என் மலர்tooltip icon

    விளையாட்டு

    சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் டோனி, மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா ஆகியோருக்கும் மெதுவாக பந்துவீசியதற்காக ஏற்கனவே ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு இருந்தது.
    மும்பை:

    சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணி நேற்று கடும் போராட்டத்துக்கு பிறகு 18 ரன்னில் தோற்றது.

    இந்த போட்டியில் கொல்கத்தா அணி குறிப்பிட்ட நேரத்தில் ஓவர்களை வீசி முடிக்கவில்லை. மெதுவாக பந்து வீசியதற்காக ஐ.பி.எல். விதிமுறைப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த அணி கேப்டன் மார்கனுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் டோனி, மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா ஆகியோருக்கும் மெதுவாக பந்துவீசியதற்காக தலா ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
    20 ஓவர் போட்டிகளில் அதிவேகத்தில் 5 ஆயிரம் ரன் எடுத்து ஆர்சிபி கேப்டன் விராட் கோலியின் சாதனையை கேஎல் ராகுல் முறியடித்தார்.

    சென்னை:

    ஐ.பி.எல். போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி நேற்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்திடம் 9 விக்கெட் வித்தியாசத்தில் மிகவும் மோசமாக தோற்றது.

    இந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணி கேப்டன் லோகேஷ் ராகுல் 4 ரன்களை எடுத்தார். அவர் ஒரு ரன்னை எடுத்தபோது 20 ஓவர் போட்டிகளில் 5 ஆயிரம் ரன்னை எடுத்து சாதனை படைத்தார்.

    5 ஆயிரம் ரன்னை அதிவேகத்தில் கடந்த விராட் கோலியின் சாதனையை ராகுல் முறியடித்தார். ராகுல் 143 இன்னிங்சில் 5 ஆயிரம் ரன்னை தொட்டார். விராட் கோலி 167 இன்னிங்சில் தான் 5 ஆயிரம் ரன்னை கடந்து இருந்தார்.

    அந்த்ரே ரஸல், தினேஷ் கார்த்திக், பேட் கம்மின்ஸ் பேட்டிங்கில் மிரட்ட, ஒரு வழியாக 18 ரன்னில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றது.
    சென்னை சூப்பர் கிங்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் தொடரின் 15-வது லீக்  ஆட்டம் மும்பையில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் (95 நாட்அவுட்), ருத்துராஜ் செய்க்வாட் (64), மொயீன் அலி (25) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 220 ரன்கள் குவித்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் பேட் கம்மின்ஸ் அதிகபட்சமாக 58 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.

    பின்னர் 221 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் களம் இறங்கியது. ஷுப்மான் கில், நிதிஷ் ராணா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரை தீபக் சாஹர் வீசினார். ஆட்டத்தின் 4-வது பந்தில் ஷுப்மான் கில் ரன்ஏதும் எடுக்காமல் அவர் சந்தித்த முதல் பந்திலேயே வெளியேறினார்.

    இன்றைய போட்டியில் தீபக் சாஹர் பந்து வீச்சு தீப்பொறியாக இருந்தது. நிதிஷ் ராணாவை 9 ரன்னில் சாய்த்தார். மேலும், ஒரே ஓவரில் மோர்கன் (7), சுனில் நரைனை (4) அடுத்தடுத்து வீழ்த்தினார். ராகுல் திரிபாதியை லுங்கி நிகிடி 8 ரன்னில் வீழ்த்த கொல்கத்தா 31 ரன்னுக்குள் 5 விக்கெட்டை இழந்தது.

    அந்த்ரே ரஸல்

    தீபக் சாஹர் முதல் 3 ஓவரில் 16 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் சாய்த்தார். 31 ரன்னுக்குள் ஐந்து டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை இழந்த கொல்கத்தா கதி அவ்வளவுதான் என நினைக்கும்போது, ஐந்தாவது விக்கெட்டுக்கு தினேஷ் கார்த்திக் உடன் ஜோடி சேர்ந்த அந்த்ரே ரஸல் ருத்ர தாண்டவம் ஆடினார்.

    இதனால் கொல்கத்தா 10.1 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது. அந்த்ரே ரஸல் 21 பந்தில் 3 பவுண்டரி, 6 சிக்சருடன் அரைசதம் விளாசினார். இனிமேல் சென்னை சூப்பர் கிங்ஸ் நிலை திண்டாட்டம்தான் என நினைக்கையில், 12-வது ஓவரை சாம் கர்ரன் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் அந்த்ரே ரஸல் அஜாக்ரதையாக போல்டானார். இதனால் சென்னை வீரர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். போட்டி அப்படியே சென்னை பக்கம் திரும்பியது.

