என் மலர்
பாலஸ்தீனம்
- இந்த போர் ஓர் ஆண்டுக்கு மேல் தொடர்ந்து நீடித்து வருகிறது.
- இதில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
காசா முனை:
இஸ்ரேல் ராணுவம் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கு இடையிலான போரில் காசாவில் 54 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகினர். சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இந்த போர் ஓர் ஆண்டுக்கு மேல் தொடர்ந்து நீடித்து வருகிறது.
இந்தப் போரால் காசா முனையில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது. காசாவுக்கு பல்வேறு நாடுகள் நிவாரண பொருட்கள் அனுப்பி வருகின்றன. இந்த நிவாரண பொருட்களை அமெரிக்க தொண்டு நிறுவனம் காசாவில் விநியோகித்து வருகிறது.
இதற்கிடையே, காசாவின் ரபாவில் நிவாரண பொருட்களை வாங்க ஏராளமான பாலஸ்தீனியர்கள் குவிந்தனர். அப்போது, திடீரென நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது.
இந்நிலையில், இந்த துப்பாக்கி சூடு தாக்குதலில் காயமடைந்த பலர் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 25 ஆக உயர்ந்தது. மேலும் 70-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர்.
இதுதொடர்பாக, இஸ்ரேல் ராணுவம் கூறுகையில், ராணுவ முகாம் அருகே சந்தேகத்துக்கு இடமான நபர்கள் இருந்ததால் அவர்களை நோக்கி தாக்குதல் நடத்தினோம். ஹமாஸ் போராளிகள் வேண்டுமென்றே உதவி விநியோகத்தை சீர்குலைத்ததாகவும் குற்றம் சாட்டியது.
- உதவி மையம் நோக்கி வந்த மக்களை இஸ்ரேல் ராணுவம் சுட்டுக்கொன்றது.
- 500 மடங்கு அதிக விலைக்கு விற்று வருகின்றனர்.
காசா மீது இஸ்ரேல் போரை நிகழ்த்தி வருகிறது. கடந்த மார்ச் முதல் உணவு மற்றும் உதவிப் பொருட்களை தடுத்து வைத்த இஸ்ரேல் உலக நாடுகளின் அழுத்தத்தை அடுத்து சொற்ப அளவிலான பொருட்களை உள்ளே அனுமதித்தது.
ஆனால் அவற்றை வாங்க உதவி மையம் நோக்கி வந்த மக்களை இஸ்ரேல் ராணுவம் சுட்டுக்கொன்றது. உதவி மையங்களுக்கு சென்றவர்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் உயிரிழப்பு எண்ணிக்கை 100 ஐ கடந்துள்ளது. காசாவில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 54 ஆயிரத்தை தாண்டி உள்ளது.
இந்நிலையில் , காசாவில் சொற்ப அளவில் கிடைக்கும் நிவாரண உதவிகளையும் சிலர் அபகரித்துக் கொண்டு, அவற்றை 500 மடங்கு அதிக விலைக்கு விற்று வருகின்றனர்.
இந்தியாவில் 5 ரூபாய்க்கு விற்கப்படும் பார்லே ஜி பிஸ்கட் காசாவில் 2,342 ரூபாய்க்கு (24 யூரோ) விற்கப்படுகிறது.
ஒரு கிலோ சர்க்கரை ரூ. 4,914 ஆகவும், ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் ரூ, 4,177 , ஒரு கிலோ உருளைக்கிழங்கு ரூ. 1,965 , ஒரு கிலோ ரூ. 4,423 , ஒரு கப் காஃபி ரூ. 1,800 ஆகவும் விற்கப்படுகிறது.
ஒரு புறம் இஸ்ரேல் தாக்குதல், மறுபுறம் மனிதனால் உருவாக்கப்பட்ட பட்டினி என இரு பக்கங்களிலும் காசா மக்கள் மரணத்தை எதிர்கொண்டுள்ளனர்.
- இஸ்ரேலால் காசா மனிதாபிமான அறக்கட்டளை (GHF) மையங்கள் அமைக்கட்டப்பட்டன.
