என் மலர்
ஆன்மிகம்
- பன்னிரு திருமுறைகளில், முதல் 7 திருமுறைகளை 'தேவாரம்' என்று அழைக்கிறோம்.
- தேவாரப் பாடலில் இருந்து ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்க்கலாம்.
சிவபெருமான் மீது பாடப்பெற்ற பன்னிரு திருமுறைகளில், முதல் 7 திருமுறைகளை 'தேவாரம்' என்று அழைக்கிறோம். இதில் முதல் மூன்று திருமுறைகளை திருஞானசம்பந்தரும், நான்காம் திருமுறை முதல் ஆறாம் திருமுறை வரையான பாடல்களை திருநாவுக்கரசரும், ஏழாம் திருமுறையை சுந்தரமூர்த்தி சுவாமிகளும் பாடியிருக்கிறார்கள். தெய்வத்தின் மீது பாடப்பட்ட ஆரம் (பாமாலை) என்பதால் இது 'தேவாரம்' என்று பெயர் பெற்றதாகவும் கூறுவர். இந்த தேவாரப் பாடலில் இருந்து ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்க்கலாம்.
பாடல்:-
பூண்தங்கு மார்பின் இலங்கைவேந்தன்
பொன்நெடும் தோள்வரை யால்அடர்ந்து
மாண்தங்கு நூல்மறை யோர்பரவ
மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்
சேண்தங்கு மாமலர்ச் சோலைசூழ்ந்த
சீர்கொள்செங் காட்டங் குடியதனுள்
காண்தங்கு தோள்பெயர்த்து எல்லிஆடும்
கணபதி ஈச்சரம் காமுறவே.
- திருஞானசம்பந்தர்
விளக்கம்:-
அணிகலன்கள் பொருந்திய மார்பினை உடைய இலங்கை மன்னன் ராவணன், கயிலை மலையைப் பெயர்க்க முற்பட்டபோது, அந்த மலையினாலேயே தண்டனை அளித்த, பெருமை உடைய நான்மறையோர் வணங்க திருமருகல் திருத்தலத்தில் எழுந்தருளும் இறைவனே! உயர்ந்து நிற்கும் பெருமைமிக்க மலர்ச் சோலை சூழ்ந்த திருச்செங்காட்டங்குடியில் இரவில் அழகிய தோள்களை அசைத்து நடனம் ஆடுவதற்கு கணபதி ஈச்சரத்தை விரும்ப என்ன காரணமோ? சொல்வாயாக!
- சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் தோளுக்கினியானில் பவனி.
- வடமதுரை சவுந்திர ராஜப் பெருமாள் சேஷ வாகனத்தில் புறப்பாடு.
இந்த வார விசேஷங்கள்
5-ந் தேதி (செவ்வாய்)
* சர்வ ஏகாதசி.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் ரத உற்சவம்.
* திருமாலிருஞ்சோலை கள்ளழகர் ராஜாங்க சேவை.
* வடமதுரை சவுந்திர ராஜப் பெருமாள் சேஷ வாகனத்தில் புறப்பாடு.
* திருவரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்கார திருமஞ்சனம்.
* சமநோக்கு நாள்.
6-ந் தேதி (புதன்)
* பிரதோஷம்.
* சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் பொங்கல் விழா, இரவு வெள்ளி குதிரை வாகனத்தில் பவனி.
* திருப்பதி ஏழுமலையான் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல்.
* கீழ்நோக்கு நாள்.
7-ந் தேதி (வியாழன்)
* ஆடித்தபசு.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் ஆடித்தபசு உற்சவம், மாலை ரிஷப வாகனத்தில் பவனி.
* சுவாமிமலை முருகன் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
* திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.
* கீழ்நோக்கு நாள்.
8-ந் தேதி (வெள்ளி)
* வரலட்சுமி விரதம்.
* மதுரை கள்ளழகர் ரத உற்சவம்.
* சேலம் செவ்வாய் பேட்டை மாரியம்மன் ரத உற்சவம்.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.
* இருக்கன்குடி மாரியம்மன் விழா தொடக்கம்.
* மேல்நோக்கு நாள்.
9-ந் தேதி (சனி)
* பவுர்ணமி.
* மதுரை அழகர்கோவில் 18-ம் படி கருப்பண்ணசாமி சந்தனம் சாற்றுப்படி.
* சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் தோளுக்கினியானில் பவனி.
* மேல்நோக்கு நாள்.
10-ந் தேதி (ஞாயிறு)
* இருக்கன்குடி மாரியம்மன் திருவீதி உலா.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு அலங்கார திருமஞ்சனம்.
* திருத்தணி முருகனுக்கு பால் அபிஷேகம்.
* மேல்நோக்கு நாள்.
11-ந் தேதி (திங்கள்)
* வடமதுரை சவுந்திர ராஜப் பெருமாள் வசந்த உற்சவம்.
* சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் சப்தாவர்ணம்.
* திருவைகுண்டம் கள்ளபிரானுக்கு பால் அபிஷேகம்.
* கீழ்திருப்பதி கோவிந்த ராஜப் பெருமாள் சன்னிதியில் கருடாழ்வாருக்கு அலங்கார திருமஞ்சனம்.
* மேல்நோக்கு நாள்.
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
விட்டுக் கொடுத்து செல்ல வேண்டிய நாள். நூதனப் பொருள் வாங்குவதற்காக விரயம் செய்வீர்கள். வியாபாரத்தில் உடன் இருப்பவர்களை பகைத்துக்கொள்ள வேண்டாம்.
ரிஷபம்
மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் ஏற்படும் நாள். வழக்கமான பணிகளை மாற்றியமைப்பீர்கள். வரவை எதிர்பார்த்துச் செய்த காரியமொன்றில் திடீரெனச் செலவுகள் ஏற்படும்.
மிதுனம்
வளர்ச்சிக்கு இடையூறாக இருந்தவர்கள் விலகும் நாள். நண்பர்களின் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். வாங்கல், கொடுக்கல்கள் ஒழுங்காகும். அரசியல்வாதிகளால் ஆதாயம் உண்டு.
கடகம்
நேரில் சந்திக்கும் நண்பர்களால் நெஞ்சம் மகிழும் நாள். ஏற்ற இறக்க நிலை மாறும். எதிர்கால வளர்ச்சிக்கான திட்டங்களைத் தீட்டுவீர்கள். உத்தியோகப் பிரச்சனை அகலும்.
சிம்மம்
தேக்க நிலை மாறித் தெளிவு பிறக்கும் நாள். நிலையான வருமானத்திற்கு வழியமைத்துக் கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் கருத்துகளுக்கு மதிப்பளிப்பர்.
கன்னி
யோகமான நாள். நண்பர்கள் நல்ல தகவலைத் தருவர். தேக நலன்கருதி ஒரு சிறு தொகையைச் செலவிடுவீர்கள். திருமணப் பேச்சுகள் முடிவாகலாம். தொழில் வளர்ச்சி உண்டு.
