என் மலர்
முக்கிய விரதங்கள்
இந்து சமயத்தில் விரதங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த வகையில் சில முக்கியமான விரதங்களை பற்றி அறிந்து கொள்ளலாம்.
அமுக்தாபரண விரதம்: புரட்டாசி வளர்பிறை சப்தமியில், உமா மகேஸ்வரரை பூஜை செய்து 12 முடிச்சுகள் கொண்ட கயிற்றை (சரடை) வலக்கையில் கட்டிக் கொள்வார்கள். இந்த விரதம் சந்ததி செழிக்க அருள்செய்யும். பிள்ளை பேரன் எனப் பரம்பரை தழைக்கும். சௌபாக்கியங்கள் அனைத்தும் கிட்டும்.
ஜேஷ்டா விரதம்: புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமியன்று மூதேவியை நோக்கிச் செய்யப் படும் விரதம் இது. ‘எங்களை நீ பீடிக்காதே!’ என்று மூதேவியை வேண்டுவதாக உள்ள விரதம்.
சஷ்டி லலிதா விரதம்: புரட்டாசி மாத வளர்பிறை சஷ்டியில் பரமேஸ்வரியைக் குறித்துக் கடைப்பிடிக்கப்படும் விரதம் இது. இந்த விரதம் சர்வ மங்கலங்களையும் அருளும்.
கபிலா சஷ்டி விரதம்: புரட்டாசி மாதத் தேய்பிறை சஷ்டியில், சூரியனை பூஜை செய்து, பழுப்பு (தாமிர) வண்ணம்கொண்ட பசு மாட்டை ஆபரணங்களால் அலங்கரித்து பூஜிக்கும் விரதம் இது. ஸித்திகளைத் தரும்.
ஜேஷ்டா விரதம்: புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமியன்று மூதேவியை நோக்கிச் செய்யப் படும் விரதம் இது. ‘எங்களை நீ பீடிக்காதே!’ என்று மூதேவியை வேண்டுவதாக உள்ள விரதம்.
சஷ்டி லலிதா விரதம்: புரட்டாசி மாத வளர்பிறை சஷ்டியில் பரமேஸ்வரியைக் குறித்துக் கடைப்பிடிக்கப்படும் விரதம் இது. இந்த விரதம் சர்வ மங்கலங்களையும் அருளும்.
கபிலா சஷ்டி விரதம்: புரட்டாசி மாதத் தேய்பிறை சஷ்டியில், சூரியனை பூஜை செய்து, பழுப்பு (தாமிர) வண்ணம்கொண்ட பசு மாட்டை ஆபரணங்களால் அலங்கரித்து பூஜிக்கும் விரதம் இது. ஸித்திகளைத் தரும்.
புரட்டாசி மாதத்தில் வரும் வளர்பிறை சதுர்த்தசியன்று அனந்த பத்மநாதனைத் தியானித்துக் கடைப்பிடிக்கவேண்டிய விரதம், அனந்த விரதம்.
புரட்டாசி மாதத்தில் வரும் வளர்பிறை சதுர்த்தசியன்று அனந்த பத்மநாதனைத் தியானித்துக் கடைப்பிடிக்கவேண்டிய விரதம், அனந்த விரதம்.
விரத நாளன்று காலையில் நீராடி, தூய்மையான ஆடை அணிந்து, பூஜைக்குரிய இடத்தைப் பசுஞ்சாணத்தால் மெழுகி, ஐந்து விதமான வண்ணங்களில் கோலம் போட்டு, தீர்த்தக் கலசம் வைத்து அனந்த பத்மநாபனைத் தியானித்து பூஜை செய்ய வேண்டும்.
பூஜையின்போது, ஐந்து படி கோதுமை மாவில் வெல்லம் சேர்த்து, 28 அதிரசங்கள் செய்ய வேண்டும். இவற்றில் 14 அதிரசங்களை வேதியர்களுக்குத் தந்து, தாம்பூலம் மற்றும் தட்சிணையும் வழங்க வேண்டும். மீதியை நாம் உண்ண வேண்டும்.
அதேபோன்று, பூஜைக்குரிய பொருள்கள் அனைத்தும் 14 என்ற எண்ணிக்கையில் இருக்க வேண்டும். பக்தியுடன் இந்த விரதத்தைச் செய்தால் தீராத வினைகளெல்லாம் தீரும். அளவிட முடியாத ஐஸ்வர்யங்கள் வந்து சேரும். 14 வருடங்கள் இந்த விரதத்தை முறைப்படி கடைப்பிடித்து வழிபடும் அன்பர்களுக்கு நல்லன யாவும் வசமாகும். அவருக்குத் தோல்வி என்பதே இல்லை என்கின்றன ஞான நூல்கள்.
மிக அற்புதமான இந்த விரதத்தைக் கண்ண பரமாத்மா, பாண்டவர்களுக்கு உபதேசித்தார்.
பாண்டவர்கள் வனவாசம் இருந்த காலத்தில் அடுக்கடுக்காகத் துயரங்கள் வந்துகொண்டிருந்தன. எதற்கும் சலிக்காத தர்மபுத்திரரின் மனதிலும் சஞ்சலம் தலை நீட்டியது. ‘தெய்வமே! ஏன் இப்படி?’ என்று அவர் மிகவும் கவலையில் ஆழ்ந்திருந்தபோது, கிருஷ்ண பகவான் அவர்களைச் சந்திக்க வந்தார்.
அவரை வணங்கி வரவேற்ற தர்மபுத்திரர், தங்களுக்கு தொடர்ந்து ஏற்படும் இன்னல்களை அவரிடம் விளக்கி, அவற்றிலிருந்து மீண்டு வர வழிகாட்டுமாறு பிரார்த்தித்தார். கிருஷ்ணரும் அவர்களுக்கு மிக அற்புதமான ஒரு வழியைச் சொன்னார்.
“தர்மா! அனைவரது பாவங்களையும் நீக்கி, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிவைக்கும் ‘அனந்த விரத’த்தைப் புரட்டாசி மாத வளர்பிறைச் சதுர்த்தசியன்று செய்ய வேண்டும். இது புகழ், நலன்கள், நற்குழந்தைகள் ஆகியவற்றை அளிக்கும். பாவங்கள் அனைத்தையும் போக்கும்!” என்றார் கண்ணன்.
தர்மரின் மனதில் மகிழ்ச்சி துளிர்விட்டது. அத்துடன் சேர்ந்து ஓர் ஐயமும் எழுந்தது. `அனந்தர் என்ற தெய்வம் யார்?’ என்பதுதான் அது. தனது சந்தேகத்தை கண்ணனிடமே கேட்டார். ‘‘யது குலோத்தமா! அந்த அனந்தன் என்பவர் யார்? ஆதிசேஷனா, தட்சகனா, பிரம்ம தேவனா அல்லது பரப்பிரம்ம வடிவமா?”
கண்ணன் புன்னகையோடு பதில் சொன்னார்: ‘‘குந்தி அமைந்தா! அனந்தன் என்பவன் நானே; வேறு எவருமில்லை! பகல், இரவு, மாதம், வருஷம், யுகம் என்னும் காலங்கள் எல்லாம் என் வடிவமே. அனந்தன் என்னும் பெயரால் பூமியின் பாரத்தைக் குறைக்கவும் தீயவர்களை அழிக்கவும் வசுதேவருடைய வீட்டில் பிறந்தேன். அனைத்தும் என் வடிவமே என்பதை அறிந்து கொள். இந்திரன், அஷ்ட வசுக்கள், ஏகாதச ருத்திரர்கள், துவாதச ஆதித்தியர்கள், சப்தரிஷிகள், மலைகள், நதிகள், மரங்கள் முதலியன என வடிவங்களே!” என்றவர், அந்த விரதத்தின் மகிமை குறித்தும் பகிர்ந்துகொண்டார்.
அனந்த விரதத்தைப் பற்றி அனந்தனே சொன்ன அதியற்புத திருக்கதை இதுதான்.
கிருத யுகத்தில், வேத சாஸ்திரங்களில் கரை கண்டவரும் வசிஷ்ட கோத்திரத்தில் பிறந்தவருமான சுமந்தன், தன் மனைவி தீட்சா தேவியுடன் மனமொத்து நல்வாழ்வு நடத்தி வந்தார். அவர்களுக்கு சீலை என்ற மகள் இருந்தாள். சீலை பிறந்த கொஞ்ச நாள்களில் தீட்சா தேவி மரணமடைந்தாள்.
‘மனைவி இல்லாவிடில் நாம் செய்யும் தர்ம கர்ம அனுஷ்டானங்களுக்குக் குறை வருமே!’ என்று எண்ணிய சுமந்தன், கர்க்கசை என்பவளை மறுமணம் செய்தார். கர்க்கசை கடினமான மனம் கொண்டவள். மூத்தாள் மகளான சீலையிடம், மறந்து போய்க்கூட அன்பு செலுத்தாதவள். ஆனால், சீலையோ பெயருக்குத் தகுந்தாற்போல, மிகுந்த சீலத்துடன் விளங்கினாள்.
சீலைக்குத் திருமணப் பருவம் வந்ததும் கௌண்டின்யர் என்பவருக்கு அவளைத் திருமணம் செய்து வைத்தார் சுமந்தன். கல்யாணம் முடிந்ததும் சுமந்தன், ‘மாப்பிள்ளைக்கு ஏதாவது கொடுக்க வேண்டும்’ என்ற எண்ணத்துடன் கர்க்கசையிடம், ‘‘மாப்பிள்ளைக்கு என்ன கொடுக்கலாம்?” என்று கேட்டார். அவளோ திடீரென்று எழுந்து அறைக்குள் நுழைந்து கொண்டு, ‘‘இங்கு ஒன்றும் இல்லை. போங்கள்” என்று கத்தியவாறு கதவைச் சாத்திக் கொண்டாள்.
வேறு வழியற்ற நிலையில் சுமந்தன் கொஞ்சம் கோதுமை மாவை மாப்பிள்ளையிடம் தந்து, “இது வழியில் உபயோகப்படும். வைத்துக் கொள்ளுங்கள்!” என்று சொல்லி மணமக்களை வழியனுப்பி வைத்தார்.
கௌண்டியன்யர் சீலையுடன் தனது ஆசிரமத்துக்குக் கிளம்பினார். சூரிய உதய காலம். வழிப்பயணத்தைச் சற்று நிறுத்திய கௌண்டின்யர் அங்கிருந்த ஒரு குளத்தில், சந்தியாவந்தனம் முதலான அனுஷ்டானங்களைச் செய்வதற்காகப் போனார்.
அன்று அனந்த விரத தினமானதால் பெண்கள் பலர், சிவப்பு நிற ஆடை அணிந்து, பய பக்தியுடன் தனித்தனியாக அனந்த பத்மநாப ஸ்வாமியை பூஜை செய்து கொண்டிருந்தனர். மெள்ள அவர்களை நெருங்கிய சீலை, “நீங்கள் என்ன விரதம் செய்து கொண்டிருக்கிறீர்கள்? இதைப் பற்றித் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறேன்” என்றாள்.
அந்தப் பெண்களும் அனந்த விரதம் குறித்த நியதிகளை வழிமுறைகளை விரிவாக எடுத்துச் சொன்னார்கள்.
உடனே சீலை அங்கேயே நீராடி, தகப்பனார் தந்த கோதுமை மாவைப் பயன்படுத்தி, அங்கிருந்த பெண்களின் உதவியுடன் விரதம் தொடங்கி நோன்புக் கயிற்றைக் கட்டிக்கொண்டு முறைப்படி விரதத்தை முடித்தான். அதன்பின் மனத்திருப்தியுடன் கணவருடன் அவரது ஆசிரமத்தை அடைந்தாள்.
அனந்த விரதம் அளவற்ற ஐஸ்வர்யங்களைச் சீலைக்கு அளித்தது. நவரத்தினங்களும் தங்கமும் அவள் உடலை அலங்கரித்தன. வருடம் தவறாமல் சீலை, அனந்த விரதம் அனுஷ்டித்தாள். அனந்தமான பலன்களுடன் ஆனந்தமான வாழ்வை அனுபவித்தாள்.
செல்வ மயமான வாழ்வு கௌண்டியன்யரின் சிந்தனையை மாற்றியது போலும். ஒருநாள் சீலையின் கையில் கட்டப்பட்டு இருந்த நோன்புக் கயிற்றைக் கண்ட கௌண்டியன்யர், அந்த நோன்புக் கயிற்றையும் அவளையும் அவமானப்படுத்தினார்.
சீலை பதறினாள். ‘‘ஸ்வாமி! இது கயிறு அல்ல. அனந்த பத்மநாப ஸ்வாமியையே நான் தரித்து இருக்கிறேன். அந்த ஸ்வாமியின் அனுக்கிரகத்தால் அல்லவா, இவ்வளவு செல்வங்களும் நமக்கு வாய்த்தன” என்றாள். ஆனால், அவள் சொன்னவற்றை கௌண்டின்யர் செவிமடுக்கவில்லை. மிகுந்த கோபத்துடன், மனைவியின் கையிலிருந்த கயிற்றை இழுத்து அறுத்து, எரியும் தீயில் போட்டார்.
சீலை துடித்தாள். “அந்த சரடு (கயிறு) அனந்தனின் வடிவம் அல்லவா? அது எரிந்தால் நமது குலமும் வீடும் எரியுமே” என்று கூவியபடி தீயில் இருந்த சரடை எடுத்து அது எரிவதற்குள் பாலில் போட்டாள்.
