என் மலர்
டென்னிஸ்
- 3-ம் நிலை வீரரான கார்லோஸ் அல்காரஸ் (ஸ்பெயின்) கால்இறுதி ஆட்டத்தில் 9-வது வரிசையில் உள்ள சிட்சிபாசை (கிரீஸ்) எதிர்கொண்டார்.
- முதல் நிலை வீரரான ஜோகோவிச் (செர்பியா) காயத்தால் கால் இறுதியில் வெளியேறினார்.
பாரீஸ்:
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீசில் நடைபெற்று வருகிறது. 3-ம் நிலை வீரரான கார்லோஸ் அல்காரஸ் (ஸ்பெயின்) கால்இறுதி ஆட்டத்தில் 9-வது வரிசையில் உள்ள சிட்சிபாசை (கிரீஸ்) எதிர்கொண்டார்.
இதில் அல்காரஸ் 6-3-7-6 (7-3), 6-4 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறினார். அவர் அரைஇறுதியில் 2-ம் நிலை வீரரான ஜானனிக் சின்னரை (இத்தாலி) சந்திக்கிறார்.
முதல் நிலை வீரரான ஜோகோவிச் (செர்பியா) காயத்தால் கால் இறுதியில் வெளியேறினார். இதனால் 7-ம் நிலை வீரர் கேஸ்பர் ரூட் (நார்வே) அரையிறுதி வாய்ப்பை பெற்றார்.
அவர் அரை இறுதியில் அலெக்சாண்டர் சுவரேவ் (ஜெர்மனி) அலெக்ஸ் டி மினாரை (ஆஸ்திரேலியா) சந்திக்கிறார்.
- ஒரு காலிறுதி ஆட்டத்தில் அமெரிக்காவின் கோகோ காப், துனிசியாவின் ஒன்ஸ் ஜபீர் உடன் மோதினார்.
- மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் போலந்தின் இகா ஸ்வியாடெக், செக் குடியரசின் மார்கெட்டா வாண்ட்ரோசோவா உடன் மோதினார்.
பாரீஸ்:
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டங்கள் இன்று நடைபெற்றன.
இதில் ஒரு காலிறுதி ஆட்டத்தில் அமெரிக்காவின் கோகோ காப், துனிசியாவின் ஒன்ஸ் ஜபீர் உடன் மோதினார். இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 4-6 என்ற புள்ளிக்கணக்கில் இழந்த கோகோ காப் ஆட்டத்தின் அடுத்த இரு செட்களை 6-2, 6-3 என்ற செட் கணக்கில் கைப்பற்றினார்.இதன் மூலம் கோகோ காப் 4-6, 6-2, 6-3 என்ற புள்ளிக்கணக்கில் துனிசியாவின் ஒன்ஸ் ஜபீரை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் போலந்தின் இகா ஸ்வியாடெக், செக் குடியரசின் மார்கெட்டா வாண்ட்ரோசோவா உடன் மோதினார்.
இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமாக செயல்பட்ட இகா ஸ்வியாடெக் 6-0, 6-2 என்ற நேர் செட் கணக்கில் மார்கெட்டா வாண்ட்ரோசோவாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். நாளை மறுநாள் நடைபெறும் ஒரு அரையிறுதி ஆட்டத்தில் இகா ஸ்வியாடெக் - கோகோ காப் மோத உள்ளனர்.
- ஜோகோவிச் (செர்பியா) 4-வது சுற்றில் அர்ஜென்டினாவை சேர்ந்த பிரான்சிஸ்கோ செருன்டோலோவை எதிர்கொண்டார்.
- பெண்கள் பிரிவில் கால் இறுதி ஆட்டம் இன்று நடக்கிறது.
பாரிஸ்:
கிராண்ட் சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரிசில் நடைபெற்று வருகிறது.
உலகின் முதல் நிலை வீரரும், 24 கிராண்ட் சிலாம் பட்டங்களை வென்ற சாதனையாளருமான ஜோகோவிச் (செர்பியா) 4-வது சுற்றில் அர்ஜென்டினாவை சேர்ந்த பிரான்சிஸ்கோ செருன்டோலோவை எதிர்கொண்டார்.
இதில் ஜோகோவிச் 6-1, 5-7, 3-6 7-5 , 6-3 என்ற செட் கணக்கில் போராடி வென்று கால் இறுதிக்கு முன்னேறினார்.
மற்ற ஆட்டங்களில் 4-வது வரிசையில் உள்ள அலெக்சாண்டர் சுவரேவ் (ஜெர்மனி), 7-ம் நிலை வீரரான கேஸ்பர் ரூட் (நார்வே) ஆகியோரும் கால் இறுதிக்கு தகுதி பெற்றனர்.
5-ம் நிலை வீரரான மெட்வதேவ் (ரஷியா) 4-வது சுற்றில் அதிர்ச்சிகரமாக தோற்றார். பெண்கள் பிரிவில் கால் இறுதி ஆட்டம் இன்று நடக்கிறது.
- டென்னிஸ் போட்டி உள்ளூர் நேரப்படி அதிகாலை 3 மணி அளவில் முடிந்தது.
