என் மலர்
பாகிஸ்தான்
- 2014 ஆண்டு வாகா எல்லை அருகே நடத்தப்பட்ட தற்கொலை படை தாக்குதலில் 60 பேர் கொல்லப்பட்டனர்.
- 3 பேருக்கு தூக்குத்தண்டனை மற்றும் 300 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டிருந்தது.
பாகிஸ்தானின் வாகா எல்லையில் கடந்த 2014ஆம் ஆண்டு தற்கொலைப்படை தாக்குதல் கடத்தப்பட்டது. இதில் 60 பேர் கொல்லப்பட்டனர். 100 பேர் காயம் அடைந்தனர். இந்த தாக்குதலை தடை செய்யப்பட்ட ஜமாத்-அல்-அஹ்ரார் அமைப்பைச் சேர்ந்தவர்கள் நடத்தியது விசாரணையில் தெரியவந்தது.
இது தொடர்பாக பயங்கரவாத தடுப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று 3 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அத்துடன் 300 ஆண்டுகள் தண்டனையும் வழங்கப்பட்டது.
கடந்த 2020ஆம் ஆண்டு வழங்கப்பட்ட இந்த தீர்பை எதிர்த்து 3 பேருக்கும் மேல்முறையீடு செய்ய அனுமதி வழங்கப்பட்டது.
இந்த நிலயைில் லாகூர் உயர்நீதிமன்றம் மூன்று பேரின் தூக்குத்தண்டனை மற்றும் ஜெயில் தண்டனையை ரத்து செய்து, அவர்களை விடுதலை செய்த உத்தரவிட்டுள்ளது. தற்கொலை படையாக செயல்பட்டவர்களுக்கு உதவியதாக இந்த மூன்று பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது.
- அமெரிக்க அதிபர் டிரம்ப், தனது நாடு அணு ஆயுத சோதனை நடத்தும் என சமீபத்தில் கூறினார்.
- வடகொரியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுத சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றன என்றார்.
லாகூர்:
அமெரிக்க அதிபர் டிரம்ப், தனது நாடு அணு ஆயுத சோதனை நடத்தும் என்று சமீபத்தில் கூறினார்.
இதற்கிடையில் அதிபர் டிரம்ப் கூறுகையில், ரஷியாவும் சீனாவும் அணு ஆயுத சோதனைகளில் ஈடுபடுகின்றன. இதுகுறித்து அவர்கள் பேசமாட்டார்கள். ஆனால் நாங்கள் அப்படி அல்ல. மற்றவர்களும் அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருகிறார்கள். வடகொரியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுத சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றன என தெரிவித்தார்.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்த கருத்துக்கு பாகிஸ்தான் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், பாகிஸ்தான் முதலில் அணு ஆயுத சோதனைகளை நடத்தவில்லை. தற்போதும் முதலில் அணு ஆயுத சோதனைகளை மீண்டும் தொடங்கும் நாடாக பாகிஸ்தான் இருக்காது. நாங்கள் முதலில் அணு ஆயுத சோதனைகளை மீண்டும் தொடங்க மாட்டோம் என தெரிவித்தார்.
அணு ஆயுத சோதனை தொடர்பாக அதிபர் டிரம்ப் தெரிவித்த கருத்துக்கு மறுப்பு தெரிவித்துள்ள சீனா, நாங்கள் ஒரு பொறுப்பான அணு ஆயுத நாடு. அணு ஆயுதங்களை முதலில் பயன்படுத்த மாட்டோம் என்ற கொள்கையில் சீனா உறுதியாக உள்ளது என தெரிவித்தது.
- முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 20 ஓவரில் 139 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய பாகிஸ்தான் 140 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
லாகூர்:
பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி லாகூரில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்தது.
அடுத்து ஆடிய பாகிஸ்தான் அணி 19 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 140 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பாபர் அசாம் 47 பந்தில் 68 ரன் எடுத்து வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்.
