என் மலர்tooltip icon

    விளையாட்டு

    வெங்கடேஷ் அய்யர், ஷுப்மான் கில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்த, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
    ஐ.பி.எல். 2021 கிரிக்கெட்டில் இன்று 2-வது தகுதிச்சுற்று ஆட்டம் நடைபெற்றது. இதில் டெல்லி கேப்பிடல்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி டெல்லி கேப்பிடல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களான பிரித்வி ஷா (18), தவான் (36) ஆகியோர் ஓரளவிற்கு ரன்கள் அடித்தனர். ஆனால் தவான் 39 பந்துகளை எடுத்துக் கொண்டார். அதன்பின் வந்த ஸ்டாய்னிஸ் 23 பந்தில் 18 ரன்கள் எடுத்து வெளியேறினார். ரிஷாப் பண்ட் 6 ரன்னிலும், ஹெட்மையர் 17 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    ஷ்ரேயாஸ் அய்யர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 27 பந்தில் 30 ரன்கள் அடிக்க டெல்லி கேப்பிடல்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா அணியில் வருண் சக்ரவர்த்தி 2 விக்கெட் வீழ்த்தினார்.

    பின்னர் 136 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி களம் இறங்கியது. தொடக்க வீரர்களான ஷுப்மான் கில், வெங்கடேஷ் அய்யர் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 12.2 ஓவரில் 96 ரன்கள் குவித்தது. அரைசதம் அடித்த வெங்கடேஷ் அய்யர் 41 பந்தில் 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் முன்னணி பந்து வீச்சாளர்களால் இவர்களுக்கு நெருக்கடி அளிக்க முடியவில்லை.

    அடுத்து ஷுப்மான் கில் உடன் நிதிஷ் ராணா ஜோடி சேர்ந்தார். அணியின் ஸ்கோர் 16 ஓவரில் 123 ரன்னாக இருக்கும்போது நிதிஷ் ராணா 12 பந்தில் 13 ரன்கள் எடுத்து வெளியேறினார். அப்போது கொல்கத்தா அணிக்கு 4 ஓவரில் 13 ரன்களே தேவைப்பட்டது.

    ஷுப்மான் கில் 46 பந்தில 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கடைசி இரண்டு ஓவரில் 10 ரன்கள் தேவைப்பட்டது.

    கொல்கத்தா வீரர்கள்

    19-வது ஓவரை அன்ரிச் நோர்ஜோ வீசினார். இந்த ஓவரில் 3 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார் நோர்ஜே. இதனால் கடைசில் ஓவரில் 7 ரன்கள் தேவைப்பட்டது.

    அஷ்வின் கடைசி ஓவரை வீசினார். முதல் பந்தில் திரிபாதி ஒரு ரன் அடித்தார. 2-வது பந்தில் ரன் எடுக்கவில்லை. 3-வது பந்தில் ஷாகிப் அல் ஹசன் ஆட்டமிழந்தார். 4-வது பந்தில் சுனில் நரைன் ஆட்டமிழந்தார். இதனால் கடைசி 2 பந்தில் 6 ரன்கள் தேவைப்பட்டது. 5-வது பந்தை திரிபாதி சிக்சருக்கு தூக்கினார். இதனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 19.5 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் எடுத்து டெல்லியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
    இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதவேண்டும்
    ஷார்ஜா:

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் பிளே ஆப் சுற்றின் இரண்டாவது குவாலிபயர் ஆட்டம் இன்று ஷார்ஜாவில் நடக்கிறது.  இதில் ரி‌ஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ்-மார்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. 

    டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் மார்கன், பந்து வீச்சை தேர்வு செய்தார். டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதவேண்டும் என்பதால் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதற்கு இரண்டு அணிகளும் முனைப்பு காட்டின.  

    நிதானமாக ஆடிய டெல்லி அணியை 135 ரன்களில் கட்டுப்படுத்தியது கொல்கத்தா. துவக்க வீரர் பிருத்வி ஷா 18 ரன்களில் ஆட்டமிழக்க, இரண்டாவது விக்கெட் ஜோடி (ஷிகர் தவான்-ஸ்டாய்னிஸ்) சற்று தாக்குப்பிடித்து ஆடியது. ஷிகர் தவான் 36 ரன்களும், ஸ்டாய்னிஸ் 18 ரன்களும் சேர்த்தனர். 