- பணிகளை முடிக்கவே குறைந்தபட்சம் அதிகாலை 7 மணி ஆகிவிடும்.
பிரெஞ்சு ஓபன் மற்றும் இதர டென்னிஸ் போட்டி தொடர்கள் நடத்தப்படும் விதம் சரியாக இருப்பதாக தனக்கு தெரியவில்லை என்று பிரபல டென்னிஸ் வீராங்கனை கோகோ கௌஃப் வருத்தம் தெரிவித்துள்ளார்.
டென்னிஸ் போட்டிகள் பொதுவாக நடத்தப்படும் விதம், பிரெஞ்சு ஓபன் போட்டிகளின் அட்டவணை என ஒட்டுமொத்த டென்னிஸ் போட்டிகளின் திட்டமிடல்களை கோகோ கௌஃப் கடுமையாக சாடியுள்ளார். முன்னதாக நடைபெற்ற டென்னிஸ் போட்டி உள்ளூர் நேரப்படி அதிகாலை 3 மணி அளவில் முடிந்தது, உடல்நலத்துக்கு நல்லதல்ல என்று அவர் தெரிவித்தார்.
"அதிகாலை 3 மணிக்கு போட்டிகளை முடிப்பது, பல சமயங்களில் நீங்கள் போட்டி முடிந்ததாக நினைக்கலாம். ஆனால் அதன் பிறகு, உங்களுக்கென சில கடமைகள் இருக்கும்- அவற்றை செய்து முடிக்க வேண்டும். இந்த பணிகளை முடிக்கவே குறைந்தபட்சம் அதிகாலை 7 மணி ஆகிவிடும்."
"இது உடல்நலனுக்கு நல்லது இல்லை என்றே நினைக்கிறேன். போட்டியில் தாமதமாக விளையாட வேண்டும் என்போருக்கு இது சரியாக இருக்காது, ஆனால் இது உங்களது அட்டவணையை அடியோடு மாற்றிவிடும். அதிக நேரம் கால தாமதத்துடன் போட்டியை நான் இதுவரை முடித்ததில்லை என்ற வகையில், நான் அதிர்ஷ்டசாலியாகவே கருதுகிறேன்," என்று கோகோ கௌஃப் தெரிவித்தார்.
- 4-வது சுற்று ஆட்டத்தில் அலெக்ஸ் டி மினார் மற்றும் டேனியல் மெட்வதேவ் மோதினர்.
- முதல் செட்டை வென்ற மெட்வதேவ் அடுத்த 3 செட்டை எளிதாக கோட்டைவிட்டார்.
பாரீஸ்:
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீசில் களிமண் தரை மைதானங்களில் நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான 4-வது சுற்று ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார் மற்றும் டேனியல் மெட்வதேவ் மோதினர்.
முதல் செட்டை வென்ற மெட்வதேவ் அடுத்த 3 செட்டை எளிதாக கோட்டைவிட்டார். இதனால் 4-6, 6-2, 6-1, 6-3 என்ற செட் கணக்கில் அலெக்ஸ் டி மினாரிடம் மெட்வதேவ் தோல்வியைத் தழுவினார்.
- கஜகஸ்தானின் எலினா ரைபகினா, உக்ரைனின் எலினா ஸ்விடோலினாவை எதிர்கொண்டார்.
- அரினா சபலெங்கா, அமெரிக்காவின் எம்மா நவரோவை எதிர் கொண்டார்.
பாரீஸ்:
'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீசில் களிமண் தரை மைதானங்களில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான கஜகஸ்தானின் எலினா ரைபகினா, உக்ரைனின் எலினா ஸ்விடோலினாவை எதிர்கொண்டார்.
இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமாக செயல்பட்ட ரைபகினா 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் உக்ரைனின் எலினா ஸ்விடோலினாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
அதேபோல மற்றொரு ஆட்டத்தில் உலகத் தரவரிசையில் இரண்டாம் நிலை வீராங்கனையான அரினா சபலெங்கா, அமெரிக்காவின் எம்மா நவரோவை எதிர் கொண்டார். இதில் 6-2, 6-3 என்ற செட் கணக்கில் எம்மா நவரோவை வீழ்த்தி சபலெங்கா காலிறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
- டிமிட்ரோவ் போலந்தின் ஹர்காக்சை வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறினார்.
- அல்காரஸ், சிட்சிபாஸ் ஆகியோரும் கால் இறுதிக்கு தகுதி பெற்றனர்.
பாரீஸ்:
கிராண்ட்சிலாம் போட்டியான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இத்தாலி வீரர் சினெர்-பிரான்சின் மவுடெட் மோதினர். இதில் சினெர் 2-6, 6-3, 6-2, 6-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதிக்கு தகுதி பெற்றார்.
நேற்று நடந்த 4-வது சுற்று ஆட்டத்தில் டிமிட்ரோவ் (பல்கேரியா-7-6 (7-5), 6-4, 7-6 (7-3) என்ற செட் கணக்கில் போலந்தின் ஹர்காக்சை வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறினார்.
