என் மலர்
ஆன்மிகம்
- இன்று பிரதோஷம்.
- இருக்கன்குடி ஸ்ரீமாரியம்மன் கோவிலில் அபிஷேகம், அலங்காரம்.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு கார்த்திகை-28 (வெள்ளிக்கிழமை)
பிறை: வளர்பிறை.
திதி: திரயோதசி இரவு 6.35 மணி வரை. பிறகு சதுர்த்தசி.
நட்சத்திரம்: பரணி காலை 6.50 மணி வரை. பிறகு கார்த்திகை நாளை விடியற்காலை 4.55 மணி வரை. பிறகு ரோகிணி.
யோகம்: சித்த, மரணயோகம்.
ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
சூலம்: மேற்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
இன்று பிரதோஷம். அண்ணாமலையார் தீபம் திருகார்த்திகை. வள்ளியூர் ஸ்ரீசுப்பிரமணியர் தெப்பம், திருநாகேஸ்வரம் ஸ்ரீநாகநாதர் திருவீதியுலா, கணம்புல்ல நாயனார் குருபூஜை. சுவாமிமலை, திருப்பரங்குன்றம், ஸ்ரீமுருகப் பெருமான் கோவில் தேரோட்டம். திருவிடைமருதூர் ஸ்ரீபிரகத் சுந்தரசாம்பிகை புறப்பாடு. கரூர் தான்தோன்றி ஸ்ரீகல்யாணவேங்கட்ரமண சுவாமி திருமஞ்சனம். பெருஞ்சேரி ஸ்ரீவாகீஸ்வரர், படைவீடு ஸ்ரீரேணுகாம்பாள் புறப்பாடு. வீரவநல்லூர் ஸ்ரீ மரகதாம்பிகை தலங்களில் அபிஷேகம். லால்குடி ஸ்ரீசப்ரிஷீஸ்வரர் கோவிலில் அபிஷேகம். திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் கோவிலில் ஸ்ரீசுந்தரவல்லித்தாயார் புறப்பாடு. இருக்கன்குடி ஸ்ரீமாரியம்மன் கோவிலில் அபிஷேகம், அலங்காரம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-அன்பு
ரிஷபம்-செலவு
மிதுனம்-ஆதரவு
கடகம்-தனலாபம்
சிம்மம்-ஈகை
கன்னி-முயற்சி
துலாம்- உதவி
விருச்சிகம்-சுகம்
தனுசு- பரிவு
மகரம்-சுபம்
கும்பம்-தனம்
மீனம்-பணிவு
- இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 4-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- திருவண்ணாமலை மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் உலகப் பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்குகிறது. இங்கு நடைபெறும் விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
இந்த விழாவை காண உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.
தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. பக்தர்கள் வசதிக்காக சிறப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதற்கிடையே, இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 4-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கார்த்திதை தீபத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று அதிகாலை கோவில் கருவறை முன் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். கார்த்திகை மாத பரணி நட்சத்திரத்தில் இந்த தீபம் காட்டப்படுவதால் `பரணி தீபம்' என்றுபெயர் பெற்றது.
இன்று மாலை 6 மணிக்கு கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலையார் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இரவு பஞ்சமூர்த்திகள் தங்க ரிஷப வாகனத்தில் மாடவீதி உலாவும் நடைபெற உள்ளது.
விழாவிற்கான ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு பணிகளை மாவட்ட நிர்வாகம், கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
நினைத்தாலே முக்தி தரும் தலமாகக் கருதப்படுவது திருவண்ணாமலை என்பது குறிப்பிடத்தக்கது.
- அதிகாலையில் புராணம் வாசிக்கப்பட்டது.
- ஏராளமான பக்தர்கள் வந்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்:
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைந்துள்ள ஆண்டாள் கோவில் 108 வைணவ திருத்தலங்களில் சிறப்பு பெற்றதாகும். இங்கு ஆண்டு தோறும் கார்த்திகை மாதம் சுக்ல பட்ச ஏகாதசி அன்று நம்பாடுவான் என்ற பக்தனுக்கு பெருமாள் அருள்புரிந்ததை முன்னிட்டும், குளிர் காலம் வருவதால் அதனை பக்தர்களுக்கு அறிவிக்கும் வண்ணமும் இங்கு கோவில் கொண்டு அருள்பாலிக்கும் சுவாமிகளுக்கு 108 வஸ்திரங்கள் சாற்றப்படும் வைபவம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
அதுபோல் இந்த ஆண்டு இவ்வைபவம் இன்று அதிகாலை நடைபெற்றது. அப்போது இன்று ஒரு நாள் மட்டுமே கருடாழ்வார் சன்னதியிலிருந்து புறப்பட்டு பகல் பத்து மண்டபத்துக்கு அனைத்து தெய்வங்களும் எழுந்தருளுவார்கள். இங்கு ஆண்டாள், ரெங்கமன்னார், பெரிய பெருமாள், ஸ்ரீதேவி, பூமிதேவி, ஆழ்வார்கள், ஆச்சாரியர்களுக்கு 108 வஸ்திரங்கள் சாற்றப்பட்டது.
இதனை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று அதிகாலையில் புராணம் வாசிக்கப்பட்டது. சாரல் மழை, கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் ஏராளமான பக்தர்கள் வந்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
இவ்விழா விற்கான ஏற்பாடுகளை கோவில் பாலாஜி பட்டர் ஸ்தானிகம் என்ற ரமேஷ் பட்டர், அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.வெங்கட்ராம ராஜா, கோவில் செயல் அலுவலர் சக்கரை அம்மாள் மற்றும் கோவில் அலுவ லர்கள், பணியாளர்கள் செய்திருந்தனர்.
- அரிசி தானம் – பாவங்கள் தொலையும்.
- ஆடை தானம் – ஆயுள் விருத்தியாகும்.
