என் மலர்tooltip icon

    விளையாட்டு

    விராட் கோலி - அனுஷ்கா ஷர்மா தம்பதிக்கு கடந்த மாதம் 11-ந்தேதி பெண் குழந்தை பிறந்த நிலையில், அக்குழந்தைக்கு வாமிகா என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
    இந்திய அணி கேப்டன் விராட் கோலி - பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா ஆகியோருக்கு கடந்த மாதம் 11-ந்தேதி பெண் குழந்தை பிறந்தது. அவர்கள் பிறந்த உடன் குழந்தையை வெளியுலகத்திற்கு காட்டவில்லை. தனிமனித உரிமை கடைபிடிக்கப்பட வேண்டும் வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர். இதனால் மீடியாக்கள் அவர்கள் பின்தொடரவில்லை.

    இந்த இந்நிலையில் அனுஷ்கா ஷர்மா டுவிட்டர் பக்கத்தில் விராட் கோலி, குழந்தையுடன் இருக்கும் படத்தை வெளியிட்டு, மகளின் பெயர் வாமிகா’’  எனவும் தெரிவித்துள்ளார்.
    இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டியின்போது 50 சதவீத ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது. முதல் டெஸ்ட் வருகிற 5-ம் தேதியும், 2-வது டெஸ்ட் வருகிற 13-ந்தேதியும் தொடங்குகிறது.

    கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக ரசிகர்களுக்கு அனுமதி கிடையாது. பூட்டிய மைதானத்திற்குள் போட்டிகள் நடைபெறும் என பிசிசிஐ அறவித்தது. இதற்கிடையில் பிப்ரவரி 1-ந்தேதியில் (இன்று) இருந்து 50 சதவீத ரசிகர்களை அனுமதிக்க தமிழக அரசு அனுமதி அளித்தது.

    இதனால் ரசிகர்களை அனுமதிக்க வேண்டும் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், பிசிசிஐ கோரிக்கை விடுத்தது. இந்த நிலையில் 2-வது டெஸ்டில் 50 சதவீத ரசிகர்களை அனுமதிக்க பிசிசிஐ அனுமதி அளித்துள்ளது. 2-வது போட்டிக்கான டிக்கெட் விற்பனை விரைவில் தொடங்கும் என தமிழ்நாடு கிரக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.

    முதல் டெஸ்டில் கிளப் உறுப்பினர்கள், மீடியா நபர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் ஆர்.எஸ். ராமசாமி தெரிவித்துள்ளார்.
    பார்சிலோனா அணியில் விளையாடுவதற்காக ரூ.4,904 கோடிக்கு லியோனஸ் மெஸ்சி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

    பார்சிலோனா:

    உலகின் முன்னணி கால்பந்து வீரர்களில் ஒருவர் லியோனல் மெஸ்சி. அர்ஜென்டினா நாட்டை சேர்ந்த இவர் ஸ்பெயினில் உள்ள பார்சிலோனா கிளப் அணியில் விளையாடி வருகிறார்.

    33 வயதான மெஸ்சி 2004-ம் ஆண்டு முதல் பார்சிலோனா அணிக்காக விளையாடி பல சாதனைகளை படைத்துள்ளார். 30-க்கும் அதிகமான பட்டங்களை வென்று கொடுத்துள்ளார்.

    ஆனாலும் அணியின் முன்னேற்றம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்று அதிருப்தி தெரிவித்து மெஸ்சி பார்சிலோனா அணியில் இருந்து வெளியேறப் போவதாக தெரிவித்தார். ஆனாலும் அவரால் பல்வேறு சட்ட சிக்கல்களால் பார்சிலோனா கிளப்பில் இருந்து வேறு கிளப்புக்கு மாற முடியவில்லை.

    இந்த நிலையில் மெஸ்சி கடந்த 2017 முதல் 4 ஆண்டுக்கு பார்சிலோனா அணியில் விளையாடுவதற்காக ரூ.4,904 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்ததாக ஸ்பெயினில் இருந்து வெளியாகும் பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது.

    இதன்மூலம் விளையாட்டு உலகில் தனி ஒருவர் ஒப்பந்தம் செய்யப்பட்ட அதிகபட்ச மதிப்பாகும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

    அந்த செய்தியில் உள்ள தகவல்படி ஒரு சீசனுக்கான மெஸ்சியின் ஊதியம் ரூ.1,217 கோடியாகும். இதில் நிர்ணயிக்கப்பட்ட வருவாயுடன் இதர வருவாயும் அடங்கும்.

