என் மலர்tooltip icon

    விளையாட்டு

    தேவ்தத் படிக்கல் சதமடித்து அசத்த, விராட் கோலி அரை சதத்துடன் அவருக்கு ஒத்துழைக்க பெங்களுரணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
    மும்பை:

    மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 16-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.

    டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக பட்லர், மனன் வோரா ஆகியோர் களமிறங்கினர்.

    பட்லர் 8 ரன்னும், மனன் வோரா 7 ரன்னும், டேவிட் மில்லர் ரன் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த சஞ்சு சாம்சன் 21 ரன்னில் அவுட்டானார்.

    சிவம் துபே 46 ரன்னில் பெவிலியன் திரும்பினார். அடுத்து ஆடிய ரியான் பராக் 25 ரன்கள் எடுத்தார்.

    கடைசி கட்டத்தில் ஜோடி சேர்ந்த ராகுல் டெவாட்டியா, கிறிஸ் மோரிஸ் அதிரடியாக விளையாடினர். சிறப்பாக விளையாடிய ராகுல் டெவாட்டியா 40 ரன்கள் குவித்தார்.

    விக்கெட் அப்பீல் செய்யும் பெங்களூர் அணியினர்

    இறுதியில், ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை பறிகொடுத்து 177 ரன்கள் எடுத்தது.

    பெங்களூர் சார்பில் சிராஜ், ஹர்ஷல் படேல் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, பெங்களூர் அணி 178 ரன்கள் இலக்குடன் களமிறங்கியது.

    தொடக்க ஆட்டக்காரர்களாக விராட் கோலி, தேவ்தத் படிக்கல் இறங்கினர். தொடக்கம் முதலே தேவ்தத் படிக்கல் அதிரடியாக விளாசினார். அவருக்கு கோலி பக்கபலமாக இருந்தார். இதனால் அணியின் எண்ணிக்கை ஜெட் வேகத்தில் உயர்ந்தது.  

    ராஜஸ்தான் அணியினரின் பந்து வீச்சு சுத்தமாக எடுபடவில்லை.

    படிக்கல் 51 பந்தில் சதமடித்து அசத்தினார். விராட் கோலி அரை சதமடித்தார். அவர் 101 ரன்னுடனும், கோலி 72 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    இறுதியில், பெங்களூர் அணி விக்கெட் இழப்பின்றி வெற்றிக்கு தேவையான ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்தது.
    யார்க்கர் பந்து வீச்சில் வல்லவரான டி நடராஜன், காயம் காரணமாக இத்தொடரில் இருந்து முழுவதுமாக விலகியுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.
    ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்தின் நம்பிக்கை நட்சத்திர வேகப்பந்து வீச்சாளராக திகழ்பவர் டி நடராஜன். கடந்த சீசனில் ஏராளமான யார்க்கர் பந்துகளை வீசி எதிரணி பேட்ஸ்மேன்களை திக்குமுக்காட வைத்தார். இதன்மூலம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று தொடர்களிலும் அறிமுகம் ஆனார்.

    2021 சீசனில் புவியுடன் டி நடராஜன் சேர்ந்து பந்து வீச்சில் ஆதிக்கம் செலுத்தும் நோக்கத்தில் களம் இறங்கினார். கொல்கத்தாவிற்கு எதிரான முதல் ஆட்டத்தில் விளையாடினார். நடராஜன் 37 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார்.

    அதன்பின் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மூன்று போட்டிகளில் விளையாடியுள்ளது. மூன்று போட்டிகளிலும் டி நடராஜன் இடம் பெறவில்லை. அவருக்கு லேசான காயம் ஏற்பட்டதால் விளையாடவில்லை என அணி நிர்வாகம் தெரிவித்தது.

    இந்த நிலையில் கால் மூட்டில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த ஐபிஎல் தொடரில் இருந்து முழுவதுமாக விலகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ஆஸ்திரேலியா தொடர் முடிந்த பின்னர், பிசிசிஐ-யின் தேசிய கிரிக்கெட் அகாடமியில் இரண்டு மாதம் செலவழித்தார். அவரது காயம் குறித்து என்சிஏ பிசியோ கண்காணித்து பிசிசிஐ-யிடம் ஆலோசித்ததாகவும், அதன்பின், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் கலந்தாலோசித்து அவரை மேலும் விளையாட வைக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    டி நடராஜன்

    ‘‘நாங்கள் முழுமையான அறிக்கை பெறவில்லை. ஆனால், அவரது கால் மூட்டில் காயம் ஏற்பட்டுள்ளது. அவர் காயத்தில் இருந்து மீள்வதற்கான சிகிச்சைக்காக தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு செல்வார்’’ என நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து செய்து வந்துள்ளது.

