என் மலர்
விளையாட்டு
- இங்கிலாந்து அணி மூன்றாம் நாள் முடிவில் 544 ரன்கள் குவித்தது.
- ஜோ ரூட் சிறப்பாக ஆடி 150 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் போட்டி மான் செஸ்டரில் நடைபெற்று வருகிறது.
இந்திய அணி முதல் இன்னிங்சில் 358 ரன் எடுத்தது. பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து நேற்றைய 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 544 ரன் குவித்து வலுவான நிலையில் இருந்தது.
ஜோ ரூட் சதம் அடித்தார். அவர் 150 ரன்னும் , பென் டக்கெட் 94 ரன்னும் , கிராவ்லி 84 ரன்னும் , பென் ஸ்டோக்ஸ் 77 ரன்னும் ( அவுட் இல்லை), ஆலி போப் 71 ரன்னும் எடுத்தனர். ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் தலா 2 விக்கெட்டும், பும்ரா, கம்போஜ், சிராஜ் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றி னார்கள்.
இங்கிலாந்து அணி 186 ரன் முன்னிலை பெற்று உள்ளது. கைவசம் 3 விக்கெட் இருக்கிறது.
ஜோ ரூட் நேற்று 10 சாதனைகளை முறியடித்தார். அதன் விவரம் வருமாறு:-
1. டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன் எடுத்த வீரர்களில் ராகுல் டிராவிட் (13, 288 ரன்), காலிஸ் (13, 289), ரிக்கி பாண்டிங் (13,378) ஆகி யோரை ஜோ ரூட் முந்தினார். அவர் 13,409 ரன்க ளுடன் தெண்டுல்கருக்கு (15,921 ரன்) அடுத்தப்படியாக 2-வது இடத்தில் உள்ளார்.2
2. 157-வது டெஸ்டி விளையாட்டில் அவருக்கு 38-வது சதமாகும். இதன் மூலம் ஜோ ரூட் இலங் கையை சேர்ந்த சங்ககராவை சமன் செய்தார். டெண்டுல்கர் (51 சதம்), காலிஸ் (45), பாண்டிங் (41) ஆகியோருக்கு அடுத்தபடி யாக உள்ளார்.
3. இந்தியாவுக்கு எதிராக அதிக சதம் (12) எடுத்தவர் என்ற சாதனையை ஜோ ரூட் படைத்தார். அவர் ஸ்டீவ் சுமித்தை (11 செஞ்சுரி) முந்தினார்.
4. இந்தியாவிற்கு எதிராக சொந்த மண்ணில் ஜோ ரூட் 9-வது சதத்தை பதிவு செய்தார். இதன் மூலம் அவர் பிராட்மேன் (ஆஸ்திரேலியா) சாதனையை முறியடித்தார். பிராட்மேன் தான் ஒரு நாட்டுக்கு எதிராக சொந்த மண்ணில் அதிக சதம் அடித்த வீரராக இருந்தார். அவர் இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் 8 சதம் அடித்து இருந்தார்.
5. மான்செஸ்ட் மைதானத்தில் டெஸ்டில் 1000 ரன் எடுத்த முதல் இங்கிலாந்து வீரர் என்ற பெருமையை பெற்றார்.
6. 2-க்கு மேற்பட்ட மைதானத்தில் 1000 ரன்னை எடுத்த 3-வது இங்கிலாந்து வீரர் ஆவார். கிரகாம் கூச், அலிஸ்டயர் குக் ஆகியோருடன் இணைந்தார். ஜோ ரூட் லார்ட்ஸ் மைதானத்தில் 2166 ரன்னும், மான்செஸ்ட் மைதானத்தில் 1128 ரன்னும் எடுத்துள்ளார்.
7. 50 ரன்னுக்கு மேல் அவர் 104-வது முறையாக தொட்டார். காலிஸ், பாண்டிங்கை (இருவரும் தலா 103 தடவை) முந்தினார். டெண்டுல்கர் 119 முறையுடன் முதல் இடத்தில் உள்ளார்.
8. ஒரு அணிக்கு எதிராக அதிக சதம் அடித்த இங்கிலாந்து வீரர் ஜேக் ஹோப்ஸ் சாதனையை ஜோ ரூட் சமன் செய்தார். ஹோபஸ் ஆஸ்திரேலியா விற்கு எதிராக 12 சதம் அடித்து இருந்தார்.