    ஆனாலும் ஸ்பெயின் வரி விதிகளின்படி இந்த தொகையில் பாதியை மெஸ்சி வரியாக செலுத்தி இருக்க வேண்டியது இருக்கும்.

    ஒப்பந்தத்தின் மொத்த மதிப்பில் சுமார் ரூ.4,500 கோடியை மெஸ்சி ஏற்கனவே பெற்றுவிட்டதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையேயான டெஸ்ட் போட்டி கண்ணோட்டம் பற்றி சில தகவல்களை காண்போம்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகள் இடையே 34-வது டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது.

    இதுவரை நடந்த 33 தொடரில் இந்தியா 10 டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. இங்கிலாந்து 19 முறை வென்றுள்ளது. 4 முறை தொடர் சமநிலையில் முடிந்தது. சொந்த மண்ணில் இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான 7 டெஸ்ட் தொடரை கைபற்றி உள்ளது. இங்கிலாந்து அணி இந்தியாவில் 5 முறை தொடரை வென்றுள்ளது. 3 தொடர் சமநிலையில் முடிந்தது.

    கடைசியாக 2018-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த டெஸ்ட் தொடரில் அந்த அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்திய மண்ணில் கடைசியாக 2016-17 தொடரில் இந்தியா 4-0 என்ற கணக்கில் வென்றது.

    இரு அணிகளும் 122 டெஸ்டில் மோதியுள்ளன. இதில் இந்தியா 26-ல் இங்கிலாந்து 47-ல் வெற்றி பெற்றுள்ளது. 49 டெஸ்ட் ‘டிரா’ ஆனது.

    இந்திய அணி 2016-ம் ஆண்டு சென்னையில் நடந்த டெஸ்டில் 7 விக்கெட் இழப்புக்கு 759 ரன் குவித்ததே அதிகபட்ச ஸ்கோராகும். இங்கிலாந்து அணி 2011-ம் ஆண்டு பர்மிங்காமில் 7 விக்கெட் இழப்புக்கு 710 ரன் குவித்து இருந்தது.

    இங்கிலாந்து அணி இந்திய மண்ணில் அதிகபட்சமாக சென்னை டெஸ்டில் 652 ரன் எடுத்து இருந்தது.

    இந்தியா 42 ரன்னில் சுருண்டதே (1947, லார்ட்ஸ்) குறைந்தபட்ச ஸ்கோராகும். சொந்த மண்ணில் 1977-ல் சேப்பாக்கத்தில் 83 ரன்னில் சுருண்டு இருந்தது.

    இங்கிலாந்து 101 ரன்னில் சுருண்டதே (1971 ஓவல்) குறைந்தபட்ச ஸ்கோராகும். இந்திய மண்ணில் 1981-ல் மும்பையில் 102 ரன்னில் சுருண்டு இருந்தது.

    தெண்டுல்கர் 32 டெஸ்டில் விளையாடி 2,535 ரன் எடுத்து முதலிடத்தில் உள்ளார். சராசரி 51.73 ஆகும். 7 சதமும், 13 அரை சதமும் அடித்துள்ளார். அதிகபட்சமாக 193 ரன் குவித்துள்ளார். அதற்கு அடுத்தபடியாக கவாஸ்கர் 38 டெஸ்டில் 2483 ரன் (4 சதம், 16 அரைசதம்) எடுத்துள்ளார். அதிகபட்சமாக 221 ரன் குவித்துள்ளார்.

    இங்கிலாந்து முன்னாள் கேப்டன் குக் 7 சதத்துடன் 2431 ரன் எடுத்து 3-வது இடத்தில் உள்ளார். இந்தியாவுக்கு எதிராக அவரது அதிகபட்ச ஸ்கோர் 294 ரன் ஆகும்.

    ஒரு இன்னிங்சில் அதிக ரன் எடுத்தவர் இங்கிலாந்து முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் கிரகாம் கூச் ஆவார். 1990-ம் ஆண்டு லார்ட்ஸ் மைதானத்தில் 333 ரன் குவித்தார். அதற்கு அடுத்தபடியாக இந்திய வீரர் கருண் நாயர் 303 ரன் (2016, சென்னை) குவித்துள்ளார்.

