என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரைசதம் அடித்த பரோடா அணி கேப்டன் தேவ்தார்
    X
    அரைசதம் அடித்த பரோடா அணி கேப்டன் தேவ்தார்

    சையது முஷ்டாக் அலி டிராபி டி20: பஞ்சாப் அணியை வீழத்தி பரோடா இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்

    சையது முஷ்டாக் அலி டிராபி டி20 கிரிக்கெட்டில் பஞ்சாப் அணியை 25 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி பரோடா இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
    சையது முஷ்டாக் அலி டிராபி டி20 கிரிக்கெட்டின் முதல் அரையிறுதி போட்டியில் ராஜஸ்தானை வீழ்த்தி தமிழ்நாடு இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

    2-வது அரையிறுதியில் பஞ்சாப் - பரோடா அணிகள் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய பரோடா 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் குவித்தது. அந்த அணியின் கேப்டனும், தொடக்க வீரருமான தேவ்தார் 49 பந்தில் 64 ரன்கள் விளாசினார். மற்றொரு வீரர் கார்த்திக் ககாடே 41 பந்தில் 53 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    பின்னர் 161 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களம் இறங்கியது. தொடக்க வீரர் சிம்ரன் சிங் 15 ரன்னிலும், அபிஷேக் சர்மா 5 ரன்னிலும், அன்மோல்ப்ரீத் சிங் 15 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    குர்கீரத் சிங் மான் 39 ரன்களும், கேப்டன் மந்தீப் சிங் ஆட்டமிழக்காமல் 24 பந்தில் 42 ரன்கள் அடித்தாலும் பஞ்சாப் அணியால் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது.

    இதனால் பரோடா அணி 25 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. நாளை மறுதினம் நடைபெறும இறுதிப் போட்டியில் தமிழ்நாடு - பரோடா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
    Next Story
    ×