நாள்கள் கடந்தன. கௌண்டின்யரின் செல்வம் குறையத் தொடங்கியது. அவரிடம் இருந்த பசுக்களை யாரோ திருடிச் சென்றனர். அவரது வீடு தீப்பிடித்துச் சாம்பலானது. உறவினர்களுடன் சண்டை ஏற்பட்டது. மற்ற எவரும் கௌண்டின்யரிடம் பேசாத ஒரு நிலை உண்டானது.
கௌண்டின்யர் துயரக் கடலில் மூழ்கினார். மனைவியை அலட்சியப்படுத்தி மாதவனை அவமதித்தால் வந்த வினை இது! என்பதை உணர்ந்ததால், ‘`அனந்தா.. அனந்தா… எங்கே போனாய்? என்னை கைவிட்டு விடாதே” என்று கத்தியபடி காட்டுக்குள் ஓடினார். கண்ணில் கண்டவர்களிடம் எல்லாம், “அனந்தனைப் பார்த்தீர்களா?” எனக் கேட்டார்.
அவர் போகும் வழியில், பழங்கள் நிறைந்த மாமரம் ஒன்று இருந்தது. “மாமரமே! அனந்தனைப் பார்த்தாயா?” என்று கேட்டார். “இல்லை!” என்று பதில் வந்தது. கொஞ்ச தூரம் போனதும், ஒரு பசு மாட்டைப் பார்த்தார். ஏராளமாகப் புல் இருந்தும் அதை மேயாமல் அங்கும் இங்குமாக அலைந்துகொண்டிருந்தது அந்த பசு. அதனிடமும், “அனந்தனைப் பார்த்தாயா?” என கௌண்டின்யர் கேட்க, “இல்லை!” என்ற பதிலே வந்தது. இதேபோல் தான் பார்த்த காளை, யானை ஆகியவற்றிடமும் இதே கேள்வி கேட்டு இதே பதில் பெற்றார் அவர்.
கௌண்டின்யரின் மனம் சோர்வுற்றது. உடல் தளர்ந்தது. நாக்கு உலர்ந்தது. “அனந்தா! அனந்தா!” என்று கதறினார். அப்போது அவர் முன்னால் தரிசனம் தந்த ஸ்வாமி ஐஸ்வர்யம், தர்ம புத்தி, வைகுண்ட பிராப்தி ஆகிய மூன்று வரங்கள் தந்தார்.
ஸ்வாமியைத் துதித்து வணங்கிய கௌண்டின்யர், தான் வழியில் கண்ட மாமரம் மற்றும் விலங்குகள் குறித்துக் கேட்டார்.
“நீ பார்த்த மாமரம், போன பிறவியில் சிறந்த ஒரு பிராமண வித்வான். மாணவர்கள் பலர் வேண்டிக்கேட்டும் கர்வம்பிடித்த அவர், தான் கற்ற கல்வியை எவருக்கும் சொல்லிக் கொடுக்க வில்லை. அதனால் மரம் ஆனார். அடுத்தது பசு, போன பிறவியில் அது நற்குலத்தில் உதித்த பணக்காரன். யாருக்கும் ஒரு பிடி அன்னம்கூட தானம் செய்யாததால், அவனே பசு மாடாகப் பிறந்துள்ளான். இந்தப் பிறப்பில் புல் இருந்தாலும் மேய முடியாமல் அலைகிறான். அடுத்தது காளை. அது போன பிறவியில் கர்வமுள்ள ஒரு அரசனாக இருந்தது. விளையாத (களர்) பூமியை தானம் செய்த பாவத்தால், அவன் இப்போது காளையாகத் திரிகிறான். அடுத்தது யானை. அந்தணனாக இருந்த ஒருவன், தான் செய்த தர்மத்தை விலை பேசி விற்றுப் பணம் பெற்றதால் இப்படி யானையாகப் பிறந்திருக்கிறான்!” என்று விவரித்த ஸ்வாமி அங்கிருந்து மறைந்தார்.
மனம் மாறிய கௌண்டின்யர் வீடு திரும்பினார். தன் மனைவி சீலையுடன் சேர்ந்து, அனந்த விரதம் செய்து, இழந்த செல்வங்களைப் பெற்று மங்கல வாழ்வு வாழ்ந்தார்.
கண்ணன் சொன்ன விரதம் இது. இதன்படி விரதம் இருந்து, சகல பாக்கியங்களையும் பாண்டவர்கள் பெற்றார்கள். இதை அனந்த சதுர்த்தசி விரதம் என்றும் சொல்வார்கள்.
விரத நாளன்று காலையில் நீராடி, தூய்மையான ஆடை அணிந்து, பூஜைக்குரிய இடத்தைப் பசுஞ்சாணத்தால் மெழுகி, ஐந்து விதமான வண்ணங்களில் கோலம் போட்டு, தீர்த்தக் கலசம் வைத்து அனந்த பத்மநாபனைத் தியானித்து பூஜை செய்ய வேண்டும்.
பூஜையின்போது, ஐந்து படி கோதுமை மாவில் வெல்லம் சேர்த்து, 28 அதிரசங்கள் செய்ய வேண்டும். இவற்றில் 14 அதிரசங்களை வேதியர்களுக்குத் தந்து, தாம்பூலம் மற்றும் தட்சிணையும் வழங்க வேண்டும். மீதியை நாம் உண்ண வேண்டும்.
அதேபோன்று, பூஜைக்குரிய பொருள்கள் அனைத்தும் 14 என்ற எண்ணிக்கையில் இருக்க வேண்டும். பக்தியுடன் இந்த விரதத்தைச் செய்தால் தீராத வினைகளெல்லாம் தீரும். அளவிட முடியாத ஐஸ்வர்யங்கள் வந்து சேரும். 14 வருடங்கள் இந்த விரதத்தை முறைப்படி கடைப்பிடித்து வழிபடும் அன்பர்களுக்கு நல்லன யாவும் வசமாகும். அவருக்குத் தோல்வி என்பதே இல்லை என்கின்றன ஞான நூல்கள்.
மிக அற்புதமான இந்த விரதத்தைக் கண்ண பரமாத்மா, பாண்டவர்களுக்கு உபதேசித்தார்.
பாண்டவர்கள் வனவாசம் இருந்த காலத்தில் அடுக்கடுக்காகத் துயரங்கள் வந்துகொண்டிருந்தன. எதற்கும் சலிக்காத தர்மபுத்திரரின் மனதிலும் சஞ்சலம் தலை நீட்டியது. ‘தெய்வமே! ஏன் இப்படி?’ என்று அவர் மிகவும் கவலையில் ஆழ்ந்திருந்தபோது, கிருஷ்ண பகவான் அவர்களைச் சந்திக்க வந்தார்.
அவரை வணங்கி வரவேற்ற தர்மபுத்திரர், தங்களுக்கு தொடர்ந்து ஏற்படும் இன்னல்களை அவரிடம் விளக்கி, அவற்றிலிருந்து மீண்டு வர வழிகாட்டுமாறு பிரார்த்தித்தார். கிருஷ்ணரும் அவர்களுக்கு மிக அற்புதமான ஒரு வழியைச் சொன்னார்.
“தர்மா! அனைவரது பாவங்களையும் நீக்கி, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிவைக்கும் ‘அனந்த விரத’த்தைப் புரட்டாசி மாத வளர்பிறைச் சதுர்த்தசியன்று செய்ய வேண்டும். இது புகழ், நலன்கள், நற்குழந்தைகள் ஆகியவற்றை அளிக்கும். பாவங்கள் அனைத்தையும் போக்கும்!” என்றார் கண்ணன்.
தர்மரின் மனதில் மகிழ்ச்சி துளிர்விட்டது. அத்துடன் சேர்ந்து ஓர் ஐயமும் எழுந்தது. `அனந்தர் என்ற தெய்வம் யார்?’ என்பதுதான் அது. தனது சந்தேகத்தை கண்ணனிடமே கேட்டார். ‘‘யது குலோத்தமா! அந்த அனந்தன் என்பவர் யார்? ஆதிசேஷனா, தட்சகனா, பிரம்ம தேவனா அல்லது பரப்பிரம்ம வடிவமா?”
கண்ணன் புன்னகையோடு பதில் சொன்னார்: ‘‘குந்தி அமைந்தா! அனந்தன் என்பவன் நானே; வேறு எவருமில்லை! பகல், இரவு, மாதம், வருஷம், யுகம் என்னும் காலங்கள் எல்லாம் என் வடிவமே. அனந்தன் என்னும் பெயரால் பூமியின் பாரத்தைக் குறைக்கவும் தீயவர்களை அழிக்கவும் வசுதேவருடைய வீட்டில் பிறந்தேன். அனைத்தும் என் வடிவமே என்பதை அறிந்து கொள். இந்திரன், அஷ்ட வசுக்கள், ஏகாதச ருத்திரர்கள், துவாதச ஆதித்தியர்கள், சப்தரிஷிகள், மலைகள், நதிகள், மரங்கள் முதலியன என வடிவங்களே!” என்றவர், அந்த விரதத்தின் மகிமை குறித்தும் பகிர்ந்துகொண்டார்.
அனந்த விரதத்தைப் பற்றி அனந்தனே சொன்ன அதியற்புத திருக்கதை இதுதான்.
கிருத யுகத்தில், வேத சாஸ்திரங்களில் கரை கண்டவரும் வசிஷ்ட கோத்திரத்தில் பிறந்தவருமான சுமந்தன், தன் மனைவி தீட்சா தேவியுடன் மனமொத்து நல்வாழ்வு நடத்தி வந்தார். அவர்களுக்கு சீலை என்ற மகள் இருந்தாள். சீலை பிறந்த கொஞ்ச நாள்களில் தீட்சா தேவி மரணமடைந்தாள்.
‘மனைவி இல்லாவிடில் நாம் செய்யும் தர்ம கர்ம அனுஷ்டானங்களுக்குக் குறை வருமே!’ என்று எண்ணிய சுமந்தன், கர்க்கசை என்பவளை மறுமணம் செய்தார். கர்க்கசை கடினமான மனம் கொண்டவள். மூத்தாள் மகளான சீலையிடம், மறந்து போய்க்கூட அன்பு செலுத்தாதவள். ஆனால், சீலையோ பெயருக்குத் தகுந்தாற்போல, மிகுந்த சீலத்துடன் விளங்கினாள்.
சீலைக்குத் திருமணப் பருவம் வந்ததும் கௌண்டின்யர் என்பவருக்கு அவளைத் திருமணம் செய்து வைத்தார் சுமந்தன். கல்யாணம் முடிந்ததும் சுமந்தன், ‘மாப்பிள்ளைக்கு ஏதாவது கொடுக்க வேண்டும்’ என்ற எண்ணத்துடன் கர்க்கசையிடம், ‘‘மாப்பிள்ளைக்கு என்ன கொடுக்கலாம்?” என்று கேட்டார். அவளோ திடீரென்று எழுந்து அறைக்குள் நுழைந்து கொண்டு, ‘‘இங்கு ஒன்றும் இல்லை. போங்கள்” என்று கத்தியவாறு கதவைச் சாத்திக் கொண்டாள்.
வேறு வழியற்ற நிலையில் சுமந்தன் கொஞ்சம் கோதுமை மாவை மாப்பிள்ளையிடம் தந்து, “இது வழியில் உபயோகப்படும். வைத்துக் கொள்ளுங்கள்!” என்று சொல்லி மணமக்களை வழியனுப்பி வைத்தார்.
கௌண்டியன்யர் சீலையுடன் தனது ஆசிரமத்துக்குக் கிளம்பினார். சூரிய உதய காலம். வழிப்பயணத்தைச் சற்று நிறுத்திய கௌண்டின்யர் அங்கிருந்த ஒரு குளத்தில், சந்தியாவந்தனம் முதலான அனுஷ்டானங்களைச் செய்வதற்காகப் போனார்.
அன்று அனந்த விரத தினமானதால் பெண்கள் பலர், சிவப்பு நிற ஆடை அணிந்து, பய பக்தியுடன் தனித்தனியாக அனந்த பத்மநாப ஸ்வாமியை பூஜை செய்து கொண்டிருந்தனர். மெள்ள அவர்களை நெருங்கிய சீலை, “நீங்கள் என்ன விரதம் செய்து கொண்டிருக்கிறீர்கள்? இதைப் பற்றித் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறேன்” என்றாள்.
அந்தப் பெண்களும் அனந்த விரதம் குறித்த நியதிகளை வழிமுறைகளை விரிவாக எடுத்துச் சொன்னார்கள்.
உடனே சீலை அங்கேயே நீராடி, தகப்பனார் தந்த கோதுமை மாவைப் பயன்படுத்தி, அங்கிருந்த பெண்களின் உதவியுடன் விரதம் தொடங்கி நோன்புக் கயிற்றைக் கட்டிக்கொண்டு முறைப்படி விரதத்தை முடித்தான். அதன்பின் மனத்திருப்தியுடன் கணவருடன் அவரது ஆசிரமத்தை அடைந்தாள்.
அனந்த விரதம் அளவற்ற ஐஸ்வர்யங்களைச் சீலைக்கு அளித்தது. நவரத்தினங்களும் தங்கமும் அவள் உடலை அலங்கரித்தன. வருடம் தவறாமல் சீலை, அனந்த விரதம் அனுஷ்டித்தாள். அனந்தமான பலன்களுடன் ஆனந்தமான வாழ்வை அனுபவித்தாள்.
