search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    4 விக்கெட் வீழ்த்திய எம். முகமது
    X
    4 விக்கெட் வீழ்த்திய எம். முகமது

    அருண் கார்த்திக் அபாரம்: ராஜஸ்தானை வீழ்த்தி தமிழ்நாடு இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்

    சையது முஷ்டாக் அலி டிராபி டி20 கிரிக்கெட்டில் அருண் கார்த்திக் அபாரான ஆட்டத்தை வெளிப்படுத்த தமிழக அணி ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
    சையது முஷ்டாக் அலி டிராபி டி20 தொடரின் அரையிறுதி ஆட்டம் இன்று மதியம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு - ராஜஸ்தான் அணிகள் மோதின.

    டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த ராஜஸ்தான் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் கேப்டன் மெனாரியா 32 பந்தில் 51 ரன்களும், ஏ. குப்தா 35 பந்தில் 45 ரன்களும்  சேர்த்தனர். தமிழக அணி சார்பில் எம். முகமது 4 விக்கெட்டும், சாய் கிஷோர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    பின்னர் 155 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தமிழக அணியின் ஹரி நிஷாந்த், என் ஜெகதீசன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஹரி நிஷாந்த் 4 ரன்னிலும், என். ஜெகதீசன் 28 ரன்னிலும் வெளியேறினர். அடுத்து வந்த பாபா அபரஜித் 2 ரன்னில் ஏமாற்றம் அடைந்தார்.

    4-வது வீரராக களம் இறங்கிய அருண் கார்த்திக் அபாரமாக விளையாடினார். அவர் ஆட்டமிழக்காமல் 54 பந்தில் 9 பவுண்டரி, 3 சிக்சருடன் 89  ரன்கள் விளாச தமிழ்நாடு அணி 18.4 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கேப்டன் தினேஷ் கார்த்திக் 17 பந்தில் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
    Next Story
    ×