என் மலர்tooltip icon

    விளையாட்டு

    விராட் கோலி 3 ஆயிரம் ரன்களை எட்ட 72 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது. இங்கிலாந்துக்கு எதிராக நடந்த ஆட்டத்தில், 73 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்து அணி வெற்றி பெற உதவியதுடன் 3 ஆயிரம் ரன்களை கடந்த முதல் பேட்ஸ்மேன் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
    ஆமதாபாத்:

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி தற்பொழுது 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறது.  இதில், நேற்று நடந்த 2வது 20 ஓவர் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி புதிய சாதனை படைத்துள்ளார்.

    கோலி 3 ஆயிரம் ரன்களை எட்ட 72 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது.  இங்கிலாந்துக்கு எதிராக நடந்த ஆட்டத்தில், 73 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்து அணி வெற்றி பெற உதவியதுடன் 3 ஆயிரம் ரன்களை கடந்த முதல் பேட்ஸ்மேன் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

    கோலி மொத்தம் 87 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடி 3,001 ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார்.

    அவருக்கு அடுத்தபடியாக நியூசிலாந்தின் மார்டின் குப்தில் 2வது இடத்தில் உள்ளார்.  அவர் 99 போட்டிகளில் கலந்து கொண்டு 2,839 ரன்களை சேர்த்துள்ளார்.  3வது இடத்தில் இந்திய அணியின் ரோகித் சர்மா உள்ளார்.  அவர், 108 போட்டிகளில் பங்கேற்று 2,773 ரன்களை குவித்துள்ளார்.

    கோலியின் ஆட்டம் தவிர்த்து அறிமுக போட்டியில் விளையாடிய இந்திய அணியின் இஷான் கிஷான் அரை சதம் (56 ரன்கள்) அடித்தது வெற்றியை எட்டி பிடிக்க உதவியது.  இதனால் இரு அணிகளும் 1-1 என்ற புள்ளி கணக்கில் தொடரில் சமன் பெற்றுள்ளது.  3வது இருபது ஓவர் போட்டி நாளை நடைபெற உள்ளது.
    டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நேற்று நடந்த விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்டில் மும்பை அணி 4-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
    புதுடெல்லி:

    விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் இறுதிப்போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நேற்று நடந்தது. இதில் மகுடத்துக்காக உத்தரபிரதேசம்-மும்பை அணிகள் மல்லுகட்டின. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த உத்தரபிரதேச அணி 4 விக்கெட்டுக்கு 312 ரன்கள் சேர்த்தது. தொடக்க ஆட்டக்காரர் மாதவ் கவுஷிக் 158 ரன்கள் (156 பந்து, 15 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். பின்னர் 313 ரன்கள் இலக்கை நோக்கி களம் கண்ட மும்பை பேட்ஸ்மேன்கள், உத்தரபிரதேச பந்து வீச்சாளர்களுக்கு பதிலடி கொடுத்தனர். பொறுப்பு கேப்டன் பிரித்வி ஷா 73 ரன்கள் (39 பந்து, 10 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி அட்டகாசமான தொடக்கம் தந்தார். இதன் பிறகு விக்கெட் கீப்பர் ஆதித்ய தாரே நிலைத்து நின்று வெற்றியை உறுதி செய்தார்.

    மும்பை அணி 41.3 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 315 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றியை ருசித்து கோப்பையை வசப்படுத்தியது. ‘லிஸ்ட் ஏ’ வகை கிரிக்கெட்டில் தனது முதலாவது சதத்தை எட்டிய ஆதித்ய தாரே 118 ரன்களுடன் (107 பந்து, 18 பவுண்டரி) களத்தில் இருந்தார். மும்பை அணி கோப்பையை உச்சிமுகர்வது இது 4-வது முறையாகும். ஏற்கனவே 2003-04, 2006-07, 2018 ஆகிய ஆண்டுகளிலும் கோப்பையை வென்று இருந்தது.