செல்வ மயமான வாழ்வு கௌண்டியன்யரின் சிந்தனையை மாற்றியது போலும். ஒருநாள் சீலையின் கையில் கட்டப்பட்டு இருந்த நோன்புக் கயிற்றைக் கண்ட கௌண்டியன்யர், அந்த நோன்புக் கயிற்றையும் அவளையும் அவமானப்படுத்தினார்.
சீலை பதறினாள். ‘‘ஸ்வாமி! இது கயிறு அல்ல. அனந்த பத்மநாப ஸ்வாமியையே நான் தரித்து இருக்கிறேன். அந்த ஸ்வாமியின் அனுக்கிரகத்தால் அல்லவா, இவ்வளவு செல்வங்களும் நமக்கு வாய்த்தன” என்றாள். ஆனால், அவள் சொன்னவற்றை கௌண்டின்யர் செவிமடுக்கவில்லை. மிகுந்த கோபத்துடன், மனைவியின் கையிலிருந்த கயிற்றை இழுத்து அறுத்து, எரியும் தீயில் போட்டார்.
சீலை துடித்தாள். “அந்த சரடு (கயிறு) அனந்தனின் வடிவம் அல்லவா? அது எரிந்தால் நமது குலமும் வீடும் எரியுமே” என்று கூவியபடி தீயில் இருந்த சரடை எடுத்து அது எரிவதற்குள் பாலில் போட்டாள்.
நாள்கள் கடந்தன. கௌண்டின்யரின் செல்வம் குறையத் தொடங்கியது. அவரிடம் இருந்த பசுக்களை யாரோ திருடிச் சென்றனர். அவரது வீடு தீப்பிடித்துச் சாம்பலானது. உறவினர்களுடன் சண்டை ஏற்பட்டது. மற்ற எவரும் கௌண்டின்யரிடம் பேசாத ஒரு நிலை உண்டானது.
கௌண்டின்யர் துயரக் கடலில் மூழ்கினார். மனைவியை அலட்சியப்படுத்தி மாதவனை அவமதித்தால் வந்த வினை இது! என்பதை உணர்ந்ததால், ‘`அனந்தா.. அனந்தா… எங்கே போனாய்? என்னை கைவிட்டு விடாதே” என்று கத்தியபடி காட்டுக்குள் ஓடினார். கண்ணில் கண்டவர்களிடம் எல்லாம், “அனந்தனைப் பார்த்தீர்களா?” எனக் கேட்டார்.
அவர் போகும் வழியில், பழங்கள் நிறைந்த மாமரம் ஒன்று இருந்தது. “மாமரமே! அனந்தனைப் பார்த்தாயா?” என்று கேட்டார். “இல்லை!” என்று பதில் வந்தது. கொஞ்ச தூரம் போனதும், ஒரு பசு மாட்டைப் பார்த்தார். ஏராளமாகப் புல் இருந்தும் அதை மேயாமல் அங்கும் இங்குமாக அலைந்துகொண்டிருந்தது அந்த பசு. அதனிடமும், “அனந்தனைப் பார்த்தாயா?” என கௌண்டின்யர் கேட்க, “இல்லை!” என்ற பதிலே வந்தது. இதேபோல் தான் பார்த்த காளை, யானை ஆகியவற்றிடமும் இதே கேள்வி கேட்டு இதே பதில் பெற்றார் அவர்.
கௌண்டின்யரின் மனம் சோர்வுற்றது. உடல் தளர்ந்தது. நாக்கு உலர்ந்தது. “அனந்தா! அனந்தா!” என்று கதறினார். அப்போது அவர் முன்னால் தரிசனம் தந்த ஸ்வாமி ஐஸ்வர்யம், தர்ம புத்தி, வைகுண்ட பிராப்தி ஆகிய மூன்று வரங்கள் தந்தார்.
ஸ்வாமியைத் துதித்து வணங்கிய கௌண்டின்யர், தான் வழியில் கண்ட மாமரம் மற்றும் விலங்குகள் குறித்துக் கேட்டார்.
“நீ பார்த்த மாமரம், போன பிறவியில் சிறந்த ஒரு பிராமண வித்வான். மாணவர்கள் பலர் வேண்டிக்கேட்டும் கர்வம்பிடித்த அவர், தான் கற்ற கல்வியை எவருக்கும் சொல்லிக் கொடுக்க வில்லை. அதனால் மரம் ஆனார். அடுத்தது பசு, போன பிறவியில் அது நற்குலத்தில் உதித்த பணக்காரன். யாருக்கும் ஒரு பிடி அன்னம்கூட தானம் செய்யாததால், அவனே பசு மாடாகப் பிறந்துள்ளான். இந்தப் பிறப்பில் புல் இருந்தாலும் மேய முடியாமல் அலைகிறான். அடுத்தது காளை. அது போன பிறவியில் கர்வமுள்ள ஒரு அரசனாக இருந்தது. விளையாத (களர்) பூமியை தானம் செய்த பாவத்தால், அவன் இப்போது காளையாகத் திரிகிறான். அடுத்தது யானை. அந்தணனாக இருந்த ஒருவன், தான் செய்த தர்மத்தை விலை பேசி விற்றுப் பணம் பெற்றதால் இப்படி யானையாகப் பிறந்திருக்கிறான்!” என்று விவரித்த ஸ்வாமி அங்கிருந்து மறைந்தார்.
மனம் மாறிய கௌண்டின்யர் வீடு திரும்பினார். தன் மனைவி சீலையுடன் சேர்ந்து, அனந்த விரதம் செய்து, இழந்த செல்வங்களைப் பெற்று மங்கல வாழ்வு வாழ்ந்தார்.
கண்ணன் சொன்ன விரதம் இது. இதன்படி விரதம் இருந்து, சகல பாக்கியங்களையும் பாண்டவர்கள் பெற்றார்கள். இதை அனந்த சதுர்த்தசி விரதம் என்றும் சொல்வார்கள்.
ஐப்பசி பெளர்ணமி மட்டுமின்றி, சித்திரை முதற்கொண்டு பன்னிரு மாதங்களிலும் வரும் பெளர்ணமி திருநாளில் விரதம் இருந்து சிவனாரை வழிபடுவது மிகவும் சிறப்பு.
ஐப்பசி பெளர்ணமி மட்டுமின்றி, சித்திரை முதற்கொண்டு பன்னிரு மாதங்களிலும் வரும் பெளர்ணமி திருநாளில் விரதம் இருந்து சிவனாரை வழிபடுவது மிகவும் சிறப்பு. அந்த வகையில் புரட்டாசி பெளர்ணமி தினத்தில் வீட்டில் விரதமிருந்து சிவபெருமானை வழிபடுவதாலும், அருகிலுள்ள சிவாலயங் களுக்குச் சென்று வில்வார்ச்சனை செய்து, நெய்தீபங்கள் ஏற்றிவைத்து வழிபடுவதாலும் விசேஷ பலன்கள் கைகூடும்.
பிள்ளையார் பக்தரான கிருச்சமத முனிவரின் மகன் பலி.அவனும் பிள்ளையாரை வழிபட்டு பல வரங்களைப் பெற்றான். அந்த வரங்களில் குறிப்பிடத்தக்கவை பொன், வெள்ளி மற்றும் இரும்பாலான பறக்கும் கோட்டைகள். அவற்றைக்கொண்டு மூவுலகங்களையும் துன்புறுத்தினான், திரிபுரங்களுக்கும் அதிபதி யான அந்த அசுரனின் தொல்லைகளைப் பொறுக்க முடியாத தேவர்களும் முனிவர்களும் சிவபிரானைச் சரணடைந்தனர்.
அவர்களை ரட்சிக்கத் திருவுளம்கொண்ட பிள்ளையார் அசுரன்மீது போர்தொடுத்தார். போரின் முடிவில் கடும் சீற்றத்துடன் பாய்ந்தது சிவ கணை. திரிபுரனாகிய பலி, சிவனாரின் திருவடிகளில் ஒன்றிக் கலந்தான். அப்படி அவன் வீடுபேறடைந்த திருநாள், புரட்டாசி மாத பெளர்ணமி தினமாகும். அந்த நாளை பாகுளி என்று அழைப்பார்கள். இந்தப் புண்ணிய திருநாளில் சிவ வழிபாடு செய்பவர்களைத் துன்பங்கள் நெருங்காது.
புரட்டாசி பெளர்ணமி தினத்தில் காலை வேளையில் சிவ வழிபாடு செய்ய, முற்பிறப்பில் செய்த பாவங்கள் நீங்கும். நண்பகலில் சிவ வழிபாடு செய்ய, முற்பிறப்பில் செய்த பாவங்கள் மட்டும் இல்லாமல், இந்தப் பிறவியில் செய்த பாவங்களும் நீங்கும். மாலை பிரதோஷ வேளையில் சிவ வழிபாடு செய்தால், சிவபெருமானின் அருளால் ஏழேழு பிறவிகளில் செய்து முற்றிய பாவங்கள் எல்லாமே
நீங்குவதுடன், விரும்பிய எல்லா வேண்டுதல்களும் நிறைவேறும்.
பிள்ளையார் பக்தரான கிருச்சமத முனிவரின் மகன் பலி.அவனும் பிள்ளையாரை வழிபட்டு பல வரங்களைப் பெற்றான். அந்த வரங்களில் குறிப்பிடத்தக்கவை பொன், வெள்ளி மற்றும் இரும்பாலான பறக்கும் கோட்டைகள். அவற்றைக்கொண்டு மூவுலகங்களையும் துன்புறுத்தினான், திரிபுரங்களுக்கும் அதிபதி யான அந்த அசுரனின் தொல்லைகளைப் பொறுக்க முடியாத தேவர்களும் முனிவர்களும் சிவபிரானைச் சரணடைந்தனர்.
அவர்களை ரட்சிக்கத் திருவுளம்கொண்ட பிள்ளையார் அசுரன்மீது போர்தொடுத்தார். போரின் முடிவில் கடும் சீற்றத்துடன் பாய்ந்தது சிவ கணை. திரிபுரனாகிய பலி, சிவனாரின் திருவடிகளில் ஒன்றிக் கலந்தான். அப்படி அவன் வீடுபேறடைந்த திருநாள், புரட்டாசி மாத பெளர்ணமி தினமாகும். அந்த நாளை பாகுளி என்று அழைப்பார்கள். இந்தப் புண்ணிய திருநாளில் சிவ வழிபாடு செய்பவர்களைத் துன்பங்கள் நெருங்காது.
புரட்டாசி பெளர்ணமி தினத்தில் காலை வேளையில் சிவ வழிபாடு செய்ய, முற்பிறப்பில் செய்த பாவங்கள் நீங்கும். நண்பகலில் சிவ வழிபாடு செய்ய, முற்பிறப்பில் செய்த பாவங்கள் மட்டும் இல்லாமல், இந்தப் பிறவியில் செய்த பாவங்களும் நீங்கும். மாலை பிரதோஷ வேளையில் சிவ வழிபாடு செய்தால், சிவபெருமானின் அருளால் ஏழேழு பிறவிகளில் செய்து முற்றிய பாவங்கள் எல்லாமே
நீங்குவதுடன், விரும்பிய எல்லா வேண்டுதல்களும் நிறைவேறும்.
சமயபுரம் மாரியம்மன் உலக நன்மைக்காகவும், தம் பிள்ளைகளாகிய உலக மக்களுக்காகவும் ஒவ்வொரு வருடமும் பச்சைப்பட்டினி விரதம் மேற்கொள்கிறாள்.
தாயிற்காக விரதம் இருக்கும் பிள்ளைகள் உண்டு. சாமிக்காக விரதமிருக்கும் பக்தன் உண்டு. பிள்ளைகள் நலனுக்காக பட்டினி இருக்கும் தாய் எங்கேனும் உண்டா?, பக்தனின் நலனுக்காக விரதம் இருக்கும் சாமி எங்கேனும் உண்டா? உண்டு. அதுதான் நம்ம சமயபுரத்து மாரியம்மன். தமிழகத்தில் உள்ள மாரியம்மன் தலங்களில் தலைமை தலமாகவும், அம்மன் சுயம்புவாக தோன்றிய தலமுமாக திகழ்வது சமயபுரம் மாரியம்மன் கோயில்.
இது, திருச்சிக்கு வடக்கே ஓடும் காவிரியின் வட கரையிலிருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. சமயபுரம் மாரியம்மன் கோயிலில் நடைபெறும் ஒவ்வொரு வைபவங்களும் மனித வாழ்க்கையில் கடைபிடிக்கப்படும் சடங்குகள். உறவுகளிடையே பந்த பாச பிணைப்பை ஏற்படுத்தும் உயிர்ப்புள்ள வைபவங்கள். அண்ணன், தங்கை உறவின் உன்னத மாண்பே, மணமுடித்துக் கொடுத்த பின், அவளுக்கு அன்னைக்கு அன்னையாய், தந்தைக்கு தந்தையாய் திகழ்வது அவளது அண்ணன் உறவு தான். அதனால் தான் தாயை விட பத்து மடங்கு உயர்வானது தாய்மாமன் உறவு என்று முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள்.
அந்த உறவின் ஆழத்தை புரிய வைக்கும் வைபவமாக தை மாதம் பொங்கல் சீர், சித்திரை சீர், கார்த்திகை சீர் வழங்கப்படுவதுண்டு. அதை மெய்ப்பிக்கும் வகையில் சமயபுரத்தாளுக்கு, அண்ணன் ஸ்ரீரங்கநாதர் தை மாதம் சீர் கொடுக்கும் வைபவம் மிகச்சிறப்பாக நடைபெறுகிறது.
