search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சார்ஜா"

    சார்ஜாவில் குடும்பத்தினரை காணச் சென்ற இந்திய தம்பதியர், கார் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். #Indiancoupledead
    சார்ஜா:

    இந்தியாவைச் சேர்ந்த வினோத்பாய் படேல்(47), ரோகிணிபேகன் வினோத்பாய் படேல்(42), சார்மி(13), மானவ்(9), யோகேஷ், மேக்னா,  தீபக் படேல், வைஷாலி ஆகியோர் விடுமுறை நாட்களை கொண்டாட சார்ஜா வந்திருந்தனர். இவர்கள் குஜராத்தில் உள்ள பரோடா பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர். கடந்த செவ்வாய்க்கிழமை சார்ஜாவில் அனைவரும் காரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர்.

    ரோகிணியின் மைத்துனர் தீபக் படேல் பாலைவன பகுதியில் காரை ஓட்டிக் கொண்டிருக்கும்போது, காரின் வேகத்தை தொடர்ந்து அதிகப்படுத்தினார். அப்போது கார் கட்டுப்பாட்டினை இழந்து உருண்டு விழுந்தது.

    இதில் ரோகிணிபேகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அவரது கணவர் வினோத்பாய் படேலுக்கு மாரடைப்பு ஏற்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

    இந்த தம்பதி  தங்கள் குடும்பத்தினரை காண 12 ஆண்டுகளுக்கு பின்னர்  சவுதிக்கு முதல் முறையாக வந்துள்ளனர். மேலும் காரை ஓட்டிச் சென்ற தீபக் படேல் அமெரிக்க குடியுரிமை பெற்றவராவார்.

    இந்நிலையில் படுகாயமடைந்த சார்மி(13), மானவ்(9), யோகேஷ், மேக்னா, வைஷாலி ஆகியோருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் மேக்னா கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. #Indiancoupledead
    சென்னை விமான நிலையத்தில் சார்ஜாவில் இருந்து கடத்திவந்த ரூ.34 லட்சம் மதிப்புள்ள தங்கக்கட்டிகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.#Gold #Smuggling
    ஆலந்தூர்:

    சென்னை விமான நிலையத்தில் சார்ஜாவில் இருந்து கடத்திவந்த ரூ.34 லட்சம் மதிப்புள்ள தங்கக்கட்டிகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதேபோல கடத்த இருந்த வெளிநாட்டு பணமும் சிக்கியது.

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் தங்கம் கடத்திவரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு இருந்தனர்.

    சார்ஜாவில் இருந்து நேற்று திருவனந்தபுரம் வழியாக ஒரு விமானம் வந்தது. இதில் வந்த பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது கேரளாவை சேர்ந்த முகமது ரசூல்(வயது 53) என்பவர் மீது சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவரது சூட்கேசை சோதனை செய்தபோது அதில் எதுவுமில்லை.

    ஆனால் அவர் கழுத்து வலிக்காக கட்டியிருந்த பெல்ட் மீது சந்தேகம் ஏற்பட்டு, அதனை அதிகாரிகள் பிரித்து பார்த்தனர். அதில் மறைத்துவைக்கப்பட்டு இருந்த ரூ.34 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 150 கிராம் எடை கொண்ட தங்கக்கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    இதையடுத்து முகமது ரசூலை சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்தனர். யாருக்காக தங்கத்தை கடத்திவந்தார், இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்? என அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அதேபோல சென்னையில் இருந்து அபுதாபிக்கு செல்ல இருந்த விமானத்தில் ஏறவந்த சென்னையை சேர்ந்த நாகூரான்(30) என்பவரை அதிகாரிகள் சோதனை செய்தனர். அவரது சூட்கேசில் 500 மதிப்புள்ள சவுதி ரியால்கள் 100 மறைத்துவைக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்தனர். ரூ.9 லட்சம் மதிப்புள்ள அந்த சவுதி ரியால்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    நாகூரான் விமான பயணத்தை ரத்துசெய்து, கடத்தப்பட இருந்தது ஹவாலா பணமா? என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 
    துபாய், சார்ஜாவில் இருந்து சென்னைக்கு ‘லேப்-டாப்’பில் மறைத்து கடத்தி வரப்பட்ட 2 கிலோ தங்கக்கட்டிகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    ஆலந்தூர்:

    துபாய், சார்ஜாவில் இருந்து சென்னைக்கு ‘லேப்-டாப்’பில் மறைத்து கடத்தி வரப்பட்ட 2 கிலோ தங்கக்கட்டிகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 வாலிபர்கள் சிக்கினர். அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து விமானம் வந்தது. இதில் வந்த பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணித்தனர். அப்போது கேரளாவை சேர்ந்த வர்கீஸ் (வயது 29) என்பவரின் உடமைகளை சோதனை செய்தனர்.

    அவரிடம் இருந்த ‘லேப்-டாப்’பின் எடை வழக்கத்தை விட சற்று அதிகமாக இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள், அதனை பிரித்து பார்த்தனர். அப்போது அதில் 9 தங்கக்கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்தனர். இதனையடுத்து ரூ.13 லட்சம் மதிப்புள்ள 450 கிராம் தங்கக்கட்டிகளை கைப்பற்றினார்கள். இதுதொடர்பாக கேரள வாலிபரிடம் சுங்க இலாகா அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சார்ஜாவில் இருந்து சென்னைக்கு மற்றொரு விமானத்தில் வந்த சென்னையை சேர்ந்த அஸ்மத் (31) என்பவரின் உடமைகளை சோதனை செய்தபோது அவரது ‘லேப்-டாப்’பும் எடை அதிகமாக இருந்ததால் அதனை பிரித்து பார்த்தனர்.

    அப்போது அதில் தங்கக்கட்டிகள் இருந்தன. அவரிடம் இருந்து ரூ.47 லட்சம் மதிப்புள்ள 1½ கிலோ தங்கக்கட்டிகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக அஸ்மத்தை கைது செய்த சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கடத்தலில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர். 
    சார்ஜாவில் இருந்து கோவைக்கு 3 கிலோ தங்கம் கடத்தி வந்த நபரை கைது செய்த அதிகாரிகள் அவரிடமிருந்த தங்க கட்டிகளை பறிமுதல் செய்தனர்.
    கோவை:

    சார்ஜாவில் இருந்து கோவைக்கு நேற்று அதிகாலை வந்த விமானத்தில் நீலகிரி மாவட்டம் கூடலூரை சேர்ந்த உனைஷ் என்பவர் வந்தார். அவர் கொண்டு வந்த எம்.பி.3 பிளேயர் மற்றும் ஸ்பீக்கர்களை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் 2 கிலோ 988 கிராம் எடையுள்ள 52 தங்கக்கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தன.

    இதன் மதிப்பு ரூ.96 லட்சத்து 52 ஆயிரம் ஆகும். இதனைத்தொடர்ந்து தங்கம் கடத்தி வந்த உனைஷ் என்பவரை அதிகாரிகள் கைது செய்து தங்க கட்டிகளை பறிமுதல் செய்தனர். 
    ×