    சிறந்தத டெத் ஓவர் பந்து வீச்சாளரான டி நடராஜன் தொடரில் இருந்து விலகியிருப்பது அந்த அணிக்கு மிகப்பெரிய பேரிடியாக அமைந்துள்ளது.
    இன்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 16- வது லீக் போட்டியில் பெங்களூர் அணி வெற்றி பெற 178 ரன் இலக்கு வைத்தது ராஜஸ்தான் அணி.
    ஐபிஎல் தொடரின் 16- வது லீக் போட்டியில் இன்று பெங்களூர் அணியும், ராஜஸ்தான் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதி வருகிறது. டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக பட்லர், மனன் வோரா இருவரும் களமிறங்கினர். ஆனால் இவர்கள் வந்த வேகத்தில் பட்லர் 8, மனன் வோரா 7 ரன்களுடன் விக்கெட்டை இழந்தனர். பின்னர் இறங்கிய டேவிட் மில்லர் ரன் எடுக்காமல் நடையை காட்டினார்.

    அடுத்து சஞ்சு சாம்சன், சிவம் துபே இருவரும் மட்டுமே நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் எண்ணிக்கையை சற்று உயர்த்தினர். சஞ்சு சாம்சன் 21 ரன்கள் இருக்கும்போது வாஷிங்டன் சுந்தர் வீசிய பந்தை அடித்து மேக்ஸ்வெலிடம் கேட்சை கொடுத்தார். அதிரடியாக விளையாடி வந்த சிவம் துபே அரைசதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 46 ரன்னில் பெவிலியன் திரும்பினார்.

    அடுத்து இறங்கிய ரியான் பராக் 25 ரன்கள் எடுத்தார். கடைசியில் ஜோடி சேர்ந்த ராகுல் டெவாட்டியா , கிறிஸ் மோரிஸ் அதிரடியாக விளையாடி ரன் சேர்த்தனர். சிறப்பாக விளையாடிய ராகுல் டெவாட்டியா 40 ரன்கள் குவித்தார். இறுதியாக ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை பறிகொடுத்து 177 ரன்கள் எடுத்தனர். பெங்களூர் அணி 178 ரன்கள் இலக்குடன் களமிறங்கவுள்ளது.
    பெங்களூரு ராயல் சேலஞ்ரஸ் அணி 3 போட்டிகளில் விளையாடி 3-லும் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் 2-ஆம் இடத்தில் உள்ளது.
    சென்னை:

    ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறு விறுப்பான கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதுவரை 15-லீக் ஆட்டங்கள் நடைபெற்றுள்ள நிலையில், ஐபிஎல் புள்ளிகள் பட்டியலில் சென்னை அணி முதலிடம் பிடித்துள்ளது. 4 ஆட்டங்களில் ஒரு தோல்வி 3 வெற்றி என 6 புள்ளிகளுடன் சென்னை அணி முதலிடத்தில் உள்ளது. 

    பெங்களூரு ராயல் சேலஞ்ரஸ் அணி 3 போட்டிகளில் விளையாடி 3-லும் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் 2-ஆம் இடத்தில் உள்ளது.  3 வெற்றி 1 தோல்வி என 6 புள்ளிகளுடன் டெல்லி கேபிடல்ஸ் அணி மூன்றாம் இடத்தில் உள்ளது. 4 போட்டிகளில் விளையாடி 2-வெற்றி, 2 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று மும்பை இந்தியன்ஸ் அணி 4 ஆம் இடத்தில் உள்ளது.
    முதல் போட்டியில் வெற்றி பெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ், அடுத்த மூன்று போட்டிகளில் தோல்வியடைந்து பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
    மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதல் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை 10 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அதன்பின் மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக 10 ரன்னிலும், ஆர்சிபிக்கு எதிராக 38 ரன்களும், நேற்று சிஎஸ்கே அணிக்கெதிராக 18 ரன்னிலும் தோல்வியைத் தழுவியது. கொல்கத்தா அணியின் தோல்விக்கு மோர்கனை விமர்சனம் செய்துள்ளார் வீரேந்தர் சேவாக்.