9. ஜடேஜா பந்தில் ஜோ ரூட் 588 ரன்களை எடுத்து உள்ளார். இதன் மூலம் அவர் ஸ்டீவ் வாக்கை முந்தினார். ஸ்டீவ் வாக் இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட் பந்தில் 577 ரன்களை எடுத்து இருந்தார்.
10. ஜோ ரூட் டெஸ்டில் சொந்த மண்ணில் 7195 ரன் எடுத்துள்ளார். இதன் மூலம் ஜெயவர்த்தனேவை முந்தினார். இலங்கையை சேர்ந்த அவர் சொந்த நாட்டில் 7167 ரன் எடுத்து உள்ளார். பாண்டிங் (ஆஸ்திரேலியாவில் 7578 ரன்), டெண்டுல்கர் (இந்தியாவில் 7216 ரன்) ஆகியோருக்கு அடுத்தபடியாக ஜோ ரூட் உள்ளார்.
- வெஸ்ட் இண்டீஸ் 214 ரன்கள் குவித்தது.
- ஆஸ்திரேலியா 16.1 ஓவரில் சேஸிங் செய்தது
வெஸ்ட் இண்டீஸ்- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிகளிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்ற நிலையில், 3ஆவது போட்டி இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடைபெற்றது.
இதில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் 214 ரன்கள் குவித்தது. அந்த அணியின் தொடக்க வீரர்களான பிராண்டன் கிங், கேப்டன் ஷாய் ஹோப் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பிராண்டன் கிங் 36 பந்தில் 62 ரன்கள் விளாசினார். ஷாய் ஹோப் 57 பந்தில் 102 ரன்கள் குவித்தார்.
பின்னர் 215 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் ஆஸ்திரேலியா களம் இறங்கியது. மிட்செல் மார்ஷ் (22), மேக்ஸ்வெல் (20), ஜோஷ் இங்கிலீஷ் (15), கேமரூன் கிரீன் (11) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
5ஆவது விக்கெட்டுக்கு டிம் டேவிட் உடன் மிட்செல் ஓவன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. குறிப்பாக டிம் டுவிட் ஆட்டத்தில் அனல் பறந்தது. 16 பந்தில் அரைசதம் அடித்த டிம் டேவிட், 37 பந்தில் சதம் விளாசினார். அத்துடன் ஆஸ்திரேலியா 16.1 ஓவரிலேயே 4 விக்கெட் இழப்பிற்கு 215 ரன்கள் அடித்து அசத்தல் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் 3 போட்டிகளில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா, தொடரை வென்று முன்னிலை வகிக்கிறது.
37 பந்தில் சதம் விளாசிய டிம் டேவிட், டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக சதம் அடித்த ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடும் அணி வீரர்களில் 3ஆவது இடத்தை பிடித்துள்ளார். ரோகித் சர்மா மற்றும் டேவிட் மில்லர் 35 பந்தில் சதம் விளாசியுள்ளனர்.
- முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 198 ரன்கள் குவித்தது.
- தென்ஆப்பிரிக்கா அணியால் 167 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது.
உலக சாம்பியன்ஸ் ஆஃப் லெஜண்ட்ஸ் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொண்டு விளையாடி வருகிறார்கள்.
தென்ஆப்பிரிக்கா சாம்பியன்ஸ்- பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்றிரவு நடைபெற்றது.
இதில் முதலில் களம் இறங்கிய பாகிஸ்தான் லெஜண்ட்ஸ் அணி 198 ரன்கள் குவித்தது. அந்த அணியின் உமர் அமின் 58 ரன்கள் விளாசினார். சோயிப் மாலிக் ஆட்டமிழக்காமல் 46 ரன்கள் அடித்தார்.
பின்னர் 199 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய தென்ஆப்பிரிக்கா சாம்பியன்ஸ் அணியால் 167 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் 31 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணி வெற்றி பெற்றது. அந்த அணியின் மோர்னே வான் விக் அதிகபட்சமாக ஆட்டமிழக்காமல் 44 ரன்கள் எடுத்தார்.
இந்த போட்டியில் தோல்வியடைந்தாலும் தென்ஆப்பிரிக்கா 4 போட்டிகளில் விளையாடி 3-ல் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில முதலிடம் வகிக்கிறது. பாகிஸ்தான் 3 போட்டிகளில் 2-ல் வெற்றி, ஒரு டிரா மூலம் 2ஆவது இடத்தில் உள்ளது.