துலாம்
செல்வாக்கு உயரும் நாள். சேமிக்கும் எண்ணம் செயல்படும். நட்பால் நல்ல காரியம் நடைபெறும். தொழில் வளர்ச்சி கூடும். பெற்றோர் வழியில் இருந்த பிரச்சனைகள் தீரும்.
விருச்சிகம்
வாய்ப்புகள் வாயில் தேடி வரும் நாள். நல்ல மனிதர்களின் நட்பு கிடைக்கும். வரவு எதிர்பார்த்தபடியே வந்து சேரும். தள்ளிப் போன காரியம் தானாக நடைபெறும்.
தனுசு
விடாமுயற்சிக்கு வெற்றி கிட்டும் நாள். விரயத்திற்கேற்ற வரவு வந்து சேரும். விலகி சென்றவர்கள் விரும்பி வந்திணைவர். சகோதர ஒற்றுமை பலப்படும். உத்தியோக முயற்சி கைகூடும்.
மகரம்
பிள்ளைகளால் பெருமை வந்து சேரும் நாள். நண்பர்கள் நல்ல செய்திகளைக் கொண்டு வந்து சேர்ப்பர். பாதியில் நின்ற கட்டிடப் பணிகளை மீண்டும் தொடரவாய்ப்பு உண்டு.
கும்பம்
தனவரவு தாராளமாக வந்து சேரும் நாள். தொழில் ரீதியான அலைச்சலும் உண்டு. திட்டமிட்ட பயணத்தில் மாற்றம் செய்வீர்கள். உத்தியோகத்தில் நேற்றைய பிரச்சனை நீடிக்கும்.
மீனம்
நல்ல காரியம் இல்லத்தில் நடைபெறும் நாள். தூரதேசத்திலிருந்து அனுகூலச் செய்திகள் வந்து சேரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் மனதில் இடம்பிடிப்பீர்கள்.
- சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் ரதோற்சவம்.
- திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் புறப்பாடு.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு ஆடி-20 (செவ்வாய்க்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : ஏகாதசி நண்பகல் 1.03 மணி வரை பிறகு துவாதசி
நட்சத்திரம் : கேட்டை காலை 11.58 மணி வரை பிறகு மூலம்
யோகம் : சித்த, அமிர்தயோகம்
ராகுகாலம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
சூலம் : வடக்கு
நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை
திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் அபிஷேகம், அலங்காரம்
இன்று சர்வ ஏகாதசி. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் ரதோற்சவம். சேலம் செவ்வாய்ப்பேட்டை ஸ்ரீ மாரியம்மன் சக்தியழைப்பு விழா. சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் மூலவருக்குத் திருமஞ்சன சேவை. திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் அபிஷேகம், அலங்காரம்.
சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். திருநறையூர் ஸ்ரீ சித்தநாதீசுவரர் கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு, சம்கார அர்ச்சனை. திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் புறப்பாடு. திருநெல்வேலி சமீபம் 3-ம் நவதிருப்பதி செவ்வாய் பகவானுக்குரிய தலமான ஸ்ரீ குமுதவல்லித் தாயார் சமேத ஸ்ரீ வைத்தமாநிதிப் பெருமாள் கோவிலில் காலையில் திருமஞ்சன சேவை. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ரங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-யோகம்
ரிஷபம்-பெருமை
மிதுனம்-மேன்மை
கடகம்-சாதனை
சிம்மம்-உழைப்பு
கன்னி-கடமை
துலாம்- கவனம்
விருச்சிகம்-நிம்மதி
தனுசு- பணிவு
மகரம்-பக்தி
கும்பம்-வெற்றி
மீனம்-நன்மை
- பிறந்தது முதலே செல்வச் செழிப்பில் வளர்ந்தவர், திருவெண்காடார்.
- ஈசன் சொன்னபடியே, குழந்தையை எடுத்துச் சென்று திருவெண்காடாரிடம் ஒப்படைத்தார் சிவசருமன்.
கோடி கோடியாக பணம் சேர்த்து, மாடி மேல் மாடி கட்டினாலும், இறுதியில் காதற்ற ஊசி கூட உடன் வராது என்பதை உலகுக்கு உணர்த்தியவர், பட்டினத்தார். இவரைப் பற்றி நினைத்தாலே, இடுப்பு துணியோடு, கையில் கரும்பை பிடித்திருக்கும் சித்தர் பெருமானின் உருவம் தான் நம் மனக் கண்ணில் வந்துபோகும்.
காவிப்பூம்பட்டினம் வணிகர்கள் நிறைந்த பகுதி. அங்கு வாழ்ந்த பெரும் வணிகரான சிவநேசர் மற்றும் ஞானகலை தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்த தம்பதியர் திருவெண்காடு ஈசனின் மீது மிகுந்த பக்தி கொண்டவர்கள் என்பதால், தங்கள் பிள்ளைக்கு 'சுவேதனப் பெருமான்' என்று பெயரிட்டனர். பின்னர் 'திருவெண்காடார்' என்றும் அழைத்தனர்.
பிறந்தது முதலே செல்வச் செழிப்பில் வளர்ந்தவர், திருவெண்காடார். உரிய பருவத்தில் சிவகலை என்ற பெண்ணை திருமணம் செய்தார். முன்னதாக அவரது சகோதரிக்கும் திருமணம் முடிந்திருந்தது. திருவெண்காடார் - சிவகலை தம்பதிக்கு குழந்தைப்பேறு இல்லை. அதனால் திருவிடைமருதூர் சென்று ஈசனை வழிபட்டு விரதம் இருந்து வந்தனர்.
திருவிடைமருதூரில் சிவசருமன்- சுசீலை தம்பதியர் வறுமையில் இருந்து வந்தனர். சிவசருமன் கனவில் தோன்றிய ஈசன், தான் கோவில் நதிக்கரையில் மருத மரத்தின் அடியில் குழந்தையாக இருப்பதாகவும், அதை எடுத்துச் சென்று, காவிரிப்பூம்பட்டினத்தின் பெரு வணிகரான திருவெண்காடாரிடம் ஒப்படைக்கும்படியும் கூறினார். மேலும் அவர் தரும் பொருளைப் பெற்று வறுமையில் இருந்து விடுபடும்படியும் அருளினார்.
ஈசன் சொன்னபடியே, குழந்தையை எடுத்துச் சென்று திருவெண்காடாரிடம் ஒப்படைத்தார் சிவசருமன். கைமாறாக அவர் கொடுத்த பொருளைப் பெற்றுக்கொண்டார். மருத மரத்தடியில் கிடைத்த குழந்தை என்பதால் அதற்கு 'மருதவாணன்' என்று பெயரிட்டு திருவெண்காடார் தம்பதியர் வளர்த்து வந்தனர்.
