என் மலர்tooltip icon

    விளையாட்டு

    இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    காலே:

    இலங்கை-இங்கிலாந்து அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் நடந்தது. 

    இலங்கை முதல் இன்னிங்சில் 135 ரன்னில் சுருண்டது. இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 421 ரன் குவித்தது. இலங்கை அணி 2-வது இன்னிங்சில் 359 ரன்னில் ஆல்அவுட் ஆனது. இதனால் இங்கிலாந்துக்கு 74 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 2-வது இன்னிங்சில் ஆடிய இங்கிலாந்து நேற்றைய 4-வது நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 38 ரன் எடுத்து இருந்தது. 

    இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. வெற்றிக்கு மேலும் 36 ரன் தேவை. கைவசம் 7 விக்கெட் என்ற நிலையில் இங்கிலாந்து தொடர்ந்து ஆடியது. 

    அந்த அணி 24.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 76 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 2 போட்டி கொண்ட தொடரில் இங்கிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இரு அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் வருகிற 22-ந் தேதி காலேயில் தொடங்குகிறது. 

    பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 294 ரன்கள் எடுத்த நிலையில் இந்திய அணிக்கு 328 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
    பிரிஸ்பேன்:

    இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்று வருகிறது.

    ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 369 ரன் குவித்தது. இந்தியா முதல் இன்னிங்சில் 336 ரன் எடுத்தது. ஷர்துல் தாகூர் 67 ரன்னும், வாஷிங்டன் சுந்தர் 62 ரன்னும் எடுத்தனர். ஹாசல்வுட் 5 விக்கெட்டும், ஸ்டார்க், கம்மின்ஸ் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    33 ரன்கள் முன்னிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா நேற்றைய 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 21 ரன் எடுத்து இருந்தது. இன்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது. 54 ரன்கள் முன்னிலை, கைவசம் 10 விக்கெட் என்ற நிலையில் ஆஸ்திரேலியா தொடர்ந்து ஆடியது.

    வார்னரும், மார்கஸ் ஹாரிசும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். ஸ்கோர் 89 ஆக இருந்தபோது தொடக்க ஜோடி பிரிந்தது. ஹாரிஸ் 38 ரன்னில் ஷர்துல் தாகூர் பந்தில் ஆட்டம் இழந்தார். அடுத்து லபுஷேன் களம் வந்தார். அதற்கு அடுத்த ஓவரிலேயே வார்னர் 48 ரன்னில் பெவிலியன் திரும்பினார். அவரது விக்கெட்டை வாஷிங்டன் சுந்தர் வீழ்த்தினார். அப்போது ஸ்கோர் 91 ஆக இருந்தது. 3--வது விக்கெட்டுக்கு லபுஷேனுடன் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் சுமித் ஜோடி சேர்ந்தார்.

    28-வது ஓவரில் ஆஸ்திரேலியா 100 ரன்னை தொட்டது. முகமது சிராஜ் தனது அபாரமான பந்துவீச்சால் ஒரே ஓவரில் 2 விக்கெட்டை வீழ்த்தினர்.
    31-வது ஓவரின் 3-வது பந்தில் லபுஷேனை வெளியேற்றினார். முதல் இன்னிங்சில் சதம் அடித்த அவர் தற்போது 25 ரன்களே எடுத்தார். அடுத்து வந்த மேத்யூ வேட் ரன் எதுவும் எடுக்காமல் கடைசி பந்தில் அவுட் ஆனார்.

    123 ரன்னில் ஆஸ்திரேலியா 4 விக்கெட்டை இழந்தது. 5-வது விக்கெட்டுக்கு சுமித்துடன், கேமரூன் கிரீன் ஜோடி சேர்ந்தார். மதிய உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்புக்கு 149 ரன் எடுத்து இருந்தது. சுமித் 28 ரன்னிலும், கிரீன் 4 ரன்னிலும் களத்தில் இருந்தனர்.
    மதிய உணவு இடை வேளைக்குள் ஆஸ்திரேலியா மேலும் 128 ரன் எடுத்தது. 4 விக்கெட்டுகளையும் இழந்தது.