    மும்பை பொறுப்பு கேப்டன் 21 வயதான பிரித்வி ஷா இந்த தொடரில் 8 ஆட்டங்களில் ஆடி 4 சதம் உள்பட 827 ரன்கள் திரட்டியுள்ளார். விஜய் ஹசாரே போட்டியில் ஒரு சீசனில் 800 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சிறப்பை பெற்றார். ‘இந்த தொடரில் எங்களது அணியில் ஒவ்வொருவரும் தங்களது பங்களிப்பை அளித்தனர். தனிப்பட்ட நபரின் சாதனையால் மட்டும் வெற்றி கிட்டவில்லை. அணியின் உதவியாளர்கள், வீரர்கள் அனைவருக்கும் இந்த கோப்பை உரித்தானது’ என்று பிரித்வி ஷா கூறினார்.
    ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் 2வது இன்னிங்சில் ஜிம்பாப்வே அணி 365 ரன்னில் ஆல் அவுட்டானது.
    அபுதாபி:

    ஜிம்பாப்வே மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் அபுதாபியில் நடைபெற்றது.
     
    டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர் இப்ராகிம் சட்ரன் அரை சதம் அடித்து 72 ரன்னில் வெளியேறினார். ஹஷ்மத்துல்லா ஷஹிதியும், அஸ்கர் ஆப்கனும் பொறுப்புடன் ஆடி சதமடித்து அசத்தினர். அஸ்கர் ஆப்கன் 164 ரன்னில் வெளியேறினார். தொடர்ந்து அபாரமாக ஆடிய ஷஹிதி இரட்டை சதமடித்து அசத்தினார். இதனால் ஆப்கானிஸ்தான் அணி 160 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 545 ரன்கள் எடுத்து டிக்ளேர் செதனர்.  

    அடுத்து ஆடிய ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்சில் 287 ரன்னில் ஆல் அவுட்டானது. தொடக்க ஆட்டக்காரர் பிரின்ஸ் மாஸ்வேர் அரை சதமடித்து 65 ரன்னில் ஆட்டமிழந்தார். கெவின் கவுசா, முசகண்டா ஆகியோர் தலா 41 ரன்னில் ஆட்டமிழந்தனர். சிக்கந்தர் ரசா பொறுப்புடன் ஆடி 85 ரன்னில் அவுட்டானார். கடைசி கட்டத்தில் சபக்வா 33 ரன்கள் எடுத்தார்.

    பாலோ ஆன் பெற்ற ஜிம்பாப்வே அணி இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்தது. அந்த அணியின் கேப்டன் சீன் வில்லியம்ஸ் பொறுப்புடன் ஆடி சதமடித்து அசத்தினார். இவர் 8வது விக்கெட்டுக்கு டிரிபானோவுடன் ஜோடி சேர்ந்து 187 ரன்கள் சேர்த்தார். டிரிபானோ 95 ரன்னில் அவுட்டானார்.

    இறுதியில், ஜிம்பாப்வே அணி இரண்டாவது இன்னிங்சில் 365 ரன்னில் ஆட்டமிழந்தது. சீன் வில்லியம்ஸ் 151 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
     
    ஆப்கானிஸ்தான் சார்பில் ரஷித் கான் 7 விக்கெட்டு வீழ்த்தினார்.

    இதையடுத்து, 108 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி களமிறங்கியது. 26.1 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 108 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ரஹ்மத் ஷா அரை சதமடித்து 58 ரன்னில் ஆட்டமிழந்தார். இப்ராகிம் சட்ரன் 29 ரன்னில் வெளியேறினார்.

    ஆட்ட நாயகன் விருது ஹஷ்மத்துல்லா ஷஹிதிக்கு வழங்கப்பட்டது. தொடர் நாயகன் விருது சீன் வில்லியம்சுக்கு வழங்கப்பட்டது.
    இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது 20 ஓவர் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    அகமதாபாத்:

    இந்தியா இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது 20 ஓவர் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்தது. அதிகப்பட்சமாக ராய் 46 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் வாஷிங்டன் சுந்தர், தாகூர் 2 விக்கெட்டுகளையும் சாஹல், புவனேஸ்வர் குமார், தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்.