இந்த வெற்றியின் மூலம் டி20 தொடரை பாகிஸ்தான் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
ஆட்ட நாயகன் விருது பாபர் அசாமுக்கும், தொடர் நாயகன் விருது பஹீம் அஷ்ரப்புக்கும் வழங்கப்பட்டது.
இரு அணிகளுக்கு இடையிலான 2 டெஸ்ட் கொண்ட தொடர் 1-1 என சமனில் முடிந்தது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி வரும் 4-ம் தேதி பைசலாபாத்தில் நடக்கிறது.
- பாகிஸ்தான் ராணுவத்துக்கும், தாலிபான் படையினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.
- துருக்கி தலைநகா் இஸ்தான்புல்லில் நேற்று முன்தினம் 2-வது சுற்று பேச்சுவாா்த்தை நடைபெற்றது.
பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையே இந்த மாத தொடக்கம் முதலே மோதல் நீடித்து வருகிறது. இரு வாரங்களுக்கு முன்பு எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்துக்கும், தாலிபான் படையினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.
இதில் இரு தரப்பினருமே நூற்றுக்கணக்கில் எதிா் தரப்பினரைக் கொன்றுவிட்டதாக அறிவித்தனா். பின்னா், கத்தாா், துருக்கி தலையிட்டதன் மூலம் சண்டை நிறுத்தம் ஏற்பட்டாலும் அவ்வப்போது தாக்குதல்களும், உயிரிழப்புகளும் தொடா்ந்து வருகின்றன.
இந்நிலையில், துருக்கி தலைநகா் இஸ்தான்புல்லில் நேற்று முன்தினம் 2-வது சுற்று பேச்சுவாா்த்தை நடைபெற்றது. அப்போது பதற்றத்தைக் குறைப்பது, எல்லை தாண்டிய பயங்கரவாத செயல்களைக் கட்டுப்படுத்துவது தொடா்பாக பேச்சு நடத்தப்பட்டது.
இதற்கிடையே இரு தரப்பினர் இடையே மோதலும் ஏற்பட்டது. ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகே நடந்த மோதல்களில் 5 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இதனை பாகிஸ்தான் உறுதி செய்துள்ளது. கடந்த 2 நாட்களில் ஆப்கானிஸ்தானிலிருந்து கடக்க முயன்ற 25 பேர் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவ ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.இதனால், இருநாட்டு எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது.
- பலுசிஸ்தானை தனி நாடு போல் குறிப்பிட்டு நடிகர் சல்மான் கான் பேசினார்.
- இதனால் பயங்கரவாதிகள் பட்டியலில் அவரை பாகிஸ்தான் சேர்த்ததாக கூறப்படுகிறது.
லாகூர்:
பாலிவுட் நடிகர் சல்மான்கான் அண்மையில் சவுதி அரேபியாவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பலூசிஸ்தான் குறித்து பேசிய கருத்துகள் காரணமாக பாகிஸ்தானில் பெரும் சர்ச்சைக்குள்ளாகியது
இதன் விளைவாக, பாகிஸ்தான் அரசு அவரை பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. ரியாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சல்மான்கான் பேசியதாவது:
நீங்கள் ஒரு இந்தித் திரைப்படம் எடுத்து இங்கு (சவுதி அரேபியா) வெளியிட்டால், அது ஒரு சூப்பர் ஹிட் ஆகும்.
தமிழ், தெலுங்கு அல்லது மலையாள திரைப்படத்தை உருவாக்கினால் அது பல நூறு கோடிகளை சம்பாதிக்கும். ஏனெனில் பல நாட்டைச் சேர்ந்தவர்கள் இங்கு வந்துள்ளனர். இங்கு பலூசிஸ்தானைச் சேர்ந்தவர்கள் உள்ளனர், ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர்கள் உள்ளனர், பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் உள்ளனர். அனைவரும் இங்கு வேலை செய்கிறார்கள் என பேசியிருந்தார்.
சல்மான்கானின் இந்தப் பேச்சால் கோபமடைந்த பாகிஸ்தான், அவரை பயங்கரவாதிகள் பட்டியலின் 4-வது அட்டவணையில் சேர்த்துள்ளதாக தகவல் வெளியானது. எனினும், இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இல்லை.