    வேகப்பந்து வீரர் ஆண்டர்சன் 27 டெஸ்டில் 110 விக்கெட் கைப்பற்றி முதல் இடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக இந்திய முன்னாள் சுழற்பந்து வீரர் பி.எஸ். சந்திரசேகர் 95 விக்கெட் எடுத்து 2-வது இடத்திலும், கும்ப்ளே 92 விக்கெட்டுடன் 3-வது இடத்திலும் உள்ளனர்.

    இங்கிலாந்தைச் சேர்ந்த ட்ருமேன் 31 ரன் கொடுத்து 8 விக்கெட் வீழ்த்தியதே (1952, மான்செஸ்டர்) ஒரு இன்னிங்சின் சிறந்த பந்துவீச்சு ஆகும். இந்திய வீரர்களில் மன்காட் 55 ரன் கொடுத்து 8 விக்கெட்டும், சந்திரசேகர் 79 ரன் கொடுத்து 8 விக்கெட்டும் கைப்பற்றி உள்ளனர்.

    ஒரு டெஸ்டில் அதிக விக்கெட் கைப்பற்றியவர் இயன் போத்தம். 1980-ம் ஆண்டு மும்பை டெஸ்டில் 106 ரன் கொடுத்து 13 விக்கெட் வீழ்த்தினார். அதற்கு அடுத்தபடியாக மன்காட், அஸ்வின், சிவ ராமகிருஷ்ணன் ஆகியோர் 12 விக்கெட் சாய்த்து இருந்தனர்.

    சையத் முஷ்தாக் அலி கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் தமிழக அணி சாம்பியன் பட்டம் பெற்றதற்கு சுழற்பந்து வீரர்களால் தான் காரணம் என பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    சையத் முஷ்தாக் அலி கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் தமிழக அணி சாம்பியன் பட்டம் பெற்றது. அந்த அணி இறுதிப் போட்டியில் பரோடாவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

    இந்த போட்டி தொடரில் தமிழக அணி லீக் உள்பட 8 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று சாதித்தது. 2-வது முறையாக தமிழகத்துக்கு கோப்பை கிடைத்தது. இதற்கு முன்பு 2007-ம் ஆண்டு சாம்பியன் பட்டம் பெற்றிருந்தது.

    இதுகுறித்து தமிழக அணியின் பயிற்சியாளர் டி.வாசு கூறும்போது, நீண்ட பயணத்துக்கு பிறகு கோப்பையை வென்றுள்ளோம். ஒட்டுமொத்த வீரர்களின் செயல்பாடு சிறப்பாக இருந்தது. சுழற்பந்து வீச்சாளர்களால் வெற்றி பெற்றோம். சுழற்பந்துதான் எங்களது பலம் என்றார்.

    சேப்பாக்கத்தில் நடை பெறும் 2-வது டெஸ்டில் பார்வையாளர்களை அனுமதிப்பது தொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இன்று முடிவு செய்யப்பட உள்ளது.

    சென்னை:

    இங்கிலாந்து கிரிக்கெட் அணி 4 டெஸ்ட், ஐந்து 20 ஓவர் போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது.

    முதல் 2 டெஸ்ட் போட்டிகள் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடக்கிறது. முதல் டெஸ்ட் வருகிற 5-ந் தேதி முதல் 9-ந் தேதி வரையிலும், 2-வது டெஸ்ட் 13-ந் தேதி முதல் 17-ந் தேதி வரையிலும் நடக்கிறது.

    முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கும் ரசிகர்கள் அனுமதி கிடையாது என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ஏற்கனவே அறிவித்தது.

    இந்த நிலையில் பிப்ரவரி மாதத்துக்கான கொரோனா வழிகாட்டுதல் அறிவிப்பில் 50 சதவீத பார்வையாளர்களை அனுமதிக்கலாம் என்று தமிழக அரசு குறிப்பிட்டு இருந்தது.

    இதனால் சென்னை டெஸ்ட் போட்டிகளில் ரசிகர்களை அனுமதிப்பது குறித்து பேச்சுக்கள் மீண்டும் எழுந்துள்ளன. முதல் டெஸ்ட் போட்டி தொடங்க இன்னும் சில தினங்களே இருப்பதால், 50 சதவீத பார்வையாளர்களை அனுமதிப்பதற்கான வாய்ப்பு இல்லை.

