என் மலர்tooltip icon

    அமெரிக்கா

    • குவாட் உலக நன்மைக்கான ஒரு சக்தியாகத் தொடரும்.
    • ஒத்துழைப்பை தீவிரப்படுத்துவதன் முக்கியத்துவத்தை ஒப்புக் கொண்டோம்.

    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் டிரம்பின் பதவியேற்பு விழாவில் இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கலந்து கொண்டார்.

    இந்த நிலையில் அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய குவாட் அமைப்பின் கூட்டம் அமெரிக்காவில் நடந்தது. இதில் அந்தந்த நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகள் கலந்து கொண்டனர்.


    அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரியாக பதவியேற்ற மார்கோ ரூபியோவுடன் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பு ஒரு மணி நேரத்துக்கு மேல் நடந்தது.

    அதேபோல் மார்கோ ரூபியோவை ஆஸ்திரேலியா மந்திரி பென்னி வோங், ஜப்பான் மந்திரி இவாயா தகேஷி ஆகியோரும் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

    இதுகுறித்து எஸ்.ஜெய்சங்கர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறும்போது, வாஷிங்டனில் பயனுள்ள குவாட் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டேன். பெரியதாக சிந்திப்பது, நிகழ்ச்சி நிரலை ஆழப்படுத்துவது மற்றும் எங்கள் ஒத்துழைப்பை தீவிரப்படுத்துவதன் முக்கியத்துவத்தை ஒப்புக் கொண்டோம்.

    இன்றைய சந்திப்பு, நிச்சயமற்ற மற்றும் நிலையற்ற உலகில், குவாட் உலக நன்மைக்கான ஒரு சக்தியாகத் தொடரும் என்பதற்கான தெளிவான செய்தியை அனுப்புகிறது என்றார்.

    • 47-வது அதிபராக டொனால்டு டிரம்ப் நேற்று முன்தினம் பதவியேற்றார்.
    • அதிரடியாக பல்வேறு உத்தரவுகளில் கையெழுத்திட்டார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்டு டிரம்ப் நேற்று முன்தினம் பதவியேற்றார். அவர் பதவியேற்றதும் அதிரடியாக பல்வேறு உத்தரவுகளில் கையெழுத்திட்டார்.

    பாரீஸ் பருவநிலை ஒப்பந்தம், உலக சுகாதார அமைப்பு ஆகியவற்றில் இருந்து அமெரிக்கா விலகல், பாராளுமன்ற கலவர வழக்கில் 1500 பேருக்கு பொது மன்னிப்பு, சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்க நடவடிக்கை உள்ளிட்ட பல உத்தரவுகளில் கையெழுத்திட்டார்.

    மேலும் பிறப்பின் அடிப்படையில் குடியுரிமை வழங்குவது ரத்து செய்யப்படும் என்று டிரம்ப் தெரிவித்தார்.


    இந்தநிலையில் அமெரிக்காவில் வெளிநாட்டினர் பணிபுரிய வழங்கப்படும் எச்-1பி விசாவை நிறுத்த விரும்பவில்லை என்று டிரம்ப் தெரிவித்துள்ளார். அவர் வெள்ளை மாளிகையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது, எச்-1பி விசா தொடர்பாக நடக்கும் விவாதம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்து டிரம்ப் கூறியதாவது:-

    எச்-1பி விசா தொடர்பான விவாதத்தின் இரு பக்கங்களையும் நான் விரும்புகிறேன். ஆனால் நம் நாட்டிற்குள் வரும் மிகவும் திறமையான மக்களையும் நான் விரும்புகிறேன். இதனால் எச்-1பி விசாவை நிறுத்த விரும்பவில்லை. நான் என்ஜினீயர்களைப் பற்றி மட்டும் பேசவில்லை. அனைத்து மட்டங்களில் உள்ளவர்களைப் பற்றியும் பேசுகிறேன்.

    திறமையான மக்கள் நம் நாட்டிற்குள் வர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். மேலும் எச்-1பி திட்டத்தை நான் நன்கு அறிவேன். நான் இந்த திட்டத்தைப் பயன்படுத்துவேன் என்றார்.

    சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்க வேண்டும். கனடா, மெக்சிகோ நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதலாக 25 சதவீதம் வரி பிப்ரவரி 1-ந்தேதி விதிக்கப்படும் என்று தெரிவித்தார்.

    இந்த நிலையில் சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களின் இறக்குமதிக்கு கூடுதலாக 10 சதவீத வரி விதிக்க பரிசீலித்து வருவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    • நீதிமன்றங்களில் வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளன.
    • வெள்ளை மாளிகை தரப்பில் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.

    ஜனநாயகக் கட்சிகள் தலைமை வகிக்கும் மாநிலங்கள் மற்றும் அடிப்படை உரிமைகள் குழுக்கள் அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்த பிறப்புரிமை குடியுரிமையை திரும்பப் பெறும் முயற்சியை எதிர்த்து வழக்குகளை தாக்கல் செய்துள்ளன.

    இவ்வாறு செய்வதன் மூலம் டிரம்ப்-இன் எதிரிகள் நீதிமன்றத்தில் அவரது நிகழ்ச்சி நிரலைத் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். கடந்த திங்கட்கிழமை பதவியேற்ற பிறகு, குடியரசு கட்சியை சேர்ந்த டிரம்ப், அமெரிக்காவில் பிறந்த குழந்தைகளின் தாய் அல்லது தந்தை அமெரிக்க குடிமகனாகவோ அல்லது சட்டப்பூர்வ நிரந்தர குடியிருப்பாளராகவோ இல்லாவிட்டால் அவர்களின் குடியுரிமையை அங்கீகரிக்க மறுக்குமாறு அமெரிக்க நிறுவனங்களுக்கு உத்தரவிட்டார்.

    கொலம்பியா மாவட்டம் மற்றும் சான் பிரான்சிஸ்கோ நகரத்துடன் இணைந்து 22 ஜனநாயக கட்சி தலைமை வகிக்கும் மாநிலங்கள், டிரம்ப் அமெரிக்க அரசியலமைப்பை மீறியதாக பாஸ்டன் மற்றும் சியாட்டிலில் உள்ள நீதிமன்றங்களில் வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளன.

    இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக பதவியேற்ற டிரம்ப் குடியிரிமை குறித்த நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்ட சில மணி நேரங்களில் அவரது நிர்வாகத்திற்கு எதிராக நீதிமன்ற போராட்டங்களை எதிர்கொள்ள துவங்கியுள்ளது.

    டிரம்ப்-இன் உத்தரவுகள் அமலுக்கு வரும் பட்சத்தில், அமெரிக்காவில் ஆண்டுதோறும் பிறக்கும் 1.5 லட்சத்திற்கும் அதிக குழந்தைகளுக்கு முதல் முறையாக குடியுரிமை பெறும் உரிமை மறுக்கப்படும் என்று அட்டார்னி ஜெனரல் ஆண்ட்ரியா ஜாய் கேம்பெல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

    இது குறித்து வெள்ளி மாளிகை தரப்பில் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.

    • ரஷியா மீது தடைகள் விதிக்கப்படும்.
    • பொது மக்கள் அதிகளவில் கொல்லப்பட்டுள்ளனர்.

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ரஷிய அதிபர் விளாடிமிர் புட்டினை எந்த நேரத்திலும் சந்திக்க தயாராக இருப்பதாக கூறினார். மேலும் உக்ரைன் பிரச்சினையில் பேச்சுவார்த்தைக்கு ரஷியா வரவில்லை என்றால் ரஷியா மீது தடைகள் விதிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

    "உங்களிடம் திறமை இருந்தால் போர் துவங்கி இருக்காது. நான் அதிபராக இருந்திருந்தால், உக்ரைனில் போர் நடைபெற்றிருக்காது. ரஷியா ஒருபோதும் உக்ரைனுக்குள் சென்றிருக்காது. எனக்கு புதினுடன் நல்ல புரிதல் உள்ளது. அது நிச்சயம், நடந்திருக்காது. அவர் பைடனை அவமதித்தார்" என்று டிரம்ப் கூறினார்.