    ரிஷப் பண்ட் 6, ஹெட்மயர் 17 ரன்கள் சேர்த்தனர். ஸ்ரேயாஸ் அய்யர் ஆட்டமிழக்காமல் 30 ரன்கள், அக்சர் பட்டேல் ஆட்டமிழக்காமல் 4 ரன்கள் சேர்க்க, டெல்லி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்களே சேர்த்தது.

    கொல்கத்தா தரப்பில் வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட் வீழ்த்தினார். பெர்குஷன், ஷிவம் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

    இதையடுத்து 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது.
    15 பேர் கொண்ட அணியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல் ரவுண்டரான ஷர்துல் தாகூர் சேர்க்கப்பட்டுள்ளார்.
    புதுடெல்லி:

    20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. விராட் கோலி தலைமையிலான இந்த அணியில் 15 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு இருந்தனர். அவர்களில் 2 பேர் காயமடைந்து இருப்பதாக தகவல் வெளியானது. ஹர்திக் பாண்ட்யா ஐ.பி.எல். போட்டியில் பந்து வீசவில்லை. 

    இந்நிலையில், டி20 உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 15 பேர் கொண்ட அணியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல் ரவுண்டரான ஷர்துல் தாகூர் சேர்க்கப்பட்டுள்ளார். அக்சர் பட்டேலுக்குப் பதில் அவர் சேர்க்கப்பட்டிருக்கிறார். அக்சர் பட்டேல் மாற்று வீரர்கள் பட்டியலில் உள்ளார். காயத்தில் இருந்து சமீபத்தில் குணமடைந்த ஹர்திக் பாண்ட்யா தனது இடத்தை தக்க வைத்துள்ளார்.

    அணி விவரம்: விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா (துணை கேப்டன்), கேஎல் ராகுல், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, ராகுல் சாஹர், ரவிச்சந்திரன் அஷ்வின், ஷர்துல் தாகூர், வருண் சக்கரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி.

    மாற்று வீரர்கள்: ஸ்ரேயாஸ் அய்யர், தீபக் சாஹர், அக்சர் பட்டேல்.
    பெங்களூரை வீழ்த்தி குவாலிபையர் 2 சுற்றுக்கு முன்னேறிய கொல்கத்தா அணி இன்றைய ஆட்டத்தில் டெல்லி அணிக்கு எதிராக டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
    ஷார்ஜா:

    14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் “குவாலிபயர்2” ஆட்டம் ஷார்ஜாவில் நடக்கிறது.

    இதில் ரி‌ஷப்பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ்-மார்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் கொல்கத்தா அணி கேப்டன் மார்கன் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.
    1992-ம் ஆண்டு இந்திய அணி அணிந்திருந்த ஜெர்சியை போன்று கடந்த டி20 உலக கோப்பை போட்டியில் இந்திய வீரர்கள் அணிந்திருந்த நிலையில் அதனை தற்போது மாற்றியுள்ளது.
    டி20 உலகக்கோப்பை தொடர்  ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் அக்டோபர் 17-ம் தேதி முதல் நடைபெறவுள்ளது. உலகக் கோப்பை தொடரின் போது இந்திய அணிக்கு புது ஜெர்சி வழங்குவது வழக்கமாக இருக்கிறது. இந்நிலையில் இந்தாண்டுக்கான டி20 உலகக் கோப்பைக்கான புதிய ஜெர்சியை இந்திய கிரிக்கெட் வாரியம் இன்று வெளியிட்டது. 

    விராட் கோலி, ரோகித் சர்மா, கேஎல் ராகுல், ரவீந்திர ஜடேஜா மற்றும் ஜஸ்பிரித் பும்ரா போன்றவர்கள் இந்த ஜெர்சியை அறிமுகப்படுத்தினர். 1992-ம் ஆண்டு இந்திய அணி அணிந்திருந்த ஜெர்சியை போன்று கடந்த டி20 உலக கோப்பை போட்டியில் இந்திய வீரர்கள் அணிந்திருந்த நிலையில் அதனை தற்போது மாற்றியுள்ளது.

