search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sharjah"

    சார்ஜாவில் குடும்பத்தினரை காணச் சென்ற இந்திய தம்பதியர், கார் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். #Indiancoupledead
    சார்ஜா:

    இந்தியாவைச் சேர்ந்த வினோத்பாய் படேல்(47), ரோகிணிபேகன் வினோத்பாய் படேல்(42), சார்மி(13), மானவ்(9), யோகேஷ், மேக்னா,  தீபக் படேல், வைஷாலி ஆகியோர் விடுமுறை நாட்களை கொண்டாட சார்ஜா வந்திருந்தனர். இவர்கள் குஜராத்தில் உள்ள பரோடா பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர். கடந்த செவ்வாய்க்கிழமை சார்ஜாவில் அனைவரும் காரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர்.

    ரோகிணியின் மைத்துனர் தீபக் படேல் பாலைவன பகுதியில் காரை ஓட்டிக் கொண்டிருக்கும்போது, காரின் வேகத்தை தொடர்ந்து அதிகப்படுத்தினார். அப்போது கார் கட்டுப்பாட்டினை இழந்து உருண்டு விழுந்தது.

    இதில் ரோகிணிபேகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அவரது கணவர் வினோத்பாய் படேலுக்கு மாரடைப்பு ஏற்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

    இந்த தம்பதி  தங்கள் குடும்பத்தினரை காண 12 ஆண்டுகளுக்கு பின்னர்  சவுதிக்கு முதல் முறையாக வந்துள்ளனர். மேலும் காரை ஓட்டிச் சென்ற தீபக் படேல் அமெரிக்க குடியுரிமை பெற்றவராவார்.

    இந்நிலையில் படுகாயமடைந்த சார்மி(13), மானவ்(9), யோகேஷ், மேக்னா, வைஷாலி ஆகியோருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் மேக்னா கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. #Indiancoupledead
    துபாய், சார்ஜாவில் இருந்து சென்னைக்கு ‘லேப்-டாப்’பில் மறைத்து கடத்தி வரப்பட்ட 2 கிலோ தங்கக்கட்டிகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    ஆலந்தூர்:

    துபாய், சார்ஜாவில் இருந்து சென்னைக்கு ‘லேப்-டாப்’பில் மறைத்து கடத்தி வரப்பட்ட 2 கிலோ தங்கக்கட்டிகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 வாலிபர்கள் சிக்கினர். அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து விமானம் வந்தது. இதில் வந்த பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணித்தனர். அப்போது கேரளாவை சேர்ந்த வர்கீஸ் (வயது 29) என்பவரின் உடமைகளை சோதனை செய்தனர்.

    அவரிடம் இருந்த ‘லேப்-டாப்’பின் எடை வழக்கத்தை விட சற்று அதிகமாக இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள், அதனை பிரித்து பார்த்தனர். அப்போது அதில் 9 தங்கக்கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்தனர். இதனையடுத்து ரூ.13 லட்சம் மதிப்புள்ள 450 கிராம் தங்கக்கட்டிகளை கைப்பற்றினார்கள். இதுதொடர்பாக கேரள வாலிபரிடம் சுங்க இலாகா அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சார்ஜாவில் இருந்து சென்னைக்கு மற்றொரு விமானத்தில் வந்த சென்னையை சேர்ந்த அஸ்மத் (31) என்பவரின் உடமைகளை சோதனை செய்தபோது அவரது ‘லேப்-டாப்’பும் எடை அதிகமாக இருந்ததால் அதனை பிரித்து பார்த்தனர்.

    அப்போது அதில் தங்கக்கட்டிகள் இருந்தன. அவரிடம் இருந்து ரூ.47 லட்சம் மதிப்புள்ள 1½ கிலோ தங்கக்கட்டிகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக அஸ்மத்தை கைது செய்த சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கடத்தலில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர். 
    ×