    மதிய உணவு இடை வேளைக்கு பிறகு 5-வது விக்கெட் ஜோடி தொடர்ந்து நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. சுமித் 67 பந்தில் 6 பவுண்டரியுடன் 50 ரன்னை தொட்டார். 77-வது டெஸ்டில் விளையாடும் அவருக்கு இது 31-வது அரை சதம் ஆகும்.
    முகமது சிராஜ்தான் இந்த ஜோடியையும் பிரித்தார். சுமித் 55 ரன்னில் அவரது பந்தில் ஆட்டம் இழந்தார். அப்போது ஸ்கோர் 196 ஆக இருந்தது. அடுத்து கேப்டன் டிம்பெய்ன் களம் வந்தார். 56-வது ஓவரில் ஆஸ்திரேலியா 200 ரன்னை தொட்டது. 

    இதனையடுத்து கீரின் மற்றும் பெய்ன் தாகூர் பந்தில் வெளியேறினர். ஸ்டார்க் 1 லயன் 13 ஹசில்வுட் 9 ரன்னில் ஆட்டம் இழந்தனர். இதனால் ஆஸ்திரேலியா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 294 ரன்கள் எடுத்தது. இதனால் இந்திய அணி 328 ரன்கள் அடித்தால் வெற்றி பெரும்.

    இந்திய தரப்பில் சிராஜ் 5 விக்கெட்டும், தாகூர் 4 விக்கெட்டும் சுந்தர் 1 விக்கெட்டும் வீழ்த்தினர். 
    பிரிஸ்பேனில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியின் நான்காம் நாளான இன்று மழை குறுக்கிட்டதால் போட்டி தடைபட்டது.
    பிரிஸ்பேன்:

    இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 369 ரன்களும், இந்தியா 336 ரன்களும் சேர்த்தன. இதையடுத்து 33 ரன்கள் முன்னிலையுடன் 2ம் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி, 3ம் நாளான நேற்றைய ஆட்டத்தின் முடிவில் விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்திருந்தது.

    இந்நிலையில் இன்று 4ம் நாள் ஆட்டம் தொடங்கியது. துவக்க வீரர்களான மார்கஸ் ஹாரிஸ் 38 ரன்களிலும், டேவிட் வார்னர் 48 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். லபுஸ்சாக்னே 25 ரன்கள் சேர்த்தார். அரை சதம் கடந்த ஸ்மித் 55 ரன்களில் ஆட்டமிழந்தார். மேத்யு வேட் ரன் எதுவும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார். இந்தமூன்று விக்கெட்டுகளையும் சிராஜ் கைப்பற்றினார்.

    அதன்பின்னர் நிதானமாக விளையாடிய கேமரான் கிரீன் (37), டிம் பெய்ன் (27) ஆகியோர் தாகூர் ஓவரில் விக்கெட்டை இழந்தனர். 7 விக்கெட்  இழப்பிற்கு 243 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை பெய்தது. இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. மழை தொடர்ந்து பெய்ததால் முன்கூட்டியே தேநீர் இடைவேளை விடப்பட்டது. 

    மழை தொடர்ந்து பெய்யும்பட்சத்தில் ஆஸ்திரேலிய அணி தனது 2ம் இன்னிங்சை முடித்துக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்கோருடன் ஆஸ்திரேலியா டிக்ளேர் செய்தால், இந்திய அணியின் வெற்றிக்கு 276 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்படும். இந்த இலக்கை எட்டுவதற்கே இந்தியா கடுமையாக போராட வேண்டியிருக்கும்.
    யோனெக்ஸ் தாய்லாந்து ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் ஒலிம்பிக் சாம்பியனான கரோலினா மரின் மகுடம் சூடினார்.
    பாங்காக்:

    யோனெக்ஸ் தாய்லாந்து ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பாங்காக்கில் நடந்து வந்தது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் ஒலிம்பிக் சாம்பியனான கரோலினா மரின் (ஸ்பெயின்) 21-9, 21-16 என்ற நேர் செட் கணக்கில் 42 நிமிடங்களில் தாய் ஜூ யிங்கை (சீனதைபே) தோற்கடித்து மகுடம் சூடினார். ஆண்கள் பிரிவின் இறுதி ஆட்டத்தில் விக்டர் ஆக்சல்சென் (டென்மார்க்) 21-14, 21-14 என்ற நேர் செட் கணக்கில் லாங் அங்குசை (ஹாங்காங்) வீழ்த்தி கோப்பையை கைப்பற்றினார்.