    இந்நிலையில் 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. முதல் ஓவரில் ரன் ஏதும் எடுக்காமல் ராகுல் விக்கெட் ஆன பிறகும் இந்திய அணி சிறப்பாக ஆடியது. குறிப்பாக 20 ஓவர் போட்டியில் அறிமுக வீரரான இஷான் கிஷான் அறிமுக போட்டியிலேயே 56 ரன்கள் எடுத்து அசத்தினார். அவர் 5 பவுண்டரி மற்றும் 4 சிக்சர் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு சிறப்பான அடித்தளம் அமைத்தார்.மறுமுனையில் இந்திய அணியின் கேப்டனும் அரை சதம் அடித்தார்.

    இதனையடுத்து இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதனால் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சம நிலையில் உள்ளனர்.

    இந்திய அணிக்கு எதிரான 2-வது 20 ஓவர் போட்டியில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்களை எடுத்தது.
    அகமதாபாத்:

    இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.

    இதன்படி இந்தியா- இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இதனையடுத்து இன்று 2-வது 20 ஓவர் போட்டி நடைபெற்றது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் இந்திய அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.

    இதனையடுத்து இங்கிலாந்து அணி பேட்டிங் செய்தது. முதல் ஓவரிலேயே புவனேஸ்வர் குமார் 1 விக்கெட் வீழ்த்தினார். அவர் வீசிய 3-வது பந்தில் பட்லரை டக் அவுட் முறையில் வீழ்த்தினார். பின்னர் டேவிட் மலான் ராய் உடன் ஜோடி சேர்ந்து சிறப்பாக ஆடினர். இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 63 ரன்கள் சேர்த்தனர். இந்த ஜோடியை சாஹால் பிரித்தார். டேவிட் மலான் 23 பந்தில் 24 ரன்கள் எடுத்த போது தனது விக்கெட்டை பறிகொடுத்தார். 

    இந்நிலையில் பவர்பிளேயில் எந்த விக்கெட்டும் எடுக்காத வாஷிங்டன் சுந்தர் 11-வது ஓவரில் ராய் விக்கெட்டையும் 13-வது ஓவரில் பேர்ஸ்டோ விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தினார். இதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து கேப்டன் மோர்கன் அதிரடியா விளையாடி 20 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து வெளியேறினார். டேத் ஓவரில் புவனேஸ்வர் குமாரும் ஷர்துல் தாகூரின் பந்து வீச்சு சிறப்பாக இருந்தது. கடைசி ஓவரில் பென் ஸ்டோக்ஸ் 21 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

    இதனையடுத்து 20 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர் 2 விக்கெட்டும், புவனேஷ்வர்குமார், யுஸ்வேந்திர சாஹல் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
    இந்தியா - தென்ஆப்பிரிக்கா பெண்கள் கிரிக்கெட் அணிகள் இடையிலான 4-வது ஒரு நாள் போட்டியில் தென்ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றது.
    லக்னோ:

    இந்தியா - தென்ஆப்பிரிக்கா பெண்கள் கிரிக்கெட் அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்த 3 போட்டிகளில் தென்ஆப்பிரிக்கா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 4-வது ஒரு நாள் போட்டி உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இன்று நடைபெற்றது.

    இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ப்ரியா புனியா மற்றும் ஸ்மிரிதி மந்தனா இருவரும் முறையே 32 மற்றும் 10 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

    அடுத்து வந்த பூனம் ராவத், 10 பவுண்டரிகளை விளாசி, 123 பந்துகளில் 104 ரன்கள் குவித்தார். அணியின் கேப்டன் மிதாலி ராஜ், 45 ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார். ஹர்மன்ப்ரீத் கவுர் 35 பந்துகளில் 7 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 54 ரன்கள் குவித்து அசத்தினார்.

    இறுதியில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 266 ரன்கள் குவித்தது. பூனம் ராவத்(104 ரன்கள்), தீப்தி சர்மா(8 ரன்கள்) ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இதையடுத்து 267 ரன்கள் என்ற இலக்கை நோக்கி தென்னாப்பிரிக்க அணி களமிறங்கியது.

    தென்னாப்பிரிக்க அணியில் முதல் வரிசையில் களமிறங்கிய 4 வீராங்கனைகளும் அரைசதத்தைக் கடந்து அசத்தினர். இந்திய அணி சார்பில் ஹர்மன்ப்ரீத் கவுர், மான்சி ஜோஷி, கேய்க்வாட் ஆகிய மூவரும் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். 