    அந்த்ரே ரஸல் 22 பந்தில் 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சரி... இத்தோடு சென்னை எளிதாக வெற்றி பெறும் என நினைத்தால் தினேஷ் கார்த்திக் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 24 பந்தில் 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    பேட் கம்மின்ஸ்

    யாரும் எதிர்பார்க்காத வகையில் பேட் கம்மின்ஸ் வாணவேடிக்கை நிகழ்த்தினார். சாம் கர்ரன் வீசிய ஒரே ஓவரில் நான்கு சிக்சர், ஒரு பவுண்டரியுடன் 30 ரன்கள் விரட்டினார். பேட் கம்மின்ஸ் 23 பந்தில் 3 பவுண்டரி, 5 சிக்சருடன் அரைசதம் அடித்தார்.

    இருந்தாலும் அவரால் தனி நபராக அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்ல முடியவில்லை. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 19.1 ஓவரில் 202 ரன்கள் எடுத்த நிலையில் ஆல்-அவுட் ஆனது.

    பேட் கம்மின்ஸ் 34 பந்தில் 4 பவுண்டரி, 6 சிக்சருடன் 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். லுங்கி நிகிடி 28 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார்.
    டு பிளிஸ்சிஸ் 60 பந்தில் 95 ரன்களும், ருத்துராத் கெய்க்வாட் 42 பந்தில் 64 ரன்களும் விளாச சென்னை சூப்பர் கிங்ஸ் 3 விக்கெட் இழப்பிற்கு 220 ரன்கள் குவித்துள்ளது.
    மும்பை:

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- சிஎஸ்கே இடையிலான ஐபிஎல் தொடரின் 15-வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற கொல்கத்தா பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ருத்துராஜ் கெய்க்வாட், டு பிளிஸ்சிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக விளையாடினர். முதல் மூன்று போட்டிகளில் சொதப்பிய ருத்துராஜ் இந்த போட்டியில் கொல்கத்தா பந்து வீச்சை துவம்சம் செய்தார். பவர்- பிளேயில் விக்கெட் இழப்பின்றி 54 ரன்கள் அடித்தது.

    ருத்துராஜ் கெய்க்வாட் 33 பந்தில் 5 பவுண்டரி, 3 சிக்சருடன் அரைசதம் அடித்தார். சென்னை அணி 11.2 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது. டு பிளிஸ்சிஸ் 35 பந்தில் 4 பவுண்டரி, 3 சிக்சருடன் அரைசதம் அடித்தார். சென்னை அணி 15.1 ஓவரில் 150 ரன்னைத் தொட்டது.

    ருத்துராஜ் 42 பந்தில் 6 பவுண்டரி, 4 சிக்சருடன் 64 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மொயீன் அலி 12 பந்தில் 25 ரன்களும், டோனி 8 பந்தில் 17 ரன்களும் விளாசினர்.

    டு பிளிஸ்சிஸ் 60 பந்தில் 8 பவுண்டரி, 4 சிக்சருடன் 95 ரன்கள் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருக்க சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 220 ரன்கள் குவித்துள்ளது.
    கொல்கத்தா அணியில் ஹர்பஜன் சிங், ஷாகிப் அல் ஹசன் இடம்பெறாத நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பிராவோவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
    மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கும் ஐபிஎல் தொடரின் இன்றைய 2-வது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் மோர்கன் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பிராவோவிற்கு ஒய்வு அளிக்கப்பட்டு, லுங்கி நிகிடி சேர்க்கப்பட்டுள்ளார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. ஹர்பஜன் சிங்,  ஷாகிப் அல் ஹசன் நீக்கப்பட்டு நாகர்கோடி, சுனில் நரைன் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி:

    1. ருத்துராஜ் கெய்க்வாட், 2. டு பிளிஸ்சிஸ், 3. மொயீன் அலி, 4. சுரேஷ் ரெய்னா, 5. அம்பதி ராயுடு, 6. ஜடேஜா, 7.  எம்எஸ் டோனி, 8. சாம் கர்ரன், 9. ஷர்துல் தாகூர், 10. லுங்கி நிகிடி, 11. தீபக் சாஹர்.