மஞ்சள் தானம் – மங்களம் உண்டாகும்.
அன்னதானம் – சகல பாக்கியங்களும் உண்டாகும்.
அரிசி தானம் – பாவங்கள் தொலையும்.
ஆடை தானம் – ஆயுள் விருத்தியாகும்.
எண்ணெய் தானம் – கர்ம வினைகள் அகலும். கடன்கள் குறையும்.
காய்கறிகள் தானம் – பித்ரு சாபங்கள் விலகும். குழந்தைகளின் ஆரோக்யம் வளரும்.
காலணி தானம் – பெரியோர்களை நிந்தித்த பாவம் விலகும். தீர்த்த யாத்திரை செய்த பலன் கிடைக்கும்.
குடை தானம் – தவறான வழியில் சேர்த்த செல்வத்தினால் ஏற்பட்ட பாவம் விலகும். குழந்தைகளுக்கு சிறப்பான எதிர்காலம் உண்டாகும்.
தேன் தானம் – புத்திர பாக்கியம் உண்டாக்கும். சுகம் தரும் இனிய குரல் வரும்.
நெய் தானம் – வீடுபேறு அடையலாம்-தேவதா அனுக்ரஹம்
தண்ணீர் தானம் – மனசாந்தி ஏற்படும்.
கம்பளி (போர்வை) தானம் – துர்சொப்ன துர்சகுன பயநிவர்த்தி
பால் தானம் – சவுபாக்கியம்
பழவகைகள் தானம் – புத்ரபவுத்ர அபிவிருத்தி
தயிர் சாதம் / பால் சாதம் – ஆயுள் நீடிக்கும் ஆரோக்கியம் நிலைக்கும்.
தயிர் தானம் – இந்திரிய விருத்தியாகும்.
வெள்ளி தானம் – பித்ருகள் ஆசிகிடைக்கும்.
சொர்ண தானம் (தங்கம்) – கோடிபுண்ணியம் உண்டாகும்
பூமி தானம் – இகபரசுகங்கள்

வஸ்த்ர தானம் (துணி) – சகல ரோக நிவர்த்தி
கோ தானம் (பசுமாடு) – பித்ருசாப நிவர்த்தி. இல்லத்தின் தோஷங்கள் விலகும். பலவித பூஜைகளின் பலன்கள் கிடைக்கும்.
திலதானம் (எள்ளு) – பாப விமோசனம்
குல தானம் (வெல்லம்) – குல அபிவிருத்தி – துக்கநிவர்த்தி
சந்தனக்கட்டை தானம் – புகழ்
விதை தானம் – வம்ச விருத்தியை தரும்
மாங்கல்ய சரடு தானம் – காமக் குற்றங்கள் அகலும். தீர்க்க மாங்கல்ய பாக்யம் உண்டாகும்.
பாய் தானம் – பெற்றவர்களை, பெரியவர்களை புறக்கணித்ததால் வந்த சாபங்கள் தீரும். கடும் நோய்களுக்கு நிவாரணம் கிட்டும். அமைதியான மரணம் ஏற்படும்.
தீப தானம் – கண் பார்வையை தீர்க்கமாக்கும். பித்ருக்களை இருட்டிலிருந்து வெளிச்சத்துக்கு கொண்டு வரும்.
தேங்காய் தானம் – நினைத்த காரியம் வெற்றி அடையும். பூரணநலன் உண்டாக்கும். நினைத்த காரியத்தில் வெற்றியளிக்கும்.
தனக்கு மிஞ்சிதான் தானமும் தர்மமும் என்று பெரியோர்கள் சொல்வார்கள். அதாவது நமக்கு மிஞ்சியது போக, மற்றவற்றை தானமாகவும், தர்மமாகவும் செய்யுங்கள் என்று கூறினார்கள்.
அத்தகைய தானங்கள் பல வகைப்படும். கருட புராணத்தில் சொல்லப் பட்டிருக்கும் தான பலன்கள் என்னென்ன தானம் செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதைத் தெரிந்து கொள்வோம்.
அன்னதானம் – விரும்பிய உலகத்தில் சுகித்திருப்பார்.
கோ தானம் – கோலோகத்தில் வாழ்வர்.
பசு கன்றினும் சமயம் தானம் – கட்டாயம் வைகுண்ட வாசம் உண்டு.
குடை தானம் – 1000 ஆண்டுகள் வருண லோகத்தில் சுகம் அனுபவிப்பார்.
தாமிரம், நெய், கட்டில், மெத்தை, ஜமக்காளம், பாய் தலையணை இவகளில் ஏதேனும் ஒன்றைத் தானமாக செய்தால் சந்திரலோகத்து சுகங்களை அனுபவிப்பார்.
வஸ்திர தானம் – 1000 ஆண்டுகள் வாயுலோகத்தில் வாழ்வார்.
ஆலயத்துக்கு யானை தானம் – இந்திரனுக்குச் சமமான ஆசனத்தில் அமர்ந்திருப்பார்.
குதிரையும், பல்லக்கும் தானம் – இந்திரன் காலம் வரை வருணலோகத்தில் வாழ்வார்.
நந்தவனங்களை ஆலயத்துக்கு அளிப்பர் –வாயுலோகத்தில் வாழ்வார்.
தானியங்கள், நவரத்தினங்கள் தானம் – மறு ஜென்மத்தில் அறிவாளியாகவும், தீர்க்காயுள் கொண்டவராகவும் வாழ்வர்.
பயன் கருதாது தானம் – மரணம் உன்னதமாய் இருப்பதோடு மீண்டும் பிறவி வாய்ப்பதில்லை.
பண உதவி – ஸ்வேத தீபத்தில் நெடுங்காலம் வாழ்வார்கள்.
