என் மலர்tooltip icon

    டென்னிஸ்

    • இத்தாலியில் சேலஞ்சர் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.
    • இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்திய வீரர் சுமித் நாகல் வென்றார்.

    ரோம்:

    இத்தாலியில் நடக்கும் பெருகியா சேலஞ்சர் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்திய வீரர் சுமித் நாகல், போலந்தின் மாக்ஸ் கஸ்னிகோவ்ஸ்கி உடன் மோதினார்.

    இதில் சுமித் நாகல் 6-4, 7-5 என்ற நேர் செட்களில் வென்று அரையிறுதிக்கு முன்னேறி அசத்தினார்.

    • விம்பிள்டன் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி ஜூலை 1-ம் தேதி லண்டனில் தொடங்குகிறது.
    • இந்த சாம்பியன்ஷிப் போட்டி தொடரில் ஸ்பெயின் வீரர் நடால் விலகி உள்ளார்.

    மாட்ரிட்:

    ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஒபன், விம்பிள்டன், அமெரிக்க ஒபன் ஆகிய 4 கிராண்ட்ஸ்லாம் போட்டிகள் நடைபெறும்.

    இதற்கிடையே, விம்பிள்டன் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி ஜூலை மாதம் 1-ம் தேதி தொடங்கி 14-ம் தேதி வரை லண்டனில் நடைபெறுகிறது.

    இந்நிலையில், விம்பிள்டன் போட்டியில் இந்த முறை விளையாடப் போவதில்லை என முன்னாள் சாம்பியனான ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ரபெல் நடால் அறிவித்துள்ளார்.

    பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தயாராவதற்காக இந்த முடிவை எடுத்துள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார்.

    • பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் நிறைவடைந்த நிலையில் டென்னிஸ் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் நேற்று வெளியிட்டது.
    • அமெரிக்காவின் கோகோ காப் ஒரு இடம் உயர்ந்து 2 வது இடத்தை பிடித்துள்ளார். 2 வது இடத்தில் இருந்த பெலாரசின் சபலென்கா 3 வது இடத்துக்கு சரிந்தார்.

    பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் நிறைவடைந்த நிலையில் டென்னிஸ் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் நேற்று வெளியிட்டது. இதன்படி பெண்கள் ஒற்றையர் தரவரிசையில் பிரெஞ்சு ஓபனை 4 வது முறையாக வென்ற போலந்தின் இகா ஸ்வியாடெக் 'நம்பர் ஒன்' இடத்தில் கம்பீரமாக தொடருகிறார். அமெரிக்காவின் கோகோ காப் ஒரு இடம் உயர்ந்து 2 வது இடத்தை பிடித்துள்ளார். 2 வது இடத்தில் இருந்த பெலாரசின் சபலென்கா 3 வது இடத்துக்கு சரிந்தார்.

    பிரெஞ்சு ஓபனில் இறுதிசுற்று வரை முன்னேறி ஆச்சரியப்படுத்திய இத்தாலி வீராங்கனை பாவ்லினி 15 ல் இருந்து 7 வது இடத்துக்கு வந்துள்ளார். அவர் டாப் 10 இடத்திற்குள் நுழைவது இதுவே முதல் முறையாகும்.

    ஆண்கள் ஒற்றையர் தரவரிசையில் இத்தாலி இளம் வீரர் ஜானிக் சினெர் ஒரு இடம் அதிகரித்து முதல்முறையாக நம்பர் ஒன் இடத்துக்கு முன்னேறியுள்ளார். 'நம்பர் ஒன்' இடத்தை அலங்கரிக்கும் முதல் இத்தாலி நாட்டவர் என்ற பெருமையையும் பெற்றார். இதுவரை முதலிடத்தில் இருந்த செர்பியாவின் நோவக் ஜோகோவிச் பிரெஞ்சு ஓபனில் காயத்தால் 4 வது சுற்றுடன் வெளியேறியதால் நம்பர் ஒன் இடத்தை பறிகொடுத்ததுடன் 3 வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். ஜோகோவிச் தனது டென்னிஸ் வாழ்க்கையில் மொத்தம் 428 வாரங்கள் முதலிடத்தில் இருந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    அதே சமயம் பிரெஞ்சு ஓபன் பட்டத்தை முதல்முறையாக சொந்தமாக்கிய ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரஸ் ஒரு இடம் உயர்ந்து 2 வது இடத்தை பிடித்துள்ளார்.

    இந்திய வீரர் சுமித் நாகல் கிடுகிடுவென 18 இடங்கள் எகிறி 713 புள்ளிகளுடன் 77 வது இடத்தை பிடித்துள்ளார். இதன்மூலம் நாகல் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு செல்வதை ஏறக்குறைய உறுதி செய்துள்ளார்.