- காசாவில் எஞ்சியிருந்த ஒரே டயாலிசிஸ் மையமும் இஸ்ரேலிய குண்டுவீச்சில் அழிக்கப்பட்டது.
காசாவில் உணவு விநியோகம் என்ற பெயரில் அமெரிக்க ஆதரவுடன் இஸ்ரேலால் தொடங்கப்பட்ட காசா மனிதாபிமான அறக்கட்டளை (GHF) மையங்கள் கொலைக்களங்களாக மாறி வருகின்றன.
கடுமையான தீ விபத்தில் சிக்கிய ரஃபா ஜி.எச்.எஃப் முகாமில் சமீபத்தில் உணவு தேடி வந்த பொதுமக்கள் மீது இஸ்ரேலிய விமானத் தாக்குதல்களில் மூன்று பேர் கொல்லப்பட்டனர்.
மே 27 முதல் GHF முகாம்கள் நோக்கி வரும் மக்கள் மீதான இஸ்ரேலிய தாக்குதல்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை 51 ஆக உயர்ந்துள்ளது. 340 பேர் காயமடைந்துள்ளனர்.
ஜபாலியா அகதிகள் முகாம் மீதான தாக்குதலில் ஐந்து பெண்கள் மற்றும் ஏழு குழந்தைகள் உட்பட 14 பேர் கொல்லப்பட்டனர், இதனால் பலி எண்ணிக்கை 54,418 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையில், காசாவில் எஞ்சியிருந்த ஒரே டயாலிசிஸ் மையமும் இஸ்ரேலிய குண்டுவீச்சில் அழிக்கப்பட்டது.
- ஐநா உள்ளிட்ட அமைப்புகளை மட்டுப்படுத்தி இஸ்ரேல் - அமெரிக்கா இணைத்து உதவி மையங்களை நிறுவி வருகிறது.
- விடியற்காலையில் ஆயிரக்கணக்கான மக்கள் விநியோக தளத்திற்கு சில மணிநேரங்களுக்கு முன்பே சென்றனர்.
கசாவுக்குள் கடந்த மார்ச் முதல் எந்த உணவு மற்றும் உதவி பொருளும் செல்வதை இஸ்ரேல் தடுத்து வைத்து காசா மக்களை பட்டினி போட்டது. இஸ்ரேலின் இந்த மிருகத்தனத்தை சர்வதேச சமூகம் கண்டித்த நிலையில் பல்வேறு அழுத்தத்துக்கு பின் தற்போது உதவி பொருட்கள் செல்ல இஸ்ரேல் அனுமதித்துள்ளது.
ஆனால் ஐநா உள்ளிட்ட அமைப்புகளை மட்டுப்படுத்தி இஸ்ரேல் - அமெரிக்கா இணைத்து உதவி மையங்களை நிறுவி வருகிறது. பசியால் துடிக்கும் காசா மக்களை அங்கு வரவழைப்பதன்மூலம் அவர்களை வாழ்விடங்களை விட்டு இஸ்ரேல் வெளியேற்ற முயற்சிக்கிறது என சர்வதேச அமைப்புகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்நிலையில், இன்று அதிகாலை இஸ்ரேலிய ஆதரவு பெற்ற அறக்கட்டளை நடத்தும் உதவி விநியோக மையத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் மக்கள் கூட்டத்தின் மீது இஸ்ரேலியப் படைகள் பீரகிங்கி மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தியது.
இதில் இரண்டு பெண்கள் உட்பட குறைந்தது 25 பேர் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சகத்தின் பதிவுத் துறைத் தலைவர் சஹர் அல்-வஹிதி தெரிவித்தார்.

விடியற்காலையில் ஆயிரக்கணக்கான மக்கள் விநியோக தளத்திற்கு சில மணிநேரங்களுக்கு முன்பே சென்றனர். இஸ்ரேலிய இராணுவம் அவர்களை கலைந்து சென்று பின்னர் திரும்பி வருமாறு உத்தரவிட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
செஞ்சிலுவைச் சங்கத்தால் நடத்தப்படும் ஒரு மருத்துவமனையின் அதிகாரிகள், குறைந்தது 21 பேர் கொல்லப்பட்டதாகவும், 175 பேர் காயமடைந்ததாகவும் தெரிவித்தனர். செய்தியாளர்களிடம் பேசுவதற்கு அதிகாரிகளுக்கு அதிகாரம் இல்லாததால், பெயர் வெளியிட விரும்பாத நிலையில் அவர்கள் பேசியதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், இஸ்ரேலிய இராணுவம் முன்னதாகவே எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு நடத்தியதாக ஒப்புக்கொண்டுள்ளது.