தாமிரப்பாத்திரத்தில் எள் தானம் – நற்குலத்தில் உதித்து திடகாத்திரமாக கீர்த்தியோடு பிரகாசிப்பார்.
சுவையான பழங்களைத் தானம் – ஒரு கனிக்கு ஒரு ஆண்டு வீதம் கந்தர்வ லோகத்தில் சுகித்திருப்பார்.
தண்ணீர் தானம் – கைலாச வாசம் கிட்டும்.
நற்செயலை விரும்பிச் செய்கிறவர்கள் சூரியலோகத்திற்கு செல்கிறார்கள்.
தெய்வம் பவனி வரும் வீதிகளைச் செம்மைப்படுத்துபவர் இந்திரலோகத்தில் சுகித்திருப்பார்.
தானங்களும் அதன் பலன்களும் பற்றி தெரிந்து கொண்டு நமக்கு தேவையான பலனை தரக்கூடிய தானத்தை செய்து பலனை பெறுவோம்.
- உடல் ஆரோக்கியம், நீண்ட ஆயுள் கிடைக்க தன்வந்திரி வழிபாடு செய்யப்படுகிறது.
- திருமாலின் 24 அவதாரங்களில் 17-வது அவதாரம் தன்வந்திரி அவதாரமாகும்.
திருமால் மக்களுக்காக மருத்துவராக தோன்றிய நாளே தன்வந்திரி ஜெயந்தியாகும். நோய் வராமல் நல்ல உடல் ஆரோக்கியம், நீண்ட ஆயுள் கிடைக்க தன்வந்திரி வழிபாடு செய்யப்படுகிறது.
ஸ்ரீ தன்வந்திரி, விஷ்ணு அம்சமாக பின்னிரு கரங்களில் சங்கு, சக்கரத்துடனும் முன் வலக்கையில் அட்டைப்பூச்சியை ஏந்தியும், இடக்கையில் அமிர்த கலசத்துடனும் காட்சி அளிக்கிறார்.
அக்கால மருத்துவமுறையில் நோயாளியின் உடலிலிருந்து கெட்ட ரத்தத்தை உறிஞ்சி எடுத்து நோயை குணமாக்க அட்டைப்பூச்சிகள் பயன்படுத்தப்பட்டனவாம்.

திருமாலின் 24 அவதாரங்களில் 17-வது அவதாரம் தன்வந்திரி அவதாரமாகும். இந்து மதத்தில் தன்வந்திரி உடல் நலத்திற்காக வழிபடக்கூடிய கடவுள் ஆவார். தன்வந்திரியை தேவர்களின் மருத்துவர் என்றும் கூறலாம்.
அசுரர்கள் எப்போதும் தேவர்களை துன்பப்படுத்தும் சுபாவம் கொண்டவர்கள். தேவர்களது சொகுசு வாழ்வு தங்களுக்கு கிடைக்க வேண்டும் என்று அசுரர்கள் தேவர்களுடன் சண்டை இடுவதும் உண்டு.
தேவர்களைவிட அசுரர்கள் பலசாலிகள். அசுரர்களிடம் இருந்து தங்களைக் காக்குமாறு தேவர்கள் மூம்மூர்த்திகளிடம் சரணடைந்தனர். சாகாவரம் கொண்ட அமிர்தத்தை உண்டால் என்றென்றும் சாவு கிடையாது. அமிர்தத்தை பெற பாற்கடலை தேவர்கள் அசுரர்களின் உதவியுடன் கடைந்தனர்.
பாற்கடலை கடையும்போது ஆலகால விஷம் வந்தது. அதை சிவபெருமான் எடுத்து கொண்டதால் அதனை அடுத்து காமதேனு, கற்பக விருட்சம், ஐராவதம், மூதேவி, மகாலக்ஷ்மி தோன்றினர்.
கடைசியாக அமிர்தத்துடன் விஷ்ணுவின் அவதாரமான தன்வந்திரி தோன்றினார். இவரின் திருக்கரத்தில் உள்ள கலசத்திலிருந்து வழங்கிய அமிர்தத்தை தேவர்கள் உண்டதால் சாகாவரம் பெற்றனர்.
"ஹிமா"என்ற அரசனுக்கு திருமணமான நான்காவது நாள் பாம்பு கடித்து இறக்க நேரிடும் என்ற சாபம் இருந்தது. இதை அறிந்த அவனது 4 வது நாள் அன்று இரவில் கணவனைச் சுற்றிலும் ஏராளமான விளக்கு ஏற்றி, நடுவே ஆபரணங்களையும் வைத்து கணவனுக்கு புராணக் கதை கூறி தூங்காது பார்த்து கொண்டாளாம்.

பாம்பு உருவத்தில் வந்த எமன் தீப எண்ணெயில் ஆபரணங்களின் பிரகாசத்தில் கூசவே, காலை வரை காத்திருந்து விட்டு திரும்பி சென்றதாகவும், மனைவி யமனிடம் இருந்து காப்பாற்றியதாகவும் கருக்கதை உள்ளது.
தன்வந்திரி நாளன்று தன்னை சுற்றிலும் தீபங்கள் ஏற்றி தன் மனைவி காப்பாற்றியது தன்வந்திரி கடவுளே காரணம் என்று மன்னன் நம்பினான். மக்கள் அனைவரையும் தன்திரேயாஸ் தினத்தன்று , இரவில் யமதீபம் ஏற்றி வழிபடவேண்டும் என்று உத்தரவிட்டார்.
ஐப்பசி மாத அமாவாசை 2 நாட்களுக்கு முன்பாக வரும் திரியோதசி நாளன்று தீபாவளி திருநாள் துவங்கி விடுகிறது. அன்று தன்வந்திரி ஜெயந்தி தன்திரேயாஸ் என்றும் சொல்வர்.