    ஒற்றையர் தரவரிசையில் முதல் 56 இடங்களை வகிக்கும் வீரர், வீராங்கனைகள் நேரடியாக ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற முடியும். ஆனால் தரவரிசையில் முன்னணியில் இருந்தாலும் ஒரு நாட்டில் இருந்து அதிகபட்சமாக 4 பேருக்கு மேல் ஒலிம்பிக்குக்கு செல்ல அனுமதி கிடையாது.

    உதாரணமாக ஆண்கள் பிரிவில் முதல் 56 இடத்திற்குள் 7 அமெரிக்க வீரர்கள் உள்ளனர். இவர்களில் 4 பேர் மட்டுமே ஒலிம்பிக்குக்கு தகுதி பெற முடியும். அடுத்த இடங்கள் தரவரிசையில் பின்தங்கி உள்ள வேறு நாட்டு வீரர்களுக்கும் செல்லும். அந்த வகையில் நாகல் ஒலிம்பிக்குக்கு தகுதி பெறும் நிலையில் இருக்கிறார். 2012 ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்குக்கு பிறகு டென்னிசில் ஒற்றையர் பிரிவில் களம் காணும் முதல் இந்தியர் என்ற சிறப்பை பெறுகிறார்.

    • கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்துவருகிறது.
    • இளம் வயதில் கிராண்ட்ஸ்லாம் வென்ற வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்துவருகிறது. இதில் முன்னணி வீரர்களின் ஜேர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரேவ் மற்றும் ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரஸ் பலப்பரீட்சை நடத்தினர்.

    பரபரப்பாக சென்ற இந்தப் போட்டியில் இருவரும் விடாப்பிடியாக நெருக்கடி கொடுத்து விளையாடினார்கள். ஆனாலும் கார்லஸ் அல்காரஸ் கடைசி இரு செட்களில் முன்னிலை வகித்தார்.

    இறுதியில் அவர் 6-3, 2-6, 5-7, 6-1, 6-2 என்ற செட் கணக்கில் அபார வெற்றி பெற்றார். இதன்மூலம் அவர் பிரெஞ்சு ஓபன் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார். இதன் மூலம் இளம் வயதில் கிராண்ட்ஸ்லாம் வென்ற வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

    பிரெஞ்ச் ஓபன் போட்டியில் 21 வயதில் க்ளே, கிராஸ் அண்ட் ஹார்ட் எனற மூன்று தளத்திலும் கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்ற முதல் நபர் கார்லோஸ் அல்காரஸ் ஆவார். இதற்கு முன் 2023 ஆம் ஆண்டில் விம்பில்டன் ஃபைனல் பட்டம் மற்றும் 2022 ஆம் ஆண்டு யூ.எஸ் ஓபன் ஃபைனல் பட்டத்தையும் இவர் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரிசில் நடைபெற்று வருகிறது.
    • இதில் போலந்து வீராங்கனை ஸ்வியாடெக் சாம்பியன் பட்டம் வென்றார்.

    பாரிஸ்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்துவருகிறது.

    பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக், இத்தாலி வீராங்கனை ஜாஸ்மின் பவ்லினியுடன் மோதினார்.

    இதில் ஸ்வியாடெக் 6-2, 6-1 என எளிதில் கைப்பற்றிசாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

    • ஜோகோவிச் 10.30 மணிக்கு போட்டியை தொடங்கியதால் அதிகாலை 3 மணிக்கு முடிவடைந்தது.
    • 8 மணிக்கு தொடங்காதது அமைப்பாளர்களின் தவறு என முன்னாள் வீரர் ஜான் மெக்என்ரோ குற்றச்சாட்டு.

    உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீரராக திகழ்ந்து வருபவர் செர்பியாவின் நோவக் ஜோகோவிச். நடால் உள்ளிட்ட முன்னிட்ட வீரர்கள் தொடக்கத்திலேயே வெளியேறியதால் ஜோகோவிச் பிரெஞ்சு ஓபனை கைப்பற்றுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் 4-வது சுற்றில் ஜோகோவிச் அர்ஜென்டினாவின் செருண்டோலோவை எதிர்கொண்டார். தரநிலையில் முதல் இடத்தில் இருந்த ஜோகோவிச்சுக்கு 23-ம் நிலை வீரரான செருண்டோலோ கடும் சவாலாக திகழ்ந்தார். இதனால் ஜோகோவிச் ஐந்து செட்கள் வரை விளையாட வேண்டியிருந்தது.

