என் மலர்
விளையாட்டு
- இந்திய கிரிக்கெட் அணியின் மேட்ச் வின்னராக பும்ரா உருவெடுத்துள்ளார்.
- அவரிடம், உங்களுக்கு மிகவும் சவால் கொடுத்த பேட்ஸ்மேன் யார் என கேள்வி எழுப்பப்பட்டது.
சென்னை:
இந்திய அணியின் ஜஸ்பிரித் பும்ரா, தற்போது உலகின் சிறந்த வேகப்பந்து வீச்சாளராக அறியப்படுகிறார். எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழும் அவர், இந்தியாவின் வெற்றிகளில் முக்கிய பங்காற்றி வருகிறார்.
குறிப்பாக, டி20 உலகக் கோப்பையில் தொடர் நாயகன் விருது வென்ற அவர் 17 வருடங்கள் கழித்து இந்தியா சாம்பியன் பட்டம் வெல்ல உதவினார். மேலும், இந்திய அணியின் மேட்ச் வின்னராக உருவெடுத்துள்ளார்.
இதனால் தான் அவரை, பும்ரா தலைமுறையில் ஒருமுறை மட்டுமே வரும் பவுலர் என விராட் கோலி பாராட்டினார். அத்துடன் வாசிம் அக்ரம், ரிக்கி பாண்டிங் போன்ற உலகின் பல ஜாம்பவான்கள் பும்ராவை பாராட்டி உள்ளனர்.
இந்நிலையில், ஜஸ்பிரித் பும்ராவுக்கு சென்னையில் சமீபத்தில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. அப்போது, உங்களுக்கு சவால் கொடுத்த பேட்ஸ்மேன் யார்? என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, சிறப்பாக பந்து வீசினால் தம்மை எந்த பேட்ஸ்மேன்களாலும் தடுத்து நிறுத்தமுடியாது என தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது:
இதற்கு நல்ல பதிலைக் கொடுக்க விரும்புகிறேன். இருப்பினும் உண்மையில் யாரும் எனக்கு மேல் இருப்பதை நான் விரும்பவில்லை.
கண்டிப்பாக அனைவரையும் மதிக்கிறேன். ஆனால் என்னுடைய வேலையை சரியாக செய்தால் இந்த உலகில் யாரும் என்னை தடுத்து நிறுத்த டியாது என்று எனது தலைக்குள் எனக்கு நானே சொல்லிக் கொள்கிறேன்.
எனவே நான் எதிரணியை பார்க்காமல் என்னைப் பார்க்கவேண்டும். என்னுடைய அனைத்து விஷயங்களிலும் கட்டுப்பாடு இருந்தால், எனக்கு நானே சிறந்த வாய்ப்புகளைக் கொடுத்தால் மற்ற அனைத்தையும் அதுவே பார்த்துக் கொள்ளும். அதனால் பேட்ஸ்மேன் என்னை விட சிறந்தவர் என்பதுபோல் நினைக்க வேண்டியதில்லை என தெரிவித்தார்.
- துப்பாக்கிச் சுடுதலில் இந்திய அணி இரு பதக்கங்களைப் பெற்றது.
- அவனி லெகரா தங்கமும், மோனா அகர்வால் வெண்கலமும் பெற்றார்.
பாரீஸ்:
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இந்தியா சார்பில் போட்டியிட்ட அவனி லெகரா தங்கமும், மோனா அகர்வால் வெண்கலமும் வென்று அசத்தினர்.
பெண்கள் பிரிவில் 10 மீட்டர் ஏர் ரைபிள் எஸ்.எச்.1 பிரிவில் அவனி லெகரா தங்கம் வென்றார். இதே போட்டியில் இந்தியாவின் மோனா அகர்வால் வெண்கலம் வென்றார்.
இதன்மூலம் பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி தனது பதக்க கனவை தொடங்கி உள்ளது. ஒரு தங்கம், ஒரு வெண்கலம் என 2 பதக்கங்களைப் பெற்றுள்ளது.
- எம்.எஸ்.டோனி பலருக்கு ரோல் மாடலாகத் திகழ்ந்து வருகிறார்.
- நடுவர்கள் வழங்கும் தீர்ப்பை எதிர்த்து முறையீடு செய்வதிலும் டோனி வல்லவர்.