    இறுதியில் தென்னாப்பிரிக்க அணி 48.4 ஓவர்கள் முடிவில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 269 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-1 என கணக்கில் தென்னாப்பிரிக்க அணி கைப்பற்றியது. 
    இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது 20 ஓவர் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

    அகமதாபாத்:

    இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.

    இதன்படி இந்தியா- இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இன்று 2-வது T20 போட்டி தொடங்கியது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டத்தில் இந்திய அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.

    போட்டிக்கான இரு அணிகளின் வீரர்கள்:

    இ்ந்தியா: லோகேஷ் ராகுல், இஷான் கிஷான், விராட் கோலி (கேப்டன்), ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷாப் பண்ட், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, யுஸ்வேந்திர சாஹல், வாஷிங்டன் சுந்தர், புவனேஷ்வர்குமார், ஷர்துல் தாகூர்.

    இங்கிலாந்து: ஜாசன் ராய், ஜோஸ் பட்லர், டேவிட் மலான், ஜானி பேர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ், மோர்கன் (கேப்டன்), சாம் கர்ரன், கிறிஸ் ஜோர்டான், ஜோப்ரா ஆர்ச்சர், அடில் ரஷித், டாம் கர்ரன்.


    அடுத்த ஆண்டு (2022) நடைபெறும் 15-வது ஐ.பி.எல். போட்டியில் 2 புதிய அணிகள் பங்கேற்கின்றன. இதனால் அடுத்த ஆண்டு சீசனில் மொத்தம் 10 அணிகள் விளையாடுகின்றன.

    புதுடெல்லி:

    ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சன் ரைசர்ஸ் ஐதராபாத், டெல்லி கேப்பிட்டல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

    அடுத்த ஆண்டு (2022) நடைபெறும் 15-வது ஐ.பி.எல். போட்டியில் 2 புதிய அணிகள் பங்கேற்கின்றன. இதனால் அடுத்த ஆண்டு சீசனில் மொத்தம் 10 அணிகள் விளையாடுகின்றன.

    2 புதிய அணிகளுக்கான ஏலம் மே மாதம் நடைபெறும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஆண்டுக்கான 14-வது ஐ.பி.எல். போட்டி நிறைவை நெருங்கி கொண்டிருக்கும் போது இந்த ஏலம் நடைபெறும்.

    ஐ.பி.எல். போட்டியில் 2 புதிய அணிகளுக்கான ஏலம் உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகள் தொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் கங்குலி, செயலாளர் ஜெய்ஷா ஆகியோர் நேற்று ஆலோசனை நடத்தினார்கள்.

    இந்த ஆலோசனை முடிவில் புதிய அணிகளுக்கான ஏலத்தை மே மாதத்தில் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    அகமதாபாத் நகரை தலைமையிடமாக கொண்டு புதிய அணி ஒன்று தேர்வு செய்யப்படுவது உறுதியாகி உள்ளது. ஏனென்றால் அங்கு உலகின் மிகப்பெரிய ஸ்டேடியம் உள்ளது.

    ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்கும் அணிகள் மூலம் அதன் உரிமையாளர்கள் கோடிக்கணக்கான வருவாயை பெறுகிறார்கள். இதனால் இந்த ஏலத்தில் புதிய அணிகளை வாங்க கடுமையான போட்டி இருக்கும்.

    அதிகமான தொகையை ஏல டெண்டரில் குறிப்பிடும் முதல் 2 பேர் அணிகளின் உரிமையை பெறுவார்கள்.

    இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் இந்திய அணி இன்று அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அகமதாபாத்:

    இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இதன் டெஸ்ட் தொடரை இந்தியா 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    தற்போது இரு அணிகள் இடையே 20 ஓவர் தொடர் நடைபெற்று வருகிறது. ஐந்து போட்டிகளில் 2-வது ஆட்டம் இன்று நடக்கிறது. வருகிற 20-ந் தேதியுடன் 20 ஓவர் தொடர் முடிகிறது.