    மோர்கன் குறித்து வீரேந்தர் சேவாக் கூறுகையில் ‘‘உலகில் டி20 கிரிக்கெட் அணிக்கான சிறந்த கேப்டன் மோர்கன் என நான் நினைக்கவில்லை. யார் சிறப்பாக பேட்டிங் செய்து அணியை வெற்றி பெற வைத்தால், அந்த வெற்றி அவருக்காக. யார் சிறப்பாக பந்து வீசினாலும், அந்த வெற்றி இங்கிலாந்துக்காக. ஆனால், ஐபிஎல் போட்டியில் அவர் அந்த அணியை பெறவில்லை. மேலும், அவர் சிறந்த கேப்டன் என நான் நினைக்கவில்லை’’ என்றார்.
    கொரோனா பரவல் சூழலில் போட்டியை பல்வேறு இடங்களில் நடத்துவது சிக்கலானதாகவும், சவாலானதாகவும் இருக்குமென ஐசிசி-பிசிசிஐ பரஸ்பரம் விவாதித்துள்ளன.
    புதுடெல்லி: 

    இந்தியாவில் நடப்பாண்டில் நடைபெற இருக்கும் உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டிக்காக சென்னை உள்பட 9 இடங்களை ஐசிசிக்கு பிசிசிஐ பரிந்துரைத்துள்ளது. 

    ஐசிசிக்கு அளித்துள்ள பட்டியலில் சென்னை, ஆமதாபாத், பெங்களூா், தில்லி, தா்மசாலா, ஹைதராபாத், கொல்கத்தா, லக்னௌ, மும்பை ஆகிய 9 இடங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்தியாவிலும், சம்பந்தப்பட்ட இடங்களிலும் இருக்கும் கொரோனா சூழலின் அடிப்படையில், போட்டி நடத்தப்படும் இடங்களை ஐசிசி இறுதி செய்யும். தற்போதைய நிலையில், அக்டோபா் முதல் நவம்பா் வரை நடைபெறும் உலகக் கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தை நவம்பா் 13-ஆம் தேதி ஆமதாபாத் மைதானத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

    போட்டிக்காக பரிசீலிக்கப்படும் இடங்களில் சிலவற்றை ஐசிசி ஏற்கெனவே ஆய்வு செய்துள்ளது. இந்தியாவில் தற்போது கொரோனா 2-ஆவது அலை தீவிரமாகியுள்ளதால் ஐசிசி தனது நிபுணா் குழுக்களை இந்தியாவுக்கு அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனினும் வரும் 26-ஆம் தேதி ஐசிசி குழு ஒன்று இந்தியா வருவதாகத் தெரிகிறது. கொரோனா பரவல் சூழலில் போட்டியை பல்வேறு இடங்களில் நடத்துவது சிக்கலானதாகவும், சவாலானதாகவும் இருக்குமென ஐசிசி-பிசிசிஐ பரஸ்பரம் விவாதித்துள்ளன. தற்போது, கொரோனா சூழலில் ஐபிஎல் போட்டியை பிசிசிஐ எவ்வாறு நடத்துகிறது என்பதையும் ஐசிசி உன்னிப்பாக கவனித்து வருகிறது. உலகக் கோப்பை போட்டி திட்டமிட்டபடி இந்தியாவில் நடைபெறும் என்று ஐசிசி ஏற்கெனவே தெரிவித்தபோதிலும், எதிா்பாராத சூழ்நிலையால் போட்டியை இடமாற்றம் செய்ய வேண்டி வந்தால் இலங்கை மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் மாற்று இடங்களாக பரிசீலனையில் இருப்பதாகத் தெரிகிறது.
    சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடும் அபிஷேக் சர்மா எதிர்காலத்தில் இருந்தியாவின் சரியான ஆல்-ரவுண்டராக விளையாடுவார் என ரஷிக் கான் தெரிவித்துள்ளார்.
    சன்ரைசர்ஸ் ஐதராபாத் - பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 120 ரன்களே அடித்தது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கலீல் அகமது 3 விக்கெட்டும், அபிஷேக் சர்மா 2 விக்கெட்டும், ரஷித் கான் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    பின்னர் 121 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஐதராபாத் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து, இலக்கை எட்டியது.