- ஒரு மாதத்திற்கு மேலாக உணவுப் பொருட்கள் செல்ல இஸ்ரேல் தடைவிதித்திருந்தது.
- உலக நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவிக்க இஸ்ரேல் அனுமதி அளித்துள்ளது.
காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ஒரு மாதத்திற்கு மேலாக உணவுப் பொருட்கள் கொண்டு செல்வதற்கு தடைவிதித்தது. இதனால் பாலஸ்தீனத்தில் உள்ள குழந்தைகள் உள்பட ஏராளமானோர் பசியால் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டது.
இதனால் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்து வந்த முக்கியமான நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனைத்தொடர்நது காசா முனைக்கு உணவுப்பொருட்களை எடுத்துச்செல்ல ஐ.நா-வுக்கு இஸ்ரேல் அனுமதி அளித்தது.
இதனைத்தொடர்ந்து 77 கனரக வாகனங்களில் (Trucks) உணவுப் பொருட்கள் உள்ளிட்ட உதவிப் பொருட்களை ஐ.நா. உலக உணவு திட்டம் சார்பில் கொண்டு செல்லப்பட்டது. குறிப்பிட்ட இடத்தை அடைவதற்கு முன்னதாகவே பாலஸ்தீனர்கள் டிரக்குகளை வழிமறித்து தடுத்து நிறுத்தினர்.
அத்துடன் உணவுப் பொருட்களை முண்டியடித்துச் சென்று அள்ளிச் சென்றனர். 12-க்கும் மேற்பட்ட டிரக்குகளில் உள்ள பொருட்கள் அள்ளிச் சென்றதாக ஐ.நா. தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா 60 நாட்களாக போர் நிறுத்த பரிந்துரையை வழங்கியுள்ளது. இதை ஆய்வு செய்வோம் என ஹமாஸ் தெரிவித்துள்ளார். 60 நாட்கள் போர் நிறுத்தம் ஏற்படும் வகையில் அமெரிக்கா பரிந்துரை செய்துள்ளது. அப்போது ஹமாஸ் பிடித்து வைத்திருக்கும் 58 பிணைக் கைதிகளை விடுவிக்க வேண்டும். அதற்குப் பதிலாக இஸ்ரேல் சிறையில் உள்ள பாலஸ்தீனர்களை விடுவிக்க வேண்டும். உதவிப்பொருட்கள் செல்வதற்கு அனுமதி அளிக்க வேண்டும்.
- ஐ.நா மற்றும் பிற மனிதாபிமான அமைப்புகள் இந்த புதிய GHF அமைப்பை நிராகரித்துள்ளன.
- இஸ்ரேல் மக்களை கட்டுப்படுத்த ஒரு ஆயுதமாக உணவைப் பயன்படுத்த இந்த GHF அனுமதிக்கிறது.
உதவி மையத்தின் மீது இஸ்ரேலிய படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் கொல்லப்பட்டார், 48 பேர் காயமடைந்தனர் என்று காசா அதிகாரிகள் தெரிவித்தனர்
கடந்த மார்ச் மாதம் முதல் காசாவுக்குள் எந்த உணவு மற்றும் உதவிப் பொருட்களும் செல்ல விடாமல் இஸ்ரேல் தடுத்தது. இதனால் அங்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்ட சூழலில் பேரழிவை ஏற்படுத்தும் பஞ்சத்தை காசா எதிர்கொள்வதாக சர்வதேச சமூகம் கவலை தெரிவித்தது.
