என் மலர்
கிரிக்கெட் (Cricket)
- தவறான திருமண வாக்குறுதிகள் மூலம் பாலியல் செயல்களில் ஈடுபடுதல் பிரிவில் எப்.ஐ. ஆர். பதிவாகியுள்ளது.
- இந்த குற்றத்துக்காக 10 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படலாம்.
லக்னோ:
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள். ஆஸ்திரேலியா சென்ற இந்திய 'ஏ' அணியில் அவர் இடம் பெற்று இருந்தார்.
இதற்கிடையே யாஷ் தயாள் மீது பெண் ஒருவர் திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக புகார் அளித்து இருந்தார்.
உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தை சேர்ந்த அந்தப் பெண் முதல்-மந்திரியின் ஆன்லைன் குறை தீர்க்கும் போர்டல் மூலம் புகார் அளித்துள்ளார்.
அந்தப் பெண் தனது புகாரில் கடந்த 5 ஆண்டுகளாக கிரிக்கெட் வீரருடன் உறவில் இருந்தேன். திருமணம் செய்வதாக கூறி பலமுறை செக்ஸ் தொந்தரவு கொடுத்தார். உடல் ரீதியாக நான் மிகவும் பாதிக்கப்பட்டேன் என்று குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் யாஷ் தயாள் அவரது குடும்பத்தினருக்கு தன்னை மருமகள் என்று அறிமுகப்படுத்தியதாகவும், இது அவரை முழுமையாக நம்ப வைத்ததாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த மாதம் 24-ந்தேதி இந்த புகார் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் பெண் புகாரின் அடிப்படையில் கிரிக்கெட் வீரர் யாஷ் தயாள் மீது பாலியல் துன்புறுத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
முதல் கட்ட விசாரணைக்கு பிறகு இந்திய தண்டனை சட்டம் 69-வது பிரிவின் கீழ் வழக்கு பதிவாகி இருக்கிறது. ஏமாற்றுதல் அல்லது தவறான திருமண வாக்குறுதிகள் மூலம் பாலியல் செயல்களில் ஈடுபடுதல் பிரிவில் எப்.ஐ. ஆர். பதிவாகியுள்ளது.
இந்த குற்றத்துக்காக 10 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படலாம்.
யாஷ் தயாள் சமீபத்தில் நடந்து முடிந்த ஐ.பி.எல். போட்டியில் 13 விக்கெட்டுகளை வீழ்த்தி பெங்களூரு அணி கோப்பையை வெல்ல முக்கிய பங்கு வகித்தார்.
- ஜோரூட்டை அவர் அவுட் செய்த பந்து தொடரின் சிறந்த பந்தாக இருக்கும் என்பது எனது கருத்தாகும்.
- ஜான்டி ரோட்சை போல முகமது சிராஜ் கேட்ச் பிடித்ததை ரசித்தேன்.
மும்பை:
இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 336 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றிக்கு கேப்டன் சுப்மன்கில்லின் அபாரமான பேட்டிங்கும் (430 ரன்), ஆகாஷ்தீப், முகமது சிராஜ் (17 விக்கெட்) ஆகியோரின் சிறப்பான பந்து வீச்சும் காரணமாக இருந்தது.
இந்த டெஸ்டில் 10 விக்கெட் வீழ்த்திய (முதல் இன்னிங்சில் 4, 2-வது இன்னிங்சில் 6) ஆகாஷ் தீப்பை கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பாராட்டி உள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறி இருப்பதாவது:-
அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மன்கில் கில்லுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். இந்திய அணியை அபாரமான வெற்றிக்கு அழைத்து சென்ற அவரை பாராட்டுகிறேன். 2-வது இன்னிங்சில் ரிஷப்பண்ட், கே.எல்.ராகுல், ஜடேஜா ஆகியோர் சிறப்பாக பேட்டிங் செய்தனர்.