அதே போல அல்காரஸ் (ஸ்பெயின்), சிட்சிபாஸ் (கிரீஸ்) ஆகியோரும் கால் இறுதிக்கு தகுதி பெற்றனர்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் கால் இறுதிக்கு ஸ்வியாடெக் (போலந்து)-வோன்ட்கோவா (செக்குடியரசு), கோகோ காப் (அமெரிக்கா)-ஜபீர் (துனிசியா) ஆகியோர் தகுதி பெற்றனர்.
- பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரிசில் நடந்து வருகிறது.
- ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் போபண்ணா ஜோடி வென்றது.
பாரீஸ்:
கிராண்டஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் ஜோடி- பிரேசிலின் மார்செலோ-ஓர்லாண்டோ ஜோடியுடன் மோதியது.
இதில் போபண்ணா ஜோடி 7-5, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் வென்று 2-வது சுற்றுக்கு முன்னேறியது.
- பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரிசில் நடைபெற்று வருகிறது.
- இதில் ஸ்பெயினின் அல்காரஸ் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
பாரீஸ்:
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்துவருகிறது. 3 சுற்றுகள் முடிந்து 4-வது சுற்றுப் போட்டிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 4-வது சுற்று போட்டியில் மூன்றாம் நிலை வீரரான ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரஸ்,
கனடா வீரர் பெலிக்ஸ் ஆகருடன் மோதினார்.
இதில் அல்காரஸ் 6-3, 6-3, 6-1 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், இத்தாலி வீரர் மேட்டியோ அர்னால்டுடன் மோதினார். இதில் முதல் செட்டை சிட்சிபாஸ் 3-6 என இழந்தார். இதையடுத்து, சுதாரித்துக் கொண்ட சிட்சிபாஸ் 7-6 (7-4), 6-2, 6-2 என கைப்பற்றி காலிறுதிக்கு முன்னேறினார்.
- பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரிசில் நடைபெற்று வருகிறது.
- இதில் போலந்து வீராங்கனை ஸ்வியாடெக் காலிறுதிக்கு முன்னேறினார்.
பாரிஸ்:
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்துவருகிறது. மூன்று சுற்றுகள் முடிந்து 4-வது சுற்றுப் போட்டிகள் இன்று நடந்தன.
இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவின் 4-வது சுற்று போட்டியில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக், ரஷிய வீராங்கனை அனஸ்டாசியாவுடன் மோதினார்.
இதில் ஸ்வியாடெக் 6-0, 6-0 என எளிதில் கைப்பற்றி காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் கோகோ காப், இத்தாலியின் எலிசபெட்டா கோசியாரெட்டோவை எதிர்கொண்டார். இதில் கோகோ காப் 6-1, 6-2 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.
- பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீசில் நடைபெற்று வருகிறது.
- கின்வென் ஜெங் 3-வது சுற்றில் அதிர்ச்சிகரமாக தோற்றார்.
பாரீஸ்:
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீசில் நடைபெற்று வருகிறது.
உலகின் முதல் நிலை வீரரும், 24 கிராண்ட் சிலாம் பட்டங்களை வென்ற சாதனையாளருமான ஜோகோவிச் (செர்பியா) 3-வது சுற்றில் 7-5 ,6-7 (6-8), 2-6 6-3, 6-0 என்ற செட் கணக்கில் இத்தாலியை சேர்ந்த 30-ம் நிலை வீரரான லாரன்சோ முசெட்டியை வீழ்த்தி 4-வது ரவுண்டுக்கு முன்னேறினார்.
மற்ற ஆட்டங்களில் 4-வது வரிசையில் உள்ள அலெக்சாண்டர் சுவரேவ் ( ஜெர்மனி), 5-ம் நிலை வீரரான மெட்வதேவ் (ரஷியா), கேஸ்பர் ரூட் (நார்வே) ஆகியோரும் 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் 2-வது வரிசையில் இருக்கும் ஷபலென்கா (பெலாரஸ்), நான்காம் நிலை வீராங்கனை எலினா ரைபகினா ( கஜகஸ்தான்) ஆகியோர் 3-வது சுற்றில் வெற்றி பெற்றனர்.

7-வது வரிசையில் உள்ள சீனாவை சேர்ந்த கின்வென் ஜெங் 3-வது சுற்றில் அதிர்ச்சிகரமாக தோற்றார். ரஷியாவை சேர்ந்த எலினா அவனேசியன் 3-6, 6-3, 7-6 (10-6) என்ற செட் கணக்கில் அவரை வீழ்த்தினார்.
- பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரிசில் நடைபெற்று வருகிறது.
- இதில் ரஷியாவின் மெத்வதேவ் 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.
பாரிஸ்:
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்துவருகிறது. இரு சுற்றுகள் முடிந்து 3-வது சுற்றுப் போட்டிகள் இன்று நடந்தன.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று போட்டியில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், செக் வீரர் தாமஸ் மசாக்குடன் மோதினார்.
இதில் மெத்வதேவ் முதல் இரு செட்டை 7-6 (7-4), 7-5 என கைப்பற்றினார். தாமஸ் மசாக் 3வது செட்டை 6-1 என கைப்பற்றினார்.
நான்காவது செட்டை மெத்வதேவ் 6-4 என வென்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.






