என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சையத் முஷ்டாக் அலி டிராபி: மும்பையை 94 ரன்னில் சுருட்டி அபார வெற்றி பெற்றது புதுச்சேரி
Byமாலை மலர்17 Jan 2021 11:01 AM GMT (Updated: 17 Jan 2021 11:01 AM GMT)
சையத் முஷ்டாக் அலி டிராபி டி20-யில் மும்பை அணியை 94 ரன்னில் சுருட்டி புதுச்சேரி அபார வெற்றி பெற்றது.
சையத் முஷ்டாக் அலி டிராபி டி20-யில் இன்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் மும்பை - புதுச்சேரி அணிகள் மோதின. டாஸ் வென்ற புதுச்சேரி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய மும்பை அணி 19 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 94 ரன்னில் சுருண்டது.
ஷிவம் டுபே 28 ரன்களும், ஆகாஷ் பர்கர் 20 ரன்களும், ஜெய்ஸ்வால் 15 ரன்களும் அடித்தனர். புதுச்சேரி அணி சார்பில் 20 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட் சாய்த்தார் சாந்த மூர்த்தி.
பின்னர் 95 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலககுடன் புதுச்சேரி அணி களம் இறங்கியது. முதல் மூன்று வீரர்களான எஸ். கார்த்திக் (26), தாமோதரன் ரோஹித் (18 ரன்களும்), ஷெல்டன் ஜாக்சன் (24 ரன்களும்) ஆகியோர் மோதுமான ரன்கள் அடிக்க 19 ஓவரில் 4 விக்கெட் இழப்பற்கு 95 ரன்களை எட்டு அபார வெற்றி பெற்றது.
எலைட் இ பிரிவில் இடம் பிடித்துள்ள மும்பை அணி 4 போட்டிகளிலும் தோல்வியடைந்து கடைசி இடத்தை பிடித்துள்ளது. கேரளால் 4-ல் மூன்றில் வெற்றி பெற்று 2-வது இடத்தில் உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X