மருதவாணன் வளர்ந்ததும், தன்னுடைய வணிகத் தொழிலை தன் மகனுக்கும் சொல்லிக் கொடுத்தார், திருவெண்காடார். ஒரு முறை கப்பல் மூலமாக வெளிநாடு சென்ற மருதவாணன் திரும்பி வரும் நாளை எதிர்பார்த்துக் காத்திருந்தார் திருவெண்காடார். ஆனால் மருதவாணனுக்கு பதிலாக ஒரு சிறு ஓலையும், காது இல்லாத ஊசியும்தான் வந்தது. அவர் சென்ற கப்பலிலும் கூட எருவின் வரட்டியும், தவிடும்தான் நிரம்பி இருந்தது.
இதைக் கண்டு கோபம் கொண்ட திருவெண்காடார், மகன் கொடுத்த ஓலையில் இருந்த வாசகத்தைப் படித்தார். அதில் ''காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே'' என்று எழுதப்பட்டிருந்தது. அதைப் படித்ததும் திருவெண்காடாருக்கு தூக்கிவாரிப்போட்டது. இதுநாள் வரை தன்னுடன் வராத செல்வத்தைத் தேடி அலைந்ததை நினைத்து வருந்தினார். உடனடியாக துறவியாக மாறிப்போனார். காவிரிப்பூம்பட்டினத்தில் பிறந்தவர் என்பதால், அவரை அனைவரும் 'பட்டினத்தார்' என்று அழைத்தனர்.
சொத்துக்களை துறந்து சிவாலயங்கள் தோறும் சென்று வந்தார், பட்டினத்தார். அப்படி சென்றபோதுதான் பத்திரகிரியார் என்னும் அரசனை தன்னுடைய சீடனாக ஏற்றுக்கொண்டார். ஆனால் பட்டினத்தாருக்கு முன்பாகவே, பத்திரகிரியாருக்கு முக்தியை அருளினார், சிவபெருமான். இதனால் தனக்கும் முக்தி கிடைக்கச் செய்ய வேண்டும் என்று சிவபெருமானிடம் வேண்டினார், பட்டினத்தார். ஆனால் ஈசனோ, அவரது கையில் ஒரு கரும்பைக் கொடுத்து, ''இந்தக் கரும்பின் நுனி எந்த ஆலயத்தில் இனிப்பாக இருக்கிறதோ, அங்கு உனக்கு முக்தியைத் தருகிறேன்'' என்று கூறிவிட்டார்.
இதையடுத்து கையில் கரும்போடு பல ஆலயங்கள் சுற்றி வந்த பட்டினத்தார், இறுதியில் சென்னையில் உள்ள திருவொற்றியூர் திருத்தலத்திற்கு வந்தபோது அவரது கையில் இருந்து கரும்பின் நுனிப்பகுதி இனிப்பு சுவையை கொடுத்தது. இதையடுத்து தன் அடியார்களிடம் தன்னை ஒரு பெரிய பாத்திரத்தில் வைத்து மூடிவிடும்படி பட்டினத்தார் உத்தரவிட்டார். அவர்களும் அப்படியே செய்தனர். உள்ளே சென்ற பட்டினத்தார், சிவலிங்கமாக மாறியிருந்தார். ஈசன் அவருக்கு முக்தியை அருளினார்.
முக்தி அடைந்த பட்டினத்தாரின் திருக் கோவில், திருவொற்றியூரில் வங்கக்கடலை நோக்கியபடி அமைந்துள்ளது. கோபுரங்கள் எதுவும் இன்றி தனிக்கோவிலாக அமைக்கப்பட்டுள்ளது. இங்கு பட்டினத்தார், சிவலிங்கமாக அருள்பாலித்து வருகிறார். இந்த லிங்கத்திற்கு, அவரது குரு பூஜை தினத்தில் எண்ணெய், கரும்புச்சாறு, அரிசி மாவு, கதம்பப் பொடி உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது. இங்குள்ள பட்டினத்தாரை வழிபடுவதன் மூலம் மகானின் அருளைப் பெறலாம்.
- ராமேசுவரம் ஸ்ரீ சுவாமி அம்பாள் தங்கக் கேடய சப்பரத்தில் புறப்பாடு.
- திருவான்மியூர் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ மருந்தீஸ்வரர்.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு ஆடி-19 (திங்கட்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : தசமி காலை 11.33 மணி வரை பிறகு ஏகாதசி
நட்சத்திரம் : அனுஷம் காலை 9.50 மணி வரை பிறகு கேட்டை
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
எமகண்டம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
சூலம் : கிழக்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை
திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட் நகர் சிவன் கோவில்களில் சோமவார அபிஷேகம்
சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். ராமேசுவரம் ஸ்ரீ சுவாமி அம்பாள் தங்கக் கேடய சப்பரத்தில் புறப்பாடு. சேலம் செவ்வாய்ப்பேட்டை ஸ்ரீ மாரியம்மன் வெள்ளி விமானத்தில் பவனி. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாளுக்குத் திருமஞ்சன சேவை. மதுரை ஸ்ரீ மீனாட்சியம்மன் காலையில் சட்டத் தேரிலும், இரவு புஷ்பக விமானத்திலும் பவனி. கலிய நாயனார், கோட்புலி நாயனார் குரு பூஜை. ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதிக்கு பால் அபிஷேகம். திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி.
கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை. திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத்சுந்தர குசாம்பாள் சமேத ஸ்ரீ மகாலிங்க சுவாமி, திருமயிலை ஸ்ரீ கற்பகாம்பாள் சமேத ஸ்ரீ கபாலீஸ்வரர், திருவான்மியூர் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ மருந்தீஸ்வரர், பெசன்ட்நகர் ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர் கோவில்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம். திருச்சேறை ஸ்ரீ சாரநாதருக்கு திருமஞ்சன சேவை. கோவில்பட்டி ஸ்ரீ பூவண்ணநாதர் புறப்பாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-நிறைவு
ரிஷபம்-ஆனந்தம்
மிதுனம்-முயற்சி
கடகம்-மகிழ்ச்சி
சிம்மம்-ஓய்வு
கன்னி-ஆர்வம்
துலாம்- நன்மை
விருச்சிகம்-சிந்தனை
தனுசு- அமைதி
மகரம்-வரவு
கும்பம்-சாதனை
மீனம்-உண்மை
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
ஏமாற்றங்கள் அகல எதிலும் விழிப்புணர்ச்சி தேவைப்படும் நாள். தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருப்பது நல்லது. குடும்பத்தினர்கள் உங்கள் மீது குறை கூறுவர்.
ரிஷபம்
மனக்கசப்பு மாறி மகிழ்ச்சி கூடும் நாள். வாக்கு சாதுர்யத்தால் வளம் காண்பீர்கள். அலுவலகப் பணிகளில் அருகில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.
மிதுனம்
உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறும் நாள். கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழ்வீர்கள். தொழில் சம்பந்தமாகப் புதியவர்கள் உங்களைத் தேடி வரலாம்.
