என் மலர்
விளையாட்டு
We have all seen @Jaspritbumrah93's fiery yorkers and sharp bouncers. Here’s presenting a never-seen-before version of the fast bowler.
— BCCI (@BCCI) January 30, 2021
Boom tries to emulate the legendary @anilkumble1074's bowling action and pretty much nails it! pic.twitter.com/wLmPXQGYgC
மும்பை:
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. வருடம் தோறும் இந்த போட்டி இந்தியாவில் நடத்தப்படுகிறது.
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜாவில் செப்டம்பர் முதல் நவம்பர் வரை நடைபெற்றது.
14-வது ஐ.பி.எல். போட்டி கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் நடைபெறுமா? என்று கேள்வி எழுந்தது. இதனால் மாற்று இடமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டது.
இந்த நிலையில் ஐ.பி.எல். போட்டி இந்தியாவில்தான் நடைபெறும் என்று கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
உள்ளூர் போட்டியான விஜய் ஹசாரே கோப்பை (ஆண்கள் 50 ஓவர் போட்டி), பெண்கள் தேசிய ஒருநாள் போட்டி பிப்ரவரி- மார்ச் மாதம் நடக்கிறது.
இந்த போட்டிக்கு பிறகு ஏப்ரல் 2-வது வாரத்தில் ஐ.பி.எல் போட்டியை தொடங்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) திட்டமிட்டுள்ளது.
ஏப்ரல் 11 முதல் 14-ந் தேதிக்குள் ஐ.பி.எல். போட்டி தொடங்கப்படும். ஜூன் முதல் வாரத்தில் ஐ.பி.எல் போட்டியை நிறைவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜூன் 6-ந் தேதி இறுதிப் போட்டி நடைபெறலாம்.
14-வது ஐ.பி.எல். போட்டி பெரும்பாலான ஆட்டங்களை மும்பையில் நடத்த பி.சி.சி.ஐ. முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அங்குள்ள வான்கடே ஸ்டேடியம், பிரபோன் மைதானம், டி.ஒய்.படேல் ஸ்டேடியம், ரிலையன்ஸ் மைதானம் (நவி மும்பை), புனே ஆகிய இடங்களில் போட்டி நடைபெறலாம். இதேபோல அகமதாபாத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய ஸ்டேடியமான சர்தார் படேல் மைதானத்திலும் போட்டிகள் நடத்தப்படுகிறது.
கொரோனா பரவலால் உள்ளூர் போட்டியான ரஞ்சி கோப்பை ரத்து செய்யப்பட்டுள்ளது. 87 ஆண்டுகால வரலாற்றில் தற்போதுதான் ரஞ்சிக் கோப்பை போட்டி முதல் முறையாக நடைபெறாமல் ரத்தாகி உள்ளது.
இந்தியாவில் ரஞ்சிகோப்பை கிரிக்கெட் போட்டி 1934-ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. கடந்த சீசனில் அரங்கேறிய ரஞ்சி போட்டியில் மொத்தம் 38 அணிகள் பங்கேற்றன. இதில் சவுராஷ்டிரா அணி சாம்பியன் கோப்பையை முதல்முறையாக உச்சிமுகர்ந்தது. உள்நாட்டு வீரர்களின் திறமையை மேம்படுத்த உதவும் இந்த முதல்தர கிரிக்கெட் போட்டி (4 நாள் ஆட்டம்) முதல்முறையாக இந்த சீசனில் (2020-21) நடத்துவதில் சிக்கல் உருவானது.
கொரோனா பரவல் இன்னும் முழுமையாக கட்டுக்குள் வராத நிலையில் ஒவ்வொரு மாநில அணி வீரர்களையும் கொரோனா தடுப்பு மருத்துவ உயிர் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வந்து முழுமையான பாதுகாப்புடன் நீண்ட நாட்கள் இந்த போட்டியை நடத்துவது என்பது சிரமமான காரியம். அத்துடன் ஏற்கனவே சில மாதங்கள் கடந்து விட்டது.