இதைடுத்து கனடா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேலை எதிர்த்து கூட்டாக அறிக்கை விட்டன. தொடர்ந்து வழங்கப்பட்ட அழுத்தத்தால் காசாவுக்குள் சொற்ப அளவிலான உதவிகளை அனுப்ப இஸ்ரேல் வழிவிட்டது.
பல நாட்களாக பட்டினியையும், அத்தியவசிய மற்றும் மருத்துவ பொருட்கள் பற்றாக்குறையையும் எதிர்கொண்ட காசா மக்கள், தங்களுக்கு கிடைக்கும் சொற்ப அளவிலான உதவிப் பொருட்களை பெற்றுக்கொள்ள சாரை சாரையாக உதவி மையங்களை நோக்கி படையெடுக்கின்றனர்.
இந்த சூழலில் இஸ்ரேலிய மற்றும் அமெரிக்க ஆதரவு அறக்கட்டளை Gaza Humanitarian Foundation (GHF) காசா பகுதியில் அமைக்கப்பட்ட புதிய உதவி விநியோக மையத்தை ஆக்கிரமித்த கூட்டத்தின் மீது இஸ்ரேலிய படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் குறைந்தது ஒரு பாலஸ்தீனியர் கொல்லப்பட்டார். மேலும் 48 பேர் காயமடைந்தனர் என்று காசா சுகாதார அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.
பாலஸ்தீன பிரதேசங்களுக்கான ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகத்தின் தலைவர் அஜித் சுங்கை ஜெனீவாவில் செய்தியாளர்களிடம் இந்த் துப்பாக்கிசூட்டால் 47 பேர் காயமடைந்தனர் என்று தெரிவித்தார்.
இதற்கிடையே அமெரிக்க, இஸ்ரேல் பின்னணியில் இயங்கும் GHF அமைப்பு உதவி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் உரிமையை மற்ற அமைப்புகளில் இருந்து கையகப்படுத்தி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
ஹமாஸ் பொருட்களைத் பெறுவதை தடுக்க GHF வலையமைப்பை நிறுவ இஸ்ரேல் உதவியதாகக் கூறுகிறது, நான்கு மையங்களை நிறுவியுள்ளதாக GHF கூறுகிறது, அவற்றில் இரண்டு செயல்படத் தொடங்கியுள்ளன. இந்த உதவி மையங்களுக்கு வேலி அமைக்கப்பட்டு பாதுகாப்பாக ஆயுதமேந்திய வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.
ஐ.நா மற்றும் பிற மனிதாபிமான அமைப்புகள் இந்த புதிய GHF அமைப்பை நிராகரித்துள்ளன. இது காசாவின் 2.3 மில்லியன் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாது என்றும், இஸ்ரேல், மக்களை கட்டுப்படுத்த ஒரு ஆயுதமாக உணவைப் பயன்படுத்த இந்த GHF அனுமதிக்கிறது என்றும் கூறப்படுகிறது.
ஐ.நா. மற்றும் பிற மனிதாபிமான குழுக்கள் GHF இன் அமைப்பில் பங்கேற்க மறுத்துவிட்டன. இந்த அமைப்பு மனிதாபிமானக் கொள்கைகளை மீறுவதாகக் கூறின. சில விநியோக மையங்களுக்கு மக்களை நகர்த்துமாறு கட்டாயப்படுத்துவதன் மூலம் மக்களை வலுக்கட்டாயமாக இடம்பெயரச் செய்ய இஸ்ரேலால் இது பயன்படுத்தலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
- காசாவில் உள்ள 95 சதவீத பள்ளிகளை இஸ்ரேல் தாக்கியுள்ளது.
- இஸ்ரேல் தாக்குதலில் சுமார் 16,500 குழந்தைகள் உயிரிழந்ததாக மதிப்பிடப்படுகிறது.
அகதிகள் முகாமாக செயல்படும் காசா நகரில் உள்ள ஃபஹ்மி அல்-ஜர்ஜாவி பள்ளி மீது இஸ்ரேலியப் படைகள் நடத்திய தாக்குதலில் 25 பேர் கொல்லப்பட்டனர்.
இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் குழந்தைகள், இரண்டு செஞ்சிலுவைச் சங்க ஊழியர்கள் மற்றும் ஒரு பத்திரிகையாளர் ஆகியோர் அடங்குவர். இஸ்ரேல் தொடர்ந்து தங்குமிடங்களாக உள்ள பள்ளிகளைத் தாக்கி வருகிறது. காசாவில் உள்ள 95 சதவீத பள்ளிகளை இஸ்ரேல் தாக்கியுள்ளது.
தாக்குதலைத் தொடர்ந்து பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டது. பின்னர் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக காசா சிவில் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. 13 பேரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக சிவில் பாதுகாப்பு துறை அறிவித்தது. 21 பேர் காயமடைந்தனர்.
குண்டுவெடிப்பில் பள்ளியின் பாதி பகுதி அழிக்கப்பட்டது. இடிபாடுகளுக்குள் மேலும் பலர் சிக்கியுள்ளனரா என்பதைக் கண்டறிய மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
முந்தைய நாள், இஸ்ரேலின் தாக்குதல் காசா பெண் மருத்துவரின் 9 குழந்தைகளும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடரும் காசாவில் இஸ்ரேலிய இராணுவத்தின் படுகொலையில் 53,901 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
1.22 லட்சத்திற்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இஸ்ரேல் தாக்குதலில் சுமார் 16,500 குழந்தைகள் உயிரிழந்ததாக மதிப்பிடப்படுகிறது.
மூன்று மாதங்களாக இஸ்ரேல் மேற்கொண்டு வரும் முற்றுகையால் காசா கடுமையான மனிதாபிமான நெருக்கடியை எதிர்கொள்கிறது.
- கணவரும் மீதமுள்ள மகனும் ஆபத்தான நிலையில் உள்ளனர்.
- இஸ்ரேல் தாக்குதலில் சுமார் 16,500 குழந்தைகள் உயிரிழந்ததாக மதிப்பிடப்படுகிறது.
நேற்று காசாவில் பாலஸ்தீனிய பெண் மருத்துவரின் வீட்டில் இஸ்ரேல் குண்டுவீசி நடத்திய தாக்குதலில் அவரின் ஒன்பது குழந்தைகள் கொல்லப்பட்டனர்.
கொல்லப்பட்ட 9 குழந்தைகள், நாசர் மருத்துவ வளாகத்தில் உள்ள அல் தஹ்ரிர் மருத்துவமனை குழந்தை மருத்துவ நிபுணர் டாக்டர் அலா அல்-நஜ்ஜாரின் குழந்தைகள் ஆவர்.

கான் யூனிஸில் உள்ள அவரின் வீட்டை இஸ்ரேல் தாக்கியது. இந்த நேரத்தில் மருத்துவமனையில் மருத்துவர் பணியில் இருந்தார். வீட்டில் குழந்தைகளுடன் இருந்த கணவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர்களின் மீதமுள்ள மகன் ஆபத்தான நிலையில் உள்ளார்.
ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடரும் காசாவில் இஸ்ரேலிய இராணுவத்தின் படுகொலையில் 53,901 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. 1.22 லட்சத்திற்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இஸ்ரேல் தாக்குதலில் சுமார் 16,500 குழந்தைகள் உயிரிழந்ததாக மதிப்பிடப்படுகிறது.
மூன்று மாதங்களாக இஸ்ரேல் மேற்கொண்டு வரும் முற்றுகையால் காசா கடுமையான மனிதாபிமான நெருக்கடியை எதிர்கொள்கிறது.
- மொத்தம் 1 லட்சத்து 21 ஆயிரத்து 688 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
- கடந்த 11 வாரங்களாக காசாவுக்குள் எந்த உணவு மற்றும் உதவிப் பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவில்லை.
பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் உயிரிழப்பு எண்ணிக்கை 53,587 ஆக அதிகரித்துள்ளது. காசாவில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை எதிர்த்து ஹமாஸ் போராளிகள் கடந்த 2023 அக்டோபரில் அந்நாட்டில் தாக்குதல் நடத்தினர். இதில் 1,200 பேர் வரை பலியாகினர். 200க்கும் மேற்பட்டோர் பணய கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர்.
