என் மலர்tooltip icon

    செய்திகள்

    விராட் கோலி
    X
    விராட் கோலி

    கொரோனா நெறிமுறைகளை மக்கள் பின்பற்ற வேண்டும்- விராட் கோலி வேண்டுகோள்

    கொரோனா நெறிமுறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும். முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுவது அவசியமாகும்.

    மும்பை:

    கொரோனாவின் 2-வது அலை மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2.94 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் நாட்டு மக்கள் அனைவரும் கொரோனா நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

     

    முககவசம்

    இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிக அளவில் இருப்பது எல்லோருக்கும் தெரியும். இதனால் கொரோனா நெறிமுறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும். முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுவது அவசியமாகும்.

    உங்களது கைகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சானிடைசரை பயன்படுத்த வேண்டும்.

    இவ்வாறு விராட் கோலி கூறியுள்ளார்.

    Next Story
    ×