    4-வது செட்டில் விளையாடும்போது கால் மூட்டில் ஜோகோவிச்சிற்கு காயம் ஏற்பட்டது. அந்த காயத்துடன் விளையாடி வெற்றி பெற்றார். இதனால் காலிறுதியில் அவரால் விளையாட முடியாமல் போய்விட்டது. இதனால் போட்டியில் இருந்து வெளியேறியதுடன் நம்பர் ஒன் இடத்தையும் இழந்தார்.

    காயத்திற்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள இருக்கிறார். இதனால் விம்பிள்டனில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஒலிம்பிக்கில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் ஜோகோவிச்சை போட்டியை 10.30 மணிக்கு தொடங்கியதுதான் காயத்திற்கு முக்கிய காரணம் என முன்னாள் ஜாம்பவான் ஜான் மெக்என்ரோ போட்டி அமைப்பாளர் மீது குற்றம்சாட்டியுள்ளார்.

    இது தொடர்பாக ஜான் மெக்என்ரோ கூறுகையில் "3-வதுசுற்றில் டிமிட்ரோவ்- பெர்க்ஸ் இடையிலான போட்டி மழையால் ஒத்திவைக்கப்பட்டது இந்த போட்டி பாரீஸ் உள்ளூர் நேரப்படி 8 மணிக்கு ஜோகோவிச் விளையாடும் கோர்ட்டிற்கு மாற்றப்பட்டது. இந்த நேரத்தில் ஜோகோவிச் போட்டியை தொடங்கியிருக்க வேண்டும். ஆனால் அந்த நேரத்தில் போட்டியை தொடங்க முடியவில்லை.

    10.30 மணிக்குதான் போட்டி தொடங்கியது. ஐந்த செட் வரை நீடித்ததால் அதிகாலை 3 மணிக்குதான் போட்டி முடிவடைந்தது. இந்த போட்டியால் ஜோகோவிச் எத்தனை போட்டியை இழக்க போகிறார் என்பதை தெரியாமல் அமைப்பாளர்கள் மிகப்பெரிய தவறை செய்துவிட்டனர். காலநிலை (Weather) மிகவும் மோசமான இருந்தது. அது கஷ்டனமா நிலையை உருவாக்கியது." என்றார்.

    • ஐந்து செட்கள் வரை சென்ற நீண்ட நேர ஆட்டத்தில் அல்காரஸ் சின்னெரை வீழ்த்தினார்.
    • முதல் செட்டை இழந்த போதிலும், அடுத்த மூன்று செட்களையும் வரிசையாக கைப்பற்றினார் ஸ்வெரேவ்.

    பாரீஸ் நகரில் நடந்து வரும் 'கிராண்ட்ஸ்லாம்' அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி இறுதிகட்டத்தை நெருங்கிவிட்டது.

    இதில் நேற்றிரவு நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் அரையிறுதியின் முதல் போட்டியில் 2-ம் நிலை வீரர் ஜானிக் சின்னெர் (இத்தாலி), 3-ம் நிலை வீரர் கார்லஸ் அல்காரசை (ஸ்பெயின்) சந்தித்தார். இருவரும் நீயா-நானா என்று ஆக்ரோஷமாக ஆடியதால் ஆட்டம் சூடு பிடித்தது.

    முதல் 4 செட்டுகளை இருவரும் தலா 2 வீதம் வசப்படுத்திய நிலையில், கடைசி செட் மேலும் பரபரப்பானது. ஆனால் இறுதி செட்டில் ஆரம்பத்திலேயே சின்னெரின் சர்வீசை அல்காரஸ் 'பிரேக்' செய்ததால் அவரது கை ஓங்கியது. அதில் இருந்து மளமளவென கேம்ஸ்களை கைப்பற்றி அல்காரஸ் வெற்றிக்கனியையும் பறித்தார்.

    4 மணி 9 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் அல்காரஸ் 2-6, 6-3, 3-6, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் சின்னெரை வெளியேற்றி பிரெஞ்சு ஓபனில் முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.

    2-வது அரையிறுதி போட்டியில் கேஸ்பர் ரூட் (நார்வே), அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி) ஆகியோர் மோதினர். இந்த போட்டி அந்த அளவிற்கு பரபரப்பாக செல்லவில்லை. முதல் செட்டை ரூட் 2-6 எனக் கைப்பற்றினார். அதன்பின் ஸ்வெரேவ் ஆட்டத்திற்கு ரூட்டால் ஈடுகொடுக்க முடியவில்லை.

    அடுத்த மூன்று செட்டுகளையும் ஸ்வெரேவ் 6-2, 6-4, 6-2 என வரிசையாக கைப்பற்றி வெற்றி பெற்றார். இதனால் நாளை நடைபெறம் இறுதிப் போட்டியில் அல்காரஸ்- ஸ்வெரேவ் சாம்பியன் போட்டிக்காக பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.

    • பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரிசில் நடைபெற்று வருகிறது.
    • இதில் போலந்து வீராங்கனை ஸ்வியாடெக் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

    பாரிஸ்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்துவருகிறது.

    பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி போட்டியில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக், அமெரிக்காவின் கோகோ காப்புடன் மோதினார்.

    இதில் ஸ்வியாடெக் 6-2, 6-4 என எளிதில் கைப்பற்றி இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

    • பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரிசில் நடந்து வருகிறது.
    • ஆண்கள் இரட்டையர் பிரிவில் போபண்ணா ஜோடி அரையிறுதியில் தோற்றது.

    பாரீஸ்:

    கிராண்டஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    இந்நிலையில், ஆண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் ஜோடி-இத்தாலியின் சைமன் பொலேலி-ஆண்ட்ரியா வவசோரி ஜோடியுடன் மோதியது.

    இதில் போபண்ணா ஜோடி 5-7, 6-2, 2-6 என்ற செட் கணக்கில் தோற்று தொடரில் இருந்து வெளியேறியது.

    • புதிய தரவரிசையில் முதலிடத்தையும் இழக்கிறார்.
    • காயத்துக்கு உடனடியாக ஆபரேஷன் செய்ய ஜோகோவிச் முடிவு செய்துள்ளார்.

    பாரீஸ்:

    உலகின் 'நம்பர் ஒன்' டென்னிஸ் வீரரும், 24 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவருமான நோவக் ஜோகோவிச் (செர்பியா) பிரெஞ்சு ஓபனில் வலது கால்முட்டியில் ஏற்பட்ட காயத்தையும் பொருட்படுத்தாமல் 4-வது சுற்றில் 5 செட் வரை போராடி வெற்றி பெற்றார்.

    முட்டியில் வலி அதிகமானதால் ஸ்கேன் எடுத்து பார்த்த போது, ஜவ்வு கிழிந்திருப்பது தெரியவந்தது. இதனால் பிரெஞ்சு ஓபனில் காலிறுதிக்கு முன்பாக வெளியேறியதுடன், வருகிற 10-ந்தேதி வெளியாகும் புதிய தரவரிசையில் முதலிடத்தையும் இழக்கிறார்.

    இந்த நிலையில் காயத்துக்கு உடனடியாக ஆபரேஷன் செய்ய ஜோகோவிச் முடிவு செய்துள்ளார். ஆபரேஷனுக்கு பிறகு அதில் இருந்து மீள்வதற்கு 3 முதல் 6 வாரங்கள் ஆகும். எனவே அடுத்த மாதம் (ஜூலை) 1-ந்தேதி தொடங்கும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியை தவற விடும் ஜோகோவிச், அதே மாத கடைசியில் நடக்கும் பாரீஸ் ஒலிம்பிக்கிலும் பங்கேற்பது சந்தேகமாகியுள்ளது.

    • பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரிசில் நடைபெற்று வருகிறது.
    • இதில் கஜகஸ்தான் வீராங்கனை ரிபாகினா காலிறுதியில் தோல்வி அடைந்தார்.

    பாரிஸ்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்துவருகிறது. 4வது சுற்று முடிந்து காலிறுதிப் போட்டிகள் இன்று நடந்தன.

    இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி போட்டியில் கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரிபாகினா, இத்தாலி வீராங்கனை ஜாஸ்மின் பாவ்லினியுடன் மோதினார்.

    இதில் ரிபாகினா முதல் செட்டை 1-6 என இழந்தார். அடுத்த செட்டை ரிபாகினா 6-4 என கைப்பற்றினார். இதையடுத்து, வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை ரிபாகினா 4-6 என இழந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

    இதன்மூலம் முன்னணி வீராங்கனையான ரிபாகினாவை வீழ்த்தி இத்தாலி வீராங்கனை பாவ்லினி அரையிறுதிக்கு முன்னேறி அசத்தினார்.

    • பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரிசில் நடந்து வருகிறது.
    • ஆண்கள் இரட்டையர் பிரிவில் போபண்ணா ஜோடி காலிறுதியில் வென்றது.

    பாரீஸ்:

    கிராண்டஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    இந்நிலையில், ஆண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் ஜோடி-பெல்ஜியத்தின் சாண்டர் ஜில்-ஜோரன் லீகன் ஜோடியுடன் மோதியது.

    இதில் போபண்ணா ஜோடி 7-6 (7-3), 5-7, 6-1 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

    நாளை நடைபெறும் அரையிறுதியில் இத்தாலி ஜோடியை எதிர்கொள்கிறது.

    ×