புதுடெல்லி:
இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவராக போற்றப்படுபவர் மகேந்திரசிங் டோனி. இவரது தலைமையிலான இந்திய அணி ஐசிசி டி20, 50 ஓவர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ஆகிய 3 உலகக் கோப்பைகளை வென்றுள்ளது. பல தொடர்களில் இந்திய அணிக்கு வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்துள்ளார்.
விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாகவும், கேப்டனாகவும் சாதனை படைத்துள்ள அவர் பலருக்கு ரோல் மாடலாகத் திகழ்ந்து வருகிறார்.
விக்கெட் கீப்பிங், ஸ்டம்பிங், ரன் அவுட், கேட்ச் என அனைத்திலும் சிறப்பாக செயல்படும் திறமை கொண்டவர் டோனி. நடுவர்கள் வழங்கும் தீர்ப்பை எதிர்த்து முறையீடு (டி.ஆர்.எஸ்) செய்வதிலும் டோனி வல்லவர்.

இந்நிலையில், டோனி எப்போதுமே துல்லியத்திற்கும் நெருக்கமான டி.ஆர்.எஸ். முடிவுகளை எடுப்பார் என இந்தியாவின் பிரபல நடுவர் அனில் சவுத்ரி பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அனில் சவுத்ரி சமீபத்தில் அளித்த பேட்டியில், ரசிகர்கள் கூறுவது உண்மைதான். டோனி மிகவும் துல்லியமானவர். அவருடைய அழைப்புகள் (டி.ஆர்.எஸ்.) கிட்டத்தட்ட துல்லியத்திற்கு மிகவும் நெருக்கமாக இருக்கும். பேட்ஸ்மேன்களுக்கு பின்னால் இருப்பதால் விக்கெட் கீப்பர்களால் சில நேரங்களில் பவுலர்களின் பொசிஷனை சரியாகப் பார்க்கமுடியாது. அது வித்தியாசமானது. இருப்பினும் டோனி எடுக்கும் முடிவுகள் காரணம் மிகுந்ததாக இருக்கும் என தெரிவித்தார்.
- பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
- இந்தியா சார்பில் 80-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
பாரீஸ்:
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இந்திய சார்பில் 80-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், இன்று நடைபெற்ற பேட்மிண்டன் SL3 பெண்கள் பிரிவில் இந்தியாவின் மந்தீப் கவுர், நைஜீரியாவின் மரியன் எனியோலா போலாஜியுடன் மோதினார்.
சுமார் 29 நிமிடங்களில் முடிந்த இந்தப் போட்டியில் மந்தீப் கவுர் 8-21, 14-21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார்.
மந்தீப் கவுர் அடுத்து ஆஸ்திரேலிய வீராங்கனை செலின் வினோட்டுடன் மோத உள்ளார்.
- அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது.
- இதன் 2வது சுற்றில் நம்பர் 1 வீராங்கனை வெற்றி பெற்றார்.
நியூயார்க்:
ஒவ்வொரு ஆண்டும் 4 வகையான கிராண்ட் ஸ்லாம் போட்டிகள் பிரபலமானவை. அதில் ஒன்று யு.எஸ். ஓபன் தொடராகும். இந்த ஆண்டின் கடைசி கிராண்ட் ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக், ஜப்பான் வீராங்கனை எனா ஷிபாஹரா உடன் மோதினார்.
இதில் ஸ்வியாடெக் 6-0, 6-1 என்ற நேர் செட் கணக்கில் வென்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, சக வீராங்கனை சோபியா கெனினை 7-6 (7-4), 6-3 என்ற செட் கணக்கில் வென்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
- கலப்பு இரட்டையர் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் நிதிஷ் குமார், துளசிமதி முருகேஷன் ஜோடி பங்கேற்றது.
- மலேசியாவின் ஹிக்மத் ராம்தானி மற்றும் லியானி ராத்ரி ஒக்டிலா ஜோடி மோதியது.
பாரா ஒலிம்பிக் தொடர் பாரீஸ் நகரில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் கலப்பு இரட்டையர் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் நிதிஷ் குமார், துளசிமதி முருகேஷனும் மலேசியாவின் ஹிக்மத் ராம்தானி மற்றும் லியானி ராத்ரி ஒக்டிலா ஆகியோர் மோதின.
இந்த ஆட்டத்தில் எளிதான முறையில் மலேசிய வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. இந்திய ஜோடி 15-21, 8-21 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.
- கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சோலைமலை சிவராஜன் - நித்யா ஸ்ரீ சுமதி ஆகியோர் பங்கேற்றனர்.
