என் மலர்
பாகிஸ்தான்
- செக்போஸ்ட்-ஐ குறிவைத்து முதல் தாக்குதல் நடத்தப்பட்டது.
- பின்னர் அப்பகுதிக்கு சென்ற போலீசார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் நடந்த அடுத்தடுத்து இரண்டு குண்டு வெடிப்பு சம்பவத்தில் 3 போலீசார் உயிரிழந்தனர்.
முதலில் போலீஸ் செக்போஸ்ட்-ஐ குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இது தொடர்பாக தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அப்போது அந்த போலீசார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில் 3 போலீசார் பரிதாபமாக உயிரிழந்தனர். ஹங்கு நகரில் நடைபெற்ற இந்த தாக்குதலில் எஸ்.பி. படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
- கடந்த ஆண்டு நடந்த இம்ரான் கான் கட்சி போராட்டம் தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
- தொடர்ந்து ஆஜராகாத நிலையில் ஜாமீனில் வரமுடியாத வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
விசாரணைக்கு தொடர்ந்து ஆஜராக நிலையில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் சகோதரி அலீமா கானுக்கு ராவல்பிண்டி பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றம் 4ஆவது முறையாக ஜாமீனில் வெளிவரமுடியாத வாரண்ட் பிறப்பித்துள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ0இன்சாஃப் கட்சி நடத்திய போராட்டம் தொடர்பான வழக்கில் அலீமா கான் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. விசாரணையின்போது 11 பேரில் 10 பேர் ஆஜரான நிலையில், அலீமான கான் மட்டும் ஆஜராகவில்லை. இதனால் 4ஆவது முறையாக வாரண்ட் பிறப்பித்துள்ளது.
மேலும், ராவல் டிவிசன் எஸ்.பி. மற்றும் டிஎஸ்பி ஆகியோருக்கு போலி அறிக்கை தாக்கல் செய்ததற்காக நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இவர்கள் அலீமா கான் தலைமறைவாக உள்ளார் எனத் தெரிவித்துள்ளனர். ஆனால், இம்ரான் கான் அடைக்கப்பட்டுள்ள ஜெயில் மற்றும் சமூக வலைத்தள சேனல்களில் காணப்பட்டதால் நீதிமன்றம் போலீஸ் அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கடந்த விசாரணையின்போது இன்றைக்குள் அலீமா கானை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.
- பாகிஸ்தானில் நேற்று இரவு நிலநடுக்கம் பதிவானது.
- இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் லேசாக அதிர்ந்தன.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் நேற்று இரவு 8.52 மணிக்கு 3.8 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் பதிவானது என தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் லேசாக அதிர்ந்தன. இதனால் மக்கள் பீதியடைந்தனர். அதேவேளை, இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே, நேற்று அதிகாலை பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் முல்தான் நகரை மையமாகக் கொண்டு 4.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
- கடந்த 9 நாட்களுக்கு முன் சிறுமி காணாமல் போனார்.
- திடீரென மீடியா முன் திருமணம் செய்தவருடன் தோன்றினார்.
பாகிஸ்தானில் ஒருவாரத்திற்கு முன் காணாம் போன காது கேட்காத, வாய் பேசமுடியாத 15 வயது இந்து சிறுமியை, இஸ்லாம் மதத்திற்கு மாற்றி வயதான நபர் கட்டாயத் திருமணம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் சிந்து மாகாணத்தில் பதின் மாவட்டத்தில் உள்ள கோர்வா நகரைச் சேர்ந்த 15 வயது இந்து சிறுமிக்கு காதும் கேட்காது. வாய் பேசவும் முடியாது. இந்த சிறுமி கடந்த 9 நாட்களுக்கு முன் காணாமல் போனார். மகள் காணாமல் போனது குறித்து போலீசில் புகார் அளித்தனர்.
ஆனால், நேற்று அந்த சிறுமி பதின் பிரஸ் கிளப்பில் பத்திரிகையாளர்கள் முன் தோன்றினார். அப்போது, அவரை திருமணம் செய்தவரும், இந்து மதத்தில் இருந்து இஸ்லாமிற்கு மாறியதற்கான சான்றிதழுன் காணப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து தனது மகள் கடத்தப்பட்டு, மதமாற்றி கட்டாயத் திருமணம் நடைபெற்றுள்ளது என பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.