    அதைத் தொடர்ந்து இந்தியா-இங்கிலாந்து இடையே 3 ஒருநாள் போட்டிகள் நடக்கிறது. வருகிற 23, 26 மற்றும் 28 ஆகிய தேதிகளில் புனேயில் இந்த போட்டி நடக்கிறது.

    இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் இந்திய அணி இன்று அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த போட்டியில் கேப்டன் விராட் கோலி அல்லது ரோகித் சர்மாவுக்கு ஓய்வு கொடுக்கப்படலாம் என்று கருதப்பட்டது. ஆனால் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு தயாராக வேண்டி இருப்பதால் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு கொடுக்க வாய்ப்பு இல்லை.

    இதன் காரணமாக பிரிதிவிஷா அல்லது படிக்கலுக்கு இந்திய அணியில் இடம்பெறுவதற்கான வாய்ப்பு குறைவாகவே இருக்கிறது. அவர்கள் அணிக்கு திரும்ப இன்னும் காத்திருக்க வேண்டும்.

    தமிழ்நாடு பேட்மிண்டன் சூப்பர் லீக் போட்டியில் ஒவ்வொரு அணியிலும் வீரர்- வீராங்கனைகள் இடம்பெறுவதற்கான ஏலம் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது.

    சென்னை:

    தமிழ்நாடு பேட்மின்டன் சங்கம் சார்பில் 2-வது மாநில பேட்மிண்டன் சூப்பர் லீக் போட்டி இந்த ஆண்டு நடத்தப்படுகிறது.

    இந்த போட்டி ஜூன் மாதம் கோவையில் உள்ள பி.எஸ்.ஜி. கல்லூரியில் நடக்கிறது.

    இந்த போட்டியில் சென்னை பிளையிங், கிரா விடி, கோவை கொம்பன்ஸ், மதுரை வீரன்ஸ், கரூர் ஸ்மார்சஸ், விழுப்புரம் பால்கன் பெதர்ஸ், மெரினா சூப்பர் கிங்ஸ், திருப்பூர் வாரியர்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.

    இந்த போட்டியில் மாநிலம் முழுவதிலும் இருந்து முன்னணி வீரர்- வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். ஒவ்வொரு அணியிலும் 10 பேர் இடம் பெற்றுள்ளனர்.

    தமிழ்நாடு பேட்மிண்டன் சூப்பர் லீக் போட்டியில் ஒவ்வொரு அணியிலும் வீரர்- வீராங்கனைகள் இடம்பெறுவதற்கான ஏலம் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது.

    இதில் முன்னாள் கிரிக்கெட் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வருபவருமான சுரேஷ் ரெய்னா பங்கேற்றார். அவர் இந்த போட்டியின் பிராண்ட் அம்பாசிடராக இருக்கிறார்.

    சர்வதேச பேட் மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டா, நடிகை நிக்கி கல்ராணி, தமிழ்நாடு பேட்மிண்டன் சங்க செயலாளர் அருணாசலம், போட்டி அமைப்புக்குழு சேர்மன் சிவகுமார் உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டனர்.


    இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று இரவு நடக்கிறது.
    ஆமதாபாத்:

    இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையேயான 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமான நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்றுமுன்தினம் நடந்த முதலாவது ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை பந்தாடி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

    இந்த நிலையில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று இரவு நடக்கிறது.

    முதலாவது ஆட்டத்தில் இங்கிலாந்து நம்பர் ஒன் அணி என்பதை பறைசாற்றும் வகையில் பந்து வீச்சு மற்றும் பேட்டிங்கில் சூப்பராக செயல்பட்டு கலக்கியது. அந்த அணியின் பந்து வீச்சாளர்கள் அபாரமாக செயல்பட்டு இந்திய அணியை 124 ரன்களுக்கு கட்டுப்படுத்தினார்கள். ஸ்ரேயாஸ் அய்யர் (67 ரன்) மட்டுமே அரைசதத்தை கடந்தார். அதிரடி ஆட்டக்காரர்களான ரிஷாப் பண்ட் (21 ரன்), ஹர்திப் பாண்ட்யா (19 ரன்) ஆகியோர் பெரிய அளவில் சோபிக்கவில்லை.

