என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஹேமில்டனில் நடந்த முதல் டெஸ்டில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 134 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது நியூசிலாந்து அணி.
    ஹேமில்டன்:

    நியூசிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹேமில்டனில் நடைபெற்றது.

    நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 519 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. கேப்டன் வில்லியம்சன் இரட்டை சதம் (251 ரன்) அடித்து முத்திரை பதித்தார். தொடக்க வீரர் லாதம் 86 ரன் எடுத்தார்.

    அதன்பின், முதல் இன்னிங்சை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் நியூசிலாந்து அணியினரின் அபாரமான பந்துவீச்சில் சிக்கியது. 

    வெஸ்ட் இண்டீஸ் அணி தனது முதல் இன்னிங்சில் 60 ஓவரில் 138 ரன்னில் ஆல் அவுட்டானது. இதனால் அந்த அணி பாலோஆன் ஆனது.

    நியூசிலாந்து தரப்பில் சவுத்தி 4 விக்கெட்டும், ஜேமிசன், வாக்னர் தலா 2 விக்கெட்டும், போல்டு ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    பாலோ ஆன் ஆன வெஸ்ட் இண்டீஸ் 381 ரன்கள் பின்தங்கிய நிலையில் தொடர்ந்து 2-வது இன்னிங்சை ஆடியது.

    2-வது இன்னிங்சிலும் அந்த அணி விக்கெட்டுகளை இழந்து திணறியது. 89 ரன் எடுப்பதற்குள் வெஸ்ட் இண்டீஸ் 6-விக்கெட்டுகளை இழந்தது.

    அதன்பின்னர் களமிறங்கிய பிளாக்வுட்டும், அல்ஜாரி ஜோசப்பும் பொறுப்புடன் ஆடினர். இந்த ஜோடி நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தது. அல்ஜாரி ஜோசப் அரை சதமடித்தார். மற்றொரு முனையில் சிறப்பாக ஆடிய பிளாக்வு சதமடித்து அசத்தினார்.

    இருவரும் சேர்ந்து 158 ரன்கள் சேர்த்த நிலையில் அல்ஜாரி ஜோசப் 86 ரன்னில் அவுட்டானார். அவர் வெளியேறிய சில நிமிடங்களில் பிளாக்வுட்டும் வெளியேறினார். பிளாக்வுட் 104 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இறுதியில்,  வெஸ்ட் இண்டீஸ் அணி 58.5 ஓவரில் 247 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் நியூசிலாந்து அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 134 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

    நியூசிலாந்து சார்பில் வாக்னர் 4 விக்கெட்டும், ஜேமிசன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். ஆட்டநாயகன் விருது கேன் வில்லியம்சுக்கு வழங்கப்பட்டது.

    இந்த டெஸ்டில் வெற்றி பெற்றதன் மூலம் நியூசிலாந்து அணி 2 டெஸ்ட் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. 

    இரு அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வரும் 11-ம் தேதி வெலிங்டனில் தொடங்குகிறது.
    ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியின் 17-வது லீக் ஆட்டத்தில் கவுகாத்தி அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஈஸ்ட் பெங்காலை தோற்கடித்து 2-வது வெற்றியை ருசித்தது.
    கோவா:

    7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் கோவாவில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு அரங்கேறிய 17-வது லீக் ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி)-ஈஸ்ட் பெங்கால் அணிகள் மோதின. தொடக்கத்தில் தாக்குதல் பாணியை கையாண்ட ஈஸ்ட் பெங்கால் அணிக்கு சில ‘பிரிகிக்’ வாய்ப்பு கிடைத்தன. ஆனால் அதனை அந்த அணியினரால் கவுகாத்தி வீரர்களின் தடுப்பு அரணை தாண்டி கோலாக்க முடியவில்லை. 33-வது நிமிடத்தில் ஈஸ்ட் பெங்கால் வீரர் சுர்சந்திரா சிங் பந்தை தடுக்க முயற்சித்த போது அது காலில் பட்டு எதிர்பாராதவிதமாக சுய கோலாக மாறியது. இதன் பின்னர் கடைசி நிமிடத்தில் கவுகாத்தி அணியின் மாற்று ஆட்டக்காரர் ரோச்ஹர்செலா கோல் போட்டார். முடிவில் கவுகாத்தி அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஈஸ்ட் பெங்காலை தோற்கடித்து 2-வது வெற்றியை ருசித்தது. ஈஸ்ட் பெங்கால் அணி தொடர்ச்சியாக சந்தித்த 3-வது தோல்வி இதுவாகும். அந்த அணி இதுவரை ஒரு கோல் கூட அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    இன்றைய ஆட்டங்களில் மும்பை சிட்டி எப்.சி.-ஒடிசா எப்.சி. (மாலை 5 மணி), எப்.சி.கோவா-கேரளா பிளாஸ்டர்ஸ் எப்.சி. (இரவு 7.30 மணி) அணிகள் மோதுகின்றன.
    சாய்னாவின் கணவர் உள்பட 4 பேட்மிண்டன் வீரர்களுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதியாகி இருக்கிறது.
    ஐதராபாத்:

    இந்திய பேட்மிண்டன் வீரர்களான காஷ்யப், எச்.எஸ்.பிரனாய், குருசாய் தத், பிரணாவ் ஜெர்ரி சோப்ரா ஆகியோர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்களை கொரோனா பரிசோதனைக்குட்படுத்திக் கொண்டனர். இதில் இவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி இருக்கிறது.

    முன்னாள் காமன்வெல்த் விளையாட்டு சாம்பியனான காஷ்யப், பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலின் கணவர் ஆவார். சாய்னாவுக்கு நடத்தப்பட்ட சோதனையில் அவருக்கு பாதிப்பு இல்லை என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். காஷ்யப் உள்ளிட்டோர் சமீபத்தில் ஒரு திருமண விழாவில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
    தென்ஆப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி பார்ல் நகரில் இன்று நடக்கிறது.
    பார்ல்:

    தென்ஆப்பிரிக்கா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் கேப்டவுனில் நடக்க இருந்தது. ஆனால் தென்ஆப்பிரிக்க வீரர் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதால் கடைசி நேரத்தில் இந்த ஆட்டம் தள்ளிவைக்கப்பட்டது.

    இதைத் தொடர்ந்து எஞ்சிய தென்ஆப்பிரிக்க வீரர்கள், உதவியாளர்கள் அனைவருக்கும் உடனடியாக கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்பதை குறிக்கும் ‘நெகட்டிவ்’ முடிவு வந்துள்ளது. இதையடுத்து இந்த தொடர் நடப்பது உறுதியாகியிருக்கிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி பார்ல் நகரில் இன்று (இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணி) நடக்கிறது.
    நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் அதிரடி ஆல்-ரவுண்டர் கோரி ஆண்டர்சன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார்.
    கிறைஸ்ட்சர்ச்:

    நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் அதிரடி ஆல்-ரவுண்டர் கோரி ஆண்டர்சன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். அடிக்கடி காயத்தில் சிக்கி அவதிப்பட்ட அவர் 2018-ம் ஆண்டு நவம்பர் மாதத்துக்கு பிறகு நியூசிலாந்து அணியில் இடம் பெறவில்லை. அந்த அணிக்காக 13 டெஸ்ட், 49 ஒருநாள் மற்றும் 31 இருபது ஓவர் போட்டியில் விளையாடி மொத்தம் 2 சதம், 10 அரைசதம் உள்பட 2,277 ரன்களும், 90 விக்கெட்டும் எடுத்துள்ளார்.