கடகம்
யோகமான நாள். மதிப்பும், மரியாதையும் உயரும். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். வருமானம் திருப்தி தரும். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் கிடைக்கும்.
சிம்மம்
உடன் இருப்பவர்களின் உதவி கிடைத்து மகிழும் நாள். வரன்கள் நல்ல முடிவிற்கு வரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைககள் கிடைக்கும். வேலைப்பளு கூடும்.
கன்னி
அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்கும் நாள். உத்தியோகத்தில் சம்பள உயர்வு பற்றிய சந்தோஷச் செய்தி வந்து சேரும். இடமாற்றம், இலாகா மாற்றம் வருவதற்கான அறிகுறி தோன்றும்.
துலாம்
ரோஷத்தோடு விலகியவர்கள் பாசத்தோடு வந்திணையும் நாள். புதிய ஒப்பந்தங்களை யோசித்து ஏற்றுக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் மேலதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள்.
விருச்சிகம்
நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாள். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். சகோதர வழியில் சுபச் செய்தியொன்று வந்து சேரலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
தனுசு
தொட்ட காரியங்களில் வெற்றி கிட்டும் நாள். புதிய வாகனம் வாங்க எடுத்த முயற்சி கைகூடும். தொழில் தொடர்பாக செல்வந்தர்களைச் சந்தித்துப் பேசும் வாய்ப்பு உண்டு.
மகரம்
பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். வீடு வாங்கும் முயற்சி கைகூடும். மனதளவில் நினைத்த காரியமொன்றை செயல்படுத்த முன்வருவீர்கள். வழக்குகள் சாதகமாகும்.
கும்பம்
வருமானம் இரு மடங்காகும் நாள். வாகனம் வாங்குவதில் ஆர்வம் கூடும். மருத்துவச் செலவுகள் ஏற்படலாம். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.
மீனம்
முன்னேற்றம் கூடும் நாள். உதிரி வருமானங்கள் உண்டு. பிள்ளைகளின் நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் கேட்ட சலுகைகளைத் தருவர்.
- வார ராசிபலன்
- 4 ராசிபலன்களுக்கான வார ராசிபலன்.
தனுசு
திருமணத்தடை அகலும் வாரம். ராசிக்கு குரு சுக்கிரன் செவ்வாய் சனி பார்வை. அர்த்தாஷ்டம சனியால் திருமணம் தடைபடாது. கோச்சாரம் சாதகமாக உள்ளது. அதிகப்படியான திருமணம் நிச்சயமாகும். பிறருக்கு நன்மை மனப்பான்மை உண்டாகும். மனதிற்கு நிம்மதியும் தன் நம்பிக்கையும் தரும் நிகழ்வுகள் நடக்கும். தைரியம் மிகுதியாக இருக்கும்.
ஞாபக சக்தி அதிகரிக்கும். உடன் பிறந்தவர்கள், நண்பர்களின் உதவி பக்க பலமாக இருக்கும். தொழில் கடன்கள் குறையத் துவங்கும். நீண்டநாளாக நிறைவேற்ற முடியாமல் தடைபட்ட குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். உயர்கல்வி, ஆராய்ச்சி கல்வி படிக்க நல் வாய்ப்பு உண்டாகும்.
புத்திர பிராப்த்தம் ஏற்படும். சிலர் விருப்ப ஓய்வு பெறலாம். குடும்ப சூழல் காரணமாக ஆரோக்கியம் காரணமாக கல்வியில் ஏற்பட்ட தடைகள் பாதிப்புகள் அகலும். உடல் நிலையில் இருந்த பாதிப்புகள் அகலும். தேவையற்ற வம்பு, வழக்குகளை தவிர்க்கவும். எல்லோரையும் அனுசரித்து செல்ல வேண்டும். வரலட்சுமி நோன்பு நாளில் மஞ்சள் அபிஷேகம் செய்து மகாலட்சுமியை வழிபடவும்.
மகரம்
முத்தாய்பான முன்னேற்றம் உண்டாகும் வாரம். ராசிக்கு சூரியன் புதன் பார்வை உள்ளதால் வாழ்க்கை முன்னேற்றத்திற்கான பாதை தென்படும். ஆன்ம பலம் பெருகும். மனதில் திடமான சிந்தனைகள் தோன்றும். புகழ், அந்தஸ்து, கவுரவம், பொன், பொருள், செல்வம், செல்வாக்கு என எல்லாவிதமான சாதகமான பலன்களும் நடக்கும். வேற்று இனத்தவரின் ஆதரவு கிடைக்கும்.
பண வரவுகள் அதிகரிக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கும். பேச்சை மூலதனமாக கொண்டவர்கள் தொழிலில் சாதனை படைப்பார்கள். சிலர் தொழிலை ஒரு ஊரில் இருந்து வேறு ஊருக்கு மாற்றலாம். அரசாங்க வேலைக்கு அனுகூலமான செய்திகள் மற்றும் தகவல்கள் வந்து சேரும். வீடு, வாகன யோகம் சிறப்பாக அமையும்.
சிலர் எழுதிய உயில், ஆவணங்களில் திருத்தம் செய்வார்கள். கடன் தொகையை சமாளிக்க தேவையான பொருள் உதவி கிடைக்கும். பெண்களுக்கு பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். மாணவர்களுக்கு புத்திக் கூர்மை கூடும். அரசியல்வாதிகளுக்கு பொது இடத்தில் புகழ் கிடைக்கும். வரலட்சுமி நோன்பு நாட்களில் அஷ்ட லட்சுமிகளை வழிபடவும்.
கும்பம்
ஏற்ற இறக்கம் நிறைந்த வாரம். ராசியில் ராகு 7-ல் கேது 8-ல் செவ்வாய் நிற்பதால் பெண்களுக்கு கோட்சார ரீதியான திருமணத் தடை நீடிக்கும். கற்ற கல்வியால் வெற்றி புகழ் மதிப்பு, மரியாதை கிடைக்கும். தாய், தந்தையின் அன்பும், ஆதரவும் பெருகும். பிரிந்து சென்ற பிள்ளைகள் மீண்டும் வந்து இணைவார்கள். அரசுப் பணியாளர்களுக்கு எதிர் பார்த்தபடி பதவி கிடைக்கும்.
அரசாங்க காரியங்களில் இலாபமும் அனுகூலமும் ஏற்படும். சிலர் தொழில் நிமித்தமாக குறுகிய காலம் குடும்பத்தை பிரிந்து வெளியூர் அல்லது வெளிநாடு செல்லலாம். கூலித் தொழிலாளிகளின் நிலமை சீராகும். ஆடி மாதம் என்பதால் சாலையோர பொருள்களின் விற்பனை சூடுபிடிக்கும். நண்பர்கள் மற்றும் உறவுகளின் வருகையால் உள்ளம் மகிழும்.