    பவர்பிளேயில் (முதல் 6 ஓவர்களில்) இந்தியா 22 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் லோகேஷ் ராகுல் 1 ரன்னிலும், ஷிகர் தவான் 4 ரன்னிலும், கேப்டன் விராட்கோலி ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டம் இழந்து மிகுந்த ஏமாற்றம் அளித்தனர். இந்த ஆரம்ப சரிவில் இருந்து இந்திய அணி கடைசி வரை நிமிரவில்லை.

    இந்திய அணியின் பேட்டிங் சொதப்பலை கேப்டன் விராட்கோலியும் ஒப்புக்கொண்டுள்ளார். ‘நாங்கள் எங்களுடைய பேட்டிங் தரத்துக்கு தகுந்தபடி விளையாடாததால் தோல்வியை சந்திக்க வேண்டியதானது. இந்த மாதிரி தன்மை கொண்ட ஆடுகளத்தில் எந்த மாதிரியான ஷாட்களை ஆட வேண்டும் என்பதை நாங்கள் அறிந்திருக்கவில்லை. ஆடுகளத்தை சரியாக பயன்படுத்தி பவுன்சராக வரும் பந்துகளை எப்படி விளையாட வேண்டும் என்பதற்கு ஸ்ரேயாஸ் அய்யரின் ஆட்டம் உதாரணமாக இருந்தது. அதுபோல் ரிஷாப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா ஆகியோரும் அதிரடி காட்ட வேண்டியது அவசியமானதாகும். அடுத்த ஆட்டத்தில் மைதானத்தில் எந்த பகுதியில் ஷாட்களை அடிக்க வேண்டும் என்ற தெளிவான திட்டத்துடன் விளையாடி சரிவில் இருந்து மீளுவோம்’ என்று விராட்கோலி தெரிவித்தார்.

    கடந்த ஆட்டத்தில் இந்திய அணி 3 சுழற்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கியது. ஆனால் இங்கிலாந்து அணியில் ஒரு சுழற்பந்து வீச்சாளர் தான் அங்கம் வகித்தார். இந்திய சுழற்பந்து வீச்சை இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் எளிதாக துவம்சம் செய்தார்கள். இதனால் இந்த ஆட்டத்தில் சுழற்பந்து வீச்சாளர்களில் வாஷிங்டன் சுந்தர் அல்லது அக்‌ஷர் பட்டேல் நீக்கப்பட்டு வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனிக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதலாவது ஆட்டத்தில் ஓய்வு அளிக்கப்பட்டு இருந்த ரோகித் சர்மா இந்த ஆட்டத்திலும் ஆடமாட்டார் என்று தெரிகிறது. ஆடும் லெவனில் ராகுல் திவேதியாவை சேர்க்க பரிசீலனை செய்யப்பட வாய்ப்பு இருக்கிறது.

    இங்கிலாந்து அணியை பொறுத்தமட்டில் தொடக்க ஆட்டக்காரர்கள் ஜாசன் ராய், ஜோஸ் பட்லர் ஆகியோர் வேகமாக மட்டையை சுழற்றி பவர்பிளேயில் 50 ரன்கள் திரட்டி நல்ல தொடக்கம் ஏற்படுத்தினர். அடுத்து வந்த டேவிட் மலான், பேர்ஸ்டோ ஆட்டம் இழக்காமல் அதிரடி காட்டி 27 பந்துகள் மீதம் வைத்து அணி வெற்றி இலக்கை எளிதாக எட்ட வைத்தனர். பந்து வீச்சாளர்களும் தங்கள் பணியை கச்சிதமாக செய்ததால் அந்த அணியில் மாற்றம் எதுவும் செய்யப்பட வாய்ப்பில்லை.