    புதினை சந்திப்பது குறித்து கேள்விக்கு பதில் அளித்த டிரம்ப், "அவர்கள் எப்போது நினைத்தாலும், நான் சந்திக்கிறேன். பல லட்சம் மக்கள் கொல்லப்படுகின்றனர். இது மிகவும் கொடூரமான சூழ்நிலை, தற்போது அவர்கள் வீரர்கள். பொது மக்கள் அதிகளவில் கொல்லப்பட்டுள்ளனர், நகரங்கள் அழிக்கப்பட்டு இடிபாடு தளங்கள் போல காட்சியளிக்கின்றன," என்று தெரிவித்தார்.

    • அரசின் செயல்திறனை மேம்படுத்தும் முகமை DODGE.
    • DODGE இணை தலைவராக தொடர முடியாததால் அவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்

    அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்டு டிரம்ப் திங்கள் கிழமை (இந்திய நேரப்படி நேற்றிரவு) பதவியேற்றுக் கொண்டார். பதவியேற்பு விழா வாஷிங்டனில் உள்ள கேபிட்டல் ஒன் அரங்கில் நடைபெற்றது.

    இந்நிலையில் டிரம்ப் பதவியேற்ற சில மணிநேரங்களிலேயே அவர் உருவாக்கிய DODGE துறையின் இணை தலைவராக நியமிக்கப்பட்ட விவேக் ராமசாமி (39 வயது) பதவி விலகியுள்ளார்.

    அரசின் செயல்திறனை மேம்படுத்தும் முகமை DODGE. புதிதாக உருவான இந்த துறையின் தலைவர்களாக உலக பணக்காரருக்கு டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் உள்ளிட்டவற்றின் நிறுவனருமான எலான் மஸ்க் மற்றும் இந்திய-அமெரிக்க தொழிலதிபரும் அரசியல்வாதியுமான விவேக் ராமசுவாமி நியமிக்கப்பட்டனர்.

    இருவரும் நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்புக்கு ஆதரவாக தீவிரமாக செயல்பட்டனர். முதலில் டிரம்பை எதிர்த்து போட்டியிட முனைந்த ராமசாமி, பின்னர் அந்த போட்டியில் இருந்து விலகி டிரம்ப் ஆதரவாளர்களில் ஒருவராக மாறினார்.

    இவர்களின் ஆதரவை அங்கீகரிக்கும் விதமாகவே டிரம்ப் DODGE துறையை உருவாக்கி இவர்களை தலைவர்களாக்கினார். ஆனால் தற்போது விவேக் ராமசாமி பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.

     

    இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராமசாமி, DOGE ஐ உருவாக்க உதவும் வாய்ப்பு, எனக்கு கிடைத்த மரியாதை. அரசாங்கத்தை சீரமைப்பதில் எலான் மஸ்க் & குழு வெற்றிபெறும் என்று நான் நம்புகிறேன்.

    ஓஹியோவில் எனது எதிர்காலத் திட்டங்களைப் பற்றி நான் மிக விரைவில் கூறுவேன். மிக முக்கியமாக, அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக மாற்ற அதிபர் டிரம்பிற்கு உதவ நாங்கள் அனைவரும் தயாராக இருக்கிறோம்! என்று தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

    ஓஹியோ மாகாண கவர்னர் பதவிக்கு விவேக் ராமசாமி போட்டியிட திட்டமிட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனால் DODGE இணை தலைவராக தொடர முடியாததால் அவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் என்று கூறப்படுகிறது. 2026 ஆம் ஆண்டு கவர்னர் தேர்தல் நடைபெறுகிறது.

    அவுட்பேக் இணையதளத்திற்கு அளித்த பேட்டியில் ராமசாமி, "ஓஹியோவில் உள்ள மக்கள் என்னை கவர்னர் பதவிக்கு போட்டியிட அதிகளவில் வற்புறுத்துகின்றனர். அதை நான் ஏன் கருத்தில் கொள்ளக்கூடாது?" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • இல்லையெனில் ரஷியாவுக்கு பெரிய சிக்கல் ஏற்படும்.
    • நான் அவருடன் நன்றாகப் பழகினேன்.

    அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்டு டிரம்ப் திங்கள் கிழமை (இந்திய நேரப்படி நேற்றிரவு) பதவியேற்றுக் கொண்டார். பதவியேற்பு விழா வாஷிங்டனில் உள்ள கேபிட்டல் ஒன் அரங்கில் நடைபெற்றது. இதில் உலக தலைவர்கள், தொழிலதிபர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    பதிவேற்றபின் அடுத்தடுத்த அதிரடி அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. 42 முக்கிய ஆவணங்களிலும், பல நிர்வாக ரீதியான உத்தரவுகள் என 100க்கும் மேற்பட்டவற்றில் கையொப்பம் இட்டுள்ளார். அமெரிக்கவில் ஆண், பெண் இருபாலாருக்கு மட்டுமே அனுமதி, உலக சுகாதார அமைப்பிலிருந்து வெளியேறுவது உள்ளிட்ட முக்கிய முடிவுகளும் அதில் அடங்கும்.

    இந்நிலையில் பதவியேற்றபின் உக்ரைன் போர் குறித்தும் ரஷியாவை கடுமையாக டிரம்ப் சாடியுள்ளார்.

    2022 பிப்ரவரி தொடங்கி உக்ரானில் ஏறக்குறைய சுமார் 3 ஆண்டுகளாக நடந்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வரும் ஒப்பந்தத்துக்கு ரஷிய அதிபர் புதின் இணங்க வேண்டும் என்றும்,  இல்லையெனில் ரஷியாவுக்கு பெரிய சிக்கல் ஏற்படும் என்றும் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    தனது ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதின் ஒரு ஒப்பந்தத்திற்கு வர வேண்டும், ஒப்பந்ததிற்கு இணங்காமல் அவர் ரஷியாவை அழிக்கிறார் என்று நான் நினைக்கிறேன். பணவீக்கம் உள்ளிட்டவற்றால் ரஷியப் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது என்று டிரம்ப் கூறியுள்ளார்.

    மேலும்  புடினைச் சந்திக்கவும் டிரம்ப் விருப்பம் தெரிவித்துள்ளார். தனது முந்தைய ஆட்சிக் காலத்தை [2016-20] நினைவு கூர்ந்த டிரம்ப், புதினுடன் உச்சிமாநாட்டில் பங்கேற்றதுபற்றி குறிப்பிட்டார். "நான் அவருடன் நன்றாகப் பழகினேன். அவர் ஒப்பந்தம் செய்ய விரும்புகிறார் என்று நான் நம்புகிறேன்" என்று டிரம்ப் கூறினார்.

    போரை முடிவுக்குக் கொண்டுவர அமைதி ஒப்பந்தம் தேவை என்று உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தன்னிடம் கூறியதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    மேற்கத்திய நாடுகள் அடங்கிய நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன் இணைந்தால் தங்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்று கூறி ரஷியா உக்ரைன் மீது போர் தொடுத்தது குறிப்பிடத்தக்கது.

    • அமெரிக்கா இரண்டாவது முறையாக உத்தரவிட்டுள்ளது.
    • டஜன் கணக்கான நிர்வாக நடவடிக்கைகளில் கையெழுத்திட்டார்.

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், உலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்காவை விலக்கிக் கொள்ள செய்யும் நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளுக்குள் உலக அமைப்பிலிருந்து விலகுவதாக அமெரிக்கா இரண்டாவது முறையாக உத்தரவிட்டுள்ளது.

    குடியேற்றம் முதல் வெளியுறவுக் கொள்கை, பேச்சு சுதந்திரம், காலநிலை மாற்றம் வரையிலான பிரச்சினைகள் குறித்து இரண்டாவது முறையாக அதிபராக பதவியேற்ற டிரம்ப் டஜன் கணக்கான நிர்வாக நடவடிக்கைகளில் கையெழுத்திட்டார்.