    இந்த புதிய ஜெர்சியை பிசிசிஐ தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

    உலகக்கோப்பை தொடர் அக்டோபர் 17-ந்தேதி தொடங்கி நவம்பர் 14-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்தியா வருகிற 24-ந்தேதி முதல் ஆட்டமாக பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. 

    அக்டோபர் 18-ந்தேதி பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்தை எதிர்த்து விளையாடுகிறது. இந்த போட்டியின்போது இந்திய வீரர்கள் புது சீருடையை அணிந்து விளையாடுவார்கள்.
    ஐ.பி.எல். போட்டியில் விளையாடிய ஹர்‌ஷல் படேல், வெங்கடேஷ் அய்யர், ஷிவம் மவி ஆகிய 3 வீரர்களும் ஐக்கிய அரபு எமிரேட்சில் தொடர்ந்து தங்கி இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 17-ந் தேதி முதல் நவம்பர் 14-ந் தேதி வரை ஓமன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில் நடக்கிறது.

    20 ஓவர் உலக கோப்பையில் இந்திய அணி நேரடியாக 2-வது சுற்றில் விளையாடுகிறது. இந்த சுற்றில் 12 நாடுகள் பங்கேற்கிறது. இதில் 8 நாடுகள் நேரடியாக தகுதிபெற்றுள்ளன. மீதியுள்ள 4 அணிகள் தகுதி சுற்று மூலம் முன்னேறுகிறது.

    இந்திய அணி ‘குரூப்-2’ பிரிவில் இடம்பெற்றுள்ளது. பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் மற்றும் 2 தகுதி சுற்று அணிகள் அந்த பிரிவில் இடம்பெற்றுள்ளன.

    இந்திய அணி வருகிற 24-ந் தேதி பாகிஸ்தானையும், 31-ந் தேதி நியூசிலாந்தையும், நவம்பர் 3-ந் தேதி ஆப்கானிஸ்தானையும் எதிர் கொள்கிறது. 5 மற்றும் 8-ந் தேதிகளில் தகுதி சுற்று அணிகளுடன் மோதுகிறது.

    20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. விராட் கோலி தலைமையிலான இந்த அணியில் 15 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு இருந்தனர்.

    உலக கோப்பை போட்டிக்கான அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களில் 2 பேர் காயமடைந்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அணியில் உள்ள ஹர்த்திக் பாண்ட்யா ஐ.பி.எல். போட்டியில் பந்து வீசவில்லை.

    இதனால் உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் மாற்றம் செய்யப்படுகிறது. இது தொடர்பாக இந்திய அணிக்கு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள டோனி, கேப்டன் கோலி மற்றும் இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய்ஷா ஆகியோர் விரைவில் ஆலோசனை செய்து முடிவை அறிவிக்கிறார்கள்.

    தேர்வு குழுவினருடன் கலந்து ஆலோசனை செய்த பிறகு அணி மாற்றம் குறித்து அறிவிக்கப்பட்டு வருகிற 15-ந் தேதி இந்திய அணியில் மாற்றம் செய்யப்படும் என்று கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    ஐ.பி.எல். போட்டியில் விளையாடிய ஹர்‌ஷல் படேல் (பெங்களூர்), வெங்கடேஷ் அய்யர், ஷிவம் மவி (கொல்கத்தா) ஆகிய 3 வீரர்களும் ஐக்கிய அரபு எமிரேட்சில் தொடர்ந்து தங்கி இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

    அணியில் மாற்றம் செய்யப்படும்போது அவர்கள் தேர்வு செய்யப்படலாம் என்று எதிர்பார்ப்பு இருக்கிறது.

    20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு முன்பு இந்திய அணி 2 பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது. இங்கிலாந்துடன் வருகிற 18-ந் தேதியும் (இரவு 7.30 மணி), ஆஸ்திரேலியாவுடன் 20-ந் தேதியும் (மாலை 3.30 மணி) மோதுகிறது.