உயர்ந்த ரக வாகன வசதி அமையும். பெண்கள் பிறந்த வீட்டிற்கு பெருமை சேர்ப்பார்கள். சிலர் ஆடம்பரமாக வாழ வேண்டும் என்ற ஆசையில், அதிக கடன் வாங்கி சமயத்தில் சிரமப்படுவார்கள். எதிரிகள் தொல்லை குறையும். சிலருக்கு தேவையற்ற பயணங்கள் உண்டாகும். வரலட்சுமி விரத நாளில் சந்தன அபிஷேகம் செய்து மஹாலக்ஷ்மியை வழிபடவும்.
மீனம்
சுப விசேஷங்கள் கைகூடும் வாரம். ராசி அதிபதி குருபகவான் அஷ்டமாதிபதி சுக்கிரனுடன் சேர்க்கை பெற்றுள்ளார். இது விபரீத ராஜயோக அமைப்பாகும். சிலருக்கு மனைவி மூலம் அதிர்ஷ்ட பணம், சொத்து கிடைக்கும் அல்லது வட்டி வருமானம், பினாமி சொத்து யோகம், அரசியல் யோகம் உண்டு. வாடகை வீட்டில் வசித்தவர்கள் சொந்த வீடு கட்டி குடியேறலாம்.
சிலர் வாகனத்தை மாற்றலாம். குடும்ப உறவுகளிடம் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். குடும்ப உறவுகளிடம் பழைய கதை பேசி வம்பை வளர்க்காமல் இருந்தால் மன நிம்மதி நிலைக்கும். திருமண தடை அகலும். குழந்தை பேறு உண்டாகும். தொழில் மற்றும் உத்தியோகத்தில் நிலவிய ஏற்ற இறக்கங்கள் சமன்படும்.
ஆன்லைன் வர்த்தகர்களின் வாழ்வாதாரம் உயரும். சுய ஜாதக பரிசீலனை செய்த பிறகு புதிய தொழில் சார்ந்த முடிவுகளை எடுக்க வேண்டும். மாணவர்களுக்கு இரவும், பகலும் படித்த படிப்பு கை கொடுக்கும். உடல் அசதி, சளி இருமல் போன்ற சிறுசிறு அசவுகரியம் இருக்கும். தேவையற்ற அலைச்சல் டென்ஷன் அதிகமாகும். வரலட்சுமி விரத நாளில் கலச பூஜை செய்து மகாலட்சுமியை வழிபடவும்.
- வார ராசிபலன்
- 4 ராசிபலன்களுக்கான வார ராசிபலன்
சிம்மம்
லாபகரமான வாரம். ராசிக்கு 11-ம் இடமான லாப ஸ்தானத்தில் குரு சுக்கிரன் சேர்க்கை ஏற்பட்டுள்ளது. மந்த தன்மை குறைந்து விரைந்து செயல்படும் தன்மை அதிகரிக்கும். தைரியத்துடன் மனம் விரும்பும் அனைத்தையும் சாதித்து காட்டுவீர்கள். அதிர்ஷ்டத்தின் மேல் ஆர்வம் கூடும். அதிர்ஷ்ட பொருள், பணம், உயில் சொத்து கிடைக்கும்.
பணவசதி சிறப்பாக இருக்கும். வீடு கட்டும் பணி துரிதமாகும். சிலர் வீட்டு மனை அல்லது புதிய வாகனம் வாங்குவீர்கள். சிலர் கூட்டுக் குடும்பத்திலிருந்து பிரிந்து தனிக் குடித்தனம் செல்லலாம். குடும்ப செலவிற்கு தேவையான பணம் தாராளமாக கிடைக்கும். சொத்து விற்பனை மற்றும் வாங்குவதில் லாபம் உண்டாகும்.
காதல் முயற்சிகளால் அவப்பெயர் உண்டாகும். எதிர்பாலின நட்பை தவிர்க்கவும். கணவன், மனைவி உறவில் அன்பு மிளிரும். முன்னோர்களின் பரம்பரை வியாதியான கை, கால் வலி, சுகர், பிரஷர் போன்றவைகள் தலை தூக்கும். வெளியூர், வெளிநாட்டு வேலைவாய்ப்பு தேடி வரும். வரலட்சுமி நோன்பு நாளில் ரோஜா மலரால் மகாலட்சுமியை வழிபடவும்.
கன்னி
சிந்தித்து செயல்பட வேண்டிய வாரம். ராசிக்கு சனி செவ்வாய் சம்பந்தம். கிரடிட் கார்டு, டெபிட் கார்டு மற்றும் ஏ.டி.எம். கார்டுகளை கவனமாக கையாள வேண்டும். பொருளாதார விஷயத்தில் கவனம் செலுத்தி விரயத்தை சேமிப்பாகவோ, சுப விரயமாகவோ மாற்ற முறையான திட்டமிடல் தேவை. குடும்பத்தில் சங்கடங்களை தவிர்க்க பேச்சை கட்டுப்படுத்துவது நல்லது. உணவுக் கட்டுப்பாடு அவசியம்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும். சிலருக்கு விபத்து கண்டம், சர்ஜரி அவமானம் போன்ற பாதிப்புகள் இருக்கும். வேலை மாற்றம் செய்யும் எண்ணத்தை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தை விரிவுபடுத்தும் முயற்சிகளை சுய ஜாதகப் பரிசீலனைக்குப் பிறகு செய்யவும். ஒரு கடனை அடைக்க, மறுகடன் வாங்குவது அல்லது பழைய கடனை அடைக்க, புது கடன் வாங்குவது என்று கடனுக்கு மேல் கடன் கூடிக்கொண்டு போகும்.
சிலருக்கு விருப்ப விவாகம் நடக்கும். கடமையில் கண்ணும் கருத்துமாக இருந்தால் கிரகங்களின் இயக்கம் பாதிப்பை தராது. அரசியலில் உள்ளவர்களுக்கு இது நெருக்கடியான நேரம். வரலட்சுமி நோன்பு நாளில் லலிதா சகஸ்ஹர நாமம் படித்து மகாலட்சுமியை வழிபடவும்.
துலாம்
பாக்கிய பலன்கள் மிகுதியாகும் வாரம். ராசி அதிபதி சுக்கிரன் 9-ம்மிடமான பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். தடைபட்ட அனைத்து விதமான பாக்கிய பலன்களை அனுபவிக்கும் யோகம் உண்டாகும். மனஉறுதி, தைரியம், நேர்மறை எண்ணம், உதவி செய்யும் மனப்பான்மை கூடும். கடமைகளை திட்டமிட்டு நிறைவேற்றுவீர்கள். ஆயுள் ஆரோக்கியம் கூடும். மருத்துவ செலவுகள் குறையும்.
கௌரவ பதவிகள் உறுதியாகும். பொருளாதார மேன்மையும் செல்வப் பெருக்கமும் உண்டாகும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்றுத்தரும். புத்திர பிராப்த்தம் உண்டாகும். பேரன்,பேத்தி யோகம் கிடைக்கும். பாகப்பிரிவினையால் ஏற்பட்ட மன பேதம் சீராகும்.