    அமெரிக்காவில் 2022-ம் ஆண்டில் தொடங்க இருக்கும் மேஜர் லீக் கிரிக்கெட் போட்டியில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கும் அவர் அதற்காக அமெரிக்கா சென்று குடியேற முடிவு செய்துள்ளார். இது குறித்து 29 வயதான கோரி ஆண்டர்சன் கூறுகையில், ‘நியூசிலாந்து அணிக்காக ஆடியதை மிகப்பெரிய கவுரவமாக கருதுகிறேன். வருங்காலத்தில் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து எனக்கு நானே பல கேள்விகளை கேட்டுத் தான் இந்த முடிவுக்கு வந்தேன். எனது வருங்கால மனைவி மேரி மார்க்கரெட் அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தவர். எனக்காக அவர் நியூசிலாந்து வந்து புதிய கலாசாரத்தில் வாழ்ந்து நிறைய தியாகம் செய்துள்ளார். எனவே வாய்ப்பு கிடைக்கும் போது, அமெரிக்காவில் வாழ்வது தான் நல்லது என்று நாங்கள் நினைக்கிறோம். எனது கிரிக்கெட்டுக்காக மட்டுமின்றி எங்கள் இருவருடைய பொதுவான வாழ்க்கைக்கும் இதுவே சிறந்த முடிவாகும்’ என்றார்.

    கோரி ஆண்டர்சன் 2014-ம் ஆண்டு வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் 36 பந்துகளில் சதம் அடித்து உலக சாதனை படைத்தார். அவரது அதிவேக சத சாதனையை தென்ஆப்பிரிக்காவின் டிவில்லியர்ஸ் மறுஆண்டே (வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 31 பந்தில் சதம்) முறியடித்தது நினைவு கூரத்தக்கது.
    3-வது ஒருநாள் போட்டியின் போது கேஎல் ராகுல் கூறிய அந்த வார்த்தைகளை என் வாழ்நாளில் மறக்க மாட்டேன் என ஆஸ்திரேலிய அணியின் அறிமுக வீரர் தெரிவித்துள்ளார்.
    இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கோலி முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்தார். அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 302 ரன்கள் குவித்தது. 

    அதன்பின்னர் 303 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 289 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் மூலம் இந்திய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஷர்துல் தாகூர் 3 விக்கெட்டுகளையும், தமிழக வீரரான நடராஜன் 2 விக்கெட்டுகளையும், ஜஸ்பிரித் பும்ரா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினார். ஆட்டநாயகனாக ஹர்திக் பாண்டியா தேர்வானார்.

    இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக நடராஜன் அறிமுகமானது போல் ஆஸ்திரேலிய அணி சார்பாக இருபத்தொரு வயது ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன் என்ற இளம் வீரர் அறிமுகமானார். தனது முதல் போட்டியிலேயே பேட்டிங் மற்றும் பந்து வீச்சு என இரண்டிலுமே முறையான பங்களிப்பை அவர் அளித்தார். பவுலிங்கில் 4 ஓவர் வீசி விக்கெட் எடுக்காமல் 27 ரன்களை விட்டுக்கொடுத்த அவர் பேட்டியின் போதும் 27 பந்துகளில் ஒரு சிக்சர் மற்றும் ஒரு பவுண்டரியுடன் 27 ரன்களை குவித்தார். இந்நிலையில் போட்டி முடிந்து தனது அறிமுக ஆட்டம் குறித்து பேசிய அவர் :

    நான் அதற்கு ” சிறிது நடுக்கத்துடனே தான் விளையாடி வருகிறேன்” என்று அவருக்கு பதில் அளித்தேன். அதன்பின்னர் அவர் என்னை நோக்கி பயப்பட வேண்டாம் ” கோ வெல் யங்ஸ்டர்” என்று ஊக்கப்படுத்தும் ஒரு வார்த்தையை கூறினார். அது எனக்கு ஒரு பாஸிட்டிவ் எனர்ஜியை தந்தது. அவரின் இந்த வார்த்தையை நான் எப்பொழுதும் மறக்கமாட்டேன் என்னுள் அது பசுமையான நினைவாக இருக்கும் என கிரீன் கூறியது குறிப்பிடத்தக்கது. மேலும் ராகுலின் இந்த செயலுக்கு இணையத்தில் வாழ்த்துக்கள் குவிந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
    ஆஸ்திரேலியா அணிக்கெதிராக நாளை நடக்கவுள்ள 2-வது 20 ஓவர் போட்டியில் வென்று ஒருநாள் தொடரை இழந்ததற்கு பதிலடி கொடுக்கும் ஆர்வத்தில் இந்திய அணி உள்ளது.