போதைப்பொருள் தரகரும், ஏழு பெண் குழந்தைகளுக்கு தந்தையுமானவரை எப்படி எனது மகள் திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவிப்பார் என பெற்றோர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
சிறுமி கடத்தப்பட்டுள்ளார். பெற்றோர்கள் புகார் அளித்தும் போலீசார் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என இந்துக்கள் மற்றும் மைனாரிட்டிகள் நலம் மற்றும் உரிமையாக்காக பணியாற்றும் தரவார் இட்டேகாத் பாகிஸ்தான் அமைப்பின் தலைவர் சிவா கச்சி குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், அந்த சிறுமி இதை விருப்பத்துடன் செய்திருக்க முடியாது என்று நாங்கள் நம்புவதால், வழக்கைத் தொடர எங்கள் வழக்கறிஞர்களிடம் பேசியுள்ளோம். தனி விசாரணை நடத்தக்கோரி சீனியர் போலீசார் அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளோம்" எனத் தெரிவித்துள்ளார்.
- இரு நாடுகளின் ராணுவ உயர்மட்ட அதிகாரிகள் சந்தித்துப் பேசினர்.
- இதனால் மே 10-ம் தேதி இருதரப்பு மோதல் முடிவுக்கு வந்தது.
இஸ்லாமாபாத்:
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் நகரில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றது. இதில் அப்பாவி மக்கள் 26 பேர் கொல்லப்பட்டனர்.
இதனையடுத்து, மே 7-ம் தேதி ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.
அதன்பின் இரு நாடுகளின் ராணுவ உயர்மட்ட அதிகாரிகள் சந்தித்துப் பேசினர். இதனால் மே 10-ம் தேதி இருதரப்பு மோதல் முடிவுக்கு வந்தது.
இந்நிலையில், கைபர் பக்துன்வா மாகாணம் அபோட்டாபாத் நகரில் ராணுவ கேடட் பயிற்சி பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் ராணுவ தளபதி பீல்டு மார்ஷல் சையத் அசிம் முனீர் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது இந்தியாவுடனான மோதல் குறித்து அவர் கூறுகையில், அணுசக்திமயமான சூழலில் தற்போது போருக்கு இடமில்லை. அதே சமயம் தங்கள் மீதான தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதிலடி கொடுக்கும் என எச்சரிக்கை விடுத்தார்.
- பயங்கரவாதம் எங்கிருந்தாலும் அதற்கு உரிய பதில் சொல்ல வேண்டிவரும்.
- ஒரு காலத்தில் எங்கள் பாதுகாப்பில் இருந்தனர். எங்கள் நிலத்தில் ஒளிந்து இருந்தனர்.
ஆபகானிஸ்தானின் தாலிபான்களுக்கும் பாகிஸ்தான் ராணுவத்துக்கும் கடந்த வாரம் முதல் எல்லையில் மோதல் நிகழ்ந்து வருகிறது. கடந்த புதன்கிழமை மாலை, 48 மணி நேர சண்டை நிறுத்தம் மூலம் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் மோதல் வலுத்துள்ளது.
இதற்கிடையே நேற்று (வெள்ளிக்கிழமை), எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் மூன்று ஆப்கானிஸ்தான் உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் உட்பட எட்டு பேர் கொல்லப்பட்டனர்.
ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் முத்தாகி முதல் முறையாக கடந்த வாரம் இந்தியா வந்திருந்த நிலையில் இந்த மோதல் வலுத்துள்ளது.
இந்நிலையில் ஆப்கனிஸ்தான் மற்றும் இந்தியா இணைந்து பாகிஸ்தானுக்கு எதிராக சதி செய்வதாக பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து ஊடகங்களிடம் பேசிய ஆசிப், பாகிஸ்தான் மண்ணில் இருக்கும் அனைத்து ஆப்கானிஸ்தானியர்களும் அவர்களின் நாட்டுக்கே திரும்ப வேண்டும். ஏனென்றால் அங்கு அவர்கள் தங்கள் சொந்த அரசாங்கத்தைக் கொண்டுள்ளனர். எங்களின் நிலமும் வளமும், 250 மில்லியன் பாகிஸ்தானியர்களுக்கு மட்டுமே சொந்தம்.