    இந்த போட்டிக்குப்பிறகு அபிஷேக் சர்மா குறித்து ரஷித் கான் கூறுகையில் ‘‘நீங்கள் எதிகாலத்தில் இந்தியாவின் சரியான ஆல்-ரவுண்டராக விளையாடுவீர்கள். அத்துடன் ஏராளமான போட்டிகளை அணிக்காக தேடிக்கொடுப்பீர்கள். உங்களிடம் ஏராளமான திறமை உள்ளது. கடுமையாக உழைத்தாரல், வெற்றி பெறுவீர்கள்’’ என்றார்.
    ஐபிஎல் போட்டியில் முதல் நான்கு ஆட்டங்களில் 3-ல் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது.
    சென்னை சூப்பர் கிங்ஸ் கடந்த சீசனில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், முதல் அணியாக பிளே-ஆஃப் சுற்று வாய்ப்பை இழந்தது. இந்த முறை எப்பாடியாவது பிளே-ஆஃப் சுற்றை உறுதி செய்யும் நோக்கத்தில் விளையாட முடிவு  செய்தது.

    ஆனால் முதல் போட்டியில் தோல்வியடைந்து ஏமாற்றம் அடைந்தது. அதன்பின் பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளை தொடர்ச்சியாக வென்றது. நான்கு போட்டிகளில் மூன்றில் வெற்றி பெற்றது ஐபிஎல் புள்ளிகள் பட்டியலில் முதல் இடம் பிடித்துள்ளது.

    நேற்றைய கொல்கத்தா அணிக்கெதிரான வெற்றிக்குப்பிறகு 4 போட்டியில் 3-ல் வெற்றி பெற்றது எதிர்பார்த்ததை விட அதிகம் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஸ்டீபன் பிளமிங் கூறுகையில் ‘‘கடந்த ஆண்டு அபுதாபி, துபாயில் விளையாடிய போட்டிகளில் இருந்து நாங்களாகவே ஏராளமான பாடங்களை கற்றுக்கொண்டோம். மும்பை வான்கடே மைதானம் குறித்து மதிப்பிடுவதில் அதிக கவனம் செலுத்தினோம். அதில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம்.

    நான்கு போட்டிகளில் மூன்றில் வெற்றி என்பது எதிர்பார்த்ததை விட அதிகம். ஐந்தில் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றால் சிறப்பானதாக இருக்கும் என நினைத்தோம். ஆனால். இது உண்மையிலேயே பெருமை அளிக்கிறது. குறிப்பாக பேட்டிங்கை நினைக்கும்போது பெருமை’’ என்றார்.
    கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றதன மூலம் புள்ளிகள் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் இடத்தை பிடித்தது.

    மும்பை:

    ஐ.பி.எல். போட்டியில் சி.எஸ்.கே. அணி கொல்கத்தாவை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியைப் பெற்றது.

    மும்பையில் நேற்று இரவு நடந்த 15-வது லீக் ஆட்டத்தில் முதலில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 220 ரன் குவித்தது.

    தொடக்க வீரர் டுபெலிசிஸ் அதிரடியாக ஆடி 60 பந் தில் 95 ரன் (அவுட் இல்லை) எடுத்தார். இதில் 9 பவுண்டரிகளும், 4 சிக்சர்களும் அடங்கும். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட் 42 பந்தில் 64 ரன்னும் (6 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்தார். இருவரும் முதல் விக்கெட் ஜோடியாக 12.2 ஓவரில் 115 ரன் எடுத்தனர்.

    வருண் சக்கரவர்த்தி, சுனில் நரின், ஆந்த்ரே ரஸல் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினார்கள்.

    பின்னர் ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 19.1 ஓவர்களில் 202 ரன்னில் ஆல் அவுட் ஆனது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் சி.எஸ்.கே. 18 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    கம்மின்ஸ் 34 பந்தில் 66 ரன்னும் (4 பவுண்டரி, 6 சிக்சர்), ஆந்த்ரே ரஸல் 22 பந்தில் 54 ரன்னும் (3 பவுண்டரி, 6 சிக்சர்), தினேஷ் கார்த்திக் 24 பந்தில் 40 ரன்னும் (4 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர்.