- குஜராத்துக்கும் பாகிஸ்தானுக்கு இடையில் உள்ள 96 கி.மீ. நீளமுள்ள சதுப்பு நிலப் பகுதி சர் க்ரீக் ஆகும்.
- இது எண்ணெய், இயற்கை எரிவாயு வளங்கள் நிறைந்த மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும்.
குஜராத்தின் ரான் ஆஃப் கட்சுக்கும் பாகிஸ்தானின் சிந்து மாகாணத்திற்கும் இடையில் உள்ள 96 கி.மீ. நீளமுள்ள சதுப்பு நிலப் பகுதி சர் க்ரீக் (Sir Creek) ஆகும்.
இது மீன்பிடி மற்றும் எண்ணெய், இயற்கை எரிவாயு வளங்கள் நிறைந்த மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும். அணமைக் காலமாக பாகிஸ்தான் இந்தப் பகுதியில் ராணுவக் கட்டமைப்புகளை அதிகப்படுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி வந்தன.
இந்நிலையில் சர் க்ரீக்பகுதியில் பாகிஸ்தான் எந்த வகையிலும் ஆக்கிரமிப்பு செய்ய முயன்றால், சக்திவாய்ந்த பதிலடி கொடுக்கப்படும் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்தார்.
இந்நிலையில், இந்தியாவின் எச்சரிக்கையையும் மீறி குஜராத் அருகே ராணுவ நடவடிக்கைகளை பாகிஸ்தான் அதிகரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் எல்லையான 'சர் க்ரீக்' பகுதிக்கு பிரிட்டனிடம் இருந்து வாங்கிய 3 Hovercraft கப்பல்களை பாகிஸ்தான் கடற்படையில் சேர்த்துள்ளது. இந்த நிகழ்வில் பாகிஸ்தான் கடற்படைத் தளபதி நவீத் அஷ்ரஃப், கலந்துகொண்டார்.
- 2001 முதல் 2008 வரை பாகிஸ்தானில் ராணுவ ஆட்சி செய்து வந்தார்.
- அமெரிக்கா எப்போதும் சர்வாதிகார அரச தலைவர்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறது.
1999 இல் ராணுவ தளபதியாக இருந்த பர்வேஸ் முஷாரத் அப்போதைய நவாஸ் ஷெரீப் ஆட்சியை ராணுவ புரட்சி மூலம் கவிழ்த்து தன்னை ஆட்சியாளராக அறிவித்துக்கொண்டார். 2001 முதல் 2008 வரை பாகிஸ்தானில் ராணுவ ஆட்சி செய்து வந்தார்.
இந்நிலையில் அவரது ஆட்சி காலத்தில் பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் சேமிப்பு கிடங்கு அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருந்ததாக அமெரிக்க உளவுத்துறை நிறுவனமான சிஐஏ -வின் முன்னாள் அதிகாரி ஜான் கிரியாகோ தெரிவித்துள்ளார்.
15 ஆண்டுகள் சிஐஏவில் பணியாற்றிய ஜான் கிரியாகோ 2002 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் பணிபுரிந்த அனுபவங்களை செய்தி நிறுவனத்திடம் அண்மையில் பகிர்ந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், பர்வேஸ் முஷாரப்பும் அமெரிக்காவும் நெருங்கிய நட்புறவையும் ஒத்துழைப்பையும் கொண்டிருந்தார்கள். இராணுவ மற்றும் மேம்பாட்டு உதவி வடிவில் அமெரிக்கா மில்லியன் கணக்கான டாலர்களை செலுத்தி பர்வேஸ் முஷாரப்பின் ஒத்துழைப்பைப் பெற்றது. நாங்கள் வாரத்திற்கு பல முறை முஷாரப்பை சந்தித்தோம்.
அமெரிக்கா இந்த அணு ஆயுதங்களை சுதந்திரமாக கையாள முஷாரப் அனுமதித்தார். பாகிஸ்தான் அரசாங்கத்துடனான எங்கள் உறவு மிகவும் அன்பானது. அமெரிக்கா எப்போதும் சர்வாதிகார அரச தலைவர்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறது.