ஆப்கானிஸ்தானுடன் முன்பிருந்த உறவைப்போல இனி தொடர முடியாது. இனி எதிர்ப்புக் குறிப்புகள் அல்லது அமைதிக்கான வேண்டுகோள்கள் இருக்காது.
எங்களின் பிரதிநிதிகளும் ஆப்கானிஸ்தான் செல்ல மாட்டார்கள். பயங்கரவாதம் எங்கிருந்தாலும் அதற்கு உரிய பதில் சொல்ல வேண்டிவரும்.
ஆப்கானிஸ்தானின் தலிபான்கள் அரசாங்கம் இந்தியாவின் பிரதிநிதியாக செயல்படுகிறது.
இந்தியா, தடைசெய்யப்பட்ட தலிபான் அமைப்புடன் இணைந்து பாகிஸ்தானுக்கு எதிராக சதி செய்கிறது.
தற்போது இந்தியாவின் மடியில் அமர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக சதி செய்யும் ஆப்கானிஸ்தான் ஆட்சியாளர்கள், ஒரு காலத்தில் எங்கள் பாதுகாப்பில் இருந்தனர். எங்கள் நிலத்தில் ஒளிந்து இருந்தனர்.
பாகிஸ்தான் தன்னைத் தற்காத்துக் கொள்ளத் தயாராக இருக்கிறது. எல்லையைத் தாண்டிய எந்தவொரு ஆக்கிரமிப்புக்கும் உறுதியான பதில் அளிக்கப்படும்" என்று தெரிவித்தார்.
சண்டை நிறுத்தத்தை தொடர கத்தார் தலைநகர் தோஹாவில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.
- ஆப்கானிஸ்தானுக்குள் பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல் நடத்தி உள்ளது.
- நூர் வாலி மெஹ்சுத்தை குறிவைத்து வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது. இதற்கிடையே ஆப்கானிஸ்தானில் செயல்படும் தெக்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பினர் அடிக்கடி பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.
இதற்கு பாகிஸ்தானும் பதிலடி கொடுத்து வருகிறது. இந்த நிலையில் ஆப்கானிஸ்தானுக்குள் தெக்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பினரை குறிவைத்து பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல் நடத்தி உள்ளது.
தலைநகர் காபூலின் கிழக்கு பகுதியில் தெக்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பு தலைவர் நூர் வாலி மெஹ்சுத்தை குறிவைத்து வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த தாக்குதலில் இருந்து நூர் வாலி தப்பி பாதுகாப்பாக இருப்பதாகவும், அவரது மகன் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே காபூலில் 2 சக்திவாய்ந்த குண்டு வெடிப்புச் சத்தங்கள் கேட்டது என்றும், துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்தது என்றும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் ராணுவ நிலைகளை தலிபான் இஸ்லாமிய எமிரேட் படைகள் கைப்பற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது.
2 நாட்டின் எல்லைக் கோட்டின் குறுக்கே 2 பாகிஸ்தானிய நிலைகள் தாக்கி அழிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த தாக்குதலில் 12 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், பல வீரர்கள் காயம் அடைந்துள்ளனர் என்று கூறப்படுகிறது.
பாகிஸ்தானுக்கும், தலிபான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அரசாங்கத்திற்கும் இடையேயான இந்த தாக்குதல் சம்பவம் இரு நாட்டிற்கும் இடையே பதற்றத்தை அதிகரித்துள்ளது.
- வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட ஒரு லாரியைப் பயிற்சிப் பள்ளியின் பிரதான வாயிலில் மோதச் செய்து குண்டுவெடிப்பை ஏற்படுத்தியது.
- ஐந்து மணி நேர சண்டைக்குப் பிறகு, ஆறு பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
பாகிஸ்தானில் உள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் காவல் பயிற்சிப் பள்ளியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
அங்கு, டேரா இஸ்மாயில் கான் மாவட்டத்தில் உள்ள ரட்டா குலாச்சி காவல் பயிற்சிப் பள்ளியில் நேற்று நள்ளிரவு ஒரு பயங்கரவாதிகள் குழு, வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட ஒரு லாரியைப் பயிற்சிப் பள்ளியின் பிரதான வாயிலில் மோதச் செய்து குண்டுவெடிப்பை ஏற்படுத்தியது.