- முதல் செட்டை அமெரிக்கா 23-21 என்ற கணக்கில் கைப்பற்றியது.
17-வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிசில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் இந்த பாரா ஒலிம்பிக் தொடரில் இந்தியா முதல் முறையாக 84 வீரர்- வீராங்கனைகளை அனுப்பி வரலாற்று சாதனை படைத்துள்ளது.
இந்நிலையில் உயரம் குறைவாக உள்ளவர்களுக்கான கலப்பு இரட்டையர் பேட்மிண்டனில் இந்தியாவின் சோலைமலை சிவராஜன் - நித்யா ஸ்ரீ சுமதி ஆகியோரும் அமெரிக்காவின் மைல்ஸ் க்ராஜெவ்ஸ்கி மற்றும் ஜெய்சி சைமன் ஆகியோரும் மோதின.
இந்த ஆட்டத்தின் முதல் செட் பரபரப்பாக சென்றது. இறுதியில் 21-23 என்ற கணக்கில் இந்திய ஜோடி தோல்வியடைந்தது. 2-வது செட்டை இந்தியா எளிதாக இழந்தது. இதனால் 21-23, 11-21 என்ற கணக்கில் அமெரிக்கா ஜோடி வெற்றி பெற்றது.
- லக்னோ அணிக்கு புதிய ஆலோசகராக ஜாகீர் கான் நியமிக்கப்பட்டுள்ளார்.
- மோர்னே மோர்கல் இந்திய அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
2023-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு கவுதம் கம்பீர் ஆலோசகராக இருந்தார். பின்னர் 2024 ஆம் ஆண்டு கொல்கத்தா அணி ஆலோசகராக கம்பீர்ஆலோசகராக இருந்தார். பின்னர் 2024 ஆம் ஆண்டு கொல்கத்தா அணி ஆலோசகராக கம்பீர் பொறுப்பேற்றார். இப்போது இந்திய அணியில் தலைமை பயிற்சியாளராக அவர் உயர்ந்துள்ளா
கம்பீர் வெளியேறிய பிறகு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் ஆலோசகர் பதவி காலியாக இருந்த நிலையில் ஐபிஎல் 2025 தொடரில் லக்னோ அணியின் ஆலோசகராக இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஜாகீர் கான் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் லக்னோ அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக இருந்த மோர்னே மோர்கல் இந்திய அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டதால் லக்னோ அணிக்கு அடுத்த பந்து வீச்சு பயிற்சியாளர் யார் என்ற கேள்வி எழுந்தது.
இதற்கு லக்னோ அணியின் புதிய ஆலோசகரான நியமிக்கப்பட்ட ஜாகீர் கான் பதில் அளித்துள்ளார். நான் இருக்கும் போது உங்களுக்கு ஒரு பந்து வீச்சு பயிற்சியாளர் தேவையா? அணிக்கு தேவையான அனைத்தையும் நான் செய்வேன் என அவர் கூறினார்.
- அல்காரஸ் மற்றும் வான் டி சாண்ட்சுல்ப் ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினார்.
- இதில் முதல் செட்டை (6-1) என்ற கணக்கில் எளிதாக வான் டி சாண்ட்சுல்ப் கைப்பற்றினார்.
நியூயார்க்:
கிராண்ட்ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த 2-ம் சுற்று ஆட்டம் ஒன்றில் 3-ம் நிலை வீரரான ஸ்பெயினின் அல்காரஸ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
தர வரிசையில் 74-வது இடத்தில் இருக்கும் நெதர்லாந்தின் வான்டி சான்ட்ஸ்சுல்பிடம் 6-1, 7-5, 6-4 என்ற நேர்செட் கணக்கில் அல்காரஸ் தோற்று வெளியேறினார்.
4 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள முன்னணி வீரரான அல்காரஸ், 2022-ம் ஆண்டு அமெரிக்க ஓபனை வென்றிருந்தார். கடந்த ஆண்டு நடந்த அமெரிக்க ஓபனில் அரை இறுதியில் தோற்று இருந்தார். இந்த ஆண்டு 2-வது சுற்றிலேயே நடையை கட்டினார்.
மற்றொரு 2-ம் சுற்று ஆட்டம் ஒன்றில் 5-ம் நிலை வீரரான ரஷியாவின் மெட்வதேவ்-ஹங்கேரியின் மரோசன் ஆகியோர் மோதினர்.