    சி.எஸ்.கே. வேகப்பந்து வீரர் தீபக் சாஹர் 29 ரன் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். நிகிடி 3 விக்கெட்டும், சாம் கரண் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் ஹாட்ரிக் வெற்றியை பெற்றது. தொடர்ச்சியாக 3 ஆட்டங்களில் வெற்றி பெற்றது. அந்த அணி தொடக்க ஆட்டத்தில் டெல்லியிடம் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்று இருந்தது. 2-வது போட்டியில் பஞ்சாப்பை 6 விக்கெட் வித்தியாசத்திலும், 3-வது ஆட்டத்தில் ராஜஸ்தானை 45 ரன் வித்தியாசத்திலும் தோற்கடித்தது.

    இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது. அந்த அணி 3 வெற்றி, ஒரு தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்றுள்ளது. சி.எஸ்.கே. பெங்களூர் டெல்லி ஆகிய 3 அணிகள் சம புள்ளிகளுடன் உள்ளன. நிகர ரன் ரேட் அடிப்படையில் சென்னை அணி முன்னிலை வகிக்கிறது.

    வெற்றி குறித்து சென்னை அணி கேப்டன் டோனி கூறியதாவது:-

    எங்களது பேட்டிங் சிறப்பாக இருந்தது. நாங்கள் ரன்களை நல்ல முறையில் குவித்தோம். அதே நேரத்தில் எதிர் அணியை மதிக்க வேண்டியது அவசியமாகும்.

    ஒவ்வொரு அணியிலும் சிறந்த அதிரடி பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள். இதை நான் எனது வீரர்களிடம் தெரிவித்தேன். மிகப்பெரிய ஸ்கோரை பிடித்தாலும் தாழ்மையுடன் இருக்க வேண்டும் என்றேன்.

    எங்களது திட்டம் சிறப்பான முறையில் இருந்தது. 20 ஓவர் முழுமையாக சென்றிருந்தால் ஆட்டம் இன்னும் பரபரப்பாக இருந்திருக்கும்.

    கடந்த ஐ.பி.எல். சீசன் போலவே தற்போது ருதுராஜ் கெய்க்வாட் தனது ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

    இவ்வாறு டோனி கூறியுள்ளார்.

    சென்னை அணி 5-வது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரை வருகிற 25-ந் தேதி எதிர்கொள்கிறது.

    கொல்கத்தா அணி தொடர்ந்து 3-வது தோல்வியை தழுவியது. 2 புள்ளிகளுடன் இருக்கும் அந்த அணி அடுத்த போட்டியில் ராஜஸ்தானை 24-ந் தேதி சந்திக்கிறது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் டோனி, மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா ஆகியோருக்கும் மெதுவாக பந்துவீசியதற்காக ஏற்கனவே ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு இருந்தது.
    மும்பை:

    சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணி நேற்று கடும் போராட்டத்துக்கு பிறகு 18 ரன்னில் தோற்றது.

    இந்த போட்டியில் கொல்கத்தா அணி குறிப்பிட்ட நேரத்தில் ஓவர்களை வீசி முடிக்கவில்லை. மெதுவாக பந்து வீசியதற்காக ஐ.பி.எல். விதிமுறைப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த அணி கேப்டன் மார்கனுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் டோனி, மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா ஆகியோருக்கும் மெதுவாக பந்துவீசியதற்காக தலா ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
    20 ஓவர் போட்டிகளில் அதிவேகத்தில் 5 ஆயிரம் ரன் எடுத்து ஆர்சிபி கேப்டன் விராட் கோலியின் சாதனையை கேஎல் ராகுல் முறியடித்தார்.

    சென்னை:

    ஐ.பி.எல். போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி நேற்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்திடம் 9 விக்கெட் வித்தியாசத்தில் மிகவும் மோசமாக தோற்றது.

    இந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணி கேப்டன் லோகேஷ் ராகுல் 4 ரன்களை எடுத்தார். அவர் ஒரு ரன்னை எடுத்தபோது 20 ஓவர் போட்டிகளில் 5 ஆயிரம் ரன்னை எடுத்து சாதனை படைத்தார்.