    கொல்கத்தா டெல்லி ஆகிய இரு அணிகளும் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற கடுமையாக போராடும் என்பதால் இன்றைய ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஷார்ஜா:

    14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் “குவாலிபயர்2” ஆட்டம் இன்று இரவு 7.30 மணிக்கு ஷார்ஜாவில் நடக்கிறது.

    இதில் ரி‌ஷப்பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ்-மார்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இந்த போட்டி தொடரில் டெல்லி அணி சிறப்பாக ஆடி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தை பிடித்தது. 10-ல் வெற்றி பெற்றது. 4 லீக் ஆட்டத்தில் தோற்றது. “குவாலியர் 1” போட்டியில் சென்னை சூப்பர் கிங்சிடம் 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றதால் இறுதிப்போட்டிக்கு நேரடியாக முன்னேற முடியவில்லை.

    கொல்கத்தாவை வீழ்த்தி தொடர்ந்து 2-வது முறையாக ஐ.பி.எல். இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெறும் ஆர்வத்தில் டெல்லி அணி இருக்கிறது. அந்த அணியில் ஷிகர் தவான் (551 ரன்), பிரித்வி ஷா (461), கேப்டன் ரி‌ஷப்பண்ட் (413) போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும், அவேஷ்கான் (23 விக்கெட்), அக்‌ஷர் படேல் (15), ரபடா (13), ஆன்ரிச் நோர்ட்ஜே (10) போன்ற சிறந்த பவுலர்களும் உள்ளனர்.

    கொல்கத்தா அணி 3-வது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதிபெறும் வேட்கையில் உள்ளது. அந்த அணி 2012 மற்றும் 2014-ம் ஆண்டுகளில் இறுதிப் போட்டிக்கு முன்னேறி கோப்பையை கைப்பற்றி இருந்தது.

    எலிமினேட்டர் ஆட்டத்தில் பெங்களூரை வீழ்த்தியிருந்ததால், அந்த அணி டெல்லியை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளும். கொல்கத்தா அணியில் ராகுல் திரிபாதி (383 ரன்), சுப்மன் கில் (381), நிதிஷ் ரானா (370) போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும், வருண் சக்கரவர்த்தி (14 விக்கெட்), சுனில் நரீன் (14), பெர்குசன் (12) போன்ற சிறந்த பந்து வீச்சாளர்களும் உள்ளனர்.

    ஐ.பி.எல். போட்டிகளை பயன்படுத்தி ஹரிகிருஷ்ணன் சூதாட்டத்தில் ஈடுபட்டாரா? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை:

    ஆன்லைன் சூதாட்டம் மூலம் லட்சக்கணக்கான ரூபாயை பொதுமக்களிடம் இருந்து பறித்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படியில் கைது செய்யப்பட்டுள்ள ஹரிகிருஷ்ணன் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் போதும் அதனை பயன்படுத்தி சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

    அதன்படி ஐ.பி.எல். போட்டிகளை பயன்படுத்தியும் ஹரிகிருஷ்ணன் சூதாட்டத்தில் ஈடுபட்டாரா? என்பது பற்றிய விசாரணையும் நடைபெற்று வருகிறது.


    பெங்களூர் அணியில் தற்போது உள்ள வீரர்களில் விராட் கோலி, மேக்ஸ்வெல், படிக்கல் ஆகிய 3 வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம் என வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் கருத்து தெரிவித்துள்ளார்.

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணிக்கு 3 வடிவிலான (டெஸ்ட், ஒரு நாள் ஆட்டம் மற்றும் 20 ஓவர்) போட்டிகளுக்கும் கேப்டனாக விராட் கோலி இருக்கிறார்.

    கேப்டன் பதவியால் தனது பேட்டிங் திறன் பாதிக்கப்படுவதாக கோலி கருதியுள்ளார். இதைத் தொடர்ந்து 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு பிறகு கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அவர் ஏற்கனவே அறிவித்தார்.

    அதே நேரத்தில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட் டியில் தொடர்ந்து அவர் கேப்டனாக இருப்பார். 20 ஓவர் அணியில் தொடர்ந்து விளையாடுவார் என்றும் அறிவித்திருந்தார்.