    தனது முதல் பதவிக் காலத்தின் இறுதி ஆண்டில் உலகளாவிய சுகாதார நெருக்கடியாக உருவெடுத்த கொரோனா பெருதொற்றுக்கு உலக சுகாதார அமைப்பு செயல்பட்ட விதத்திற்கு 2020-ம் ஆண்டு டொனால்டு டிரம்ப் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

    "உலக சுகாதார அமைப்பு அமெரிக்காவிடம் இருந்து நியாயமற்ற முறையில் கடுமையான தொகையை தொடர்ந்து கோருகிறது. இது மற்ற நாடுகளின் மதிப்பிடப்பட்ட தொகையுடன் ஒப்பிடும்போது மிகவும் அதிகம். 1.4 பில்லியன் மக்கள்தொகை கொண்ட சீனா, அமெரிக்காவை விட 300 சதவீதத்தை மக்கள் தொகை கொண்டுள்ளது. ஆனால் உலக சுகாதார அமைப்புக்கு கிட்டத்தட்ட 90 சதவீதம் குறைவாகவே பங்களிக்கிறது," என்று உலக சுகாதார அமைப்பில் இருந்து விலகுவது குறித்து அமெரிக்கா கூறியுள்ளது.

    டிரம்பின் உத்தரவைத் தொடர்ந்து உலக சுகாதார அமைப்பு நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர் நிதியை இழக்க உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சட்டவிரோத குடியேற்றத்தை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
    • அரசு ஊழியர்கள் உடனே அலுவலகத்திற்கு திரும்ப வேண்டும்.

    அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்டு டிரம்ப் திங்கள் கிழமை (இந்திய நேரப்படி நேற்றிரவு) பதவியேற்றுக் கொண்டார். பதவியேற்பு விழா வாஷிங்டனில் உள்ள கேபிட்டல் ஒன் அரங்கில் நடைபெற்றது. இதில் உலக தலைவர்கள், தொழிலதிபர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபர் பதவியேற்றுள்ள டொனால்டு டிரம்ப் முதல் நாளிலேயே ஏராளமான அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி அமெரிக்கா பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறும் என்று அறிவித்துள்ளார். மேலும், அமெரிக்காவில் இனி ஆண் மற்றும் பெண் என இரண்டு பாலினங்கள் மட்டும் அங்கீகரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

    அதிபர் டிரம்ப் பதவியேற்ற முதல் நாளில் வெளியிட்ட அறிவிப்புகள்:

    அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறி இருப்பவர்கள் உடனடியாக வெளியேற்றப்படுவார்கள். சட்டவிரோத குடியேற்றத்தை முற்றிலுமாக நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

    வீட்டில் இருந்து பணியாற்றி வரும் அரசு ஊழியர்கள் உடனே அலுவலகத்திற்கு திரும்ப வேண்டும். வாரத்திற்கு ஐந்து நாட்கள் அவர்கள் கட்டாயம் அலுவலகம் வந்து பணியாற்ற வேண்டும். இதற்கு மறுப்பு தெரிவிக்கும் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள்.

    அமெரிக்காவில் போதை பொருள் கலாச்சாரம் ஒழிக்கப்படும். போதை பொருட்களை விற்பனை செய்வோர் பயங்கரவாதிகளாக வகைப்படுத்தப்பட்டு அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    பனாமா கால்வாய் கட்டுப்பாட்டை மீட்டெடுக்க தனி திட்டம் உருவாக்கப்படும். விரைவில் இது தொடர்பான அறிவிப்புகள் வெளியிடப்படும். மெக்சிகோ வளைகுடா அமெரிக்கா வளைகுடா என்று பெயர் மாற்றப்படும். பிறப்புரிமைக் குடியுரிமையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு தனி திட்டம் வகுக்கப்படும்.

    ஏற்கனவே அறிவித்ததை போல் பாலின வேறுபாடு முடிவுக்கு கொண்டுவரப்படும். அமெரிக்க அரசு ஆண் மற்றும் பெண் என்ற இரு பாலினங்களை மட்டும் தான் அங்கீகரிக்கும். இது அரசின் அதிகாரப்பூர்வ கொள்கை முடிவு.