உலக நன்மைக்காகவும், தம் பிள்ளைகளாகிய உலக மக்களுக்காகவும் ஒவ்வொரு வருடமும் மாசி மாதம் கடைசி ஞாயிறு அன்று பச்சைப்பட்டினி விரதம் மேற்கொள்கிறாள்.
அன்றிலிருந்து 28 நாட்கள் விரதம் மேற்கொள்ளும் சமயபுரத்தாள் பங்குனி மாதம் கடைசி ஞாயிற்றுக் கிழமை தனது விரதத்தை முடிக்கிறாள். விரத நாட்களில் அம்மனுக்கு உரலில் இடிக்கப்பட்ட பச்சரிசி மாவு, வெல்லம், திராட்சை, ஆரஞ்சு, இளநீர் பானகம் போன்றவை மட்டுமே நிவேதிக்கப்படுகிறது. விரதம் முடிவுறும் நாளில் ஆத்தா சமயபுரத்தாளின் அக்காவாக கருதப்படும் திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோயிலில் இருந்து அபிஷேக திரவியங்கள், பட்டு வஸ்திரம், மாலை, சந்தனம், தாம்பூலம் ஆகியவற்றுடன் தயிர் சாதம், காய்கறி கூட்டு ஆகியவை தங்கை சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு கொண்டு செல்லப்படும்.
அன்றைய தினம் மாலை 7 மணியளவில் திருவானைக்காவலில் இருந்து தளிகை மற்றும் அபிஷேக திரவியங்கள், மாலைகள், வஸ்திரங்களை யானை மீது எடுத்துக்கொண்டு மேளதாளங்கள் முழங்க இரவு 9 மணியளவில் சமயபுரம் வருவார்கள். சமயபுரம் மாரியம்மன் கோயிலுள்ளோர் மாலை அணிவித்து வரவேற்பார்கள்.
திருவானைக்காவல் கோயிலிலிருந்து கொண்டு வரப்பட்ட அபிஷேக பொருட்களால் சமயபுரம் மாரியம்மனுக்கு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெறும். பின்னர் தளிகை நிவேதத்துடன் தனது பச்சைப்பட்டினி விரதத்தை சமயபுரத்தாள் நிறைவு செய்வார். அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தலத்தில் வேண்டிக்கொண்டு குணமடைவது மிகவும் பிரசித்தி பெற்றது. இத்தலத்திலேயே குறிப்பிட்ட நாட்கள் தங்கி அங்கு கோயிலில் வேலை செய்து நேர்த்திக்கடனை நிறைவேற்றுபவர்களும் உண்டு.
இது, திருச்சிக்கு வடக்கே ஓடும் காவிரியின் வட கரையிலிருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. சமயபுரம் மாரியம்மன் கோயிலில் நடைபெறும் ஒவ்வொரு வைபவங்களும் மனித வாழ்க்கையில் கடைபிடிக்கப்படும் சடங்குகள். உறவுகளிடையே பந்த பாச பிணைப்பை ஏற்படுத்தும் உயிர்ப்புள்ள வைபவங்கள். அண்ணன், தங்கை உறவின் உன்னத மாண்பே, மணமுடித்துக் கொடுத்த பின், அவளுக்கு அன்னைக்கு அன்னையாய், தந்தைக்கு தந்தையாய் திகழ்வது அவளது அண்ணன் உறவு தான். அதனால் தான் தாயை விட பத்து மடங்கு உயர்வானது தாய்மாமன் உறவு என்று முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள்.
அந்த உறவின் ஆழத்தை புரிய வைக்கும் வைபவமாக தை மாதம் பொங்கல் சீர், சித்திரை சீர், கார்த்திகை சீர் வழங்கப்படுவதுண்டு. அதை மெய்ப்பிக்கும் வகையில் சமயபுரத்தாளுக்கு, அண்ணன் ஸ்ரீரங்கநாதர் தை மாதம் சீர் கொடுக்கும் வைபவம் மிகச்சிறப்பாக நடைபெறுகிறது.
உலக நன்மைக்காகவும், தம் பிள்ளைகளாகிய உலக மக்களுக்காகவும் ஒவ்வொரு வருடமும் மாசி மாதம் கடைசி ஞாயிறு அன்று பச்சைப்பட்டினி விரதம் மேற்கொள்கிறாள்.
அன்றிலிருந்து 28 நாட்கள் விரதம் மேற்கொள்ளும் சமயபுரத்தாள் பங்குனி மாதம் கடைசி ஞாயிற்றுக் கிழமை தனது விரதத்தை முடிக்கிறாள். விரத நாட்களில் அம்மனுக்கு உரலில் இடிக்கப்பட்ட பச்சரிசி மாவு, வெல்லம், திராட்சை, ஆரஞ்சு, இளநீர் பானகம் போன்றவை மட்டுமே நிவேதிக்கப்படுகிறது. விரதம் முடிவுறும் நாளில் ஆத்தா சமயபுரத்தாளின் அக்காவாக கருதப்படும் திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோயிலில் இருந்து அபிஷேக திரவியங்கள், பட்டு வஸ்திரம், மாலை, சந்தனம், தாம்பூலம் ஆகியவற்றுடன் தயிர் சாதம், காய்கறி கூட்டு ஆகியவை தங்கை சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு கொண்டு செல்லப்படும்.
அன்றைய தினம் மாலை 7 மணியளவில் திருவானைக்காவலில் இருந்து தளிகை மற்றும் அபிஷேக திரவியங்கள், மாலைகள், வஸ்திரங்களை யானை மீது எடுத்துக்கொண்டு மேளதாளங்கள் முழங்க இரவு 9 மணியளவில் சமயபுரம் வருவார்கள். சமயபுரம் மாரியம்மன் கோயிலுள்ளோர் மாலை அணிவித்து வரவேற்பார்கள்.
திருவானைக்காவல் கோயிலிலிருந்து கொண்டு வரப்பட்ட அபிஷேக பொருட்களால் சமயபுரம் மாரியம்மனுக்கு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெறும். பின்னர் தளிகை நிவேதத்துடன் தனது பச்சைப்பட்டினி விரதத்தை சமயபுரத்தாள் நிறைவு செய்வார். அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தலத்தில் வேண்டிக்கொண்டு குணமடைவது மிகவும் பிரசித்தி பெற்றது. இத்தலத்திலேயே குறிப்பிட்ட நாட்கள் தங்கி அங்கு கோயிலில் வேலை செய்து நேர்த்திக்கடனை நிறைவேற்றுபவர்களும் உண்டு.
விரதம், நோன்பை எல்லா மதத்தினரும் கடைப்பிடித்து வருகின்றனர். மன உறுதிக்கு துணையாக இருப்பது விரதம் தான். ஒவ்வொரு காலகட்ட விரதத்துக்கும் உரிய பலன்கள் கிடைக்கும்.
ஆன்மிக ரீதியாக கடைப்பிடிக்கப்படும் விஷயங்களில், விரதங்களும் ஒன்று. அறிவியல் மற்றும் மருத்துவ ரீதியாக உடல் செல்கள் புத்துயிர் அடைய உதவும் ஒரு செயல்முறையாக இது பார்க்கப்படுகிறது. ‘விரதம் இருப்பதனால் உடல் மற்றும் மன நிலையில் அமைதி மற்றும் புத்துணர்ச்சி ஏற்படுகிறது. உடலில் உள்ள செல்கள் புத்துயிர் பெற்று நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது’ என்பது மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஒரு வேளை மட்டும் உணவு அருந்தி இருப்பது, நாள் முழுவதும் எதுவும் சாப்பிடாமல் இருப்பது, அசைவ உணவுகளை மட்டும் தவிர்த்து சைவ உணவுகளை மட்டும் உண்ணுவது, தண்ணீர், பழங்கள் மட்டும் சாப்பிட்டு விரதம் இருப்பது என பல முறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. எந்த முறையில் விரதம் இருந்தாலும் பலன் கிடைப்பது உறுதி என்று ஆன்மிக சான்றோர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
பொதுவாக, ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வாரம் ஒரு முறை விரதமிருப்பது சரியானது. விரதத்துக்கு 2 நாட்களுக்கு முன்பிருந்தே, காரம் குறைவான, பருப்பு சாதம் மாதிரி நன்கு வேகவைக்கப்பட்ட உணவுகளையும், ரசம் சாதம், மோர் மற்றும் பழங்களையும் உண்பது ஆன்மிக வாழ்வுக்கு ஏற்றது.
குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள், கடுமையான வேலைகள் செய்பவர்கள், அடிக்கடி வெளியூர் செல்பவர்கள், நோயாளிகள், தொடர்ந்து மருந்து உட்கொண்டு வருபவர்கள் ஆகியோர் விரதம் இருப்பதை தவிர்க்க வேண்டும் என்பது முக்கியமான விதியாகும்.
தமிழ் மாத விரத வகைகள்
அமாவாசை என்பது முன்னோர்களை வழிபட முக்கியமானது என்பதுபோல், ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி தினத்தன்று ஓர் விரத தினமாக அமைந்திருக்கிறது. அவை பற்றிய தொகுப்பை இங்கே காணலாம்.
சித்திரை மாதம் பவுர்ணமியன்று. சித்ரா பவுர்ணமி என்று சொல்லப்படும். அன்று விரதம் இருந்து சித்ரகுப்த பூஜை செய்யப்படும்.
வைகாசி மாதம் பவுர்ணமி வைகாசி விசாகம் ஆகும். அன்று நீராடி வைசாக தானம் என்று தயிர் சாதம், பானகம், நீர் மோர் ஆகியவற்றை தானமாக கொடுப்பது சிறந்தது.
ஆனி மாதம் வளர்பிறையில் கோபத்ம விரதம் என்று மகா விஷ்ணுவுக்கு உகந்த விரதம் வருகிறது. அந்த விரதத்தை பெண்கள் விசேஷமாக கடைப்பிடிக்கிறார்கள்.
ஆடி மாதம் பவுர்ணமி அன்று வட சாவித்ரி விரதம் மற்ற மாநிலங்களில் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் ஆடி மாத பவுர்ணமியில் கோகிலா விரதம் என்பதும் வட மாநிலங்களில் கடைப்பிடிக்கப்படுகிறது.
ஆவணி மாதம் பவுர்ணமி அன்று ரட்ஷா பந்தனம் ஆகும். ரிக், யஜூர் வேதங்களுக்கு உபாகர்மம் எனப்படும் ஆவணி அவிட்டம் அனுசரிக்கப்படும்.
புரட்டாசி மாத பவுர்ணமிக்கு அடுத்த நாள் முதல் தேய்பிறை முழுவதும் மகாளய பட்சம் என்று முன்னோர்களை வழிபட வேண்டும். அதற்கு மறுநாளில் இருந்து சாரதா நவராத்திரி ஆகும். துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய தேவிகளை கொலு பொம்மைகளில் ஆவாஹனம் செய்து, ஒன்பதாவது நாள் சரஸ்வதி பூஜை அன்று சரஸ்வதியை வழிபட்டால் கல்வியில் தேர்ச்சி பெறலாம். பத்தாவது நாள் விஜயதசமி ஆகும். மேலும் புரட்டாசி பவுர்ணமி அன்று உமாமகேஸ்வர விரதம். அன்று பார்வதி பரமேஸ்வரர்களுக்கு விரதம் இருந்து பூஜிப்பதால் நினைத்த காரியங்கள் கைகூடும் என்று சிவ ரகசியம் குறிப்பிடுகிறது.
ஐப்பசி மாதம் பவுர்ணமி அன்று எல்லா சிவன் கோவில்களிலும் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் நடத்தப்படும். அன்றைய தினம் ‘கௌமுதீ ஜாகரண விரதம்’ என்று வட நாட்டில் விசேஷமாக அனுஷ்டிக்கப்படும். அன்று இரவில் நிலவு ஒளியில் லட்சுமி பூஜை செய்யப்படும். ஐப்பசி மாதம் கிருஷ்ணபட்சம் சதுர்த்தசி அன்று ‘நரக சதுர்த்தசி’ எனப்படும் தீபாவளி பண்டிகை நாடெங்கும் கொண்டாடப்படுகிறது.
கார்த்திகை மாதம் பவுர்ணமி அன்று எல்லா வீடுகளிலும், சிவாலயங்களிலும், விஷ்ணு ஆலயங்களிலும் வரிசையாக கார்த்திகை தீபம் ஏற்றப்படும். அன்றைய நாளில் தீப தானம் செய்வது பெரும் புண்ணியத்தை அளிக்கும். மகாபலிக்கு மகா விஷ்ணு வரம் அளித்த தினம். அன்று பக்தேஸ்வர விரதம் என்று வட மாநில பெண்கள் பரமேஸ்வர பூஜை செய்வார்கள்.
மார்கழி மாதம் முழுவதும் தேவர்களுக்கு விடியற்காலம் என்பதால் அதிகாலையிலேயே எல்லா கோவில்களிலும் அபிஷேகம், பூஜை நடைபெறும். கடவுளுக்கு பொங்கல் நிவேதனம் செய்து பக்தர்களுக்கு வினியோகம் செய்வார்கள். மார்கழி மாதம் பவுர்ணமி அன்று திருவாதிரை உற்சவம். எல்லா சிவன் கோவில்களிலும் நடராஜன் பெருமானுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். சிவகாமி அம்மையுடன் நடராஜப்பெருமானுக்கு சிதம்பரத்தில் விசேஷ அபிஷேகமும், புறப்பாடும் சிறப்பாக இருக்கும்.