வைணவ ஆலயங்களில் தன்வந்திரிக்கென்று தனி சந்நிதி உள்ளது. திருவரங்கம் ஆலயத்தில் தன்வந்திரி சந்நிதி பிரசித்தமானது. தன்வந்திரி ஹோமம் செய்வதால் நோய் தீரும். கோவையிலும், கேரளாவிலும் தன்வந்திரி பகவானுக்கு ஆலயம் உள்ளன.
- இன்று பரணி தீபம்.
- திருப்போரூர் ஸ்ரீ முருகப் பெருமான் பால் அபிஷேகம்.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு கார்த்திகை-27 (வியாழக்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: துவாதசி இரவு 8.37 மணி வரை பிறகு திரயோதசி
நட்சத்திரம்: அசுவினி காலை 8.19 மணி வரை பிறகு பரணி
யோகம்: அமிர்த, சித்தயோகம்
ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை
சூலம்: தெற்கு
நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை
இன்று பரணி தீபம். சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் குதிரை வாகனத்தில் பவனி. திருப்போரூர் ஸ்ரீ முருகப் பெருமான் பால் அபிஷேகம். திருப்பரங்குன்றம் ஸ்ரீ முருகப் பெருமான் பட்டாபிஷேகம், தங்கக் குதிரை வாகனத்தில் பவனி. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை மற்றும் மைசூர் மண்டபம் எழுந்தருளல். திருமெய்யம் ஸ்ரீ சத்தியமூர்த்தி புறப்பாடு. திருவண்ணாமலை ஸ்ரீ அருணாச்சல நாயகர் காலை கண்ணாடி விமானத்தில் பவனி. திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சவுமிய நாராயணப் பெருமாள் திருமஞ்சன சேவை. குறுக்குத்துறை ஸ்ரீ முருகப் பெருமான் வழிபாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீ ராமர் மூலவருக்கு திருமஞ்சனம். தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி அபிஷேகம். ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக்கடலை சாற்று வைபவம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-முயற்சி
ரிஷபம்-இன்பம்
மிதுனம்-சாதனை
கடகம்-ஆதரவு
சிம்மம்-புகழ்
கன்னி-வெற்றி
துலாம்- சுகம்
விருச்சிகம்-உறுதி
தனுசு- சுபம்
மகரம்-தனம்
கும்பம்-பக்தி
மீனம்-அன்பு
- தேவேந்திரன் இந்திராணியுடன் பிரம்மஹத்தியை விட்டு இவ்விடத்தில் நீங்கியபடியால், இது சுரேந்திர மோட்சம் என்று மூவுலகத்திலும் கூறப்படும்.
- பிரம்மனின் தண்டம் புடார்ஜினமாகிய இங்கு, தண்டாதரனாக இருப்பதால் இந்த தலம் தண்டாசி என்றும் கூறப்படுகிறது.
அகத்திய மாமுனி இந்த முக்கிய தீர்த்தங்களில் எல்லாம் சாஸ்திர முறைப்படி நீராடி வழிபட்டு தட்சிணை அளித்து புடார்சுனே சனையும், கோமதி அம்பாளையும் வலம் வந்து வணங்கி, மந்திரங்களையும், தந்திரங்களையும் கொண்டு தூபம், தீபம், சந்தம், புஷ்பம், அட்சதை, நைவேத்யம் முதலானவைகளால் சிவனை பூஜித்து, பூஜை முடிவுபெற பின் வருமாறு தோத்திரம் செய்தார்.
'ஓம் சகல பிராணிகளையும் சிருஷ்டித்து பாலனம் செய்து, சம்ஹாரம் செய்கின்ற திருமூர்த்தியும், சகல பதார்த்தங்களுக்கும் காரணரூபியும், விருட்சத்தின் பொந்தில் வாசம் செய்பவனுமாக இருக்கும் உனக்கு வணக்கம்.
ஸ்ரீஹரியின் கண்களால் அர்ச்சனை செய்யப் பெற்றவனும், காளகூட விஷத்தை பானம் செய்தவனும், பக்தர்களின் மேன்மைக்காக ஆசை கொண்டவனுமாக இருக்கின்ற புடார்சுனனை அடியேன் உபாசனை செய்கிறேன்.
பரிமளம் பூசியவனும், அழகு பொருந்தியவனும், சந்திர பிரபை சூடியவனும், வீரானந்தரசம் என்று பெயர் பெற்றவனுமாகிய புடார்சுனனை உபாசனை செய்கிறேன்.
கங்கையைத் தரித்தவனும், பிறை சூடியவனும், அர்த்த நாரீச ரூபம் கொண்டவனும், வாசுதேவனுக்கு நேசனும், சாந்தனுமாக விளங்கும் புடார்சுனரை வணங்குகிறேன்.
யமனுக்கு யமனாகவும், கலைகளுக்கு ஆதாரமாகவம், பக்தர்களுக்கு பீதியை போக்குபவனும், பார்வதியுடன் மங்கள ரூபியாக இருக்கும் புடார்சுனரை உபாசனை செய்கிறேன்.
சூரியன், சந்திரனை கண்களாகப் பெற்றவனும், விஷ்ணு ரூபியும், கோடி சூரியனின் ஒளியைத் தாங்கியவனுமான புடார்சுனரை உபாசிக்கிறேன்.
சங்கு, குருக்கு முல்லை, சந்திரன் இவை போல் வெளுத்தவனும், கற்பூரம் போல் பரிசுத்த சரீரம் கொண்டவனும், கருணா ரூபிணியுமான புடார்சுன தேவனை உபாசிக்கிறேன்." என்று துதித்து பக்தி ததும்பிய மனதுடன் அகத்திய மாமுனி தண்டம் போல சன்னிதானத்தில் விழுந்து வணங்கினார்.
அப்போது அர்த்த நாரீசராக பரமசிவன் லிங்கத்தில் இருந்து தோன்றி, திருக்கைகளால் வெகுமானித்து பின்வருமாறு திருவாய் மலர்ந்தருளினார்.