ஒரு சிலர் உயில் எழுதுவார்கள். பெண்களுக்கு பிறந்த வீட்டுச் சொத்தில் கிடைத்த பங்கு புகுந்த வீட்டில் கவுரவப்படுத்தும். சிலர் மன அமைதி மற்றும் நிம்மதிக்காக தீர்த்த யாத்திரை செல்ல திட்டமிடுவார்கள். சிறிய வாடகை வீட்டில் குடியிருந்தவர்கள் வசதியான வீட்டிற்கு செல்லலாம். வரலட்சுமி நோன்பு நாளில் மகாலட்சுமி அஷ்டகம் படிக்கவும்.
விருச்சிகம்
திட்டமிட்டு செயல்பட வேண்டிய வாரம். லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராசி அதிபதி செவ்வாய்க்கு சனி பார்வை. பூர்வீகம் தொடர்பாக இருந்து வந்த பிரச்சினைகள் தீர்வுக்கு வரும். முன்னோர் சொத்துக்களை பிரிப்பதில் இருந்த கருத்து வேறுபாடு மறையும். வழக்குகளில் சாதகமாக தீர்ப்பு வரும். வேலை இழப்பு ஊதியக் குறைப்பு, அதிக வேலை போன்றவற்றால் அதிருப்தி ஏற்படும்.
உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வேலையை மாற்ற வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். கோட்சாரம் சற்று சுமாராக இருக்கும் போது பிரச்சினையை விட்டு ஒதுங்கி வாழப் பழகினால் பெரிய பாதிப்பு ஏற்படாது. சுய ஜாதகத்தில் தசா புத்தி சாதகமாக இருந்தால் எந்த கெடு பலனும் ஏற்படாது. முக்கிய பணிகள் ஆரம்பத்தில் தடை, தாமதங்களை ஏற்படுத்தினாலும் முடிவில் காரிய வெற்றியைத் தரும்.
சக்திக்கு மீறிய கடன், தேவையற்ற பேச்சைக் குறைத்து இறை வழிபாட்டில் கவனம் செலுத்தவும். பெண்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உணவு ஒவ்வாமை ஏற்படும் என்பதால் எளிமையான உணவை சாப்பிடுவது நலம். வரலட்சுமி விரத நாளில் மகா லட்சுமிக்கு குங்கும அர்ச்சனை செய்து வழிபடவும்.
- பெண்கள் படித்துறையில் வாழை இலையை விரித்து மஞ்சளால் பிள்ளையார் பிடித்து வைத்தனர்.
- வாழை மட்டையில் தீபத்தை வைத்து காவிரி ஆற்றில் மிதக்கவிட்டனர்.
தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாதத்திற்கும் தனிச்சிறப்பு உண்டு. அதில் ஆடி மாதத்திற்கு பல்வேறு தனிச்சிறப்புகள் உள்ளன. குலதெய்வ வழிபாடும், அம்மன் வழிபாடும் ஆடி மாதத்தில் தான் செய்யப்படுகிறது.
பொதுவாக உலகின் நாகரிகங்கள் நதிக்கரையில் தோன்றியதாக கூறுவார்கள். நதிகள் தான் மனித வாழ்க்கையின் ஆதாரம். விவசாயம் தோன்றியது நதிக்கரையில் தான். அதனால் தான் நதிகளை தமிழர்கள் அன்னையாய், தெய்வமாய் போற்றுகிறார்கள். அப்படி சிறப்பு வாய்ந்த நதியின் கரையில் கொண்டாடப்படுவது தான் ஆடிப்பெருக்கு விழா.
அதன்படி இன்று காவிரி கரையோரப்பகுதிகளில் ஆடி மாதம் 18-ந் தேதி எனப்படும் ஆடிப்பெருக்கு விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்டா மாவட்டங்களில் உள்ள காவிரி கரைகளில் வெகு விமர்சையாக ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட்டது.
அதன்படி தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இன்று ஆடிப்பெருக்கு விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. பயிர் செழிக்க வளம் அருளும் அன்னை காவிரி நதியை பெண்ணாக, தாயாக பாவித்து வணங்கி போற்றும் ஆடிப்பெருக்கு என்னும் மங்கள விழா கொண்டாடப்பட்டது.
தஞ்சையை அடுத்த திருவையாறு காவிரி ஆற்றங்கரையில் உள்ள புஷ்ய மண்டப படித்துறைக்கு இன்று காலை முதலே பெண்கள் பலர் தங்களது குடும்பத்தினருடன் வந்தனர். காவிரித் தாய்க்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது.
பின்னர் பெண்கள் படித்துறையில் வாழை இலையை விரித்து மஞ்சளால் பிள்ளையார் பிடித்து வைத்தனர். மேலும் தேங்காய், பழங்கள், வெற்றிலை, பாக்கு, மஞ்சள், பனை ஓலையால் செய்யப்பட்ட காதோலை, கருகமணி மாலை, வளையல், அரிசி, வெல்லம், பேரிக்காய், கொய்யா, மாதுளை, விளாம்பழம் ஆகியவற்றை வைத்து விளக்கேற்றினர்.
தொடர்ந்து மா விளக்கு, அரிசி, வெல்லம் கலந்த காப்பு அரிசி ஆகியவற்றை வைத்து சாம்பிராணி, ஊதுபத்தி உள்ளிட்ட வாசனைபொருட்களை ஏற்றி வழிபாடு செய்ததுடன் மஞ்சள் பிள்ளையாருக்கும், காவிரி தாய்க்கும் தாம்பூலத்தட்டில் கற்பூரத்தை ஏற்றி வழிபட்டனர்.
மஞ்சள் கயிறு வழிபாடு முடிந்தவுடன் புத்தாடை அணிந்து வந்திருந்த புதுமண தம்பதியினர் பெரியவர்களின் காலில் விழுந்து ஆசி பெற்றனர். தொடர்ந்து திருமணத்தின்போது தாங்கள் அணிந்து இருந்த மாலைகளை பைகளில் பத்திரமாக கொண்டு வந்து அவற்றை காவிரி ஆற்றில் புதுமண தம்பதியினர் விட்டனர். சுமங்கலி பெண்கள் ஒருவருக்கொருவர் மஞ்சள் கயிற்றை கழுத்தில் கட்டிக்கொண்டனர்.
அதேபோல திருமணமாகாத இளம்பெண்களும் தங்களுக்கு திருமணம் நடக்க வேண்டியும், நல்ல மணமகன் கிடைக்க வேண்டியும் கழுத்தில் மஞ்சள் கயிறு கட்டிக் கொண்டனர். திருமணமாகாத ஆண்களும் தங்களுக்கு திருமணம் நடக்க வேண்டி மஞ்சள் கயிற்றை கைகளில் கட்டிக்கொண்டனர்.