தைமாதம் பவுர்ணமி அன்று தைப்பூச விழாவானது, திருவிடை மருதூர் தலத்திலும், வடலூர், பழனி முதலிய ஸ்தலங்களிலும் சிறப்பாக நடைபெறும். மாசி மாதம் சுக்ல பஞ்சமி ‘வசந்த பஞ்சமி’ எனப்படும். வசந்த ருது ஆரம்பிக்கப் போவதாக பார்வதி பரமேஸ்வர வழிபாடு செய்வார்கள்.
மாசி மாதம் பவுர்ணமி தினமானது மாசி மகம் ஆகும். அதற்கு பத்து நாட்கள் முன்னதாகவே உற்சவம் ஆரம்பித்து, பஞ்ச மூர்த்திகள் வெவ்வேறு வாகனங்களில் வீதி உலா வருதல் நடைபெறும். பவுர்ணமி அன்று தீர்த்த வாரி. மாசி மாதம் முழுவதுமே மகாஸ்நானம் என்று தினமும் நதியில் நீராடி கம்பளி, சந்தனக்கட்டை, பசு முதலான தானங்களை செய்வது புண்ணியமாக கருதப்படுகிறது. மாசி மாதம் பவுர்ணமி அன்று பன்னிரண்டு வருஷத்துக்கொரு மகாமகம் கும்பகோணத்திலும், பிரயாகை, ஹரித்வார் முதலான இடங்களில் கும்பமேளாவும் நடக்கும். அந்த இடங்களில் நீராடிய பின்னர் தானம் செய்வது விசேஷமானது.
பங்குனி மாதம் பவுர்ணமி அன்று ‘ஹோலிகா’ என்னும் ஹோலி பண்டிகை வடநாட்டில் மிகுந்த கோலாகலத்துடன் கொண்டாடப்படுகிறது.
விரதம், நோன்பை எல்லா மதத்தினரும் கடைப்பிடித்து வருகின்றனர். மன உறுதிக்கு துணையாக இருப்பது விரதம் தான். ஒவ்வொரு காலகட்ட விரதத்துக்கும் உரிய பலன்கள் கிடைக்கும்.
இவ்விதம் பல விரதங்களையும், ஸ்நானம், தானம், பூஜை ஆகியவற்றை முறைப்படி செய்து, இவ்வுலகில் நல்வாழ்வு வாழலாம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
ஒரு வேளை மட்டும் உணவு அருந்தி இருப்பது, நாள் முழுவதும் எதுவும் சாப்பிடாமல் இருப்பது, அசைவ உணவுகளை மட்டும் தவிர்த்து சைவ உணவுகளை மட்டும் உண்ணுவது, தண்ணீர், பழங்கள் மட்டும் சாப்பிட்டு விரதம் இருப்பது என பல முறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. எந்த முறையில் விரதம் இருந்தாலும் பலன் கிடைப்பது உறுதி என்று ஆன்மிக சான்றோர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
பொதுவாக, ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வாரம் ஒரு முறை விரதமிருப்பது சரியானது. விரதத்துக்கு 2 நாட்களுக்கு முன்பிருந்தே, காரம் குறைவான, பருப்பு சாதம் மாதிரி நன்கு வேகவைக்கப்பட்ட உணவுகளையும், ரசம் சாதம், மோர் மற்றும் பழங்களையும் உண்பது ஆன்மிக வாழ்வுக்கு ஏற்றது.
குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள், கடுமையான வேலைகள் செய்பவர்கள், அடிக்கடி வெளியூர் செல்பவர்கள், நோயாளிகள், தொடர்ந்து மருந்து உட்கொண்டு வருபவர்கள் ஆகியோர் விரதம் இருப்பதை தவிர்க்க வேண்டும் என்பது முக்கியமான விதியாகும்.
தமிழ் மாத விரத வகைகள்
அமாவாசை என்பது முன்னோர்களை வழிபட முக்கியமானது என்பதுபோல், ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி தினத்தன்று ஓர் விரத தினமாக அமைந்திருக்கிறது. அவை பற்றிய தொகுப்பை இங்கே காணலாம்.
சித்திரை மாதம் பவுர்ணமியன்று. சித்ரா பவுர்ணமி என்று சொல்லப்படும். அன்று விரதம் இருந்து சித்ரகுப்த பூஜை செய்யப்படும்.
வைகாசி மாதம் பவுர்ணமி வைகாசி விசாகம் ஆகும். அன்று நீராடி வைசாக தானம் என்று தயிர் சாதம், பானகம், நீர் மோர் ஆகியவற்றை தானமாக கொடுப்பது சிறந்தது.
ஆனி மாதம் வளர்பிறையில் கோபத்ம விரதம் என்று மகா விஷ்ணுவுக்கு உகந்த விரதம் வருகிறது. அந்த விரதத்தை பெண்கள் விசேஷமாக கடைப்பிடிக்கிறார்கள்.
ஆடி மாதம் பவுர்ணமி அன்று வட சாவித்ரி விரதம் மற்ற மாநிலங்களில் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் ஆடி மாத பவுர்ணமியில் கோகிலா விரதம் என்பதும் வட மாநிலங்களில் கடைப்பிடிக்கப்படுகிறது.
ஆவணி மாதம் பவுர்ணமி அன்று ரட்ஷா பந்தனம் ஆகும். ரிக், யஜூர் வேதங்களுக்கு உபாகர்மம் எனப்படும் ஆவணி அவிட்டம் அனுசரிக்கப்படும்.
புரட்டாசி மாத பவுர்ணமிக்கு அடுத்த நாள் முதல் தேய்பிறை முழுவதும் மகாளய பட்சம் என்று முன்னோர்களை வழிபட வேண்டும். அதற்கு மறுநாளில் இருந்து சாரதா நவராத்திரி ஆகும். துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய தேவிகளை கொலு பொம்மைகளில் ஆவாஹனம் செய்து, ஒன்பதாவது நாள் சரஸ்வதி பூஜை அன்று சரஸ்வதியை வழிபட்டால் கல்வியில் தேர்ச்சி பெறலாம். பத்தாவது நாள் விஜயதசமி ஆகும். மேலும் புரட்டாசி பவுர்ணமி அன்று உமாமகேஸ்வர விரதம். அன்று பார்வதி பரமேஸ்வரர்களுக்கு விரதம் இருந்து பூஜிப்பதால் நினைத்த காரியங்கள் கைகூடும் என்று சிவ ரகசியம் குறிப்பிடுகிறது.
ஐப்பசி மாதம் பவுர்ணமி அன்று எல்லா சிவன் கோவில்களிலும் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் நடத்தப்படும். அன்றைய தினம் ‘கௌமுதீ ஜாகரண விரதம்’ என்று வட நாட்டில் விசேஷமாக அனுஷ்டிக்கப்படும். அன்று இரவில் நிலவு ஒளியில் லட்சுமி பூஜை செய்யப்படும். ஐப்பசி மாதம் கிருஷ்ணபட்சம் சதுர்த்தசி அன்று ‘நரக சதுர்த்தசி’ எனப்படும் தீபாவளி பண்டிகை நாடெங்கும் கொண்டாடப்படுகிறது.
கார்த்திகை மாதம் பவுர்ணமி அன்று எல்லா வீடுகளிலும், சிவாலயங்களிலும், விஷ்ணு ஆலயங்களிலும் வரிசையாக கார்த்திகை தீபம் ஏற்றப்படும். அன்றைய நாளில் தீப தானம் செய்வது பெரும் புண்ணியத்தை அளிக்கும். மகாபலிக்கு மகா விஷ்ணு வரம் அளித்த தினம். அன்று பக்தேஸ்வர விரதம் என்று வட மாநில பெண்கள் பரமேஸ்வர பூஜை செய்வார்கள்.
மார்கழி மாதம் முழுவதும் தேவர்களுக்கு விடியற்காலம் என்பதால் அதிகாலையிலேயே எல்லா கோவில்களிலும் அபிஷேகம், பூஜை நடைபெறும். கடவுளுக்கு பொங்கல் நிவேதனம் செய்து பக்தர்களுக்கு வினியோகம் செய்வார்கள். மார்கழி மாதம் பவுர்ணமி அன்று திருவாதிரை உற்சவம். எல்லா சிவன் கோவில்களிலும் நடராஜன் பெருமானுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். சிவகாமி அம்மையுடன் நடராஜப்பெருமானுக்கு சிதம்பரத்தில் விசேஷ அபிஷேகமும், புறப்பாடும் சிறப்பாக இருக்கும்.
தைமாதம் பவுர்ணமி அன்று தைப்பூச விழாவானது, திருவிடை மருதூர் தலத்திலும், வடலூர், பழனி முதலிய ஸ்தலங்களிலும் சிறப்பாக நடைபெறும். மாசி மாதம் சுக்ல பஞ்சமி ‘வசந்த பஞ்சமி’ எனப்படும். வசந்த ருது ஆரம்பிக்கப் போவதாக பார்வதி பரமேஸ்வர வழிபாடு செய்வார்கள்.
மாசி மாதம் பவுர்ணமி தினமானது மாசி மகம் ஆகும். அதற்கு பத்து நாட்கள் முன்னதாகவே உற்சவம் ஆரம்பித்து, பஞ்ச மூர்த்திகள் வெவ்வேறு வாகனங்களில் வீதி உலா வருதல் நடைபெறும். பவுர்ணமி அன்று தீர்த்த வாரி. மாசி மாதம் முழுவதுமே மகாஸ்நானம் என்று தினமும் நதியில் நீராடி கம்பளி, சந்தனக்கட்டை, பசு முதலான தானங்களை செய்வது புண்ணியமாக கருதப்படுகிறது. மாசி மாதம் பவுர்ணமி அன்று பன்னிரண்டு வருஷத்துக்கொரு மகாமகம் கும்பகோணத்திலும், பிரயாகை, ஹரித்வார் முதலான இடங்களில் கும்பமேளாவும் நடக்கும். அந்த இடங்களில் நீராடிய பின்னர் தானம் செய்வது விசேஷமானது.
பங்குனி மாதம் பவுர்ணமி அன்று ‘ஹோலிகா’ என்னும் ஹோலி பண்டிகை வடநாட்டில் மிகுந்த கோலாகலத்துடன் கொண்டாடப்படுகிறது.
விரதம், நோன்பை எல்லா மதத்தினரும் கடைப்பிடித்து வருகின்றனர். மன உறுதிக்கு துணையாக இருப்பது விரதம் தான். ஒவ்வொரு காலகட்ட விரதத்துக்கும் உரிய பலன்கள் கிடைக்கும்.
இவ்விதம் பல விரதங்களையும், ஸ்நானம், தானம், பூஜை ஆகியவற்றை முறைப்படி செய்து, இவ்வுலகில் நல்வாழ்வு வாழலாம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
சிவசக்தி தத்துவத்தை விளக்கும் உமாமகேசுவர வடிவத்தை, புரட்டாசி மாதத்தில் வரும் பவுர்ணமி நாளில் வழிபடுவதை ‘உமாமகேசுவர விரதம்’ என்கின்றனர்.
சிவசக்தி தத்துவத்தை விளக்கும் உமாமகேசுவர வடிவத்தை, புரட்டாசி மாதத்தில் வரும் பவுர்ணமி நாளில் வழிபடுவதை ‘உமாமகேசுவர விரதம்’ என்கின்றனர். சிவபெருமானுக்குரிய முக்கிய விரதங்களான சோமவார விரதம், திருவாதிரை விரதம், சிவராத்திரி விரதம், பிரதோஷ விரதம், பாசுபத விரதம், அஷ்டமி விரதம், கேதார கவுரி விரதம், உமா மகேசுவர விரதம் எனும் எட்டு விரதங்களுள், உமா மகேசுவர விரதம் மிகவும் உயர்வானது.
இவ்விரதம் மேற்கொள்பவர்கள், விரத நாளில் வழிபாடு முடிந்ததும், ஏழைகளுக்கு உணவிட்டு, அவர்கள் சாப்பிட்ட பிறகே உணவருந்த வேண்டும். மகாலட்சுமியைப் பிரிந்த திருமால், கவுதம முனிவரின் ஆலோசனைப்படி உமாமகேசுவர விரதம் இருந்து, பின்னர் திருமகளை அடைந்தார். எனவே, கருத்து வேறுபாடுகளுடன் பிரிந்த தம்பதியர்கள் ஒன்று சேர்தல், பிரிந்த குடும்பத்தினர் ஒன்றிணைதல், பிரிந்த நண்பர்கள் சேர்தல் போன்றவைகளுக்கு இந்த விரதம் முதன்மையானதாக இருக்கிறது.
இவ்விரதத்தினைத் தொடர்ந்து பதினாறு வருடங்கள் செய்பவர்களுக்கு, அவர்கள் வேண்டிய வளங்கள் அனைத்தும் கிடைக்கும் என்கின்றனர்.