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி:

    1. நிதிஷ் ராணா, 2. ஷுப்மான் கில், 3. ராகுல் திரிபாதி, 4. மோர்கன், 5. தினேஷ் கார்த்திக், 6. சுனில் நரைன், 7. அந்த்ரே ரஸல், 8. பேட் கம்மின்ஸ், 9. நாகர்கோடி, 10. வருண் சக்ரவர்த்தி, 11. பிரசித் கிருஷ்ணா.
    பேர்ஸ்டோ, வார்னர் பொறுப்புடன் விளையாடி 121 என்ற எளிதான இலக்கை, கடைசி வரை சென்று ஒரு வழியாக வெற்றி பெற்றது சன்ரைசர்ஸ் ஐதராபாத்.
    ஐபிஎல் கிரிக்கெட்டில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது. வழக்கம்போல தொடக்க ஆட்டக்காரர்களாக கேஎல் ராகுல், அகர்வால் களம் இறங்கினர். கேஎல் ராகுல் 4 ரன்கள் எடுத்த நிலையில் புவனேஷ்வர் குமார் பந்து வீச்சில் வெளியேறினார்.

    அடுத்ததாக கெய்ல்- அகர்வால் ஜோடி நிதானமாக ஆடியது. பஞ்சாப் 39  ரன்கள் எடுத்திருந்தபோது அகர்வால் 22 ரன்னில் வெளியேறினார். அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்ட இழந்தனர். கிறிஸ் கெய்ல் 15, பூரன் 0, தீபக் ஹூடா 13, ஹென்ரிக்ஸ் 14, ஆலன் 6 ரன்கள் எடுத்து வெளியேறினர்.

    பஞ்சாப் அணியில் இடம் பெற்றுள்ள பூரன் 4 ஆட்டங்களில் 3 ஆட்டத்தில் ரன் எதும் எடுக்காமல் ஆட்டம் இழந்துள்ளார்.

    பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக ஷாருக் கான், அகர்வால் 22 ரன்கள் எடுத்திருந்தனர். 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 120 ரன்கள் மட்டுமே எடுத்தது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி தரப்பில் கலீல் அஹமது 3 விக்கெட்டும் அபிஷேக் சர்மா 2 விக்கெட்டும் சித்தார்த் கவுல், ரஷித் கான், புவி 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    பின்னர் 121 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி களம் இறங்கியது. தொடக்க வீரர்களான டேவிட் வார்னர் பேர்ஸ்டோ சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். 10.1 ஓவரில் 73 ரன்கள் எடுத்திருக்கும்போது ஐதராபாத் முதல் விக்கெட்டை இழந்தது. வார்னர் 37 பந்தில் 37 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.

    2-வது விக்கெட்டுக்கு பேர்ஸ்டோ உடன் கேன் வில்லியம்சன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தது. ஆடுகளம் ஸ்லோ-வாக இருந்தாலும் விக்கெட்டை இழக்கவில்லை. குறைந்த இலக்கு என்பதால் வெற்றியை நோக்கி சென்றனர்.

    16 ஓவரில் 100 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி நான்கு ஓவரில் 21 ரன்கள் தேவைப்பட்டது. 17-வது ஒவரில் நான்கு ரன்கள் அடித்தது. கடைசி 3 ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்டது. 18-வது ஓவரில் 7 ரன்கள் அடித்தது. கடைசி 2 ஓவரில் 10 ரன்கள் தேவைப்பட்டது.

    பேர்ஸ்டோ

    19-வது ஓவரில் பேர்ஸ்டோ ஒரு சிக்ஸ் விளாசினார். இதனால் 18.4 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 121 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் வெற்றி பெற்றது. 4 போட்களில் முதல் வெற்றியை ருசித்துள்ளது.

    பேர்ஸ்டோவ் 63 ரன்களுடனும்,  கேன் வில்லியம்சன் 19 ரன்களுடனும் ஆட்டமிக்காமல் இருந்தனர்.
    தமிம் இக்பால் 90 ரன்னில் ஆட்டமிழந்த நிலையில், நஜ்மல் ஹொசைன் ஷான்டோ அபாரமான விளையாடி சதம் விளாசினார்.
    இலங்கை - வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இலங்கை பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற வங்காளதேசம் பேட்டிங் தெர்வு செய்தது.