    சிட்னி:

    விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. சிட்னியில் நடந்த முதல் போட்டியில் 66 ரன் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் 51 ரன் வித்தியாசத்திலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. கான்பெராவில் நடந்த 3-வது போட்டியில் இந்தியா 13 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    மூன்று 20 ஓவர் போட்டி தொடரில் கான்பெராவில் நேற்று நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா 11 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் போட்டி சிட்னியில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

    இந்திய அணி இந்த ஆட்டத்திலும் வென்று தொடரை கைப்பற்றுமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். ஒருநாள் தொடரை இழந்ததற்கு பதிலடி கொடுக்க 20 ஓவர் தொடரை வெல்வது அவசியமாகும்.

    இந்திய அணி கடைசியாக ஆடிய 10 இருபது ஓவர் போட்டிளில் 9-ல் வெற்றி பெற்றது. ஒரே ஒரு ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.

    காயம் அடைந்த ஆல் ரவுண்டர் ஜடேஜா எஞ்சிய 2 ஆட்டத்திலும் ஆட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக ‌ஷர்துல் தாகூர் 20 ஓவர் அணிக்கு தேர்வாகியுள்ளார்.

    ஜடேஜா இல்லாதது இந்திய அணிக்கு மிகப்பெரிய பாதிப்பே. நேற்றைய போட்டியில் அவரது அதிரடியான ஆட்டம் வெற்றிக்கு காரணமாக இருந்தது. நாளைய போட்டிக்கான அணியில் மாற்றங்கள் செய்யப்படும். மனிஷ் பாண்டே, முகமது சமி ஆகியோர் கழற்றி விடப்படலாம். ஸ்ரேயாஸ் அய்யர், யசுவேந்திர சாகல், பும்ரா ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக்கும்.

    மாற்று வீரராக தேர்வு செய்யப்பட்ட சாகல் நேற்று 3 விக்கெட் வீழ்த்தினார். இதனால் அவர் நாளை இடம்பெறுவது உறுதி.

    ஆஸ்திரேலிய அணி நேற்றைய போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்யும் ஆர்வத்தில் உள்ளது. நாளைய ஆட்டத்தில் வெற்றிபெற வேண்டிய கட்டாயம் அந்த அணிக்கு உள்ளது.

    ஏனென்றால் தோற்றால் தொடரை இழந்துவிடும். இதனால் அந்த அணி வீரர்கள் முழு திறமையை வெளிப்படுத்துவார்கள். சிட்னி மைதானம் அந்த அணிக்கு சாதகமானது.

    நாளைய ஆட்டம் இந்திய நேரப்படி பிற்பகல் 1.40 மணிக்கு தொடங்குகிறது. சோனி டெலிவி‌ஷன் சேனல்களில் இந்த போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    ஹேமில்டனில் நடந்து வரும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்துக்கு இன்னிங்ஸ் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

    ஹேமில்டன்:

    நியூசிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹேமில்டனில் நடைபெற்று வருகிறது.

    நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 519 ரன் குவித்து டிக்லெர் செய்தது. கேப்டன் வில்லியம்சன் இரட்டை சதம் (251 ரன்) அடித்து முத்திரை பதித்தார். தொடக்க வீரர் லாதம் 86 ரன் எடுத்தார்.

    பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் நேற்றைய 2-வது நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 49 ரன் எடுத்திருந்தது. இன்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. வெஸ்ட் இண்டீஸ் தொடர்ந்து ஆடியது.

    நியூசிலாந்து அணியின் அபாரமான பந்துவீச்சால் அந்த அணி விக்கெட்டுகளை இழந்து திணறியது. வெஸ்ட் இண்டீஸ் 60 வது ஓவர்களில் 138 ரன்னில் சுருண்டது. இதனால் அந்த அணி பாலோஆன் ஆனது.