இதற்கு பழிவாங்கும் வகையில் கடந்த 2 வருடங்களாக காசா உள்ளிட்ட பாலஸ்தீன நகரங்கள் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. காசாவில் உயிரிழந்தவர்களில் பெரும்பாண்யானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று ஐநா தரவுகள் தெரிவிக்கின்றன.
கடந்த 11 வாரங்களாக காசாவுக்குள் எந்த உணவு மற்றும் உதவிப் பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவில்லை. இதனால் 14,000 குழந்தைகள் அடுத்த சில நாட்களில் உயிரிழக்கும் சூழல் உருவாகியுள்ளதாக ஐநா தெரிவித்தது. மேலும் காசாவை முழுமையாக கைப்பற்ற போவதாக இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு அறிவித்தார்.
இதனை கண்டித்து கனடா, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நட்பு நாடுகளும் கண்டனம் தெரிவித்தன. ஆனால் வெளியில் இருந்து எந்த அழுத்தத்தையும் ஏற்க போவதில்லை என நேதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார்.
இந்நிலையில் காசாவில் கடந்த 24 மணிநேரத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 84 பேர் உயிரிழந்தனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 53,587 ஆக அதிகரித்துள்ளது.
மொத்தம் 1 லட்சத்து 21 ஆயிரத்து 688 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஒருபுறம் வெடிகுண்டு தாக்குதல், மறுபுறம் மனிதனால் உருவாக்கப்பட்ட பஞ்சம் என இரண்டினாலும் காசா மக்களை மரணம் துரத்துகிறது.
- கடந்த 11 வாரங்களாக காசாவுக்குள் செல்லும் அனைத்து உதவிப்பொருட்களையும் இஸ்ரேல் நிறுத்திவைத்தது.
- உணவைக் கொண்டு செல்வதில் நாங்கள் அனைத்து வகையான சவால்களையும் எதிர்கொள்கிறோம்"
போரினால் பாதிக்கப்பட்ட காசாவில் மனிதாபிமான நெருக்கடி நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது.
அடுத்த 48 மணி நேரத்திற்குள் கூடுதல் அவசர உதவி நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், கிட்டத்தட்ட 14,000 குழந்தைகள் இறக்கும் அபாயம் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை (ஐ.நா) கவலை தெரிவித்துள்ளது.
கடந்த 11 வாரங்களாக காசாவுக்குள் செல்லும் அனைத்து உதவிப்பொருட்களையும் இஸ்ரேல் நிறுத்திவைத்தது. இந்நிலையில் நேற்று கனடா, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து போன்ற நட்பு நாடுகளின் அழுத்தத்தின் கீழ், குறைந்த அளவிலான உதவிப்பொருட்களை காசாவுக்குள் கொண்டு செல்ல இஸ்ரேல் அனுமதித்தது.
இந்நிலையில் பிபிசி ரேடியோ 4 க்கு அளித்த பேட்டியில் ஐ.நா. மனிதாபிமானத் தலைவர் டாம் பிளெட்சர் பேசுகையில், திங்களன்று ஐந்து லாரிகள் நிறைய மனிதாபிமான உதவிகள் மட்டுமே காசாவிற்குள் நுழைந்தன, அதில் குழந்தைகளுக்கான உணவுப் பொருட்களும் அடங்கும்.
இஸ்ரேலிய முற்றுகையின் பல வாரங்களுக்குப் பிறகு, இந்த உதவி கடலில் ஒரு துளி போன்றது. இந்த சிறிய அளவிலான உதவி கூட இன்னும் தேவைப்படுபவர்களை சென்றடையவில்லை. நாங்கள் அவர்களை அடையவில்லை என்றால், அடுத்த 48 மணி நேரத்தில் 14,000 குழந்தைகள் இறந்துவிடுவார்கள்.
ஊட்டச்சத்து குறைபாடுள்ள தாய்மார்களுக்கும், தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாத அவநம்பிக்கையான சூழ்நிலைகளில் உள்ளவர்களுக்கும் உணவைக் கொண்டு செல்வதில் நாங்கள் அனைத்து வகையான சவால்களையும் எதிர்கொள்கிறோம்" என்று தெரிவித்தார்.