    பட்டம் வென்ற இருவருக்கும் தங்கப்பதக்கத்துடன் தலா ரூ.51 லட்சம் பரிசுத்தொகையும் கிடைத்தது. அடுத்ததாக இதே பாங்காக்கில் டோயோட்டா தாய்லாந்து ஓபன் என்ற பெயரில் சர்வதேச பேட்மிண்டன் தொடர் நாளை தொடங்குகிறது. கரோலினா மரின், தாய் ஜூ யிங், உலக சாம்பியன் இந்தியாவின் பி.வி.சிந்து, சாய்னா நோவால் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் இந்த போட்டியிலும் பங்கேற்கிறார்கள்.
    ஐ.எஸ்.எல். கால்பந்து 61-வது லீக் ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூர் எப்.சி.யை வீழ்த்தி முதலாவது வெற்றியை பெற்றது.
    கோவா:

    7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் கோவாவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 11 அணிகளும் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். இந்த நிலையில் நேற்று மாலை நடந்த 61-வது லீக் ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி) அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூர் எப்.சி.யை வீழ்த்தி 8 ஆட்டங்களுக்கு பிறகு முதலாவது வெற்றியை பெற்றது.

    கவுகாத்தி அணியில் அஷூதோஷ் மேத்தா (36-வது நிமிடம்), டிஷோன் பிரவுன் (61-வது நிமிடம்) கோல் போட்டனர். ஜாம்ஷெட்பூர் தரப்பில் 89-வது நிமிடத்தில் பீட்டர் ஹர்ட்லி பதில் கோல் திருப்பினார். மொத்தத்தில் 12-வது லீக்கில் ஆடிய கவுகாத்தி அணி 3 வெற்றி, 6 டிரா, 3 தோல்வி என்று 15 புள்ளிகளுடன் 5-வது இடம் வகிக்கிறது. ஏ.டி.கே.மோகன் பகான்- எப்.சி. கோவா இடையிலான மற்றொரு ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

    இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சென்னையின் எப்.சி. அணி, ஈஸ்ட் பெங்காலை எதிர்கொள்கிறது. இவ்விரு அணிகளும் ஏற்கனவே சந்தித்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது குறிப்பிடத்தக்கது.
    பிரிஸ்பேன் டெஸ்டில் சிறப்பாக விளையாடி வாஷிங்டன் சுந்தர், இது மிகவும் சிறப்பான நாள், எப்போதும் நினைவில் இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
    பிரிஸ்பேன் டெஸ்டில் இந்தியா முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் என்ற மோசமான நிலையில் இருந்தது. 7-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் - ஷர்துல் தாகூர் ஆகியோர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

    இந்த ஜோடி 123 ரன்கள் குவித்தது. வாஷிங்டன் சுந்தர் 62 ரன்கள் விளாசினார். இன்றைய ஆட்டம் குறித்து வாஷிங்டன் சுந்தர் கூறுகையில் ‘‘என்மேல் அன்பு வைத்திருந்த, பிரார்த்தனை செய்த, வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. இது எனக்கு மிகவும் சிறப்பான நாள். நான் எப்போதும் நினைவில் வைத்திருப்பேன்’’  என்றார்.
    சையத் முஷ்டாக் அலி டிராபி டி20-யில் மும்பை அணியை 94 ரன்னில் சுருட்டி புதுச்சேரி அபார வெற்றி பெற்றது.
    சையத் முஷ்டாக் அலி டிராபி டி20-யில் இன்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் மும்பை - புதுச்சேரி அணிகள் மோதின. டாஸ் வென்ற புதுச்சேரி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய மும்பை அணி 19 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 94 ரன்னில் சுருண்டது.

    ஷிவம் டுபே 28 ரன்களும், ஆகாஷ் பர்கர் 20 ரன்களும், ஜெய்ஸ்வால் 15 ரன்களும் அடித்தனர். புதுச்சேரி அணி சார்பில் 20 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட் சாய்த்தார் சாந்த மூர்த்தி.