    நியூசிலாந்து தரப்பில் சவுத்தி 35 ரன் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். ஜேமிசன், வாக்னர் தலா 2 விக்கெட்டும், போல்டு ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    பாலோஆன் ஆன வெஸ்ட் இண்டீஸ் 381 ரன்கள் பின்தங்கிய நிலையில் தொடர்ந்து 2-வது இன்னிங்சை ஆடியது.

    2-வது இன்னிங்சிலும் அந்த அணி விக்கெட்டுகளை இழந்து திணறியது. 89 ரன் எடுப்பதற்குள் வெஸ்ட் இண்டீஸ் 6-விக்கெட்டுகளை இழந்தது. பிளாக்வுட் ஒருவர் மட்டுமே தாக்குபிடித்து ஆடினார்.

    இதனால் நியூசிலாந்து இந்த டெஸ்டில் இன்னிங்ஸ் வெற்றியை நோக்கி செல்கிறது.

    இந்த டெஸ்டில் வெற்றி பெறுவதன் மூலம் அந்த அணி 2 டெஸ்ட் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெறுகிறது. இரு அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 11-ந் தேதி வெலிங்டனில் தொடங்குகிறது.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் காயம் அடைந்த ஜடேஜா, மீதமுள்ள இரணடு போட்டிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று கான்பெர்ராவில் நடைபெற்றது. பேட்டிங் செய்யும்போது இந்திய அணியின் ஜடேஜா காயம் அடைந்தார். முதலில் ஹாம்ஸ்டிரிங் காயம் அடைந்தார். அதன்பின் ஸ்டார்க் பவுன்சர் பந்து ஹெல்மெட்டை தாக்கி கன்கசன் ஆனார்.

    இந்த நிலையில் மீதமுள்ள இரண்டு டி20 போட்டியில் இருந்து ஜடேஜா நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக ஷர்துல் தாகூர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
    சூதாட்டம் தொடர்பான தகவலை மறைத்த விவகாரத்தில் ஓராண்டு தடைக்காலம் பெற்ற ஷாகிப் அல் ஹசன் மீண்டும் வங்காள தேச கிரிக்கெட் போர்டின் வீரர்களுக்கான மத்திய ஒப்பந்தத்தில் இணைய இருக்கிறார்.
    வங்காளதேச அணியின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன். சூதாட்டத்தரர் இவரை அணுகிய தகவலை ஊழல் தடுப்புக்குழுவிற்கு தெரிவிக்காமல் மறைத்துவிட்டார். இதனால் ஐசிசி ஓராண்டு தடைவிதித்தது.

    கடந்த ஓராண்டாக கிரிக்கெட்டில் விளையாடாமல் இருந்த ஷாகிப் அல் ஹசன் தற்போது தடைக்காலம் முடிந்து மீண்டும் விளையாட உள்ளார். விரைவில் வெஸ்ட் இண்டீஸ் அணி வங்காளதேசம் செல்கிறது. இந்தத் தொடரில் இடம் பெறுகிறார்.

    தடைவிதித்தபோது வங்காளதேசம் கிரிக்கெட் போர்டின் வீரர்களுக்கான மத்திய ஒப்பந்தத்தில் இருந்து ஷாகிப் அல் ஹசனை நீக்கியிருந்தது. தற்போது மீண்டும் சேர்க்க இருக்கிறது. சர்வதேச கிரிக்கெட் மற்றும் உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடுவதை வைத்துதான் வீரர்கள் பெயர் ஒப்பந்தத்தில் சேர்க்கப்படும்.

    இந்த நடைமுறை ஷாகிப் அல் ஹசனுக்கு பொருந்தாது என்று வங்காளதேச கிரிக்கெட் போர்டின் செயல்பாட்டு சேர்மன் அக்ரம் கான் தெரிவித்துள்ளார்.
    இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடரை பார்க்க ஆர்வமாக இருக்கிறேன் என இங்கிலாந்து டெஸ்ட் அணி கேப்டன் ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.
    இந்தியா - ஆஸ்திரேலியா இடையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற இருக்கிறது. ஆஷஸ் தொடருக்குப்பின் மிகப்பெரிய தொடராக இது கருதப்படுகிறது.