"ஓ... முனியே, கவுதம முனியையும், ஏகத முனியையும் சமாதானம் செய்து நாம் உத்திரவு கொடுத்தபடி, மலைய பர்வதத்தில் குப்தி சிருங்கம் செல்ல வேண்டும்."
என்று கூறி அந்த லிங்கத்தில் மறைந்த உடன் கும்பமாமுனி ஆச்சரியம் கொண்டு ஹயக்ரீவன் மற்ற முனிவர்களுடன் பிரம்மானந்தத்தை உணர்ந்தார்.
தேவேந்திரன் இந்திராணியுடன் பிரம்மஹத்தியை விட்டு இவ்விடத்தில் நீங்கியபடியால், இது சுரேந்திர மோட்சம் என்று மூவுலகத்திலும் கூறப்படும்.
பிரம்மனின் தண்டம் புடார்ஜினமாகிய இங்கு, தண்டாதரனாக இருப்பதால் இந்த தலம் தண்டாசி என்றும் கூறப்படுகிறது.
- வேண்டிக் கொண்ட செயல்கள் நிறைவேறிட சுவாமிக்கு பட்டு வஸ்திரங்கள் சாத்தி சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் செய்யலாம்.
- அம்பாளுக்கு புடவை சாத்தி திருக்கல்யாணம், வளையல்கள் போட்டு, தொட்டில் கட்டி வளைகாப்பு மற்றும் படிபாயாசம் படைத்தும் நேர்த்திக் கடன்கள் நிறைவேற்றலாம்.
1. திருப்புடைமருதூர் ஆலயம் கட்டப்பட்டு 1200 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது.
2. இந்த தலத்து விநாயகர் பெயர் அனுக்கை விநாயகர். இங்கு நைவேத்தியமாக சுத்தன்னம் படைத்து வழிபடுகின்றனர்.
3. வட இந்தியாவில் வாரணாசியை காசியாக புகழ்வது போல் தென் இந்தியாவின் காசியாக திருப்புடைமருதூர் புகழப்படுகிறது.
4. சிவாலயங்களில் பொதுவாக ஈசனின் இடது பக்கம் அம்பாளின் சன்னதி அமைந்திருக்கும். இந்த தலத்தில் ஈசனுக்கு வலது பக்கத்தில் அம்பாள் சன்னதி அமைந்துள்ளது.
5. இந்த ஆலயம் உருவாக மூலக்காரணமாக அமைந்த பிரம்மதண்டம் ஆலயத்தின் முக்கிய பகுதியான கருவறை அருகே இடது பக்கத்தில் இருப்பதை காணலாம்.
6. கருவறையை சுற்றி ராமேஸ்வரம் லிங்கம், காசி லிங்கம் என்ற பெயர்களில் சிறிய லிங்கங்கள் உள்ளன.
7. திருப்புடைமருதூர் ஆலயத்தின் வடக்குப் பகுதியில் தாமிரபரணி நதி ஓடுகிறது. மற்ற இடங்களில் வேகமாக ஓடும் தாமிரபரணி ஆற்று தண்ணீர், இந்த தலம் அருகே நிதானமான வேகத்துடன் மெல்ல ஓடுகிறது. எனவே இங்கு ஆனந்த குளியல் போடலாம்.
8. நடராஜர் ஆடும் கோலத்தில் தனி சன்னதியில் உள்ளார். இவர் புனுகு வாசனைத் திரவியத்தால் உருவாக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது.
9. திருப்புடைமருதூர் ஆலயம் அருகில் அத்தாளநல்லூர் ஆதிமூலம் கஜேந்திரவரதர் ஆலயம் மற்றும் வீரவநல்லூர் பூமிநாதர் ஆலயங்கள் உள்ளன. உங்கள் பக்தி யாத்திரையை திட்டமிட்டு அமைத்துக் கொண்டால் இந்த ஆலயங்களுக்கும் சென்று தரிசனம் செய்ய முடியும்.
10. இந்த தலத்து மூலவரை நாறும்பூநாதர் என்று அழைப்பது போல உற்சவரை பூநாதர் என்று அழைக்கிறார்கள்.
11. தைப்பூசம் 10 நாட்கள், ஆனி உத்திரம், ஆடிப்பூரம், விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, திருக்கார்த்திகை, மகா சிவராத்திரி, கந்தசஷ்டி, பங்குனி உத்திரம் ஆகியவை இந்த தலத்து முக்கிய திருவிழாக்களாகும்.
12. திருமணத்தடை, புத்திரதோஷம், தீராத பிணிகள், குடும்ப கஷ்டங்கள், துன்பங்கள் நீங்கிடவும், குடும்ப ஐஸ்வர்யம் பெறவும், கல்வி, கேள்விகளில் சிறக்கவும், வியாபாரம் விருத்தி அடையவும் இங்கு வேண்டிக் கொள்ளலாம்.
13. வேண்டிக் கொண்ட செயல்கள் நிறைவேறிட சுவாமிக்கு பட்டு வஸ்திரங்கள் சாத்தி சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் செய்யலாம்.
14. அம்பாளுக்கு புடவை சாத்தி திருக்கல்யாணம், வளையல்கள் போட்டு, தொட்டில் கட்டி வளைகாப்பு மற்றும் படிபாயாசம் படைத்தும் நேர்த்திக் கடன்கள் நிறைவேற்றலாம்.
15. இறைவன் கொடும் பாவங்கள் செய்தவர்களையும் பக்தி தந்து ஆட்கொள்ளும் செய்திகள் திருப்புடைமருதூர் புராணம் நூலில் உள்ளன.