இந்தியா 2 போட்டிகளில் விளையாடி ஒன்றில் தோல்வி, ஒன்றில் டிரா (பாகிஸ்தான் உடனான போட்டியில் விளையாட மறுத்தது) மூலம் கடைசி இடத்தை பிடித்துள்ளது.
- வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.
- ரஷியாவின் மெத்வதேவ் காலிறுதி சுற்றில் தோல்வி அடைந்தார்.
வாஷிங்டன்:
வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் நடைபெற்று வருகிறது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற காலிறுதி சுற்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், பிரான்சின் கொரன்டின் மவுடெட் உடன் மோதினார்.
இதில் 6-1 என முதல் செட்டை மெத்வதேவ் வென்றார். இதில் சுதாரித்துக் கொண்ட பிரான்ஸ் வீரர் அடுத்த இரு செட்களை 6-4, 6-4 என செட் கணக்கில் வென்று அரையிறுதிக்குள் நுழைந்தார். இதன்மூலம் மெத்வதேவ் இந்தத் தொடரில் இருந்து வெளியேறினார்.
- உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடரின் அரையிறுதிக்கு முன்னேறினார் அனாஹத் சிங்.
- 15 ஆண்டுகளுக்குப் பிறகு பதக்கம் வென்ற மூன்றாவது இந்திய வீராங்கனை அனாஹத் சிங்.
கெய்ரோ:
எகிப்தில் உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்றது.
இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் அரையிறுதியில் ஆசிய ஜூனியர் (19 வயது) சாம்பியன், இத்தொடரின் நம்பர்-2 அந்தஸ்து பெற்ற இந்தியாவின் அனாஹத் சிங், எகிப்து வீராங்கனை நாடியன் எல்ஹம்மாமை சந்தித்தார்.
இதில் அனாஹத் 6-11, 12-14, 10-12 என்ற செட் கணக்கில் 0-3 என தோல்வி அடைந்தார். இதனால் அனாஹத் சிங்குக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது.
உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடரில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு பதக்கம் வென்ற மூன்றாவது இந்திய வீராங்கனை அனாஹத் சிங்.
- வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.
- யூகி பாம்ப்ரி ஜோடி காலிறுதி சுற்றில் தோல்வி அடைந்தது.
வாஷிங்டன்:
வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் நடைபெற்று வருகிறது.
ஆண்கள் இரட்டையர் பிரிவில் நடைபெற்ற காலிறுதி சுற்றில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி-நியூசிலாந்தின் மைக்கேல் வீனஸ் ஜோடி, பிரிட்டனின் நீல் கப்ஸ்கி-ஆஸ்திரேலியாவின் ஜான் பாட்ரிக் ஸ்மித் ஜோடி உடன் மோதியது.
இதில் யூகி பாம்ப்ரி ஜோடி முதல் செட்டை 6-3 என வென்றது. ஆனால் அடுத்த இரு செட்களை 4-6, 7-10 என்ற செட் கணக்கில் இழந்த யூகி பாம்ப்ரி ஜோடி தொடரில் இருந்து வெளியேறியது.
- இங்கிலாந்து அணி மூன்றாம் நாள் முடிவில் 544 ரன்கள் குவித்தது.
- ஜோ ரூட் சிறப்பாக ஆடி 150 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
மான்செஸ்டர்:
இங்கிலாந்து, இந்தியா இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டர் ஓல்டு டிராஃபோர்டில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, இந்தியா முதல் இன்னிங்சில் களமிறங்கியது. சிறப்பாக ஆடிய ஜெய்ஸ்வால் 58 ரன்னிலும், பொறுப்புடன் ஆடிய சாய் சுதர்சன் 61 ரன்னில் அவுட்டானார். அரை சதம் விளாசிய பண்ட் 54 ரன்னில் ஆட்டமிழந்தார். கே.எல்.ராகுல் 46 ரன்னிலும், ஷர்துல் தாகூர் 41 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 358 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இங்கிலாந்து சார்பில் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்டும், ஆர்ச்சர் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. முதல் விக்கெட்டுக்கு 166 ரன்கள் சேர்த்த நிலையில் ஜாக் கிராலே 84 ரன்னில் அவுட்டானார். சதமடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் பென் டக்கெட் 94 ரன்னில் வெளியேறினார். இரண்டாம் நாள் முடிவில் இங்கிலாந்து 46 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 225 ரன்கள் எடுத்துள்ளது.
இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. ஒல்லி போப் அரை சதம் கடந்து 71 ரன்னில் வெளியேறினார். ஹாரி புரூக் 3 ரன்னில் அவுட்டானார்.
5வது விக்கெட்டுக்கு ஜோ ரூட் உடன் பென் ஸ்டோக்ஸ் இணைந்தார். இந்த ஜோடி பொறுப்புடன் ஆடி ரன்களைக் குவித்தது. அரை சதம் கடந்த பென் ஸ்டோக்ஸ் 66 ரன்னில் ரிட்டயர் ஹர்ட் ஆனார். சதமடித்து அசத்திய ஜோ ரூட் 150 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இறுதியில், மூன்றாம் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 544 ரன்களைக் குவித்துள்ளது. இதன்மூலம் 186 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. பென் ஸ்டோக்ஸ் 77 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இந்தியா சார்பில் ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் தலா 2 விக்கெட்டும், கம்போஜ், பும்ரா, சிராஜ் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
- வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.
- அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் 2வது சுற்றில் தோல்வி அடைந்தார்.
வாஷிங்டன்:
வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் நடந்து வருகிறது. இத்தொடர் வரும் 27-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் முன்னாள் உலக நம்பர் 1 வீராங்கனையான அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ்,
போலந்தின் மக்டலேனா பிரெச் உடன் மோதினார்.
இதில் ஏழு முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான வீனஸ் வில்லியம்ஸ் 2-6, 2-6 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
- சீன ஓபன் பேட்மிண்டன் போட்டி சீனாவின் சாங்சோ நகரில் நடந்து வருகிறது.
- இன்று நடந்த காலிறுதி சுற்றில் இந்திய ஜோடி வெற்றி பெற்றது.
பீஜிங்:
சீன ஓபன் பேட்மிண்டன் போட்டி சீனாவின் சாங்சோ நகரில் நடந்து வருகிறது.
இந்நிலையில், இன்று நடைபெற்ற காலிறுதி சுற்றில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி, மலேசியாவின் ஆங் யூ சின்-டியோ யே யீ ஜோடி உடன் மோதியது.
இதில் அதிரடியாக ஆடிய சாத்விக்-சிராக் ஜோடி 21-18, 21-14 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.
- டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் 2ஆவது இடத்திற்கு முன்னேற்றம்.
- சச்சின் சாதனையை முறியடிக்க இன்னும் 2542 ரன்கள்தான் தேவை.
இந்தியா- இங்கிலாந்து இடையிலான 4ஆவது டெஸ்ட் மான்செஸ்டர் ஓல்டு டிராஃபோர்டில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து நட்சத்திர வீரர் ஜோ ரூட் அபாரமாக விளையாடி சதம் விளாசினார். இது அவருடைய 38ஆவது சர்வதேச டெஸ்ட் சதமாகும். இதன்மூலம் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியில் சங்கக்கரா சாதனையுடன் இணைந்துள்ளார்.
மேலும், 120 ரன்களை தொட்டபோது டெஸ்ட் கிரிக்கெட்டில் 13379 ரன்கள் அடித்து, டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் அடித்த 2ஆவது வீரர் என்ற பெருமை பெற்றார். இதற்கு முன்னதாக 13378 ரன்களுடன் ரிக்கி பாண்டிங் 2ஆவது இடத்தில் இருந்தார். அவரது சாதனையை முறியடித்துள்ளார். சச்சின் தெண்டுல்கர் 15,921 ரன்களுடனும் முதலிடத்தில் உள்ளார். சச்சின் சாதனையை முறியடிக்க இன்னும் 2542 ரன்கள் தேவை.
இந்த நிலையில் ஜோ ரூட்டால் சச்சின் தெண்டுல்கர் சாதனையை முறியடிக்கக் கூடும் எனத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ரிக்கி பாண்டிங் கூறியதாவது:-
ஜோ ரூட்டின் வயது என்ன? 35 வயதுதான் ஆகிறது. பல வருடங்களாக அவரது ரன் குவிக்கும் ஆர்வம் அதிகரித்துள்ளது. நேற்று (வியாழக்கிழமை) அது அதிகரித்துக் கொண்டிருந்தது. அவரால் சச்சின் அடித்த ரன்னை விரட்ட முடியுமா? பார்ப்போம். அவர் அதைச் செய்யக்கூடும்.