புதுப்பெண்களுக்கு தாலியை பிரித்து கட்டும் நிகழ்வும் காவிரி படித்துறையில் நடந்தது. திருமணத்தின்போது கட்டப்பட்டிருந்த தாலிகயிறுக்கு பதிலாக புது தாலி கயிற்றை அணிந்து கொண்டனர். பின்னர் வாழை மட்டையில் தீபத்தை வைத்து காவிரி ஆற்றில் மிதக்கவிட்டனர்.
தொடர்ந்து படித்துறை அருகில் உள்ள வேப்பமரம், அரசமரங்களை மாங்கல்ய பாக்கியம் நிலைக்க வேண்டி பெண்கள் சுற்றி வந்து நாகர் சிலைகளுக்கு மஞ்சள், குங்குமத்தை வைத்து மஞ்சள் கயிற்றை கட்டி விட்டு, நாகர், சந்தான கணபதி, சோமசுந்தரேஸ்வரர் சன்னதி முன்பு நெய்தீபம் ஏற்றி வழிபட்டனர்.
பின்னர் சாமிக்கு படைக்கப்பட்ட வெல்லம் கலந்த பச்சரிசி மற்றும் பழ வகைகளை ஒருவருக்கொருவர் பரிமாறி கொண்டனர். சிறுவர்கள் சிறிய சப்பரங்களை இழுத்து வந்து மகிழ்ந்தனர்.
ஆறுகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியதால் ஆடிப்பெருக்கு விழாவை மக்கள் மிகவும் மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும் கோலாகலமாக கொண்டாடினர்.
தஞ்சை பெரியகோவில் அருகே உள்ள படித்துறை, வெண்ணாறு படித்துறை, எம்.கே.மூப்பனார் சாலையில் உள்ள கல்லணைக்கால்வாய் படித்துறை, வடவாறு உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் இன்று ஆடிப்பெருக்கு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. மேலும் புதுஆற்றில் தண்ணீர் அதிகமாக வருவதால் பொதுமக்கள் யாரும் ஆற்றில் இறங்க வேண்டாம் என காவல்துறை சார்பில் அறிவிப்பு பதாகைகளும் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன.
கும்பகோணம், திருவிடைமருதூர், சுவாமிமலை, பாபநாசம், திருப்பனந்தாள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் ஆடிப்பெருக்கு விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு சிறுவர்கள் காவிரி ஆற்றங்கரைகளில் சப்பரத்தில் சுவாமி படங்களை வைத்து அலங்கரித்து இழுத்து வந்து சிறப்பு பூஜைகள் செய்தனர். பின்னர் மீண்டும் சப்பரத்தை வீட்டுக்கு இழுத்து வந்தனர்.
ஆடிப்பெருக்கு விழாவையொட்டி படித்துறைகளில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தீயணைப்பு வீரர்களும் குவிக்கப்பட்டு இருந்தனர்.
- வார ராசிபலன்
- 4 ராசிபலன்களுக்கான வார ராசிபலன்
மேஷம்
குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் விலகும் வாரம். ராசி அதிபதி செவ்வாய் தனது எட்டாம் பார்வையால் ராசியை பார்க்கிறார். தன வரவுகள் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். குடும்ப குழப்பங்கள் குறையும். ஆடம்பர மோகம், ஆசை அதிகமாகும். வியாபாரிகளுக்கு வங்கிக் கடன்கள் உடனடியாக கிடைக்கும். அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறும்.
இதுவரை கடனால் வம்பு வழக்கால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் நேரம் வந்துவிட்டது. சின்னத்திரை கலைஞர்கள் மற்றும் சினிமா துறையினர் அதிக நற்பலன் அடைவர். குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய சிந்தனை மிகையாகும். காதலில் அவசரமான நடவடிக்கையை தவிர்க்கவும்.
அரசியல் பிரமுகர்கள் தொண்டர்களிடம் நல்லுறவைத் தக்க வைத்துக் கொள்வீர்கள். 5.8.2025 அன்று காலை 11.23 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் பிறருக்கு நல்லது செய்தாலும் அது தீமையாகவே முடியும் என்பதால் அடுத்தவர்களின் விசயத்தில் தலையிடுவதைத் தவிர்க்கவும். தொலை தூர பயணங்களை தவிர்க்க வேண்டும். வரலட்சுமி விரத நாட்களில் மங்களப் பொருட்கள் தானம் வழங்கவும்.
ரிஷபம்
முன்னேற்றமான வாரம். ராசிஅதிபதி சுக்கிரன் தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குருவுடன் சஞ்சரிக்கிறார். நல்ல குடும்ப வாழ்க்கை அமையும். பேச்சை மூலதனமாகக் கொண்டவர்களின் வாழ்வாதாரம் உயரும். புதிய தொழில், கூட்டுத் தொழில் துவங்க உகந்த காலம். அதிர்ஷ்டம் மற்றும் ஆடம்பரத்தின் மீது ஆர்வம் கூடும்.
பூர்வ ஜென்ம புண்ணியப்படி இந்த ஜென்மத்தில் அடைய வேண்டிய அனைத்து இன்பங்களையும் அனுபவிப்பீர்கள். பொருளாதார நிலையிலே மிகப் பெரிய வளர்ச்சி ஏற்படும். பெண்களுக்கு அதிக பொறுப்புகளால் மனதில் சோர்வும் உடல் அசதியும் உண்டாகும். திருமண வயதில் உள்ள மகன் மகளின் திருமணம் முயற்சிகள் சாதகமாக முடியும்.
5.8.2025 அன்று காலை 11.23 மணி முதல் 7.8.2025 அன்று இரவு 8.11 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் தொழில் உத்தியோகம் சம்பந்தமான பய உணர்வு அதிகரிக்கும். தேவையற்ற பேச்சுக்கள், வாக்குவாதங்களை குறைத்தாலே பெரிய பிரச்சினை எதுவும் வராது என்பதை உறுதியாக கூறலாம். வரலட்சுமி விரத நன்நாளில் மஞ்சள் அர்ச்சனை செய்து மகா லட்சுமியை வழிபடவும்.
மிதுனம்
சோதனைகள் சாதனைகளாக மாறும் வாரம். ராசியில் பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி சுக்கிரன் குருவுடன் சேர்க்கை பெறுகிறார். ஜென்ம குருவால் ஏற்பட்ட சோதனைகள் குறையும். தோற்றப்பொலிவு மற்றும் பழக்க வழக்கங்களில் சிறு சிறு புதுமைகள் ஏற்படும். பொன்,பொருள் சேரும். அதிர்ஷ்டம் நீங்கள் இருக்குமிடம் தேடி வரும். மனமும், உடலும் உற்சாகமாக இருக்கும்.
மனதில் நல்ல ஆடம்பரமான எண்ணங்கள் அதிகரிக்கும். வராது என்று நினைத்த பணம் வந்து சேரும். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாக அமையும். காதலால் ஏற்பட்ட ஏற்பட்ட மன சஞ்சலம் சீராகும். குல இஷ்ட, தெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்ற ஏற்ற காலம். ஆன்மீக நாட்டம் அதிகமாகும். அனைத்து விதமான சுப பலன்களும் நடக்கும்.
