என் மலர்
விளையாட்டு
- முதலில் ஆடிய நியூசிலாந்து 226 ரன்களைக் குவித்தது.
- டேரில் மிட்செல் அதிரடியாக ஆடி 27 பந்தில் 61 ரன்கள் குவித்தார்.
ஆக்லாந்து:
பாகிஸ்தான் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி ஆக்லாந்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய நியூசிலாந்து சிறப்பாக ஆடியது. டேரில் மிட்செல் அதிரடியாக ஆடி 27 பந்தில் 61 ரன்கள் குவித்தார். கேன் வில்லியம்சன் 57 ரன்கள் சேர்த்தார். நியூசிலாந்து 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 226 ரன்கள் குவித்தது.
227 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. பாபர் அசாம் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தார். மற்றவர்கள் விரைவில் அவுட்டாகினர்.
இறுதியில், பாகிஸ்தான் 18 ஓவரில் 180 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் நியூசிலாந்து 46 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
நியூசிலாந்து சார்பில் டிம் சவுத்தி 4 விக்கெட்டும், மில்னே, சீயர்ஸ் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இந்த வெற்றியின்மூலம் டி20 தொடரில் நியூசிலாந்து 1-0 என முன்னிலையில் உள்ளது. ஆட்ட நாயகன் விருது டேரில் மிட்செலுக்கு அளிக்கப்பட்டது.
- முதலில் ஆடிய ஜிம்பாப்வே 96 ரன்களில் சுருண்டது.
- இலங்கையின் ஹசரங்கா 7 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
கொழும்பு:
இலங்கையில் பயணம் மேற்கொண்ட ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. முதல் போட்டி மழையால் ரத்தானது. 2-வது போட்டியில் இலங்கை போராடி வென்றது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான கடைசி போட்டி கொழும்புவில் நேற்று நடைபெற்றது. மழையால் இருதரப்புக்கும் தலா 27 ஓவர்களாக குறைக்கப்பட்டது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் ஆடிய ஜிம்பாப்வே இலங்கை பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியவில்லை. குறிப்பாக, இலங்கை வீரர் ஹசரங்காவின் அபாரமாக பந்து வீசினார். இதனால் ஜிம்பாப்வே அணி 22.5 ஓவரில் 96 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இலங்கை சார்பில் வனிந்து ஹசரங்கா 5.5 ஓவரில் ஒரு மெய்டன் உட்பட 19 ரன்கள் கொடுத்து 7 விக்கெட்டு எடுத்தார். இதன்மூலம் முதல் தர கிரிக்கெட்டில் மிகவும் குறைந்த ஓவரில் 7 விக்கெட் எடுத்த வீரர் என்ற சாதனையும் அவர் படைத்துள்ளார்.
அடுத்து ஆடிய இலங்கை 16.4 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 97 ரன்கள் எடுத்து வென்றதன் மூலம் 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை கைப்பற்றி இலங்கை கோப்பையை வென்று அசத்தியது. கேப்டன் குசால் மெண்டிஸ் அதிரடியாக ஆடி 66 ரன்கள் எடுத்தார்.
- டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
- தற்போது பிக் பாஷ் லீக்கில் சிட்னி தண்டர் அணிக்காக விளையாடி வருகிறார்.
ஆஸ்திரேலியா கிரிக்கெட்டின் முக்கியமான வீரர்களில் ஒருவர் டேவிட் வார்னர். இந்த மாதம் தொடக்கத்தில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். ஆனால், டி20-யில் மட்டும் விளையாடுவதாக அறிவித்துள்ளார்.
தற்போது ஆஸ்திரேலியாவில் பிக்பாஷ் டி20 லீக் நடைபெற்று வருகிறது. இன்று சிட்னி மைதானத்தில் சிட்னி தண்டர்- சிட்னி சிக்சர்ஸ் அணிகள் மோதின.