இந்த டெஸ்டில் இந்திய அணி இங்கிலாந்தை முற்றிலுமாக வெளியேற்றிய அணுகுமுறை நன்றாக இருந்தது. பந்து வீச்சாளர்கள் என்னை மிகவும் கவர்ந்தார்கள். அவர்கள் பந்து வீசிய நேர்த்தியை சொல்ல தேவையில்லை. ஆகாஷ்தீப் ஒரு தனித்துவமான பந்து வீச்சாளர். ஜோரூட்டை அவர் அவுட் செய்த பந்து தொடரின் சிறந்த பந்தாக இருக்கும் என்பது எனது கருத்தாகும். ஜான்டி ரோட்சை போல முகமது சிராஜ் கேட்ச் பிடித்ததை ரசித்தேன்.
இவ்வாறு டெண்டுல்கர் கூறி உள்ளார்.
- 334 பந்துகளில் 367 ரன்கள் எடுத்திருந்த நிலையில் முல்டர் டிக்ளேர் செய்தது பெரும் பேசுபொருளானது.
- முல்டர் இன்னும் 34 ரன்கள் அடித்திருந்தால் லாராவின் 400 ரன்கள் சாதனையை முறியடித்திருக்கலாம்.
தென்ஆப்பிரிக்கா- ஜிம்பாப்வே இடையிலான 2ஆவது டெஸ்ட் புலவாயோவில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி 626 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. கேப்டனாக செயல்பட்ட முதல் போட்டியிலேயே முச்சதம் விளாசி அசத்தினார் முல்டர். 334 பந்துகளில் 367 ரன்கள் எடுத்திருந்த நிலையில் முல்டர் டிக்ளேர் செய்தது பெரும் பேசுபொருளானது.
முல்டர் இன்னும் 34 ரன்கள் அடித்திருந்தால் லாராவின் 400 ரன்கள் என்ற வரலாற்று சாதனையை முறியடித்திருக்கலாம். அவர்தான் கேப்டன். இதனால் டிக்ளேர் முடிவை அவர்தான் எடுக்க வேண்டும். 3 நாட்களுக்கு மேல் இருந்த போதிலும், அவர் டிக்ளேர் செய்தார்.
2 ஆம் நாள் ஆட்ட முடிவிற்கு பிறகு பேசிய தென் ஆப்பிரிக்க கேப்டன், "பிரையன் லாரா ஒரு லெஜண்ட், அந்த அந்தஸ்துள்ள ஒருவர் அந்த சாதனையை தக்கவைத்துக்கொள்வது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும்
எனக்கு மீண்டும் அந்த சாதனையை முறியடிக்க வாய்ப்பு கிடைத்தால், நான் இப்போது செய்ததை தான் அப்போதும் செய்வேன். நான் டிக்ளேர் செய்வது குறித்து பயிற்சியாளரிடமும் பேசினேன். சில சாதனைகள் லெஜண்டுகளுடன் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட லெஜண்டுகளில் ஒருவர் லாரா" என்று தெரிவித்தார்.
லாரா 2004-ல் இங்கிலாந்துக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 400 ரன்கள் அடித்தது, டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிகபட்ச தனிநபர் ஸ்கோராக இருந்து வருகிறது.
மேத்யூ ஹைடன் 2003-ல் 380 ரன்களும், லாரா 1994-ல் 375 ரன்களும், ஜெயவர்த்தனே 2006-ல் 374 ரன்களும், கேரி சோபர்ஸ் 1958-ல் ஆட்டமிழக்காமல் 365 ரன்களும் அடித்துள்ளனர்.
- ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதமாக இருந்தது.
- வேகப்பந்து வீச்சு, சுழற்பந்து வீச்சு என எதற்கும் ஒத்துழைக்கவில்லை.
இந்தியா- இங்கிலாந்து இடையிலான 2ஆவது டெஸ்ட் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. என்ற போதிலும் இங்கிலாந்து ஆடுகளத்திற்குரிய ஸ்விங் மிகப்பெரிய அளவில் இல்லை. பேட்டிங்கிற்கு சொர்க்கமாக இருந்தது.