இவ்விரதம் மேற்கொள்பவர்கள், விரத நாளில் வழிபாடு முடிந்ததும், ஏழைகளுக்கு உணவிட்டு, அவர்கள் சாப்பிட்ட பிறகே உணவருந்த வேண்டும். மகாலட்சுமியைப் பிரிந்த திருமால், கவுதம முனிவரின் ஆலோசனைப்படி உமாமகேசுவர விரதம் இருந்து, பின்னர் திருமகளை அடைந்தார். எனவே, கருத்து வேறுபாடுகளுடன் பிரிந்த தம்பதியர்கள் ஒன்று சேர்தல், பிரிந்த குடும்பத்தினர் ஒன்றிணைதல், பிரிந்த நண்பர்கள் சேர்தல் போன்றவைகளுக்கு இந்த விரதம் முதன்மையானதாக இருக்கிறது.
இவ்விரதத்தினைத் தொடர்ந்து பதினாறு வருடங்கள் செய்பவர்களுக்கு, அவர்கள் வேண்டிய வளங்கள் அனைத்தும் கிடைக்கும் என்கின்றனர்.
அமாவாசை தினங்களில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வது மிகவும் நன்மை அளிப்பதாகும். இன்று விரதம் இருந்து முன்னோர்களை வழிபட உகந்த நாளாகும்.
அமாவாசை தினங்கள் என்பது மூதாதையர்களை விரதம் இருந்து வழிபடுவதற்குரிய தினமாகவே கருதப்படுகிறது. அன்றைய தினம் நம்முடைய முன்னோர்களின் பசியும், தாகமும் அதிகரிக்கும் என்றும், அந்த பசியைப் போக்க கறுப்பு எள் கலந்த தண்ணீரை தர்ப்பணம் செய்ய வேண்டும் என்றும், அவ்வாறு செய்தால் அவர்களின் பசி அடங்கி, நமக்கு ஆசிகளை வழங்குவார்கள் என்றும் சாஸ்திரங்கள் கூறுகின்றன. அமாவாசை தோறும், ஒவ்வொரு வீட்டு வாசலிலும், முன்னோர்கள் நின்று கொண்டு எள் தண்ணீர் பெறுவதற்காக காத்துக் கொண்டிருப்பார்களாம். சூரியனும், சந்திரனும் இணையும் தினமே அமாவாசை என்று அழைக்கப்படுகிறது.
அமாவாசை தினங்களில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வது மிகவும் நன்மை அளிப்பதாகும். இறந்தவர்களின் நாள்,தேதி தெரியாதவர்களும், 12 அமாவாசையன்றும் திதி கொடுக்க முடியாதவர்களும் தை, ஆடி மகாளய அமாவாசை திதிகளில் திதி கொடுத்தால் ஆண்டுதோறும் திதி கொடுத்த பலன் கிடைப்பதாக ஐதீகம்.
நம் முன்னோர்கள், காகத்தின் வடிவில் வீட்டிற்கு வருவதாக ஐதீகம். அதனால் காகத்துக்கு உணவு அளிப்பது முக்கியம். அன்று காலை ஆறு, கடல் போன்ற நீர் நிலைகளுக்கு சென்று நீராடி தர்ப்பணம் கொடுக்க வேண்டும். காலை 6.30 மணிக்குள் தர்ப்பணம் கொடுப்பது நல்லது. ராகுகாலம், எமகண்டம் ஆகியவை தர்ப்பணத்துக்கு பொருந்தாது. மதிய வேளை தர்ப்பணம் செய்ய மிகவும் உகந்தது. தர்ப்பணம் கொடுக்கும்போது தங்களின் கோத்திரம், குலதெய்வம், மூன்று தலைமுறையின் பெயர்களை அறிந்து கொள்வது அவசியம்.
அமாவாசை அன்று ஒவ்வொரு வீட்டு வாசலிலும் அந்தந்த வீட்டு பித்ருக்கள் வந்து நின்று கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு எள் கலந்த தண்ணீரை தரவேண்டும். இதனால் அவர்கள் மன்மகிழ்ந்து ஆசீர்வதிப்பர். இவ்வாறு செய்யாவிட்டல் ஒருசில பித்ருக்கள் கோபத்துடன் சாபம் தந்துவிட்டு செல்வதாகவும் கூறப்படுகிறது. ஆகவே தவறாது சிரார்த்தம் தர்ப்பணம் செய்ய வேண்டும். தமிழ் மாத பிறப்பன்று பித்ருக்களை வழிபட்டு சூரியனை வணங்க வேண்டும். நம் பித்ருக்கள் சக்தி நிறைந்தவர்கள். அவர்கள் ஆசீர்வாதத்தால் புண்ணியமும் செல்வமும் கிடைக்கும்.
அமாவாசை தினங்களில் மாமிசம் சாப்பிடக்கூடாது. வெங்காயம், பூண்டு ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். தர்ப்பணம் செய்யும் போது கறுப்பு எள்ளை, மற்றவர்களிடம் இருந்து கடன் வாங்கக்கூடாது.நீரில் இருந்து கொண்டு கரையில் தர்ப்பணம் செய்யக் கூடாது. அதைப்போல் கரையில் இருந்து கொண்டு நீரிலும் தர்ப்பணம் செய்யக்கூடாது. தர்ப்பணத்தை எப்போதும் கிழக்கு முகமாக பார்த்தபடி தான் கொடுக்க வேண்டும்.
அமாவாசை தினங்களில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வது மிகவும் நன்மை அளிப்பதாகும். இறந்தவர்களின் நாள்,தேதி தெரியாதவர்களும், 12 அமாவாசையன்றும் திதி கொடுக்க முடியாதவர்களும் தை, ஆடி மகாளய அமாவாசை திதிகளில் திதி கொடுத்தால் ஆண்டுதோறும் திதி கொடுத்த பலன் கிடைப்பதாக ஐதீகம்.
நம் முன்னோர்கள், காகத்தின் வடிவில் வீட்டிற்கு வருவதாக ஐதீகம். அதனால் காகத்துக்கு உணவு அளிப்பது முக்கியம். அன்று காலை ஆறு, கடல் போன்ற நீர் நிலைகளுக்கு சென்று நீராடி தர்ப்பணம் கொடுக்க வேண்டும். காலை 6.30 மணிக்குள் தர்ப்பணம் கொடுப்பது நல்லது. ராகுகாலம், எமகண்டம் ஆகியவை தர்ப்பணத்துக்கு பொருந்தாது. மதிய வேளை தர்ப்பணம் செய்ய மிகவும் உகந்தது. தர்ப்பணம் கொடுக்கும்போது தங்களின் கோத்திரம், குலதெய்வம், மூன்று தலைமுறையின் பெயர்களை அறிந்து கொள்வது அவசியம்.
அமாவாசை அன்று ஒவ்வொரு வீட்டு வாசலிலும் அந்தந்த வீட்டு பித்ருக்கள் வந்து நின்று கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு எள் கலந்த தண்ணீரை தரவேண்டும். இதனால் அவர்கள் மன்மகிழ்ந்து ஆசீர்வதிப்பர். இவ்வாறு செய்யாவிட்டல் ஒருசில பித்ருக்கள் கோபத்துடன் சாபம் தந்துவிட்டு செல்வதாகவும் கூறப்படுகிறது. ஆகவே தவறாது சிரார்த்தம் தர்ப்பணம் செய்ய வேண்டும். தமிழ் மாத பிறப்பன்று பித்ருக்களை வழிபட்டு சூரியனை வணங்க வேண்டும். நம் பித்ருக்கள் சக்தி நிறைந்தவர்கள். அவர்கள் ஆசீர்வாதத்தால் புண்ணியமும் செல்வமும் கிடைக்கும்.
அமாவாசை தினங்களில் மாமிசம் சாப்பிடக்கூடாது. வெங்காயம், பூண்டு ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். தர்ப்பணம் செய்யும் போது கறுப்பு எள்ளை, மற்றவர்களிடம் இருந்து கடன் வாங்கக்கூடாது.நீரில் இருந்து கொண்டு கரையில் தர்ப்பணம் செய்யக் கூடாது. அதைப்போல் கரையில் இருந்து கொண்டு நீரிலும் தர்ப்பணம் செய்யக்கூடாது. தர்ப்பணத்தை எப்போதும் கிழக்கு முகமாக பார்த்தபடி தான் கொடுக்க வேண்டும்.
இன்று பங்குனி மாத சிவராத்திரி. பக்தர்கள் விரதம் இருந்து சிவபெருமானை வழிபாடு செய்தால் வேண்டிய வரங்கள் அனைத்தும் நிறைவேறும்.
மாதந்தோறும் வரும் சிவராத்திரி விரதம் சிவபெருமானுக்கு மிகவும் விசேஷம். இன்று பங்குனி மாத சிவராத்திரி. பக்தர்கள் விரதம் இருந்து சிவபெருமானை வழிபாடு செய்தால் வேண்டிய வரங்கள் அனைத்தும் நிறைவேறும். இந்த மாத சிவராத்திரி விரதம் தேன்றிய வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
ஒரு காலத்தில் உலகப் பிரளயத்தின் போது உயிர்கள் எல்லாம் "சிவன்" சிவனிடத்தே ஒடுங்கின. உலகங்களே தோன்றவில்லை. இந்த நிலையில் எல்லையில்லாக் கருணையுடைய அம்பிகை அண்டங்கள் தோன்றி இயங்கும் பொருட்டு இறைவனை இடைவிடாது தியானம் செய்தாள். அப்போது இறைவன் தன்னுள் ஒடுங்கி இருந்த உலகங்களை மீண்டும் உண்டாகச் செய்து உயிர்களையும் படைத்தார்.
அதன்பால் அன்னை பார்வதி தங்களை மனதில் தியானித்துப் போற்றிய காலம் "சிவராத்திரி" என்று பெயர் பெறவேண்டும் என்றும் அதனைச் சிவராத்திரி விரதம் என்று எல்லோரும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அதை கடைப்பிடிப்பவர்கள் எல்லா நலன்களும் பெற்று முக்தியடையவேண்டும் என்று இறைவனிடம் வேண்டினார் இறைவனும் அவ்வாறே நடைபெறும் என்று அருள்புரிந்தார்.
தேவியை போல நந்தி பெருமான், சனகாதி முனிவர் சிவராத்திரி விரதம் அனுஷ்டித்து தங்கள் விருப்பம் நிறைவேறப்பெற்றார். ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி இரவு சிவனடியார் பலர் இந்த சிவராத்திரியை விரதத்தை மாதந்தோறும் தவறாமல் இதனை கடைப்பிடித்து வருவர்.
ஒரு காலத்தில் உலகப் பிரளயத்தின் போது உயிர்கள் எல்லாம் "சிவன்" சிவனிடத்தே ஒடுங்கின. உலகங்களே தோன்றவில்லை. இந்த நிலையில் எல்லையில்லாக் கருணையுடைய அம்பிகை அண்டங்கள் தோன்றி இயங்கும் பொருட்டு இறைவனை இடைவிடாது தியானம் செய்தாள். அப்போது இறைவன் தன்னுள் ஒடுங்கி இருந்த உலகங்களை மீண்டும் உண்டாகச் செய்து உயிர்களையும் படைத்தார்.
அதன்பால் அன்னை பார்வதி தங்களை மனதில் தியானித்துப் போற்றிய காலம் "சிவராத்திரி" என்று பெயர் பெறவேண்டும் என்றும் அதனைச் சிவராத்திரி விரதம் என்று எல்லோரும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அதை கடைப்பிடிப்பவர்கள் எல்லா நலன்களும் பெற்று முக்தியடையவேண்டும் என்று இறைவனிடம் வேண்டினார் இறைவனும் அவ்வாறே நடைபெறும் என்று அருள்புரிந்தார்.
தேவியை போல நந்தி பெருமான், சனகாதி முனிவர் சிவராத்திரி விரதம் அனுஷ்டித்து தங்கள் விருப்பம் நிறைவேறப்பெற்றார். ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி இரவு சிவனடியார் பலர் இந்த சிவராத்திரியை விரதத்தை மாதந்தோறும் தவறாமல் இதனை கடைப்பிடித்து வருவர்.
சிவபெருமானுக்கு உகந்த விரதங்களுள் மிகவும் முக்கியமானதும், சிறப்பானதும் பிரதோஷம் விரதம். பிரதோஷ விரதம் பற்றிய அரிய தகவல்களை அறிந்து கொள்ளலாம்.
குற்றமற்ற நேரம் :
தோஷம் என்றால் குற்றம் என்று பொருள். பிரதோஷம் என்றால் குற்றமற்ற என்று அர்த்தம். அந்த குற்றமற்ற நேரத்தில் விரதம் இருந்து இறைவனை வழிபடுவது சிறப்பு. ஆகவேதான் பிரதோஷ விரத வழிபாட்டுக்கு மகத்துவம் அதிகம். சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் அன்று விரதம் இருந்தது சிவாலயங்களுக்குச் சென்று வழிபாடு செய்தால், 140 பிரதோஷ வழிபாடுகளில் கலந்துகொண்ட புண்ணியம் கிடைக்கும் என்பது சிவனடியார்களின் வாக்காகும்.
சனிப் பிரதோஷம் :
எல்லா பிரதோஷங்களையும் விட சனிக்கிழமை வரும் பிரதோஷ விரதம் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதுவும் கிருஷ்ணபட்ச (தேய்பிறை) சனிக் கிழமையில் வந்தால் அது ‘மகாப் பிரதோஷம்’ என்று அழைக்கப்படுகிறது. சாதாரண பிரதோஷ வேளைகளில் சிவாலயம் சென்று வழிபட்டால், ஒரு வருடம் ஆலயம் சென்று இறைவழிபாடு செய்த பலன் கிடைக்கும். அதுவே சனிக்கிழமை வரும் மகாப் பிரதோஷத்தன்று விரதம் இருந்து இறைவனை வழிபட்டால், 5 வருடம் ஆலய வழிபாடு செய்த பலன் கிட்டும் என்பது நம்பிக்கை.