இவ்வாறு ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
ஜோ ரூட்டுக்கு தற்போது 35 வயதாகிறது. குறைந்த பட்சம் 40 வயது வரை விளையாட வாய்ப்புள்ளது. இதே ஃபார்மில் இருந்தால் 2542 ரன்கள் சாத்தியமே. பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
- 38 சதங்கள் அடித்து சங்கக்கரா சாதனையை சமன் செய்துள்ளார்.
- டெஸ்ட கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் 2ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
இந்தியா- இங்கிலாந்து இடையிலான 4ஆவது டெஸ்ட் மான்செஸ்டர் ஓல்டு டிராஃபோர்டில் நேற்று முன்தினம் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது, பென் ஸ்டோக்ஸ் (5 வி்க்கெட்) அபாரமாக பந்து வீச இந்தியா 358 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் ஜெய்ஸ்வால் (58), சாய் சுதர்சன் (61), ரிஷப் பண்ட் (54) ஆகியோர் அரைசதம் அடித்தனர்.
பின்னர் இங்கிலாந்து முதல் இன்னிங்சை தொடங்கியது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கிராவ்லி (84), பென் டக்கட் (94), ஆலி போப் (71) அரைசதங்கள் அடித்தனர். அடுத்து வந்த ஜோ ரூட் சதம் விளாசினார்.
இந்த தொடரில் ஜோ ரூட்டின் 2ஆவது சதம் இதுவாகும். மேலும் இந்தியாவுக்கு எதிராக இது அவருடைய 12ஆவது சதம் ஆகும். டெஸ்ட் கிரிக்கெட்டில் 38 சதங்கள் அடித்துள்ளார்.
இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியில் சங்கக்கரா உடன் 3ஆவது இடத்தை பகிர்ந்துள்ளார். சச்சின் தெண்டுல்கர் 51 சதங்கள் அடித்துள்ளார். கல்லீஸ் 45 சதங்கள் அடித்துள்ளனர்.
மேலும், 120 ரன்கள் எடுத்திருக்கும்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் 2ஆவது இடம் பிடித்திருந்த ரிக்கி பாண்டிங் (13,378) சாதனையை முறியடித்துள்ளார். சச்சின் தெண்டுல்கர் 15,921 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார்.
- டெஸ்ட் கிரிக்கெட்டில் 38ஆவது சதத்தை பதிவு செய்துள்ளார்.
- இந்த தொடரில் ஜோ ரூட்டின் 2ஆவது சதம் இதுவாகும்.
இந்தியா- இங்கிலாந்து இடையிலான 4ஆவது டெஸ்ட் மான்செஸ்டர் ஓல்டு டிராஃபோர்டில் நேற்று முன்தினம் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது, பென் ஸ்டோக்ஸ் (5 வி்க்கெட்) அபாரமாக பந்து வீச இந்தியா 358 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் ஜெய்ஸ்வால் (58), சாய் சுதர்சன் (61), ரிஷப் பண்ட் (54) ஆகியோர் அரைசதம் அடித்தனர்.
பின்னர் இங்கிலாந்து முதல் இன்னிங்சை தொடங்கியது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் டக்கட் மற்றும் கிராவ்லி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் ரன்ரேட் ஓவருக்கு சராசரியாக 5 என்ற அளவில் வந்து கொண்டிருந்தது. கிராவ்லி 84 ரன்களும், டக்கட் 94 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
நேற்றைய 2ஆவது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 46 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 225 ரன்கள் அடித்தது. போப் 20 ரன்களுடனும், ஜோ ரூட் 11 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று 3ஆவது நாள் ஆட்டம் தொடங்கியது. இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆலி போப் 71 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஹாரி ப்ரூக் 3 ரன்னில் வெளியேறினார். இந்த இரண்டு விக்கெட்டுகளையும் வாஷிங்டன் சுந்தர் வீழ்த்தினார்.
5ஆவது விக்கெட்டுக்கு ஜோ ரூட் உடன் பென் ஸ்டோக்ஸ் ஜோடி சேர்ந்தார். ஜோ ரூட் அபாரமாக விளையாடி சதம் விளாசினார். ஜோ ரூட் டெஸ்ட் போட்டியில் ஏற்கனவே 37 சதங்கள் அடித்துள்ளார். இது அவரின் 38ஆவது சதமாகும். இந்தத் தொடரில் இது அவரின் 2ஆவது சதமாகும்.






