என் மலர்tooltip icon

    டென்னிஸ்

    • ஜெர்மனியில் பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
    • 2வது சுற்றில் இத்தாலி வீராங்கனை அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    பெர்லின்:

    பெண்கள் மட்டும் பங்கேற்கும் பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்து வருகிறது. தற்போது இரண்டாவது சுற்று போட்டிகள் நடந்து வருகிறது.

    இன்று நடந்த ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இத்தாலி வீராங்கனையான ஜாஸ்மின் பவுலினி, துனீசியாவின் ஒன்ஸ் ஜபேர் உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய ஒன்ஸ் ஜபேர் 6-1, 6-3 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார். இதன்மூலம் முன்னணி வீராங்கனையான ஜாஸ்மின் பவுலினி அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

    • ஜெர்மனியில் ஹாலே ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
    • ரஷியாவின் டேனில் மெத்வதேவ் 2வது சுற்றில் வெற்றி பெற்றார்.

    பெர்லின்:

    ஆண்கள் மட்டும் பங்கேற்கும் ஹாலெ ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்து வருகிறது. தற்போது 2வது சுற்று போட்டிகள் நடந்து வருகிறது.

    ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், பிரான்ஸ் வீரர் குயிண்டின் ஹாலிஸ் உடன் மோதினார்.

    இதில் அதிரடியாக ஆடிய மெத்வதேவ் 6-2, 7-5 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    • 2-வது சுற்று ஆட்டத்தில் ஸ்பானிஷ் வீராங்கனை பவுலா படோசா மற்றும் அமெரிக்கா வீராங்கனை எம்மா நவரோ ஆகியோர் மோதினர்.
    • இந்த ஆட்டத்தின் முதல் செட் பரபரப்பாக சென்றது.

    பெண்கள் மட்டும் பங்கேற்கும் பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 2-வது சுற்று ஆட்டத்தில் ஸ்பானிஷ் வீராங்கனை பவுலா படோசா கிபர்ட் மற்றும் அமெரிக்கா வீராங்கனை எம்மா நவரோ ஆகியோர் மோதினர்.

    இந்த பரபரப்பான ஆட்டத்தில் முதல் செட்டை பவுலா 7-2 என்ற கணக்கிலும் 2-வது செட்டை 6-3 என்ற செட் கணக்கில் கைப்பற்றினார். இதன்மூலம் பவுலா அடுத்த சுற்று முன்னேறினார்.

    • ஜெர்மனியில் ஹாலே ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
    • முதல் சுற்றில் நம்பர் 1 வீரரான சின்னர் வெற்றி பெற்றார்.

    பெர்லின்:

    ஆண்கள் மட்டும் பங்கேற்கும் ஹாலெ ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்து வருகிறது. தற்போது முதல் சுற்று போட்டிகள் நடந்து வருகிறது.

    ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் நம்பர் 1 வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னர், ஜெர்மனியின் யானிக் ஹன்மான் உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய சின்னர் 7-5, 6-3 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் ரஷியாவின் ஆண்ட்ரே ரூப்லெவ் 6-3, 6-4 என்ற செட் கணக்கில் ஆஸ்திரியாவின் செபாஸ்டியன் ஆப்னரை வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

    • ஜெர்மனியில் பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
    • முதல் சுற்றில் ஜப்பான் வீராங்கனை தோல்வி அடைந்தார்.

    பெர்லின்:

    பெண்கள் மட்டும் பங்கேற்கும் பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்து வருகிறது. தற்போது முதல் சுற்று போட்டிகள் நடந்து வருகிறது.

    இன்று நடந்த ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா, ரஷியாவின் சாம்சோனோவா உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய சாம்சோனோவா 3-6, 7-6 (7-3), 6-4 என்ற செட் கணக்கில் வென்றார். இதன்மூலம் முன்னணி வீராங்கனையான நவோமி ஒசாகா அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

    • உலக டென்னிஸ் சங்கம் அறிவித்துள்ளது.
    • WTA 250 டென்னிஸ் தொடர் போட்டிகள் நடைபெற உள்ளன.

    250 சர்வதேச புள்ளிகளை கொண்ட WTA மகளிர் டென்னிஸ் தொடர் வரும் அக்டோபரில் சென்னையில் 2 கட்டங்களாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என உலக டென்னிஸ் சங்கம் அறிவித்துள்ளது.

    அதன்படி நடப்பாண்டு அக்டோபர் மாதம் 27 ஆம் தேதி WTA 250 மகளிர் டென்னிஸ் தொடர் சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள டென்னிஸ் ஸ்டேடியத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த 2022 ஆம் ஆண்டு சென்னையில் WTA 250 டென்னிஸ் போட்டிகள் நடைபெற்ற நிலையில் அதன் பின்னர் சுமார் 3 ஆண்டுகளுக்குப் பின்னர் சென்னையில்WTA 250 டென்னிஸ் தொடர் போட்டிகள் மீண்டும் நடைபெற உள்ளன.

