search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kamatchi amman"

    காரடையான் நோன்பு பொதுவாக கெளரி நோன்பு, சாவித்திரி விரதம், காமாட்சி நோன்பு என கூறுவர். சாவித்திரி நோன்பு என அழைக்கப்படும் இந்த விரதம் இருந்தால் கணவனின் ஆயுளை அதிகரிக்கும் என்பது ஐதீகம்.
    மாசி மாதமும், பங்குனியும் கூடும் வேளையில் நோற்கப்படுவது தான் காரடையான் நோன்பு. கணவனின் ஆரோக்கியம் மற்றும் ஆயுள் விருத்தியை கொடுக்கும் காரடையான் நோன்பு இன்று கடைப்பிடிக்கப்படுகின்றது.

    பூஜை செய்யும் காலம்:

    காரடையான் நோன்பு தினம்: பங்குனி 1ம் தேதி (15-03-19)
    நைவேத்தியம்:- காரடையான் நோன்பு அடை ( இனிப்பு, உப்பு)

    காரடையான் நோன்பு பொதுவாக கெளரி நோன்பு, சாவித்திரி விரதம், காமாட்சி நோன்பு என கூறுவர். சாவித்திரி நோன்பு என அழைக்கப்படும் இந்த விரதம் இருந்தால் கணவனின் ஆயுளை அதிகரிக்கும் என்பது ஐதீகம்.



    கற்பில் சிறந்தவளான சாவித்திரி, ஆயுள் காலம் முடிந்து அவரின் கணவன் சத்யவானின் உயிரை எமதர்ம ராஜன் பரித்துச் சென்ற போது, எமனிடமிருந்து மீட்டு வந்தாள் என நம்பப்படுகிறது.

    விரதம் இருக்கும் முறை:

    இந்த விரதத்தை கடைப்பிடிக்கும் பெண்கள் பூஜை முடியும் வரை உண்ணாமல் இருக்க வேண்டும். முடியாதவர்கள் பழங்களை சாப்பிடலாம். அதிகாலை நீராடி, வீட்டை சுத்தம் செய்து, பூஜை அறையை அலங்கரித்து, வாசலை மா இலை தோரணம் கட்ட வேண்டும். பூஜை அறையில் காமாட்சி அம்மனின் படங்கள் அல்லது விக்ரகத்தை பூ மாலையால் அலங்கரிக்க வேண்டும்.

    விரதம் அன்று செய்த அடையை சிறிது மீதம் வைத்து மறுநாள் பசுவுக்கு கொடுத்து, பசுவை வலம் வர வேண்டும் என்பது ஐதீகம். அதனால் தான் விரதத்தின் போது பால், தயிர் பொருட்களை சாப்பிடக்கூடாது.

    இந்த விரதம் இருந்தால் விரதம் இருக்கும் பெண்ணின் கணவன் ஆயுள் விருத்தி, ஆரோக்கியம் பெருவான் என்பது ஐதீகம். 
    கடன் தொல்லையால் அவதிப்பட்டு வருவோர் காஞ்சி காமாட்சித் தாயை மனதில் நினைத்தபடி, மனதார இந்த ஸ்தோத்திரத்தைச் சொல்லிவந்தால், வீட்டில் கடன் தொல்லை நீங்கும்.
    கடன் தொல்லையால் அவதிப்பட்டு வருவோரும் வீடுவாசல் என பிள்ளைகளுக்கு சொத்து சேர்க்க முடியவில்லை என்று கலங்குவோரும் காஞ்சி காமாட்சித் தாயை மனதில் நினைத்தபடி, மனதார இந்த ஸ்தோத்திரத்தைச் சொல்லிவந்தால், வீட்டில் கடன் தொல்லை நீங்கும். பொருள்சேர்க்கை நிகழும்.

    விரைவில், சகல செளபாக்கியங்களும் பெற்று, சுபிட்சத்துடன் வாழ்வார்கள் என்கிறார் காஞ்சி காமாட்சி கோயிலின் நடராஜ சாஸ்திரிகள்.

    மூக பஞ்ச சதியில் உள்ள ஸ்ரீகாமாக்ஷி அம்மனைத் துதிக்கும் அற்புதமான ஸ்தோத்திரம் இது.