    இதனால் 2-வது டெஸ்ட் போட்டியில் இருந்து ரசிகர்களை அனுமதிப்பது தொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

    சேப்பாக்கத்தில் நடை பெறும் 2-வது டெஸ்டில் பார்வையாளர்களை அனுமதிப்பது தொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்யும்.

    இங்கிலாந்து கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ரசிகர்களை அனுமதிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளது. இதனால் அந்த நாட்டு கிரிக்கெட் சங்கத்துடன் பேசி, இந்திய கிரிக்கெட் வாரியம் இது குறித்து முடிவு செய்து அறிவிக்கும்.

    2-வது டெஸ்டில் ரசிகர்களை அனுமதிப்பதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாக கருதப்படுகிறது.

    கன்னிபெராவில் நடந்த பிக் பாஷ் லீக் போட்டியில் சிட்னி தண்டர் அணியை வீழ்த்தி பிரிஸ்பேன் ஹீட் அணி சேலஞ்சர் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
    கன்னிபெரா:

    பிக் பாஷ் லீக் போட்டியின் நாக் அவுட் சுற்று கன்னிபெரா மைதானத்தில் நடைபெற்றது. இதில் சிட்னி தண்டர், பிரிஸ்பேன் ஹீட் அணிகள் மோதின. டாஸ் வென்ற பிரிஸ்பேன் ஹீட் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    இதையடுத்து சிட்னி தண்டர் அணி களமிறங்கியது. அந்த அணியின் பில்லிங்ஸ், கட்டிங் ஆகியோர் தலா 34 ரன்னும், தொடக்க ஆட்டக்காரார் கவாஜா 28 ரன்னும், பெர்குசன் 25 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    இறுதியில், சிட்னி தண்டர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 158 ரன்கள் எடுத்தது.

    இதையடுத்து 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பிரிஸ்பேன் ஹீட் ஆடியது. தொடக்க ஆட்டக்காரர்கள்
    ஜோ டென்லி டக் அவுட்டாகி ஏமாற்றினார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் கிறிஸ் லின் 10 ரன்னில் வெளியேறினார். அடுத்து இறங்கிய லாபஸ்சாக்னே 32 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    தொடர்ந்து இறங்கிய சாம் ஹீஸ்லெட்டும் ஜிம்மி பியர்சன் அதிரடியாக ஆடினர். ஹீஸ்லெட் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து அதிரடி காட்டினார்.

    இறுதியில், பிரிஸ்பேன் ஹீட் அணி 19.1 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 162 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அத்துடன் சேலஞ்சர் சுற்றுக்கும் முன்னேறியது. ஹீஸ்லெட் 74 ரன்னுடனும், பியர்சன் 43 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    பிக் பாஷ் லீக் போட்டியின் சேலஞ்சர் போட்டி பிப்ரவரி 4-ம் தேதி நடைபெறுகிறது. அதில் பெர்த் ஸ்கார்சர்ஸ் அணியை எதிர்கொள்கிறது பிரிஸ்பேன் ஹீட் அணி. இதில் வெற்றி பெறும் அணி பிப்ரவரி 6-ல் நடக்கவுள்ள இறுதிப்போட்டியில் சிட்னி சிக்சர்ஸ் அணியை சந்திக்கிறது.
    ஆஸ்திரேலிய தொடரில் வரலாற்று வெற்றியைப் பெற்ற இந்திய அணியை பிரதமர் மோடி மன் கி பாத் நிகழ்ச்சியில் பாராட்டி பேசியதற்கு பி.சி.சி.ஐ. தலைவர் சவுரவ் கங்குலி நன்றி தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையன்று பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு அகில இந்திய வானொலியில் மனதின் குரல் (மன் கி பாத்) நிகழ்ச்சியில் பேசுவது வழக்கம். 

    அந்தவகையில் நேற்று நடந்த மன் கி பாத் நிகழ்ச்சியில், ஆஸ்திரேலிய தொடரில் வரலாற்று வெற்றியைப் பெற்ற இந்திய அணியின் வெற்றி குறித்து பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

    இதுதொடர்பாக பிரதமர் மோடி கூறுகையில், ஜனவரி மாதம் இந்திய கிரிக்கெட் ஆடுகளத்தில் இருந்து நல்ல செய்தி கிடைத்தது. தொடக்கத்தில் சரிவு காணப்பட்டாலும், இந்திய அணி உற்சாகமாக மீண்டு எழுந்து, ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்றது. நம்முடைய அணியின் கடின உழைப்பு, கூட்டு உழைப்பு உத்வேகம் அளிக்கக்கூடியதாக இருக்கிறது எனப் பாராட்டியிருந்தார்.