இதில் மெட்வதேவ் 6-3, 6-2, 7-6 (7-5) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
அதேபோல் டாமிபால் (அமெரிக்கா), டான் எவர்ஸ் (இங்கிலாந்து), மென்ஷிக் (செக் குடியரசு) ஆகியோர் தங்களது ஆட்டங்களில் வென்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் 2-ம் சுற்று ஆட்டம் ஒன்றில் வோஸ்னியாக்கி (டென்மார்க்) 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்கில் மெக்சிகோவின் ஜராசுவாலை வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
4-ம் நிலை வீராங்கனையான கஜகஸ்தானின் ரைபகினா காயம் காரணமாக 2-வது சுற்றில் இருந்து விலகினார்.
ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போண்ணா-எப்டன் (ஆஸ்திரேலியா) ஜோடி 6-3, 7-5 என்ற செட் கணக்கில் டென்மார்க்கின் ராபின் ஹாஸ்-சாண்டர் அரேண்ட்ஸ் ஜோடியை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறியது.
- ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் மிகப்பெரிய வீரராக வருவார் என்று கணிக்கப்பட்டவர்.
- வில் பொக்கோஸ்கி 22-வது வயதில் இந்தியாவுக்கு எதிராக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடினார்.
மெல்போர்ன்:
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் இடம் பிடிப்பது என்பது மிகவும் கடினமான ஒரு விஷயமாக இருந்து வருகிறது. இளம் வயதில் அணியில் இடம் கிடைப்பது மிகப்பெரிய விஷயாமாக பார்க்கபடும் நிலையில் 20 வயதில் தேசிய அணியில் விளையாட வில் பொக்கோஸ்கிக்கு வாய்ப்பு கிடைத்தது.
உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் இளம் வயதிலேயே தொடர்ந்து சதம் சதமாக அடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர். 36 உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 2350 ரன்கள் அடித்திருந்தார். இதில் 7 சதம் அடங்கும். அதுமட்டுமல்லாமல் இவருடைய சராசரி 45 என்ற அளவில் இருந்தது.
தன்னுடைய திறமை காரணமாக 22-வது வயதில் இந்தியாவுக்கு எதிராக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் கடந்த 2020-21-ம் ஆண்டு அறிமுகமானார். சிட்னி டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 62, இரண்டாவது இன்னிங்ஸில் 10 ரன்கள் அடித்தார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் மிகப்பெரிய வீரராக வருவார் என்று கணிக்கப்பட்ட நிலையில் பேட்டிங் செய்யும்போது தொடர்ந்து பந்து தலையை தாக்கிக் கொண்டு இருந்தது. இதனால் அவருக்கு பலமுறை காயம் ஏற்பட்டு போட்டியிலிருந்து பாதியில் விலகி இருக்கிறார்.

ஒரு முறை இரண்டு முறை அல்ல காயம் அடைந்து மீண்டும் குணம் அடைந்து களத்திற்கு வரும்போது மீண்டும் தலையில் பந்து தாக்கி அவர் ஓய்வு பெற்று விடுவார். இப்படியே தொடர்கதையாக இருந்தது. இவருக்கு தொடர்ந்து எப்படி ஒரே இடத்தில் பந்து படுகிறது என்பது குறித்து மருத்துவர்கள் ஆய்வு செய்தனர்.
இதில் பந்து தலையை தாக்கி விடுமோ என்ற பயத்தில் அவர் விளையாடுவதால் தான் பேட்டிங் யுத்தியை அவர் மறந்து விடுவதாக மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். கடைசியாக ஒரு முறை கிரிக்கெட்டில் சாதித்து விடலாம் என வில் பொக்கோஸ்கி வந்தபோது கடந்த மார்ச் மாதம் மீண்டும் தலையில் பந்து அடிபட்டு அவர் காயமடைந்தார்.
இந்த நிலையில் அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் தொடர்ந்து பந்து தலையைத் தாக்கியதால் அது அவருக்கு மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தி இருப்பதாகவும், இதனால் வில் பொக்கோஸ்கி இனி விளையாடவே முடியாது என்றும் மருத்துவர்கள் கூறி இருக்கின்றனர். இதனையடுத்து வில் பொக்கோஸ்கி கிரிக்கெட் விளையாடும் தகுதியை இழந்து விட்டதாகவும் அவர் ஓய்வு பெற வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி இருக்கின்றனர்.