    ச்ரியம் வித்யாம்தத்யாத்ஜனனி நமதாம் கீர்த்திமமிதாம்
    ஸுபுத்ரம் ப்ராதத்தே தவ ஜடிதி காமாக்ஷி! கருணா
    த்ரிலோக்யாமாதிக்யம் த்ரிபுரபரிபந்திப்ரணயினி
    ப்ரணாமஸ்த்வத்பாதே ஸமிததுரிதே கிம் ந குருதே

    அதாவது, காமாக்ஷி அன்னையே! உன்னை வணங்குபவர்களுக்கு உன்னுடைய கருணையானது தனம், வித்தை, அளவற்ற கீர்த்தி, நல்ல குழந்தைகள், மூவுலகிலும் மேன்மையை அடையும் நிலை ஆகியவற்றை விரைவிலேயே வரமாகத் தருகிறது.

    திரிபுரத்தையும் சம்ஹாரம் செய்த பரமேஸ்வரனின் பத்தினியே! பக்தர்களின் பாவத்தைப் போக்கும் தங்களின் சரணத்தில் செய்த நமஸ்காரமானது, எங்களுக்கு எதைத்தான் கொடுக்காது? என்று அர்த்தம்!

    பௌர்ணமி, ஞாயிறு, செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும், அம்பாளுக்கு உகந்த நாட்களிலும், அம்பாளுக்கு செவ்வரளி முதலான சிவப்பு மலர்களால் அர்ச்சனை செய்து, சர்க்கரைப் பொங்கல் சமர்ப்பித்து, இந்த ஸ்தோத்திரத்தைச் சொல்லி வழிபட, சகல நன்மைகளும் உண்டாகும்.

    செல்வம், கல்வி கேள்வி என வித்தை, புத்திரப்பேறு, கீர்த்தி, உத்தியோகம் ஆகியவை கிடைக்கவில்லையே என வருந்தும் பக்தர்கள், இந்த ஸ்லோகத்தைப் பாராயணம் செய்யுங்கள். வீட்டில் சுபிட்சம் நிலவும் என்பது உறுதி!
    இந்த நோன்பில் கலந்து கொள்ளும் கன்னிப்பெண்களுக்கு தோஷங்கள், தடைகள் நீங்கி அவர்களது கல்யாண கனவுகள் நிறைவேறும் என்பது ஐதீகம்.
    மாசியும், பங்குனியும் சேரும் வேளையில் காரடையான் நோன்பு கடைபிடிக்கப்படுகிறது. இந்த விரதம் சம்பத் கவுரி விரதம், காமாட்சி நோன்பு, சாவித்ரி விரதம், சுமங்கலி நோன்பு என்றும் அழைக்கப்படுகிறது. இந்த விரதம் மூலம் கணவன் - மனைவி இடையே ஒற்றுமையும், மாங்கல்ய பலமும், நீண்ட ஆயுள், ஆரோக்ய, ஐஸ்வர்யமும் உண்டாகும் என்பது காலம் காலமாக இருந்து வரும் ஐதீகம். இந்த விரதம் வடநாட்டில் கர்வா சவுத் என்ற பெயரில் மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த விரதத்துக்கு முக்கிய காரணமாக சத்யவான்- சாவித்ரி கதை சொல்லப்படுகிறது.

    இந்நாளில் காமாட்சி அம்மன் படம் வைத்து நெய் விளக்கேற்றி பூரண கும்பம் வைக்க வேண்டும். அதில் தேங்காய் வைத்து பட்டுத்துணி சுற்றி பூமாலை சாற்ற வேண்டும். மஞ்சள் சரடு (கயிறு) எடுத்து பசு மஞ்சள், பூ இணைத்து அதன்மீது வைக்க வேண்டும். இந்த கும்பத்தில் வந்து அருள்புரியுமாறு அம்மனை வழிபட்டு விரதத்தை முடிப்பார்கள்.