ஒரு சில நேரங்களில் சின்ன சின்ன சங்கடங்கள் வந்தாலும் அதை பொருட்படுத்தாமல் சமாளித்து விடுவீர்கள். 7.8.2025 அன்று இரவு 8.11-மணிக்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் எந்த செயலையும் திட்டமிட்டு செய்தால் பெரிய பாதிப்பு இல்லாமல் தப்பிக்க முடியும். பார்க்கும் வேலையை மாற்றக் கூடாது. வரலட்சுமி நோன்பு அன்று வில்வ அர்ச்சனை செய்து மகாலட்சுமியை வழிபடவும்.
கடகம்
தடை தாமதங்கள் அகலும் வாரம். ராசியில் சூரியன் புதன் சேர்க்கை. உங்கள் மீதான நம்பிக்கையில் மாற்றம் ஏற்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். உங்கள் பேச்சுக்கு மதிப்பு உண்டாகும். இன்னல்கள் குறையும். தீய பழக்கத்தில் இருந்து விடுபடுவீர்கள். திருடு போன, கை மறதியாக வைத்த பொருட்கள் கிடைக்கும்.
தற்போது குடும்ப ஸ்தானத்தில் கேதுவும் அஷ்டம ஸ்தானத்தில் ராகுவும் நிற்பதால் கோட்சார ரீதியான சர்ப்ப தோஷம் ஏற்படும். சுய ஜாதக ரீதியாக ராகு-கேது தசை நடப்பவர்கள் உரிய சாந்தி பரிகாரம் செய்த பிறகு திருமணம் நடத்த வேண்டும். ஆனாலும் அஷ்டம ஸ்தானத்தில் உள்ள ராகுவை குரு பார்ப்பதால் விருப்ப விவாகங்கள் அதிகம் நடக்கும்.
சிலருக்கு திருமணத் தடை இருக்கும். வெகு சிலருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் நடக்கும். வெளியூர், வெளிநாட்டு பயணங்களில் நிலவிய தடைகள், தாமதங்கள் அகலும். இளைய சகோதரர்களின் வழியில் அனுகூலம் உண்டாகும். வேற்று மொழி பேசுபவர்கள், வேற்று மதத்தினரின் நட்பு மற்றும் உதவிகள், ஆதாயம் கிடைக்கும்.வரலட்சுமி விரத நாளில் மல்லிகை பூவால் அர்ச்சனை செய்து மகாலட்சுமியை வழிபடவும்.
- ஆடிப்பெருக்கு நன்னாளில் நீர்நிலைகளில் நீராடி வணங்க வேண்டும்.
- காவிரியை போல் அந்த பெண்ணின் வாழ்வும் சிறக்கும்.
'தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்காதே' என்றொரு பழமொழி உண்டு. இது வெறும் பழமொழி அல்ல. நீரின்றி அமையாது உலகு என்பதுதானே உண்மை. அதேபோல், நம் வாழ்வில், எல்லா சடங்கு சாங்கிய நிகழ்வுகளின் போதும் தண்ணீருக்கும் நமக்குமான பந்தம் தொடர்ந்துகொண்டேதான் இருக்கும். அப்படியொரு உணர்வுபூர்வமான நன்னாள்தான் ஆடிப்பெருக்கு விழா!
ஆண்டுதோறும் ஆடி மாதத்தின் பதினெட்டாம் நாள், ஆடிப்பெருக்கு கொண்டாடப்படும். கோடைக் காலம் முடிந்து, அந்த வெயிலில் மண்ணெல்லாம் பாளம் பாளமாக வெடித்து, ஆடிக் காற்றில் அந்த மண்ணுக்குள் காற்று நிரம்பியிருக்க, ஆடி மாதத்தில் சாகுபடிக்கு பூமியே தயாராக இருக்கும். அதற்குத் தகுந்தாற்போல, காவிரி முதலான நீர்நிலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். விவசாயம் அதன் பின்னர், சீரும் சிறப்புமாக செழிக்கும். தானியம் பெருகும்.
முக்கியமாக, ஆடிப்பெருக்கு நன்னாளில் நீர்நிலைகளில் நீராடி வணங்க வேண்டும். நீறை வணங்க வேண்டும். தாம்பத்ய வாழ்வு சிறக்கும். இந்த நாளில், வீட்டின் மூத்த பெண்கள் தங்கள் குடும்பத்தினருடன் நீர்நிலைகளில் நீராடுவார்கள் வணங்குவார்கள்.
வீட்டிலிருந்தபடியே காவிரித்தாயை வணங்குவோம். காலையில் புதிதாகத் திருமணமான பெண்கள் அணிந்திருக்கும் தாலியை மாற்றிக் கொள்ளும் வைபவமும் இந்தநாளில்தான் நடைபெறும்.
எனவே, அதிகாலையில் நீராடுங்கள். மனதில் காவிரியை நினைத்துக்கொண்டு நீராடினால், அந்த காவிரியானது நம் வீட்டில் தண்ணீரில் கலந்து விடுவதாகவும் ஐதீகம்.
புதிய மஞ்சள் சரடுடன் புதிய தாலியை பெண்கள் அணிந்து கொள்ளுங்கள், கன்னிப் பெண்களுக்கும் வேண்டிக்கொண்டு, புதிய மஞ்சள் அணிவிப்பதும் வழக்கம். இதனால் காவிரியை போல் அந்த பெண்ணின் வாழ்வும் சிறக்கும். நல்ல வாழ்க்கைத் துணை அமையும் என்பது ஐதீகம்.
தம்பதிக்குள் பிரிவினை ஏற்பட்டாலும், கருத்து வேறுபாடுகளை களைந்து மீண்டும் ஒன்று சேர வேண்டும் என்பதை வலியுறுத்தவே புதுமணத் தம்பதியை அந்த ஒருமாதத்தில் பிரித்து வைப்பதாகப் புராணங்கள் தெரிவிக்கின்றன. புதிதாக திருணமாகி புகுந்த வீட்டுக்குச் சென்ற தனது பெண்ணை, இந்த மாதத்தில் பெண்ணை பெற் தாயார் சீர் செய்து தன் வீட்டுக்கு அதாவது பெண்ணின் பிறந்த வீட்டுக்கு அழைத்து வருவார்.
ஆடி மாதமான இந்த மாதத்தில் தன் தாய் வீட்டில் இருக்கும் பெண், அனைத்து சாஸ்திர - சம்பிரதாயங்களையும் கற்றறிவாள். சடங்கு சாங்கியத்தை எப்படி மேற்கொள்வது, எல்லோரையும் அனுசரித்து குடும்பம் நடத்துவது எப்படி என்பதையெல்லாம் அறிவாள். அதன்படி புகுந்த வீட்டில் பெயரெடுத்து வாழ்வாள். பெருமைபட வாழ்வாள் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.