இதன்பின் பயங்கரவாதிகள் வளாகத்திற்குள் புகுந்து துப்பாக்கிச் சூடு நடத்தினர். ஐந்து மணி நேர சண்டைக்குப் பிறகு, ஆறு பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்தத் தாக்குதலில் ஏழு காவல் துறையினரும் உயிரிழந்தனர். 13 பேர் காயமடைந்தனர் என அரசு தரப்பு தெரிவித்துள்ளது.
மேலும் பயிற்சி மையத்தில் இருந்த சுமார் 200 பயிற்சியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
- வீட்டில் நாங்கள் வாக்குவாதம் செய்கிறோம். சண்டையிடுகிறோம்.
- ஆனால், இந்தியாவுக்கு எதிராக சண்டை என்று வந்தால், நாங்கள் ஒன்றிணைவோம்.
இந்திய ராணுவ தளபதி ஜெனரல் உபேந்திரா திவேதி, ராஜஸ்தானில் அனுப்கர் எல்லைப் பகுதியில் ராணுவ வீரர்கள் மத்தியில் கடந்த 3ஆம் தேதி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "பாகிஸ்தான் பயங்கரவாத ஆதரவை நிறுத்த வேண்டும். அப்படி இல்லையென்றால், ஆபரேசன் சிந்தூர் 2-ம் பாகம் வெகு தொலைவில் இல்லை.
அப்போது நாம் 'ஆபரேஷன் சிந்தூர் 1.0-ன் போது கடைப்பிடித்த நிதானத்தை கடைப்பிடிக்க மாட்டோம். இந்த முறை நாம் ஏதாவது செய்வோம். அது பாகிஸ்தான், தான் உலக வரைபடத்தில் தொடர்ந்து இருக்க வேண்டுமா இல்லையா என்று யோசிக்க வைக்கும்.
பாகிஸ்தான் உலக வரைபடத்தில் இருக்க விரும்பினால், அது அரசு ஆதரவு பயங்கரவாதத்தை உடனடியாக நிறுத்த வேண்டும். ராணுவ வீரர்கள் தயாராக இருக்க வேண்டும். கடவுளின் விருப்பம் இருந்தது என்றால், உங்களுக்கு ஒரு சந்தர்ப்பம் விரைவில் வரும்" என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில்தான் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப், இந்தியா அவுரங்கசீப் ஆட்சியின் கீழ் மட்டுமே ஒன்றுபட்டதாக இருந்தது எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கவாஜா ஆசிஃப் கூறியதாவது:-
இந்தியா அவுரங்கசீப் ஆட்சிக் காலத்தில் இருந்ததை தவிர, மற்ற ஒருபோதும் ஒன்றுபட்ட நாடாக இருந்ததில்லை. பாகிஸ்தான் அல்லா பெயரால் உருவாக்கப்பட்டது. வீட்டில் நாங்கள் வாக்குவாதம் செய்கிறோம். சண்டையிடுகிறோம். ஆனால், இந்தியாவுக்கு எதிராக சண்டை என்று வந்தால், நாங்கள் ஒன்றிணைவோம். இந்தியா உடனான போர் வாய்ப்பு உண்மையானவை.
இவ்வாறு கவாஜா ஆசிஃப் தெரிவித்துள்ளார்.
- பயங்கரவாதிகள் தாக்குதலில் லெப்டினன்ட் கர்னல், மேஜர் உள்ளிட்டோர் உயிரிழப்பு.
- 19 பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.
பயங்கரவாதிகளுக்கு எதிரான சண்டையில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 11 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தானில் உள்ள பக்துன்க்வா மாகாணத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக உளவுத்துறை சார்பில் தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து பாதுகாப்புப்படை வீரர்கள் அந்த இடத்திற்கு சென்றனர். அப்போது பயங்கரவாதிகளுக்கும், பாகிஸ்தான் வீரர்களுக்கும் இடையில் கடும் துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது.