    பின்னர் பெண்கள் மஞ்சள் சரடு அணிந்து கொள்வார்கள். கட்டுக் கிழத்தி என்று சொல்லப்படும் வயதான தீர்க்க சுமங்கலிகளாக இருக்கும் பெண்களை வணங்கி அவர்களது ஆசிர்வாதம் பெற்று, அவர்கள் கையால் சரடு அணிவது சிறப்பாகும். சிவனுக்காக உப்பு அடை, பார்வதிக்காக வெல்ல அடை நைவேத்யம் செய்து அதை பிரசாதமாக சாப்பிட்டு ‘உருகாத வெண்ணையும் ஓரடையும் நூற்றேன், மறுக்காமல் எனக்கு மாங்கல்ய பாக்கியம் தா’ என்று பிரார்த்தனை செய்து கணவன் மற்றும் பெரியோர்களிடம் ஆசி பெற்று நோன்பை முடிக்க வேண்டும்.

    நம்பிக்கையுடனும், பக்தி சிரத்தையுடனும் இந்த நோன்பை கடைபிடித்தால் கணவன் - மனைவி இடையே இருக்கும் பூசல்கள், கருத்து வேறுபாடுகள் நீங்கி பாசமும், நேசமும், அன்யோன்யமும் அதிகரிக்கும்.பிரிந்திருக்கும் தம்பதியர் ஒன்று கூடுவார்கள். பெண்களின் ஜாதகத்தில் இருக்கும் அஷ்டம ஸ்தான தோஷங்கள், மாங்கல்ய தோஷங்கள் நீங்கும். குழந்தை பாக்கிய தடை நீங்கி வம்சம் விருத்தியாகும். இந்த நோன்பில் கலந்து கொள்ளும் கன்னிப்பெண்களுக்கு தோஷங்கள், தடைகள் நீங்கி அவர்களது கல்யாண கனவுகள் நிறைவேறும் என்பது ஐதீகம்.
    காஞ்சி காமாட்சி கையில் கரும்பு வில்லை வைத்திருக்கிறாள். காரணம், அதில் ஒரு சூட்சுமம் உள்ளது. அந்த சூட்சுமம் என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
    அன்பின் கடவுளான மன்மதனிடம் தான் கரும்பு வில்லும் ஐவகை மலர் அம்புகளும் இருக்கும். ஆனால், காஞ்சி காமாட்சியும் கரும்பு வில்லை வைத்திருக்கிறாள். காரணம், அதில் ஒரு சூட்சுமம் உள்ளது.

    அன்பும் பாசமும் எப்போதும் ஒரு கட்டுக்குள் இருக்க வேண்டும் என்று எச்சரிக்கவே மன்மதனிடம் இருந்து அன்னை கரும்பு வில்லை வாங்கி வைத்திருக்கிறாள் என்று காஞ்சி மகாபெரியவர் ஒரு முறை சொல்லி இருக்கிறார். அது மட்டுமல்ல மன்மதனை சிவனார் எரித்த பிறகு, சக்தியின் வேண்டுதலுக்காக மன்மதனுக்கு உயிர் கொடுத்து, ரதியின் கண்களுக்கு மட்டுமே தெரியும் விதமாக மாற்றினார்.

    ஆனாலும் மன்மதன் எல்லை மீறாமல் இருக்கவும், தர்மநெறி தவறாமல் வாழும் மக்களின் விருப்பங்களை நிறைவேற்றவும் தன் திருக்கரத்தில் கரும்பை ஏந்தியபடி காட்சி தருக்கிறார். மன்மதனின் கரும்பு வில் மோகத்தைத் தூண்டக்கூடியது. ஆனால் காமாட்சியின் கையில் இருக்கும் கரும்பு வில்லோ, காமத்தை அடக்கி ஆன்மீகத்தில் நம்மை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும்.

    காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் ஆலயத்தின் முதல் பிரகாரத்தின் மத்தியில் இருக்கும் காயத்ரி மண்டபத்தின் மையப் பகுதியில் காமாட்சி அன்னை எழுந்தருளி உள்ளாள்.

    காமாட்சி இவ்விடத் தில் பத்மாசனக் கோலம் கொண்டவளாக இருக் கிறாள். பிரம்மா, விஷ்ணு, ருத்திரன், ஈஸ்வரன், சதாசி வன் ஆகிய ஐந்துவித பிரம் மாக்களையும் தனக்கு ஆசனமாய்க் கொண்டவள்.