    சீனா, கனடா மற்றும் மெக்சிகோவில் இருந்து வரும் இறக்குமதிக்கு புதிய வரிகள் விதிக்கப்படும். கனடா மற்றும் மெக்சிகோ தயாரிப்புகள் மீது 25% வரி விதிக்கப்படும். சீன பொருட்களுக்கான வரி குறித்து எந்த தகவலும் தற்போது வெளியிடப்படவில்லை. இந்த நடவடிக்கை பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும்.

    மற்ற நாடுகளில் வரி விதித்து வர்த்தக அமைப்பில் சில சீர்திருத்தங்களை மேற்கொள்ப்படும். அமெரிக்க மக்களின் நலன் கருதி நிதி மற்றும் வரி சார்ந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இதன் மூலம் அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும்.

    அரசு கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்படும். அமெரிக்க மக்களுக்கு மீண்டும் பேச்சு சுதந்திரம் கொண்டு வரப்படும். அனைத்து மக்களும் மின்சார வாகனம் (EV) தான் வாங்கியாக வேண்டும் என்ற கட்டுப்பாடு நீக்கப்படும். மக்கள் தங்களுக்கு விருப்பமான வாகனங்களை வாங்கி கொள்ளலாம்.

    எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியில் அமெரிக்கா தன்னிறைவு அடைய நவடிக்கை எடுக்கப்படும். இதற்காக எரிசக்தி செலவை குறைத்தல், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதை குறைக்க தேசிய எரிசக்தி அவசரநிலை கொண்டுவரப்படும்.

    உள்நாட்டு எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கும் போது, மக்களுக்கு குறைந்த விலையில் அவற்றை வழங்க முடியும். இது அமெரிக்காவிற்கும் பலன் தரும்.

    • ஏற்கனவே டிரம்ப் இதேபோன்ற அறிவிப்பை வெளியிட்டார்.
    • இலக்குகள் காலப்போக்கில் மிகவும் கடுமையானதாக மாறும்.

    பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்காவை விலக்கிக் கொள்வதாக அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். உலகில் அதிகளவு கார்பன் மாசு ஏற்படுத்தும் நாடான அமெரிக்கா காலநிலை ஒப்பந்தத்தில் இருந்து விலகும் முடிவு, புவி வெப்பமயமாதலை எதிர்த்து போரிடும் உலகளாவிய முயற்சிகளுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்றும் அமெரிக்காவை அதன் நெருங்கிய கூட்டாளிகளிடம் இருந்து விலக செய்யும் என்று கூறப்படுகிறது.

    அமெரிக்காவின் அதிபராக இரண்டாவது முறையாக திங்கள் கிழமை பதவியேற்ற அதிபர் டொனால்டு டிரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். முன்னதாக கடந்த 2017-ம் ஆண்டு அதிபர் பதவியில் இருந்தபோதும் டிரம்ப் இதேபோன்ற அறிவிப்பை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    2015 பாரிஸ் ஒப்பந்தம் தன்னார்வமானது. இது நிலக்கரி, எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை எரிப்பதன் மூலம் ஏற்படும் பசுமை வாயுக்களின் வெளியேற்றத்தைக் குறைப்பதற்கான இலக்குகளை நாடுகளே வழங்க அனுமதிக்கிறது.

    அந்த இலக்குகள் காலப்போக்கில் மிகவும் கடுமையானதாக மாறும், நாடுகள் புதிய தனிப்பட்ட திட்டங்களை பிப்ரவரி 2025-க்குள் அறிவிக்க வேண்டும் என்ற காலக்கெடுவை எதிர்கொள்கின்றன.

    சமீபத்தில் வெளியேறிய ஜோ பைடன் தலைமையிலான நிர்வாகம் 2035 ஆம் ஆண்டுக்குள் அமெரிக்க பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தை 60 சதவீதத்திற்கும் அதிகமாகக் குறைக்கும் திட்டத்தை கடந்த மாதம் வழங்கியது.

    • அமெரிக்கர்களின் பாதுகாப்பு மீட்டெடுக்கப்படும்.
    • எனது வெற்றி அமெரிக்கா முழுமைக்கும் ஆனது.

    அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றார். இதன்பின்னர் பொதுமக்களுக்கு அவர் ஆற்றிய உரையில்,

    ஜனவரி 20-ஆம் தேதி தான் அமெரிக்காவுக்கு விடுதலை நாள். அமெரிக்காவின் பொற்காலம் தொடங்குகிறது. உலகம் மதிக்கப்படும் அமெரிக்கா மாறும். இதுவரை இல்லாத அமெரிக்காவைக் கட்டமைப்பேன்

    என்னுடைய உயிர் ஒரு காரணத்திற்காகவே காக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவை சிறந்ததாக மாற்றுவதற்காகவே கடவுள் என்னுடைய உயிரை காப்பாற்றியுள்ளார்." என்றார்.

    எனது வெற்றி அமெரிக்கா முழுமைக்கும் ஆனது. அமெரிக்கர்களின் பாதுகாப்பு மீட்டெடுக்கப்படும். அமெரிக்காவுக்கே முதலில் முன்னுரிமை என்பதைச் செயல்படுத்துவேன். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உத்தரவுகள் கையெழுத்திட உள்ளேன்" என்று கூறினார்.

    • கலிபோர்னியா காட்டுத்தீ பெரும் பணக்காரர்களையும் வீதியில் நிறுத்தி விட்டது.
    • அமெரிக்காவில் சட்ட விரோத குடியேற்றம் உடனடியாக தடுத்து நிறுத்தப்படும்"

    அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றுக்கொண்டார்.

    பதவியேற்ற பிறகு டிரம்ப் கூறியாதவது:-

    அமெரிக்காவில் இந்த நொடி முதல் சுதந்திரம் பிறந்திருக்கிறது

    கலிபோர்னியா காட்டுத்தீ பெரும் பணக்காரர்களையும் வீதியில் நிறுத்தி விட்டது.

    தேசிய அளவிலான அவசர நிலை தென் எல்லைகளில் பிரகடனம்.

    பலம் மிகுந்த, சுதந்திரமான, நம்பிக்கையான தேசத்தை உருவாக்குவதே நோக்கம்.

    இதற்கு முன் எப்போதும் கிடைக்காத வாய்ப்பு அமெரிக்காவுக்கு கிடைத்திருக்கிறது

    அமெரிக்காவில் சட்ட விரோத குடியேற்றம் உடனடியாக தடுத்து நிறுத்தப்படும்"

    இவ்வாறு அவர் கூறினார்.

    • டொனால்ட் டிரம்ப் பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
    • கேப்பிடல் எனப்படும் பாராளுமன்ற கட்டடத்தில் பதவியேற்பு விழா நடைபெற்றது.

    அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 5ம் தேதி நடைபெற்ற அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்டு டிரம்ப் இன்று பதவியேற்றுள்ளார்.

    அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளராக போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயகக் கட்சி வேட்பாளரும் முன்னாள் துணை அதிபருமான இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் தேர்தலில் எதிர்பார்த்த வெற்றியை பெற முடியாமல் ஏமாற்றமடைந்தார்.


    இந்நிலையில், 47வது அதிபராக டிரம்ப் இன்று பதவி ஏற்றார். அதன்படி, கேப்பிடல் எனப்படும் பாராளுமன்ற கட்டடத்தில் பதவியேற்பு விழா நடைபெற்றது.

    இதற்காக, டிரம்ப் அமெரிக்க தலைநகரான வாஷிங்டன் டி.சி.க்கு நேற்று முன்தினம் சென்றார். பிறகு, புளோரிடாவின் பாம் பீச்சிலிருந்து வாஷிங்டனுக்கு தனி விமானம் மூலம் தனது மனைவி, மகனுடன் புறப்பட்டுச் சென்றார்.

    அதிபர் டிரம்ப் பதவியேற்பு விழாவில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தொழிலதிபர் அம்பான் மற்றும் அவரது மனைவி நீட்டா அம்பானி உள்பட உலக தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் பலர் கலந்துக் கொண்டனர்.

    ×