என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "hijacked"
- திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த தொப்பம்பட்டியைச் சேர்ந்தவர் பாரதி (வயது 43). மரவியாபாரம் செய்து வருகிறார்.
- அப்போது 2 மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் காரின் முன் பகுதியில் வந்து காரை வழிமறித்து உள்ளனர்.
மணப்பாறை
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த தொப்பம்பட்டியைச் சேர்ந்தவர் பாரதி (வயது 43). மரவியாபாரம் செய்து வருகிறார்.
சம்பவத்தன்று நள்ளிரவு வியாபாரத்தை முடித்துக் கொண்டு காரில் திருச்சியில் இருந்து மணப்பாறை நோக்கி சென்று கொண்டிருந்தார். திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் முத்தபுடையான்பட்டி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது 2 மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் காரின் முன் பகுதியில் வந்து காரை வழிமறித்து உள்ளனர்.
அப்போது பாரதி காரை நிறுத்தவே 2 மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கிய 4 பேரும் அவரை மிரட்டி காரில் இருந்த ரூ.3 லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் திருச்சி நோக்கியும், மற்ற இருவர் திண்டுக்கல் நோக்கியும் தப்பி சென்றனர். சம்மந்தப்பட்ட பகுதி இருள் சூழ்ந்த பகுதி என்பதால் அந்த இடத்தில் மக்கள் நடமாட்டம் இருக்காது.
பின்னர் பாரதி இதுதொடர்பாக மணப்பாறை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவே போலீசார் சம்பவ இடத்தில் சென்று விசாரணை நடத்தினர். மேலும் சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர். தேசிய நெடுஞ்சாலையில் நள்ளிரவில் கடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
துபாய், சார்ஜாவில் இருந்து சென்னைக்கு ‘லேப்-டாப்’பில் மறைத்து கடத்தி வரப்பட்ட 2 கிலோ தங்கக்கட்டிகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 வாலிபர்கள் சிக்கினர். அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து விமானம் வந்தது. இதில் வந்த பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணித்தனர். அப்போது கேரளாவை சேர்ந்த வர்கீஸ் (வயது 29) என்பவரின் உடமைகளை சோதனை செய்தனர்.
அவரிடம் இருந்த ‘லேப்-டாப்’பின் எடை வழக்கத்தை விட சற்று அதிகமாக இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள், அதனை பிரித்து பார்த்தனர். அப்போது அதில் 9 தங்கக்கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்தனர். இதனையடுத்து ரூ.13 லட்சம் மதிப்புள்ள 450 கிராம் தங்கக்கட்டிகளை கைப்பற்றினார்கள். இதுதொடர்பாக கேரள வாலிபரிடம் சுங்க இலாகா அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சார்ஜாவில் இருந்து சென்னைக்கு மற்றொரு விமானத்தில் வந்த சென்னையை சேர்ந்த அஸ்மத் (31) என்பவரின் உடமைகளை சோதனை செய்தபோது அவரது ‘லேப்-டாப்’பும் எடை அதிகமாக இருந்ததால் அதனை பிரித்து பார்த்தனர்.
அப்போது அதில் தங்கக்கட்டிகள் இருந்தன. அவரிடம் இருந்து ரூ.47 லட்சம் மதிப்புள்ள 1½ கிலோ தங்கக்கட்டிகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக அஸ்மத்தை கைது செய்த சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கடத்தலில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்