சிட்னி தண்டர் அணிக்காக டேவிட் வார்னர் விளையாடி வருகிறார். போட்டி தொடங்குவதற்கு முன்னதாக மைதானத்திற்குள் ஒரு ஹெலிகாப்டர் வட்டமடித்து தரையிறங்கியது. போட்டியை காண வந்திருந்த ரசிகர்கள் என்னடா? மைதானத்திற்குள் ஹெலிகாப்டர் தரையிறங்குகிறது என அச்சமைடந்தனர்.
ஆனால் ஹெலிகாப்டரில் இருந்து டேவிட் வார்னர் ஹாலிவுட் பட பாணியில் ஒய்யாரமாக இறங்கி வந்தார். இதனால் ஆச்சர்யம் அடைந்த ரசிகர்களுக்கு டேவிட் வார்னர் ஏன் ஹெலிகாப்டர் மூலம் வர வேண்டும்? என்ற கேள்வி எழுந்தது.
டேவிட் வார்னரின் சகோதரர் திருமணம் ஹன்டர் பள்ளத்தாக்கில் நடைபெற்றுள்ளது. அதில் கலந்து கொண்ட பிறகு போட்டி நடைபெறும் இடத்திற்கு வாகனத்தில் குறிப்பிட்ட நேரத்திற்கு வருவது இயலாத காரியம். இதனால் ஹெலிகாப்டரில் வந்து இறங்கியுள்ளார்.
கிரிக்கெட்டால் மட்டுமல்ல பொழுதுபோக்கு போன்ற செயல்களாலும் ரசிகர்களால் பெரிதும் ஈர்க்கப்பட்டவர் டேவிட் வார்னர்.
- சர்வதேச கிரிக்கெட்டில் 100-வது வெற்றியை பெற்ற முதல் வீரர்.
- 14 மாதம் கழித்து களம் இறங்கிய ரோகித் சர்மா, டக்அவுட்டில் ஆட்டமிழந்து ஏமாற்றம்.
இந்தியா- ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நேற்று மொகாலியில் நடைபெற்றது. இதில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சுமார் 14 மாதங்கள் கழித்து டி20-யில் களம் இறங்கிய ரோகித் சர்மா, ஆட்டத்தின் 2-வது பந்திலேயே ரன்அவுட் ஆனார்.
இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதால், டி20 சர்வதேச போட்டியில் 100 வெற்றிகளை ருசித்த முதல் வீரர் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்றுள்ளார். அதேவேளையில் டி20 கிரிக்கெட்டில் டக்அவுட்டில் ரன்அவுட் ஆகிய டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் அணிகளின் கேப்டன் பட்டியலிலும், முதல் இந்திய அணி கேப்டன் என்ற விரும்பத்தகாத சாதனையையும் படைத்துள்ளார்.
இதற்கு முன் இலங்கையில் ஜெயவர்தனே 2 முறையில், ஆப்கானிஸ்தானின் ஆஸ்கர் ஆப்கன், இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராட், பால் காலிங்வுட், ஜிம்பாப்வேயின் சிகும்புரா, பாகிஸ்தானின் பாபர் அசாம் மற்றும் அப்ரிடி, நியூசிலாந்தின் வெட்டோரி ஆகியோரும் டக்அவுட் ஆகியுள்ளனர்.
மேலும் டி20-யில் இதுவரை 6 முறை ரன்அவுட் ஆகி விராட் கோலி, தோனியுடன் அதிகமுறை ரன்அவுட்டாகிய இந்திய வீரர்கள் பட்டியலில் இணைந்துள்ளார்.
- தென்ஆப்பிரிக்கா தொடரின்போது பங்கேற்க இயலாது என பிசிசிஐ-யிடம் தெரிவித்தார்.
- ஆப்கானிஸ்தான் தொடருக்கு முன்னதாக ஒழங்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக தகவல் வெளியானது.
இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களில் ஒருவர் இஷான் கிஷன். இவருக்கு அடிக்கடி வாய்ப்பு கிடைக்காவிடிலும், கிடைத்த வாய்ப்பை சிறப்பான முறையில் பயன்படுத்தி வருகிறார்.