அவர்கள் பொதுக் கருத்தைப் பற்றியோ அல்லது ஊடகங்களைப் பற்றியோ கவலைப்பட வேண்டியதில்லை. எனவே நாங்கள் அடிப்படையில் முஷாரப்பை விலைக்கு வாங்கினோம்" என்று தெரிவித்தார்.
- தினமும் சுமார் 500 கொள்கலன் காய்கறிகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன.
- பாகிஸ்தானுக்கு பெரும்பாலான தக்காளி விநியோகம் ஆப்கானிஸ்தானிலிருந்து சென்றுகொண்டிருந்தது.
ஆப்கானிஸ்தானை ஆளும் தாலிபான்களுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது. அண்மையில் இரு நாடுகளுக்கும் எல்லையில் ஏற்பட்ட சண்டையில் பலர் கொல்லப்பட்டனர். தொடர்ந்து கத்தாரின் மத்யஸ்தத்தால் அமைதி ஒப்பந்தம் மூலம் முடிவுக்கு வந்தது.
இந்த மோதலால் அக்டோபர் 11 முதல் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையேயான எல்லை மூடப்பட்டிருப்பதால் இரு நாடுகளிலும் அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம் தடைபட்டுள்ளது.
இதனால் பாகிஸ்தானில் தக்காளியின் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளது. எல்லை மூடப்படுவதற்கு முன் ஆப்கானிஸ்தானில் இருந்து தினமும் சுமார் 500 கொள்கலன் காய்கறிகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன. மேலும் பாகிஸ்தானுக்கு பெரும்பாலான தக்காளி விநியோகம் ஆப்கானிஸ்தானிலிருந்து சென்றுகொண்டிருந்தது.
இந்நிலையில் எல்லை மூடப்பட்டு விநியோகம் நின்றதால் தக்காளியின் விலை பாகிஸ்தானில் 400 சதவீதம் உயர்ந்து 1 கிலோ தக்காளி 600 ரூபாயாக்கு விற்கப்படுகிறது. பாகிஸ்தான் உணவில் தக்காளி முக்கிய பங்காற்றும் நிலையில் இந்த விலை உயர்வு மக்களை அதிகம் பாதித்து வருகிறது.
எல்லை மூடப்பட்டதால் போக்குவரத்து தடைபட்டு அத்தியாவசிய பொருட்கள் விநோயோகம் நின்றதால் இரு நாடுகளும் ஒவ்வொரு நாளும் 1 மில்லியன் டாலர்களை இழந்து வருவதாக பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் வர்த்தக சபையின் தலைவர் கான் ஜான் அலோகோசி கூறினார்.
- செக்போஸ்ட்-ஐ குறிவைத்து முதல் தாக்குதல் நடத்தப்பட்டது.
- பின்னர் அப்பகுதிக்கு சென்ற போலீசார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் நடந்த அடுத்தடுத்து இரண்டு குண்டு வெடிப்பு சம்பவத்தில் 3 போலீசார் உயிரிழந்தனர்.
முதலில் போலீஸ் செக்போஸ்ட்-ஐ குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இது தொடர்பாக தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அப்போது அந்த போலீசார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில் 3 போலீசார் பரிதாபமாக உயிரிழந்தனர். ஹங்கு நகரில் நடைபெற்ற இந்த தாக்குதலில் எஸ்.பி. படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
- கடந்த ஆண்டு நடந்த இம்ரான் கான் கட்சி போராட்டம் தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
- தொடர்ந்து ஆஜராகாத நிலையில் ஜாமீனில் வரமுடியாத வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
விசாரணைக்கு தொடர்ந்து ஆஜராக நிலையில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் சகோதரி அலீமா கானுக்கு ராவல்பிண்டி பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றம் 4ஆவது முறையாக ஜாமீனில் வெளிவரமுடியாத வாரண்ட் பிறப்பித்துள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ0இன்சாஃப் கட்சி நடத்திய போராட்டம் தொடர்பான வழக்கில் அலீமா கான் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. விசாரணையின்போது 11 பேரில் 10 பேர் ஆஜரான நிலையில், அலீமான கான் மட்டும் ஆஜராகவில்லை. இதனால் 4ஆவது முறையாக வாரண்ட் பிறப்பித்துள்ளது.