    பின்னர் 95 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலககுடன் புதுச்சேரி அணி களம் இறங்கியது. முதல் மூன்று வீரர்களான எஸ். கார்த்திக் (26), தாமோதரன் ரோஹித் (18 ரன்களும்), ஷெல்டன் ஜாக்சன் (24 ரன்களும்) ஆகியோர் மோதுமான ரன்கள் அடிக்க 19 ஓவரில் 4 விக்கெட் இழப்பற்கு 95 ரன்களை எட்டு அபார வெற்றி பெற்றது.

    எலைட் இ பிரிவில் இடம் பிடித்துள்ள மும்பை அணி 4 போட்டிகளிலும் தோல்வியடைந்து கடைசி  இடத்தை பிடித்துள்ளது. கேரளால் 4-ல் மூன்றில் வெற்றி பெற்று 2-வது இடத்தில் உள்ளது.
    பிரிஸ்பேன் டெஸ்டில் இந்தியா சரணடைந்துவிடும் என நினைக்கையில் வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர் அபாரமாக விளையாடி அசத்தினர்.
    ஆஸ்திரேலியா- இந்தியா இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்று வருகிறது. முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா 369 ரன்கள் குவித்தது.

    பின்னர் இந்தியா முதல் இன்னிங்சை தெடாங்கியது. இந்தியா ஒரு கட்டத்தில் முன்னணி பேட்ஸ்மேன்கள் அனைவரையும் இழந்தது 6 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் என்ற பரிதாபத்தில் இருந்தது.

    7-வது விக்கெட்டுக்கு வாஷிங்டன் சுந்தர் உடன் ஷர்துல் தாகூர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஆஸ்திரேலியாவின் நான்குமுனை பந்து வீச்சை தாக்குப்பிடிக்குமா? என்ற கேள்வி எழுந்தது. ஆனால் இருவரும் அபாரமாக விளையாடினர்.

    வாஷிங்டன் சுந்தர் 144 பந்தில் 62 ரன்களும், ஷர்துல் தாகூர் 115 பந்தில் 67 ரன்களும் விளாசினர்.

    இந்த விக்கெட்டை ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சாளர்களால் பிரிக்க முடியவில்லை. புதுப்பந்தை எடுத்த பின்னரும் பலன் இல்லை. இருவரும் அரைசதம் கடந்தனர். இறுதியாக 309 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஷர்துல் தாகூர் கம்மின்ஸ் பந்தில் ஆட்டமிழந்தர். இந்த ஜோடி 7-வது விக்கெட்டுக்கு 123 ரன்கள் குவித்தது.

    இந்த ரன்கள் மட்டும் இல்லை என்றால் இந்தியாவின் தோல்வி உறுதியாகியிருக்கும். போட்டியில் விறுவிறுப்பு இருந்திருக்காது. தொடர்ந்து விளையாடிய இந்தியா 336 ரன்னில் ஆல்அவுட் ஆனது. 33 ரன்கள்  மட்டுமே ஆஸ்திரேலியா முன்னிலைப் பெற்றுள்ளது.

    நாளை  முழுவதும் விளையாடி300 ரன்களுக்கு மேல் இலக்கு நிர்ணயித்தால் மட்டுமே ஆஸ்திரேலியா வெற்றியை எதிர்நோக்க முடியும். இல்லையெனில் இந்தியாவுக்கும் வாய்ப்புள்ளதாக கருதப்படும்.

    ஒட்டுமொத்தமாக இருவரும் போட்டியை உயிரோட்டமாக வைத்திருந்தனர் என்றால் அதை மிகையாகாது,
    கடந்த 44 நாட்களில் அவரது வாழ்க்கை திசையே மாறிவிட்டது என தமிழக வீரர் நடராஜனை முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா பாராட்டி உள்ளார்.

    புதுடெல்லி:

    ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் தமிழக வேகப்பந்து வீரர் டி.நடராஜன் 20 ஓவர், ஒருநாள் போட்டி மற்றும் டெஸ்டில் அறிமுகமானார்.

    இதன்மூலம் 3 வடிவிலும் ஒரே சுற்றுப்பயணத்தில் அறிமுகமான முதல் இந்திய வீரர் என்ற சாதனையை நடராஜன் படைத்தார்.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியின் போது நடராஜன் சர்வதேச ஆட்டத்தில் முதல் முறையாக அறிமுகமானார். அதில் 2 விக்கெட் கைப்பற்றினார். அதன்பிறகு மூன்று 20 ஓவர் போட்டிகளிலும் சேர்த்து 6 விக்கெட் வீழ்த்தினார்.

    தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பிரிஸ்பேனில் நடைபெற்று வரும் கடைசி டெஸ்டில் இடம்பெற்றார். இதன்மூலம் டெஸ்டிலும் அவர் அறிமுகமானார். தனது முதல் டெஸ்டிலேயே 3 விக்கெட் வீழ்த்தி முத்திரை பதித்தார்.

    பும்ரா காயம் அடைந்ததால், நடராஜனுக்கு டெஸ்டில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. இதை அவர் சரியாக பயன்படுத்தி கொண்டார்.

    இந்த நிலையில் தமிழக வீரர் நடராஜனை முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா பாராட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    நடராஜன் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார். கடந்த 44 நாட்களில் அவரது வாழ்க்கை திசையே மாறிவிட்டது. ஆஸ்திரேலிய பயணத்தில் 20 ஓவர் போட்டிக்கான அணியில் அவர் தேர்வு செய்யப்படவில்லை. வருண் சக்கரவர்த்தி காயம் அடைந்ததால் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

    கடைசி ஒருநாள் போட்டியில் ரன்களை விட்டுக்கொடுத்தாலும், 2 விக்கெட் கைப்பற்றினார். அதன்பிறகு 20 ஓவர் போட்டியில் நடராஜன் தனது பந்துவீச்சில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தினார்.

    தற்போது டெஸ்ட் போட்டியிலும் அவர் அபாரமாக பந்துவீசி வருகிறார்.

    இவ்வாறு அஜய் ஜடேஜா கூறியுள்ளார்.

    இந்திய அணிக்கு எதிராக பிரிஸ்பேனில் நடந்து வரும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா அணி விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்துள்ளது.
    பிரிஸ்பேன்:

    இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் நேற்று முன்தினம் தொடங்கியது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா தொடக்க நாளில் லபுஸ்சேனின் சதத்தின் உதவியுடன் 5 விக்கெட்டுக்கு 274 ரன்கள் எடுத்திருந்தது.

    இந்த நிலையில் 2-வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. மதிய உணவு இடைவேளைக்கு முன்பாக ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 369 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. இந்திய தரப்பில் அறிமுக பவுலர்களான தமிழகத்தை சேர்ந்த நடராஜன், வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஷர்துல் தாகூர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். முந்தைய நாள் இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயத்தால் பாதியில் வெளியேறிய வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி நேற்று களம் காணவில்லை.

    பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய இந்திய அணி 2 விக்கெட்டுக்கு 62 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. அப்போது புஜாரா 8 ரன்னுடனும், ரஹானே 2 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். தொடர்ந்து பலத்த மழை கொட்டியதால் கடைசி பகுதி ஆட்டத்தை ரத்து செய்ய வேண்டியதாகி விட்டது. மழையால் கிட்டத்தட்ட 35 ஓவர்கள் இழப்பு ஏற்பட்டது. இதனால் எஞ்சிய 3 நாள் ஆட்டங்களும் அரைமணி நேரத்திற்கு முன்பாக தொடங்கி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில் இன்று நடைபெற்ற 3-வது நாள் ஆட்டத்தில் இந்திய வீரர் வாஷிங்டன் சுந்தர் தனது முதல் டெஸ்ட் அரை சதத்தை பதிவு செய்தார். இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி 336 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் ஆஸ்திரேலியாவை விட இந்திய அணி 33 ரன்கள் பின் தங்கியுள்ளது. இந்திய அணியில் அதிகபட்சமாக ஷர்துல் தாக்கூர் 67 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 62 ரன்களும் எடுத்துள்ளனர். இதை தொடர்ந்து தற்போது ஆஸ்திரேலிய அணி தனது இரண்டாவது இன்னிங்சை விளையாடி வருகிறது.

    வார்னர் மற்றும் ஹரிஸ் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இதனையடுத்து மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா அணி அணி விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்தனர். வார்னர் 20 ரன்னிலும் ஹரிஸ் 1 ரன்னிலும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
    முக்கியமான கட்டத்தில் ரோகித் சர்மா சிக்சர் அடிக்க முற்பட்டு ஆட்டம் இழந்ததை முன்னாள் கேப்டனும், டெலிவி‌ஷன் வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர் விமர்சித்துள்ளார்.
    பிரிஸ்பேன்:

    பிரிஸ்பேன் டெஸ்டில் இந்திய அணி தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா 24 பந்தில் 6 பவுண்டரியுடன், 44 ரன்கள் அடித்தார்.