பேஸ்பால் எனச் சொல்லிக் கொண்டு ஆடுகளத்தை பிளாட்டாக்குவதாக இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு மீது விமர்சனம் வைக்கப்படுகிறது. இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி கேப்டன் கம்மின்ஸ், ஆடுகளத்தை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக பேட் கம்மின்ஸ் கூறியதாவது:-
இதுபோன்ற ஆடுகளத்தில் யார் பந்து வீச்சாளராக விரும்புவார்கள். இங்கிலாந்து கிரிக்கெட்டில் இது 3ஆவது மிகவும் மோசமான பிளாட் பிட்ச்.
ஆஸ்திரேலியா- வெஸ்ட் இண்டீஸ் போட்டியை இந்தியா- இங்கிலாந்து எட்ஜ்பாஸ்டன் போட்டியுடன் ஒப்பிடும்போது இரண்டு வேறுபட்ட விளையாட்டாக தெரிகிறது. இந்தியா- இங்கிலாந்து தொடர் நல்லத் தொடராக செல்லும் போன்று தெரிகிறது. தற்போது 1-1 என இருக்கிறது. அதிக அளவில் போட்டியை பார்க்கவில்லை. இருந்தபோதிலும் ஸ்கோர் பார்த்தேன்.
இவ்வாறு பேட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
- 43 ஓவர்கள் மட்டுமே விளையாடிய ஜிம்பாப்வே 170 ரன்னில் சுருண்டது.
- சீன் வில்லியம்ஸ் மட்டும் 88 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
தென்ஆப்பிரிக்கா- ஜிம்பாப்வே இடையிலான 2-ஆவது டெஸ்ட் நேற்று புலவாயோவில் தொடங்கியது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய தென்ஆப்பிரிக்கா கேப்டன் வியான் முல்டரின் முச்சதத்தால் (367 நாட்அவுட்) 5 விக்கெட் இழப்பிற்கு 626 ரன்கள் குவித்து, இன்றைய 2அவது நாள் 2ஆவது செசன்ஸ் போது முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது.
பின்னர் ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. தென்ஆப்பிரிக்காவின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் ஜிம்பாப்வே 170 ரன்னில் சுருண்டது. 456 ரன்கள் பின்தங்கியுள்ளதால் தென்ஆப்பிரிக்கா பாலோ-ஆன் கொடுத்துள்ளது. இதனால ஜிம்பாப்வே தொடர்ந்து 2ஆவது இன்னிங்சில் பேட்டிங் செய்ய இருக்கிறது.
சீன் வில்லியம்ஸ் மட்டும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 88 ரன்கள் அடித்தார். தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் பிரேனெலன் சுப்ராயன் 4 விக்கெட்டும் முல்டர் மற்றும் கொடி யூசுப் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- 114 ஓவர்கள்தால் பேட்டிங் செய்திருந்தபோதிலும் டிக்ளேர் அறிவித்துள்ளார்.
- இன்னும் 10 ஓவர்கள் விளையாடியிருந்தால் 400 ரன்களை கடந்திருக்கலாம்.
தென்ஆப்பிரிக்கா- ஜிம்பாப்வே இடையிலான 2ஆவது டெஸ்ட் புலவாயோவில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி தென்ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்தது, தொடக்க வீரர் ஜோர்சி 10 ரன்னிலும், செனோக்வான் 3 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனால் 24 ரன்கள் எடுப்பதற்குள் 2 விக்கெட்டுக்களை இழந்தது. 3ஆவது விக்கெட்டுக்கு களம் இறங்கிய வியான் முல்டர் அபாரனமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
116 பந்தில் சதம் விளாசிய முல்டர், 167 பந்தில் 150 ரன்னைத் தொட்டார். 214 பந்தில் இரட்டை சதம் அடித்தார். இந்த போட்டியில்தான் கேப்டன் பதவியை முதன்முறையை ஏற்றுக்கொண்டார். கேப்டனாக செயல்பட்ட முதல் போட்டியிலேயே இரட்டை சதம் விளாசி அசத்தினார்.