    5 ஆயிரம் ரன்னை அதிவேகத்தில் கடந்த விராட் கோலியின் சாதனையை ராகுல் முறியடித்தார். ராகுல் 143 இன்னிங்சில் 5 ஆயிரம் ரன்னை தொட்டார். விராட் கோலி 167 இன்னிங்சில் தான் 5 ஆயிரம் ரன்னை கடந்து இருந்தார்.

    அந்த்ரே ரஸல், தினேஷ் கார்த்திக், பேட் கம்மின்ஸ் பேட்டிங்கில் மிரட்ட, ஒரு வழியாக 18 ரன்னில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றது.
    சென்னை சூப்பர் கிங்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் தொடரின் 15-வது லீக்  ஆட்டம் மும்பையில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் (95 நாட்அவுட்), ருத்துராஜ் செய்க்வாட் (64), மொயீன் அலி (25) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 220 ரன்கள் குவித்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் பேட் கம்மின்ஸ் அதிகபட்சமாக 58 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.

    பின்னர் 221 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் களம் இறங்கியது. ஷுப்மான் கில், நிதிஷ் ராணா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரை தீபக் சாஹர் வீசினார். ஆட்டத்தின் 4-வது பந்தில் ஷுப்மான் கில் ரன்ஏதும் எடுக்காமல் அவர் சந்தித்த முதல் பந்திலேயே வெளியேறினார்.

    இன்றைய போட்டியில் தீபக் சாஹர் பந்து வீச்சு தீப்பொறியாக இருந்தது. நிதிஷ் ராணாவை 9 ரன்னில் சாய்த்தார். மேலும், ஒரே ஓவரில் மோர்கன் (7), சுனில் நரைனை (4) அடுத்தடுத்து வீழ்த்தினார். ராகுல் திரிபாதியை லுங்கி நிகிடி 8 ரன்னில் வீழ்த்த கொல்கத்தா 31 ரன்னுக்குள் 5 விக்கெட்டை இழந்தது.

    அந்த்ரே ரஸல்

    தீபக் சாஹர் முதல் 3 ஓவரில் 16 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் சாய்த்தார். 31 ரன்னுக்குள் ஐந்து டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை இழந்த கொல்கத்தா கதி அவ்வளவுதான் என நினைக்கும்போது, ஐந்தாவது விக்கெட்டுக்கு தினேஷ் கார்த்திக் உடன் ஜோடி சேர்ந்த அந்த்ரே ரஸல் ருத்ர தாண்டவம் ஆடினார்.

    இதனால் கொல்கத்தா 10.1 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது. அந்த்ரே ரஸல் 21 பந்தில் 3 பவுண்டரி, 6 சிக்சருடன் அரைசதம் விளாசினார். இனிமேல் சென்னை சூப்பர் கிங்ஸ் நிலை திண்டாட்டம்தான் என நினைக்கையில், 12-வது ஓவரை சாம் கர்ரன் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் அந்த்ரே ரஸல் அஜாக்ரதையாக போல்டானார். இதனால் சென்னை வீரர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். போட்டி அப்படியே சென்னை பக்கம் திரும்பியது.

    அந்த்ரே ரஸல் 22 பந்தில் 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சரி... இத்தோடு சென்னை எளிதாக வெற்றி பெறும் என நினைத்தால் தினேஷ் கார்த்திக் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 24 பந்தில் 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    பேட் கம்மின்ஸ்

    யாரும் எதிர்பார்க்காத வகையில் பேட் கம்மின்ஸ் வாணவேடிக்கை நிகழ்த்தினார். சாம் கர்ரன் வீசிய ஒரே ஓவரில் நான்கு சிக்சர், ஒரு பவுண்டரியுடன் 30 ரன்கள் விரட்டினார். பேட் கம்மின்ஸ் 23 பந்தில் 3 பவுண்டரி, 5 சிக்சருடன் அரைசதம் அடித்தார்.

    இருந்தாலும் அவரால் தனி நபராக அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்ல முடியவில்லை. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 19.1 ஓவரில் 202 ரன்கள் எடுத்த நிலையில் ஆல்-அவுட் ஆனது.

    பேட் கம்மின்ஸ் 34 பந்தில் 4 பவுண்டரி, 6 சிக்சருடன் 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். லுங்கி நிகிடி 28 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார்.
    ×