16. இறைவனைப் 'போற்றி' சொல்லித் துதிப்பதற்கான பாடல்கள் இந்நூலில் பல உள்ளன. அவற்றைத் தொகுத்து அன்பர்கள் பாராயணம் செய்து பல்வகை நலன்களையும் பெறலாம்.
17. இந்த ஆலயத்தின் கோபுர உட்புறச் சுவர்களில் தீட்டப்பட்ட பழம்பெரும் வண்ண ஓவியங்களும், அங்குள்ள மரச் சிற்பங்களும், கற்சிற்பங்களும் சிறந்த கலைப் படைப்புகளாக திகழ்கின்றன.
18. பழம் பெரும் சிவத்தலமான திருப்புடைமருதூர் திருத்தலம், மூர்த்தி, தலம், தீர்த்தம் என்னும் மூன்றாலும் மிக்க பெருமை கொண்டது.
19. இத்தலத்தின் பெருமைகளை விளக்கும் நூல்கள் பல உள்ளன. திருப்புடை மருதூர்ப் பதிற்றுபத்து அந்தாதி, திருப்புடை மருதூர் இரட்டை மணிமாலை, திருப்புடை மருதூர் மும்மணிக் கோவை, திருப்புடைமருதூர்ப் பள்ளு என்பன அவை.
20. சுப்ரீம்கோர்ட்டில் நீதிபதியாக இருந்த ரத்தின வேல் பாண்டியன் திருப்புடை மருதூரில் பிறந்தவர். இத்தலத்து இறைவன் பால் ஈர்ப்பு உள்ளவர். திருப்புடை மருதூருக்கும், திருக்கோவிலுக்கும் எண்ணற்ற சேவை செய்துள்ளார்.
- அதற்கு தென்பக்கத்தில் பரஞ்ஜோதியாக மகாபாவங்களைத் தொலைக்கும் தண்டபாவம் என்று பெயர் பெற்ற புண்ணிய தீர்த்தம் ஒன்று உள்ளது.
- அதில் நீராடி வழிபடுவோர் சகல விருப்பங்களையும் இவ்வுலகில் அனுபவித்து முடிவில் முக்தியைப் பெறுகின்றனர்.
சிறப்பு மிக்க இந்த தலத்தின் அருகே மிக அதிகமான தீர்த்தக்கட்டங்கள் உள்ளன.
அதாவது அருகில் உள்ள ஊர்க்காட்டில் இருந்து திருப்புடைமருதூர் வரை 10 முக்கிய தீர்த்தக்கட்டங்கள் உள்ளன.
அனைத்துமே சிறப்பு மிக்கவை ஊர்க்காட்டில் உள்ள சக்கர தீர்த்தம், அத்தாளநல்லூரில் உள்ள கஜேந்திர வரதர் படித்துறைக்கு தென்புறம் உள்ள விஷ்ணு தீர்த்தம், அதன் வடபகுதியில் உள்ள அகத்தியர் தீர்த்தம், மற்றும் அதனருகே உள்ள சிங்கதீர்த்தம், திருப்புடைமருதூர் அருகே கடனா நதி சேரும் இடத்தில் கடனா சங்கம தீர்த்தம், கோவில் பின்புறம் படித்துறையில் தெற்கு ஓரமுள்ள பைசாச மோனசோ தீர்த்தம், சுரேந்திர மோட்ச தீர்த்தம், படித்துறையின் வடக்கு பகுதியில் கருமதீர்த்தம், அதற்கு எதிர்புறம் தண்ட பிரம்மச்சாரி தீர்த்தம், நதி கிழக்காக திரும்பும் இடத்தில் மனசா தீர்த்தம் ஆகியவை இன்மைக்கும் மறுமைக்கும் நன்மை பயக்கும் தீர்த்தங்களாக இங்கு விளங்குகிறது.
திருப்புடைமருதூரில் லிங்கத்திற்கு தென்பாகம் கவுதம தீர்த்தம் என்ற திருநாமம் பெற்ற தீர்த்தம் ஒன்று உள்ளது.
அந்த கவுதம தீர்த்தத்திற்கு கடவுளின் ஆணைப்படி அநேக தீர்த்தங்கள் வந்துள்ளன.
அவ்விதமாக தீர்த்தத்தில் கும்ப முனியான அகத்தியர் மற்றய முனி கணங்களுடன், லோபா முத்ரா தேவி சகிதமாக நீராடி வழிபட்டு பிதுர்களுக்கும், தேவர்களுக்கும், ரிஷிகளுக்கும் தர்ப்பணம் செய்தார்.
அதற்கு அப்பால் தென்பாகத்தில் பைசாகமோசனம் என்ற தீர்த்தம் ஒன்று உள்ளது.
அதில் நீராடி வழிபடுவோர் யமபுரியைக் கண்ணால் பார்க்க மாட்டார்கள்.
அதற்கு தென்பக்கத்தில் பரஞ்ஜோதியாக மகாபாவங்களைத் தொலைக்கும் தண்டபாவம் என்று பெயர் பெற்ற புண்ணிய தீர்த்தம் ஒன்று உள்ளது.
அதில் நீராடி வழிபடுவோர் சகல விருப்பங்களையும் இவ்வுலகில் அனுபவித்து முடிவில் முக்தியைப் பெறுகின்றனர்.
அதற்கு தென்பாகத்தில் ஸ்ரீதாமிரபரணியுடன் புண்ணியமான கடனா நதி சேர்கிறாள்.
அந்த கடனா சங்கமத்தில் நீராடி வழிபடுவது விசேஷமான பலனைத் தருகிறது.
இந்த இடத்தில் அந்தர்வாகிணியாக யமுனா நதியும், கடனா நதியும், ஸ்ரீதாமிரபரணியுடன் சேர்வதால் அது முக்கூடல் (தென்திருபுவனம்) என்று கூறப்படுகின்றது.