50 ஓவர் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இவர்தான் விக்கெட் கீப்பர் என கருதப்பட்டது. கே.எல். ராகுல் உடற்தகுதி பெற்றதால் ஆடும் லெவனில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. தென்ஆப்பிரிக்கா தொடரிலும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
தற்போது நடைபெற்று வரும் ஆப்கானிஸ்தான் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட இருக்கும் நேரத்தில் இஷான் கிஷன் மற்றும் ஷ்ரேயாஸ் அய்யர் மீது பிசிசிஐ ஒழுங்கு நடவடிக்கை எடுக்க இருப்பதாக தகவல் வெளியானது. அதன்பிறகு ஆப்கானிஸ்தான் தொடருக்கான இந்திய அணியில் இஷான் கிஷன் சேர்க்கப்படவில்லை.

இந்த நிலையில் நேற்றைய போட்டி முடிந்த பின்னர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இதுகுறித்து கூறியதாவது:-
இஷான் கிஷன் மீது ஒழுங்கு நடவடிக்கை என்பது முற்றிலும் இல்லை. தென்ஆப்பிரிக்கா தொடரின்போது அவரால் பங்கேற்க இயலாது என்று கோரிக்கை விடுத்தார். நாங்கள் அதை ஏற்றுக் கொண்டு ஆதரவாக இருந்து அங்கீகரித்தோம். அவர் இன்னும் தேர்வுக்கு வரவில்லை. உள்நாட்டு போட்டிகளில் விளையாடி அவராகவே தேர்வுக்கு தயாராகுவார்.
இவ்வாறு டிராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
இதனால் உள்ளூர் போட்டிகளில் விளையாடினால் மட்டுமே இஷான் கிஷனுக்கு இந்திய அணியில் இடம் என்பது ராகுல் டிராவிட் கூற்றுப்படி உறுதியாகியுள்ளது.
கடந்த ஏழு வாரங்கள் கிரிக்கெட் போட்டியில் விளையாடாத நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் இடம் பெறவில்லை.
தற்போது ரஞ்சி டிராபி தொடர் நடைபெற்று வருகிறது. ஜார்கண்ட் மாநில கிரிக்கெட் சங்கத்தை தொடர்பு கொண்டு உள்ளூர் போட்டிகளில் விளையாட தயாராக இருக்கிறாரா? என்பது குறித்து அம்மாநில கிரிக்கெட் சங்க செயலாளர் டெபசிஷ் சக்ரபோர்ததியிடம் கேட்கப்பட்டது. இஷான் கிஷன் தங்களை தொடர்பு கொள்ளவில்லை என்றுதான் பதில் அளித்துள்ளார்.
இதுகுறித்து டெபகிஷ் சக்ரபோர்த்தி கூறுகையில் "இஷான் கிஷன் எங்களை தொடர்பு கொள்ளவில்லை. அல்லது போட்டியில் இடம்பெறுவது குறித்து எங்களிடம் ஏதும் தெரிவிக்கவில்லை. அவர் எப்போது எங்களிடம் பேசினாலும், நேராக வந்து ஆடும் லெவன் அணியில் களம் இறங்கலாம்." என்றார்.
இதனால் இஷான் கிஷன் விவகாரம் இன்னும் மர்மமான முறையில்தான் நீடிக்கிறது. என்ன இருந்தாலும் உள்ளூர் போட்டியில் சிறப்பாக விளையாடினால் மட்டுமே இந்திய அணியில் அணியில் அவருக்கு இடம் என்பது நிச்சயம்.
- ரோகித் சர்மா ரன்ஏதும் எடுக்காமல் ரன்அவுட் ஆனார்.
- ஜிதேஷ் சர்மா 20 பந்தில் 31 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார்.
இந்தியா- ஆப்கானிஸ்தான் இடையிலான முதல் டி20 போட்டி மொகாலியில் இன்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 5 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் சேர்த்தது.