    விராட் கோலி ஐ.பி.எல். போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் விளையாடி வருகிறார். 2013-ம் ஆண்டு முதல் அந்த அணிக்கு கேப்டனாக இருக்கும் அவர் ஒருமுறை கூட ஐ.பி.எல். கோப்பையை பெற்றுக் கொடுக்கவில்லை.

    இதற்கிடையே இந்த ஐ.பி.எல். போட்டியோடு கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்திருந்தார். கோப்பையுடன் வெளியேற இருந்த அவரது கனவு தகர்ந்தது. எலிமினேட்டர் ஆட்டத்தில் கொல்கத்தாவிடம் தோற்றதால் ஐ.பி.எல். கோப்பையை விராட் கோலியால் வெல்ல முடியாத நிலை ஏற்பட்டது. பெங்களூர் அணிக்காக தான் கடைசிவரை விளையாடுவேன் என்று அவர் கொல்கத்தாவுடன் மோதிய போட்டிக்கு பிறகு தெரிவித்தார்.

    இந்த நிலையில் பெங்களூர் அணியின் உரிமையாளராக நான் இருந்திருந்தால் விராட் கோலியை கேப்டன் பதவியில் நீடிக்க சொல்லி இருப்பேன் என்று வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் பேட்ஸ்மேன் பிரைன் லாரா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    லாரா

    நான் மட்டும் பெங்களூர் அணியின் உரிமையாளராக இருந்திருந்தால் கோலியிடம் தனிப்பட்ட முறையில் கேப்டன் பொறுப்பை தொடருமாறு கேட்டிருப்பேன். ஏனென்றால் ஒரு வீரராகவும், ஒரு அணியின் தலைவராகவும் அவரை இருவேறு நபராக நான் பார்க்கிறேன்.

    மிகவும் திறமை வாய்ந்த, வயதில் இளையவரான அவர் எப்படியும் இன்னும் சில ஆண்டுகள் விளையாடுவார். இத்தகைய சூழலில் அவர் வேறொரு வீரரின் கீழ் ஆடுவதை நான் பார்க்க விரும்பவில்லை.

    கோலி கேப்டனாக இல்லாத பெங்களூர் அணி எப்படி இருக்கும் என்று தெரியவில்லை. அதனால் தான் சொல்கிறேன் நான் உரிமையாளராக இருந்தால் மீண்டும் ஒருமுறை முற்றிலும் மாறுபட்ட அணியை உங்களது (கோலி) தலைமையில் அமைத்து விளையாடுவோம் என்று சொல்வேன்.

    பெங்களூர் அணியில் தற்போது உள்ள வீரர்களில் விராட் கோலி, மேக்ஸ்வெல், படிக்கல் ஆகிய 3 வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம்.

    இவ்வாறு லாரா கூறியுள்ளார்.

    டி20 உலக கோப்பை தொடர் அக்டோபர் 17-ம் தேதி, ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்க உள்ளது.
    புதுடெல்லி:

    ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கான அணிகளை ஒவ்வொரு நாடுகளும் அறிவித்து வருகின்றன. டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.  

    இதற்கிடையே, டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியின் ஆலோசகராக முன்னாள் கேப்டன் எம்.எஸ்.டோனி நியமிக்கப்பட்டுள்ளார். டோனி இந்திய அணிக்கு ஆலோசனை வழங்க சம்மதித்துள்ளார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

    சவுரவ் கங்குலி

    இந்நிலையில், டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி ஆலோசகராக செயல்பட கட்டணம் எதுவும் வேண்டாம் என எம்.எஸ்.டோனி கூறிவிட்டார் என சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

    இதேபோல், டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி ஆலோசகராக செயல்பட டோனி எந்தவித சம்பளமும் வாங்கவில்லை என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். 

    ஆர்.சி.பி. அணியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீழ்த்தி தகுதிச்சுற்று 2-க்கு முன்னேற சுனில் நரைன் ஆட்டம் முக்கிய பங்கு வகித்தது.
    ஐ.பி.எல். 2021 கிரிக்கெட் தொடரின் எலிமினேட்டர் சுற்று ஷார்ஜாவில் நேற்று நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆர்.சி.பி. கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்தார். 