இதில் 19 பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். அதேவேளையில் 11 ராணுவ வீரர்களும் உயிரிழந்தனர். இந்த சண்டையில் 39 வயதான லெப்டினன்ட் கர்னல் ஜுனைத் தரிக் உயிரிழந்தார். இவர் படையை வழி நடத்திச் சென்றவர் ஆவார். அவருடன் 33 வயதான மேஜர் தய்யாப் ரஹத்தும் உயிரிழந்தார்.
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வீரர்கள் உயிரிழப்பிற்கு வருத்தம் தெரிவித்ததுடன், பாதுகாப்புப் படைகளின் அச்சமற்ற மகன்களின் தியாகம் ஒருபோம் வீண் போகாது என்றார். அத்துடன் பாகிஸ்தானின் ஒருமைப்பாட்டிற்கு தீங்கு விளைவிக்கும் கூறுகள் வெற்றிபெற நாங்கள் அனுமதிக்க மாட்டோம் எனக் கூறியுள்ளார்.
- பூமியில் உள்ள அரிய கனிம வளங்களை அமெரிக்கா விரும்புகிறது.
- ஏற்கனவே, பாகிஸ்தான் பிரதமர் மாதிரிகளை காண்பித்த நிலையில், தற்போது அவைகள் கப்பலில் ஏற்றப்பட்டுள்ளது.
வர்த்தக வரி ஒப்பந்தம் தொடர்பாக இந்தியா- அமெரிக்கா இடையிலான உறவில் சற்று விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி அமெரிக்காவுடன் பாகிஸ்தான் நட்பு பாராட்டி வருகிறது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பாகிஸ்தான் பிரதமர் மற்றும் ராணுவ தலைமை தளபதி ஆகியோரை வெள்ளை மாளிகைக்கு வரவேற்று விருந்து அளித்தார். பாகிஸ்தான் தற்போது கடுமையான நிதிப்பற்றாக்குறையால் தத்தளித்து வருகிறது.
இதை டிரம்ப் சரியாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறார். பாகிஸ்தானில் உள்ள அரிய கனிம வளங்களை அமெரிக்கா வெட்டி எடுத்துக் கொள்ள விரும்பினார். இது தொடர்பாக பாகிஸதான் பிரதமரிடம் பேசினார். அவரும் சம்மதம் தெரிவித்ததாக தெரிகிறது.
கடந்த முறை அமெரிக்கா சென்றபோது, பாகிஸ்தானில் உள்ள அரிய வகை கனிமங்களின் மாதிரிகளை டிரம்பிடம் காண்பித்துள்ளார் ஷெபாஷ் ஷெரீப்.
இதனைத் தொடர்ந்து 500 மில்லியன் டாலருக்கு பாகிஸ்தானுக்கும், அமெரிக்க நிறுவனத்திற்கும் இடையில் ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் வெட்டி எடுக்கப்பட்ட கனிம வளங்கள் அடங்கிய முதல் கப்பல் பாகிஸ்தானில் இருந்து அமெரிக்கா புறப்பட்டுள்ளது.
அமெரிக்காவுக்கு கனிம வளங்களை விற்பனை செய்வதற்கு இம்ரான் கான் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்காவுடன் ரகசிய ஒப்பந்தம் எனக் குற்றம்சாட்டியுள்ளது.
- பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பாகிஸ்தான் அரசுக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது.
- அப்போது ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் மோதல்களில் 12 பேர் பலியாகினர்.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள மக்கள் பாகிஸ்தான் அரசுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது அவாமி குழு என்ற அமைப்பின் தலைமையில் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் முசாபராபாதில் மிகப்பெரிய போராட்டம் வெடித்துள்ளது. இதனால் அங்குள்ள சந்தைகள், கடைகள் மற்றும் உள்ளூர் வணிகங்கள் முழுமையாக மூடப்பட்டன. போக்குவரத்து சேவைகளும் நிறுத்தப்பட்டன.
அப்போது நடந்த போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அவாமி அதிரடி குழு தலைமையிலான போராட்டங்கள் கடந்த 72 மணி நேரமாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை முடக்கி உள்ளன.