முன்னதாக, இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன் மற்றும் கனேடிய பிரதமர் மார்க் கார்னி ஆகியோர் வெளியிட்ட கூட்டறிக்கையில், இஸ்ரேல் உதவியைத் தடுத்ததையும், பாலஸ்தீனியர்களை பெருமளவில் வெளியேற்ற இஸ்ரேலின் அச்சுறுத்தல்களையும் அவர்கள் கடுமையாகக் கண்டித்தனர்.
இதை குறிப்பிட்டு பேசிய டாம் பிளெட்சர், சர்வதேச சமூகம் தனது நிலைப்பாட்டை கடுமையாக்கியுள்ளது வரவேற்கத்தக்கது என்றார். மேலும் இன்று காசாவிற்கு குழந்தை உணவு மற்றும் ஊட்டச்சத்து பொருட்களை மேலும் 100 லாரிகளில் வழங்க ஐ.நா எதிர்பார்க்கிறது என்று அவர் கூறினார். அடுத்த 48 மணி நேரத்திற்குள் இந்த 14,000 குழந்தைகளில் முடிந்தவரை பலரைக் காப்பாற்ற விரும்புகிறோம்" என்று அவர் கூறினார்.
- ஓராண்டு காலம் பல்வேறு சர்ச்சைகள் நடந்த நிலையில், 1948ல் பிரிட்டன் வெளியேறியது.
- சியோனிச போராளிகள் ராணுவ படை (Zionist paramilitaries) பாலஸ்தீனிய நகரங்கள் மற்றும் நகரங்களைத் தாக்கினர்.
கடந்த 2 வருடங்களாக நடக்கும் காசா போரில் இரு பக்கங்களிலும் அப்பாவி மக்களின் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. இந்த போர் பன்னெடுங்கலாக இரு நாட்டினரிடையேயும் இருந்து வந்த கொந்தளிப்பின் மிகவும் மோசமான வெளிப்பாடு ஆகும்.
இந்த பிரச்சனை இன்று தொட்டு சுமார் 77 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கியது.
1947 வரை பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் பாலஸ்தீனம் இருந்தது. இரண்டாம் உலகப்போரில் ஹிட்லரின் நாஜி பயங்கரவாத கொடுமைகளில் இருந்து தப்பி வந்த்வ பல்லாயிரக்கணக்கான யூதர்களும் பாலஸ்தீனத்தில் தங்கள் புதிய வாழ்வை கட்டமைத்துக்கொண்ட காலகட்டம் அது.
பாலஸ்தீனத்திலிருந்து பிரிட்டன் வெளியேற முடிவு செய்தபோது அரபிக்களும், யூதர்களும் இருந்த பாலஸ்தீனம் இரண்டாகப் பிரியும் சூழல் உருவானது.
யூதர்களுக்கு இஸ்ரேல், அரபிக்களுக்கு பாலஸ்தீனம், புனித நகரான ஜெருசலேம் சர்வதேச நகரமாக இருக்கும் என்பதுதான் பிரிட்டன் பரிந்துரைத்த யோசனை. இந்த யோசனையை ஐ.நா.வும் அங்கீகரித்தது.
ஆனால், பாலஸ்தீன அரபிக்கள் இதனை ஏற்கவில்லை. ஓராண்டு காலம் பல்வேறு சர்ச்சைகள் நடந்த நிலையில், 1948ல் பிரிட்டன் வெளியேறியது. அதனைத் தொடர்ந்து யூத தலைவர்கள் இஸ்ரேல் நாட்டை உருவாக்கியதாக அறிவித்தார்கள். அதன் நீட்சியாக போர் மூண்டது.
1947 மற்றும் 1949 க்கு இடையில், சியோனிச போராளிகள் ராணுவ படை (Zionist paramilitaries) பாலஸ்தீனிய நகரங்கள் மற்றும் நகரங்களைத் தாக்கினர். பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். 530 க்கும் மேற்பட்ட கிராமங்கள் அழிக்கப்பட்டன.