    ரோகித் சர்மா நாதன் லயன் பந்துவீச்சில் சிக்சர் அடிப்பதற்காக கிரீசை விட்டு வெளியே வந்து தூக்கி அடித்தார். ஆனால் பந்து ‘ஸ்கொயர்லெக்‘ திசையில் நின்ற ஸ்டார்க் கையில் தஞ்சம் புகுந்தது.

    முக்கியமான கட்டத்தில் ரோகித் சர்மா சிக்சர் அடிக்க முற்பட்டு ஆட்டம் இழந்ததை முன்னாள் கேப்டனும், டெலிவி‌ஷன் வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    ஸ்கொயர்லெக் திசையில் பீல்டர் இருக்கிறார். அந்த பகுதியில் ரோகித் சர்மா சில பவுண்டரிகளே அடித்து இருக்கிறார். அப்படி இருக்கும்போது அவர் ஏன் சிக்சர் அடிக்க முற்பட்டு அபாயமான ஷாட்டை ஆட வேண்டும்? அது மாதிரியான ஷாட் தேவையே இல்லை. பொறுப்பற்ற ஷாட் ஆகும்.

    ரோகித் சர்மா அனுபவம் வாய்ந்த சீனியர் வீரர். அவர் அடித்த ஷாட்டுக்கு மன்னிப்பே இல்லை. அவர் தேவையில்லாமல் தனது விக்கெட்டை வீணடித்து விட்டார். முற்றிலும் தேவை இல்லாமல் அவர் ஆட்டம் இழந்தார்.

    இந்த தருணத்தில் அவர் நிதானமாக ஆடி பெரிய அளவில் ரன்னை குவித்திருக்க வேண்டும்.

    இவ்வாறு கவாஸ்கர் கூறியுள்ளார்.

    கவாஸ்கரின் விமர்சனத் துக்கு ரோகித் சர்மா பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    நாதன் லயன் பந்தில் நான் ஆடிய ஷாட்டுக்காக வருத்தப்படவில்லை. எப்போதுமே பந்துவீச்சாளர்களுக்கு நெருக்கடி கொடுப்பதற்காக அது போன்ற ஷாட்களை நான் ஆடுவேன்.

    கடந்த காலங்களிலும் இதுபோன்ற ஷாட்களை ஆடி இருக்கிறேன். லயன் சிறந்த பந்துவீச்சாளர். அவர் தனது சிறந்த பந்துவீச்சால் என்னை சிக்சர் அடிக்க விடாமல் வீழ்த்தி விட்டார் என்றார்.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 336 ரன்கள் சேர்த்தது.
    பிரிஸ்பேன்:

    இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்று வருகிறது. முதலில் ஆடிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 369 ரன் சேர்த்தது. இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி நிதானமாக விளையாடியது. போட்டியின் 2ம் நாளான நேற்றைய ஆட்டத்தின்போது 26 ஓவர் முடிந்த நிலையில் மழை பெய்ததால் போட்டி நிறுத்தப்பட்டது. ஆட்டநேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 62 ரன்கள் எடுத்திருந்தது.

    இந்நிலையில் இன்று மூன்றாம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது. தொடர்ந்து ஆடிய இந்திய அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. எனினும் வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர் ஆகியோர் பொறுப்புடன் விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் 336 ரன்களில் முடிவுக்கு வந்தது. அதிகபட்சமாக ஷர்துல் தாகூர் 67 ரன்கள் அடித்தார். வாஷிங்டன் சுந்தர் 62 ரன்களும், ரகானே 37 ரன்களும், மயங்க் அகர்வால் 38 ரன்களும் எடுத்தனர். 

    ஆஸ்திரேலியா தரப்பில் ஹாசில்வுட் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஸ்டார்க், கம்மின்ஸ் தலா 2 விக்கெட் எடுத்தனர். இதையடுத்து 33 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலிய அணி 2ம் இன்னிங்சை ஆடி வருகிறது.
    ×