    இந்நிலையில், ஆஸ்திரேலிய தொடரில் வரலாற்று வெற்றியைப் பெற்ற இந்திய அணியை பிரதமர் மோடி மன் கி பாத் நிகழ்ச்சியில் பாராட்டியதற்கு பி.சி.சி.ஐ. தலைவர் சவுரவ் கங்குலி நன்றி தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக சவுரவ் கங்குலி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், ஆஸ்திரேலியாவில் வெற்றிப் பெற்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடியின் ஊக்கமளிக்கும், உத்வேகம் அளிக்கும் வார்த்தைகளுக்கு நன்றி என பதிவிட்டுள்ளார்.

    இதேபோல், இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், நன்றி ஐயா. உங்களது அன்பான வார்த்தைகள் இந்திய அணியையும், கடினமான சூழலில் செயல்படுவதற்கான உறுதித் தன்மையையும் மேலும் பலப்படுத்தும். ஜெய்ஹிந்த் என பதிவிட்டுள்ளார்.
    குஜராத் மாநிலம் அகமதாபாத் சர்தார் பட்டேல் மைதானத்தில் நடைபெற்ற சையது முஷ்டாக் அலி டிராபி டி20 இறுதிப் போட்டியில் பரோடாவை வீழ்த்தி தமிழ்நாடு அணி சாம்பியன் பட்டம் வென்றது.
    சையது முஷ்டாக் அலி டிராபி டி20 கிரிக்கெட்டின் இறுதிப் போட்டி இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத் சர்தார் பட்டேல் மைதானத்தில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு- பரோடா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    டாஸ் வென்ற தமிழ்நாடு பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்பின் பரோடா அணி முதலில் பேட்டிங் செய்தது. தமிழ்நாடு அணி கேப்டன் தினேஷ் கார்த்தில் தொடக்கத்தில் இருந்து சுழற்பந்து வீச்சை பயன்படுத்தினார். மணிமாறன் சித்தார்த் அபாரமாக பந்து வீசி 4 விக்கெட் சாய்க்க, பரோடா தொடக்கத்திலேயே தள்ளாட ஆரம்பித்தது.

    3-வது வீரராக களம் இறங்கிய வி. சோலங்கி அதிகபட்சமாக 55 பந்தில் 49 ரன்கள் சேர்த்தார். இவரது ஆட்டத்தால் பரோடா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 120 ரன்களே அடித்தது.

    தமிழ்நாடு அணி சார்பில் மணிமாறன் சித்தார்த் 4 ஓவரில் 20 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். பாபா அபரஜித், சோனு யாதவ், எம். முகமது ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

    மணிமாறன் சித்தார்த்

    பின்னர் 121 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தமிழ்நாடு அணியின் ஹரி நிஷாந்த், என். ஜெகதீசன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஜெகதீசன் 14 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பாபா அபரஜித் நிலைத்து நின்று விளையாடினார். ஹரி நிஷாந்த் 35 ரன்கள் விளாசினார். தினேஷ் கார்த்திக் 16 பந்தில் 22 ரன்கள் விளாசினார்.

    ஷாருக் கான் 7 பந்தில் 18 ரன்கள் விரட்ட தமிழ்நாடு 18 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. பாபா அபரஜித் 35 பந்தில் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 4 விக்கெட் வீழ்த்திய மணிமாறன் சித்தார்த் ஆட்டநாயகள் விருதை வென்றார்.
    சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் நீண்ட நேரம் விக்கட் கீப்பர் பணியை மேற்கொள்வது சவாலானது என்று இங்கிலாந்து வீரர் பென் போக்ஸ் தெரிவித்துள்ளார்.
    இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு வீரர்களை சுழற்சி முறையில் பயன்படுத்த முடிவு செய்துள்ளது. இதனால் இந்தியாவுக்கு எதிரான முதல் போட்டியில் ஜோஸ் பட்லர் விளையாடிய பின்னர் இங்கிலாந்து சென்று விடுவார். 3-வது போட்டிக்குதான் பேர்ஸ்டோவ் திரும்புவார்.