சிறப்பு தரும் பால் அபிஷேகம் :
சிவபெருமான் அபிஷேகப் பிரியர். அவருக்கு பிரதோஷத்தன்று கறந்த பசும்பால் கொண்டு அபிஷேகம் செய்து வழிபட்டால் சிறப்பான பலனைப் பெறலாம். இல்லையென்றால் இளநீர் அபிஷேகம் செய்வது நல்லது. இறைவன் இயற்கையை விரும்பக் கூடியவன். எனவே இயற்கையான வில்வ இலை அர்ச்சனையும் சிவபெருமானை மகிழ்ச்சிப்படுத்தும். இது தவிர தும்பைப் பூ மாலை அணிவித்து பிரதோஷம் அன்று, சிவனை வழிபட்டால் சகல தோஷங்களும் விலகும்.
தோஷம் என்றால் குற்றம் என்று பொருள். பிரதோஷம் என்றால் குற்றமற்ற என்று அர்த்தம். அந்த குற்றமற்ற நேரத்தில் விரதம் இருந்து இறைவனை வழிபடுவது சிறப்பு. ஆகவேதான் பிரதோஷ விரத வழிபாட்டுக்கு மகத்துவம் அதிகம். சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் அன்று விரதம் இருந்தது சிவாலயங்களுக்குச் சென்று வழிபாடு செய்தால், 140 பிரதோஷ வழிபாடுகளில் கலந்துகொண்ட புண்ணியம் கிடைக்கும் என்பது சிவனடியார்களின் வாக்காகும்.
சனிப் பிரதோஷம் :
எல்லா பிரதோஷங்களையும் விட சனிக்கிழமை வரும் பிரதோஷ விரதம் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதுவும் கிருஷ்ணபட்ச (தேய்பிறை) சனிக் கிழமையில் வந்தால் அது ‘மகாப் பிரதோஷம்’ என்று அழைக்கப்படுகிறது. சாதாரண பிரதோஷ வேளைகளில் சிவாலயம் சென்று வழிபட்டால், ஒரு வருடம் ஆலயம் சென்று இறைவழிபாடு செய்த பலன் கிடைக்கும். அதுவே சனிக்கிழமை வரும் மகாப் பிரதோஷத்தன்று விரதம் இருந்து இறைவனை வழிபட்டால், 5 வருடம் ஆலய வழிபாடு செய்த பலன் கிட்டும் என்பது நம்பிக்கை.
சிறப்பு தரும் பால் அபிஷேகம் :
சிவபெருமான் அபிஷேகப் பிரியர். அவருக்கு பிரதோஷத்தன்று கறந்த பசும்பால் கொண்டு அபிஷேகம் செய்து வழிபட்டால் சிறப்பான பலனைப் பெறலாம். இல்லையென்றால் இளநீர் அபிஷேகம் செய்வது நல்லது. இறைவன் இயற்கையை விரும்பக் கூடியவன். எனவே இயற்கையான வில்வ இலை அர்ச்சனையும் சிவபெருமானை மகிழ்ச்சிப்படுத்தும். இது தவிர தும்பைப் பூ மாலை அணிவித்து பிரதோஷம் அன்று, சிவனை வழிபட்டால் சகல தோஷங்களும் விலகும்.
பக்தர்கள் கூப்பிட்டதும் பறந்து வந்து வரம் தரும் முருகப்பெருமானை விரதம் இருந்து வழிபட்டால் வரமும் கிடைக்கும், நல்ல வரனும் அமையும்.
குழந்தை பிறந்தவுடன் பாலுக்காக ஏங்குகிறது. படிக்கும் பொழுது நூலுக்காக ஏங்குகிறது. படித்து முடித்ததும் வேலைக்காக ஏங்குகிறது. பிறகு வாழ்க்கைத் துணை வந்திணைய மாலைக்காக ஏங்குகிறது.
“வீட்டைக் கட்டிப்பார், கல்யாணம் பண்ணிப்பார்” என்பது ஒரு பழமொழி. அதாவது வீடு கட்டுவதும் கடினம். கல்யாணம் பண்ணுவதும் கடினம். பெரும் முயற்சி எடுத்துத் தான் இரண்டையும் முடிக்க வேண்டும் என்று கருதியே, முன்னோர்கள் இந்த முத்தான பழமொழியைச் சொல்லி வைத்திருக்கிறார்கள்.
கல்யாணம் சீரும், சிறப்புமாக நடைபெற வேண்டுமானால், குருவின் அருள் தேவை. குரு பகவான் பச்சைக்கொடி காட்டினால் தான் காலா காலத்தில் கல்யாணம் நடைபெறும். புத்திரப் பேறும் வாய்க்கும். குருவின் மூர்த்தமாக செந்தூரில் முருகப்பெருமான் வீற்றிருந்து அருள் வழங்குவதால் தான், திருச்செந்தூர் குரு பீடமாக விளங்கு கிறது.
அப்படிப்பட்ட முருகப்பெருமானுக்கு 6 முகமும், 12 கரங்களும் இருப்பதால், தன்னை வணங்கும் பக்தர்கள் அனைவருக்கும் அள்ளிக்கொடுக்கும் வள்ளலாக அவர் விளங்குகிறார். பக்தர்கள் கூப்பிட்டதும் பறந்து வந்து வரம் தர மயிலும் வைத்திருக்கிறார். அவரை பங்குனி உத்திர நாளில் விரதம் இருந்து வழிபட்டால் வரமும் கிடைக்கும், நல்ல வரனும் அமையும். எனவே இந்த விரதத்தைக் ‘கல்யாண விரதம்’ என்றும் கூடச் சொல்லலாம்.
21.3.2019 (வியாழக்கிழமை) அன்று பங்குனி உத்திரத் திருவிழா வருகிறது. அன்றைய தினம் முழுவதும் விரதம் இருந்து மாங்கனியை நைவேத்தியமாக படைத்து, மால் மருகனை வழிபட்டால் வாழ்க்கைத் துணை அமைய வழி பிறக்கும். அதுமட்டுமல்ல, வந்த வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள் இருந்தால் அதை மாற்றி இனிமையாக்கும்.
அன்றைய தினம் இல்லத்து பூஜை அறையில் வள்ளி- தெய்வானையுடன் இணைந்த முருகன் படத்தை வைத்து, அருகில் பஞ்சமுக விளக்கேற்றி, ஐந்து வகை எண்ணெய் ஊற்றி, ஐந்து வகை புஷ்பம் சமர்ப்பித்து, ஐந்து வகை நைவேத்தியமும் படைத்து, கவச பாராயணங்களை படிப்பது நல்லது.
குத்து விளக்கின் கீழே இடும் கோலம், பின்னல் கோலமாக இல்லாமல், நடு வீட்டுக் கோலம் என்றழைக்கப்படும் முக்கோண, அறுகோண சதுரங்கள் அமைந்த கோலங்களாக போட வேண்டும். கோலத்தில் புள்ளி அதிகம் இருந்தால் தான் ‘புள்ளி’ எனப்படும் ‘வாரிசு’ பெருகும் என்பார்கள்.
பல தெய்வத் திருமணங்கள் பங்குனி உத்திர நாளில் நடைபெற்றதாகப் புராணங்கள் சொல்கின்றன. மன்மதன் உயிர்பெற்ற நாளும், பங்குனி உத்திரத் திருநாள் தான். மக்களைக் காக்கும் சிவபெருமான், உமையவளை மணம் புரிந்த நாளும் உத்திரம் என்று சொல்லப்படுகிறது.
எனவே இந்த இனிய நாளில் விரதம் இருந்து கந்தனுக்குப் பிடித்த கந்தரப்பம் நைவேத்தியம் வைத்து கவசம் பாடி வழிபட்டால் கல்யாண மாலை வரும் வாய்ப்புக் கிட்டும்.
மாங்கனி கிடைத்தால் மாங்கனி, இல்லையேல் தேன்கதலி வைத்து, அதை நாமே சாப்பிட வேண்டும். பிறகு முருகப்பெருமான் இருக்கும் ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டு வரவேண்டும். விவகாரமான பிரச்சினைகள் விலகவும், விவாகம் முடியவும் முருகன் சன்னிதிக்குச் சென்று தரிசனம் செய்வது சிறப்பாக வாழ்க்கையை அமைத்துத் தரும்.
வள்ளி மணவாளனை பங்குனி உத்திரத் திருநாளில் வழிபட்டால், பொருள் வளம் கூடும், புகழும் அதிகரிக்கும். ‘சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை, சுப்பிரமணியருக்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை’ என்று சொல்வார்கள். அந்த பன்னிரு கரத்தான், தன்னை வழிபட்டோருக்கு எண்ணிய வரங்களை எளிதில் வழங்குவான்.
“வீட்டைக் கட்டிப்பார், கல்யாணம் பண்ணிப்பார்” என்பது ஒரு பழமொழி. அதாவது வீடு கட்டுவதும் கடினம். கல்யாணம் பண்ணுவதும் கடினம். பெரும் முயற்சி எடுத்துத் தான் இரண்டையும் முடிக்க வேண்டும் என்று கருதியே, முன்னோர்கள் இந்த முத்தான பழமொழியைச் சொல்லி வைத்திருக்கிறார்கள்.
கல்யாணம் சீரும், சிறப்புமாக நடைபெற வேண்டுமானால், குருவின் அருள் தேவை. குரு பகவான் பச்சைக்கொடி காட்டினால் தான் காலா காலத்தில் கல்யாணம் நடைபெறும். புத்திரப் பேறும் வாய்க்கும். குருவின் மூர்த்தமாக செந்தூரில் முருகப்பெருமான் வீற்றிருந்து அருள் வழங்குவதால் தான், திருச்செந்தூர் குரு பீடமாக விளங்கு கிறது.
அப்படிப்பட்ட முருகப்பெருமானுக்கு 6 முகமும், 12 கரங்களும் இருப்பதால், தன்னை வணங்கும் பக்தர்கள் அனைவருக்கும் அள்ளிக்கொடுக்கும் வள்ளலாக அவர் விளங்குகிறார். பக்தர்கள் கூப்பிட்டதும் பறந்து வந்து வரம் தர மயிலும் வைத்திருக்கிறார். அவரை பங்குனி உத்திர நாளில் விரதம் இருந்து வழிபட்டால் வரமும் கிடைக்கும், நல்ல வரனும் அமையும். எனவே இந்த விரதத்தைக் ‘கல்யாண விரதம்’ என்றும் கூடச் சொல்லலாம்.
21.3.2019 (வியாழக்கிழமை) அன்று பங்குனி உத்திரத் திருவிழா வருகிறது. அன்றைய தினம் முழுவதும் விரதம் இருந்து மாங்கனியை நைவேத்தியமாக படைத்து, மால் மருகனை வழிபட்டால் வாழ்க்கைத் துணை அமைய வழி பிறக்கும். அதுமட்டுமல்ல, வந்த வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள் இருந்தால் அதை மாற்றி இனிமையாக்கும்.
அன்றைய தினம் இல்லத்து பூஜை அறையில் வள்ளி- தெய்வானையுடன் இணைந்த முருகன் படத்தை வைத்து, அருகில் பஞ்சமுக விளக்கேற்றி, ஐந்து வகை எண்ணெய் ஊற்றி, ஐந்து வகை புஷ்பம் சமர்ப்பித்து, ஐந்து வகை நைவேத்தியமும் படைத்து, கவச பாராயணங்களை படிப்பது நல்லது.
குத்து விளக்கின் கீழே இடும் கோலம், பின்னல் கோலமாக இல்லாமல், நடு வீட்டுக் கோலம் என்றழைக்கப்படும் முக்கோண, அறுகோண சதுரங்கள் அமைந்த கோலங்களாக போட வேண்டும். கோலத்தில் புள்ளி அதிகம் இருந்தால் தான் ‘புள்ளி’ எனப்படும் ‘வாரிசு’ பெருகும் என்பார்கள்.
பல தெய்வத் திருமணங்கள் பங்குனி உத்திர நாளில் நடைபெற்றதாகப் புராணங்கள் சொல்கின்றன. மன்மதன் உயிர்பெற்ற நாளும், பங்குனி உத்திரத் திருநாள் தான். மக்களைக் காக்கும் சிவபெருமான், உமையவளை மணம் புரிந்த நாளும் உத்திரம் என்று சொல்லப்படுகிறது.
எனவே இந்த இனிய நாளில் விரதம் இருந்து கந்தனுக்குப் பிடித்த கந்தரப்பம் நைவேத்தியம் வைத்து கவசம் பாடி வழிபட்டால் கல்யாண மாலை வரும் வாய்ப்புக் கிட்டும்.
மாங்கனி கிடைத்தால் மாங்கனி, இல்லையேல் தேன்கதலி வைத்து, அதை நாமே சாப்பிட வேண்டும். பிறகு முருகப்பெருமான் இருக்கும் ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டு வரவேண்டும். விவகாரமான பிரச்சினைகள் விலகவும், விவாகம் முடியவும் முருகன் சன்னிதிக்குச் சென்று தரிசனம் செய்வது சிறப்பாக வாழ்க்கையை அமைத்துத் தரும்.
