Today Rasipalan: இன்றைய ராசிபலன்-04.08.25

இன்றைய ராசிபலன் 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்
Today Rasipalan: இன்றைய ராசிபலன்-04.08.25
Published on

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்

மேஷம்

ஏமாற்றங்கள் அகல எதிலும் விழிப்புணர்ச்சி தேவைப்படும் நாள். தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருப்பது நல்லது. குடும்பத்தினர்கள் உங்கள் மீது குறை கூறுவர்.

ரிஷபம்

மனக்கசப்பு மாறி மகிழ்ச்சி கூடும் நாள். வாக்கு சாதுர்யத்தால் வளம் காண்பீர்கள். அலுவலகப் பணிகளில் அருகில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

மிதுனம்

உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறும் நாள். கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழ்வீர்கள். தொழில் சம்பந்தமாகப் புதியவர்கள் உங்களைத் தேடி வரலாம்.

கடகம்

யோகமான நாள். மதிப்பும், மரியாதையும் உயரும். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். வருமானம் திருப்தி தரும். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் கிடைக்கும்.

சிம்மம்

உடன் இருப்பவர்களின் உதவி கிடைத்து மகிழும் நாள். வரன்கள் நல்ல முடிவிற்கு வரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைககள் கிடைக்கும். வேலைப்பளு கூடும்.

கன்னி

அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்கும் நாள். உத்தியோகத்தில் சம்பள உயர்வு பற்றிய சந்தோஷச் செய்தி வந்து சேரும். இடமாற்றம், இலாகா மாற்றம் வருவதற்கான அறிகுறி தோன்றும்.

துலாம்

ரோஷத்தோடு விலகியவர்கள் பாசத்தோடு வந்திணையும் நாள். புதிய ஒப்பந்தங்களை யோசித்து ஏற்றுக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் மேலதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள்.

விருச்சிகம்

நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாள். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். சகோதர வழியில் சுபச் செய்தியொன்று வந்து சேரலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

தனுசு

தொட்ட காரியங்களில் வெற்றி கிட்டும் நாள். புதிய வாகனம் வாங்க எடுத்த முயற்சி கைகூடும். தொழில் தொடர்பாக செல்வந்தர்களைச் சந்தித்துப் பேசும் வாய்ப்பு உண்டு.

மகரம்

பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். வீடு வாங்கும் முயற்சி கைகூடும். மனதளவில் நினைத்த காரியமொன்றை செயல்படுத்த முன்வருவீர்கள். வழக்குகள் சாதகமாகும்.

கும்பம்

வருமானம் இரு மடங்காகும் நாள். வாகனம் வாங்குவதில் ஆர்வம் கூடும். மருத்துவச் செலவுகள் ஏற்படலாம். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

மீனம்

முன்னேற்றம் கூடும் நாள். உதிரி வருமானங்கள் உண்டு. பிள்ளைகளின் நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் கேட்ட சலுகைகளைத் தருவர்.

X

Maalai Malar
www.maalaimalar.com