    அதன்படி, முதலில் ஆடிய பெங்களூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக விராட் கோலி 39 ரன்னும், தேவ்தத் படிக்கல் 21 ரன்னும் எடுத்தனர். கொல்கத்தா அணி சார்பில் சுனில் நரைன் 4 விக்கெட்டும், பெர்குசன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இந்த ஆட்டத்தில் சுனில் நரைன் அதிரடியாக விளையாடினார். ஆட்டத்தில், 18-வது ஓவரை வீசிய முகமது சிராஜ், சுனில் நரைன் மற்றும் தினேஷ் கார்த்திக்கை வெளியேற்றி ஆட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார்.

    இறுதியில், கொல்கத்தா அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. இதன்மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தகுதிச்சுற்று 2-க்கு முன்னேறியது. மேலும் நாளை மறுநாள் நடைபெறும் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை கொல்கத்தா எதிர்கொள்கிறது.

    ஆர்.சி.பி. அணிக்கு எதிரான வெற்றி குறித்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் மோர்கன் கூறுகையில்  ‘‘எங்களது  வெற்றியை நரைன் பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் மிக சுலபமாக்கிவிட்டார்.  தொடர்ந்து விளையாடி அதிக விக்கெட்டுகளை வீழ்த்தினார்.  ஆட்டத் தொடக்கத்திலிருந்தே பந்து வீச்சாளர்கள் கட்டுக்கோப்பாகவே பந்துவீசினர். இலக்கை எட்டும்போது செய்யும்போதும் விக்கெட்டுகள் விழாமல் பார்த்துக் கொண்டனர்.

    சுனில் நரைன்

    உலகத்தரம் வாய்ந்த நரைன், வருண் சக்ரவர்த்தி, சாஹிப் அல் ஹசன் ஆகிய 3 பேருடன் சேர்ந்து விளையாடுவது என்பது கவுரவம்தான்.  அவர்கள் மேலும் சிறப்பாக விளையாட என்னுடைய வாழ்த்துகள்.  எங்களுடைய பேட்டிங் வரிசை மிகவும் பலமானது. எங்களுடைய பேட்டிங் வரிசை பலமானதாக இருக்கிறது. தகுதிச்சுற்று 2-ல் இதே ஷார்ஜா மண்ணில் டெல்லி கேபிடல்ஸ் அணியை   எதிர்கொள்கிறோம்..

    கிரிக்கெட்டைப் பொறுத்தவரை ஒவ்வொருவரும் தனது தனிப்பட்ட திறமையை வெளிகாட்டி ரசிகர்களை வியக்கும்படி செய்கின்றனர். அதில், நரைன் தனது தனிப்பட்ட திறமைகளை சற்று கூடுதலாக  காட்டுவார். அவர் சிறப்பான வீரர்’’ என்றார்.
    டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கும் நிலையில், இந்திய அணிக்கான சீருடையை நாளை அறிமுகம் செய்கிறது பி.சி.சி.ஐ.
    கொரோனா காரணமாக நிறுத்தப்பட்ட  டி20 உலகக்கோப்பை தொடர்  தற்போது, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில்  அக்டோபர் 17-ம் தேதி முதல் நடைபெறவுள்ளது.  இந்த 7-வது சீசன் தொடங்குவதற்காக ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

    இந்தத் தொடரில் இந்திய அணி புது சீருடை அணிந்து விளையாட இருக்கிறார்கள். அந்த சீருடையை நாளை அறிமுகம் செய்கிறது பி.சி.சி.ஐ.

    இந்தியா வருகிற 24-ந்தேதி முதல் ஆட்ட பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. அக்டோபர் 17-ந்தேதி உலகக்கோப்பை தொடங்கி நவம்பர் 14-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. அக்டோபர் 18-ந்தேதி பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்தை எதிர்த்து விளையாடுகிறது. இந்த போட்டியின்போது இந்திய வீரர்கள் புது சீருடையை அணிந்து விளையாடுவார்கள்.

    அயர்லாந்து, நமீபியா, ஸ்காட்லாந்து மற்றும் இலங்கை அணிகள் உலகக்கோப்பைக்கான சீருடையை அறிமுகம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    ×