குறைந்தது 750,000 பாலஸ்தீனியர்கள் தங்கள் வீடுகளில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு, அகதிகளாக மாறினர். இதனை பாலஸ்தீனியர்கள் அல் நக்பா (பேரழிவு) எனக் கூறுகின்றனர். இந்த துயரத்தை நினைவு கூற வருடந்தோறும் மே 15 நக்பா அனுசரிக்கப்படுகிறது. இந்த வருடம் 77வது நக்பா நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
இன்று வரை இந்த துயரம் தொடர்ந்த வண்ணம் உள்ளது. நேற்று (வியாழக்கிழமை) நக்பா தினத்தன்று ஒரே நாளில் பாலஸ்தீனத்தின் காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். கடந்த 2023 அக்டோபர் முதல் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் பாலஸ்தீனத்தில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 53,000 த்தை கடந்துள்ளது.
- இந்த வீடுகளில் இருந்த முழு குடும்பங்களும் தாக்குதலில் கொல்லப்பட்டன
- காசாவை 'சுதநதிர மண்டலம்' ஆக மாற்ற வேண்டும் என்ற திட்டத்தை டிரம்ப் முன்வைத்துள்ளார்.
காசாவில் உள்ள கான் யூனிஸில் புதன்கிழமை இரவு மட்டும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 57 பேர் கொல்லப்பட்டதாக நாசர் மருத்துவமனையின் சுகாதார ஊழியர்கள் தெரிவித்தனர்.
வடக்குப் பகுதியில், காசா நகரம் மற்றும் ஜபாலியாவில் உள்ள குடியிருப்புப் பகுதிகள் மீது இஸ்ரேல் குண்டுவீச்சு நடத்தியது. எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல், இஸ்ரேலிய போர் விமானங்கள் கான் யூனிஸில் ஒன்பது வீடுகளைத் தாக்கின.
இந்த வீடுகளில் இருந்த முழு குடும்பங்களும் தாக்குதலில் கொல்லப்பட்டன. ஜபாலியா அகதிகள் முகாம் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் 13 வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. தொடர் தாக்குதலால் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்க முடியாத சூழல் நிலவுகிறது. இஸ்ரேலின் கட்டாய வெளியற்றம் காரணமாக மக்கள் தாக்குதலில் இருந்து தப்பிக்க வீடுகள் மற்றும் முகாம்களை விட்டு வெளியேறி வருகின்றனர்.
இதுபோல நேற்று (வியாழக்கிழமை) ஒரே நாளில் விடியற்காலையில் இருந்து பெண்கள், குழந்தைகள் உட்பட 107 பேர் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டதாக காசாவின் சிவில் பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் மஹ்மூத் பாசல் உறுதிப்படுத்தினார். இதில் முழு குடும்பங்களும் அடங்கும்.
வடக்கு காசாவில் உள்ள ஜபாலியாவின் அல் ஃபகூரா பகுதியில் உள்ள அல் தவ்பா சுகாதார மருத்துவமனை மீது இஸ்ரேலிய தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டதாக அவர் கூறினார்.
மேலும் மக்கள் காசா பகுதியின் பல்வேறு பகுதிகளில், குறிப்பாக தெற்கு நகரமான கான் யூனிஸில், இடம்பெயர்ந்த மக்கள் வசிக்கும் வீடுகள் மற்றும் கூடாரங்களை போர் விமானங்கள் குண்டுவீசித் தாக்கின.
இதற்கிடையே இன்று (வெள்ளிக்கிழமை) கடந்த சில மணி நேரத்தில் வடக்கு காசா மீது இஸ்ரேலிய இராணுவம் நடத்திய தாக்குதல்களில் 16 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.
இதனால் 2023 அக்டோபரில் இருந்து இஸ்ரேலிய தாக்குதலால் காசாவில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 53,000 த்தை கடந்துள்ளது. டிரம்ப் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள சூழலில் இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. காசாவை 'சுதநதிர மண்டலம்' ஆக மாற்ற வேண்டும் என்ற திட்டத்தை டிரம்ப் முன்வைத்துள்ளார். காசாவை முழுமையாக கைப்பற்ற சமீபத்தில் இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது குறிப்பிடத்தக்கது.