மேலும், ராவல் டிவிசன் எஸ்.பி. மற்றும் டிஎஸ்பி ஆகியோருக்கு போலி அறிக்கை தாக்கல் செய்ததற்காக நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இவர்கள் அலீமா கான் தலைமறைவாக உள்ளார் எனத் தெரிவித்துள்ளனர். ஆனால், இம்ரான் கான் அடைக்கப்பட்டுள்ள ஜெயில் மற்றும் சமூக வலைத்தள சேனல்களில் காணப்பட்டதால் நீதிமன்றம் போலீஸ் அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கடந்த விசாரணையின்போது இன்றைக்குள் அலீமா கானை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.
- பாகிஸ்தானில் நேற்று இரவு நிலநடுக்கம் பதிவானது.
- இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் லேசாக அதிர்ந்தன.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் நேற்று இரவு 8.52 மணிக்கு 3.8 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் பதிவானது என தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் லேசாக அதிர்ந்தன. இதனால் மக்கள் பீதியடைந்தனர். அதேவேளை, இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே, நேற்று அதிகாலை பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் முல்தான் நகரை மையமாகக் கொண்டு 4.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
- கடந்த 9 நாட்களுக்கு முன் சிறுமி காணாமல் போனார்.
- திடீரென மீடியா முன் திருமணம் செய்தவருடன் தோன்றினார்.
பாகிஸ்தானில் ஒருவாரத்திற்கு முன் காணாம் போன காது கேட்காத, வாய் பேசமுடியாத 15 வயது இந்து சிறுமியை, இஸ்லாம் மதத்திற்கு மாற்றி வயதான நபர் கட்டாயத் திருமணம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் சிந்து மாகாணத்தில் பதின் மாவட்டத்தில் உள்ள கோர்வா நகரைச் சேர்ந்த 15 வயது இந்து சிறுமிக்கு காதும் கேட்காது. வாய் பேசவும் முடியாது. இந்த சிறுமி கடந்த 9 நாட்களுக்கு முன் காணாமல் போனார். மகள் காணாமல் போனது குறித்து போலீசில் புகார் அளித்தனர்.
ஆனால், நேற்று அந்த சிறுமி பதின் பிரஸ் கிளப்பில் பத்திரிகையாளர்கள் முன் தோன்றினார். அப்போது, அவரை திருமணம் செய்தவரும், இந்து மதத்தில் இருந்து இஸ்லாமிற்கு மாறியதற்கான சான்றிதழுன் காணப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து தனது மகள் கடத்தப்பட்டு, மதமாற்றி கட்டாயத் திருமணம் நடைபெற்றுள்ளது என பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.
போதைப்பொருள் தரகரும், ஏழு பெண் குழந்தைகளுக்கு தந்தையுமானவரை எப்படி எனது மகள் திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவிப்பார் என பெற்றோர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
சிறுமி கடத்தப்பட்டுள்ளார். பெற்றோர்கள் புகார் அளித்தும் போலீசார் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என இந்துக்கள் மற்றும் மைனாரிட்டிகள் நலம் மற்றும் உரிமையாக்காக பணியாற்றும் தரவார் இட்டேகாத் பாகிஸ்தான் அமைப்பின் தலைவர் சிவா கச்சி குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், அந்த சிறுமி இதை விருப்பத்துடன் செய்திருக்க முடியாது என்று நாங்கள் நம்புவதால், வழக்கைத் தொடர எங்கள் வழக்கறிஞர்களிடம் பேசியுள்ளோம். தனி விசாரணை நடத்தக்கோரி சீனியர் போலீசார் அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளோம்" எனத் தெரிவித்துள்ளார்.