அதோடு நிற்காமல் நேற்றைய ஆட்ட நேர முடிவில் ஆட்டமிழக்காமல் 264 ரன்கள் விளாசினார். தென்ஆப்பிரிக்கா 88 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 465 ரன்கள் குவித்திருந்தது. பிரேவிஸ் 15 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
இன்று 2ஆவது நாள் ஆட்டம் தொடங்கியது. முல்டர் 287 பந்தில் முச்சதம் விளாசினார். கேப்டனாக முதல் போட்டியிலேயே முச்சதம் அடித்தவர் என்ற சிறப்பை பெற்றார். தொடர்ந்து 350 ரன்னையும் (324) கடந்தார். இதனால் லாராவின் 400 ரன் இன்ற இமாலய சாதனையை கடப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அவர் 367 ரன்கள் எடத்திருக்கும்போது, தென்ஆப்பிரிக்கா 5 விக்கெட் இழப்பிற்கு 626 ரன்கள் எடுத்திருந்தது. அத்துடன் முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்வதாக முல்டர் அறிவித்தார். இது அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. இன்னும் 34 ரன்கள் அடித்திருந்தால் லாராவின் சாதனையை முறியடித்திருக்கலாம். அவர்தான் கேப்டன். இதனால் டிக்ளேர் முடிவை அவர்தான் எடுக்க வேண்டும். 3 நாட்களுக்கு மேல் இருந்த போதிலும், அணியின் நலனுக்கான டிக்ளேர் செய்துள்ளார்.
லாரா 2004-ல் இங்கிலாந்துக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 400 ரன்கள் அடித்தது, டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிகபட்ச ரன்னாக இருந்து வருகிறது.
மேத்யூ ஹைடன் 2003-ல் 380 ரன்களும், லாரா 1994-ல் 375 ரன்களும், ஜெயவர்த்தனே 2006-ல் 374 ரன்களும், கேரி சோபர்ஸ் 1958-ல் ஆட்டமிழக்காமல் 365 ரன்களும் அடித்துள்ளனர்.
- சிமர்ஜித் சிங் இதுவரை இல்லாத அளவிற்கு 39 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.
- திக்விஜய் சிங் 38 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.
டெல்லி பிரீமியர் லீக்கின் 2025 சீசனுக்கான ஏலத்தில் இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரரான சேவாக்கின் மகன் ஆர்யாவிர் சேவாக் 8 லட்சம் ரூபாய்ப்பு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். ஆர்யாவிர்-ஐ சென்டிரல் டெல்லி கிங்ஸ் அணி ஏலம் எடுத்துள்ளது.
விராட் கோலியின் உறவினராக ஆர்யாவீர்-ஐ சவுத் டெல்லி சூப்பர்ஸ்டார்ஸ் 1 லட்சம் ரூபாய்க்கு எடுத்துள்ளது. வேகப்பந்து வீச்சாளர் சிமர்ஜித் சிங் 39 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் தொடரில் சிறப்பாக பந்து வீசிய சுழற்பந்து வீச்சாளர் திக்வேஷ் சிங்கை 38 லட்சம் ரூபாய்க்கு சவுத் டெல்லி சூப்பார் ஸ்டார்ஸ் ஏலம் எடுத்துள்ளது. ரிஷப் பண்ட்-ஐ பூரணி டில்லி 6 அணி தக்க வைத்துள்ளது.
சேவாக் மகன் ஆர்யாவீர் அதிரடி தொடக்க பேட்ஸ்மேன் ஆவார். இவர் டெல்லி U-19 அணிக்காக விளையாடியுள்ளார்.
- எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் ஆகாஷ் தீப் 10 விக்கெட் வீழ்த்தினார்.
- புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சகோதரிக்கு வெற்றியை அர்ப்பணிப்பதாக தெரிவித்தார்.
எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் இந்தியா 336 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு ஆகாஷ் தீப்பின் பந்து வீச்சும் முக்கிய காரணமாகும். இன்-ஸ்விங் பந்தால் இங்கிலாந்து பேட்டர்களை திணறடித்தார். முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுகளும், 2ஆவது இன்னிங்சில் 6 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தினார்.
