என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![கங்குலி கங்குலி](https://img.maalaimalar.com/Articles/2021/Jan/202101301451358779_Tamil_News_Tamil-News-Sourav-Ganguly-doing-well-shifted-to-private_SECVPF.gif)
X
கங்குலி
தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து தனி அறைக்கு மாற்றப்பட்டார் கங்குலி
By
மாலை மலர்30 Jan 2021 9:21 AM GMT (Updated: 30 Jan 2021 9:21 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவரும், முன்னாள் கேப்டனுமான கங்குலியின் உடல்நிலை நன்றாக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தா:
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ) தலைவரும், முன்னாள் கேப்டனுமான கங்குலிக்கு கடந்த 2-ந் தேதி லேசான மாரடைப்பு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து அவர் கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு கங்குலிக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 3 இதய தமணிகளில் அடைப்பு இருந்தது தெரியவந்தது.
ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு இதய தமணி ஒன்றில் ஸ்டென்ட் பொருத்தப்பட்டது. 5 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு கங்குலி வீடு திரும்பினார்.
இந்த நிலையில் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கங்குலிக்கு 2-வது முறையாக ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை செய்யப்பட்டு இதய தமணியில் 2 ஸ்டென்ட் பொருத்தப்பட்டது.
இந்த நிலையில் கங்குலியின் உடல்நிலை நன்றாக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவர் தனி அறைக்கு மாற்றப்பட்டுள்ளார். டாக்டர்கள் அப்தாப்கான், அஸ்வின் மேத்தா ஆகியோர் கங்குலியின் உடல்நிலையை பரிசோதித்து சீராக இருப்பதாக தெரிவித்ததாக மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ) தலைவரும், முன்னாள் கேப்டனுமான கங்குலிக்கு கடந்த 2-ந் தேதி லேசான மாரடைப்பு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து அவர் கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு கங்குலிக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 3 இதய தமணிகளில் அடைப்பு இருந்தது தெரியவந்தது.
ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு இதய தமணி ஒன்றில் ஸ்டென்ட் பொருத்தப்பட்டது. 5 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு கங்குலி வீடு திரும்பினார்.
இந்த நிலையில் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கங்குலிக்கு 2-வது முறையாக ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை செய்யப்பட்டு இதய தமணியில் 2 ஸ்டென்ட் பொருத்தப்பட்டது.
இந்த நிலையில் கங்குலியின் உடல்நிலை நன்றாக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவர் தனி அறைக்கு மாற்றப்பட்டுள்ளார். டாக்டர்கள் அப்தாப்கான், அஸ்வின் மேத்தா ஆகியோர் கங்குலியின் உடல்நிலையை பரிசோதித்து சீராக இருப்பதாக தெரிவித்ததாக மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)