    இங்கிலாந்து அணி 2021 கோடைக்காலத்தில் ஆஸ்திரேலியா சென்று விளையாட இருக்கிறது. இந்தியா - ஆஸ்திரேலியா தொடர், ஆஸ்திரேலிய கண்டிசன் எப்படி இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள மிகமிக உதவிகரமாக இருக்கும் என ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஜோ ரூட் கூறுகையில் ‘‘உலகின் தலைசிறந்த இரண்டு அணிகள் மோதுவதை பார்ப்பது சிறப்பானதாக இருக்கும், ஆனால், ஆஸ்திரேலியா கண்டிசனில் புது வீரர்களுடன் களம் இறங்கும் இந்தியாவுக்கு சவாலானதாக இருக்கும். இந்தத் தொடரில் இருந்து அனைத்து தரவுகளையும் எங்களால் பெற முடியும். இது முக்கியமானதாக இருக்கும்.

    இதனால் நாங்கள் இலங்கை மற்றும் இந்தியா தொடர் மீது கவனம் செலுத்தவில்லை என்று அர்த்தம் இல்லை’’ என்றார்.
    ஜடேஜாவுக்குப் பதிலாக கன்கசன் சப்ஸ்டிடியூட் வீரராக களம் இறங்கிய சாஹல் 3 விக்கெட் வீழ்த்தியதுடன் ஆட்ட நாயகன் விருதையும் வென்றார்.
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி கான்பெர்ராவில் இன்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 161 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா கடைசி நேரத்தில் சிறப்பாக விளையாடி 23 பந்தில் 44 ரன்கள் அடித்து அணியின் வெற்றிக்கு உதவியாக இருந்தார்.

    கடைசி நேரத்தில் ஸ்டார்க் பந்தை ஜடேஜாவின் ஹெல்மெட்டை பலமாக தாக்கியது. இதனால் ஜடேஜா நிலைகுலைந்தார். இந்தியா இன்னிங்ஸ் முடிந்த பின் ஆஸ்திரேலியா பேட்டிங் செய்ய வந்தது. அப்போது யாரும் எதிர்பாராத வகையில் சாஹல் பீல்டிங் செய்த வந்தார்.

    அப்போதுதான் ஜடேஜாவிற்கு சற்று மயக்கம் ஏற்படுவது போல் இருந்ததால், கன்கசன் சப்ஸ்டிடியூட் ஆக சாஹல் வந்துள்ளது. தெரிந்தது. ஒருநாள் போட்டியில் மோசமாக விளையாடியதால் கடைசி போட்டியில் இருநதும், இன்றைய போட்டியிலும் கழற்றி விடப்பட்டார். மாற்று வீரராக களம் இறங்கி அசத்தியுள்ளார்.

    இன்றைய போட்டியில் 2-வது இன்னிங்ஸ் தொடங்குவதற்கு சற்று முன்புதான் விளையாட இருக்கிறேன் என்பது தெரியவந்தது என்று சாஹல் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து சாஹல் கூறுகையில் ‘‘நாங்கள் பேட்டிங் செய்த பின்னர், விளையாட போகிறேன் என்று எனக்கு தெரிய வந்தது சிறந்த உணர்வு. நெருக்கடி ஏதும் இல்லை. நான் விளையாடுவேன் என்பது 10 முதல் 15 நிமிடத்திற்குள்தான் எனக்க தெரியவந்தது. 

    ஒருநாள் கிரிக்கெட் போட்டி செய்தி சில தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டேன். முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக ரன்கள் அடிக்க சற்று கடினமாக இருந்தது. நான் என்னுடைய திட்டப்படி பந்து வீசினேன்’’ என்றார்.
    ×