    அதன்படி வங்காளதேசம் அணியின் தமிம் இக்பால், சாய்ஃப் ஹசன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். சாய்ஃப் ஹசன் ரன்ஏதும் எடுக்காமல் வெளியேறினார். அடுத்து நஜ்மல் ஹொசைன் ஷான்டோ களம் இறங்கினர்.

    இவர் தமிம் இக்பால் உடன் இணைந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருவரும் அரைசதம் அடித்தனர். தமிம் இக்பால் 90 ரன்களில் ஆட்டம் இழந்து சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். 2-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 144 ரன்கள் குவித்தது.

    தமிம் இக்பால்

    அடுத்து கேப்டன் மொமினுல் ஹக் களம் இறங்கினார். நஜ்மல் ஹொசைன் ஷான்டோ சிறப்பாக விளையாடி சதம் விளாசினார். மொமினுல் ஹக் அரைசதம் அடித்தார்.

    இந்த ஜோடி முதல்நாள் ஆட்டம் முடியும் வரை விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டது. இதனால் வங்காளதேசம் முதல்நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 302 ரன்கள் எடுத்துள்ளது. நஜ்மல் 126 ரன்களுடனும், மொமினுல் ஹக் 64 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
    பஞ்சாப் அணியில் இடம் பெற்றுள்ள பூரன் 4 ஆட்டங்களில் 3 ஆட்டத்தில் ரன் எதும் எடுக்காமல் ஆட்டம் இழந்துள்ளார்.
    சென்னை: 

    ஐபிஎல் கிரிக்கெட்டில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தியது.

    டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது. வழக்கம் போல தொடக்க ஆட்டக்காரர்களாக கேஎல் ராகுல், அகர்வால் களம் இறங்கினர். கே எல் ராகுல் 4 ரன்கள் எடுத்த நிலையில் புவனேஸ்வர் குமார் பந்து வீச்சில் வெளியேறினார். அடுத்ததாக கெய்ல் அகர்வால் ஜோடி நிதானமாக ஆடினர். பஞ்சாப் 39  ரன்கள் எடுத்திருந்த போது அகர்வால் 22 ரன்னில் வெளியேறினார். அதனை தொடர்ந்து அடுத்தடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்ட இழந்தனர். கிறிஸ் கெய்ல் 15, பூரன் 0,  தீபக் ஹூடா 13, ஹென்ரிக்ஸ் 14,  ஆலன் 6, ரன்கள் எடுத்து வெளியேறினார்.

    பஞ்சாப் அணியில் இடம் பெற்றுள்ள பூரன் 4 ஆட்டங்களில் 3 ஆட்டத்தில் ரன் எதும் எடுக்காமல் ஆட்டம் இழந்துள்ளார்.

    பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக ஷாருக் கான், அகர்வால் 22 ரன்கள் எடுத்திருந்தனர்.  20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 120 ரன்கள் மட்டுமே எடுத்தது.சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி தரப்பில் கலீல் அஹமது 3 விக்கெட்டும் அபிஷேக் சர்மா 2 விக்கெட்டும் சித்தார்த் கவுல், ரஷித் கான், புவி 1 விக்கெட்டும் வீழ்த்தி இருந்தனர்.  

    ஐபிஎல் கிரிக்கெட்டில் இதுவரை முடிவடைந்த போட்டிகள் அடிப்படையில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஒரு வெற்றி கூட பெறாமல் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
    ஐபிஎல் 2021 சீசன் கிரிக்கெட்டில் நேற்று மும்பை இந்தியன்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் விளையாடிய போட்டியுடன் இதுவரை 13 ஆட்டங்கள் முடிவடைந்துள்ளன.

    இதில் விராட் கோலி தலைமையிலான ஆர்சிபி 3 போட்டிகளில் விளையாடி மூன்றிலும் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. டெல்லி கேப்பிட்டல்ஸ் நான்கு போட்டிகளில் மூன்றில் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது.

    CSK

    சென்னை சூப்பர் கிங்ஸ் 3 போட்டிகளில் 2-ல் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது. மும்பை இந்தியன்ஸ் 4-ல் 2 ஆட்டங்களில் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளது.

    கொல்கத்தா, ராஜஸ்தான் ராயல்ஸ், பங்சாப் கிங்ஸ் அணிகள் 3-ல் தலா ஒரு வெற்றியுடன் முறையே 5 முதல் 7 இடங்களை பெற்றுள்ளது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் வெற்றி ஏதும் பெறாமல் கடைசி இடத்தில் உள்ளது.