இதனால் வில் பொக்கோஸ்கி தற்போது வெளிநாடுகளில் சுற்றுலா சென்று இருக்கிறார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கிரிக்கெட் விக்டோரியா நிர்வாகி மோரிஸ், சில மருத்துவ குழு நிபுணர்கள் சொல்லி இருக்கிறார்கள். இதன் காரணமாக அவர் கிரிக்கெட் பக்கமே திரும்பவில்லை. அவர் பயிற்சி செய்ய கடந்த மூன்று மாதங்களாக வரவில்லை. தற்போது அவர் வெளிநாட்டில் சுற்றுலாவில் இருக்கின்றார். மருத்துவர்களின் அறிக்கை எங்களுக்கு எந்த ஒரு ஆச்சரியத்தையும் கொடுக்கவில்லை என்று மோரிஸ் கூறியிருக்கிறார்.
- ஹீலி மேத்யூஸ் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்குகிறது.
- ஓய்வு பெற்ற தியான்ட்ரா டோட்டினிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் அக்டோபர் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. மொத்தம் 10 அணிகள் இத்தொடரில் பங்கேற்கும் நிலையில், அந்த அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அதில் குரூப் ஏ பிரிவில் ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை அணிகளும், குரூப் பி பிரிவில் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம், ஸ்காட்லாந்து அணிகளும் இடம் பிடித்துள்ளன.
இத்தொடரில் பங்கேற்கும் அணிகளையும் அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்து வருகின்றன. அதன் படி, இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தானின் மகளிர் அணிகளை அந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்துள்ளன.
இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கவுள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் சமீபத்தில் தனது ஓய்வு முடிவை திரும்பப்பெற்றிருந்த தியான்ட்ரா டோட்டினிற்கு இடம் கிடைத்துள்ளது.
ஹீலி மேத்யூஸ் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஸ்டேஃபானி டெய்லர், ஷெர்மைன் காம்பெல், ஷமில கன்னெல் உள்ளிட்ட நட்சத்திர வீராங்கனைகளுடன், சில இளம் வீராங்கனைகளுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி:
ஹீலி மேத்யூஸ் (கே), ஷெர்மைன் காம்ப்பெல்லே, ஆலியா அலீன், அஃபி பிளெட்சர், அஷ்மினி முனிசார், செடியன் நேஷன், சினெல்லே ஹென்றி, டியான்ட்ரா டோட்டின், கரிஷ்மா ராம்ஹராக், மாண்டி மங்ரு, நெரிசா கிராப்டன், கியானா ஜோசப், ஷமிலா கானல், ஸ்டேஃபானி டெய்லர், ஜைடா ஜேம்ஸ்.
- 3 வீரர்கள் மற்றும் பிசியோதெரபிஸ்டுக்கு ஆயுட் கால தடை விதிக்கப்பட்டுள்ளது.
- அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வசதியாக நாட்டுக்கு திரும்ப கொண்டு வர முயற்சிகள் நடந்து வருகிறது.
லாகூர்:
ஐரோப்பிய நாடுகளான நெதர்லாந்து, போலந்தில் கடந்த மாதம் நடந்த நேஷன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் கலந்து கொண்ட பாகிஸ்தான் அணியில் அங்கம் வகித்த வீரர்களான முர்தசா யாகூப், இஹ்தேஷம் இஸ்லாம், அப்துர் ரஹ்மான் மற்றும் பிசியோதெரபிஸ்ட் வகாஸ் ஆகியோர் நாடு திரும்பிய பிறகு அதே விசாவை பயன்படுத்தி மீண்டும் நெதர்லாந்து சென்று தஞ்சம் அடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து தெரியவந்ததை அடுத்து பாகிஸ்தான் ஹாக்கி சம்மேளனம் நிர்வாக குழுவில் ஆலோசனை நடத்தி சம்பந்தப்பட்ட 3 வீரர்கள் மற்றும் பிசியோதெரபிஸ்டுக்கு ஆயுட் கால தடை விதித்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. அத்துடன் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வசதியாக நாட்டுக்கு திரும்ப கொண்டு வர பாகிஸ்தான் தூதரகம் மூலம் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேல் நடவடிக்கைக்காக உள்துறை மற்றும் வெளியுறவு துறை அமைச்சகத்துக்கு பாகிஸ்தான் ஹாக்கி சம்மேளனம் சார்பில் முறைப்படி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.