    • ஜெர்மன் ஓபன் டென்னிஸ் தொடர் பெர்லினில் நடந்து வருகிறது.
    • தகுதிச் சுற்றில் கிரீஸ் வீராங்கனை தோல்வி அடைந்தார்.

    பெர்லின்:

    பெண்கள் மட்டும் பங்கேற்கும் ஜெர்மன் ஓபன் டென்னிஸ் தொடர் பெர்லினில் நடந்து வருகிறது. தற்போது தகுதிச்சுற்று போட்டிகள் நடந்து வருகிறது.

    நேற்று நடந்த ஒற்றையர் பிரிவு தகுதிச்சுற்றில் கிரீஸ் வீராங்கனை மரியா சக்காரி, சுவிட்சர்லாந்தின் ரெபேகா மசரோவா உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய ரெபேகா மசரோவா 7-6 (7-1), 7-5 என்ற செட் கணக்கில் வென்றார். இதன்மூலம் தரவரிசையில் 12வது இடத்தில் உள்ள மரியா சக்காரி அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

    • குயின்ஸ் கிளப் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.
    • இறுதிப்போட்டியில் அமெரிக்காவின் அனிசிமோவா அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    லண்டன்:

    குயின்ஸ் கிளப் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.

    இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் அமெரிக்காவின் அனிசிமோவா, ஜெர்மனியின் தத்ஜனா மரியா உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய மரியா 6-3, 6-4 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

    • குயின்ஸ் கிளப் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.
    • அரையிறுதியில் அமெரிக்காவின் மேடிசன் கீஸ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    லண்டன்:

    குயின்ஸ் கிளப் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.

    இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி சுற்றில் அமெரிக்காவின் மேடிசன் கீஸ், ஜெர்மனியின் தத்ஜனா மரியா உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய மரியா 6-3, 7-6 (7-3) என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் அனிசிமோவா 6-2, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் சீனாவின் குயின்வென் ஜெங்கை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் அனிசிமோவா, மரியா உடன் மோதுகிறார்.

    • விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடக்கிறது.
    • இந்தப் போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.620 கோடியாகும்

    லண்டன்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் மிக உயரியதான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் வரும் 30-ம் தேதி தொடங்கி, ஜூலை 13-ம் தேதி வரை லண்டனில் நடக்கிறது.

    இந்நிலையில், இந்தப் போட்டிக்கான பரிசுத்தொகை விவரத்தை ஆல் இங்கிலாந்து டென்னிஸ் கிளப் அறிவித்துள்ளது.

    இதன்படி, போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.620 கோடியாகும். இது சென்ற ஆண்டை விட 7 சதவீதம் அதிகமாகும்.

    ஒற்றையர் பிரிவில் பட்டம் வெல்லும் வீரர், வீராங்கனை தலா ரூ.34 கோடியை பரிசுத் தொகையாக அள்ளுவார்கள். முந்–தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது இது 11.1 சதவீதம் கூடுதலாகும். 2-வது இடத்தைப் பிடிப்போருக்கு ரூ.17¾ கோடி கிடைக்கும்.

    இரட்டையரில் வாகை சூடும் ஜோடிக்கு ரூ.8 கோடி வழங்கப்படும்.

    ஒற்றையர் முதலாவது சுற்றில் தோற்கும் வீரர், வீராங்கனை கூட ரூ.76 லட்சம் பரிசுடன் தான் வெளியேறுவார்கள்.

    • குயின்ஸ் கிளப் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.
    • காலிறுதியில் அமெரிக்காவின் மேடிசன் கீஸ் வெற்றி பெற்றார்.

    லண்டன்:

    குயின்ஸ் கிளப் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.

    இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் அமெரிக்காவின் மேடிசன் கீஸ், ரஷியாவின் டயானா ஷ்னைடர் உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய மேடிசன் கீஸ் 2-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் அனிசிமோவா 6-3, 6-3 என்ற செட் கணக்கில் சக நாட்டு வீராங்கனை எம்மா நவாரோவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

    • குயின்ஸ் கிளப் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.
    • காலிறுதியில் கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரிபாகினா தோல்வி அடைந்தார்.

    லண்டன்:

    குயின்ஸ் கிளப் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.

    இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரிபாகினா, ஜெர்மனியின் தத்ஜனா மரியா உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய மரியா 6-4, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். இதன்மூலம் எலினா ரிபாகினா தொடரில் இருந்து வெளியேறினார்.

    ×