    இதனால் 2-வது டெஸ்ட் போட்டியில் பென் போக்ஸ் விக்கெட் கீப்பராக செயல்பட அதிக வாய்ப்புள்ளது. அவர் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் நீண்ட நேரம் கவனமாக செயல்படுவது சவாலானது என்று தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘இலங்கை அல்லது ஆசிய நாடுகளில் நீண்ட நேரம் மிகவும் கவனமாக செயல்படுவதாக கடினம். பந்து சுழன்ற வரும். அதற்கு ஏற்ப செயல்பட வேண்டும். மிகப்பெரிய பேட்டிங் ஆர்டர் கொண்ட இந்தியாவுக்கு எதிராக விளையாட ஆர்வமாகவும், எதிர்பார்ப்பாகவும், சற்று தடுமாற்றமாகவும் இருக்கும். கிரிக்கெட் மீது பேரார்வம் கொண்ட நாட்டில் விளையாடுவது நம்பமுடியாத இடம். இங்கு வாய்ப்பு கிடைத்தால் சிறப்பானதாக இருக்கும்’’ என்றார்.
    ஆஸ்திரேலியா தொடரில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியவர்களில் ஒருவரான முகமது சிராஜ், இங்கிலாந்து தொடரில் அவ்வாறு செயல்பட விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மெல்போர்ன் டெஸ்டில் அறிமுகமான முகமது சிராஜ் சிறப்பாக பந்து வீசினார். பிரிஸ்பேன் டெஸ்டின் 2-வது இன்னிங்சில் ஐந்து விக்கெட் சாய்த்தார். மூன்று போட்டிகளில் விளையாடினாலும் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றார்.

    இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் பிப்ரவரி 5-ந்தேதி தொடங்குகிறது.

    ஆஸ்திரேலியா தொடரை போன்று இங்கிலாந்து தொடரிலும் இந்திய அணிக்கு உதவியாக இருக்க விரும்புகிறேன் என முகமது சிராஜ் தெரிவித்துதள்ளார்.

    இதுகுறித்து முகமது சிராஜ் கூறுகையில் ‘‘நான் எனது நாட்டிற்காக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்புகிறேன். ஆஸ்திரேலியா தொடரில் செய்தது போன்று இங்கிலாந்து தொடரிலும், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு உதவ விரும்புகிறேன். ஆஸ்திரேலியா தொடர் எனக்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்தது. இங்கிலாந்துக்கு எதிராகவும் அதேபோன்று செயல்படுவேன் என்ற நம்பிக்கை உள்ளது.

    ஆஸ்திரேலியா தொடரில் அதிக அளவில் கற்றுக்கொண்டேன். வீரர்கள் அறையில் இருந்து வலைப்பயிற்சி வரை புஜாரா, ரஹானே, ஷமி, ரோஹித் சர்மா, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோரிடம் அதிக அளவில் கற்றுக்கொண்டேன். இங்கிலாந்துக்கு எதிரான அந்த அறிவை பயன்படுத்துவேன்.

    நான் பும்ரா, ஷமி, ஷர்துல் தாகூருடன் இணைந்து பந்து வீசியுள்ளேன். அவர்கள் இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ளனர். தற்போது இஷாந்த் சர்மாவுடன் இணைந்து பந்து வீச ஆர்வமாக உள்ளேன். இது எனக்கு கற்றுக்கொள்ள மிகப்பெரியதாக இருக்கும்’’ என்றார்.
    இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளரான அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா, ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
    இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளராக உள்ள ஜெய் ஷா, ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த தகவல் பிசிசிஐ பொருளாளர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தி மூலம் தெரியவந்துள்ளது.

    பிசிசிஐ பொருளாளர் அருண் துமல் டுவிட்டர் பக்கத்தில் ‘‘ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் பதவியை பெற்றுக்கொண்டதற்காக வாழ்த்துக்கள். உங்களுடைய தலைமையில் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் உச்சத்தை அடையும் என்பதை என்னால் உறுதியாக கூற முடியும். ஆசிய கிரிக்கெட் வீரர்கள் நன்மை அடைவார்கள். பதவியில் வெற்றிகரமாக செயல்பட என்னுடைய வாழ்த்துக்கள்’’ என்றார்.
    ×