இம்மூன்று நதிகள் சேரும் திரிவேணி சங்கமத்தில் நீராடி வழிபடுவோன் இவ்வுலகில் சகல விருப்பங்களையும் அனுபவித்து முடிவில் பரமசிவனின் சாயுஜ்யத்தைப் பெறுவான்.
அதற்கு தென்பாகத்தில் சிறப்பான மாண்டவ்ய தீர்த்தம் ஒன்று உள்ளது. அதில் நீராடி வழிபடுவோன் பரிசுத்தமான சத்யலோகத்திற்குச் செல்கிறான்.
தேவேந்திர மோட்ச தீர்த்தத்தின் வட பாகத்தில் விநாயக தீர்த்தம் ஒன்று உள்ளது. இதில் ஒரு தடவையாவது நீராடி வழிபடுவோன் தீர்க்கமான ஆயுளை அடைகிறான்.
சுகமாக வாழ்வான். அதற்கு வடபுறம் நன்மை பல தரும் கர்மதீர்த்தம் ஒன்று உள்ளது. அதைத் தொடுவோர் கர்ம பாசத்தில் இருந்து நீங்கி விடுகின்றனர்.
அதற்கும் சமீபத்தில் வடபாகத்தில் ராட்சசி மோசனம் என்ற சிறந்த தீர்த்தம் உள்ளது. அதைக்கண்டவுடன் மனிதனின் பாவங்கள் எல்லாம் விலகும்.
- இதனால் கங்கை மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து தாமிரபரணி நோக்கி பாய்ந்தது. பின் பார்வதி தேவியை வட்டமிட்டு நின்றது.
- ஆனாலும் பார்வதியின் கோபம் தணியவில்லை. இதனால் கங்கையின் கடமையும் முடியவில்லை.
ஒரு சமயம் அத்திரி மகரிஷியின் சீடர் பிருங்கி முனிவர் மேற்கு தொடர்ச்சி மலைக்கு வந்தார். அங்குள்ள ஆசிரமத்தில் அவர் தவம் இருக்க துவங்கினார்.
இவரின் தவத்தினை மெச்சிய பார்வதி தேவி சிவபெருமானிடம், ''உங்களை நோக்கி ஒரு பக்தர் தவம் இருக்கிறார்.
அவருக்கு அருளாசி வழங்கலாம் வாருங்கள்'' என்றழைத்தார். சிவபெருமானும் அந்த ஆசிரமத்துக்கு வந்து தாயாருடன் ரிஷப வாகனத்தில் காட்சியளித்தார்.
ஆனால் சிவபெருமான் மீது அதிக பற்று கொண்ட பிருங்கி முனிவர் சிவபெருமானை கண்டவுடன் ஆனந்தம் அடைந்து பார்வதிதேவியை தள்ளிவிட்டுவிட்டு சிவனை மட்டும் சுற்றி வணங்கினார்.
இதனால் ஆத்திரமடைந்த பார்வதி தேவி கோபமாகி திருப்புடைமருதூர் தாமிரபரணி கரையில் வடபுறம் வந்து நின்றார்.
உடனே சிவபெருமான் தன் தலையில் உள்ள கங்கையை அவிழ்த்து விட்டு, ''பார்வதி தேவியின் கோபத்தினை தாழ்த்தி அழைத்து வா... அது உடன் கடன்'' என்று அனுப்பிவைத்தார்.
இதனால் கங்கை மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து தாமிரபரணி நோக்கி பாய்ந்தது. பின் பார்வதி தேவியை வட்டமிட்டு நின்றது.
ஆனாலும் பார்வதியின் கோபம் தணியவில்லை. இதனால் கங்கையின் கடமையும் முடியவில்லை.
ஆகவே ''கடன்பட்ட கங்கை நதி கடனா நதி''யாக இங்கே ஓடி கொண்டிருக்கிறது.
- இதன் காரணமாக தாமிரபரணி நதிக்கரை சிவாலயங்களை பற்றிய தெளிவு நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வாழும் மக்களிடம் ஏற்பட்டுள்ளது.
- அந்த வகையில் திருப்புடைமருதூர் புராணமும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பே தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை மூலம் வெளியில் வந்தது.
தாமிரபரணி நதியின் இரு புறங்களிலும் 274 சிவாலயங்களை மகான்களும், சித்தர்களும், மன்னர்களும் உருவாக்கினார்கள்.
இந்த 274 சிவாலயங்களும் ஒவ்வொரு தல புராணத்தையும், சிறப்பையும் தன்னகத்தே கொண்டவை.
இந்த 274 சிவாலயங்களின் தனித்துவமான சிறப்புகளையும், பெருமைகளையும் பல்வேறு புராணங்களில் நம் முன்னோர்கள் பதிவு செய்துள்ளனர்.
அத்தகைய புராணங்களில், தாமிரபரணி மகாத்மியம், நவசமுத்திர மகாத்மியம், சிவசைல மகாத்மியம், திருப்புடை மருதூர் மகாத்மியம், திருக்குற்றால தல புராணம், தென்காசி தலபுராணம், கருவை தல புராணம், திருச்செந்தூர் புராணம் போன்றவை முக்கியமானவை.
இந்த புராணங்கள் மூலம் தாமிரபரணி நதிக்கரை சிவாலயங்களை நாம் துல்லியமாக அறிந்து, புரிந்து கொள்ள முடியும். துரதிர்ஷ்டவசமாக கடந்த பல நூற்றாண்டுகளாக இந்த புராணங்களை தமிழர்கள் குறிப்பாக தென்பாண்டி மக்கள் சுத்தமாக மறந்து அல்லது தெரியாமலேயே போய்விட்டனர்.
சமீப காலமாக இந்த புராணங்கள் குறித்து மக்கள் மத்தியில் சற்று ஆர்வம் வந்துள்ளது.