வெற்றிபெற்ற சந்தோசத்தில் டி.வி.க்கு பேட்டியளிக்கும்போது, எனது சகோதரி புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு இந்த வெற்றியை அரப்பணிக்கிறேன் என எமோசனலாக பேசினார். இதனால் வெற்றியை கொண்டாட வேண்டிய ரசிகர்கள் இவரது பேச்சைச் கேட்டு மிகுந்த கவலை கொண்டனர்.
இந்த நிலையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஆகாஷ் தீப்பின் சகோதரி ஜோதி கூறியதாவது:-
எனது சகோதரன் ஆகாஷ் தீப் 10 விக்கெட்டுகள் வீழ்த்தியது, இந்தியாவுக்காக பெருமை படக்கூடிய விசயம். இங்கிலாந்து தொடருக்கு முன்னதாக, விமான நிலையத்தில் நாங்கள் அவனை சந்தித்தோம். அப்போது நான் அவனிடம், நான் முற்றிலும் நலமாக இருக்கிறோன். என்னைப் பற்றி கவலைப்படாதே. நாட்டிற்காக நன்றாக செயல்படு எனத் தெரிவித்தேன்.
என்னுடைய புற்றுநோய் பாதிப்பு 3ஆவது நிலையில் (Third Stage) உள்ளது. 6 மாதங்களுக்கு மேலாக சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று டாக்டர் தெரிவித்துள்ளார். அதன்பின் என்ன நடக்கிறது என்பது பார்ப்போம்.
ஆகாஷ் தீப் விக்கெட்டுகள் வீழ்த்தும்போதெல்லாம், எனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அவன் எப்போதெல்லாம் விக்கெட் வீழ்த்துவானோ, அப்போதெல்லாம் கைத்தட்டி, சத்தமாக மகிழ்ச்சியை கொண்டாடுவோம். எங்கள் வீட்டின் அருகில் உள்ளவர்கள் என்ன நடந்தது என்று கேட்பார்கள்.
என்னைப் பற்றி ஆகாஷ் தீப் சொல்வார் என்று எனக்குத் தெரியாது. நாங்கள் இது தொடர்பாக வெளியே சொல்ல தயாராக இல்லாமல் இருந்திருக்கலாம். அவர் எமோசனலாகி, எனக்காக இந்த வெற்றியை அர்ப்பணித்தது, பெரிய விசயம். இது எங்களுடைய குடும்பம் மற்றும் என் மீது எவ்வளவு அன்பு வைத்துள்ளார் என்பது காட்டுகிறது.
இவ்வாறு ஆகாஷ் தீப் சகோதரி ஜோதி தெரிவித்துள்ளார்.
- இதற்கு முன்னதாக எட்ஜ்பாஸ்டனில் இந்திய அணி வெற்றி பெற்றதே கிடையாது.
- சுப்மன் கில் தலைமையில் அமோக வெற்றி பெற்றுள்ளது.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்றது. இதில் இந்தியா 336 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சுப்மன் கில் (269, 161) இரண்டு சதங்கள் அடிக்க முகமது சிராஜ் (7), ஆகாஷ் தீப் (10) அபாரமாக பந்து வீசினார்.
இந்திய டெஸ்ட் அணி இதற்கு முன்னதாக எட்ஜ்பாஸ்டனில் விளையாடிய 8 டெஸ்ட் போட்டிளில் வெற்றி பெற்றதே கிடையாது. இதுதான் முதல் வெற்றி.
இந்த போட்டி தொடங்குவதற்கு முன்னதாக பிரிட்டிஷ் செய்தியாளர் ஒருவர் சுப்மன் கில்லிடம் எட்ஜ்பாஸ்டனில் இந்திய அணி வெற்றி பெற்றதே இல்லையே? என கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்த நிலையில் நேற்றைய வெற்றிக்குப்பின் சுப்மன் கில் பத்திரியைாளர்களை சந்தித்தார். அப்போது, என்னுடைய பிடித்தமான பத்திரிகையாளரை பார்க்க முடியவில்லையே? அவர் எங்கே?. எனக் கூறியதுடன், பத்திரிகையாளர்கள் அமர்ந்து இருக்கும் இடத்தை சிறிது நேரம் உற்றுப்பார்த்தார்.