இது குறித்து ஒவ்வொரு மாநில கிரிக்கெட் சங்கங்களிடம் இந்திய கிரிக்கெட் வாரியம் யோசனை கேட்டது. இதில் பெரும்பாலான மாநில சங்க உறுப்பினர்கள் இந்த சீசனில் ரஞ்சி போட்டி வேண்டாம் என்று கருத்து தெரிவித்தனர். அவர்களின் யோசனையை ஏற்று 87 ஆண்டு கால வரலாற்றில் முதல்முறையாக இந்த சீசனில் ரஞ்சி போட்டி நடத்தப்படாது என்று இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
விஜய்ஹசாரே நடக்கும்
இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய் ஷா, மாநில கிரிக்கெட் சங்கங்களின் நிர்வாகிகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில் ‘ரஞ்சி கோப்பை போட்டியை இந்த ஆண்டு நடத்த வேண்டாம் என்று மாநில கிரிக்கெட் சங்கங்களிடம் நடத்தப்பட்ட ஆலோசனைக்கு பிறகு முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. அதே சமயம் விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் (ஆண்கள் 50 ஓவர்), பெண்களுக்கான தேசிய அளவிலான ஒரு நாள் போட்டி மற்றும் வினோ மன்கட் கோப்பைக்கான 19 வயதுக்குட்பட்டோருக்கான ஒரு நாள் போட்டி ஆகியவை கிரிக்கெட் வாரியம் சார்பில் நடத்தப்படும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம். இது தொடர்பான விவரங்கள் விரைவில் தெரிவிக்கப்படும்.
முஷ்டாக் அலி கோப்பை போட்டியை கிரிக்கெட் வாரியத்துடன் இணைந்து வெற்றிகரமாக நடத்திய மாநில சங்கங்களுக்கு நன்றி. முஷ்டாக் அலி போட்டிக்கு எந்த மாதிரியான கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்பட்டதோ, அதே பாதுகாப்பு நடைமுறைகள் விஜய் ஹசாரே கோப்பை போட்டியிலும் தொடரும்’ என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ரஞ்சி கோப்பை போட்டியில் விளையாடாமல் ஊதியத்தை இழக்கும் வீரர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க ஏற்கனவே கிரிக்கெட் வாரியத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
11 அணிகள் பங்கேற்றுள்ள 7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கோவாவில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு அரங்கேறிய 76-வது லீக் ஆட்டத்தில் பலம் வாய்ந்த மும்பை சிட்டி அணி 1-2 என்ற கோல் கணக்கில் நார்த் ஈஸ்ட் யுனைடெட்டிடம் (கவுகாத்தி) அதிர்ச்சி தோல்வி அடைந்தது. கவுகாத்தி அணியில் டேஷோர்ன் பிரவுன் 6-வது மற்றும் 9-வது நிமிடத்தில் கோல் அடித்தார். மும்பை சிட்டி தரப்பில் 85-வது நிமிடத்தில் ஆடம் லே பான்ட்ரோ கோல் திருப்பினார். கடந்த 12 ஆட்டங்களில் தோல்வியே சந்திக்காத மும்பை சிட்டி இந்த ஆட்டத்திலும் டிராவோ அல்லது வெற்றியோ கண்டிருந்தால் ஐ.எஸ்.எல். வரலாற்றில் தொடர்ந்து அதிக ஆட்டங்களில் தோல்வியை சந்திக்காத அணி என்ற சாதனையை படைத்திருக்கும். மயிரிழையில் அச்சாதனை நழுவிப் போனது.
மும்பை சிட்டி அணி மொத்தம் 14 ஆட்டங்களில் விளையாடி 9 வெற்றி, 3 டிரா, 2 தோல்வி என்று 30 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. 5-வது வெற்றியை ருசித்த கவுகாத்தி அணி புள்ளிப்பட்டியலில் 4-வது இடம் வகிக்கிறது.
இன்றைய லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி.-ஐதராபாத் எப்.சி.(மாலை 5 மணி), ஏ.டி.கே. மோகன் பகான்-கேரளா பிளாஸ்டர்ஸ் (இரவு 7.30 மணி)அணிகள் மோதுகின்றன.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ) தலைவரும், முன்னாள் கேப்டனுமான கங்குலிக்கு கடந்த 2-ந் தேதி லேசான மாரடைப்பு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து அவர் கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு கங்குலிக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 3 இதய தமணிகளில் அடைப்பு இருந்தது தெரியவந்தது.
ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு இதய தமணி ஒன்றில் ஸ்டென்ட் பொருத்தப்பட்டது. 5 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு கங்குலி வீடு திரும்பினார்.
இந்த நிலையில் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கங்குலிக்கு 2-வது முறையாக ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை செய்யப்பட்டு இதய தமணியில் 2 ஸ்டென்ட் பொருத்தப்பட்டது.
இந்த நிலையில் கங்குலியின் உடல்நிலை நன்றாக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவர் தனி அறைக்கு மாற்றப்பட்டுள்ளார். டாக்டர்கள் அப்தாப்கான், அஸ்வின் மேத்தா ஆகியோர் கங்குலியின் உடல்நிலையை பரிசோதித்து சீராக இருப்பதாக தெரிவித்ததாக மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