பின்னர் 159 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ரோகித் சர்மா- சுப்மன் கில் ஜோடி களம் இறங்கியது. ஆட்டத்தின் 2-வது பந்திலேயே ரோகித் சர்மா ரன்அவுட் ஆனார். அவர் ரன்ஏதும் எடுக்காமல் வெளியேற, அடுத்து திலக் வர்மா களம் இறங்கினார்.
சுப்மன் கில் 12 பந்தில் 23 ரன்கள் எடுத்து வெளியேறினார். திலக் வர்மா 22 பந்தில் 26 ரன்கள் சேர்த்தார். ஷிபம் டுபே ஒரு பக்கம் நிலைத்து நின்று விளையாட மறுமுனையில் ஜிதேஷ் சர்மா 20 பந்தில் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

5-வது விக்கெட்டுக்கு டுபே உடன் ரிங்கு சிங் ஜோடி சேர்ந்தார். இந்தியாவுக்கு கடைசி 4 ஓவரில் 19 ரன்கள் தேவைப்பட்டது. ஷிவம் டுபே 38 பந்தில் 4 பவுண்டரி, ஒரு சிக்சருடன் அரைசதம் அடித்தார். 17-வது ஓவரில் இந்தியாவுக்கு 8 ரன்கள் கிடைத்தது.
18-வது ஓவரின் 2-வது பந்தை சிக்சருக்கும், 3-வது பந்தை பவுண்டரிக்கும் ஷிவம் டுவே விரட்ட இந்தயிா 17.3 ஓவரில் இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டுபே 60 ரன்களுடனும், ரிங்கு சிங் 16 ரன்களுடனும் களத்தில் நின்றனர். இந்த வெற்றியின் மூலம் இந்தியா 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலைப் பெற்றுள்ளது.
- முதல் செட்டில் ஒரு கட்டத்தில் 10-1, 14-11 என முன்னிலை பெற்றிருந்தனர்.
- 2-வது செட்டிடில் 6-11 என பின்தங்கிய நிலையில், பின்னர் கைப்பற்றி வெற்றி பெற்றனர்.
மலேசியா ஓபன் பேட்மிண்டன் தொடர் கோலாலம்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையருக்கான காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஆசிய போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ்- சிராக் ஜோடி பிரான்ஸின் லூகாஸ் கோர்வீ- ரோனன் லாபர் ஜோடியை எதிர்கொண்டது.
இதில் இந்திய ஜோடி 21-11, 21-18 என வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது. முதல் செட்டில் 10-1 என இந்திய ஜோடி முன்னிலைப் பெற்றிருந்தது. அதன்பின் பிரான்ஸ் ஜோடி புள்ளிகளை தொடர்ந்து பெற்றதால் 14-11 என முன்னிலை இடைவெளி குறைந்தது. பின்னர் ஒரு புள்ளி கூட விட்டுக்காடுக்காமல் 21-11 என முதல் செட்டை கைப்பற்றியது.
2-வது செட்டில் பிரான்ஸ் ஜோடி முதலில் 11-6 என முன்னிலை பெற்றிருந்தது. அதன்பின் இந்திய ஜோடி சிறப்பாக விளையாடி 21-18 எனக் கைப்பற்றியது.
பெண்கள் இரட்டையர் பிரிவில் அஷ்வினி பொண்ணப்பா- தனிஷா கிராஸ்டோ ஜோடி ஜப்பானை ஜோடியை 21-19, 13-21, 21-15 என வீழ்த்தியது.
கிதாம்பி ஸ்ரீகாந்த், ஹெச்.எஸ். பிரணாய், லக்ஷயா சென் ஆகியொர் தொடக்க சுற்றிலேயே வெளியேறி ஏமாற்றம் அடைந்தனர்.
2024-ம் ஆண்டின் பேட்மிண்டன் உலக பெடரேசனின் முதல் தொடரான மலேசியா ஓபனின் முடிவுகள் 2024 ஒலிம்பிக் போட்டிக்கான ரேங்கிற்கு எடுத்துக் கொள்ளப்படும்.