பின்னர் எட்ஜ்பாஸ்டன் வெற்றி குறித்து கூறுகையில் "இந்த போட்டி தொடங்குவதற்கு முன்னதாகவும், நான் உண்மையிலேயே வரலாறு மற்றும் புள்ளி விவரங்களை பார்ப்பதில்லை எனத் தெரிவித்திருந்தேன். கடந்த 56 வருடங்களில் நாங்கள் இங்கே மாறுபட்ட அணிகளுடன் 9 போட்டிகளில் விளையாடியுள்ளோம்.
இங்கிலாந்திற்கு தற்போது சிறந்த அணியாக வந்துள்ளோம் என நம்புகிறோம். இங்கிலாந்தில் மண்ணில் இங்கிலாந்தை வீழ்த்தும் திறன் எங்களிடம் உள்ளது. தொடரையும் வெல்லக்கூடிய திறன் உள்ளது. சரியான முடிவை எடுத்து போராட முடியும் என்றால், இது எங்களுக்கு எப்போதும் ஞாபகத்தில் இருக்கக் கூடிய ஒரு போட்டியாக இருக்கும்" என்றார்.
- எம்.எஸ்.தோனி இன்று தனது 44-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்
- ICC-யின் மூன்று முக்கிய கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன் என்ற பெருமையை தோனி பெற்றார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், உலகின் மிகச் சிறந்த விக்கெட் கீப்பர்களில் ஒருவரான மகேந்திர சிங் தோனி இன்று தனது 44-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தோனி அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் நிகழ்த்திய சாதனைகள் நாம் ஒருமுறை புரட்டி பார்க்கலாம்.
தோனி தனது கிரிக்கெட் பயணத்தை பள்ளி அணிகளில் விளையாடுவதன் மூலம் தொடங்கினார். ஆரம்பத்தில் கால்பந்து விளையாட்டில் ஆர்வம் காட்டிய அவர், பின்னர் கிரிக்கெட் பயிற்சியாளர் கேசவ் பானர்ஜியின் ஊக்குவிப்பால் கிரிக்கெட் விளையாட தொடங்கினார்.
தொடர்ந்து விளையாடிய அவர் முதல் தர கிரிக்கெட்டில் 1999-2000ல் பீகார் அணிக்காக ரஞ்சி டிராபியில் அறிமுகமானார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் அவர் இந்திய அணியில் இடம் பெற்றார்.
ஒருநாள் கிரிக்கெட்டில் வங்கதேசத்துக்கு எதிராக 2004-ம் ஆண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இலங்கைக்கு எதிராக 2005ம் ஆண்டும், டி20யில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 2006-ம் ஆண்டும் இந்திய அணியில் தோனி அறிமுகமானார்.
அதனை தொடர்ந்து 2007ல் இந்திய T20 அணியின் கேப்டனாக தோனி நியமிக்கப்பட்டார். 2008 முதல் 2014 வரை டெஸ்ட் அணியையும், 2007 முதல் 2016 வரை ஒருநாள் அணியையும் வழிநடத்தினார்.
உலக கோப்பை வெற்றிகள்: தோனியின் தலைமையில் 2007 ஆம் ஆண்டு இந்தியா முதல் T20 உலகக் கோப்பையை வென்றது. அதன்பின் 2011 ஆம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணி ஒருநாள் உலகக்கோப்பையை வென்றது.
1983 ஆம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான இந்திய அணிக்கு பிறகு அதுவும் 28 ஆண்டுகளுக்குப் பிறகு தோனி தலைமையிலான இந்திய அணி ஒருநாள் உலகக்கோப்பையை வென்றது.