    காமாட்சி தனது நான்கு திருக்கரங்களில் பாசம், அங்குசம், புஷ்பபாணம், கரும்பு வில் ஆகிய நான்கு ஆயுதங்களை ஏந்தி இருக்கிறாள். காமாட்சிக்கு ராஜராஜேஸ்வரி, திரிபுரசுந்தரி, ஸ்ரீசக்கர நாயகி, காமேஸ்வரி என பல பெயர்கள்உண்டு.

    பந்தகாசுரன் மற்றும் பண்டாசுரன் ஆகியோரின் கொடுஞ்செயல்களையும் அவர்களையும் அழித்திட வேண்டி ஸ்தல விருட்சமான செண்பக மரத்தினில் கிளி வடிவுடன் காமாட்சி வாசம் செய்தாள். அதனால் காமாட்சி அன்னையை இத்தலத்தில் எவரும் பிரதிஷ்டை செய்யவில்லை. இத்தலத்தில் காமாட்சி அம்மன் சுயம்புவாக வளைப்புற்றான பிலாகாசத்தில் இருந்து தானே தோன்றினாள்.

    காமாட்சிக்கு மூன்று வடிவங்கள் உள்ளன. அவை ஸ்தூல வடிவம், சூட்சும வடிவம், காரண வடிவம் எனப்படும். ஸ்தூல வடிவில் அன்னை தன் பக்தர்களுக்கு தனது தரிசனத்தாலேயே சர்வ காமங்களையும் தனது கடாட்சத்தால் கோடி கோடியாக அருள்வதால் காமகோடி காமாட்சி என்னும் பெயரைப் பெற்று அருள்பாலித்து வருகின்றாள்.

    காமாட்சி ஆலயத்தில் காயத்ரி மண்டபத்தில் உள்ள அம்பாளின் சந்நிதிக்கு எதிரில் காமகோடி பீடமான ஸ்ரீ சக்கரம் அமைந்துள்ளது. இந்த பீடத்தில் தான் மந்திர ரூபம் கொண்டு விளங்குகிறாள்.

    அன்னையின் பீடத்தின் கீழாகத்தான் ஸ்ரீ சக்கரம் அனைத்து ஆலயங்களிலும் அமைத்திடுவது வழக்கம் ஆகும். ஆனால் காஞ்சிபுரத்தில் அன்னை காமாட்சியின் உக்கிரம் தணித்திட வேண்டிய ஆதிசங்கரர் தேவியின் முன்பாக ஸ்ரீ சக்கரத்தை பிரதிஷ்டை செய்தார் எனக் கூறப்படுகின்றது. காஞ்சிபுரத்தில் உள்ள எந்த சிவாலயத்திலும் அம்பாளுக்கென தனி சந்நிதி கிடையாது.

    காமாட்சி அம்மன் ஆலயமே அனைத்து சிவாலயங்களுக்கும் பொதுவான அம்பாள் சந்நிதியாக விளங்குகிறது. பீடத்தின் மையத்தில் ஸ்ரீ சக்கரம் அமைந்துள்ளது. ஸ்ரீ சக்கரத்தினைச் சுற்றி அஷ்ட சக்திகளும் உள்ளனர். அன்னை என்று வளைப் புற்றில் இருந்து சுயம்பு வடிவாய் எழுந்தருளினாளோ அன்று தொட்டு ஸ்ரீ சக்கரமானது இருந்து வருவதாக கூறப்படுகின்றது.

    நீண்ட காலமாக பற்பல மகான்களால் இப்பீடம் பூஜித்து வரப்பட்டுள் ளது. இன்றுவரை ஜீர்ணோத்தாரணம் செய்யப்பட்டும் விளங்கி வருகின்றது. சர்வேஸ்வரனே தேவியின் அருள் பெறவேண்டி நான்கு யுகங்களிலும் இந்த பீடத்தில் துர்வாச முனிவராகவும், பரசுராமராகவும், தவும்யராகவும் கலியுகத்தில் முகாசாரியராகவும், ஆதிசங்கரராகவும் அவதாரம் செய்ததோடு அந்தந்த யுகங்களில் ஸ்ரீ காமகோடி பீடத்தினை சீரமைப்பு செய்ததோடு பூஜை செய்தும் அம்பிகையின் அருளப் பெற்றனர் எனக் கூறப்படுகிறது.
    ×