- ஆப்கானிஸ்தான் கடைசி 2 ஓவர்களில் 28 ரன்கள் விளாசியது.
- முகேஷ் குமார், அக்சர் பட்டேல் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இந்தியா- ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி மொகாலியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்த அணியில் சஞ்சு சாம்சன், ஜெய்ஸ்வால், ஆவேஷ் கான் ஆகியோர் இடம் பெறவில்லை.
தொடக்க வீரர்களாக களம் இறங்கிய குர்பாஸ், இப்ராஹிம் ஜட்ரன் ஆகியோரால் விரைவாக ரன்கள் சேர்க்க முடியவில்லை. ஆனால் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர். 8-வது ஓவரின் கடைசி பந்தில்தான் ஆப்கானிஸ்தான் முதல் விக்கெட்டை இழந்தது. 50 ரன்கள் எடுத்திருக்கும்போது குர்பாஸ் 28 பந்தில் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
குர்பாஸ் ஆட்டமிழந்த உடனேயே ஜட்ரனும் ஆட்டமிழந்தார். 9-வது ஓவர் 2-வது பந்தில் 25 ரன் எடுத்த நிலையில் வெளியேறினார். அதன்பின் வந்த ரஹ்மத் ஷா 3 ரன்னில் வெளியேறினார். இதனால் ஆப்கானிஸ்தான் விரைவாக 3 விக்கெட்டுகளை இழந்தது.
4-வது விக்கெட்டுக்கு உமர்ஜாய் உடன் முகமது நபி ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பாக விளையாடினர். இதனால் ஆப்கானிஸ்தான் ஸ்கோர் 150 ரன்னை நோக்கி சென்றது.
உமர்ஜாய் 22 பந்தில் 29 ரன்கள் எடுத்தும், முகமது நபி 27 பந்தில் 42 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். 19-வது ஓவரை வாஷிங்டன் சுந்தர் வீசினார். இந்த ஓவரில் ஆப்கானிஸ்தான் 3 பவுண்டரிகளுடன் 13 ரன்கள் சேர்த்தது.
கடைசி ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசினார். இந்த ஓவரில் 3 பவுண்டரியுடன் 15 ரன்கள் விளாச மொத்தமாக ஆப்கானிஸ்தான் 5 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் குவித்தது.
நஜிபுல்லா ஜட்ரன் 11 பந்தில் 19 ரன்களும், கரிம் ஜனத் 5 பந்தில் 9 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். முகேஷ் குமார், அக்சர் பட்டேல் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
- டி20 உலகக் கோப்பை தோல்விக்குப் பிறகு ரோகித் சர்மா முதன்முறையாக டி20-யில் களம் இறங்குகிறார்.
- சஞ்சு சாம்சன் உள்ளிட்ட மூன்று வீரர்கள் இன்று களம் இறங்கவில்லை.
ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இந்தியா மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டி இன்று மொகாலியில் நடக்கிறது. போட்டி 7 மணிக்கு தொடங்கும் நிலையில் தற்போது டாஸ் சுண்டப்பட்டது.
இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

ஜிதேஷ் சர்மா விக்கெட் கீப்பராக செயல்படுகிறார். சஞ்சு சாம்சன், ஆவேஷ் கான், ஜெய்ஸ்வால் ஆகியோர் இன்று களம் இறங்கவில்லை.
இந்திய அணி விவரம்:
1. ரோகித் சர்மா (கேப்டன்), 2. சுப்மன் கில், 3. திலக் வர்மா, 4. ஷிவம் டுபே, 5. ஜிதேஷ் சர்மா (வி.கீப்பர்), 6. ரிங்கி சிங், 7. அக்சர் பட்டேல், 8. வாஷிங்டன் சுந்தர், 9. ரவி பிஷ்னோய், 10. அர்ஷ்தீப் சிங், 11. முகேஷ் குமார்.
- நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் மாதம் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- இலங்கையில் சில போட்டிகளை நடத்துமாறு இலங்கை விளையாட்டு துறை அமைச்சர் ஜெய் ஷாவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் மாதம் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தொடருடன் பாராளுமன்ற தேர்தலும் நடைபெற இருப்பதால் போட்டிகளுக்கு பாதுகாப்பு வழங்குவது கேள்விகுறியாகும் நிலையில் உள்ளது. இது தொடர்பாக பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் இலங்கையில் சில போட்டிகளை நடத்துமாறு இலங்கை விளையாட்டு துறை அமைச்சர் ஜெய்ஷாவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் ஒரு வருடத்திற்கும் மேலாக கிரிக்கெட்டை தவறவிட்ட ரிஷப் பண்ட், ஐபிஎல் 2024-ல் மீண்டும் களமிறங்குவார். விக்கெட் கீப்பர் பேட்டரான அவர், வரவிருக்கும் சீசனில் அவரது அணியான டெல்லி கேபிடல்ஸை வழிநடத்துவார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி நாளை தொடங்க உள்ளது.
- ஜோகோவிச் கிரிக்கெட் விளையாடினார்.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி நாளை தொடங்க உள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித் மெல்போர்ன் பூங்காவில் உள்ள டென்னிஸ் மைதானத்தில் டென்னிஸ் ஜாம்பவான் ஜோகோவிச்சுடன் நட்புரீதியான டென்னிஸ் விளையாடி அசத்தினார்.
இரு நட்சத்திரங்களுக்கு இடையேயான டென்னிஸ் போட்டியானது ஆஸ்திரேலிய ஓபன் 2024- க்கு ஒரு முன்னோடியாக திகழும்.
ஸ்மித் கிரிக்கெட்டில் பெயர் பெற்றவர் என்றாலும், அவர் ஜோகோவிச்சின் ஒரு சர்வீஸை தாக்கு பிடிப்பாரா என்ற கோணத்தில் ரசிகர்கள் எதிர் நோக்கி இருந்தனர். அனைவரின் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் அவரது சர்வீஸை ஸ்மித் கோர்ட்டிற்குள் திருப்பி அனுப்பினார். இது பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இதனை கண்ட ஜோகோவிச் கூட அதிர்ச்சியடைந்தார். கூட்டத்தில் இருந்த ரசிகர்களின் பலத்த கரகோஷங்களுக்கு மத்தியில் ஸ்மித்க்கு தலைவணங்கி தனது பாராட்டை ஜோகோவிச் வெளிப்படுத்தினார்.
அதன்பிறகு ஜோகோவிச் கிரிக்கெட் விளையாடினார். அவர் முதல் பந்தை அடிக்க முற்பட்டார். அது பேட்டில் படவில்லை. உடனே அடுத்து பந்து போடப்பட்டது. பேட் நமக்கு செட் ஆகாது என தெரிந்து கொண்ட ஜோகோவிச் மறைத்து வைத்திருந்த டென்னிஸ் மட்டையால் பந்தை பறக்க விட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.
இவர்கள் இருவரும் டென்னிஸ் மற்றும் கிரிக்கெட் விளையாடிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.
- ரோகித் மற்றும் கோலி கடைசியாக 2022-ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்காக களமிறங்கி விளையாடினர்.
இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோதவுள்ளது. இதற்கான முதல் டி20 போட்டி இன்று மொகாலியில் தொடங்குகிறது. இந்த தொடருக்கு இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியில் விராட் கோலியும் இடம் பிடித்துள்ளார்.
இதன் மூலம் ரோகித் மற்றும் கோலி 427 நாட்களுக்கு பிறகு டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாட உள்ளார். ரோகித் மற்றும் கோலி கடைசியாக 2022-ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்காக களமிறங்கி விளையாடினர். இதைத் தொடர்ந்து இருவரும் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் மற்றும் விளையாடி வந்தனர்.
இந்நிலையில் விராட் கோலி முதல் போட்டியில் விளையாடாத நிலையில் ரோகித் சர்மாவின் ஆட்டத்தை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.