2013 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி வெற்றிக்கு பின்பு ICC-யின் மூன்று முக்கிய கோப்பைகளையும் (T20 உலகக் கோப்பை, ஒருநாள் உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் ட்ராஃபி) வென்ற ஒரே கேப்டன் என்ற பெருமையை தோனி பெற்றார்.
டெஸ்ட் முதலிடம்: 2009ல் இந்திய டெஸ்ட் அணியை ICC தரவரிசையில் முதலிடத்திற்கு அழைத்துச் சென்றார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK): 2008 முதல் CSK அணியின் கேப்டனாக இருந்து, அணியை 5 முறை (2010, 2011, 2018, 2021, 2023) சாம்பியனாக்கினார். தோனியின் தலைமை மற்றும் ரசிகர் ஆதரவால் CSK உலகளவில் மிகவும் பிரபலமான IPL அணிகளில் ஒன்றாக உள்ளது.
விருதுகள் மற்றும் கௌரவங்கள்: பத்ம ஸ்ரீ (2009), பத்ம பூஷண் (2018) , ராஜீவ் காந்தி கேல் ரத்னா (2007-08), ICC ஒருநாள் வீரர் விருது (2008, 2009) ஆகிய விருதுகளை தோனி வென்றுள்ளார்.
திருமண வாழ்க்கை: தோனி கடந்த 2010 ஆம் ஆண்டு ஜூலை 4ஆம் தேதி சாக்சி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். எம்.எஸ்.தோனி - சாக்சி தம்பதிக்கு ஸிவா என்ற ஒரு மகள் இருக்கிறாள்.
தனிப்பட்ட விருப்பங்கள்: கிரிக்கெட்டுக்கு அடுத்தபடியாக தோனிக்கு மோட்டார் பைக்குகள் மற்றும் கார்களின் மீது தீவிர ஆர்வம் உள்ளது. இதன் காரணமாக அவர் தனது வீட்டில் நிறைய கார் மற்றும் பைக்குகளை சேகரித்து வைத்துள்ளார்.
இந்திய கிரிக்கெட்டில் தோனியின் தாக்கம்: தோனி இந்திய கிரிக்கெட்டில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியவர். சிறிய நகரத்தில் பிறந்து, தனது திறமை மற்றும் உழைப்பால் உலகளவில் புகழ் பெற்றார். அவரது அமைதியான தலைமை, முடிவெடுக்கும் திறன் மற்றும் எளிமையான பண்பு இளைஞர்களுக்கு உத்வேகமாக உள்ளது.
- எம்.எஸ்.தோனி இன்று தனது 44-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
- அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான எம்.எஸ்.தோனி இன்று தனது 44-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தனது பிறந்தநாளை நண்பர்களுடன் கேக் வெட்டி எம்.எஸ்.தோனி கொண்டாடியுள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
- எதிரணியினர் கோலியை கண்டு பயந்ததை நான் என் கண்முன்னே பார்த்திருக்கிறேன்.
- அவர் களத்திற்குள் வந்தாலே அவர்கள் அதிக அழுத்தத்திற்கு உள்ளாவார்கள்.
இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமான விராட் கோலி, டி20 மற்றும் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு அறிவித்து விட்டார். இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென கோலியும் ரோகித்தும் ஓய்வை அறிவித்தனர். டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி பல சாதனைகளை படைத்துள்ளார்.
இந்நிலையில் விராட் கோலி குறித்து சுவாரஸ்ய தகவல் ஒன்றை ஐசிசி-யின் முன்னாள் நடுவர் அனில் சவுத்ரி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
எதிரணியினர் கோலியை கண்டு பயந்ததை நான் என் கண்முன்னே பார்த்திருக்கிறேன். அவர் களத்திற்குள் வந்தாலே அவர்கள் அதிக அழுத்தத்திற்கு உள்ளாவார்கள். அணியில் உள்ள பாதி பேரின் கவனம் அவர் மீதுதான் இருக்கும்.
என அனில் சவுத்ரி கூறினார்.