    SRH

    ரெட் ரன்ரேட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் +1.194 பெற்று முன்னணியில் உள்ளது. ஆர்சிபி +0.750 பெற்று 2-வது இடத்திலும், டெல்லி கேப்பிட்டல்ஸ் +0.426 பெற்று 3-வது இடத்திலும் உள்ளது.
    பஞ்சாப் கிங்ஸ் அணியில் பேபியன் ஆலன், ஹென்ரிக்ஸ் ஆகியோரும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் கேதர் ஜாதவும் அறிமுகம் ஆகிறார்கள்.
    ஐபிஎல் கிரிக்கெட்டில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் கேஎல் ராகுல் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

    பஞ்சாப் கிங்ஸ் அணியில் பேபியன் ஆலன், ஹென்ரிக்ஸ் ஆகியோர் அறிமுகம் ஆகிறார்கள். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் கேதர் ஜாதவ் அறிமுகம் ஆகிறார்.

    பஞ்சாப் கிங்ஸ் அணி

    பஞ்சாப் கிங்ஸ் அணி:-

    1. கேஎல் ராகுல், 2. மயங்க் அகர்வால், 3. கிறிஸ் வோக்ஸ், 4. ஹென்ரிக்ஸ், 5. நிக்கோலஸ் பூரன், 6. தீபக் ஹூடா, 7. ஷாருக் கான், 8. பேபியன் ஆலன், 9. முருகன் அஷ்வின், 10 முகமது ஷமி, 11. அர்ஷ்தீப் சிங்.

    சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி

    சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி:

    1. டேவிட் வார்னர், 2. பேர்ஸ்டோவ், 3. கேன் வில்லியம்சன், 4. விராட் சிங், 5. விஜய் சங்கர், 6. அபிஷேக் சர்மா, 7. சித்தார்த் கவுல், 8. கேதர் ஜாதவ், 9. ரஷித் கான், 10. புவி, 11. கலீல் அஹமது,
    ஐ.பி.எல். போட்டியில் மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி வெற்றிபெற சுழற்பந்து வீரர் அமித் மிஸ்ரா காரணமாக இருந்தார்.

    சென்னை:

    ஐ.பி.எல். போட்டியில் மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி வெற்றிபெற சுழற்பந்து வீரர் அமித் மிஸ்ரா காரணமாக இருந்தார். அவர் 24 ரன் கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றினார்.

    38 வயதான அமித் மிஸ்ரா ஐ.பி.எல். போட்டிகளில் இதுவரை 164 விக்கெட் (152 இன்னிங்ஸ்) கைப்பற்றி உள்ளார். அவர் அதிக விக்கெட் எடுத்த வீரர்களில் 2-வது இடத்தில் உள்ளார். மலிங்கா 170 விக்கெட்டுகளுடன் (122 இன்னிங்ஸ்) முதல் இடத்தில் உள்ளார்.

    தற்போது மலிங்காவை அமித் மிஸ்ரா நெருங்கி உள்ளார். அவருக்கு இன்னும் 7 விக்கெட்டுகளே தேவை. மலிங்கா ஓய்வு பெற்று விட்டதால், இந்த சீசனிலேயே அமித் மிஸ்ரா, மலிங்காவை முந்தி முதல் இடத்தை பிடிப்பார்.

    ஐ.பி.எல். போட்டியில் அதிக விக்கெட் கைப்பற்றிய டாப்-5 வீரர்கள் வருமாறு:-

    1. மலிங்கா-170 விக்கெட்.

    2. அமித் மிஸ்ரா -164 விக்கெட்.

    3. பிராவோ -156 விக்கெட்.

    4. பியூஸ் சாவ்லா -156 விக்கெட்.

    5. ஹர்பஜன் சிங் -150 விக்கெட்.

    கொரோனா நெறிமுறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும். முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுவது அவசியமாகும்.

    மும்பை:

    கொரோனாவின் 2-வது அலை மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2.94 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் நாட்டு மக்கள் அனைவரும் கொரோனா நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

     

    முககவசம்

    இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிக அளவில் இருப்பது எல்லோருக்கும் தெரியும். இதனால் கொரோனா நெறிமுறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும். முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுவது அவசியமாகும்.

    உங்களது கைகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சானிடைசரை பயன்படுத்த வேண்டும்.

    இவ்வாறு விராட் கோலி கூறியுள்ளார்.

    ×