வள்ளி மணவாளனை பங்குனி உத்திரத் திருநாளில் வழிபட்டால், பொருள் வளம் கூடும், புகழும் அதிகரிக்கும். ‘சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை, சுப்பிரமணியருக்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை’ என்று சொல்வார்கள். அந்த பன்னிரு கரத்தான், தன்னை வழிபட்டோருக்கு எண்ணிய வரங்களை எளிதில் வழங்குவான்.
நாம் இருக்கும் விரதத்தை முறையாகக் கடைப்பிடித்தால் இறையருள் நமக்கு பரிபூரணமாகக் கிடைக்கும். விரதம் இருக்கும் நாளில் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்று பார்க்கலாம்.
நாம் நினைத்தது நிறைவேறவும், நிம்மதி கிடைக்கவும் பொருளாதார நிலை உயரவும் இறைவனை நினைத்து விரதம் இருக்கின்றோம். அங்ஙனம் நாம் இருக்கும் விரதத்தை முறையாகக் கடைப்பிடித்தால் இறையருள் நமக்கு பரிபூரணமாகக் கிடைக்கும். விரதம் இருக்கும் நாளில் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பன வருமாறு:-
1) கோபப்படுதல் கூடாது.
2) விரதத்திற்கு முதல் நாளே வீட்டை மெழுகிக் கோலம் போட வேண்டும்.
3) பூஜை அறையைப் புனித அறையாக மாற்ற வேண்டும்.
4) எந்த தெய்வத்தின் அனுகிரகம் வேண்டி விரதம் இருக்கிறோமோ அந்த தெய்வப்படத்தை ஆனைமுகப்பெருமான் படத்திற்கு பக்கத்தில் வைக்க வேண்டும்.
5) ஐந்து முக விளக்கு ஏற்றி கவச பாராயணம் செய்து வழிபட வேண்டும்.
6) பெண்கள் வீட்டிற்கு விலக்கானால் எட்டு நாட்கள் கழித்துத் தான் விரதத்தை மேற்கொள்ள வேண்டும்.
7) விரத நாட்களில் தம்பதிகள் தாம்பத்ய உறவைத் தவிர்ப்பது நல்லது. எல்லாவற்றிற்கும் மேலாக விரத காலத்தில் 24 மணி நேரமும் இறை சிந்தனையோடு இருப்பது நல்லது.
சந்திர பலம் குறைந்தால் என்ன நடக்கும்?
ஒருவருக்கு ஜாதகத்தில் சந்திர பலம் குறைந்தால் என்ன நடக்கும் தெரியுமா?
மனக்குழப்பம் ஏற்படும், மாதுர் தோஷம் உருவாகும். தாய்வழி ஆதரவு குறையும். நீர் சம்மந்தப்பட்ட வியாதி ஏற்படும். அயல்நாட்டு பயண வாய்ப்பில் தடை ஏற்படும். மாமன், மைத்துனர்களின் ஒத்துழைப்பு குறையும்.
இந்த நிலைமாற திங்கட்கிழமை அல்லது ரோகிணி நட்சத்திரத்தன்று சந்திர கவசம் பாடி இறைவனை வழிபடுவது நல்லது.
பிறந்த நட்சத்திரத்தில் என்ன செய்யலாம்?
ஆண்கள் பிறந்த நட்சத்திரம் வரும் நாளில் புது முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. முக்கிய வழிபாடுகளை மட்டும் வைத்துக்கொள்ளலாம்.
பெண்கள் பிறந்த நட்சத்திரம் வரும் நாளில் வழி பாடுகளை வைத்துக்கொள்வதோடு, மற்ற சில காரியங்களும் செய்யலாம். அவை: கல்வி கற்கத் தொடங்கலாம், குழந்தைகளுக்குச் சோறு ஊட்டும் விழா நடத்தலாம், தாய்வழி உறவினர்களின் உதவி கேட்கலாம், சாந்தி முகூர்த்தங்கள் வைக்கலாம்.
ஜாதகத்தில் செவ்வாய் பலம் இருந்தால்...
ஒரு ஜாதகத்தில் செவ்வாய் உச்சம் பெற்றோ, ஆட்சி பெற்றோ இருந்தால் தலைமைப் பதவிகள் தானாக வந்து சேரும். எதிரிகள் உதிரிகளாவர். உடன்பிறப்பின் மூலம் உங்கள் கடன்சுமை குறையும். ரியல் எஸ்டேட், வீட்டு உபயோகப் பொருட்கள், மருந்து, மரம் ஆகிய துறைகளில் தொழில் புரிவோர் நல்ல லாபம் குவிப்பர்.
செவ்வாய் பலம் பெற அங்காரகன் ஸ்தலங்களுக்குச் சென்று வழிபட்டு வருவது நல்லது. அங்காரக கவசம் பாடி வழிபட்டால் தைரியமும் தன்னம்பிக்கையும் கூடும்.
தொட்ட காரியங்களில் வெற்றி பெற துளசியை வழிபடுவோம்
வீட்டில் துளசி செடி வளர்ப்பது நல்லது. எந்த இடத்தில் துளசி செடி வளர்கின்றதோ, அந்த இடமெல்லாம் சகல தேவதைகளும் மும்மூர்த்திகளும் வாசம் செய்கின்றார்கள். துளசியை வழிபட்டால் துயரங்கள் தீரும், இல்லத்தில் லட்சுமி கடாட்சம் உண்டாகும்.
துளசி இலைகளைச் சாப்பிட்டால் நோய்கள் குணமாகும். துளசியில் மகிமை ஏராளம் உள்ளது.
கிரகங்களுக்குரிய வாகனங்கள்
சூரியன் : மயில், தேர்
சந்திரன் : முத்துவிமானம்
செவ்வாய் : அன்னம்
புதன் : குதிரை
குரு : யானை
சுக்கிரன் : கருடன்
சனி : காகம்
ராகு : ஆடு
கேது : சிங்கம்
1) கோபப்படுதல் கூடாது.
2) விரதத்திற்கு முதல் நாளே வீட்டை மெழுகிக் கோலம் போட வேண்டும்.
3) பூஜை அறையைப் புனித அறையாக மாற்ற வேண்டும்.
4) எந்த தெய்வத்தின் அனுகிரகம் வேண்டி விரதம் இருக்கிறோமோ அந்த தெய்வப்படத்தை ஆனைமுகப்பெருமான் படத்திற்கு பக்கத்தில் வைக்க வேண்டும்.
5) ஐந்து முக விளக்கு ஏற்றி கவச பாராயணம் செய்து வழிபட வேண்டும்.
6) பெண்கள் வீட்டிற்கு விலக்கானால் எட்டு நாட்கள் கழித்துத் தான் விரதத்தை மேற்கொள்ள வேண்டும்.
7) விரத நாட்களில் தம்பதிகள் தாம்பத்ய உறவைத் தவிர்ப்பது நல்லது. எல்லாவற்றிற்கும் மேலாக விரத காலத்தில் 24 மணி நேரமும் இறை சிந்தனையோடு இருப்பது நல்லது.
சந்திர பலம் குறைந்தால் என்ன நடக்கும்?
ஒருவருக்கு ஜாதகத்தில் சந்திர பலம் குறைந்தால் என்ன நடக்கும் தெரியுமா?
மனக்குழப்பம் ஏற்படும், மாதுர் தோஷம் உருவாகும். தாய்வழி ஆதரவு குறையும். நீர் சம்மந்தப்பட்ட வியாதி ஏற்படும். அயல்நாட்டு பயண வாய்ப்பில் தடை ஏற்படும். மாமன், மைத்துனர்களின் ஒத்துழைப்பு குறையும்.
இந்த நிலைமாற திங்கட்கிழமை அல்லது ரோகிணி நட்சத்திரத்தன்று சந்திர கவசம் பாடி இறைவனை வழிபடுவது நல்லது.
பிறந்த நட்சத்திரத்தில் என்ன செய்யலாம்?
ஆண்கள் பிறந்த நட்சத்திரம் வரும் நாளில் புது முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. முக்கிய வழிபாடுகளை மட்டும் வைத்துக்கொள்ளலாம்.
பெண்கள் பிறந்த நட்சத்திரம் வரும் நாளில் வழி பாடுகளை வைத்துக்கொள்வதோடு, மற்ற சில காரியங்களும் செய்யலாம். அவை: கல்வி கற்கத் தொடங்கலாம், குழந்தைகளுக்குச் சோறு ஊட்டும் விழா நடத்தலாம், தாய்வழி உறவினர்களின் உதவி கேட்கலாம், சாந்தி முகூர்த்தங்கள் வைக்கலாம்.
ஜாதகத்தில் செவ்வாய் பலம் இருந்தால்...
ஒரு ஜாதகத்தில் செவ்வாய் உச்சம் பெற்றோ, ஆட்சி பெற்றோ இருந்தால் தலைமைப் பதவிகள் தானாக வந்து சேரும். எதிரிகள் உதிரிகளாவர். உடன்பிறப்பின் மூலம் உங்கள் கடன்சுமை குறையும். ரியல் எஸ்டேட், வீட்டு உபயோகப் பொருட்கள், மருந்து, மரம் ஆகிய துறைகளில் தொழில் புரிவோர் நல்ல லாபம் குவிப்பர்.
செவ்வாய் பலம் பெற அங்காரகன் ஸ்தலங்களுக்குச் சென்று வழிபட்டு வருவது நல்லது. அங்காரக கவசம் பாடி வழிபட்டால் தைரியமும் தன்னம்பிக்கையும் கூடும்.
தொட்ட காரியங்களில் வெற்றி பெற துளசியை வழிபடுவோம்
வீட்டில் துளசி செடி வளர்ப்பது நல்லது. எந்த இடத்தில் துளசி செடி வளர்கின்றதோ, அந்த இடமெல்லாம் சகல தேவதைகளும் மும்மூர்த்திகளும் வாசம் செய்கின்றார்கள். துளசியை வழிபட்டால் துயரங்கள் தீரும், இல்லத்தில் லட்சுமி கடாட்சம் உண்டாகும்.
துளசி இலைகளைச் சாப்பிட்டால் நோய்கள் குணமாகும். துளசியில் மகிமை ஏராளம் உள்ளது.
கிரகங்களுக்குரிய வாகனங்கள்
சூரியன் : மயில், தேர்
சந்திரன் : முத்துவிமானம்
செவ்வாய் : அன்னம்
புதன் : குதிரை
குரு : யானை
சுக்கிரன் : கருடன்
சனி : காகம்
ராகு : ஆடு
கேது : சிங்கம்
நீண்ட நாட்கள் திருமணம் தடைபட்டு வரும் பெண்கள் கீழ்கண்ட ராகு வழிபாட்டை விரதம் இருந்து செய்து வந்தால் விரைவில் திருமணம் கைக்கூடும்..
நீண்ட நாட்கள் திருமணம் தடைபட்டு வரும் பெண்கள் கீழ்கண்ட ராகு வழிபாட்டை விரதம் இருந்து செய்து வந்தால் விரைவில் திருமணம் கைக்கூடும்.. திருமணம் ஆகாத பெண்கள் விரதம் இருந்து ஞாயிறுதோறும் ராகு காலத்தில் (மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை) தீபம் ஏற்றி துர்க்கையை வழிபட வேண்டும். இவ்வாறு செய்து வர அப்பெண்களுக்கு விரைவில் திருமணம் கூடிவரும்.
திருமண வாழ்க்கையில் பிரச்சினையை காண்பவர்கள் அப்பிரச்சினையில் இருந்து விடுதலை பெற விரதம் இருந்து வெள்ளிக்கிழமை தோறும் ராகு காலத்தில் (காலை 10.30-12.00 மணி வரை) தீபம் ஏற்றி வணங்குதல் வேண்டும். இவ்வாறு 11வாரம் செய்து முடித்த பிறகு 12-வது வாரம் குங்கும அர்ச்சனை செய்ய வேண்டும். இந்த வழிபாட்டினை செய்ய திருமண வாழ்வில் தம்பதியினருக்கிடையே ஏற்படும் பிரச்சினைகள் நீங்கும்.
திருமண வரம் கூடிவந்தவுடன் காணிக்கையாக 108 எலுமிச்சம் பழத்தை மாலையாக்கி அம்மனுக்கு சாற்றலாம். அதே போல் தம்பதிகள் மேற்கண்ட வழிபாட்டை செய்து தங்கள் பிரச்சினை தீர்ந்தவுடன் அரக்குக் கலர் பட்டு பாவாடை சாற்றலாம்.
திருமண வாழ்க்கையில் பிரச்சினையை காண்பவர்கள் அப்பிரச்சினையில் இருந்து விடுதலை பெற விரதம் இருந்து வெள்ளிக்கிழமை தோறும் ராகு காலத்தில் (காலை 10.30-12.00 மணி வரை) தீபம் ஏற்றி வணங்குதல் வேண்டும். இவ்வாறு 11வாரம் செய்து முடித்த பிறகு 12-வது வாரம் குங்கும அர்ச்சனை செய்ய வேண்டும். இந்த வழிபாட்டினை செய்ய திருமண வாழ்வில் தம்பதியினருக்கிடையே ஏற்படும் பிரச்சினைகள் நீங்கும்.
திருமண வரம் கூடிவந்தவுடன் காணிக்கையாக 108 எலுமிச்சம் பழத்தை மாலையாக்கி அம்மனுக்கு சாற்றலாம். அதே போல் தம்பதிகள் மேற்கண்ட வழிபாட்டை செய்து தங்கள் பிரச்சினை தீர்ந்தவுடன் அரக்குக் கலர் பட்டு பாவாடை சாற்றலாம்.






