் செய்ய உகந்த காலமாகும். ராகுகாலம் 1மணி 30 நிமிடமாகும். ஞாயிறு 4.30 - 6.00, திங்கள் 7.30 - 9.00, செவ்வாய் 3.00 - 4.30, புதன் 12.00 - 1.30, வியாழன் 1.30 - 3.00, வெள்ளி 10.30 - 12.00, சனி 9.00 - 10.30 ஆகும். ராகு காலத்தை பாம்பாக வைத்து முதல் அரை மணி நேரம் தலைப்பாகம், 2ம் அரை மணி நேரம் உடல்பாகம், 3-ம் அரை மணி நேரம் வால்பாகமும் ஆகும். இதில் இறுதி அரை மணி நேரம்தான் அமிர்தகடிகை எனும் விசேட காலமாகும்.
இந்த நேரம் பரிகாரங்கள் செய்ய மிகவும் உகந்த நேரமும், மிகவும் பலன் தரக்கூடியதும் ஆகும். இந்த நேரத்தில் பூஜைகள், பரிகாரங்கள் செய்வதால் தோஷங்கள் நீங்கி குடும்பம் சீரும் சிறப்புமாக இருக்கும்.
சுக்கிரவார(வெள்ளிக்கிழமை) ராகுகால பூஜை
விரதம் இருந்து 11 வாரங்கள் ஸ்ரீதுர்க்காதேவியை அமிர்தகடிகை நேரத்தில் (11.30 - 12.00) மஞ்சள், குங்குமம், பூ, தாலிக்கயிறு, வெற்றிலை பழம் பாக்கு வைத்து வணங்கி சுமங்கலி பெண்களிற்கு கொடுக்கவும். இதனால் திருமணத்தடை நீங்கும். மாங்கல்ய பலம் பெருகும். (கண்டிப்பாக எலுமிச்சை பழ தீபம் ஏற்றக்கூடாது)
மங்களவார (செவ்வாய்க்கிழமை) பூஜை
ஸ்ரீதுர்க்காதேவி விரதம் இருந்து சந்நதியில் அல்லது வீட்டில் செவ்வாய்க்கிழமை 4.00 - 4.30 மணியிலான அமிர்தகடிகை நேரத்தில் எலுமிச்சை சாதம், எலுமிச்சைபழ மாலை, நற்சீரக பானகம் வைத்து வணங்கி 9 சுமங்கலி பெண்களுக்கு தாம்பூலம் தட்சணை தந்து ஆசீர்வாதம் வாங்கினால் எந்தவிதமான திருமணத்தடைகளும் நீங்கி திருமணம் நடக்கும்.
துர்க்கைக்கு செவ்வரளி மாலை போட்டு, பசும்பாலில் தேன் கலந்து படையல் வைத்து, சம்பங்கிப் பூவினால் அர்ச்சனை செய்து வழிபட்டு அனைவருக்கும் படையலை தந்து பூஜை செய்தால் எவ்வித தரித்திரமும் நீங்கும்.
செவ்வாய்க்கிழமை ராகுகாலம் பத்திரகாளி அவதரித்த வேளையாதலால் விரதம் இருந்து அந்த நேரத்தில் காளி பூஜை செய்தால் அவள் அருள் முழமையாக கிடைப்பதுடன் சகல சர்ப்ப தேர்களும் விலகும்.
கேது திசை போக்கும் விநாயகர்
கேது புத்தி மற்றும் கேது திசை நடைபெறுபவர்கள் தினமும் விநாயகரை விரதம் இருந்து வழிபட்டால் கேதுவால் ஏற்படும் துன்பங்கள் குறையும்.
இந்த நேரம் பரிகாரங்கள் செய்ய மிகவும் உகந்த நேரமும், மிகவும் பலன் தரக்கூடியதும் ஆகும். இந்த நேரத்தில் பூஜைகள், பரிகாரங்கள் செய்வதால் தோஷங்கள் நீங்கி குடும்பம் சீரும் சிறப்புமாக இருக்கும்.
சுக்கிரவார(வெள்ளிக்கிழமை) ராகுகால பூஜை
15 வெள்ளிக்கிழமை அம்பாளிற்கு (மகாலட்சுமி) மல்லிகை, செந்தாமரை, மனோரஞ்சிதம் ஆகிய பூக்களில் ஏதாவது ஒரு பூவினால் அர்ச்சனை செய்து சர்க்கரைப் பொங்கல், வெள்ளை மொச்சை படைத்து பூஜை செய்யவும். இதனால் புகழ், செல்வம், வியாபார அபிவிருத்தி, புத்திரப்பேறு, குடும்ப ஒற்றுமை ஏற்படும்.
மங்களவார (செவ்வாய்க்கிழமை) பூஜை
ஸ்ரீதுர்க்காதேவி விரதம் இருந்து சந்நதியில் அல்லது வீட்டில் செவ்வாய்க்கிழமை 4.00 - 4.30 மணியிலான அமிர்தகடிகை நேரத்தில் எலுமிச்சை சாதம், எலுமிச்சைபழ மாலை, நற்சீரக பானகம் வைத்து வணங்கி 9 சுமங்கலி பெண்களுக்கு தாம்பூலம் தட்சணை தந்து ஆசீர்வாதம் வாங்கினால் எந்தவிதமான திருமணத்தடைகளும் நீங்கி திருமணம் நடக்கும்.
துர்க்கைக்கு செவ்வரளி மாலை போட்டு, பசும்பாலில் தேன் கலந்து படையல் வைத்து, சம்பங்கிப் பூவினால் அர்ச்சனை செய்து வழிபட்டு அனைவருக்கும் படையலை தந்து பூஜை செய்தால் எவ்வித தரித்திரமும் நீங்கும்.
செவ்வாய்க்கிழமை ராகுகாலம் பத்திரகாளி அவதரித்த வேளையாதலால் விரதம் இருந்து அந்த நேரத்தில் காளி பூஜை செய்தால் அவள் அருள் முழமையாக கிடைப்பதுடன் சகல சர்ப்ப தேர்களும் விலகும்.
கேது திசை போக்கும் விநாயகர்
கேது புத்தி மற்றும் கேது திசை நடைபெறுபவர்கள் தினமும் விநாயகரை விரதம் இருந்து வழிபட்டால் கேதுவால் ஏற்படும் துன்பங்கள் குறையும்.