இதன் காரணமாக தாமிரபரணி நதிக்கரை சிவாலயங்களை பற்றிய தெளிவு நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வாழும் மக்களிடம் ஏற்பட்டுள்ளது.
அந்த வகையில் திருப்புடைமருதூர் புராணமும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பே தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை மூலம் வெளியில் வந்தது.
உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், திருப்புடைமருதூர் புராணத்தை மீண்டும் அச்சிட்டு வெளியிட்டது.
திருப்புடைமருதூர் புராணம் அருமையான தமிழ் இலக்கியமாகும். திருமால், பிரம்மன், இந்திரன் மற்றும் பலர் திருப்படைமருதூர் வந்து வரம் பெற்ற தகவல்கள் இந்த புராணத்தில் இடம் பெற்றுள்ளன.
ராமனே சீதையைப் பிரிந்தபோது, இந்த தலத்துக்கு வந்து வழிபட்டான் என்றும், ராமனிடம் நாறூம்பூநாதர், 'நீ உன் தேவியைப் பெறுவாய்...' என்று வரம் வழங்கி ஆசிர்வதித்தார் என்றும் இந்த புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ராமாயணக் கதையின் பெரும்பகுதி திருப்புடைமருதூர் புராணத்தின் வீரமார்த்தாண்டப் படலத்தில் உள்ளது.
இந்த புராணம் கடவுள் வாழ்த்து, பாயிரம், அவையடக்கம், கயிலைச் சிறப்பு, நாட்டுப்படலம், நகரப் படலம், தல விசேடம், தீர்த்த விசேடம், மூர்த்தி விசேடம், நடம்புரி படலம், விருத்திர வதைப்படலம், இந்திரன் பழிதீர்த்த படலம், சீதரப்படலம், ஆதி மனுப்படலம், ஆலயம் காண்படலம், சதுமுகப் படலம், பதியத்தி தீர்ந்த படலம், அவிர்த்தானப் படலம், வால சதானந்தப் படலம், புறமதம் தீர்த்த படலம், அலதந்தப் படலம், கருவூர்ச் சித்தப்படலம், அகத்தியப் படலம், தாரக உபதேசப் படலம், வீரமார்த்தாண்டப் படலம், தாம்பிர வன்னிப் படலம், ஆத்தி வனப் படலம், புட்வ வனப் படலம், அரிகைப் படலம், மூன்றீசுவரப் படலம் என்று பிரிக்கப்பட்டுள்ளது.
- எண்ணற்ற சித்தர்கள் வாழும் பூமியாகவும் திருவண்ணாமலை திகழ்கிறது.
- பிரம்மா, விஷ்ணு ஆகியோரின் ஆணவம் அழிந்த தலம்.
காசியில் இறந்தால் முக்தி, திருவாரூரில் பிறந்தால் முக்தி. சிதம்பரத்தை தரிசித்தால் முக்தி. ஆனால் திருவண்ணாமலையில் அருள்பாலிக்கும் அண்ணாமலையாரை நினைத்தாலே முக்தி கிடைக்கும் என்பது சொல் வழக்கு.
பஞ்சபூதத்தில் இது அக்னி தலம். சிவனே மலையாக அமைந்திருக்கும் சிறப்பு மிக்கதலமாக இதுபோற்றப்படுகிறது. அர்த்த நாரீஸ்வரர் கோலத்தில் இறைவன் காட்சி தந்த தலம், கார்த்திகை தீப வழிபாடு உருவாக காரணமான மூல தலம்.

பிரம்மா, விஷ்ணு ஆகியோரின் ஆணவம் அழிந்த தலம் என்று பல்வேறு சிறப்புகளைக் கொண்டிருக்கிறது. திருவண்ணாமலை.
அதேநேரம் எண்ணற்ற சித்தர்கள் வாழும் பூமியாகவும் திருவண்ணாமலை திகழ்கிறது. எத்தனையோ சிவ தலங்கள் இருப்பினும் சித்தர்கள் பலரும் தவம் செய்யவும், ஜீவசமாதி அடையவும் திருவண்ணாமலையையே தேர்வு செய்திருக்கிறார்கள்.
திருவண்ணாமலை ஆன்மிக பூமியாக மட்டுமின்றி, சித்தர்கள் அருவமாக வாழும் பூமியாகவும் இருக்கிறது. திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் ஏற்றப்படும் மலையானது, எப்போது தோன்றியது என்ற துல்லியமான கணிப்பு இதுவரை இல்லை.
பிரபஞ்சம் தோன்றியதில் இருந்தே இந்த மலை இருப்பதாகவும், இந்த மலை ஒவ்வொரு யுகத்திலும், ஒவ்வொரு விதமாக காட்சி தருவதாகவும் சொல்லப்படுகிறது.
கிருதாயுகத்தில் அக்னி மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபர யுகத்தில் தாமிர மலையாகாவும் இருந்த இந்த சிவன் மலை, தற்போதைய கலியுகத்தில் கல் மலையாக நம் கண்களுக்கு காட்சி தருகிறது.

'அண்ணுதல்' என்றால் 'நெருங்குதல்' என்று பொருள். 'அண்ணாமலை' என்பதற்கு நெருங்கவே முடியாத' என்ற பொருளை தருகிறது. பிரம்மாவாலும், விஷ்ணுவாலும் சிவனின் அடியையும். முடியையும் நெருங்கவே முடியாததால் 'அண்ணாமலை' என்ற பெயர் பெற்றது.
'அருணம்' என்றால் சிவப்பு நிறத்தில் இருக்கும் நெருப்பு, 'சலம்' என்றால் மலையைக் குறிக்கும். சிவபெருமான் சிவப்பு நிறத்தில் - எரியும் நெருப்பு மலையாக இருப்பதால் சிவபெருமானுக்கு அருணாச்சலேஸ்வரர்' என்ற பெயர் வந்தது.