    வெற்றியுடன் தொடரை தொடங்கி இருக்கும் இங்கிலாந்து அணி கூடுதல் நம்பிக்கையுடன் களம் காணுவதுடன், தங்களது வெற்றியை நீட்டிக்க முழுமுயற்சி மேற்கொள்ளும். அதேநேரத்தில் டெஸ்ட் போட்டி தொடரை போல் முதல் தோல்வியில் இருந்து மீண்டு வந்து பதிலடி கொடுத்து எழுச்சி காண இந்திய அணி எல்லா வகையிலும் முனைப்பு காட்டும். எனவே இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

    2-வது போட்டிக்கான ஆடுகளம் முதல் போட்டிக்குரியது போன்ற தன்மை கொண்டதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இதனால் இந்த ஆட்டத்தில் ‘டாஸ்’ முக்கிய பங்கு வகிக்கும். பின் பாதியில் பனியின் தாக்கம் இருக்கும் என்பதால் 2-வது பேட்டிங் செய்யும் அணிக்கு அனுகூலமாக அமையும். எனவே ‘டாஸ்’ ஜெயிக்கும் அணி முதலில் பீல்டிங்கையே தேர்வு செய்யும்.

    சர்வதேச 20 ஓவர் போட்டியில் இவ்விரு அணிகளும் இதுவரை 15 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 8-ல் இங்கிலாந்தும், 7-ல் இந்தியாவும் வெற்றி பெற்றிருக்கின்றன.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    இந்தியா: ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், விராட்கோலி (கேப்டன்), ரிஷாப் பண்ட், ஸ்ரேயாஸ் அய்யர், ஹர்திக் பாண்ட்யா, ஷர்துல் தாகூர், வாஷிங்டன் சுந்தர் அல்லது நவ்தீப் சைனி, அக்‌ஷர் பட்டேல், புவனேஷ்வர்குமார், யுஸ்வேந்திர சாஹல்.

    இங்கிலாந்து: ஜாசன் ராய், ஜோஸ் பட்லர், டேவிட் மலான், ஜானி பேர்ஸ்டோ, இயான் மோர்கன் (கேப்டன்), பென் ஸ்டோக்ஸ், சாம் கர்ரன், ஜோப்ரா ஆர்ச்சர், கிறிஸ் ஜோர்டான், அடில் ரஷித், மார்க் வுட்.

    இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.
    ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரின் இறுதிப் போட்டி மும்பை சிட்டி, ஏ.டி.கே.மோகன் பகான் எப்சி அணிகளுக்கு இடையே நடைபெற்றது.
    கோவா:

    7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கோவாவில் கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி கடந்த நவம்பர் 20-ம் தேதி தொடங்கி நடந்து வந்தது. 11 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் ஆட்டங்கள் முடிவில் மும்பை சிட்டி, ஏ.டி.கே.மோகன் பகான், நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி), கோவா அணிகள் முறையே முதல் 4 இடங்களை பிடித்து அரைஇறுதிக்கு முன்னேறின.
     
    மும்பை அணி அரைஇறுதியில் 2 சுற்று முடிவில் சமநிலை வகித்ததால் (2-2) ‘பெனால்டி ஷூட் அவுட்’டில் 6-5 என்ற கோல் கணக்கில் கோவாவை வீழ்த்தி முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

    3 முறை சாம்பியனான அட்லெடிகோ டி கொல்கத்தா, இந்த முறை புகழ் பெற்ற மோகன் பகான் கிளப்புடன் இணைந்து ஏ.டி.கே. மோகன் பகான் என்ற பெயரில் களம் கண்டது. அந்த அணி அரைஇறுதியில் 2 சுற்று முடிவில் 3-2 என்ற கோல் கணக்கில் கவுகாத்தி அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. 

    ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரின் இறுதிப் போட்டி மும்பை சிட்டி, ஏ டி கே மோகன் பகான் எப்சி அணிகளுக்கு இடையே கோவாவில் இன்று இரவு நடைபெற்றது.

    கொல்கத்தா அணியின் வில்லியம்ஸ் 18வது நிமிடத்தில் முதல் கோல் அடித்தார். ஆட்டத்தின் 29வது நிமிடத்தில் மும்பை அணியின் கோலை தடுக்க முயன்ற கொல்கத்தா வீரர் டிரி சேம் சைடு கோல் அடித்தார். இதனால் முதல் பாதி முடிவில் 1-1 என சமனிலை வகித்தன.

    ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் மும்பை வீரர் பார்தோலெமெவ் பாஸ் செய்த பந்தை அடித்த  பிபின் சிங் கோலாக மாற்றினார். 

    இறுதியில், மும்பை அணி 2-1 என்ற கணக்கில் கொல்கத்தா அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
    ×